இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, August 31, 2009

நீதியைத் தேடி..................

ரேடியோ கேட்க முடியவில்லை, டிவி பார்க்க முடியாமல் கணவர் தடுத்தார் அதனால் மனவேதனை அடைந்து மிகவும் பாதிக்கப்பட்டேன் என்பது போன்ற புகார்களுக்கு கிரிமினல் கேஸ் பதிவு செய்து கணவரையும் அவரது குடும்பத்தையும் கூண்டோடு கைது செய்து சிறையில் அடைத்து துன்புறுத்தும் சட்டங்களுக்கு கணவர் படும் அவஸ்த்தை சாதரணமாகத்தான் தெரியும்! இத்தனைக்கும் கணவர் கேட்பது விவாகரத்து மட்டுமே. கிரிமினல் கேஸ் பதிவு செய்து மனைவியை துன்புறுத்த நினைக்கவில்லை.

இந்த செய்திக்கும் கீழுள்ள செய்தியில் தலைமை நீதிபதியின் கருத்துக்கும் உள்ள ஒற்றுமையை பாருங்கள்.

==================================

தினச் சண்டைக்கெல்லாம் விவாகரத்தா?:நீதிபதிகள் கேள்வி

செப்டம்பர் 01,2009

மும்பை: "தினம் தினம் மனைவி சண்டை போடுவதை, "டார்ச்சராக' கருத முடியாது. அதற் காக விவாகரத்து கொடுக்க முடியாது' என மும்பை ஐகோர்ட் கூறியுள்ளது.

பரேலைச் சேர்ந்த விட்டல்(47) தனது மனைவி ராஷ்மி மீது புகார் கூறி, விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார். தினமும் தன்னிடம் சண்டை போட்டு கொடுமைப் படுத்துவதால், தனக்கு விவாகரத்து வழங்குமாறு கோரியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த மஜும் தார், மோரே ஆகிய இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், "மனைவி சண்டை போடுகிறார் என்பதற்காக விவாகரத்து வழங்க முடியாது' என, மனுவைத் தள்ளுபடி செய்தது. விட்டல் - ராஷ்மிக்கு 1992ல் திருமணம் நடந்தது. ஒரு மகன் உள்ளான். விட்டல் தாய், நோயால் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில், தன்னை தேனிலவுக்கு அழைத்துச் செல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக ராஷ்மி மிரட்டியதாக, விட்டல் தன் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

"பால்கனியில் நின்று ஆடைகளைக் களைந்து எனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறார்; தினமும் எனக்கு உணவு சமைப்பதில்லை; குளிப்பதற்கு சுடு தண்ணீர் வைப்பதில்லை' என்றும் கூட, தன் மனைவி மீது குற்றம் சாட்டியுள் ளார் விட்டல். நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:சமையல் செய்து, குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் வேலைக்காரியாக மனைவியை கருதக் கூடாது. கணவனும், அவரது உறவினர் களும் சொல்வதைக் கேட்டு அப்படியே நடந்து கொள்ள, மனைவி ஒன்றும் அடிமையில்லை.

பெண் எவரிடமும் தனது குறையைக் கூறாமல் அமைதியாகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. கணவனின் தவறுகள் குறித்து, ஒரு வார்த்தை கூட பேசக் கூடாது என சொல்ல முடியாது. திருமணம் என்பது புனிதமானது; அது சிறு குழந்தைகளின் விளையாட்டல்ல. விவாகரத்து மனுக்கள் குவிவதைப் பார்த்தால், திருமணம் எனும் பந்தத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

=======================================

மேலுள்ள செய்தியில் அன்பில்லாத மனைவியிடமிருந்து விடுதலை வேண்டும் என்று கணவர் நீதிமன்றத்தை அனுகியதற்கு அவருக்குக் கிடைத்த நீதியையும் கீழுள்ள செய்தியில் கணவர் தனக்குத் தானே நீதியை தேடிக்கொண்டதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

நீதிமன்றத்தில் நடுவு நிலையான நீதி கிடைக்காது என்று முடிவு செய்து இது போன்ற செய்திகள் இனி தினம் தினம் செய்தித்தாள்களில் வெளிவரும் போலிருக்கிறது !

மனைவியை வெட்டிக் கொன்ற கணவன் போலீசில் சரண்
செப்டம்பர் 01, 2009

திருத்துறைப்பூண்டி:திருத்துறைப்பூண்டி அருகே, குடும்பத்தினர் அன்பு செலுத்தாமல் விரட்டியடித்ததால் மனமுடைந்த கணவன், தனது மனைவியை, ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த, வடபாதி மெயின் ரோடு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர்; விவசாயி கணேசன் (55). இவரது மனைவி நாகலட்சுமி (48). இவர்களுக்கு துரைராஜ் (31), வேலவன் (30) என்ற இரு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது.

கணேசனிடம் மனைவி நாகலட்சுமி மற்றும் மகன்கள், அன்பு செலுத்தாமல், வெறுத்து புறக்கணித்தனர்.இதனால், மனமுடைந்து காணப்பட்ட கணேசன், நேற்று அதிகாலை மூன்று மணிக்கு வீட்டுக்கு வந்தார். தனது மனைவியிடம் இதுபற்றி கேட்ட போது தகராறு முற்றியது. ஆவேசம் அடைந்த கணேசன், நாகலட்சுமியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றார்.இதை சற்றும் எதிர்பார்க்காததால் அங்கிருந்து தப்பித்து தெரு வழியாக நாகலட்சுமி ஓடத் துவங்கினார். பின்தொடர்ந்து சென்ற கணேசன் மனைவியை, ஓட ஓடவிரட்டி, வெட்டினார். வெட்டுப்பட்ட நாகலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.அங்கிருந்து தப்பித்த கணேசன், நேராக திருத்துறைப்பூண்டி போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். மனைவியை வெட்டிக் கொன்றது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

====================
நன்றி: தினமலர்




கவலை மட்டும் தான் படமுடியுமோ?

மீண்டும் ஒரு முறை தலைமை நீதிபதி 498A விற்கு எதிராகவும் தவறhக தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளுக்கு எதிராகவும் கருத்துத் தெரிவித்துள்ளார். இதைப்படித்த பிறகு நீதித்துறையின் நடவடிக்கையைப் பார்த்து சிரிப்பதா அல்லது வருத்தப்படுவதா?

கட்டுக்குள் அடங்காத அநீதிகளைப் பார்த்து தலைமை நீதிபதி கவலைப்படுவது இது முதல் முறையல்ல.

தலைமை நீதிபதி இதற்கு முன்னர் வெளியிட்ட கவலையான கருத்துக்கள்:

1. USA, August - 2008
"Indian Courts are Helpless to Protect 498A Victims"

2. India, February - 2009
"CJI Balakrishnan admits to misuse of dowry laws"

கவலை மட்டும் தான் படமுடியுமோ?

அப்படியென்றhல் இந்தியாவில் அப்பாவிகளின் கதி???


3. India, September - 2009
CJI points to judges’ ignorance - India, September - 2009

Ranchi, Aug. 30: Chief Justice of India K.G. Balakrishnan today took a dig at high court as well as district court judges for delivering wrong verdicts because of their ignorance of criminal justice laws.

Balakrishnan warned that several people wanted to delay the conclusion of criminal cases. “(But) Judges are supposed to prevent the abuse of law by those who want to delay the delivery of judgment,” he added, alluding to the judiciary’s concern at the high number of pending cases.

The Chief Justice was delivering a valedictory address at the conclusion of the first east zone regional judicial conference aimed at equipping senior judicial officers, drawn from seven states — Jharkhand, Bengal, Orissa, Chhattisgarh, Assam, Sikkim and Bihar — to deliver speedy and quality justice.

The three-day programme was organised by National Judicial Academy (NJA), Bhopal, in association with Jharkhand High Court and State Judicial Academy.

Jharkhand High Court Chief Justice Gyan Sudha Misra, Patna High Court Chief Justice P.K. Mishra, State Judicial Academy in-charge Justice M.Y. Eqbal, NJA director G. Mohan Gopal were present among others.

Balakrishnan pointed out that Section 498 (A) (anti-dowry law) under CrPC was one of the most abused laws.

“Judges are simply issuing summons and even warrants without properly verifying who are the accused. I have come across such cases in which the accused, sitting in Australia and other countries, are made accused when the case is lodged for the alleged offence of dowry,” he added.

Balakrishnan added that the criminal procedure code was amended for the police to follow certain procedures before arrests. “We have come across cases in which even high court judges are ignorant of the legal value of statements recorded before the police under Section 161 of the Evidence Act for delivering judgments,” he said. Calling upon lower court judges to be socially sensitive, he asked them to have control over trial proceedings in order to deliver judgments easily. He also asked them to examine eyewitnesses first before examining other witnesses produced by the defence.

“Trial and defence lawyers should not terrorise witnesses. A judge should be alert and caring” he maintained.

Misra said the deteriorating law and order situation was a heavy burden on the criminal justice system.

“It was worrying that the state functionaries were not invoking the provisions of the National Security Act to keep hardened criminals in jail,” she added.

Stressing on the need for quality justice, Misra said she was receiving complaints that the fast-track court has turned into a “farce track court”. Judicial officers, she said, had to wipe out fear that fast-track courts would only convict a person.

“They have to strike a balance between expectation of the victims’ of crime and the accused,” she maintained.

Former Supreme Court judge S.B. Sinha pointed out that 70 per cent of all the pending criminal cases were petty offences. “Sociological studies suggest that it is the poor who suffer the most because of delay in the delivery of judgments,” he added.




Thursday, August 27, 2009

ஆண்களா, பெண்களா?

இந்த வார வாரமலரில் வந்த செய்தி:

அந்துமணி பதில்கள்!

வாழ்க்கைத் துணையை, "கால்குலேட்டிவ்' ஆக தேர்ந்தெடுப்பதில் வல்லவர்கள் இக்கால ஆண்களா, பெண்களா?

அவன்ட்ட டூ-வீலர் இருக்குதா, கார் இருக்குதா, சொந்த வீடா, வாடகை வீடா... சொத்து, பத்து எவ்வளவு, சம்பளம், வருமானம் எவ்வளவு?'- இப்படி எல்லாம் கணக்கு போட்டு, வாழ்க்கைத் துணையை முடிவு செய்வது பெண்கள் தான்.
மனதுக்குப் பிடித்து விட்டால், ஓ.கே., சொல்லி விடுபவர் ஆண் என்கிறார் பெண் உதவி ஆசிரியர் ஒருவர்!


===================================================


மேலே கூறப்பட்டுள்ள உண்மையையும் நடைமுறையில் அப்பாவி
ஆண்கள் எப்படி துன்புறுத்தப்படுகிறhர்கள் என்பதையும் ஒப்பிட்டுப்பாருங்கள். காசுக்காக கொடுமை செய்வது கணவனா அல்லது மனைவியா என்று புரியும். ஆனால் காசுக்காக மனைவியை வரதட்சணை கொடுமை செய்வதாக அப்பாவி ஆண்கள் மீதும் அவர்தம் குடும்பத்தார் மீதும் அபாண்டமான பொய் வழக்குகள் பதிவுசெய்யப்படுகிறது.

திருமணத்திற்கு முன்பே பணத்தைக் குறி வைத்துத் தான் திருமணத்திற்கு இக்காலப் பெண் சம்மத்கிறhள்?! திருமணமான பிறகு கணவன் அந்தப் பெண்ணின் பேராசைக்கு அடிபணியவில்லை என்றhல் பொய் வரதட்சணை வழக்கு என்னும் ஆயுதத்தை எடுத்து அனைவரையும் சீரழிக்கத் துணிந்து விடுகிறhள்.

திருமணத்திற்கு முன்
பே கணவனின் சொத்துக்களை அபகரிக்க அவள் போடும் திட்டம் திருமணத்திற்கு பிறகு தோல்வியடையும் போது, எதிர்பார்ப்பு ஏமாற்றமாகும் போது அவள் பெண்ணுரிமை என்ற பெயரில் பொய் கேசுகளை போட்டு அந்தப் பணத்தை பெற்றுவிடவேண்டும் என்ற மனநிலைக்கு வந்து விடுகிறhள்.

இது போன்ற பெண்களுக்குத் துணையாக சட்டமும் அதனை செயல்படுத்தித் தர அனைத்துத் தரப்பிலும் பெண்ணடிமைவாத தீவிரவாதிகளும் நிறைய இருக்கின்றனர்.

மேலுள்ள செய்திப்படி தற்கால இளம் பெண்களின் மனநிலை பணம், ஆடம்பரம், பகட்டு என்ற வலையில் பின்னப்பட்டுள்ளது நன்றகாத் தெரிகிறது. நவ நாகரீக மங்கைகளின் மனம் பலவிதமான பேராசைகளால் பின்னப்பட்டு அடுத்தவரின் வாழ்க்கையைக்கூட அழிக்கலாம் என்ற மனநிலை தான் இப்போது மேலோங்கி இருக்கிறது. அதற்கு பெண்ணுரிமை என்ற சாயம் பூசப்பட்டுள்ளது.

வரதட்ணை கொடுமை என்ற காலமெல்லாம் என்றேh போய் விட்டது. ஆனால் பேராசை பிடித்த சில
நவ நாகரீக பெண்கள் தங்களின் தவறhன ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக இன்னமும் அந்த துறுபிடித்த வரதட்சணை தடுப்புச் சட்டங்களை தவறhகப் பயன்படுத்தி பொய்யான வழக்குகளை போட்டு தானும் சீரழிந்து பல அப்பாவி குடும்பங்களையும் சீரழித்துக் கொண்டிருக்கிறhர்கள்,



Wednesday, August 19, 2009

எப்போது கண்டுகொள்வார்களோ?

'விவாகரத்து வழங்கும் போது குடும்பங்கள் பிரிகின்றன'
தினமலர் செய்தி

கணவரிடமிருந்து பெற்ற விவாகரத்தை ரத்துசெய்த, மாவட்ட கோர்ட் உத்தரவை எதிர்த்து, ராஜபாளையம் பெண் டாக்டர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. கணவன், மனைவிக்கு விவாகரத்து வழங்கும் போது அவர்கள் மட்டும் பிரிவதில்லை. இரு குடும்பங்கள் பிரிகின்றன எனவும் குறிப்பிட்டது. ராஜபாளையத்தை சேர்ந்தவர் வெங்கட்ராஜா. இவருக்கும் டாக்டர் சித்ராவுக்கும் 1996 மே 23ல் திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தையுள்ளது. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. விவாகரத்து கோரி சித்ரா ஸ்ரீவில்லிபுத்தூர் சப்- கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ""கணவருக்கு, என் தந்தை இரண்டு லட்சம் ரூபாய்க்கு கார் வாங்கி கொடுத்தார். அதை அவர் விற்று விட்டார். மேலும் 1.5 லட்சம் ரூபாய் கொடுத்தார். மேலும் ஐந்து லட்சம் ரூபாய் கேட்கிறார்,'' என்றார்.

முன்சீப் கோர்ட் இருவருக்கும் விவாகரத்து வழங்கியது. அதை எதிர்த்து வெங்கட்ராஜா மாவட்ட கோர்ட்டில் மனு செய்தார். மனுவில், ""என் மனைவி பாசம் மிக்கவர். அவரது சகோதரி, தந்தை தூண்டுதலால் எங்கள் வாழ்க்கை சீர்குலைகிறது. அவரை என்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிட வேண்டும்,'' என்றார். மாவட்ட கோர்ட், விவகாரத்து வழங்கிய கீழ்கோர்ட் உத்தரவை ரத்து செய்தது.

இதை எதிர்த்து, சித்ரா ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு மனு செய்தார். மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ஏ.செல்வம், ""இத் தம்பதிகள் திருமணமான பிறகு பரஸ்பரம் எழுதிய கடிதங்களில், ஒரு வார்த்தை கூட கொடுமை, கருத்துவேறுபாடு பற்றி குறிப்பிடவில்லை. இருவரும் பாசத்துடன் இருந்தது கடிதத்தில் தெரிகிறது. தம்பதிகளிடம் நல்ல சூழ்நிலை நிலவியதால் பெண் குழந்தை பிறந்துள்ளது. கணவன், மனைவிக்கு விவகாரத்து வழங்கும் போது அவர்கள் மட்டும் பிரிவதில்லை. இரு குடும்பங்களும் பிரிந்து விடுகின்றன. குழந்தையின் எதிர்காலம் செயல் இழந்து விடும் என்பதை கீழ்கோர்ட் கவனத்தில் கொள்ளவில்லை. மாவட்ட கோர்ட் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது,'' என்றார்.

===========================

இது போல பொய் 498A கேசுகளில் பல அப்பாவி குழந்தைகளின் வாழ்க்கை அரசின் தவறhன சட்டங்களால் அரசாங்கத்திற்கு தெரிந்தே சீரழிகின்றதே. அதை எப்போது கண்டுகொள்வார்களோ?



அதிசயம்! ஆனால் உண்மை!

பாதிக்கப்பட்ட கணவருக்காக நீதிமன்றம் செவிசாய்த்துள்ளது.

மனைவி மீது வழக்கு
தினமலர் செய்தி

கண்டபடி திட்டினாள் மனைவி; பொறுத்துப் பார்த்த கணவன், கோர்ட்டுக்குப் போய் விட்டார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்ருதி; பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இருவருக்கும் சிறிய அளவில் அவ்வப்போது மோதல் வரும். ஆனால், அப்போதே சரியாகிவிடும். சில சமயம், பெரிதாக வெடித்துவிடும். இப்படித்தான் கடந்தாண்டு ஒரு நாள் சாதாரண விஷயம், பெரிதாகி இவர்களிடையே மோதலை அதிகப்படுத்தியது.

"பள்ளிக்கு நேரமாகி விட்டது; காரில் இறக்கி விடுங்கள்' என்று மனைவி கூறியிருக்கிறாள். ஆனால், "எனக்கும் வேலை இருக்கிறது; என்னால் முடியாது' என்று கணவன் கூறி விட்டார். இது தான் நடந்தது. ஆனால், இது பெரிதாகி இருவரிடையே மோதல் வெடித்தது. "சரி, என் தந்தை உன்னைக் காரில் போய் இறக்கி விடுவார்' என்று கணவர் சொல்ல, "என்னை இறக்கி விட உங்களால் முடிந்தால் சரி; மாமனார் உதவியை நான் கேட்கவில்லை' என்று கணவனைக் கண்டபடி திட்டியிருக்கிறாள் மனைவி.

இது மட்டுமின்றி, தன் குடும்பத்தினரை அழைத்துச்சென்று, கணவரையும், அவர் தந்தையையும் தாக்க முயற்சி செய்துள்ளார் மனைவி. அறையில் அடைத்து சில ரவுடிகளை வைத்தும் தாக்க முயற்சி நடந்துள்ளது. மாமனாருக்கு சில அடிகளும் விழுந்துள்ளது. இதனால், வெறுத்துப்போன அவரது கணவர், கோர்ட்டில் மனைவிக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். "ஸ்ருதி மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளது. அதனால், அவர் மீது விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம்' என்று மாஜிஸ்திரேட் ரவீந்தர் சிங் தெரிவித்தார்.



Monday, August 17, 2009

மிக உன்னதமான உதவி

ஆகஸ்ட் 15, 2009 அன்று சென்னையில் இந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள் அப்பாவி குடும்பங்களை அழிக்கும் கொடிய சட்டங்களைப்பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விநியோகித்த விளக்கப் பிரசுரத்தின் நகல். டவுன் லோடு செய்து உங்களுக்குத் தெரிந்த இந்தியர்களுக்கு அனுப்புங்கள். இது நீங்கள் உங்களுடைய இந்திய சகோதர சகோதரிகளுக்கு செய்யக்கூடிய மிக உன்னதமான உதவி. இது பணமோ, உடலுழைப்போ இல்லாமல் உங்களால் செய்யக்கூடிய மிக மிக உன்னதமான உதவி. பல அப்பாவி குடும்பங்களின் உயிரையும், அதைவிட மேலான மானத்தையும் காக்கக்கூடிய உதவி.



செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது. ( குறள் எண் : 101 )

ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது.


காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. ( குறள் எண் : 102 )

உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.


வாழ்க "இந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கத்" தலைவர்கள் !


Sunday, August 16, 2009

ஒரு சொல் கேளீர்!

திருமணத்திற்கு தயாராகும் இளைஞர்களே, அண்ணன் "PKS" சொல்லும் இந்த அறிவுரையை கேளுங்கள். அத்தனையும் உண்மை.

இன்றைய தவறான பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் திருமணம் என்ற ஒரு புனிதமான நிகழ்ச்சியை "எதிர்காத்தில எச்சி முழிவதற்கு" சமமான செயலாக மாற்றிவிட்டது. "குடும்ப விளக்கு" என்று சொல்லப்பட்ட உறவை "நெருப்பாண்ட கொட்டிய குப்பை" துர்நாற்றத்துடன் எரிவது போல மாற்றிவிட்டது.

வீடியோவில் வரும் தத்துவங்களை கவனியுங்கள் புரியும்!

பம்மல் K சம்பந்தம் திரைப்படத்திற்கு நன்றி

வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்யப் போவதாக நீங்கள் முடிவு செய்திருக்கலாம். நீங்கள் பார்த்திருக்கும் பெண்ணும் அவரது குடும்பத்தாரும் நல்லவர்களாகக் கூட தெரியலாம் . எல்லாம் சரிதான்.

ஆனால், வரதட்சணை தொடர்பான சட்டங்கள் தவறhனவையாக இருக்கின்றன. குடும்பத்தில் ஏற்படும் சாதாரண பிரச்சினைகளை திசை திருப்பி தக்க சமயம் பார்த்து அந்த
கொடிய சட்டங்களை "திருமணம்" என்ற காரணத்தை வைத்து உங்கள் மீது ஏவ "சட்ட தீவிரவாதக்" கூட்டம் சுற்றி அலைந்து கொண்டிருக்கிறது.

ஆம். ஒரு நொடிப் பொழுதில் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் கொடிய சதி வலையில் தள்ளப்பட்டு வாழ்நாள் முழுவதும் துன்பப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள். இவை அனைத்தும் சட்டப்பூர்வமாக நடத்தப்படும். அதற்கு பல விதமான சட்டங்கள் இருக்கிறது. IPC 498A, DOWRY PROHIBITION ACT, DOMESTIC VIOLENCE ACT மற்றும் பல சட்டப்பிரிவுகள் உங்களை விழுங்கக் காத்துக் கொண்டிருக்கிறது.

இது திருமணத்திற்கு எதிரான செய்தியல்ல. திருமணங்களை முறித்து பல அப்பாவிகளின் வாழ்க்கையை சிதைக்கும் தவறhன சட்டங்களுக்கெதிரான செய்தி. சட்டங்களை திருத்தமாட்டார்கள். அதற்கு பலவித குறுகிய நோக்கங்கள் இருக்கின்றன.
அதனால் திருமணம் பற்றி சரியான முடிவு செய்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ளும் பொறுப்பு உங்கள் கையில் தான் இருக்கிறது.

இந்த
கொடிய சட்டங்களைப் பற்றியும் அவற்றhல் பாதிக்கப்பட்ட பல கோடி அப்பாவி குடும்பங்களின் அவல நிலைப் பற்றியும் தெரிந்து கொள்ள இந்த இணையதளங்களைப் பாருங்கள்:
www.saveindianfamily.org
www.mynation.net
www.protectindianfamily.org
www.savefamily.org
www.sahanaindia.org
www.498a.org
www.ghrs.in
http://tamil498a.blogspot.com/
http://ipc498a.wordpress.com/2007/07/01/the-498a-survival-kit/




சட்டத்தை மாற்றினால் என்ன?

16-8-09 வாரமலரில் வந்த அந்துமணி பதில்கள்!

* மகளைத் தந்தை கற்பழித்தார் - ஐந்து வயது சிறுமியை கற்பழித்தனர்... போன்ற செய்திகள் நிறைய வருகின்றன. இதுபோன்ற குற்றங்களுக்கு அரபு நாடுகளில் விதிப்பது போல கடும் தண்டனை இந்தியாவிலும் விதிக்க சட்டத்தை மாற்றினால் என்ன?

* மாற்றினால்... சட்டம் இயற்றுபவர்களே சிக்கலில் மாட்டிக் கொள்வரே!

============================================

இப்படித்தான் சட்டங்கள் நாட்டில் கொண்டுவரப்படுகிறது. தவறhன சட்டங்களால் யார் பாதிக்கப்பட்டாலும் கவலையில்லை தங்களுக்கு வருமானம் கிடைத்தா
ல் சரிதான் என்ற நோக்கத்தில் தான் 498A போன்ற சட்டங்கள் தவறhன முறையில் இயற்றப்பட்டிருக்கிறது. இதில் உண்மையிலேயே பாதிக்கப்படுவது பெண்கள் தான். ஆனால் இதன் மூலம் சம்பாதிப்பவர்கள் பல பேர். லிஸ்ட் போட்டு எழுதிப் பாருங்கள் தெரியும்.

தவறhன சட்டம் என்று பல முறை சுட்டிக்காட்டிய பிறகும் அதைத் திருத்த மனம் வரவில்லை. ஏனென்றhல் யாருடைய குடும்பமோ அழிந்து அதில் பணம் கிடைக்கிறது அல்லவா.

அது யாருடைய குடும்பமோ அல்ல, அப்பாவிகளான உங்களது குடும்பங்கள் தான்.



Saturday, August 15, 2009

நல்லது நடக்க விடுவோமா நாங்கள்?

வக்கீல்களுக்கு புத்தாக்க கல்வி; பார் கவுன்சில் கடும் எதிர்ப்பு
DM News: Aug 16,09

புதுடில்லி : வக்கீல்கள், காலத்திற்கேற்ப சட்ட அனுபவங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு "புத்தாக்க' பயிற்சியை அளிக்க வேண்டும் என்று தேசிய சட்டக் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பயிற்சித் திட்டத்தில், பங்கேற்று தேர்ச்சி பெற்றால் தான் அவர்கள் உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு, வக்கீல்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

கமிஷனின் 230வது அறிக்கையைத் தாக்கல் செய்த கமிஷனின் தலைவரும் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியுமான லட்சுமணன் கூறுகையில், "சட்டத்துறையில் நெறிமுறைகள், கோட்பாடுகளைப் பின்பற்றுவதில் தரம் படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும், காலத்துக்கேற்ற சட்ட திட்டங்களை அறிந்து கொள்ள வேண்டியது வக்கீல்களுக்கு முக்கியமாகிறது. அதனால், இந்தப் பயிற்சி அவசியம்'' என்று தெரிவித்தார்.

சட்டப் படிப்பு முடித்து கோர்ட்களில் தொழில் செய்யும் வக்கீல்கள், சட்டத் தகவல்களில் தங்களை மேம்படுத்திக் கொள்ளவே இந்தக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்படுகிறது என்று கமிஷன் விளக்கம் தெரிவித்துள்ளது. "இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது' என்று வக்கீல்கள் தரப்பில் கருத்து எதிரொலித்துள்ளது."வக்கீல்கள் தங்களது லைசென்சைப் புதுப்பிக்க இது மாதிரி நிபந்தனை விதிப்பது நல்லது அல்ல. வக்கீல்கள் சட்டம் சம்பந்தமாகப் "பல துறைகளிலும்" பயிற்சி பெற்றவர்கள். அவர்களுக்கு இந்த மாதிரி படிப்புகள் உதவிகரமாக அமையாது'' என்று சுப்ரீம் கோர்ட் பார் கவுன்சில் தலைவர் கிருஷ்ணமணி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

==============================================

இது போன்ற திட்டம் அமலுக்கு வந்தால் "498A டெம்ப்ளேட் போலிகள்" வடிகட்டப்படுவார்கள். ஆனால் என்ன செய்வது பாம்பே கோர்ட் சொல்வது போல ஆண்டவனிடம் தான் முறையிட வேண்டும்!




காமெடி கலாட்டா!!!

இதெல்லாம் நம்ம ஊர் கமெடி தான்!

'உங்களால் முடியலே... கடவுளிடம் முறையிட சொல்றேன்' : டி.ஜி.பி.,க்கு கோர்ட் கண்டிப்பு

மும்பை : "உங்களால் முடியவில் லை என்றால் சொல்லி விடுங்கள்; மகனைக் கண்டுபிடித்துக் கொடுக்க கோவிலுக் குப் போய் கடவுளிடம் வேண் டிக் கொள்ளச் சொல்கிறேன்!' - தந்தை கடத்திய மகனைக் கண்டுபிடித்துத் தரக்கோரிய தாயின் மனுவை விசாரித்த மகாராஷ்டிர ஐகோர்ட் நீதிபதி இப்படிக் கண்டிப்புடன் கூறினார். மும்பையில் உள்ள உல்லாஸ் நகரை சேர்ந்தவர் ப்ரீத்தி; இவர் கணவர் பன்டி; இவர்களுக்கு சுஜால் என்ற மகன் இருக்கிறான். கணவன் மனைவி தகராறு காரணமாக இவர்கள் பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில், சுஜாலைக் கட்டாயப்படுத்தி கணவர் அழைத்துச்சென்று விட்டார்.

போலீசில் புகார் தந்தும் பயனில்லாததால், ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு செய்தார் ப்ரீத்தி." என் ஐந்து வயது மகன் சுஜாலை அவனது தந்தை கடத்திக் கொண்டு போய்விட் டார், கண்டுபிடித்துத் தாருங் கள்' என்று கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பிலால் நஸ்கி, ஜோஷி ஆகியோர் போலீசின் செயல்பாடற்றத் தன்மையை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

"இந்த வழக்கில் விசாரணை செய்ததில், போலீஸ் சரிவர எந்த நடைமுறையையும் கையாளவில்லை. குழந்தையைக் கண்டுபிடிக்க முடியாததற்குக் காரணங்களைச் சொல்லாமல், நடவடிக்கை எடுத்திருக்கலாம். போலீசால் ஒரு குழந்தையைக் கூட கண்டுபிடிக்க முடியாதா? இதற்குத் தெளிவாக விளக்கம் தாருங்கள். இல்லையென்றால் இயலாமையைக் கூறுங்கள். நான் குழந்தையின் தாயிடம் வருத்தம் தெரிவித்து கோவிலுக்குப் போய் கடவுளிடம் முறையிடுமாறு கூறிவிடுகிறேன்' என்று நீதிபதிகள் கண்டிப்புடன் கூறினர்.

====================================

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் எங்கு செல்வது ??? நீதி மன்றங்களை மட்டும் நம்பும் அப்பாவிகளின் கதி??????


மகளிர் கமிஷனுக்கு மூக்குடைப்பு

சென்னை : மகளிர் போலீஸ் விசாரணையில், மாநில மகளிர் கமிஷன் குறுக்கிட தடை விதிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி, போலீசாருக்கும், மகளிர் கமிஷனுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரோடு கொல்லம்பாளையத்தைச் சேர்ந்த, சுவேதா பாது என்பவர் தாக்கல் செய்த மனு: எனக்கும், சதாசிவம் நவீன் செந்தூரான் என்பவருக்கும், 2004ம் ஆண்டு ஈரோட்டில் திருமணம் நடந்தது. நான் பலவகைகளில் துன்புறுத்தப்பட்டேன். என்னை வரதட்சணை கேட்டு கொடுமை செய்தனர். எனது பெயரில் பெசன்ட்நகரில் உள்ள வங்கி லாக்கரில் இருந்த நகைகளை, எனது கணவர் எடுத்துச் சென்றார். ஆபாச வார்த்தைகளில் இ-மெயில் அனுப்பினார்.

அவரது துன்புறுத்தலைப் பொறுக்க முடியாமல், கிண்டி மகளிர் போலீசில் புகார் கொடுத்தேன். எனது கணவர், மாமியாருக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், எனக்கு எதிராக, மாநில மகளிர் கமிஷனில் எனது மாமியார் மனு கொடுத்தார். விசாரணைக்கு வருமாறு மகளிர் கமிஷன் மிரட்டியது. இதற்கு வக்கீல் மூலம் பதிலளித்தேன். விவாகரத்து கோரி ஈரோடு முதன்மை கோர்ட்டில், சதாசிவம் நவீன் செந்தூரான் வழக்கு தொடுத்துள்ளார். பெண்களின் உரிமையை மகளிர் கமிஷன் பாதுகாக்க வேண்டும். புகார் மீது விசாரணை நடத்த கமிஷனுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், போலீஸ் புலன் விசாரணையில் குறுக்கிட அதிகாரமில்லை.

நான் அளித்த புகாரின் நிலை பற்றி தெரிந்துகொள்ள, கிண்டி மகளிர் போலீஸ் நிலையம் சென்று விசாரித்தேன். எனது புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மகளிர் போலீசாருக்கு, மகளிர் கமிஷன் தடை விதித்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, சென்னை வேளச்சேரியில் நான் வசித்து வந்த வீட்டுக்கு, சதாசிவம் நவீன் செந்தூரான் வந்தார். அப்போது நான் ஈரோட்டுக்கு சென்றிருந்தேன். கிண்டி மகளிர் போலீசாரும் எனது வீட்டுக்கு வந்து, பூட்டை உடைத்தனர். இதுகுறித்து வேளச்சேரி போலீசில், குடியிருப்போர் சங்கம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. சென்னை வந்து எனது வீட்டைப் பார்த்தபோது, அங்கு புதிய பூட்டு பொருத்தப்பட்டிருந்தது. இதனால், வீட்டுக்குள் செல்ல முடியவில்லை.

கிரிமினல் வழக்கில் புலன்விசாரணையை தடுப்பது, வீட்டுக்குள் செல்லும் உரிமையை மறுப்பது என, மகளிர் கமிஷனின் நடவடிக்கை உள்ளது. இது சட்டவிரோதமானது. எனவே, மகளிர் கமிஷனின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். கிண்டி மகளிர் போலீஸ் விசாரணையில் குறுக்கிட மகளிர் கமிஷனுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை நீதிபதி முகோபாதயா விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் கீதா ராமசேஷன் ஆஜரானார். மனுவுக்கு பதிலளிக்கும்படி, மாநில மகளிர் கமிஷன் மற்றும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணை 17ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. போலீசாரின் புலன்விசாரணைக்கு இவ்வழக்கு குறுக்கே நிற்காது என, நீதிபதி முகோபாதயா உத்தரவிட்டுள்ளார்.

==========================

இதுவரை "மருமகள் கமிஷனாக" இருந்தது சற்று நிறம் மாறியதும் மருமகளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை போலும்! நல்ல வேடிக்கை. என்னைக்கு இந்த மகளிர் கமிஷன் மகளிருக்கு உண்மையாகவே நல்லது செய்யுமோ?


Wednesday, August 12, 2009

கோடி ருபாய் கொடுத்தாலும் திரும்பக் கிடைக்குமா?

முந்தைய "மருமகள் ஜாக்கிரதை!!" என்ற தலைப்பில் எழுதப்பட்ட பதிவில் சொல்லப்பட்ட கருத்துக்கும் இன்று தினமலரில் வெளியாகிவுள்ள செய்திக்கும் என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள்!!
---------------------------------------------------

ஆண்மையற்ற கணவரிடம் ஒரு கோடி ரூபாய் கேட்டு வழக்கு

சென்னை:ஆண்மையற்ற கணவரிடம் இருந்து விவாகரத்து கோரியும், ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்கக் கோரியும் சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனைவி மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.சென்னையைச் சேர்ந்த சவும்யா என்பவர் தாக்கல் செய்த மனு:

மடிப்பாக்கத்தில் வசிக்கும் சுரேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் கடந்த ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, 30 சவரன்நகை, வெள்ளிப் பாத்திரங்கள், வரதட்சணை வழங்கப்பட்டது. திருமண மண்டபத்தில் சாந்தி முகூர்த்தத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. களைப்பாக உள்ளதாகக் கூறி, எனது கணவர் தூங்கிவிட்டார்.மறுநாள் கணவரின் வீட்டுக்குச் சென்றேன். அன்று இரவு, படுக்கை அறைக்குதனது பெற்றோரையும் எனது கணவர் அழைத்தார்.

எனது மாமனார், மாமியார் இருவரும் படுக்கை அறைக்கு வந்து எங்களுடன் சேர்ந்து உறங்கினர். தொடர்ந்து இந்த நிலை நீடித்தது.வேலைக்குச் சென்ற எனது கணவர், தொடர்ந்து இரண்டாவது ஷிப்ட், இரவு நேர ஷிப்ட்டுக்கு சென்றார். இதனால், எங்களுக்குள் உடல் ரீதியான உறவு ஏற்படவில்லை. மாமனார், மாமியார் என்னை மோசமாக, வேலைக்காரி போல் நடத்தினர். மாதம் தோறும், சம்பளப் பணம் முழுவதையும் அவர்களிடம் கொடுத்துவிட வேண்டும்.

உடல் நலம் சரியில்லாமல் இருந்த எனது தந்தையைப் பார்க்க அனுமதிக்கவில்லை. அவர்களிடம் உண்மையை சொல்லிவிடுவேன் என்பதால் தடுத்தனர். திருமணம் நடந்த நாள் முதல், எங்களுக்குள் உறவு இல்லை என எனது மாமியாரிடம் தெரிவித்தேன். எனது மாமனாரும் அநாகரிகமாக நடந்து கொள்கிறார்.வேலையில் இருந்து ராஜினாமா செய் யும்படி என்னை நிர்பந்தித்தனர். ஒரு லட்சம் ரூபாய் வரதட்சணையாக கொண்டு வரும்படி வற்புறுத்தினர்.

டாக்டர் ஒருவரிடம் சென்றோம். எனது கணவருக்கு பரிசோதனை செய்து சிகிச்சை யளிக்க வேண்டும் என்று டாக்டர் கூறினார்.அதற்கு, அவர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. எனது பெற்றோரிடம் இருந்து பணம் பறிக்கும் நோக்கில், எனது மாமனார் மற்றும் மாமியார், தங்கள் மகனுக்கு என்னை திருமணம் செய்து வைத்துள்ளனர். தங்கள் மகன், ஆண்மையற்றவர் என தெரிந்தும் இவ்வாறு செய்துள்ளனர்.

நான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மனஉளைச்சல் அடைந்தேன். இது குறித்து மடிப்பாக்கம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன்.எங்களுக்கு நடந்த திருமணம் செல்லாது என உத்தரவிட வேண்டும். ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுதாரர் சார்பில் வக்கீல் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜரானார். மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்துக்கு சென்னை குடும்ப நல கோர்ட் தள்ளிவைத்துள்ளது.இதற்கிடையில், மடிப்பாக்கம் மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரை பதிவு செய்து விசாரிக்க உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் சவும்யா மனு தாக்கல் செய்துள்ளார்.

------------------------------------------------------------------


மேற்படி செய்தி உண்மையா அல்லது பொய்யா என்பது கேள்வியல்ல. இது போல பொய் 498A, Dowry கேசுகளில் நீதிமன்றத்தில் அது பொய்யான கேசு என்று நிருபித்த பிறகு பொய் 498A, Dowry கேசு போட்ட பெண்ணிடமிருந்து வாழ்க்கையை இழந்த பாதிக்கப்பட்ட அப்பாவி கணவருக்கும் அவரது ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் கோடி ருபாயை நீதிமன்றம் வாங்கிக் கொடுக்குமா? அப்படி நேர்மையாக நடந்திருந்தால் இப்போது நாட்டில் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா?


பொய் கேசுகளால் அப்பாவி கணவருக்கும், அவரது வயதான தாய், தந்தைக்கும், சகோதர, சகோதரிகளுக்கும் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிப்பு ஏற்படாதா? மன உளைச்சல் ஏற்படாதா? அவர்கள் மனிதர்கள் கிடையாதா? அவர்களுக்கு ஏன் நஷ்டஈடு வழங்கப்படுவதில்லை?


கோடி ருபாய் கொடுத்தாலும் இழந்த வாழ்க்கையும், நீதிமன்றங்களில் அலைந்து பாழாய்ப் போன காலமும், குடும்ப மானமும் திரும்பக் கிடைக்குமா?



Tuesday, August 11, 2009

விருந்தினரின் குழந்தை

மும்பை: "கருத்து வேறுபாடுகளை மறந்து சண்டையைக் கைவிட்டு மகளின் எதிர்காலத்தில் கவனம் செலுத்துங்கள்!' - உயர் படிப்புக்கு தந்தையின் உதவி வேண்டி, 20 வயது மகள் தாக்கல் செய்த மனுவை ஏற்று, மும்பை ஐகோர்ட் பெற்றோருக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், இவள் தனது பெற்றோர் திருமணத்திற்கு முன்பே பிறந்தவள்; கணவன் - மனைவி பிரிந்து விட்டதால் மகள் பாதிக்கப்பட்டுள்ளாள். தனது உயர் தொழிற்கல்வி படிப்புக்கு தந்தையின் உதவியைப் பெற்றுத் தருமாறு மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல்செய்தாள். மனுவை விசாரித்த, நீதிபதிகள் மஜூம்தார், மூர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்," எங்களுக்கு உங்கள் மீது பரிதாபம் கிடையாது; உங்கள் மகள் பாதிக்கப்படுவதைப் பார்த்துதான் பரிதாபப்படுகிறோம்'' என்று கூறியுள்ளது.

கோர்ட் வாதத்திற்கு பதிலளித்த தந்தை," இவள் என் மகள் தான். அதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இவளது தாயை நான் திருமணம் செய்யவில்லை' என்றார். திருமணம் தொடர்பான பிரச்னையை விசாரிப்பதை நிராகரித்த கோர்ட், "மகள் - தந்தை என்ற உறவில் எந்தவிதப் பிரச்னையும் வரக்கூடாது. உங்கள் பிரச்னையால் மகள் பாதிக்கப்படக்கூடாது; அவள் எதிர்காலத்தைப் பற்றி கவனம் செலுத்துங்கள்' என்று தாய்,தந்தைக்கு உத்தரவிட்டது. மகளுக்கு உயர் படிப்புக்கு எவ்வளவு தொகை கொடுக்கவேண்டும் என்பதை உறுதிசெய்யும்படியும் உத்தரவிட்டது.

--------------------------------------------------------

திருமணம் செய்யாமலே ஆணும் பெண்ணும் கூடி வாழலாம், எந்த வரைமுறையும் கிடையாது, அந்தப் பெண்ணுக்கு எல்லா உரிமையும் உண்டு என்பது போன்ற "புதுமைகளைப்" புகுத்தினால் நாட்டில் இது போன்ற குழப்பங்கள் தான் மிஞ்சும். பெண்களுக்கு அதிக உரிமை கொடுப்பதாக நினைத்து திருமணம் என்ற உறவையே கொச்சைப்படுத்தி நாட்டில் இது போன்ற பிள்ளைகளின் எண்ணிக்கையைத்தான் உயர்த்த முடியும். உண்மையான பெண் சுதந்திரத்திற்கு அர்த்தம் புரியாமல் அரை வேக்காட்டுத்தனமாக சட்டங்களை இயற்றினால் கடைசியில் பாதிக்கப்படப் போவது பெண்கள் தான்.

மகள் - தந்தை உறவில் பிரச்சினை வரக்கூடாது என்று கருத்துக் கூறும் போது மற்ற விவாகரத்து வழக்குகளில் தந்தையர்களின் நிலைமை என்னவென்று யோசிக்க வேண்டும். ஒரு பேய் பொய்யான 498A கேசு பதிவு செய்து விட்டால் குழந்தைகளின் கதி என்னவென்று யாரும் யோசிப்பதில்லை. அது போன்ற சமயத்தில் தந்தையர்களுக்கு நீதிமன்றங்கள் ஏதோ பாவப்பட்டு "விருந்தினர் அந்தஸ்த்தில்" தான் (Visitation Rights Only) குழந்தையைப் பார்க்க அனுமதிக்கின்றன. தான் பெற்ற குழந்தையை விருந்தினருக்கு பிறந்த குழந்தை போலத் தான் தந்தை பார்க்க வேண்டும். என்ன கொடுமை!




Monday, August 10, 2009

அது ஒரு கனாக் காலம்

அது ஒரு கனாக் காலம்!

இது சினிமாவின் தலைப்பு அல்ல. இனி வரப்போகும் காலங்களில் இளைய தலைமுறைகளுக்கு இந்திய குடும்ப கலாச்சாரத்தைப் பற்றி ஒரு கனவு போலத்தான் சொல்லமுடியும். ஆனந்த விகடனில் வந்துள்ள கீழுள்ள கட்டுரையைப் படியுங்கள் புரியும். படித்த பிறகாவது விழித்துக் கொள்ளுங்கள். மதி மயங்கி உறக்கத்தில் இருப்பவர்களை தட்டியெழுப்புங்கள். இனி வரப்போகும் தலைமுறைக்கு நல்ல கலாச்சாரத்துடன் கூடிய வாழ்க்கை முறையை காட்
டுங்கள்!


''செக்ஸோட தியரி மாறிடுச்சு..!''

'மகனைக் கொன்று சடலத்தை ஃப்ரிஜ்ஜில் ஒளித்துவைத்த தாய்', 'சொத்துக்களை அபகரிக்க மனைவி, மகள், மாமியாருக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்த கணவன்', 'கள்ளக் காதலுக்குத் தடையாக இருந்த மகனையும், கணவனையும் கொல்வதற்குக் கூலி யாட்களை ஏவிய மனைவி!'

செய்தித்தாள்களில் நித்தமும் இந்த விபரீத செய்திகள்தான் பக்கங்களை ஆக்கிரமிக்கின்றன. குடும்பங்களுக்குள் அதிகரித்து வரும் இது போன்ற வக்கிர வன் முறைகளின் உறவுச் சிக்கல்கள் குறித்து விவாதிக்கிறார்கள் காவல் துறைக் கூடுதல் ஆணையர் ரவி, ஸ்டான்லி மருத்துவமனை உளவியல் துறைத் தலைவர் டாக்டர் மா.திருநாவுக்கரசு மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நளினி ஆகியோர்.

''எல்லா உயிர்களுக்கும் செக்ஸ் என்பது இனவிருத்தி மட்டும் சம்பந்தப்பட்ட சங்கதி. ஆனால், மனித இனத்தில் மட்டும்தான் செக்ஸ் இனவிருத்தி தவிர சந்தோஷம், பொழுதுபோக்கு, ஆதாயத்துக்காக என்று பல பரிமாணங்களில் கையாளப்படுகிறது. உடலியல் கட்டுப்பாட்டில் இருக்கும் செக்ஸ்... மனம் மற்றும் சமூகக் கட்டுப்பாட்டின் கீழ் தடுத்து அணை போடப்படும்போது அதை அத்துமீறத்தான் தூண்டும். அந்த அத்துமீறல் ஒருவித பரவச சுகம் தந்தால், தொடர்ந்து அந்தப் பாதையிலேயே பயணிக்க மனம் பழகிவிடும். அந்தப் பாதையில் ஏதேனும் தடை ஏற்படும் சமயம்தான் இது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நிகழும்!'' என்று செக்ஸ் பற்றி திருநாவுக்கரசு பூடகமாகத் தொடங்கும்போதே இடைமறிக்கிறார் ரவி.

அது போன்ற பிரச்னைகளுக்கு செக்ஸ் மட்டுமே காரணம் கிடை யாதுன்னு நான் சொல்வேன். இதுபோன்ற சங்கதிகளை ஊதிப் பெரிதாக்கும் ஊடகங்களும் தங்கள் பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும். ஒரு சின்ன விஷயத்தை சென்சேஷன் பண்றோம்னு கள்ளக் காதல், காதல் ஜோடிகள் செய்திகளை பெருசா பப்ளிஷ் பண்றாங்க. ஆனால், உண்மையான காரணங்களைத் தீர விசாரிக்காம விட்டுர்றாங்க. அங்கொண்ணும் இங்கொண்ணுமா நடக்குற ஓரிரு சம்பவங்களை வெச்சு, ஒட்டுமொத்த சமுதாயமே இப்படித்தான் இருக்கோன்னு சங்கடப்படத் தேவை இல்லை. ஊடகங்களின் தாக்கம், கூட்டுக் குடும்பங்களின் மறைவு, மெகா சீரியல்கள், சினிமாவின் கலர்ஃபுல் கனவுகளை நம்புவதால் ஏற்படும் மனமாச்சர்யங்களும் இதற்குக் காரணம்னு சொல்வேன்'' என்கிற ரவியின் கருத்தையே தொட்டுத்தொடர்கிறார் நளினி.

''உதாரணத்துக்கு... டி.வி. சேனல்களில் நடத்தப்படும் பாட்டு, டான்ஸ், பேச்சுப் போட்டிகளில் தோல்வியுற்றதாக வெளியேற்றப்படும் குழந்தைகள் கதறி அழுவதைப் பார்க்கும்போது, மனசு பதறுகிறது. உலகமே அந்தப் போட்டியோடு முடிந்துவிடப் போகிறது போன்ற சேனல்களின் மாயைக்கு அந்தக் குழந்தைகளின் பிஞ்சு மனது பாதிக்கப்படுகிறது. நாங்கள் மாணவர்களாக இருந்தபோது எங்களைக் கண்காணிக்க கண்டிக்க பெற்றோர்கள் இருந்தாங்க. ஆனால், இப்போது எல்லாம் வீடுகள் வெறிச்சோடி இருக்கு. தாத்தா, பாட்டிகள் முதியோர் இல்லத்தில் இருக்காங்க. அப்பா, அம்மா ஆபீஸ்ல இருக்காங்க. தனது உலகின் சட்டதிட்டங்களைத் தானே தீர்மானித்துக்கொண்டு அவர்களாக வளர்கிறார்கள்!'' என்று கவலை தெரிவிக்கிறார் நளினி.

தொடர்கிறார் திருநாவுக்கரசு, ''என்கிட்ட வரும் பல பெற் றோர்கள், 'என் பொண்ணு லவ் பண்றா. அவள் மனசை மாத்துங்க'ன்னு கேட்டுதான் வர்றாங்க. பொண்ணுகிட்ட பேசுனா, 'அவன் ரொம்பப் பொறுப்பானவன். நல்ல பையன். என் வாழ்க் கையையே அவன்கிட்ட கொடுக் கப் போறேன். அவனைப் பத்தி நான் முழுசா தெரிஞ்சுக்க மாட் டேனா?'ன்னு கேக்குறாங்க. பெற்றவர்களும் கௌரவமான காதலை மதிக்கக் கத்துக்கணும். அதற்குண்டான மரியாதையைக் கொடுக்கணும். அதே சமயம் காதலை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தும் போக்கைப் பெண்கள் கைவிடணும்!'' என்று நிறுத்தியவர், சட்டென நளினியிடம் திடீர் கேள்வி கேட் கிறார். ''பெண்களே விரும்பி செக்ஸ் வெச்சுக்கிட்டு பிறகு வீட்டார் தூண்டுதலால் 'கற்பழிச்சுட்டான்'னு கொடுக்குற புகாரினால் எத்தனை ஆண்கள் பாதிக்கப்பட்டு இருக்காங்க... நீங்களே சொல்லுங்க!''

தயக்கமாக ஆமோதிக்கிற நளினி, ''நீங்க சொல்றதும் மறுக்க முடியாத உண்மைதான். மைனர் பெண், மேஜர் பையன் என்று எல்லாம் சர்ட்டிஃபி கேட் பார்த்துக் காதல் வருவது இல்லை. பார்த்தோ, பழகியோதான் காதல் கொள்கின்றனர். தனிமையைப் பயன்படுத்தி இளமை தாகத்துக்குத் தீனி போடுகிறார்கள். காதல் வீட்டுக்குத் தெரிந்ததும் உறவுகளின் மிரட்டலுக்குப் பயந்து பையன் மீது புகார் கொடுக்கிறாள். மைனர் பெண் என்பதால் அவன் மீது கற்பழிப்புப் புகார் பதிவு செய்யத்தான் சட்டத்தில் இடம் இருக்கிறது. சிறைக்குச் செல்கிறான். மனதில் வன்மம் கொள்கிறான். இதனால் இளமைக்காலம் முழுவதையும் தொலைத்த பல ஆண்களை நான் சிறைச்சாலையிலேயே சந்தித்திருக்கிறேன்!'' என்று நளினி நிறுத்த... தொடர்கிறார் ரவி,

''தெளிவாக முடிவெடுக்கும் திறனும், வயதும் வந்த பிறகே காதலைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். அந்தப் பக்குவத்தைத்தான் பெற்றவர்களும் உறவினர்களும் விடலைப் பருவத்தில் இருப்பவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். 'காதல்' என்று பிள்ளைகள் யோசிக்கத் தொடங்கிவிட்டது தெரிந்தாலே பெற்றோருக்கு உண்டான கெடுபிடிகளைக் களைந்துவிட்டு ஒரு நண்பனாக அவர்களை அணுக வேண்டும்!'' என்று சிம்பிள் ஃபார்முலா சொல்கிறார் ரவி.

''அடலசன்ட் பருவத்தில் இருப்பவர்களுக்கு அது மாதிரியான சிக்கல் என்றால், அதைக் கடந்தவர்களுக்கும் பிரச்னை கள் இல்லாமல் இல்லை. 'எனக்கு செக்ஸ்ல இன்ட்ரஸ்ட் கிடையாது. கணவரோட விருப்பத்துக்காகத்தான் செய் றேன்'னு நம்ம ஊர் பெண்கள் சொல்வாங்க. ஆனால், வெளி நாட்டுப் பெண்கள், 'எனக்கு இதுதான் பிடிக்கும்... இப்படித்தான் இருக்கணும்... இவன்தான் வேணும்'னு கேக்குற அளவுக்கு சுதந்திரமா இருக்காங்க. இங்கே செக்ஸை இலைமறை காய்மறையாக ஒரு தீண்டத்தகாத சங்கதி போல மூடி மறைப்பதால்தான் வயது வந்த அனுபவம் நிரம்பிய பெரியவர்களே தடம் மாறுறாங்க. இத்தனைக்கும் செக்ஸ்ல நம்ம ஆட்களுக்கு அத்தனை ஆர்வம். ஆனா, அதைப் பத்தி வெளிப்படையாகப் பேசி விவாதிக்கக் கூடிய சூழல் இங்கே கிடையாது. கிட்டத்தட்ட 25 வயசு வரை செக்ஸைப் பத்தி எந்த விழிப்பு உணர்வும் ஏற்படுத்தாம திடீர்னு ஒரே ராத்திரியில் ஒரு பெண்ணைத் திருப்திப்படுத்துன்னு ஒப்படைச்சா பல ஆண்களுக்கு என்ன செய்யிறதுன்னே தெரியாது. அதில் ஏமாற்றத்தைச் சந்திக்கும் பெண்கள் வேற வழியில்லாமல் தங்கள் இயற்கை உந்துதலைத் தணித்துக்கொள்ள வேறு ஆணை நாடுகிறார்கள். அதற்குத்தான் நாம் 'கள்ளக் காதல்' என்று அடைமொழி கொடுக்கிறோம். அந்தப் பதத்தையே அகராதியில் இருந்து அழிச்சாக்கூட நல்லது!'' என்கிறார் திருநாவுக்கரசு.

''இப்ப செக்ஸோட பரிணாமமும், பயன்பாடும் மாறிடுச்சு. அன்பை வெளிப்படுத்த, ஆளுமையை நிரூபிக்க, அரவணைப்பை இன்பமாக நிலைநாட்ட, பழிவாங்க, பணம் சம்பாதிக்க, பாசத்தை உணர்த்துவதற்குன்னு செக்சுக்கான பயன்பாடுகள் பல தளங்களில் பயணிக்குது.

செக்ஸ் மூலமாக ஒரு விஷயத்தைச் சாதிக்க முடியாதபோது ஆத்திரம் வரும். அதுதான் விபரீதங்களுக்கான வீரிய விதை. சொல்லித் தெரிவது இல்லை மன்மதக் கலை. அது உடம்புலயே இருக்குங்கிறது பழைய தியரி. ஆனா, இப்ப நிறைய விஷயம் படிக்கிறாங்க, தெரிஞ்சுக்கிறாங்க. அதை எல்லாம் பிராக்டிக்கலா அனுபவிச்சுப் பார்க்கணும்னு துடிக்கிறாங்க. அந்தக் காலத்தில் செக்ஸ் வெச்சுக்கிட்ட பிறகுதான் விவகாரங்கள், வேறுபாடுகள் கிளைவிடும். ஆனா, இப்ப செக்ஸ்ல ஈடுபடுவதற்கான முனைப்புகளிலேயே பூகம்பங்கள் வெடிக்குது.

'அப்படி எல்லாம் செய்யக் கூடாது. தப்பு, பாவம்'னு அட்வைஸ் பண்ணா மறைக்க ஆரம்பிச்சுடுவாங்க. அந்த மாதிரி மனரீதியான பிரச்னைகளுக்கு விஞ்ஞானபூர்வமான, ஆக்கபூர்வமான தீர்வுகள் உண்டுனு நாம புரிஞ்சுக்கிட்டு அதைச் சம்பந்தப்பட்டவங்களையும் உணர வெச்சுட்டா எந்தச் சிக்கலும் இருக்காது!'' என்று திருநாவுக்கரசு முடிக்க, அதை அமைதியாக ஆமோதிக்கிறார்கள் மற்ற இருவரும்!

--------------------------------------------------
Courtesy:ஆனந்த விகடன்
தமிழ் சரவணன்


Sunday, August 09, 2009

கொலைக் களமாகி வரும் குடும்ப வாழ்கை முறை

ஆத்திரத்தில் அதிகரிக்கும் படுகொலைகள்: உறவினர்-நண்பர்கள் பகை, கள்ளக்காதல் காரணம்
DM News: August 10, 09

உறவினர், நண்பர்களுக்கு இடையே ஏற்படும் திடீர் பகையால் கொலை சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. 2006ல் 811 கொலைகள் நிகழ்ந்துள்ளன. 2008ல் 1,142 கொலைகள் நடந்துள்ளன; இவற்றில் 155, "கள்ளக்காதல்' கொலைகள்.

மேற்கத்திய நாடுகள் நம்மைப் பார்த்து வியக்கும் பல விஷயங்களில் ஒன்று, நம் குடும்ப அமைப்பு முறை; பண்பாடு, கலாசாரம். இதைக் கேள்விக்குறியாக்கும் விதமாக உறவு, நண்பர்களுக்கு இடையேயான கொலைகள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. கடந்தாண்டு தமிழகத்தில் நடந்த கொலைகளில் 70 சதவீதம், குடும்பத் தகராறு, வாய் தகராறு, குடிபோதை தகராறு மற்றும் கள்ளக்காதல் விவகாரங்களால் நிகழ்ந்துள்ளன. கள்ளத் தொடர்பால், மதுரையில், பெற்ற மகனையே தாய் கொன்றார்.
மாதவரத்தில் மனைவி, கணவனைக் கொன்றார். மகன், தாயை வெட்டிக் கொன்றார் என தினந்தோறும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
உணர்ச்சிவயப்பட்டு நடக்கும் இந்தக் கொலைகளுக்கு மன அழுத்தம் தான் முக்கிய காரணம். இதுகுறித்து, மனநல மருத்துவர் பிரபாகரன் கூறியதாவது: இன்றைய நுகர்வு கலாசாரத்தில், ஆசைப்படுவதை உடனடியாக அனுபவிக்க வேண்டும் என்ற மனநிலையில் மனிதர்கள் உள்ளனர். இந்த நிலைக்கு ஆளானவர்களுக்கு, முதலில், குறிப்பிட்ட நபர் மீது ஆர்வம் ஏற்படும்.

அவர் மீது அதிக ஈடுபாடு உண்டாகி, அவரைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பர். அவருக்கே அடிமையாகி ஒரு தீய நினைவு வட்டத்திற்குள் சிக்கிக்கொள்வர். அடுத்தகட்டமாக, அவரை எப்படியாவது அடையத் துடிப்பர். இத்தகையவர்கள் விருப்பத்திற்கு தடையாக யார் இருந்தாலும், கொலை செய்யக்கூடத் தயங்க மாட்டர். இப்படிதான் கள்ள உறவுகளில் கொலைகள் நிகழ்கின்றன. கள்ளத்தொடர்பில் உள்ளவர்கள் மீது கோபப்படவோ, அவர்களை தாக்கவோ கூடாது. நிதானமாகப் பேசி, தவறை புரிய வைக்க வேண்டும்.

கள்ள உறவில் காட்டும் ஆர்வத்தை தம் பிள்ளைகள், புத்தகங்கள், தொழில் எனப் பல நல்ல விஷயங்களில் செலுத்தினால், அதிலிருந்து மீளலாம். தான் என்ற அகந்தையும், உறவுகளில் நிலவும் பனிப்போரும் தான் குடும்ப தகராறுகள், வாய்த் தகராறுக்கு அடிப்படை. இந்தப் பிரச்னைகளை அமைதியான முறையில் உடனே பேசி தீர்க்க வேண்டும். நாளை பார்க்கலாம், என விடக்கூடாது. இரவுத் தூக்கத்தின்போது, பிரச்னைக்கு காரணமானவர்கள் மீதான வெறுப்பை ஆழ்மனம் பத்து மடங்கு அதிகரித்துக் காட்டும். அந்த நினைப்பே மேலோங்கி இருக்கும்போது, கொலையில் முடிந்துவிடுகிறது. இவ்வாறு டாக்டர் பிரபாகரன் தெரிவித்தார்.

இதுகுறித்து, சென்னை மாநகர போலீஸ்கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது: இன்றைய பொருளாதார உலகில் கூட்டுக் குடும்பங்கள் குறைந்துவிட்டன. முந்தைய தலைமுறையில் வீட்டைவிட்டு அவ்வளவாக வெளியே வராத பெண்கள், தற்போது பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் அளவிற்கு வளர்ந்துள்ளனர். இப்படிக் கஷ்டப்பட்டு உழைக்கும் பெண்களின் சம்பாத்தியத்தை குடும்பத்தின் கூடுதல் வருவாய் என எண்ணாமல், சில ஆண்கள் அவர்களை சந்தேகத்துடன் பார்க்கின்றனர்.

மொபைல், "டிவி', இன்டர்நெட் போன்ற நவீன சாதனங்கள் நகரம், கிராமம் என்ற பாகுபாடின்றி எல்லா இடங்களிலும் எதிர்மறை தாக்கங்களையும் ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற மாற்றங்கள் நம் உறவுமுறைகளை அசைத்துப் பார்க்கின்றன. எல்லை மீறும்போது, இது உறவுகளுக்கு இடையேயான கொலைகளுக்கு மறைமுக காரணமாகிறது. இதைத் தடுக்க, எல்லாவற்றையும் வணிக நோக்கில் அணுகக் கூடாது. சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். கீழ்தட்டு மக்களின் கல்வியறிவு, இன்னும் வளர வேண்டும். இதுபோன்ற கொலைகள் பெரும்பாலும் உணர்ச்சி வசப்படுதல், அறியாமையால் ஆத்திரப்பட்டு நடந்துவிடுகின்றன. இவற்றைத் தவிர்க்க, முறையான "கவுன்சிலிங்' அவசியம். இவ்வாறு கமிஷனர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

கொலைகளும் காரணங்களும்: கடந்த மூன்றாண்டுகளில் தமிழகத்தில் நடந்த உறவுகளுக்கு இடையேயான கொலைகள் பற்றிய விவரம்:

காரணங்கள் 2006 2007 2008

குடும்பத் தகராறு 324 421 469
வாய்த் தகராறு 301 355 427
குடிபோதைதகராறு 68 98 91
கள்ளக்காதல் 118 123 155
மொத்தம் 811 997 1,142

------------------------------------------------------------------
------------------------------------------------------------------
குடும்பப் பிரச்சினைகளை வணிக நோக்கத்தில் பார்க்கக்கூடாது என்கிறhர் கமிஷனர். ஆனால் ஒரு குடும்பத்தில் பிரச்சினை என்றhலே அதை வியாபார நோக்கத்தில் அணுகி பிரச்சினைகளை பெரிதாக்கும் கூட்டம் எதுவென்று அனைவருக்கும் தெரியுமல்லவா?

இன்றைய காலகட்டத்தில் உள்ள "குடும்ப அழிப்பு சட்ட" நடைமுறைப்படி கூட்டுக் குடும்ப முறை என்பது வயதான பெற்றேhர்களுக்கும் உடன் பிறந்தவர்களுக்கும் தனக்குத் தானே சமாதி கட்டிக்கொள்வதற்கு சமமாகும். ஏனென்றhல் பொய் வரதட்சணை கேசுகளில் அதிகமாக சிக்க வைக்கப்பட்டு பணயக்கைதிகளாக்கி அவமானப்படுத்தப்படுவது அவர்கள்தானே.

எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம் என்ற நோக்கத்தில் பல சட்டங்களும் "சட்ட தீவிரவாத கூட்டமும்" இருக்கிற வரை குடும்ப கலாச்சார அழிவை யாரால் தடுக்க முடியும்?

Saturday, August 08, 2009

மீண்டும் ஒரு ஆகஸ்ட்டுப் புரட்சி!

கணவர் உரிமை மாநாடு: சிம்லாவில் நடக்கிறது

பெங்களூரு: சுதந்திர தினத்தன்று கணவர் உரிமை மாநாடு சிம்லாவில் நடைபெற உள்ளது. இந்திய மக்கள் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடினாலும், ஆண்கள் பலர் பெண்களிடம் அடிமைப்பட்டு கிடக்கின்றனர்.

முழு சுதந்திரம் கிடைக்காத நிலையில் உள்ள இந்த ஆண்கள், இமாச்சல பிரதேச மாநிலம், சிம்லாவில் வரும் 15ம் தேதி மாநாடு நடத்த உள்ளனர். இந்திய குடும்ப பாதுகாப்பு அறக் கட்டளையின் தலைவர் அனில் குமார் இதுகுறித்து கூறியதாவது: இந்திய சட்டங்கள் பெண்களுக்கு சாதகமாகத்தான் உள்ளன.

வரதட்சணை கொடுமை, விவாகரத்து உள்ளிட்ட வழக்குகளில் ஆண்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பெண்களுக்கு சாதகமாகத்தான் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. எனவே, ஆண்களுக்கு சம உரிமை கோரி வரும் 15ம் தேதி சிம்லாவில் நடக்கும் மாநாட்டில் தீர்மானம் இயற்றப்படும். மனைவியின் கொடுமைக்கு ஆளான 30 ஆயிரத்துக்கும் அதிகமான கணவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அனில் குமார் கூறினார்.

Courtesy: Dinamalar ஆகஸ்ட் 09,2009



நாட்டைக் காக்க புரட்சி ஆரம்பம்

Harassed hubbies to meet for 'freedom'
CHANDIGARH: A clutch of harassed husbands, from Madurai to Mumbai and Jammu to Jamshedpur, will be converging in Shimla on August 15 to declare their ''independence from their wives''.

The convention is catching such momentum that there could be far more crying men than expected.

''I am a harassed husband and I will be screaming my lungs out when we meet to discuss how the fairer sex has put the lights out of our lives,'' said Pranab Kumar Singh in Chandigarh wistfully.

The organisers claim there will be about 40,000 participants at the ''first meeting of harassed husbands in the country''. At the end of the three-day convention, they will ask the Centre to set up a forum for hearing their grievances. They say both the Domestic Violence Act and Dowry Act are ''draconian'' and ''heavily tilted against men''.

''Around 1.2 lakh harassed husbands have committed suicide in the country in the last four years,'' claimed Nitin Gupta, the Chandigarh representative of Save Indian Family Foundation, the NGO which is behind the convention along with Bangalore-based Children's Rights Initiative for Shared Parenting, Maharashtra's Purush Suraksha Sanstha and Uttar Pradesh's Pathi Paramesh Kendra.

''These figures haven't come from the top of our heads, they have been extracted from the National Crime Records Bureau.'' ''It was fine in the first few months of our marriage. But from wife she turned into a vampire so rapidly that I didn't even have time to understand what led to the metamorphosis,'' said Pranab Kumar Singh.

-----------------------------------------------------
'Men to meet in Shimla for equal rights'

CHENNAI: A group of men from Tamil Nadu is setting off for Shimla to participate in a meeting on August 15 for "equal rights and freedom from harassment from women".

Keshava Vishwanathan, an IT professional who is going to attend the meeting organized by Save Indian Family Foundation, said he felt that in many instances Indian law favoured wives. "Be it in the case of custody of children or allegations of domestic violence and dowry harassment, the law generally takes the side of women," he claims. "Some of the laws are very rigid, and we have found cases foisted on us," Vishwanathan said. He added that they were not women haters'.

Another participant, Manoj David said they were trying to "raise the issue of freedom and dignity of harassed husbands". About 19 men from Chennai, Madurai and Coimbatore would be part of the day-long meeting in Shimla, in which more than 100 men were participating. "More than 100 men, representatives of 30,000 other harassed husbands from across the country, will meet to come up with strategies to take on their wives," he said.

Virag Dhulia, a senior member of Save Indian Family Foundation, said the latest report on the suicide rate of men across India was an indicator of the harassment of men. Around 1.2 lakh harassed' husbands in India have committed suicide in last four years, he claimed, citing figures from the National Crime Records Bureau. "This is an alarming number. We're meeting at Shimla, not to draw a gender-dividing line. We want to discuss a social issue and find solutions as the country is seeing a large number of divorces," he said.

Some of issues they will discuss include a separate men's welfare ministry on the lines of the women and child welfare ministry, equal taxation for men and women, change in inheritance laws, amendment to the domestic violence prevention law, and mandatory joint custody of children for divorced couples. "We'll also demand pre-litigation counseling before grant of divorce, an end to police brutalities and judicial reforms to help address the social issues," Dhulia said.

According to data available with SIFF, a total of 9,000 divorce cases were filed in Delhi, 7,500 in Mumbai and 5,000 cases in Bangalore and 4,000 cases Chennai in 2008.
-------------------------------------------------------------------------

Boys fight for freedom!

Times News Network

Rage. That’s what one gets to see in the eyes of harassed husbands and men’s rights activists in the city, who, outraged by laws, which they claim are unfair, are now getting ready to voice their protest on Independence Day this year.

“We are abstaining from Independence Day celebrations this year to protest the unfair laws that favour women,” says Suresh, the convenor of the Chennai Chapter of the Save Indian Family Foundation (SIFF), an organisation fighting for men’s rights and family harmony under the aegis of the Save Indian Family movement.

Men’s groups across the country have been protesting gender-biased laws in general and the Domestic Violence Act and the 498A, in particular.

Citing an instance, he says, “At present, Indian law considers adultery as a crime when committed by Indian men, but not so when committed by women. This is blatant discrimination against men. Also, Indian law exempts women from punishment for domestic violence. The laws have been pampering women by not according them any duties, while creating obligations for men. By this decidedly anti-male mindset of the law, men in India have started to feel
that it’s perhaps a crime to be born a male in India.”

Kumar Jahgirdar, the presi
dent of Children’s Rights Initiative For Shared Parenting (CRISP), which is working to ensure the rights of children, points out another hotly contested issue.

“Women’s rights are different from children’s rights. What’s more, the rights of both these categories are not always compatible. While remarriage might be in the interest of a woman who has divorced her hus
band, it may not be in the best interest of her child. So, ideally, there should be a separate ministry for children to look into issues concerning their rights. However, in India, that isn’t the case. Children constitute forty percent of the population and there is no separate ministry for them. A child has to have access to both parents because nature has provided some unique qualities to the father which cannot be substituted by the mother, and vice-versa.” Giving out details of what SIFF plans to do on Independence Day, Suresh says, “This Independence Day, our members in Chennai will distribute flyers at the Marina Beach in the morning, elucidating our problems, cause and activities.

We are also planning to present a memorandum to the Governor and the Law Minister of the state.” Also, there is bound to be action at the national level as well as the Save Indian Family
Movement’s second national conference, is to be held on August 15 and 16 at Shimla.

Says Virag, an office-bearer of SIFF, “The first one was held in Goa last year. There are 14 non-governmental organisations affiliated to the SIFF across the country and at least 100 active leaders from different parts of the country will be attending this meet to discuss ways to further intensify our agitation and reiterate our demand for a National Commission for Men and Men’s Welfare Ministry.” Informs Suresh,“This time, nine members from Chennai will be participating in the national conference in Shimla.” Volunteers from various
other organisations such as the Family Cultural Forum and CRISP will also join SIFF’s members in distributing pamphlets on Independence Day. It seems that men have finally taken the fight for freedom from harassment to the next level!
------------------------------------------------------
Courtesy: Times of India


Friday, August 07, 2009

மருமகள் ஜாக்கிரதை!!!

வெளிநாட்டில் வசிப்பவரை மணக்க விருப்பமா? பெண்களுக்கு தேசிய கமிஷன் அறிவுரை

வெளிநாட்டில் வேலை செய்யும் மணமகனை மணக்க போகும் பெண்களுக்கு, தேசிய பெண்கள் கமிஷன் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

கை நிறைய சம்பாதிக்கும் மணமகனுடன் சந்தோஷமாக வாழப் போவதாக நினைத்து கொண்டு வெளிநாடு செல்லும் பெண்கள் பலர், அங்கு ஏமாற்றப் பட்டு நிர்கதியாக நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். எனவே, வெளிநாட்டு மணமகனை தேர்வு செய்யும் பெண்ணின் பெற்றோர், சில நடைமுறைகளை பின்பற்றும் படி தேசிய பெண்கள் கமிஷன் கூறியுள்ளது. அவற்றின் விவரம் வருமாறு:

வெளிநாட்டு மணமகனின் பாஸ்போர்ட்டில் உங்கள் மகளின் பெயர் கண்டிப்பாக சேர்க்கப்பட வேண்டும். போன் மூலமோ, இ-மெயில் மூலமாகவோ திருமணத்தை உறுதி செய்யாதீர்கள். இடைத்தரகர்களையோ, மணமக்களை அறிமுகப்படுத்தும் நிறுவனத்தையோ கண்ணை மூடிக்கொண்டு நம்பாதீர்கள். வெளிநாட்டில் கிரீன் கார்டு கிடைக்கும் என்பதற்காக மகளை திருமணம் செய்து கொடுக்காதீர்கள்.

திருமணம் செய்து கொள்ளப் போவதை ஒரு போதும் ரகசியமாக வைக்காதீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மூலம் திருமணம் செய்து கொள்ளப் போகும் நபர்களை பற்றி விசாரியுங்கள். உங்களுக்கு பரிச்சயம் இல்லாத எங்கோ ஒரு மூலையில் நடக்கும் திருமணத்துக்கு ஒத்து கொள்ளாதீர்கள்.

பதிவு திருமணம் மட்டுமே உறுதியானது என நம்பாதீர்கள். வெளிநாட்டுக்கு போய் திருமணம் செய்து கொள்ளலாம், என்ற மணமகனின் பேச்சை நம்பாதீர்கள். வெளிநாட்டு மாப்பிள்ளையை நம்பி மோசம் போகும் பெண் களை காப்பாற்ற போதுமான சட்டம் இல்லை. வெளிநாட்டுக்கு அழைத்து கொண்டு போய் அங்கே கொடுமைப் படுத்தும் கணவனின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யும் வகையில் விதிமுறைகள் கொண்டு வரப்பட வேண்டும்.

வெளிநாட்டில் கணவனால் ஏமாற்றப்படும் பெண்ணுக்கு, இந்திய தண்டனை சட்டப்படி அவளது கணவனை விசாரிக்க வேண்டும். பெண்ணை கொடுமைப்படுத்தும் மகனை பற்றிய தகவலை வெளிப்படுத்தாத பெற்றோர் அல்லது உறவினர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தேசிய பெண்கள் கமிஷன் ஆலோசனை தெரிவித்துள்ளது.

****************************************************************************

வெளிநாட்டில் வேலை செய்யும் மகனுக்கு மணமகள் தேடும் தாய்மார்களே தந்தைமார்களே, சகோதரனுக்கு மணப் பெண் தேடும் சகோதரிகளே சகோதரர்களே, தோழனுக்கு தகுந்த வாழ்க்கைத் துணை தேடும் தோழிகளே தோழர்களே மிக மிக கவனமாக இருங்கள்!

வெளிநாட்டில் வாழும் ஆண்கள் இந்தியாவில் திருமணம் செய்வதற்கு முன்பு நாட்டிலுள்ள "சட்ட தீவிரவாத" சட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வது மிக மிக அவசியம். இல்லையென்றhல் திருமணம் என்ற சதி வலை விரித்து அதன் பிறகு பொய் வரதட்சணை கேசுகளை அரசாங்க உதவியுடன் அப்பாவி ஆண்கள், அவரது குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவர் மீதும் பதிவு செய்து பணம் கறக்கலாம் என்ற எண்ணத்தில் பல "அபலைப் பெண்களும்" அவர்களது குடும்பமும் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறது. ஜாக்கிரதை.

இது போன்ற "அபலைப் பெண்கள்" கீழே குறிப்பிட்டுள்ள நோக்கங்களுக்காக பலி கடாக்களைத் தேடிக் கொண்டிருப்பார்கள்:

1. கஷ்டப்பட்டு தன் சொந்த முயற்சியால் வேலை தேடி வெளிநாட்டில் வேலை செய்யும் கணவனிடமிருந்து பணம் கறந்து தன்னுடைய பெற்றேhர்களுக்கு கொடுக்க வேண்டும்.

2. வெளிநாட்டு குடியுரிமை போன்ற வசதிகளை வலியில்லாமல் பெற்றுக் கொள்ளலாம். பிறகு அவனை "ஏதாவது ஒரு கேசு போட்டு " கழற்றி விட்டு விட்டு தேவையான வேறு ஒரு ஆளைப் பிடித்து விடலாம்.

3. வெளிநாட்டில் இருப்பவனை திருமணம் செய்து கொண்டு சில நாட்கள் அவனுடன் தங்கியிருந்து விட்டு பிறகு நாட்டிற்கு திரும்பி வந்து "டெம்ப்ளேட் ஐயாக்கள்" உதவியுடன் சதியாலோசனை செய்து பலவகையான பொய் கிரிமினல் கேசுகள் பதிவு செய்து கூண்டோடு அவனது குடும்பத்தையே மிரட்டலாம். பிறகு ஒரு நல்ல தொகை பேரம் பேசி கறந்து விடலாம். பிறகென்ன மனம் போல் அடுத்த ஆளை தேடிக்கொண்டு தொழிலை வழக்கம் போல் ஆரம்பித்து விடலாம்.

இது போல மேலும் பல சுவாரஸ்யமான காரணங்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த தளத்திற்குச் செல்லுங்கள் http://tamil498a.blogspot.com/

ஒரு ஆளை திருமணம் செய்து விட்டு எப்படி மற்றெhரு திருமணம் செய்முடியுமென்று
ஒரு சந்தேகம் உங்களுக்கு வரலாம்.

அது ரொம்ப சுலபம்......

முதல் திருமணம் செய்த ஆள் ஆண்மையற்றவன் அதனால் என்னை தன் குடும்பத்தோடு சேர்ந்து வரதட்சணை கொடுமை செய்தார்களென்று IPC498A, வரதட்சணை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி போன்ற கேசுகளை பதிவு செய்யலாம் (எல்லாமே இலவசம். அதனால் எத்தனை செக்ஷ்ன் வேண்டுமானா
லும் சேர்க்கலாம்). வெளிநாட்டில் இருந்த பெண்ணை இங்கிருந்த கணவர் குடும்பத்தார் எப்படி கொடுமை செய்தார்கள்? லாஜிக்கே இல்லையே என்று புத்திசாலித்தனமாக நீங்கள் கேள்வி கேட்பதாக நினைத்து ஏதாவது கேட்டுவிடப் போகிறீர்கள். அவ்வளவு தான். இந்த வரதட்சணை கொடுமைகளுக்கெல்லாம் நீங்கள் தான் திட்டம் வகுத்துத் தந்தாக உங்கள் பெயர் FIR-ல் சேர்க்கப்பட்டு விடும்.

எந்த வித உறவும் இல்லை. அதனால் இந்த திருமணம் செல்லாது என்று கோர்ட்டில் தேய்மானமில்லாத உத்திரவாத சர்டிபிகேட் கூட வாங்கிக் கொடுக்கவும் அதற்கான ஆலோசனை வழங்கவும் கமிஷன் அடிப்படையில் வேலை பார்க்
"டெம்ப்ளேட் ஐயாக்கள்" தயாராக இருக்கிறhர்கள்.

மேற்படி பொய் கேசுகளுக்கு எந்த வித செலவும் செய்ய வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக வருமானம் கிடைக்கும். ரொம்ப முக்கியமா
விஷயம் என்னன்னா பொய் கேசு போட்டவர்கள் சார்பாக அரசாங்கமே செலவு செய்து கேசுகளை நடத்தி "வெற்றிக் கனிகளை" இந்த "அபலைகளுக்கு" பறித்துக் கொடுக்கும்.

பின் குறிப்பு:
எந்த நாட்டில் எது நடந்தாலும் இந்த "அபலைப் பெண்கள்" அங்குள்ள போலிசுக்கு தகவலோ அல்லது புகாரோ செய்யமாட்டார்கள். தங்களது நாட்டுக்கு வந்து தான் புகார் செய்வார்கள்.
ஏனென்றhல் அவ்வளவு தேசப்பற்று.
இ.த.ச. (IPC) என்ற இந்திய தண்டனைச் சட்டங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற சுதேசிக் கொள்கையுடைய தேசப்பற்றhளர்கள்.

முக்கியமான பின் குறிப்பு:
பொய்கேசு பதிவு செய்பவருக்கு எந்த
வித தண்டனையும் கிடையாது. இது உலகறிந்த உண்மை.

வெளிநாட்டு "பணம் சம்பாதிப்பதில்" பல வழிக
ளும், கைதேர்ந்த பலவித ஆட்களும் இருக்கின்றனர்! நீங்க தான் கவனமாக இருக்கணும்... புரியுதா?




Thursday, August 06, 2009

பொய் 498A கேசுகளை தடுக்க புது தடுப்பு முறை?

பண்டமாற்று முறையில் திருமணம்: பெண்களை பந்தாடும் அவலம்
DM News: Aug 7,09

சண்டிகார்: வயதுக்கு வந்த பெண்ணோ, வராத பெண்ணோ, பெண்ணுக்கு பதில் மற்றொரு பெண் கொடுத்தால் தான் திருமணம்.

இந்த அதிர்ச்சி தரும் நிபந்தனை ஏதோ ஒரு ஆப்ரிக்க நாட்டில் நடைபெறுவதல்ல, அரியானா மாநிலத்தில்தான் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரியானா மாநிலத்தின், பதேஹாபாத் மாவட்டத்தில் உள்ளது ஜான்திலி கலான் கிராமம். இங்கு கீதா என்ற 15 வயது பெண்ணுக்கும், நாது ராம் என்பவருக்கும் திருமணம் நடக்கவிருந்தது. சில காரணங்களால் இத்திருமணத்தில் விருப்பமில்லாத பெண்ணின் தந்தை போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் திருமணத்தை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. கீதாவின் தாய் மாமனுக்கு நாதுராமின் சகோதரியை மணமுடிப்பதாக நிச்சயிக்கப்பட்டது. நாதுராமின் சகோதரியை மணமுடிக்க வேண்டுமானால், நாதுராமுக்கு கீதாவை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நிபந்தனை போட்டார் நாதுராமின் தந்தை.

வேறு வழியில்லாமல் கீதாவின் தந்தை முதலில் ஒப்புக்கொண்டாலும், பெண்ணின் வாழ்க்கை கருதி பெரிதும் வருந்தினார். கடைசியில் ஒரு வழியாக போலீசில் சொல்லி விட்டார். "பண்டமாற்று' திருமணங்கள் இம்மாநிலத்தில் அரிதான விஷயமல்ல. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும், பல தரப்பட்ட மக்கள் மத்தியில் சகஜமாகவே நிகழ்கிறது.

அரியானாவில் ஏற்பட்டுள்ள பாலின விகிதாச்சார வேறுபாடுதான் இதற்குக் காரணம். ஆயிரம் ஆண்களுக்கு 822 பெண்கள் என்ற நிலையிலேயே இங்கு மக்கள் தொகை உள்ளது. மிக மோசமாக சில கிராமங்களில் ஆயிரம் ஆண்களுக்கு 370 பெண்கள் என்ற வகையில் பாலின விகித வேறுபாடு உள்ளது.

தங்கள் வீட்டு ஆண் வாரிசுக்கு பெண் கிடைத்தால், உடனடியாக தங்கள் வீட்டு பெண்ணையோ, உறவினர் பெண்ணையோ பண்ட மாற்று முறையில் திருமணம் முடித்து வைக்கின்றனர். இதனால் மைனர் பெண்களுக்கு திருமணம் என்பது இங்கு மிக சகஜமாகவே நடக்கிறது. இந்தத் திருமணங்கள் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைப் பது மிகவும் அரிது.

எனவே, அவர்களாலும் இதுபோன்ற திருமணங்களை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஆராய்ச்சி மைய இயக்குனர் ரஞ்சனா குமாரி கூறுகையில், அரியானாவில்தான் பெண்களை விற்பனை பொருட்களாக பயன்படுத்துகின்றனர். சமூக வழக்கம் என்ற பெயரில், பெண்கள் இங்கு விற்கப்படுகின்றனர், வாங்கப்படுகின்றனர், கொலை செய்யப்படுகின்றனர். மேலும், பண்ட மாற்று முறையில் மாற்றிக்கொள்ளப்படுகின்றனர். சிறு வயது பெண்கள் பலர் நடுத்தர வயதுடைய ஆண்களுக்கு மணம் முடிக்கப்படுகின்றனர் எனக் குற்றம் சாட்டினார்.

-------------------------------------------------------------------------------------------------
இந்த முறையில் ஒரு வசதியிருக்கிறது. ஒரு குடும்பத்திற்கெதிராக மற்றெhரு குடும்பம் பொய் வரதட்சணை கேசுகளை பதிவு செய்து காசு பறிப்பது, பழிவாங்குவது போன்ற தீவிரவாத செயல்களில் ஈடுபட முடியாது. வாய்ப்புகள் மிகக் குறைவு.

வரும் காலங்களில் இப்படி நடந்தால் தான் திருமணங்கள் நடைபெறுமோ?! இல்லையென்றhல் எதிர்கால இளைஞர்களும், இளைஞிகளும் திருமண வாழ்க்கை என்றhல் என்னவென்றே தெரியாமல் கல்லறைக்குச் செல்ல வேண்டியிருக்கும். அதற்குள் ஏதாவது மாற்றங்கள் ஏற்படுமா?


Wednesday, August 05, 2009

'விடுதலைப் பிரகடனம்'

ஆக.15ல் 'விடுதலைப் பிரகடனம்' செய்யும் மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்

சித்திரவதை செய்யும் மனைவியரிடமிருந்து சுதந்திரம் பெறும் புதிய திட்ட நடவடிக்கையை ஆகஸ்ட் 15ம் தேதி சிம்லாவில் கூடி எடுக்கப் போவதாக மனைவியரால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்தியக் குடும்பங்களைக் காப்பாற்றுங்கள் என்ற அமைப்பின் தலைவர் அனில் குமார் பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நமது சுதந்திர தினம், மனைவியரின் கையில் சிக்கி சித்திரவதைக்குள்ளாகி வரும் கணவர்களுக்கு விடுதலை தரும் தினமாக அமைய வேண்டும்.

இதுதொடர்பான பிரகடனக் கூட்டம் சிம்லாவில் ஆகஸ்ட் 15ம் தேதியன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், நாடு முழுவதுமிருந்து 100 ஆண்கள் மற்றும் மனைவியரால் பாதிக்கப்பட்ட 30 ஆயிரம் கணவன்மார்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

தங்களை சித்திரவதைப்படுத்தும் மனைவியரிடமிருந்து எப்படித் தப்புவது என்பது குறித்தும், இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட்டு சுதந்திரம் பெறுவது எப்படி என்பது குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.

மகாராஷ்டிரா கணவர் பாதுகாப்பு சங்கம், உ.பி. கணவர்கள் பாதுகாப்பு சங்கம் மற்றும் கிறிஸ்ப் (Children's Rights Initiative for Shared Parenting) என்ற என்.ஜி.ஓ. அமைப்புடன் ஆகியவற்றுடன் இணைந்து நாங்கள் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

நான்கு அமைப்புகளும் இணைந்து, இந்தியாவில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம உரிமை வேண்டும் என்ற லட்சியத்துக்காக போராடி வருகின்றன.

பல சந்தர்ப்பங்களில், இந்திய சட்டம், ஆண்களுக்கு பாரபட்சமாகவே உள்ளது. நமது நாட்டு வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டம் முற்றிலும் பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பானதாக இருக்கிறது.

ஒரு தம்பதி விவாகரத்து பெறும்போது அவர்களின் குழந்தைகளை யார் வளர்ப்பது என்பதிலாகட்டும், வரதட்சணைக் கொடுமை புகார்களாகட்டும், இந்த சட்டம், பெண்களுக்கே சாதகமாக இருக்கிறது. ஆண்களின் கருத்துக்களையும், அவர்களின் உணர்வுகளையும் இந்த
சட்டம் பார்ப்பதே இல்லை.

நாங்கள் பெண்களை வெறுப்பவர்கள் அல்ல. இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம உரிமைகள் வேண்டும் என்ற குரல் மட்டுமே.

நமது நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் மனைவியரின் கொடுமைகளால் பாதிக்ப்பட்டு கிட்டத்தட்ட 1.2 லட்சம் கணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுகுறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் உரிய தகவல்களை வைத்துள்ளது.

இது மிகவும் கவலைக்குரிய ஒன்று. பாதிக்கப்பட்ட கணவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். சித்திரவதை செய்யும் மனைவியர் தண்டிக்கப்பட வேண்டும்.

உண்மையில், கணவர்களால் கொடுமைப்படுத்தப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் மனைவியரை விட, மனைவியரால் கொடுமைக்குள்ளாகி தற்கொலை செய்து கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கைதான் இரண்டு மடங்காக உள்ளது.

பெண்கள் மற்றும் சிறார் நலனுக்காக தனி அமைச்சகம் இருப்பது போல ஆண்கள் நலனுக்கென தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட வேண்டும். ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே மாதிரியான வரி விதிப்பு அமல்படுத்தப்பட வேண்டும். குழந்தைகளை வளர்ப்பது தொடர்பான சட்ட அம்சங்களில் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். வரதட்சணைக் கொடுமை சட்டம், பெண்கள் வன்கொடுமைச் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். விவாகரத்து செய்த தம்பதிகள் தங்களது குழந்தைகளை இணைந்து பராமரிக்க சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். இவை குறித்து சிம்லா மாநாட்டில் தீர்மானங்கள் கொண்டு வரவுள்ளோம்.

நாட்டில் பெருகி வரும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், திட்ட வடிவையும் சிம்லா மாநாட்டில் நாங்கள் திட்டமிடவுள்ளோம் என்றார்.

ஆனால் இக்காலத்து சூழ்நிலைகள்தான் பெண்களின் குண மாற்றத்திற்கு முக்கிய காரணம் என்கிறார் பெங்களூரைச் சேர்ந்த விமோச்சனா அமைப்பின் டோனா பெர்னாண்டஸ்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தக் காலத்துப் பெண்கள், இந்தியத் திருமணங்களின் கட்டுப்பாடுகளை பின்பற்ற மறுக்கிறார்கள்.

இந்தியத் திருமணம் என்பது மிகப் பெரிய ஒரு இடமாற்றமாக உள்ளது. அதுவரை பிறந்த வீட்டில் சுதந்திரமாக இருந்த பெண், நிரந்தரமாக புகுந்த வீட்டிற்கு இடம் பெயர வேண்டியுள்ளது.

பெண்கள்தான், அட்ஜெஸ்ட் செய்து கொண்டு போக வேண்டும் என்ற நிலை உள்ளது. ஆனால் பொருளாதார ரீதியில் சுய சார்பை கொண்டுள்ள இக்காலத்துப் பெண்கள் அதற்குத் தயாராக இல்லை. இதன் காரணமாக முரண்பாடுகள், முட்டல், மோதல் ஏற்பட்டு கருத்து வேறுபாடுகள் பெரிதாகி அது விவாகரத்து வரை போய் விடுகிறது என்கிறார் டோனா.

------------------------------------------------------------------------------------------------
Courtesy: thatstamil.oneindia.in/news/2009/08/05/india-harassed-husbands-club-to-seek-freedom.html and தமிழ் சரவணன்

Tuesday, August 04, 2009

சட்ட தீவிரவாதத்திற்கு ஒரு செருப்படி!

மருமகளை மாமியார் மிதித்தால் குற்றமில்லை: சுப்ரீம் கோர்ட் அதிரடி - இது செய்தித்தாள் கொடுத்த பரபரப்பு தலைப்பு.

இந்த செய்திப் பதிவிற்கு கீழுள்ள மற்றெhரு செய்தியைப் பாருங்கள். அமெரிக்க நாட்டு பத்திரிக்கைகள் செய்திகளை கையாளும் விதம் எப்படி இருக்கிறதென்று. இப்படித்தான் பரபரப்பிற்காக பொய் வரதட்சணை கேசுகள் எல்லாம் செய்தித்தாள்களில் வேறு விதமான கோணத்தில் காட்டப்பட்டு மனைவியர் எல்லாம் அடிமைகளாக இருப்பது போலவும் கணவர்களும் அவர்களது உறவினர்களும் வரதட்சணை கொடுமை செய்வது போலவும் சித்தரிக்கப்படுகிறது. அதைப் படித்து விட்டு அப்பாவியான பொது ஜனம் ஐயோ பாவம் பொம்பளையை கொடுமை செய்கிறhர்கள் என்று ஒரு தலைப் பட்சமாக தலையாட்டி விட்டு சமூக சீரழிவிற்கு வழிசெய்து தருகிறhர்கள்.

------------------------------------------------------------------------------------------------

DM News: 4 Aug 2009

ஒரு பெண்ணை அவரின் கணவனோ, மாமியாரோ அல்லது மற்ற குடும்ப உறுப்பினர்களோ காலால் உதைத்தால், அதை கொடுமையான செயலாக கருதி வழக்குத் தொடர முடியாது.

அதேபோல், "உன்னை விவாகரத்து செய்து விடுவேன்' என, மிரட்டுவதையும் கொடுமையாக கருத முடியாது என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. தென்ஆப்ரிக்காவில் வசிக்கும் இந்தியர் ஒருவருக்கும் அவரின் மனைவிக்கும் இடையேயான திருமண சச்சரவுகள் தொடர்பான வழக்கை விசாரித்த, நீதிபதிகள் சின்கா, சிரியாக் ஜோசப் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:

திருமணமான பெண்ணை அவரின் கணவரோ அல்லது குடும்பத்தினரோ காலால் உதைத்ததையும், "உன்னை விவாகரத்து செய்து விடுவேன்' என, மிரட்டுவதையும் கொடூரமான செயலாக கருத முடியாது. இதற்காக அவர்கள் மீது வழக்குத் தொடர முடியாது. அதேபோல், மருமகளை மாமியார் கண்டிப்பதையும், அறிவுரை கூறுவதையும், தனது பழைய ஆடைகளை மருமகளுக்கு கொடுத்து, அதை அணியச் சொல்வதையும் குற்றமாகக் கருத முடியாது.

அதற்காக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498ஏ-ன் கீழ் வழக்கு தொடர முடியாது. இருப்பினும், திருமணத்தின் போது தம்பதியருக்கு கொடுக்கப்பட்ட பரிசுப் பொருட்களை மாமியார் எடுத்துக் கொண்டால், அதை நம்பிக்கைத் துரோகமாகக் கருதி இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 406ன் கீழ் வழக்குத் தொடரலாம். அதுமட்டுமின்றி, "என் மகனிடம் சொல்லி உன்னை விவாகரத்து செய்ய வைப்பேன்' என, மாமியார் கூறுவதையும் இந்திய தண்டனைச் சட்டம் 498ஏ-ன் கீழ் குற்றமாகக் கருத முடியாது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சட்டப் புத்தகத்திலுள்ள சட்டங்களின் ஒவ்வொரு வார்த்தைக்கும் உச்ச நீதிமன்றம் விளக்கமளித்தால் தான் அப்பாவிகளின் மீது பதியப்படும் பொய் கேசுகளிலிருந்து விடுதலை கிடைக்குமோ? அப்படியென்றhல் எத்தனை அப்பாவிகளால் உச்ச நீதிமன்றம் வரை செல்ல வசதி இருக்கிறது? அதைவிட எத்தனை பொன்னான ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்?

தீர்ப்பின் நகலை படித்தால் தான் சரியான உண்மை தெரியும். மேலும் பல சுவாரஸ்யமான உண்மைகள் வெளிவரும்.


நீதிமன்றத் தீர்ப்பின் உண்மை நகலை இங்கே படித்துப்பாருங்கள்:
http://www.498a.org/forum/viewtopic.php?f=16&t=4925&start=0&st=0&sk=t&sd=a


--------------------------------------------------------------------------------------------------
மேலுள்ள செய்திக்குசெய்தித்தாள் கொடுத்த பரபரப்பு தலைப்பிற்கும் இந்த செய்திக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.

DM News: Aug 02, 2009

அமெரிக்க பத்திரிகைகளில் கசாப் யார் தெரியுமா?

மும்பை தாக்குதலில் சிக்கிய அஜ்மல் கசாப்பை பயங்கரவாதி என்று குறிப்பிட, அமெரிக்க பத்திரிகைகள் தயங்குகின்றன.

மும்பை தாக்குதலை நடத்தி, நூற்றுக்கணக்கான பேரை கொன்று குவித்த பயங்கரவாதிகளில் சிக்கிய ஒரே பாக்., பயங்கரவாதி அஜ்மல் கசாப் பற்றி அமெரிக்க பத்திரிகைகள் பரபரப்பான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.சமீபத்தில், ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததை முதல் பக்கத்தில் அவன் படத்துடன் நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் உட்பட பல பத்திரிகைகள் பெரிய செய்தியை வெளியிட்டுள்ளன. ஆனால், கசாப்பை "கன் மென்' (துப்பாக்கி ஏந்தியவர்) என்று தான் குறிப்பிட்டுள்ளன; பயங்கரவாதி என்று எதிலும் சுட்டிக்காட்டவில்லை.

இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் ஆசிரியர் கிளார்க் ஹைட் கூறுகையில், "அப்பாவி மக்களை துன்புறுத்தி, அவர்களை கொல்வதன் மூலம் தங்களின் அரசியல், மத, இன மற்றும் காரணம் தெரியாத குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கும்; அப்படி துடிப்பவர்களின் சார்பில் செயல்படுவோரை எப்படி அழைப்பது என்பதற்கு சில வரைமுறைகள் உள்ளன. அதை தாண்டி, பத்திரிகைகள் விமர்சிக்கவோ, அழைக்கவோ கூடாது. அதன்படி நாங்கள் சில அடிப்படை நடைமுறைகளின் படி, "துப்பாக்கி ஏந்தியவர்' என்று குறிப்பிடுகிறோம்' என்று தெரிவித்தார்.

"அமெரிக்க பத்திரிகைகள் நடைமுறைப்படி ஒரு குற்றவாளி ஒப்புக் கொண்டாலும், கோர்ட்டில் அவன் தண்டனைக்கு உட்பட்டு, பயங்கரவாதி என்று அழைக்கப்படாதவரை அவனை பயங்கரவாதி என்று குறிப்பிட முடியாது. மும்பை தாக்குதல் பயங்கரவாதிகளின் செயல் தான் என்றாலும், இன்னும் சில கட்டங்கள் தாண்டி தான் அந்த வார்த்தையை பிரயோகிக்க முடியும்' என்றும் சில பத்திரிகையாளர்கள் கூறினர்.


“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.