இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, November 24, 2011

குடும்பம் ஒரு கதம்பம் - இந்தியக் குடும்பம் 2020

இந்திய பொய் வரதட்சணை வழக்குகளால் பிரியும் தம்பதிகள் எந்தெந்த திசையில் செல்வார்கள் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் பின்வரும் செய்தியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பொய் வரதட்சணை வழக்குகள் உருவான பிறகு கணவனுக்கு நீதிமன்றங்கள் அவ்வளவு எளிதாக விவாகரத்து கொடுக்காது. அதனால் அவர்கள் தங்கள் மனம்போன போக்கில் வாழவேண்டியதுதான். பொய் வரதட்சணை வழக்குப் போடும் பெண் வழக்கு என்ற பெயரில் போலிஸ் மற்றும் நீதித்துறையின் வலையில் சிக்கி ஆண்டுகளை கழிக்கவேண்டியதுதான். இதனிடையே தனிமைக்கு தீணி போட பலரும் வட்டமிடுவார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் உருவாவதுதான் கள்ளக்காதல், கொலை போன்ற சம்பவங்கள்.

பொய் வரதட்சணை வழக்குகளை அரசாங்கம் கட்டுப்படுத்தவில்லையென்றால் “இந்தியக் குடும்பம் ஒரு கதம்பம்” போல மாறிவிடும். எந்தக் குழந்தைக்கு யார் அப்பன் என்று தெரியாது. யாருக்கு யார் மனைவி என்று தெரியாது. யாருக்கு யார் கள்ளக் காதலன் என்று தெரியாது. யாருக்கு யார் கள்ள மனைவி என்று தெரியாது. இதுதான் இந்தியக் குடும்பம் என்று உலகம் சொல்லும் அளவிற்கு நாடு உருவாகிக்கொண்டிருக்கிறது. இப்போதே விழித்துக்கொண்டால் இந்தியக் குடும்பங்களை காப்பாற்றலாம்.



சென்னை- வேலை தருவதாகக் கூறி, தகாத உறவு கொண்டு ஏமாற்றியதால், தொழில் அதிபரை கொன்றோம் என்று, தம்பதியினர் போலீசாரிடம் கூறியுள்ளனர்.

சென்னை, நங்கநல்லூர், அபிலாஷ் அப்பார்ட்மென்டைச் சேர்ந்த சந்திரசேகர், 55. கொசுவலை பொருத்தும் தொழில் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி கவுரி, 45; வங்கி அதிகாரி. கடந்த 18ம் தேதி பணிக்குச் சென்ற கவுரி ஷிப்ட் முடிந்து இரவு 10:30 மணிக்கு வீடு திரும்பிய போது, வீட்டின் படுக்கையறையில், அவரது கணவர் சந்திரசேகர் பிணமாகக் கிடந்தார். டெலிபோன் ஒயரால் கழுத்து இறுக்கப்பட்டிருந்தது. ஆறு மோதிரங்கள், பிரேஸ்லெட் என, எட்டு சவரன் நகைகள், வாட்ச் மற்றும் இரண்டு மொபைல் போன்கள் மாயமாகியிருந்தன.பழவந்தாங்கல் போலீசார் விசாரித்தனர்.

துணை கமிஷனர் சண்முகராஜேஷ்வரன் மேற்பார்வையில், தனிப்படைகள் அமைத்தனர். கொலை செய்ததாக சிவக்குமார், 36 மற்றும் கவிதா, 28 ஆகிய இருவரையும், பல்லடம் அருகே சின்னக்கரையில், கைது செய்தனர். விசாரணையில் கிடைத்த தகவல் அடிப்படையில், அவர்கள் கொலையாளிகள் என உறுதி செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், சூரக்குடியைச் சேர்ந்தவர் சிவக்குமார். பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதால், வீட்டாருடன் தொடர்பற்றுப் போனது. மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவர் பிரிந்து சென்ற நிலையில், சிவக்குமார், அவினாசிக்கு வந்துள்ளார். அங்கு தான், புதுச்சேரி அருகில் உள்ள பாகூரைச் சேர்ந்த கவிதாவை சந்தித்துள்ளார். கணவனை பிரிந்து குழந்தையுடன், ஓட்டல் ஒன்றில் பணியாற்றிய கவிதாவை, திருமணம் செய்து இருவரும் ஒன்றாக வாழ்ந்துள்ளனர்.

திருப்பூர், சிவகங்கையில் சரியான வேலை அமையாததால், சென்னையில் வேலை தேடியுள்ளனர். அப்போதுதான் சந்திரசேகரின் விளம்பரத்தை பார்த்து, கவிதா அதிலிருந்த எண்ணில், சந்திரசேகரை தொடர்பு கொண்டுள்ளார். அதன்பின், கவிதாவை பலமுறை தொடர்பு கொண்ட சந்திரசேகர், வேலைக்கு வந்தால், அதிகளவில் சம்பளம் தந்து பார்த்துக் கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து, கடந்த 16ம் தேதி காரைக்குடியிலிருந்து இருவரும் சென்னை வந்து, பணியில் சேர்ந்துள்ளனர்.

அன்று பிற்பகல் மனைவி வங்கிக்குச் சென்றதும், கவிதாவை அழைத்த சந்திரசேகர், பணமும், இருக்க இடமும் தருவதாகக் கூறி, கள்ள உறவு வைத்துக் கொண்டார்.இந்த உறவு பலமுறை தொடர்ந்துள்ளது. அடுத்த நாளும் அழைத்து உல்லாசம் அனுபவித்ததுடன், தனக்கு தெரிந்த வேறு ஒருவருடனும் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு ஒப்புக் கொள்ளாத கவிதா, அங்கிருந்து வெளியேறி, சிவக்குமாரிடம் நடந்ததை கூறியுள்ளார். அன்றிரவே, தங்களை ஏமாற்றிய சந்திரசேகரை ஒழித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு, மறு நாள் காலை, 18ம் தேதி, சந்திரசேகரின் வீட்டிற்கு சென்று, அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது, இருவரும் சேர்ந்து, சந்திரசேகரின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி, டெலிபோன் ஒயரைக் கொண்டு கழுத்தில் இறுக்கி கொலை செய்துவிட்டு, நகைகள் மற்றும் மொபைல் போன் உள்ளிட்டவற்றை எடுத்து தப்பிவிட்டனர்.

Friday, November 18, 2011

இன்றைய சூடான காமெடி செய்தி!

பின்வரும் இரண்டு செய்திகளையும் படித்தால் இன்றைய காமெடி செய்தி என்னவென்று உங்களுக்கே புரியும்.


பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு
நவம்பர் 18,2011 தினமலர்

கோவை: "பெண்களுக்கு எதிரான குற்றங்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவற்றை தடுப்பதற்கு, மாவட்ட அளவிலான வல்லுநர் குழு அமைக்க வேண்டும்' என்று, தமிழக அரசுக்கு, கலெக்டர் தலைமையிலான [...]


திருநெல்வேலி : கணவனை காரை ஏற்றி கொலை செய்த கள்ளக்காதலனுக்கு மனைவி கார் வாங்க ஒரு லட்சம் ரூபாய் கொடுத்ததை வாக்குமூலத்தில் தெரிவித்து [...]

====

பெண்களுக்கெதிரான கொடுமைகள் அதிகரிப்பு என்று அறிக்கை சமர்ப்பித்தால் ஐ.நா. சபையிலிருந்து பெண்கள் வளர்ச்சி நிதியாக கோடிக்கணக்கான பணம் கிடைக்கும்!


Theschemes/programmes that address violence against women are budgeted both in the Union and the State budgets (depending upon whether it is a Centrally sponsored scheme, or is a State scheme). It is not possible to give the exact budgetary allocation as many Ministries meet the expenditure from their general budget. There is gender budgeting in India and Gender Budget Statement (Statement 20) is part of the Union Budget. It includes grants for demands from different ministries/departments. Grants under Part A deal with 100 per cent women specific programmes and Part B deal with 30 per cent women specific programmes. For the year 2010-2011, the total allocation is Rs. 67,749.80 crores (Rs. 19,266.05 crores for Part A and Rs 48,483.75 crores for part B).


Wednesday, November 16, 2011

கணவனைக் கொல்லும் இந்தியக் கள்ளக்காதல் கலாச்சாரம்

திருநெல்வேலி : கணவனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து காரை ஏற்றி கொலை செய்த மனைவி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம், அகஸ்தியர்பட்டியைச் சேர்ந்த சுப்பையா மகன் விஸ்வநாதன், 41, திருமணமாகி மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். விஸ்வநாதன் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் எல்.ஐ.சி., அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றுகிறார். தினமும் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் நெல்லை வந்து, அங்கிருந்து பஸ்சில் மார்த்தாண்டம் சென்று வருவார்.

சில தினங்களுக்கு முன், காலையில் மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து நெல்லை செல்லும் வழியில், இவர் மீது கார் மோதியது. இதில் காயமுற்றவர், நெல்லையில் மூன்று நாட்கள் சிகிச்சையில் இருந்து, பின் இறந்தார். விசாரணையில், அவரது மனைவி ஆதிலட்சுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த குமார், 35, என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததும், அதை விஸ்வநாதன் கண்டித்ததும் தெரியவந்தது. எனவே, கணவன் வீட்டில் இருந்து கிளம்பியது குறித்து, ஆதிலட்சுமி தந்த தகவலின்படி, குமாரின் ஏற்பாட்டில் ஒரு காரை கொண்டு மோதி, விஸ்வநாதனை கொலை செய்தது தெரியவந்தது. ஆதிலட்சுமி, கள்ளக் காதலன் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்த மேலும் இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் கொலை நடந்த விதம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

====

இந்திய கள்ளக்காதல் சட்டப்படி (IPC497) கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவி ஒரு அப்பாவி. ஆண் மட்டுமே குற்றவாளி.

IPC497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man , such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.



Tuesday, November 15, 2011

சுவாரஸ்யமான கதை சொல்லும் கள்ளக்காதல்

இந்திய கள்ளக்காதல் சட்டப்படி (IPC497) கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவி ஒரு அப்பாவி. ஆண் மட்டுமே குற்றவாளி.

IPC497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man , such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.

கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி:கள்ளக்காதலன் உள்ளிட்ட மூவர் கைது
நவம்பர் 16,2011 தினமலர்

மத்தூர்:மத்தூர் அருகே, கள்ளக்காதலனுடன் சேர்ந்து, கணவனைக் கொலை செய்த மனைவியையும், அவருக்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலன், அவனது நண்பனையும், போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே மத்தூர் அடுத்த அத்திகானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜவுளி வியாபாரி சஞ்சீவன்,38. இவரின் மனைவி அனிதாதேவி,27. இவர்களுக்கு, இரு மகன்கள் உள்ளனர். அனிதாதேவி மத்தூர் போலீசில், கடந்த 1ம் தேதி, "பெங்களூரு செல்வதாக வீட்டை விட்டுச் சென்ற கணவன் சஞ்சீவன் வீடு திரும்பவில்லை' என புகார் செய்தார்.

சில நாட்களுக்கு முன், ஊத்தங்கரை அடுத்த அருணம்பதி ஏரியில், சஞ்சீவன் கொலை செய்யப்பட்டு, மண்ணில் பாதி உடல் புதைக்கப்பட்ட நிலையில் கிடந்தார். தொழில் போட்டியில், சஞ்சீவன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவருக்கு வேறு எதிரிகள் யாராவது இருந்தார்களா? என்ற கோணத்தில், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவருக்கு யாரும் எதிரிகள் இல்லை எனத் தெரிந்தது.

சந்தேகம் அடைந்த போலீசார், அனிதாதேவியிடம் விசாரித்தனர். அவர், முன்னுக்குப் பின் முரணாகக் கூறினார். தொடர்ந்து நடந்த விசாரணையில், அனிதாதேவி அவரின் கள்ளக்காதலன் ஜெயப்பிரகாஷ், அவரின் நண்பர் சங்கர் ஆகியோர் கூட்டு சேர்ந்து, சஞ்சீவனை கொலை செய்து, ஏரியில் புதைத்தது தெரிந்தது. மூவரையும், போலீசார் கைது செய்தனர்.

அனிதாதேவி போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது:

என் சொந்த ஊர் அரூர். அங்கு, என் சகோதரர்கள் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகின்றனர். எனக்கும் சஞ்சீவனுக்கும் திருமணம் நடந்ததும், நாங்கள் அத்திகானூர் கிராமத்துக்குச் சென்று விட்டோம்.என் கணவர் ஜவுளி வியாபாரம் செய்து வந்ததால், குஜராத் மாநிலம் சூரத்துக்கு அடிக்கடி சென்று வருவார். அங்கு சம்பாதித்த பணத்தை என்னிடம் கொடுப்பார். பின், அந்தப் பணத்தைக் கேட்டு என்னைத் தாக்குவார். குடிபோதையில் அடிக்கடி என்னிடம் தகராறு செய்வார்.

நான் கோபித்துக் கொண்டு, அடிக்கடி அரூரில் உள்ள என் சகோதரர்கள் வீட்டுக்கு வருவேன். என்னை சமாதானம் செய்து, டிராவல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான காரில், அத்திகானூர் கிராமத்துக்கு, டிரைவர் ஜெயப்பிரகாஷுடன் அனுப்பி வைப்பர்.

ஜெயப்பிரகாஷ் என்னிடம் அன்பாகப் பழகுவார். அவருக்கு, திருமணமாகி மனைவி இறந்து விட்டார். என் கணவர் மீதுள்ள கோபம், ஜெயப்பிரகாஷ் மீது கள்ளக்காதலாக மாறியது. இதனால், நாங்கள் அடிக்கடி சந்தித்து ஜாலியாக இருந்தோம். என் கணவர் ஊரில் இல்லாத நேரத்தில், கணவன், மனைவி போல இருந்தோம்.

சம்பவம் நடந்த ஒரு வாரத்துக்கு முன், "என் கணவரின் தொல்லை தாங்க முடியவில்லை' என, ஜெயப்பிரகாஷிடம் கூறி அழுதேன். அவர் இருக்கும் வரை என்னால் நிம்மதியாக இருக்க முடியாது. எனவே, அவனை தீர்த்து கட்டி விடுவோம். பின், ஆறு மாதம் கழித்து, நாம் திருமணம் செய்து கொள்வோம்' என்றேன். இதற்கு உதவியாக, ஜெயப்பிரகாஷின் நண்பர் கரூரைச் சேர்ந்த சங்கரையும் அழைத்தோம். பின், நாங்கள் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டோம்.

முன்கூட்டியே கத்தி, நைலான் கயிறு உள்ளிட்டவை வாங்கி, வீட்டில் வைத்திருந்தேன். கடந்த 1ம் தேதி இரவு, பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது. அப்போது, ஜெயப்பிரகாஷும், சங்கரும், கொலை செய்த பின், சஞ்சீவனை புதைக்க, ஊத்தங்கரை அருகே உள்ள அருணம்பதி ஏரியில், இடம் தேர்வு செய்தனர்.மழை பெய்ததால், அவர்கள் சென்ற கார் சேற்றில் சிக்கிக் கொண்டது எனக் கூறி, பக்கத்தில் இருந்த வீட்டில், கடப்பாறை, மண்வெட்டி வாங்கிக் குழி தோண்டி தயார் நிலையில் வைத்து விட்டு, என் வீட்டுக்கு வந்தனர். அவர்களுக்காக, என் வீட்டின் பின்பக்கக் கதவைத் திறந்து வைத்திருந்தேன்.

ஜெயப்பிரகாஷும், சங்கரும், இரவு 11 மணிக்கு, பின்பக்க வாசல் வழியாக வீட்டுக்குள் வந்தனர். சஞ்சீவன் பெட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். ஜெயப்பிரகாஷ் என் கணவரின் கழுத்தில் கத்தியால் குத்தினார். அப்போது, நான் கையைப் பிடித்துக் கொண்டேன். சங்கர் காலை பிடித்துக் கொண்டார். ரத்தம் அதிகளவில் வந்ததால், பெட்ஷீட் கொண்டு முகத்தை மூடினோம். பின், நைலான் கயிறு மூலம் இறுக்கி, தலையணையால் அழுத்திக் கொலை செய்தோம்.

பிணத்தை காரில் கொண்டு சென்றோம். செல்லும் வழியில், ரத்தக்கறை படிந்த ஒரு பெட்ஷீட்டை, மத்தூர் கொடமாண்டப்பட்டி பாலத்திலும், மற்றொரு பெட்ஷீட்டை குன்னத்தூரிலும் வீசினோம். அருணம்பதி ஏரியில் தயாராகத் தோண்டி வைத்திருந்த குழியில், அவசர அவசரமாகப் புதைத்தோம்.நாங்கள் மூன்று பேரும், ஊத்தங்கரையில் உள்ள ஒரு லாட்ஜில் குளித்து விட்டு, நான் அத்திகானூருக்கு வந்தேன். ஜெயப்பிரகாஷ் திருப்பத்தூர் அருகே உள்ள ஆதியூருக்கும், சங்கர் கரூருக்கும் சென்றனர்.

ஆனாலும், எனக்கு பயம் வந்தது. போலீசார் எப்படியும் கண்டுபிடித்து விடுவார்கள் என்று பதட்டத்துடன் காணப்பட்டேன். போலீசார் என்னிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், உண்மையை ஒப்புக் கொண்டேன்.இவ்வாறு, அனிதாதேவி வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.



Monday, November 14, 2011

குடும்ப உடைப்புத் திட்டம் நிறைவேறுமா?

குடும்பத்தில் சாதாரணமாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு மருமகள்கள் பொய் வரதட்சணை புகார் கொடுக்கும்போது அதனை எந்தவித விசாரணையும் இன்றி கண்ணை மூடிக்கொண்டு பதிவு செய்து கணவன் குடும்பத்தினரை கண்மூடித்தனமாக கைது செய்துவந்த போலிஸ் இப்போது அவர்கள் எழுதிவந்த “பொய் வழக்குகளால்” பல குடும்பங்கள் சிதைவதாக வருத்தப்பட்டு “கவுன்சிலிங்” என்ற புதிய திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்களாம்.

வரதட்சணைப் புகார் வரும்போது அதனை உடனடியாக வழக்காக பதிவு செய்யாமல் வரதட்சணை தடுப்பு அலுவலரைக் (மாவட்ட சமூக நல அலுவலர்) கொண்டு முதற் கட்ட விசாரணை செய்து பிறகுதான் போலிஸ் அந்தப் புகாரை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வரதட்சணை தடுப்புச் சட்டம் பல ஆண்டுகளாக இருக்கிறது. ஆனால் இதுவரை அதைப் பற்றி யாரும் கண்டுகொள்ளவே இல்லை. இருக்கின்ற சட்டங்களை யாருமே மதிப்பதில்லை. பிறகு ஏதோ வித்தை காட்டுவது போல எதையாவது காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது யார் வீட்டில் இந்த “தீ” பற்றி எரிந்தது என்று தெரியவில்லை. இப்போதாவது விழிப்புணர்ச்சி வந்திருக்கிறதே!



கோவை நகரில், குடும்பப் பிரச்னைகளில் சிக்கி நிம்மதியிழந்த தம்பதியர்களுக்கு உதவுவதற்காக,"மொபைல் கவுன்சிலிங்' திட்டத்தை துவக்கியுள்ளனர் போலீசார். இதற்காக அமைக்கப்பட்டிருக்கும் கலந்தாய்வுக் குழுவினர், பகுதி வாரியாக பொதுமக்களை சந்திக்கவுள்ளனர்.

வரதட்சணைக் கொடுமை, குடிபோதை கணவனின் துன்புறுத்தல், கணவனின் கள்ளத் தொடர்பு உள்ளிட்ட பிரச்னைகளால் போலீசில் புகார் அளிக்கும் பெண்களின் எண்ணிக்கை கோவை நகரில் அதிகரித்து வருகிறது. அதே போன்று, மனைவி நடத்தையில் சந்தேகம், கள்ளத்தொடர்பு காரணமாக கணவன்மார் தரப்பிலும் அவ்வப்போது புகார் அளிக்கப்படுகிறது. குடும்பப் பிரச்னைகள் தொடர்பான புகார் வந்தால் போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்வதை தவிர்த்து, முடிந்தவரை "கவுன்சிலிங்' அளித்து கணவன் - மனைவியை சேர்த்து வைக்க முயற்சிக்கின்றனர். முடியாத நிலையில், சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.

பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவுவதற்காக கோவை மாநகரில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய, "பெண்களுக்கான அவசர உதவி தொலைபேசி எண் - 1091' செயல்படுகிறது; குடும்ப பிரச்னைகளுக்காக பெண்கள் போன் செய்து உதவி பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின் தொடர்ச்சியாக மாநகர போலீசில், "மொபைல் கவுன்சிலிங்' (நடமாடும் கலந்தாய்வுக்குழு) துவக்கப்பட்டுள்ளது. கவுன்சிலிங் அளிக்கும் குழுவில் ஆலோசகர்கள் கோதனவள்ளி, மகாலட்சுமி, சுகுமாரி இடம்பெற்றுள்ளனர். இவர்கள், அவ்வப்போது நகரிலுள்ள 15 போலீஸ் ஸ்டேஷன்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கும் சென்று அங்கு வசிக்கும் மக்களை சந்தித்து கலந்தாய்வு நடத்தவுள்ளனர். இவர்களுடன் வக்கீல், அரசு டாக்டர், போலீஸ் அதிகாரிகள் செல்லவுள்ளனர். குடும்பப் பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் ஆண், பெண்களை அழைத்து "கவுன்சிலிங்' அளிப்பதே இக்குழுவின் நோக்கம்.

இத்திட்டத்தின் துவக்க நாள் கவுன்சிலிங் சமீபத்தில் ஆர்.எஸ்.புரத்தில் நடந்தது. குடும்ப நல ஆலோசகர் கோதனவள்ளி தலைமையிலான குழு உறுப்பினர்கள், மாநகர போலீஸ் மேற்குப் பகுதி சட்டம் - ஒழுங்கு உதவிக் கமிஷனர் ராஜா, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதிஅனுசுயா பங்கேற்று, 11 குடும்ப உறுப்பினர்களுக்கு "கவுன்சிலிங்' அளித்தனர். இதில், இரண்டு குடும்பத்தினரின் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு தம்பதிகள் சேர்த்து வைக்கப்பட்டனர்; மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு தொடர்ந்து "கவுன்சிலிங்' அளிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக மற்ற போலீஸ் ஸ்டேஷன்களின் எல்லைக்குள்ளும் "மொபைல் கவுன்சிலிங்' நடக்கவுள்ளது.

"மொபைல் கவுன்சிலிங்' திட்ட ஒருங்கிணைப்பாளர் கோதனவள்ளி கூறியதாவது:குடும்ப அமைப்பில் பெண்கள் பல்வேறு விதமான பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். திருமணத்துக்குப் பின் கணவராலும், அவரைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களாலும் பிரச்னைகள் எழும்போது, "வரதட்சணைக் கொடுமை' புகார் அளித்துவிடுகின்றனர்; ஒரு சில பெண்கள், தனிக்குடித்தன நோக்கம் நிறைவேறாத போது மாமனார் மற்றும் மாமியார் மீது பொய்யான புகார்களை தெரிவிப்பதும் உண்டு. இதுதொடர்பான புகார்களின் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டால் கணவன் மற்றும் அவரைச் சார்ந்தவர்களை கைது செய்து சிறையில் அடைக்க நேரிடும். அவ்வாறு செய்தால் குடும்பம் பிளவுபடும்; பிள்ளைகள் இருந்தால், அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படும். எனவே, சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு பதிலாக இரு தரப்பினரையும் அழைத்து "கவுன்சிலிங்' அளித்தால் பிரச்னைக்கு தீர்வு காண முடியும்; குடும்பத்திலும் அமைதி நிலவும். இதற்கான முயற்சியாகவே, "மொபைல் கவுன்சிலிங்' திட்டத்தை, போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி துவக்கியுள்ளார். இவ்வாறு, கோதனவள்ளி தெரிவித்தார்.

19 வயதில் பாழானது வாழ்க்கை!ஆர்.எஸ்.புரத்தில் நடந்த முதல் "மொபைல் கவுன்சிலிங்'கில் பங்கேற்ற 19 வயது இளம்பெண், தனது பிரச்னையை ஆலோசகர்களிடம் தெரிவித்து கதறி அழுதார். "என்னை காதலித்து திருமணம் முடித்தவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். கைக்குழந்தையுடன் பிழைப்புக்கு வழியின்றி நகைத்தொழிலில் ஈடுபட்டேன். என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிய நபர், என்னுடன் "தொடர்பு' வைத்து கர்ப்பமாக்கிய பின் திருமணம் செய்ய மறுக்கிறார். அவருடன் சேர்த்து வைக்க வேண்டும்' என, தெரிவித்தார். இவருக்கு ஆறுதலும், தைரியமும் கூறிய ஆலோசனைக் குழுவினர், சம்பந்தப்பட்ட நபரை நேரில் அழைத்து கவுன்சிலிங் அளித்து வருகின்றனர்.


Sunday, November 06, 2011

கொடிகட்டி பறக்கும் இந்திய கள்ளக் காதல் கலாச்சாரம்!!

ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 6, 2011, OneIndia

நாகப்பட்டனம்: மருமகனுடன் வைத்திருந்த தகாத உறவைக் கண்டு கொதித்த கணவர், தனது மனைவியைக் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி, தனது மருமகனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாக கொன்ற செயல் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் தகாத உறவுகளின் அளவும், அட்டகாசமும் அதிகரித்து வருகிறது. பெரும் சமூக சீரழிவை நோக்கி மக்களில் சிலர் வேகமாகப் போய் வருவதை நிரூபிக்கும் விதமாக இத்தகையக அடாத உறவுகள் குறித்த செய்திகள் அதிக அளவில் வருகின்றன. இந்த வகையில், மருமகனுடன் கள்ளக் காதல் கொண்டிருந்த மாமியார், அதைக் கண்டித்த தனது கணவரை மருமகனுடன் சேர்ந்து கொலை செய்த கொடும் செயல் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நடந்துள்ளது.

அகரங்காடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (43). இவரது மனைவி ஜோதி. இவருக்கு 40 வயதாகிறது. இந்தத் தம்பதிகளுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

முதல் மகள் தேவிக்கும், வேதாராண்யத்தைச் சேர்ந்த நகைக் கடை உரிமையாளர் நாகராஜனுக்கும் காதல் கல்யாணம் செய்து வைத்தனர். தேவி தனது கணவருடன் தாய் வீட்டிலேயே வசித்து வருகிறார். இந்த நிலையில் தேவியின் கணவருக்கும், ஜோதிக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டு விட்டது.

பன்னீர்செல்வம் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். அவர் சமீபத்தி்ல ஊர் திரும்பியபோது ஜோதியின் அடாத செயல் தெரிய வந்து அதிர்ந்தார். இதையடுத்து தனது மனைவியை கடுமையாக கண்டித்தார். ஆனாலும் ஜோதி தனது போக்கை கைவிடுவதாக இல்லை. நாகராஜனுடன் தொடர்ந்து உறவைப் பராமரித்து வந்துள்ளார். ஆனால் கணவர் தொடர்ந்து எச்சரித்து வந்ததால் அவரைக் கொலை செய்து விட தீர்மானித்தார்.

இதையடுத்து தனது மருமகனுடன் சேர்ந்து நேற்று பன்னீர்செல்வத்தை தாக்கி தலையை சுவரில் மோத வைத்து கொடூரமாக கொலை செய்தார் ஜோதி. பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அக்கம் பக்கத்தில் கூறி கூச்சல் போட்டு நாடகமாடசினார்.

ஆனால் அக்கம் பக்கத்து மக்களுக்கு ஜோதி குறித்து ஏற்கனவே அரசல் புரசலாக தெரியும் என்பதால், போலீஸாருக்குத் தகவல் கொடுத்து விட்டனர். போலீஸார் விரைந்து வந்து ஜோதியைப் பிடித்து விசாரித்தபோது அவர் உண்மையை கக்கி விட்டார். இதையடுத்து ஜோதியையும், அவரது மருமகன் நாகராஜனையும் போலீஸார் கைது செய்தனர்.

கொலையும் செய்வாள் பத்தினி என்பது பழமொழி. ஜோதி போன்றவர்கள் அதை மாற்றிப் புதுமொழி படைப்பது கொடுமையிலும் பெரும் கொடுமையாகும்.

====

இந்திய கள்ளக்காதலில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்ணை சட்டத்தால் தண்டிக்க முடியாது. இந்திய சட்டப்படி கள்ளக்காதலில் ஈடுபடும் பெண் ஒரு அப்பாவி!!!

IPC497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man , such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
W.P.No.45974 of 2006
(O.A.No.8971 of 2000)
DATED: 28.02.2011

23. In this context, an analogy must be drawn to the offence of 'adultery' defined in Section 497 of IPC. The offence of adultery as defined in that section can only be committed by a man, not by a woman. Section itself provides that the wife shall not be punishable even as an abettor. The Indian penal Code itself contemplates that the wife, who is involved in an illicit relationship with another man, is a victim and not author of the crime. .... ... ...

இதுபோன்ற இந்திய காதல் கலாச்சாரத்திற்கு காரணம் என்னவென்று சமீபத்தில் “ராணி” இதழில் சிறப்புக் கட்டுரை வெளியிட்டிருக்கிறார்கள்....




Saturday, November 05, 2011

பெண் மற்றொரு பெண்ணுக்கு செய்யும் உதவி - யாராலும் தடுக்க முடியாது!!

ஏழைப் பெண்ணின் திருமண உதவித் திட்டத்திற்கு உதவிய பெண் அலுவலர்.

ரூ.1,000 லஞ்சம் வாங்கிய பெண் அலுவலர் கைது
நவம்பர் 06,2011 தினமலர்


காட்டுமன்னார்கோவில் ;சிதம்பரம் அருகே, திருமண உதவித் தொகை வழங்க, 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் அலுவலரை, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் கலியபெருமாள். கடந்த ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி, தன் மகள் மாரியம்மாள் திருமணத்திற்கு, அரசின் உதவித் தொகை வழங்கக்கோரி, குமராட்சி ஒன்றிய சமூக நலத்துறையில், ஊர் நல அலுவலராக உள்ள மல்லிகாவிடம், மனு கொடுத்தார். அரசு உதவித்தொகை கிடைக்க, 1,000 ரூபாய் லஞ்சமாக கொடுத்தால் தான், மனுவை அரசுக்கு பரிந்துரை செய்வதாக மல்லிகா கூறியுள்ளார். "நான் கூலித் தொழிலாளி, அவ்வளவு பணம் கொடுக்க இயலாது' எனக் கூறியும் கேட்காத அவர், பணத்தைக் கொண்டு வரும்போது, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வருமாறு கூறினார். இதனால் விரக்தியடைந்த கலியபெருமாள், கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் திருமால் ஆகியோர், ரசாயனம் தடவிய பணத்தை கலியபெருமாளிடம் கொடுத்து, ஊர் நல அலுவலரிடம் கொடுக்கச் செய்தனர். அதன்படி, நேற்று கலியபெருமாள், ரசாயனம் தடவிய பணத்தை மல்லிகாவிடம் கொடுத்தார். அவரைப் பின் தொடர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், மல்லிகாவை கையும், களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.