இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, July 25, 2012

இந்தியாவில் உயிரினமாகவே கருதப்படாத பெண்ணினம் எது தெரியுமா?

சென்ற வாரம் பண போதையில் மிதந்து மதுசாலையில் பிறந்த நாள் கொண்டாடி மகிழச் சென்ற இளம் பெண்ணுக்கு குடிகார நண்பர்களுடன் நடந்த சண்டைக்கு கொடி பிடித்து போராடிவரும் தேசிய பெண்கள் வாரியமோ, உள்துறை அமைச்சகமோ பின்வரும் படத்தில் இருக்கும் பெண்களுக்காக என்றாவது தீவிரமாக குரல் கொடுத்திருப்பார்களா?

தினமலரில் வந்த படம் 25 ஜூலை 2012
ராக்கெட்டுகளையும், ஏவுகணைகளையும் விட்டு வல்லரசாகிக் கொண்டிருக்கும் நாட்டில் காலில் காலணிகூட இல்லாத பள்ளிச் சிறுமிகள், “டீ” வாங்கிக் கொண்டு செல்லும் அவலம்.

இதுபோலத்தான் அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு போடப்படும் பொய் வரதட்சணை வழக்குகளிலும் கணவனை சிறையில் அடைத்து மருமகளுடன் குதூகலம் அடையும் அரசாங்கமோ, பெண்கள் அமைச்சகமோ, பெண்கள் வாரியமோ, பெண்கள் அமைப்புகளோ அந்தக் குடும்பங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி இதுவரை ஒரு துளிகூட கவலைப்பட்டதில்லை. இதுபோல் அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு போடப்படும் பொய் வரதட்சணை வழக்குகளில் அரசாங்கத்தின் உதவியால் அனாதையாக்கப்பட்டு கவனிக்கப்படாத குழந்தைகள் லட்சக் கணக்கில் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பது இருட்டடிக்கப்பட்ட கசப்பான உண்மை.


Monday, July 23, 2012

பெருமைக்குரிய பெண்மணி

சமீபத்தில் மதுவிடுதியில் மகிழ்வுறச் சென்ற பெண் சம்பந்தப்பட்ட அடிதடி சம்பவத்திற்கு மத்திய மந்திரி முதல் பெண்கள் நலவாரியம் வரை குரல் எழுப்பி இந்திய பெண்களை தாங்கி நிற்பதாக பெருமைப்பட்டுக்கொண்டார்கள். ஆனால் பெண்களுக்காக உண்மையாக பாடுபடும் பெண்மணிகள் பற்றி சிறிய செய்தி மட்டும்தான் வெளியே வரும். உண்மையாகவே பெண்களுக்காக உழைக்கும் ஒரு பெருமைக்குரிய பெண்மணியின் செய்தி இது.

இதுபோல சமுதாயத்தின் கீழ்நிலையில் இருக்கும் பெண்களுக்காக இந்திய பெண்கள் நல அமைச்சகமும், தேசிய பெண்கள் நல வாரியமும் உண்மையாகவே ஏதாவது செய்திருப்பார்களா? இந்தியப் பெண்களின் நலனில் அக்கறையுள்ளவர்கள் அமைதியாக பல நல்ல பணிகளை செய்துகொண்டிருக்கிறார்கள். பெண்களின் வாழ்வை மேலைநாட்டுக் கலாச்சாரத்துடன் "Women Empowerment" என்ற பெயரில் அழித்துக் கொண்டிருக்கும் கூட்டம் இளம் பெண் மதுபான விடுதிக்குச் செல்ல உரிமையில்லையா என்று ஆர்ப்பாட்டமாக கூச்சலிட்டுக் கொண்டிருக்கும்.

தினமலர் ஜூலை 24,2012


நரிக்குறவர் இனத்தின் முன்னேற்றத்திற்காகஉதவும், அதே இனத்தைச் சேர்ந்த ஞானசுந்தரி: நான், நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பெண். என் கணவரை, கலப்புத் திருமணம் செய்து கொண்டேன். அவரின் ஊக்குவிப்பால், பி.ஏ., முடித்தேன்.

சிறு வயதில் இருந்தே, எங்கள் மக்கள் படும் கஷ்டத்தை பார்த்தவள் நான். ஏதாவது ஒரு வழியில், அவர்களுக்கு உதவ வேண்டும் என நினைப்பேன்; என் கணவருக்கும் அதே எண்ணம் தான். அவர்களின் நிலையை மாற்ற, கல்வியால் மட்டுமே முடியும் என உறுதியாக நம்பினோம்.

சைதாப்பேட்டையில், 25 நரிக்குறவ குழந்தைகளுக்காக பள்ளியைத் துவக்கினோம். அதை திருச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் விரிவுபடுத்தினோம். இங்கு படித்த எவ்வளவோ பேர், இன்று நல்ல நிலையில் உள்ளனர்.

எங்கள் சமூகத்தைச் சேர்ந்த பலருக்கும், முறையான விழிப்புணர்வு இல்லை. படிப்பை இன்னும் எட்டாக்கனியாகத் தான் அவர்கள் பார்க்கின்றனர்.

குடும்ப சூழலால் பல பெண்கள், படிக்க முடியாமல் உள்ளனர். அவர்கள் கஷ்டப்பட்டு தான் பிழைப்பை நடத்துகின்றனர். அவர்களுக்கு நிரந்தர வருமானத்தைப் பெருக்கத் தான் பாசிமணிகள் மூலம், விதவிதமான அணிகலன்கள் செய்து விற்க, பயிற்சி அளிக்கிறேன்.

"பேஷன்' நகைகள் செய்வதற்கான மூலப்பொருட்களை, டில்லி, மும்பை, கர்நாடகா போன்ற இடங்களில் இருந்து, மொத்தமாக வரவழைக்கிறோம். காய்கறிகளில் இருந்து தயாரிக்கப்படும் சாயத்தை தான், நகைகள் செய்ய பயன்படுத்துகிறோம். அதனால், இந்த நகைகளை அணியும் போது, நம் உடலில், "அலர்ஜி' ஏற்படாது.

எங்கள் நகைகளுக்கு வெளிநாடுகளில், நல்ல வரவேற்பு உள்ளது. அரசு நடத்தும், கைவினைப் பொருட்கள் கண்காட்சியிலும், எங்களுக்கென்று தனியாக, "ஸ்டால்' ஒதுக்கிக் கொடுத்துள்ளனர்.

எங்களிடம் பயிற்சி எடுத்த பெண்களுக்கு, அரசு மானிய உதவித் தொகை கொடுத்து ஊக்குவித்தால், அவர்கள் செய்து கொடுக்கும் நகைகளை ஏற்றுமதி செய்வதற்கும், நல்ல விலைக்கு விற்பதற்கும் உதவத் தயாராக இருக்கிறோம்.

Thursday, July 19, 2012

பிடிக்காத ஆணை பழிவாங்க இனி தயங்காமல் பொய் கற்பழிப்பு வழக்குகளை போடலாம்! (New Trend!!!!)

பெண்கள் மீதான பாலியல் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்க வழி செய்யும் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்திருக்கிறது. அரசாங்கம் எத்தனை சட்டங்கள் எழுதினாலும் அவற்றை செயல்படுத்தும் காவல்துறையும், நீதித்துறையும் நேர்மையாக இல்லாதவரை சமுதாயத்திற்கு மிகுந்த ஆபத்துதான். அந்த வரிசையில் இன்றைய சட்டதிருத்தம் சமுதாயத்தையே அழித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நான் ஏன் இப்படி சொல்கிறேன் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து கடைசி வரை படியுங்கள். மிகவும் ஆச்சரியப்பட்டு போவீர்கள்!! யாராலும் கற்பனைகூட செய்யமுடியாத அளவிற்கு இந்தியாவில் இளம் பெண்கள் சட்டங்களை துஷ்பிரயோகம் செய்து பிடிக்காத ஆணை எப்படியெல்லாம் பழிவாங்குகிறார்கள் என்று அப்போதுதான் உங்களுக்குத் தெரியும்.


புதுடில்லி: பாலியல் குற்றத்திற்கு, ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மத்திய அமைச்சரவைக் கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், நேற்று, அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதில், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு, ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தை திருத்துவதற்கு ஒப்புதல் தரப்பட்டது. அத்துடன், ஆசிட் வீசும் நபர்களுக்கு, 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கவும், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு, மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கவும், இந்தச் சட்டத் திருத்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

=====
பெண்கள் மீதான பாலியல் குற்றத்தில் ஈடுபடும் ஆணுக்கு ஆயுள் தண்டனை என்றால் அப்படி ஒரு வழக்கை பொய்யாக ஜோடித்து பொய் கற்பழிப்பு வழக்கு போடும் பெண்ணுக்கு என்ன தண்டனை? இதுவரை எதுவும் இல்லை. அப்படியே இருந்தாலும் நீதிமன்றங்களில் இளம் பெண்ணின் கடைக்கண் பட்டுவிட்டால் பொய் வழக்குப் போடும் பெண்ணிற்கு எந்த தண்டனையையும் நீதிபதி வழங்கமாட்டார். அதுதான் இன்று இந்தியாவில் நடந்துகொண்டிருக்கிறது.

மேலே உள்ள செய்தியில் மந்திரிசபை சட்டம் எழுதுவதில் காட்டும் அக்கறையை அதில் உள்ள ஓட்டைகளை அடைக்க காட்டுவதில்லை. அல்லது அவர்களே ஓட்டையைப் போட்டுத் தருகிறார்களா என்றும் புரியவில்லை.

சமீபத்தில் டில்லி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த கற்பழிப்பு வழக்கில் மிகவும் கொடூரமான முறையில் 21 வயது இளம் பெண் பொய் வழக்குப் போட்டிருக்கிறார். தனது கள்ளக்காதலனின் மனைவி தனது கள்ளக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குத் தொடர்ந்ததால் அந்த கள்ளக் காதலனின் மனைவி, அந்த மனைவியின் அண்ணன், அண்ணனின் மனைவி ஆகியோர் மீது ஆட்கடத்தல், கூட்டு சதி, கற்பழிப்பு ஆகிய குற்றங்களை சுமத்தி மிகவும் அருமையாக ஒரு கொடூரமான கற்பழிப்பு வழக்கை ஜோடித்து அனைவர் மீதும் வழக்குத் தொடுத்துவிட்டார். அந்த புகாரை படித்தால் தலையே சுற்றும், அந்த அளவிற்கு ஒரு அருவருப்பான, கொடூரமான கற்பனை.

தன்னுடைய பொய் வழக்கு நம்பும்படியாக இருக்கவேண்டும் என்பதற்காக கற்பனையாக மேலும் இரு ஆண்களின் பெயர்களை சேர்த்து தனது கள்ளக்காதலனின் மனைவியின் அண்ணனோடு சேர்ந்து மூன்று ஆண்கள் ஆறு மாதம் அடைத்துவைத்து மாற்றி மாற்றி கற்பழித்ததாகவும், அதனால் தனக்கு கர்ப்பம் ஏற்பட்டு அதனை அவர்கள் கலைத்ததாகவும் பொய் வழக்கு தொடுத்திருக்கிறார். இந்தக் குற்றத்திற்கு தனது கள்ளக்காதலனின் மனைவியின் அண்ணி உதவி செய்ததாகவும் எழுதியிருக்கிறார்.

இதில் அருமையான விஷயம் என்னவென்றால் அந்தப் பெண் டில்லி மாவட்ட நீதிமன்றத்தில் பணிபுரிகிறார். சட்டங்களையும், நீதிமன்றங்களையும், நீதிபதிகளையும் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டு இந்த வழக்கை அற்புதமாக வடிவமைத்து இந்திய நீதித்துறையை முட்டாளாக்கியிருக்கிறார்.

ஆனால் கடைசியில் நடந்தது என்ன? இவையெல்லாவற்றையும் அந்தப் பெண்ணே நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட பிறகும், நீதிபதி அந்தப் பெண்ணுக்கு எந்த தண்டனையும் கொடுக்கவில்லை. அவள் ஒரு இளம் பெண் என்பதால் திருந்துவதற்கு வாய்ப்பு கொடுத்து தண்டனை கொடுக்கவில்லை என்று தீர்ப்பு எழுதியிருக்கிறார்.

இது போதாதா? இனி பிடிக்காத ஆண் மீதோ, கள்ளக்காதலுக்கு தடைபோடும் ஆண் மீதோ அற்புதமாக பொய்யான கற்பழிப்பு குற்றச் சாட்டை சுமத்தி இன்று மத்திய அரசு இயற்றியிருக்கும் புதிய சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை வாங்கிக்கொடுத்துவிடுவார்கள்!!!! அதற்கு நீதிமன்றங்கள் பெண்களுக்கு உதவுமா என்ற விஷயம் வழக்கை நடத்தும் நீதிபதிகளை பொறுத்தது.

நீதிமன்றத்தின் அந்த தீர்ப்பின் முக்கியமான பகுதி. படித்துவிட்டு இந்திய நீதிமன்றங்கள் செயல்படும் விதத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

ஒரு இளம் பெண் கொடுத்த இந்த பொய்யான கற்பழிப்பு வழக்கில் சிக்கி பாதிக்கப்பட்டிருப்பது இரண்டு பெண்கள், ஒரு ஆண், இரண்டு கற்பனையாக ஜோடிக்கப்பட்ட ஆண்கள்! இவர்களுக்கு நீதி வழங்கப்போவது யார்?


IN THE COURT OF SH. RAKESH TEWARI ASJVI
ROHINI COURTS, DELHI

SC NO.271/10
FIR NO. 895/05

U/S 365/366/342/376(2) IPC
PS Sultan Puri

State
Vs.
1. Ritu @ Gudia w/o Ram Niwas
2. Kishan Pal (discharged vide order dated 08.01.2007)
3. Ram Niwas (Proclaimed Offender)
4. Balvinder (Proclaimed Offender) - கற்பனையாக ஜோடிக்கப்பட்ட ஆண்
5. Munna (Proclaimed Offender) - கற்பனையாக ஜோடிக்கப்பட்ட ஆண்

Date when committed to the court of Sessions :28.09.2006


Judgment pronounced on :12.07.2012



JUDGMENT:

34. I am conscious of the doctrine of judicial restraint which commands me not to pass such comments which may not be part of the “lis” and at the same time, I am also conscious of the law that nobody has got a right to commit a rape upon a woman even of easy virtue but the theory of rape against the present prosecutrix has been already discarded by me, as discussed above, but despite all restraints at my command, my judicial conscience pricks me that I would be failing in my duty if I do not point out that present prosecutrix, admittedly working in District Courts has no fear or by virtue of her said job her fear has gone out of her mind towards the law and she can play with the law and legal procedures as a master juggler and she can go to any extent by levelling allegations against anyone as I have already held that she has no regard even for the human relations, as discussed above, and in this sense, such kind of alleged victims of rape are potentially dangerous to the society in the sense that from tomorrow onwards the general public as well as the courts will start disbelieving the version given by even the real victims of rape and in the second sense, as she has become fearless, she can level allegations against her colleagues with whom she is working or against any other person of the society with whom she will be having a clash of interest. I have no hesitation in drawing an inference that she is a cold blooded thinker whereby she can implicate any person, having inadvertence towards the consequences and at the same time, she has no repentance over her said false allegations. These comments have been passed with a hope that the said prosecutrix would reform herself in future and it is in this background that I am thinking it inexpedient in the circumstances not to lodge a report against her for the criminal offences she has committed before this court during her said deposition u/s 340 Cr.PC and not reporting the matter to her department for her departmental action because prevention is always better than cure and for further humanitarian reason that she got her job on compassionate ground after her father was murdered.

இந்த தீர்ப்பு தொடர்பாக செய்தித்தாளில் வந்துள்ள செய்தி....





புதுடில்லி:"தன்னை சிலர், பாலியல் பலாத்காரம் செய்ததாக பொய் புகார் கூறி, வழக்கு தொடரும் பெண்களால், சமுதாயத்துக்கு பெரிய அளவில் அபாயம் ஏற்படும். இதுபோன்ற பொய் புகாரால், உண்மையிலேயே, பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிய பெண்கள் மீது, கோர்ட்டுக்கும், பொதுமக்களுக்கும் இரக்கம் இல்லாமல் போய் விடும்' என, டில்லி கோர்ட் கூறியுள்ளது.டில்லியில் கோர்ட்டில் பணிபுரியும் பெண் ஒருவர், தன்னை, நான்கு ஆண்கள் ஒன்றாக சேர்த்து, கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும், இந்த குற்றத்துக்கு ஒரு பெண், உடந்தையாக இருந்ததாகவும் கூறி, டில்லி செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையில், பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண், பொய் வழக்கு தொடர்ந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த, நீதிபதி ஆர்.டி.திவாரி, குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை, விடுதலை செய்தார். இதன்பின், தீர்ப்பில் அவர் கூறியதாவது:"தன்னை சிலர், பாலியல் பலாத்காரம் செய்ததாக, பொய் புகார் கூறி, வழக்கு தொடரும் பெண்களால், சமுதாயத்துக்கு பெரிய அளவில் அபாயம் ஏற்படும். அவர்கள் சமூகத்திற்கு ஆபத்தானவர்கள். இதுபோன்ற பொய் புகார்களால், உண்மையிலேயே பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி, பாதிக்கப்படும் பெண்கள் மீது, கோர்ட்டுக்கும், பொதுமக்களுக்கும், இரக்கம் இல்லாமல் போய் விடும். இதுபோன்று கொடூரமாக சிந்திக்கும் பெண்கள், யார் மீது வேண்டுமானாலும் புகார் கொடுப்பார்கள். பொய் புகார் கூறுகிறோம் என்ற பயமே, இந்த பெண்களுக்கு இல்லை. ஒருவர் மீது, பொய் புகார் தெரிவிப்பதற்காக, எந்த நிலைக்கும் இவர்கள் செல்வார்கள். அதனால், ஏற்படும் பாதிப்பு குறித்து, கவலைப்பட மாட்டார்கள். அதேநேரத்தில், பொய் புகார் கூறுகிறோமே என, வருத்தப்படவும் மாட்டார்கள்.'இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறினார்.



Saturday, July 14, 2012

மதுவிடுதிக்கு இரவில் சென்ற இளம் பெண்னை மானபங்கம் செய்தது குற்றம் என்றால், பகலில் கர்ப்பிணிப் பெண்ணின் கரு அழித்த காவலர்களின் செயல் குற்றம் கிடையாதா?

இன்றைய செய்தியில் மது விடுதிக்கு “பார்ட்டி” கொண்டாட சென்ற இளம் பெண் அவரது நண்பர்களுடன் தகராறு ஏற்பட்டு விடுதியைவிட்டு வெளியேறியபோது அந்த ஆண் நண்பர்கள் சாலையில் வழிமறித்து மானபங்கம் செய்ததாக செய்தி வந்திருக்கிறது. பெண்ணை சாலையில் அவமானப்படுத்தியது குற்றம்தான்.

இதுபோன்ற குற்றங்கள் நடக்காமல் இருக்க தமிழகத்தில் அரசாங்கமே மதுசாலை நடத்துவதுபோல நாடெங்கும் மத்திய அரசு இளம் பெண்களுக்கென்று தனியாக மதுசாலைகள் அமைத்து இராணுவ பாதுகாப்பு கொடுக்கலாம். அப்போதுதான் “இளம் பெண்களின் உரிமை” பாதுகாக்கப்படும். அரசியலில்தான் பெண்களுக்கு 50% பங்கு கொடுக்காமல் ஏமாற்றுகிறார்கள். இந்த விஷயத்திலாவது அரசாங்கம் ஒரு நல்ல முடிவு எடுத்தால் பல இளம் பெண்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்படும்.
தினமலர் ஜூலை 13,2012

கவுகாத்தி: அசாமில், 20 பேர் கொண்ட வெறிக் கும்பலால், இளம்பெண் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு, நாடு முழுவதும், கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த கொடூர சம்பவத்துக்கு, தேசிய பெண்கள் கமிஷன், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர், கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மானபங்கத்தில் ஈடுபட்ட 20 பேரில், இதுவரை, நான்கு பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மது விருந்து:அசாமின் கவுகாத்தி நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த 9ம் தேதி இரவில், தன் தோழியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க, மது விடுதிக்கு சென்றார். அங்கு, அவருக்கும், அங்கிருந்த மற்றும் சிலருக்கும் இடையே, தகராறு ஏற்பட்டது. மது விடுதி ஊழியர்கள், அவர்களை வெளியேற்றினர்.இதையடுத்து, அந்த இளம்பெண், மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் வந்து கொண்டிருந்தார். மது விடுதியில், அந்த பெண்ணுடன் தகராறில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரும், அவரை பின் தொடர்ந்து வந்தார். அந்த வழியாக சென்ற மேலும் சிலரும், அவரை பின் தொடர்ந்தனர்.அவர்களில் பெரும்பாலானோர், மது குடித்திருந்தனர். இளம்பெண்ணை, கேலி, கிண்டல்கள் செய்து கொண்டே, பின் தொடர்ந்து வந்தனர். ஆபாசமாகவும் பேசினர்.

வெறி:திடீரென, அந்த கும்பலில் இருந்தவர்கள், வெறி கொண்டு, அந்த பெண்ணை, கையை பிடித்தும், உடலைத் தொட்டும், தரக்குறைவான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அந்த பெண் கதறி அழுதும், அவர்கள் விடவில்லை. உடைகளை கிழித்து, விரட்டி விரட்டி மானபங்கப்படுத்தினர்.அரை மணி நேரம், இந்த கொடுமை நீடித்தது. இதற்கு பின்பே, போலீசார் அங்கு வந்தனர். அந்த வெறிக் கும்பல் தப்பி ஓடிவிட்டது. போலீசார், அந்த பெண்ணை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.இந்த சம்பவம் நடந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த உள்ளூர் "டிவி' சேனலின் கேமராமேன், அனைத்து கட்சிகளையும் படம்பிடித்தார். இந்த காட்சிகள், உள்ளூர் சேனலில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டது. "யூ டியூப்' தளத்திலும், இந்த காட்சி ஒளிபரப்பானது.

இந்த கொடுமையான சம்பவம், தற்போது, நாடு முழுவதும், பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் நடந்து நான்கு நாட்கள் ஆகியும், குற்றம் செய்த 20 பேரில், நான்கு பேர் மட்டுமே, இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர்.

பெண்கள் ஆணையம்:தேசிய பெண்கள் ஆணைய தலைவர் மம்தா சர்மா, இந்த சம்பவத்துக்கு, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை, மன்னிக்கவே முடியாது.மத்திய அரசு, இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் ஆணையத்தின் சார்பில், ஒரு குழு, இதுகுறித்து நேரில் விசாரணை நடத்தவுள்ளது' என்றார். பா.ஜ., செய்தி தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமனும், கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் கண்டனம் :"அசாமில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை' என்ற விமர்சனம் எழுந்துள்ளது. சண்டிகரில், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறுகையில், "பெண்களுக்கு எதிரான, இதுபோன்ற சம்பவங்கள், கடும் கண்டனத்துக்குரியவை. இதுபோன்ற செயல்களை, அத்தனை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.அப்படி எளிதாக எடுத்துக் கொள்வோரும், கண்டனத்துக்கு உரியவர்களே. இந்த விஷயம், மீடியாக்களின் மூலம், என் கவனத்துக்கு வந்துள்ளது. அசாம் முதல்வருடன், இதுகுறித்து பேசியுள்ளேன். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

விசாரணை கமிஷன்:இதற்கிடையே, இச்சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக கூடுதல் தலைமைச் செயலர் அமிலி சவுத்திரி தலைமையில் ஒரு நபர் அடங்கிய விசாரணைக் கமிஷனை, அசாம் மாநில அரசு அமைத்துள்ளது.

"டிவி' சேனல் விளக்கம்:இந்த சம்பவத்தை ஒளிபரப்பிய உள்ளூர் சேனலின் நிர்வாகி செய்யது ஷாகிர் கூறுகையில், "இளம்பெண் ஒருவரை, ஒரு வெறிக்கும்பல் மானபங்கம் செய்தபோது, அவரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்காமல், கேமராவில் படம் பிடித்தது ஏன் என, எங்களை சிலர் கேட்கின்றனர். 20க்கும் மேற்பட்டோரை, கேமராமேன் ஒருவரால் எப்படி சமாளிக்க முடியும்? மேலும், இளம்பெண் ணை மானபங்கம் செய்தவர்களின் முகங்களை மட்டுமே, தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறோம். பாதிக்கப்பட்ட பெண்ணின் முகத்தை மறைத்துத் தான் ஒளிபரப்புகிறோம்' என்றார்.

==============

இந்த செய்தியைக் கண்டு தேசிய மகளிர் வாரியம் பொங்கி எழுந்துவிட்டது. மத்திய அமைச்சர் சிதம்பரம் அறிக்கை விடுகிறார்.

ஆனால், கடந்த ஆண்டு ஆந்திராவில் இருந்த ஒரு மருமகள் தமிழ்நாட்டில் வாழும் கணவனின் அண்ணன் மனைவி மீது வரதட்சணை வழக்கை ஆந்திராவில் பதிவு செய்து ஆந்திர போலிஸ் தமிழ்நாட்டிற்கு வந்து உள்ளூர் போலிஸிற்கு சட்டப்படி தகவல் சொல்லாமல் அந்தப் பெண்ணை கைது செய்து ஆந்திராவிற்கு அழைத்துச் சென்றார்கள்.

அந்தப் பெண் ஒரு மருத்துவர், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தனக்கு சிகிச்சை தேவைப்படுகிறது என்று கூறியும் விடாமல் இரயிலில் அழைத்துச் சென்று கடைசியில் ரயில் பயணத்திலேயே அந்தப் பெண்ணின் கரு கலைந்து போனபிறகு பாதி வழியிலேயே அந்தப் பெண்ணை விட்டு விட்டு ஓடிவிட்டார்கள்.

சட்டத்திற்குப் புறம்பாக நடந்த இந்தக் குற்றம் பெண்கள் வாரியத்தின் கண்களுக்கு ஏன் தெரியவில்லை? இதுவும்தான் செய்தித்தாளில் வந்தது. எந்த அமைச்சரும் வாய் திறக்கவில்லை, எந்த பெண் அமைப்பும் கொடி பிடிக்கவில்லையே. ஏன்?

கேளிக்கையில் ஈடுபட மதுவிடுதிக்கு இரவில் சென்ற இளம் பெண்னை மானபங்கம் செய்தது மட்டும்தான் பெண்ணுக்கெதிராக இழைக்கப்படும் குற்றமாக இந்தியாவில் கருதப்படுமா? பட்டப் பகலில் நடுவீதியில் கர்ப்பிணிப் பெண்ணின் கரு அழித்த காவலர்களின் செயல் குற்றம் கிடையாதா? கருவிலேயே அழிக்கப்பட்ட சிசுவிற்கு இழைக்கப்பட்டது குற்றம் கிடையாதா? மது சாலைக்குச் சென்று குடித்து கூத்தடித்து மகிழும் பெண்கள் மட்டும்தான் இந்தியாவில் பெண்களாக கருதப்படுவார்களா?


Friday, July 13, 2012

அண்ணனின் மனைவியும் மருமகள்தான்

எதையும் செய்வாள் கலியுக மருமகள் என்பதற்கு இந்த செய்தி!


தேவகோட்டை:தோஷம் கழிக்கச் சென்று, நாத்தனாரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ததாக, அண்ணி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சிவகங்கை, தேவகோட்டை பூதுக்குடியைச் சேர்ந்தவர் பாக்கியம்,23. இவருக்கு, ஜூன் 29ல், திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஜூன் 17ல் மாயமானார். தங்கையை காணவில்லை என, மாரிமுத்து, போலீசில் புகார் செய்தார்.நேற்று முன்தினம், வயல்வெளியில் மண்டை ஓடு கிடப்பதாக தகவல் கிடைத்தது. அருகில், முட்புதரில் ரத்தக்கறை படிந்த கல், சுரிதார் கிடந்தது. ராமநாதபுரம் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து, இறந்தது பாக்கியம் என கண்டுபிடித்தனர்.

மாரிமுத்து மனைவி திருச்செல்வியின் நடவடிக்கை, போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மோப்ப நாயும், சம்பவ இடத்திலிருந்து மாரிமுத்துவின் வீட்டுக்குள் சென்றது. திருச்செல்வியிடம் போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில், திருச்செல்வி அளித்த வாக்குமூலம்: பாக்கியத்தின் திருமணத்திற்காக, என் கணவர் நகைகளை கேட்டார்; தர மறுத்தேன். நிலங்களை விற்கப் போவதாக கூறினார். நிலத்தை விற்று விட்டால், என் இரண்டு மகள்களுக்கும் என்ன செய்வது என்று கேட்ட போது, தகராறு ஏற்பட்டது. "தங்கை திருமணம் தான் முக்கியம்' என்றார். எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

சம்பவத்தன்று அதிகாலை 4 மணிக்கு, "ஜோதிடர் தோஷம் கழிக்கச் சொல்லியிருக்கிறார். வீடு அருகே கிடக்கும் கல்லை எடுத்து வா' என, பாக்கியத்திடம் கூறினேன். பாக்கியத்தின் தலையில் கல்லைத் தூக்கி வரச் செய்து, வயல் வெளிக்கு அழைத்துச் சென்றேன். கண் மூடி வழிபடச் சொன்னேன். அப்போது, கல்லை தலையில் போட்டு, கொலை செய்தேன்.
தங்கை மாயம் குறித்து, போலீசில் புகார் செய்யப் போவதாக, கணவர் கூறினார். வேண்டாம் என தடுத்தேன். மூன்று நாள் கழித்து, புகார் கொடுத்து விட்டார். எப்படியும் சிக்கி விடுவோம் என எண்ணி, கொலையை ஒப்புக் கொண்டேன்.இவ்வாறு, அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.



Monday, July 09, 2012

இந்தியாவில் இருக்கும் இரண்டு விதமான பெண்கள்

கீழே உள்ள இரண்டு படங்களும் இன்று ஒரே செய்தித்தாளில் வந்தவை.


மிஸ் காட்டன் சிட்டி: கோவை, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில், நேற்று, மிஸ் காட்டன் சிட்டி கலை விழா நடந்தது. (தினமலர் 10 ஜூலை 2012)


“பெண்ணுரிமை” என்று பல காலமாக கூப்பாடு போடும் கூட்டம் யாருக்காக, எதற்காக, எப்படிப்பட்ட உரிமைக்காக போராடுகிறார்கள் என்பது யாருக்குமே தெரியாத ஒரு ரகசியம். இந்த பெண்ணியவாதிகள் பெண்களை இரண்டாக தரம் பிரித்து மேல்தட்டு வர்கத்திற்கு மட்டுமே குரல் கொடுப்பார்கள்.




1. மேல்தட்டுப் பெண்கள் - விருப்பம்போல வாழலாம், ‘பப்’புகளுக்குச் சென்று குடித்து கூத்தடிக்கலாம், ஃபேஸ் புக்கில் ஆண் நண்பனை தேர்வு செய்து சட்டத்தின் துணையோடு கணவனை விரட்டியடிக்கலாம், ஆண் நண்பருடன் விருப்பம்போல சுத்தலாம். தட்டிக் கேட்கும் கணவனை குடும்பத்தோடு பொய் வரதட்சணை வழக்கில் சிக்க வைக்கலாம். இன்னும் ஒருபடி மேலே சென்று கூலிப்படை வைத்து கணவனை போட்டுத் தள்ளலாம். இந்திய பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் இதுபோன்ற பெண்களை மட்டும்தான் அப்பாவிப் பெண்களாகக் கருதி பாதுகாக்கும். இதுபோன்ற உரிமைகளுக்காகப் குரல் கொடுப்பதுதான் இப்போதைய “பெண்ணுரிமை” போராட்டம்!

2. கீழ்தட்டுப் பெண்கள் - இவர்களை யாரும் இதுவரை ஒரு பொருட்டாக மதித்ததில்லை. மதிக்கப்போவதுமில்லை. சமூகத்தின் கீழ் நிலையில் இருக்கும் பெண்களை யாரும் மனிதர்களாகக்கூட மதிப்பதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு சட்டங்களை தவறாகப் பயன்படுத்தத் தெரியாது. குடும்பத்தைக் காக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். குழந்தைகளை பேணிக்காக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இவையெல்லாம் இருந்தால் இவர்களால் எப்படி பொய் வழக்குப்போட்டு போலி பெண்ணியம் பேசுபவர்களுக்கு வருமானம் ஏற்படுத்திக் கொடுக்க முடியும்? அதனால்தான் இந்தியாவில் இரண்டுவித நிலைகளில் பெண்களை வைத்திருக்கிறார்கள்.

Sunday, July 08, 2012

ஏழை இந்தியனும் மனிதன்தானே?

அவலம்: மழைக்காலம் துவங்கவுள்ள நிலையில், சென்னையில்மழைநீர் கால்வாய்களை தூர் வாரி சுத்தப்படுத்தும்பணி, "ஜரூராக' நடந்து வருகிறது. இதற்காக,மாநகராட்சியில் அதிநவீன இயந்திரங்கள் இருந்தும்,ஒப்பந்த முறையில் கூலித்தொழிலாளர்களை அமர்த்தி,கழிவுகளை அகற்றும் பணி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒப்பந்ததாரர்களோ, சிறுவர்களை வைத்துவேலை வாங்கி வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இடம்:வள்ளுவர் கோட்டம். (தினமலர் 8 ஜூலை 2012)
========

இந்தியாவில் மகளிர் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வு அமைச்சகம் என்று ஒரு மத்திய அமைச்சகம் இருக்கிறது. தேசிய மனித உரிமை கழகம் இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் மகளிர் மற்றும் குழந்தைகள் நல வாரியம் இருக்கிறது. மாநில மனித உரிமை கழகம் இருக்கிறது. இவையெல்லாம் இருந்தாலும் சமூகத்தில் ஏழ்மையில் வாழும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் என்ன பயன்?

இந்த நலவாரியங்கள் எல்லாம் கள்ளக்காமத்தில் ஈடுபடும் மேல்தட்டுப் பெண்கள் தங்கள் கணவனை ஒடுக்குவதற்கு வசதியாக பொய் வரதட்சணை வழக்குகளை போடுவதற்கு மட்டும்தான் "பெண்ணுரிமை" என்ற பெயரில் குரல் கொடுப்பார்களோ?

மேற்கத்திய நாடுகளில் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதில்லை. ஆனால் இந்தியாவில் மட்டும் ஏன் இந்த அவலநிலை தொடர்கிறது. இதுபோன்ற வேலைகளில் மனிதர்களை ஈடுபடுத்துவது மனித உரிமை மீறல் கிடையாதா? அல்லது வறுமையில் வாடும் இந்தியர்கள் மனிதர்களாக மதிக்கப்படுவதில்லையா? ஏன் இந்த அவலம்? சக இந்தியர்களை மனிதர்களாகவே மதிக்காத நாடு ஏவுகனைகளை மட்டும் செலுத்தி வல்லரசாகிவிட்டோம் என்று பெருமை கொள்ள முடியுமா?

சென்னை போன்ற பெருநகரத்திலேயே இந்த நிலை என்றால் கிராமப்புறங்களில் மனிதர்களின் நிலை எப்படி இருக்கும்?

Tuesday, July 03, 2012

நீங்கள் அநீதியைக் கண்டு பொங்கி எழுபவரா? உயிர் போய்விடும் ஜாக்கிரதை!!!

நாட்டில் நடக்கும் அநீதிகளைக் கண்டு மனம் நொந்து பொங்கி எழும் குணம் படைத்தவர்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. காந்திய வழியில் செல்லும் சமூக சிந்தனையுள்ளவர்கள் அநீதிகளுக்கு எதிராக போராட தகவல் அறியும் உரிமை சட்டம், பொதுநல வழக்கு என நேர்மையான வழியை நாடிச் செல்கிறார்கள். இதுபோன்ற அகிம்சை வழியில் பல உண்மைகள் வெளிக் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இந்த உண்மைக்காக போராடும் பலர் வெளியே தெரியாமல் கொல்லப்பட்டு வருகிறார்கள். இதுபோன்ற செய்திகள் அதிகம் வெளியே வருவதில்லை. செய்தித்தாள்களும் அவ்வளவு அக்கறை காட்டுவதில்லை.

அதனால் இன்று இப்படி ஒரு செய்தி வந்திருக்கிறது. இந்தியாவில் நீங்கள் அநீதியைக் கண்டு போராட நினைத்தால் முதலில் உங்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.



திருவண்ணாமலை கிரிவலப்பாதை, சிங்கமுக தீர்த்தகுளம் அருகே சமூக சேவகர் ராஜ்மோகன் சந்திரா என்பவர் மீது மிளகாய் பொடியை தூவி, மர்ம நபர்கள் அவரை வெட்டிக்கொன்றனர். சம்பவம் நடந்த இடத்தை எஸ்.பி.,ரம்யா பாரதி பார்வையிட்டார்.உள்படம்:ராஜ்மோகன் சந்திரா


திருவண்ணாமலை: பால் வாங்கிக்கொண்டு வீடு திரும்பியபோது, சமூக சேவகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இது தொடர்பாக கொலையாளி இருவர், நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சிங்கமுக தீர்த்த குளம் எதிரே வசிப்பவர் ராஜ்மோகன் சந்திரா(53), இவரது மனைவி தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.


சமூகசேவை:பொறியியல் பட்டதாரியான ராஜ்மோகன், பல்வேறு தன்னார்வ அமைப்புகளில் இணைந்து சமூக சேவை செய்து வந்தார். இவர் ஏராளமான பொதுநல வழக்குகளை போலீஸ் அதிகாரிகள், வக்கீல்கள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.இவர் பூனைகளை செல்லமாக வளர்க்கும் பழக்கம் கொண்டவர், வீட்டில் 20க்கும் மேற்பட்ட வெவ்வேறு இனத்தை சேர்ந்த, 20 பூனைகளை தன் குழந்தை போல் பாதுகாத்து வந்துள்ளார். நேற்று அதிகாலை பூனைகளுக்கு பால் வாங்க அருகே உள்ள பால் பூத்திற்கு ராஜ்மோகன் சந்திரா, தன் மொபட்டில் சென்றார். பால் வாங்கி கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார்.

சிங்கமுக தீர்த்த குளம் எதிரே மறைந்திருந்த ஒரு கும்பல், திடீரென மொபட்டில் வந்த ராஜ்மோகன் மீது மிளகாய் பொடியை தூவினர். இதனால் நிலை குலைந்த அவர் மொபட்டிலிருந்து கீழே விழுந்தார். இந்த சந்தர்பத்தை பயன்படுத்திய மர்ம கும்பல் அவரை சரமாரியாக கத்தியால் வெட்டினர். ரத்த வெள்ளத்தில் அவர் அதே இடத்தில் பரிதாபமாக பலியானார். எஸ்.பி., ரம்யா பாரதி மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

முன்விரோதம்:

பல்வேறு போலீஸார், வக்கீல்கள் மற்றும் அதிகாரிகள் மீது இவர் பொது நல வழக்கு தொடர்ந்திருப்பதால், பாதிக்கப்பட்டவர்கள் முன்விரோதம் காரணமாக கூலிப்படையினரை வைத்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் போளூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயவேல் முன்னிலையில், திருவண்ணாமலை அருகே உள்ள தென்பள்ளிப்பட்டு இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த சந்திரசேகரன்(29), வட ஆண்டாப்பட்டை சேர்ந்த முருகன்(32), ஆகியோர், கொலை செய்ததை ஒப்புகொண்டு, நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.



Sunday, July 01, 2012

“ஃபேஸ் புக்கை” பயன்படுத்திய சட்ட மன்ற பெண் உறுப்பினரை அடித்து உதைத்த பொதுமக்கள்!

நம்ம ஊர் அரசியல்வாதிகள் நவீன அறிவியல் தொழில் நுட்பங்களை பயன்படுத்துவது மிகவும் அரிது. ஏனென்றால் எல்லாவற்றையும் கற்றுக்கொள்வது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல!!! இதுபோன்ற காலகட்டத்தில் ஒரு சட்டமன்ற பெண் உறுப்பினர் “ஃபேஸ் புக்” வரை சென்று தகவல் தொழில் நுட்பத்தை பக்குவமாக கையாண்டிருக்கிறார். அது பொறுக்காமல் பொதுமக்கள் இப்படியா அடித்து உதைப்பது. என்ன ஒரு அநியாயம்??

கரீம்கஞ்ச்: முதல் கணவரையும், அழகான மகளையும் விட்டு விட்டு, பேஸ்புக் மூலம் கிடைத்த தனது காதலரை மணந்து கொண்டு போய் விட்ட அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூமி நாத் மற்றும் அவரது 2வது கணவரையும் பொதுமக்கள் சுமார் 200 பேர் சரமாரியாக அடித்து உதைத்த செயலால் அஸ்ஸாம் மாநிலமே பரபரப்பாகியுள்ளது.

அஸ்ஸாமைச் சேர்ந்தவர் ரூமிநாத். இவர் முன்பு பாஜகவில் எம்.எல்.ஏவாக இருந்தார். பின்னர் கட்சி மாறி காங்கிரஸில் சேர்ந்து எம்.எல்.ஏவானார். போர்க்கோலா தொகுதி உறுப்பினராக இருக்கிறார். டாக்டரும் ஆவார்.

இவருக்கு ராகேஷ் சிங் என்ற கணவரும், 2 வயதான மகளும் உள்ளனர். இந்த நிலையில் பேஸ்புக் மூலம் ஜாகிர் உசேன் என்பவர் ரூமிக்கு நண்பரானார். இந்த நட்பு கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து தனது கணவர், மகள் ஆகியோரை விட்டுப் பிரிந்து பேஸ்புக் காதலருடன் ஓடி விட்டார் ரூமி நாத். இதனால் அஸ்ஸாமே பரபரப்பானது.

பேஸ்புக் காதலரை மணப்பதற்காக இஸ்லாமுக்கு மதம் மாறிய ரூமிநாத், அவரை மணம் புரிந்து கொண்டார். இது அஸ்ஸாமில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கரீம்கஞ்ச்சில் உள்ள ஒரு ஹோட்டலில் ரூமிநாத்தும், அவரது 2வது கணவரும் தங்கியிருக்கும் தகவல் தெரிந்து கிட்டத்தட்ட 200 பேர் அங்கு நள்ளிரவில் புகுந்தனர். திமுதிமுவன புகுந்த அவர்கள் ரூமிநாத்தின் அறைக் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

அங்கிருந்த ரூமிநாத்தையும், ஜாகிரையும் சரமாரியாக தாக்கினர். ரூமிநாத்தின் முகம், வயிறு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக அடித்தனர். இதில் அவருக்கு பெரும் ரத்தப் போக்கு ஏற்பட்டு விட்டது. அதேபோல ஜாகிருக்கும் அடி விழுந்தது. இதனால் பெரும் பரபரப்பானது.

தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். மக்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்ட ரூமிநாத்தையும், ஜாகிரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர்களுக்கு பெரிய அளவில் ஆபத்தில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுவரை யாரும் கைது செய்யப்பட்டதாக தெரியவில்லை.

இந்த தாக்குதல் சம்பவத்தை மாநில காங்கிரஸ் கட்சி கண்டித்துள்ளது.



இது அண்ணன்களின் அறுவடைக் காலம்!

கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவியர் கணவனையும் அவனது குடும்பத்தினரையும் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கவைத்துவிட்டு தங்கள் உல்லாசத்தை தொடர்வதுதான் பல காலமாக வழக்கமாக நடந்து வரும் விஷயம். இதுபோன்ற பொய் வரதட்சணை வழக்குகளில் அண்ணன்களும், தம்பிகளும் முதல் பொய் சாட்சியாக வந்து நிற்பார்கள். அதற்கு நல்ல உதாரணம் இங்கே சென்று பாருங்கள்:

வரதட்சணை வழக்கில் பொய் சாட்சி சொல்லும் அண்ணன்கள்-1

வரதட்சணை வழக்கில் பொய் சாட்சி சொல்லும் அண்ணன்கள்-2

இப்போது காலம் மாறிவிட்டதல்லவா? வல்லரசை நோக்கி நடைபோடும் இந்த நல்ல தருணத்தில் வழக்கங்களும் மாறும் அல்லவா? அதுதான் இது அண்ணன்களின் அறுவடைக் காலம். செய்தியை பாருங்கள் புரியும்.


சரமாரியாக கள்ளக்காதல்... தட்டிக் கேட்ட அண்ணனைக் கொன்ற தங்கைக்கு ஆயுள்!

ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 1, 2012 One India Tamil

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சரமாரியாக பலருடன் கள்ளக்காதல் கொண்டு திரிந்து வந்த தங்கையைத் தட்டிக் கேட்ட அண்ணன், தனது சொந்தத் தங்கையாலேயே சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். அந்தப் பெண்ணுக்கு தற்போது கோர்ட் ஆயுள் தண்டனை கொடுத்துள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே, சூரியமணல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராசாத்தி. இவருக்கு வயது 38 ஆகிறது. இவருக்கும் ஆசைத்தம்பி என்பவருக்கும் 20 வருடங்களுக்கு முன்பு கல்யாணம் செய்து வைத்தனர். ராஜா என்ற மகனும் உள்ளான்.

கல்யாணமாகி இத்தனை ஆண்டுகள் ஆன பின்னரும் ராசாத்தி பலருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தாராம். இவர் கள்ளத் தொடர்பு வைத்திருந்த நபர்கள் அனைவருமே சூரியமணல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில் தனது தங்கை தறி கெட்டுப் போவதை அறிந்த அண்ணன் ராஜேந்திரன், தங்கையைத் தட்டிக் கேட்டுள்ளார், கண்டித்துள்ளார். மேலும் காங்கேயன்குறிச்சிக்கு அனுப்பிவைத்து விட்டார்.

இந்தப் பின்னணியில் ராசாத்தியின் கணவர் ஆசைத்தம்பி வெளிநாட்டுக்கு வேலைக்குப் போய் விட்டார். அங்கிருந்து மனைவிக்கு பணத்தை அனுப்பி வைத்து வந்தார். இதைப் பயன்படுத்திய ராசாத்திக்கு வசதியாகிப் போய் விட்டது. பணத்தோடு, கள்ளத் தொடர்பு உறவுகளையும் சுதந்திரமாக அனுபவிக்க ஆரம்பித்தார். மேலும் சூரியமணல் கிராமத்தில் பெரிய வீடு கட்டி தனது கள்ளக் காதலர்களுடன் எந்த நேரமும் உல்லாசமாக இருக்க அவர் முடிவு செய்தார்.

இதை அறிந்த ராஜேந்திரன் கடும் கோபமடைந்தார். தங்கையைக் கண்டித்தார். தொடர்ந்து தனது அண்ணன் இடையூறாக இருந்து வந்ததால் கோபமடைந்தார் ராசாத்தி. அண்ணனை போட்டுத் தள்ள முடிவு செய்தார்.

2010ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி ஜெயங்கொண்டத்துக்கு வந்த ராசாத்தி, அங்குள்ள சந்தையில் அரிவாள் வாங்கி கொண்டு, மாலை தனது அண்ணன் வீட்டுக்கு சென்று தங்கினார். நள்ளிரவில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தபோது, ராசாத்தி, தன்னிடமிருந்த அரிவாளால் ராஜேந்திரனை சரமாரியாக வெட்டினார்.

சத்தம் கேட்டு தடுக்க வந்த அவர்களது தாய் கமலத்துக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. தலை, மார்பு என உடலின் பல்வேறு இடங்களிலும் அரிவாளால் வெட்டப்பட்ட ராஜேந்திரன், சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த அவரது அம்மா கமலம், ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இந்தக் கொலை வழக்கில் ராசாத்தி கைது செய்யப்பட்டார். அவர் மீதான விசாரணை அரியலூர் மாவட்ட கோர்ட்டில் நடந்தது. விசாரணையின் முடிவில் ராசாத்திக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.



“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.