இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, December 31, 2009

மனைவியருக்கு மட்டும் அரசாங்கத்தின் புத்தாண்டு சிறப்புப் பரிசு!

விவாகரத்து ஆன பெண்களுக்கும் பென்ஷன்

தினமலர் ஜனவரி 01,2010

புதுடில்லி: விவாகரத்து ஆன பெண்கள் பயன் பெறும் வகையில், அவர்களையும் விதவை பென்ஷன் திட்டத்தில் டில்லி அரசு சேர்த்துள்ளது. டில்லி மாநில அரசு, பொருளாதாரத்தில் பின்தங்கிய விதவைகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் பென்ஷன் வழங்கி வருகிறது. 2007ம் ஆண்டு முதல் இத்திட்டத்தின் கீழ் 33 ஆயிரம் பேர் பயன் பெற்று வருகின்றனர். நம்பிக்கை இழந்த நிலையில் நிறைய பெண்கள் உள்ளனர். அவர்களில், விவாகரத்து ஆன விதவைகள், குடும்பத்தில் இருந்து பிரிந்தவர்கள், கணவரால் கைவிடப்பட்டவர்களும் அடங்குவர்.

இவர்களின் நிலையை பரிசீலித்த மாநில அரசு, அவர்களையும் இந்த பென்ஷன் திட்டத்தில் சேர்க்க முடிவு செய்தது. அதன்படி, விவாகரத் தான ஏழை பெண்கள் மாதம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் பெற தகுதியுடையவர்கள் என்று அறிவித்துள்ளது. இதற்கு தகுதியாக அவர்கள் டில்லியில் குறைந்தது ஐந்து ஆண்டுகள் வசித்து இருக்கவேண்டும். வயது வரம்பாக 18 முதல் 60 வயது வரை இருக்க வேண்டும் என்றும், அவர்கள் வேறு எந்த பொதுத்துறை நிறுவனத்திலும் பென்ஷன் பெறாதவர்களாக இருக்கவேண்டும் போன்ற விதிமுறைகளை வகுத்துள்ளது. இவர்கள் பென்ஷன் பெற்று 60 வயதை அடையும் போது, தானாகவே முதியோர் பென்ஷன் திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள் ஆவார்கள் என்று அறிவித்துள்ளது.

====================================

ஆகா! என்ன அருமையான புத்தாண்டுப் பரிசு!

ஒரு பக்கம் குடும்பங்களை சிதைக்கும் தவறான சட்டங்களான IPC 498A, Dowry Act, Domestic Violence Act போன்றவற்றை எந்த ஒரு வரைமுறையும் இல்லாமல் பெண்கள் கையில் கொடுத்து விட்டு அவர்கள் அதை தவறாகப் பயன்படுத்திப் பொய் புகார் கொடுத்த பிறகு எந்தக் கணவர் இது போன்ற மனைவியுடன் சேர்ந்து வாழ நினைப்பார்.


பிறகு இவர்களுக்கு கணவனால் கைவிடப்பட்ட அபலைப்பெண் என்று சிறப்பு அந்தஸ்த்து வழங்கி மாதாந்திர உதவித்தொகை வழங்க முடிவு செய்திருப்பது எவ்வளவு ஒரு பெரியமனதுடன் செய்யும் செயல். அதாவது கணவர் உயிரோடு இருக்கும் போதே பெண்களை விதவைகள் லிஸ்ட்டில் சேர்த்து அவர்கள் திருமணமானவரா அல்லது திருமணமாகாதவரா அல்லது விதவையா என்று எதிலுமே இல்லாமல் ஒரு இரண்டுங்கெட்டான் நிலைக்குத் தள்ளி பிறகு அவர்களைப் பார்த்து பரிதாபப்படும் செயலுக்குப் பெயர் தான் "பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுவது" என்று சொல்லப்படும் பழமொழியின் அர்த்தமோ?


விரைவில் அனைத்து மாநிலங்களிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தும் சூழ்நிலைதான் இப்போது இருக்கிறது.




அப்பாவி போலிஸின் கதை - 3

இதற்கு முன்.........

போலீஸ் என்றாலே பொது மக்களிடம், மிகுந்த வெறுப்பும், அவநம்பிக்கையுமே தோன்றி நிற்கிறதே... இந்த நிலைக்கு காரணம் என்ன?

அப்பாவி போலிஸ் (பகுதி - 1)
அப்பாவி போலிஸ் (பகுதி - 2)

இனி அப்பாவி போலிஸ் பகுதி - 3


அப்பாவி போலிஸ் பாவம். எப்படியெல்லாம் மாட்டிக்கொள்கிறார்கள் பாருங்கள். இவர்களின் வசதிக்காகவே இப்போது புதிய சட்டம் வேறு வரப்போகிறதாம். இனி எல்லா புகார்களையும் முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்து விசாரிக்கவேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது. இதைக் கேள்விப்பட்டவுடன் போலிஸ் கொஞ்சம் அதிகமாகவே உணர்ச்சிவசப்பட்டுவிட்டார்கள் போலுள்ளது. கஞ்சா கேசில் 1-வது படிக்கும் 5-வயது சிறுவனை சிறையிலடைக்க கிளம்பிவிட்டார்கள்.


இந்தியாவில் சட்டம் போலிஸுக்கு ரொம்ப வசதியாகவே இருக்கிறது. பதினெட்டு வயதிற்கு மேலுள்ளவராக இருந்தால் கற்பழிப்பு அல்லது பாலியல் பலாத்காரக் கேசு, 18-க்கு கீழிருந்தால் கஞ்சா கேசு. திருமணமானவராக இருந்தால் வரதட்சணை கேசு. இந்த கேசுகள் எல்லாம் சாதாரண குடிமக்களுக்கு மட்டுமே.


நல்ல வருமானம் தான். இந்தியப் பொருளாதாரத்தை யாரும் அசைக்க முடியாது.


ஐந்து வயது சிறுவன் கஞ்சா வழக்கில் கைது: அன்னூர் போலீஸ் கூத்து

தினமலர் ஜனவரி 01,2010


கோவை: பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவனை, கஞ்சா வழக்கில் கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, சிறுவன் விடுவிக்கப்பட்டான். கோவை, அன்னூரைச் சேர்ந்தவர் சகாதேவன்; இவரது மனைவி லட்சுமி(40). இவரை கஞ்சா வழக்கில் அன்னூர் போலீசார் சமீபத்தில் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். இவரது மகன் சூர்யா(5); அன்னூர் துவக்கப்பள்ளியில் முதல் வகுப்பு படிக்கிறான். நேற்று முன்தினம் மதியம் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அங்கு சென்ற அன்னூர் போலீசார், இச்சிறுவனை கஞ்சா வழக்கில் கைது செய்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.

அதன் பின், இரவு 11.00 மணிக்கு சிறுவனை, சிறார் கோர்ட் நீதிபதி (பொறுப்பு) சத்தியமூர்த்தியின் வீட்டுக்கு அழைத்துச் சென்று ஆஜர்படுத்தினர். சிறுவனை பார்த்த மாஜிஸ்திரேட் அதிர்ச்சி அடைந்து, விசாரித்தார். சிறுவன் கஞ்சா விற்றதாக போலீசார் தெரிவித்தனர். சிறுவனை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்க வேண்டும் என்றால் வயது சான்றிதழ் வேண்டும் எனவும், மறுநாள் காலையில் கோர்ட்டுக்கு அழைத்து வருமாறும் மாஜிஸ்திரேட் தெரிவித்துள்ளார்.

இதன்படி நேற்று, சிறுவனை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், வயது சான்றிதழ் தாக்கல் செய்தனர். சூர்யாவுக்கு எட்டு வயது என குறிப்பிடப்பட்டிருந்தது. இரவோடு இரவாக பெற்ற வயது சான்றிதழை பார்த்த மாஜிஸ்திரேட் அதிருப்தி அடைந்தார். சிறுவனின் பள்ளிச் சான்று, வளர்ச்சி குறித்த மருத்துவச் சான்று, கஞ்சா விற்றதற்கான ஆதாரம் ஆகியவற்றையும் தாக்கல் செய்ய மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். சிறுவனின் தந்தையையும் அழைத்து வர உத்தரவிட்டார். சிறுவனை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்க முடியாது எனவும் தெரிவித்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், சிறுவன் சூர்யாவை தற்காலிகமாக விடுவித்துவிட்டனர்.

இது குறித்து வக்கீல் ஒருவர் கூறுகையில், "கஞ்சா விற்ற வழக்கில் ஐந்து வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். அதற்கான ஆதார ஆவணங்கள் மற்றும் சான்றிதழை சமர்ப்பிக்க தவறியுள்ளனர். சிறுவர்களை கடும் குற்ற வழக்கில் கைது செய்யும் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நெறிமுறைகளை போலீசார் அறியாதது, வியப்பாக உள்ளது' என்றார்.

Wednesday, December 23, 2009

ஆடு நனைகிறதே என்று ஓலமிடும் ஓநாய்கள்


புதுடில்லி:
பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தடுப்பு சட்ட அமலாக்கம் மந்தமாக இருப்பதாக கருதுவதை அடுத்து அதை கண்காணிக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தை செயல்படுத்த தொடங்கி, மூன்றாண்டுகள் ஆகிவிட்ட போதும், அதன் செயல்பாடு மந்தமாக இருப்பதாக, மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் முன் அறிக்கை வெளியிட்டார். வக்கீல்கள் குழு மற்றும் சர்வதேச பெண்கள் ஆராய்ச்சி மையம் இணைந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு நடத்தி, இந்த அறிக்கையை தயாரித்தது.

இதை பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் தடுப்பு சட்டத்தின் மூன்றாவது மாநாட்டில், ஜனாதிபதி பிரதிபா பாட்டீலிடம் சமர்பிக்கப் பட்டது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தை கண்காணிக்க வேண்டியது அவசியம். மேலும், வழக்குகளை, சீக்கிரமாக முடிக்க, விரைவு கோர்ட் அமைக்கப்பட வேண்டும். இது தொடர்பான நிறுவனங்கள், போதிய கவனம் செலுத்தாததால், பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனை மற்றும் கோர்ட்டுகளில், அக்கறையின்றி கவனிக்கப்படுகின்றனர். இன்னும், சில மாநிலங்களில், இந்த சட்டத்திற்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. இதனால், பெண்கள் தொடர்பான வரதட்சணை கொடுமை வழக்குகள் பல நிலுவையில் உள்ளன. எனினும், பல மாநிலங்களிலும், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலங்களில் குறிப்பாக ஆந்திராவில், வரதட்சணை வழக்குகளின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த அறிக்கையை தொடர்ந்து, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் செயல்பாட்டை கண்காணிக்குமாறு வலியுறுத்தினார். இதுகுறித்து, மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூறுகையில், "பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் சிறப்பான செயல்பாடு குறித்த கண்காணிப்பு கொள்கைகள் தொடர்பான வரைவு திட்டம் வகுக்க, திட்டக்கமிஷனுடன் விவாதிக்கப்பட்டு வருகிறது. குடும்ப வன்முறைகள் குறித்து கண்காணிக்க, முழு நேர சமூக பணியாளர்கள் தேவை. அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


=======================================


குடும்பங்கள் சிதைவதில் ஏன் தாமதம் என்று அரசு வருத்தப்படுகிறது போலும்! ஏற்கனவே உள்ள தவறான வரதட்சணை தடுப்புச்சட்டங்களும், IPC 498A போன்ற சட்டங்களும் தவறாகப்பயன்படுத்தப்பட்டு பல குடும்பங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. இதை ஜனாதிபதியே ஒரு முறை கூறியிருக்கிறார். நேற்றைய செய்தியில் கூட பார்த்தீர்களா மாதத்திற்கு 100 விவாகரத்து வழக்குகள் கோவை நீதிமன்றத்தில் மட்டும் குவிந்திருப்பதாக செய்தி வந்திருக்கிறது. செய்தியை இங்கே காண்க:
(கசக்கிறது திருமண பந்தம் : கழற்றி விட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் துடிப்பு) .

ஆனால் சட்ட அமைச்சரோ குடும்பவன்முறை தடுப்புச்சட்டம் என்கின்ற தொழில் மந்தமாக இருப்பதாக வருத்தம் தெரிவித்திருக்கிறார். தொழில் மந்தமாக இருப்பதாக இவர்கள் வருத்தப்படும் இந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் "குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின்படி பெண்கள் எப்போதும் பாதிக்கப்படுபவர்களாகவும், ஆண்கள் எப்போதும் குற்றவாளிகளாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது. அதனால் எந்தப் பெண்ணும் தன் குடும்பத்திலுள்ள எந்த ஒரு ஆணுக்கெதிராகவும் (தந்தை,சகோதரன் உட்பட) குடும்ப வன்முறைச் சட்டத்தைப் பயன்படுத்தி பொய்யான புகார் கொடுக்கலாம்." ஆனால் அதே சமயம் ஒரு பெண் குடும்பத்திலுள்ள எந்த ஆணுக்கு வேண்டுமானாலும் எத்தகைய வன்முறையையும் இழைக்கலாம். அப்படி பாதிக்கப்படும் ஆணுக்கு சட்டத்தில் எந்த ஒரு பாதுகாப்பும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அப்படி குற்றம் புரியும் பெண்ணை தண்டிக்க சட்டமே கிடையாது.
அதை உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தில் வெளிப்படையாகக் காட்டியிருக்கிறார்கள்.



இப்படி பெண்களுக்குத் தவறான சட்டங்கள் என்னும் தவறான ஆயுதங்களை கையில் கொடுப்பதால் பல குடும்பங்கள் விவாகரத்தில் போய் முடிகின்றன. அதில் பாதிக்கப்படுவது ஒரு பாவமும் அறியாத குழந்தைகள்.


அரசாங்கத்தின் இது போன்ற தவறான சட்டங்களுக்குள் பல தவறான உள்நோக்கங்கள் இருக்கின்றன. அவை என்னவென்றால்:

  • இப்போது நாட்டில் பெண்கள் கொடுமைப்படுத்தப்படுவதாகக் கூறிக்கொண்டு அவர்களின் வளர்ச்சிக்கு நிதி திரட்டுவதாக வெளிநாடுகளில் பிச்சையெடுக்கும் ஒரு தொழில் நடந்து கொண்டிருக்கிறது.
  • பெண்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள இது போன்ற தவறான சட்டங்களால் அவர்களே தங்களின் வாழ்க்கையை அழித்துக்கொண்டு கடைசியில் விவாகரத்தில் தான் இவர்களின் வாழ்க்கை போய் முடியும்.
  • அப்போது பல குழந்தைகள் நாட்டில் அனாதைகளாக தாய், தந்தை, தாத்தா, பாட்டி போன்ற உறவுகள் இல்லாமல் அனாதைகளாகத் திரிவார்கள்.
  • பிறகு இப்போது பெண்களுக்கு ஒரு அமைச்சரகம் இருப்பது போல இந்த அனாதைகளுக்காகவும் ஒரு அமைச்சரகம் ஏற்படுத்தி ஒரு அமைச்சரை பணியமர்த்தலாம். அதற்குத் தனியாக ஆண்டுதோறும் "நிதி ஒதுக்கலாம்".
  • ஒவ்வொரு மாநிலத்திலும் இது போன்ற விவாகரத்துக்களால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்காக ஒரு தனிவாரியம் அமைத்து "நிதி ஒதுக்கலாம்".
  • அனாதை குழந்தைகளைக்காட்டி வெளிநாடுகளில் நிதியுதவி கேட்டு தங்களது கஜானாவை நிரப்பிக்கொள்ளலாம்.
  • இந்த அனாதைகளுக்கு உதவி செய்வதாக பல அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் காளான்கள் போல முளைத்து நிதிதிரட்டலாம்.
இவைதான் இது போன்ற தவறான பெண்கள் பாதுகாப்புச் சட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் கொடிய உண்மை. இல்லையென்றால் யாராவது தெரிந்தே தவறான சட்டங்களை இயற்றி அப்பாவிகள் பலியாவதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பார்களா?

கோடிக்கணக்கான வயதான தாய்மார்களும், திருமணமாகாத பல சகோதரிகளும், சிறுமிகளும் பொய்யான வரதட்சணை வழக்குகளில் சிக்கி சிறையில் அடைபட்டு, அவமானப் படுத்தப்பட்டு, நீதிமன்றங்களில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

உண்மையாகவே பெண்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால் இவர்களையும் பாதுகாக்க ஏன் எந்தவித சட்டங்களும் இயற்றப்படவில்லை? சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தி பெண்களை இழிவு செய்வோரை தண்டிக்க அரசாங்கம் ஏன் முன்வரவில்லை? யோசித்துப் பாருங்கள்.

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதைதான் இது போன்ற பெண்கள் பாதுகாப்பு சட்டங்களுக்குப் பின்னால் உள்ள உண்மை. பெண்கள் ஏதோ அப்பாவிகள் போலவும் அவர்களைக்காக்க பல சட்டங்கள் வேண்டும் என்று அவர்களை பலிஆடுகளாக்கி ஒரு மிகப்பெரிய ஓநாய்க்கூட்டமே சதிவலை விரித்துக் காத்துக்கொண்டிருக்கிறது. இதைப் புரிந்துகொண்டால் பெண்களின் வாழ்க்கைத் தரம் உயரும். பல குடும்பங்கள் சிதையாமல் பாதுகாக்கப்படும். பல குழந்தைகள் தாய் தந்தையற்ற அனாதையாகாமல் நல்ல குடிமக்களாக உருவாக முடியும்.





Tuesday, December 22, 2009

நினைத்ததை சாதித்துவிட்ட அரசாங்கம்

கசக்கிறது திருமண பந்தம் : கழற்றி விட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் துடிப்பு
தினமலர் டிசம்பர் 23,2009

கோவை குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. திருமண உறவை அடியோடு அறுத் துக்கொள்ள 1,225 தம்பதிகள் வழக்கு தொடுத்து "டைவர்ஸ்' பெற காத்திருக்கின்றனர்.

பொருளாதார வேட்கையும், நாகரீக மோகமும் நகர வாசிகளின் வாழ்க் கையை ஏறத்தாழ இயந்திர மயமாகவே மாற்றி விட்டன. முன்னோர் களால் காலங்காலமாக பேணி பாதுகாக்கப்பட்டு வந்த கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் உறவுக் கூடுகள் உடைந்து நொறுங்கி வருகின்றன. குடும்பத்தை கடந்து, மனித உறவுகளை உறுதிப்படுத்துவதாக தற்போதைய நாகரீக வாசிகளின் வாழ்க்கை முறை இல்லை. சமூகம் சார்ந்த வாழ்க்கை தடம் புரண்டு, பொருளாதாரம் சார்ந்த வாழ்க்கை தலைதூக்கி உள்ளது. "அவரவர் குடும்பம், அவரவர் வாழ்க்கை' என, வெறும் வரவு - செலவு கணக்காக மட்டுமே உறவு முறைகள் பார்க்கப்படுகின்றன. விளைவு, தனிக்குடும்ப வாழ்க்கை; அதனால், தலைதூக்கும் பிரச்னைகள். தகராறுகளை தங்களுக்குள் பேசி தீர்த்து கணவன் - மனைவி உறவை தொடர முடியாமல் கோர்ட் படியேறும் அவலம். பெற்றோர், அக்காள், தங்கைகளின் உறவை அறுத்து தனிக்குடித்தன முறைக்கு பலரும் மாறிவிட்டதால், சிறுசிறு தவறுகளை சுட்டிக் காட்டவும், அறிவுரை கூறி நல்வழிப்படுத்தவும் அருகில் பெரியவர்கள் இல்லை.


உடையும் உறவுகள்:
கூட்டுக்குடும்ப முறையில் இருக்கும் சுய கட்டுப்பாடுகள், தனிக்குடித்தனம் நடத்தும் தம்பதியினரிடம் குறைந்து வருவதை, கோர்ட்டுக்கு வரும் வழக்குகள் உறுதிப்படுத்து கின்றன. வேலைக்கு செல்லும் கணவன், மனைவி இடையே ஏற்படும் ஈகோ, தமது துணை தவிர்த்து பிறருடனான கள்ள உறவு, நடத்தையில் சந்தேகம், பாலியல் உறவில் நிலவும் மனக்குறைகள் என, பல விதமான காரணங்களுடன் அதிக வழக்குகள் கோர்ட் டுக்கு வருகின்றன. கணவனோ அல்லது மனைவியோ விவாகரத்து வழக்கை கோர்ட்டில் தாக்கல் செய்கின்றனர். கோவையில் ஒரு குடும்ப நல நீதிமன்றம் உள்ள போதிலும், மேலும் ஒரு நீதிமன்றம் தேவை, என்ற அளவுக்கு வழக்குகளின் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


விவாகரத்து தவிர, ஜீவனாம்சம் கேட்பு, குழந்தை பராமரிப்பு குறித்த வழக்குகளும் அதிகம் தாக்கலாகின்றன. கோவை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் உள்ள மற்ற எல்லா கோர்ட்களையும் விட, குடும்ப நீதிமன்றத்தில் பதிவாகும் வழக்குகளே அதிகம். கடந்த 2008ல் இக்கோர்ட்டில் ஜனவரி முதல் டிசம்பர் வரை விவாகரத்து கோரி 1,139 வழக்குகள் பதிவாகின. ஆனால், இந்த ஆண்டு, இது வரை 1,225 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது, ஒவ்வொரு மாதமும் 100 பேர் விவாகரத்து கேட்டு கோர்ட் டுக்கு வருகின்றனர். ஆண்களை விட பெண்கள் தான் விவாகரத்து, ஜீவனாம்சம் கேட்டு அதிகளவில் வழக்கு தொடர்கின்றனர்.


கணவரின் கள்ளத்தொடர்பு, மாமனார் - மாமியார் "டார்ச்சர்', தனிக்குடித்தனம் நடத்த வராதது, போன்ற காரணங்கள் விவாகரத்து கோரும் பெண்கள் தரப்பில் கூறப்படுகின்றன. இதேபோல், மனைவி நடத்தை மீது சந்தேகம், கள்ள உறவு, ஈகோ உள்ளிட்ட காரணங்களை ஆண்கள் முன் வைக்கின்றனர். இளம்தம்பதிகள் பெரும்பாலும், விவாகரத்து தீர்மானத்துடன்தான் கோர்ட் படியேறுகின்றனர். வழக்கு விசாரணை துவங்கும் முன், கணவன் - மனைவிக்கு தனித்தனியே "கவுன்சிலிங்' நடத்தி, "முடிவை மாற்ற' அறிவுரை வழங்கப்படுகிறது. ஆனாலும், முடிவில் மாற்றமின்றி "டைவர்ஸ் ஒன்றே குறி' என்ற ரீதியில் உறுதியாக உள்ளனர். இதனால், வழக்குகள் விசாரணைக்கு எடுத் துக் கொள்ளப்படுகின்றன.


மற்ற துறைகளில் பணியாற்றுவோரை காட்டிலும், தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் பணியாற்றுவோர் அதிகளவில் விவகாரத்து மனு தாக்கல் செய்கின்றனர். சிலர் திருமணமாகி சில மாதங்களிலேயே உறவை முறித்துக் கொள்ளும் தீர்மானத்தில் இறங்கிவிடுகின்றனர். மேற்கண்ட காரணங்களால், ஒவ்வொரு ஆண்டும் கோர்ட்டில் பதிவாகும் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருகின்றன. கோவையில் மட்டுமல்லாது, பொள் ளாச்சி, மேட்டுப்பாளையம், உடுமலை, திருப்பூர் பகுதியிலுள்ள சப்-கோர்ட்களிலும் விவாகரத்து வழக்குகள் அதிகளவில் பதிவாகி வருகின்றன. வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போவதால் கோவையில் மேலும் ஒரு குடும்ப நல நீதிமன்றம் அமைக்க வேண் டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாக வக்கீல்கள் தெரிவித்தனர்.


கோவையைச் சேர்ந்த வக்கீல் ராஜேந்திரன் கூறியதாவது:
நாகரீக உலகில் மாறி வரும் குடும்ப கலாசார போக்கு கவலையளிப்பதாக உள்ளது. தனது துணைக்கு துரோகமிழைத்து வேறு துணையை நாடுவது, பிரச்னை தலை தூக்கும்போது தம்பதியர் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து போகும் மேம்பட்ட மனப்பாங்கு இல்லாதது, தேவையற்ற "ஈகோ' வை வளர்த்துக் கொள்ளுதல் போன்றவையே விவாகரத்து கோரும் வழக்குகள் அதிகரிக்க முக்கிய காரணம். விவகாரத்து பெறுவோர், பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி கவலைப் படுவதாக தெரியவில்லை. இதனால், சமூகச் சூழலும் மாறும் அபாயமிருக்கிறது. இவ்வாறு, ராஜேந்திரன் தெரிவித்தார்.


==================================



கூட்டுக்குடும்பங்கள் இல்லாததால் அறிவுரை கூற வயதில் மூத்தவர்கள் வீட்டில் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் அவர்கள் பெரும்பாலும் பொய் வரதட்சணை கேசுகளில் சிக்கி அலைந்துகொண்டிருக்கிறார்கள். இந்த உண்மை காவல்துறை, நீதித்துறை, அரசாங்கம் ஆகிய அனைவருக்கும் தெரியும்.

இந்தியாவில் இப்படி குடும்பங்கள் அழிந்து சின்னா பின்னமாவதற்கு முக்கிய காரணம் பெண்களின் மாறிவரும் கொடுர மனநிலையும் அதைத் தூபம் போட்டு வளர்க்கும் அரசாங்கமும், தவறான சட்டங்களும், காவல் துறையும், சில வழக்கறிஞர்களும், நீதித்துறையும் தான்.


ஒரு பெண் தவறாக சட்டத்தைப் பயன்படுத்தி தனது கணவரின் குடும்பத்தின் மீது அபாண்டமான பழிகளை போடும் போது அதில் உள்ள உண்மைத் தன்மையை ஆராயாமல் தங்களுக்குக் காசு கிடைக்கிறது என்பதற்காக அப்பாவிகளின் குடும்பத்தைக் கைது செய்வது காவல் துறை. அதற்குப் பொய்யான புகார்கள் எழுதித்தருவதும் சில வழக்கறிஞர்கள் தான்.

ஒரு பெண் காவல்நிலையத்தில் வந்து புகார் கூறினால் அது நம்பத்தக்கதா என்று கூட காவல் துறை கவலைப்படுவதில்லை. அதற்குப் பிறகாவது ஒழுங்கான விசாரணை செய்து சரியான அறிக்கையும் அவர்கள் நீதிமன்றத்திற்கு அனுப்புகிறார்களா என்றால் அதுவும் கிடையாது.

ஒரு பெண் காவல் நிலையத்தில் கணவருக்கெதிராகவும் அவரது குடும்பத்திற்கெதிராகவும் பொய்யான புகார் கொடுத்தபிறகு எந்தக் கணவர் அந்தப் பெண்ணுடன் வாழ நினைப்பார்?

இந்தியத்தலைமை நீதிபதி இந்த அவலத்தை பல முறை எடுத்துச்சொல்லியும் அரசாங்கம் அதற்குச் செவி சாய்க்கவில்லை. ஏனென்றால் பொய் வரதட்சணை கேசுகளை கணக்குக் காட்டி பெண்களைக் காப்பாற்றுவதாகச் சொல்லி வெளிநாடுகளில் பிச்சை எடுத்து பல நிறுவனங்கள் தொழில் நடத்திக்கொண்டிருக்கின்றன. அப்படி இருக்கும் போது அப்பாவிப் பெண்களை இந்த அழிவிலிருந்து காப்பாற்ற யாருக்குத்தான் மனம் வரும்?

குடும்பங்களை பாதுகாக்க அரசாங்கத்திற்கு தேவை பணம் என்பது மறைந்து குடும்பங்களை அழித்து பணம் தேடும் நிலையில் அரசாங்கம் மாறியிருக்கிறது.

வழக்குகளை விசாரிக்க நீதிமன்றம் தேவை என்ற நிலை மாறி நீதிமன்றங்களில் இருக்கும் ஊழியர்களுக்கு வருமானம் கிடைப்பதற்காகவே பல வழக்குகள் உருவாக்கப்பட்டு நடத்தப்படுகின்றன.

வழக்குகள் வேண்டும் என்பதற்காக ஒருவரை குற்றம் செய்யுமாறு சொல்லமுடியாது அதனால் குடும்பங்களை சிதைத்து வழக்குகளை எளிதாக உருவாக்கமுடியும். பொய் வரதட்சணை கேசுகளை போடச் செய்வதன் மூலம் கிரிமினல் நீதிமன்றத்திற்கு வழக்குகள் கிடைக்கும். ஒரு பெண் பொய் கிரிமினல் வழக்குப் போட்ட பிறகு தானாக அடுத்த கட்டமான விவாகரத்து வழக்கு தொடரும். இதன் மூலம் சிவில் நீதிமன்றங்களுக்கும் வருமானம்.

வழக்கறிஞர்களுக்கு சொல்லவே தேவையில்லை வருமானம் கிடைக்கத் தேவை ஏதாவது ஒரு வழக்கு (Proceedings against actor Vijay). காவல்துறைக்குத் தேவை அப்பாவிகளை கைது செய்ய ஏதாவது ஒரு காரணம். அதன் மூலம் கைது, ஜாமின், விசாரணை என தொடர்ச்சியான வருமானம் இருக்கிறது.

பார்த்தீர்களா நாட்டில் உள்ள உண்மையான குற்றவாளிகளையும், ஊழல் செய்பவர்களையும், தீவிரவாதிகளையும் தேடிப்பிடித்து கடமையாற்றுவதை விட பல குடும்பங்களை சிதைப்பது மிகவும் எளிது. அதன் மூலம் வழக்குகளை உருவாக்கி அரசு இயந்திரத்தை இயக்கி பணப்புழக்கத்தை உருவாக்குவதும் எளிது.

எந்தவகையான கடுமையான உழைப்பும் காவல் துறைக்கோ, நீதித்துறைக்கோ தேவையில்லை. அதனால் தான் இந்தக் குடும்ப அழிப்புத் தொழில் அமோகமாக நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்ச நாளில் குடும்பபங்களை அழிப்பதே தேசியத் தொழிலாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தத் தொழிலில் உள்ள நுணுக்கங்களைப் பற்றி எழுத ஆரம்பித்தால் நேரம் போதாது, எழுதுவதற்கு இந்த இணைய தளமும் போதாது.

இதன் மூலம் அனைவருக்கும் ஒருவகையில் வருமானம் இருக்கிறது. அது குடும்பங்களை அழித்து, குழந்தைகளை அனாதையாக்கி நடுத்தெருவில் நிற்கவைத்துக் கிடைத்தாலும் கவலையில்லை. ஏனென்றால் அழிவது உங்களுடைய குடும்பமும் குழந்தைகளும் தானே.


அரசாங்கத்தின் தவறான சட்டங்கள் பெண்களை தவறான பாதையில் செல்லத் தூண்டுகிறது. அப்படியே பெண்களுக்கு அது தெரியவில்லை என்றாலும் பல போலியான வழக்கறிஞர்கள் அவர்களைத் தூண்டி பொய் வழக்குகளை போடவைக்கிறார்கள். இது போன்ற பொய்வழக்குப் போடும் பெண்களுக்கு இந்திய சட்டத்தில் எந்த வித தண்டனையும் கிடையாது. இதைப் பார்க்கும் பல பெண்கள் தாங்களும் ஏன் இதுபோல செய்யக்கூடாது என்று எண்ணி ஏதோ புரட்சி செய்வதாக நினைத்து பல அற்பக் காரணங்களுக்காக பொய்கேசு போடுவதும், விவாகரத்து வேண்டும் என்றும் இப்போது திரிந்துகொ
ண்டிருக்கிறார்கள்.

இது போன்ற வழக்குகளில் சிக்கும் அப்பாவி குழந்தைகளின் அவலநிலைக்கு காரணமான தவறான சட்டமும் அதை இயற்றி செயல்படுத்துபவர்களும் ஒரு நாள் இந்தப் பாவங்களுக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும். நீங்கள் இன்று செய்தித்தாள்களில் படிக்கும் ஆந்திர மாநிலக் கலவரம் கூட அந்தப் பாவங்களின் ஒரு வெளிப்பாடாக இருக்கலாம் . இன்னும் எத்தனேயோ? அப்பாவிகளின் சாபம் தவறாமல் சுட்டெரிக்கும். இது வரலாறு கண்ட உண்மை.
==============================

அரசாங்கத்தால் வளர்க்கப்பட்டுவரும் குடும்ப அழிவுமுறை சட்டங்களால் பலகுடும்பங்கள் சிதைந்து கீழுள்ள செய்தியில் சொல்லப்பட்டது போல பல குழந்தைகள் உருவாகிக்கொண்டிருக்கின்றனர். எதிர்காலத்தில் இது போல பல செய்திகளை காணும் பாக்கியம் இந்த சமூகத்திற்கு இருக்கிறது.

3 பெண்களை கொன்ற 'சைக்கோ' வாலிபர் கைது
ThatsTamil புதன்கிழமை, டிசம்பர் 16, 2009


தர்மபுரி: பெற்றோரின் தவறான நடத்தையாலும் சினிமாவின் தாக்கத்தாலும் பாதிக்கப்பட்ட 22 வயது வாலிபர் இதுவரை மூன்று பெண்களை கற்பழித்து, கொடூரமாக கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் கடத்தூரை சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மனைவி குண்டுலட்சுமி. வயது 36. கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்த இவர் கடந்த வாரம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, முள் புதரில் பிணமாகக் கிடந்தார்.


போலீசார் விசாரணை நடத்தியதில் சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியம் உப்பாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி (22), குண்டுலட்சுமியை தனது கூட்டாளிகளுடன் கற்பழித்து, கத்தியால் குத்தி கொலை செய்திருப்பது தெரியவந்தது.


வேலுச்சாமியிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மேலும் பல கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவங்களில் தொடர்பு கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


வத்தலகுண்டைச் சேர்ந்த நர்ஸ் பிரேமா, திண்டுக்கல் ஹோட்டலில் வேலைபார்த்த அழகம்மாள் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதன் பிண்ணனியில் வேலுச்சாமி இருந்துள்ளார்.


வேலுச்சாமியுடன் அவரது கூட்டாளிகளான உப்பாரப்பட்டிசேர்ந்த வெங்கடாசலம் (24), சேட்டு (19) ஆகிய 2 பேரையும் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இளம் வயதில் பெற்றோர் பிரிந்து சென்றதும், சரியான அன்பு காட்டப்படாததுமே இந்த இளம் வயதில் வேலுச்சாமி கொடூர கொலைகளில் ஈடுபட முக்கிய காரணமாக இருந்திருக்கிறது என்று விசாரணை நடத்திய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் கூறினார்.

இளம் வயதிலேயே கற்பழிப்பு மற்றும் கொடூர கொலைகளில் ஈடுபட்ட வேலுச்சாமி குறித்து விசாரணையில் தெரியவந்தவை:


'வேலுச்சாமியின் சிறுவயதில் இருக்கும் போதே அவனின் தந்தையும் தாயும் பிரிந்துவிட்டனர். தந்தை வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். தாய் வேறு ஒருவருடனும் சென்றுவிட்டார்.


இதனால் இளம் வயதிலேயே அக்கம் பக்கத்தவர்களால் வேலுச்சாமி ஒதுக்கி வைக்கப்பட்டான். பெற்றோரின் நடவடிக்கையால் சமுதாயத்தில் அவனுக்கு ஏற்பட்ட அவமானம் மனதில் ஆழமாக பதிந்துபோனது.


தவறான நடவடிக்கையில் ஈடுபடும் பெண்கள் மீது வரவேண்டிய கோபம் திசைமாறி ஒட்டுமொத்த பெண்களையும் சிறுவயதில் இருந்தே அவன் வெறுப்புடன் பார்க்கத் தொடங்கினான்.

நாளாக நாளாக அந்த எண்ணம் வலுவாகி ஒரு சைக்கோ போலவே மாறிவிட்டான். `சிவப்பு ரோஜாக்கள்', `மன்மதன்' ஆகிய சினிமா படங்களில் வரும் காட்சிகள் அவனை பாதித்துள்ளது.

வேலுச்சாமி பெண்களுடன் பழகுவது போல நடித்து காட்டுப் பகுதிகளுக்கு அழைத்து சென்று கூட்டாளிகளுடன் சேர்ந்து கற்பழித்து கொலை செய்யத் தொடங்கினான் என்று போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.





காவலும், நீதியும் - இன்றைய நிலவரம்

ஆயுள் தண்டனைக் கைதிக்கு பதிலாகசிறையில் உள்ளவரை விடுவிக்க உத்தரவு
தினமலர் டிசம்பர் 23,2009

மதுரை:நெல்லை பாளை சிறையில், ஆயுள்தண்டனைக் கைதிக்கு பதிலாக உள்ளவரை, உடனடியாக விடுதலை செய்யும்படி, மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால உத்தரவிட்டது.மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த வக்கீல் சுரேஷ்குமார் தாக்கல் செய்த பொது நல வழக்கு:நெல்லை ராதாபுரம் அருகே, நயினார்குளத்தை சேர்ந்தவர் சுடலைமுத்து. இவர் சில ஆண்டுகளுக்கு முன் முத்துப்பட்டன் என்பவரை கொலை செய்தார். இதில் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து அவர், ஐகோர்ட் கிளையில் அப்பீல் மனு செய்தார். அவரை ஜாமீனில் விட, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. பின் அவரது மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், அவரை சிறையில் அடைக்க, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

சுடலைமுத்துவுக்கு பதிலாக, அவரது உறவினர் சிவக்குமார் சிறைக்கு சென்றார். நான்கு ஆண்டுகளாக அவர் சிறையில் உள்ளார். அவரை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது. இம்மனு, நேற்று நீதிபதிகள் ஆர்.ரகுபதி, ஆர்.சுப்பையா கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் செந்தூர்பாண்டியன், விசாரணையை ஜன., 6ம் தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும், என்றார். மனுதாரர் வக்கீல்கள் ரத்தினம், ஜின்னா ஆகியோர், போலீசார் தேவையில்லாமல் விசாரணையை தள்ளிவைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். அப்பாவி வாலிபர் தேவையில்லாமல் சிறையில் உள்ளார். அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும், என்றனர். அதை பதிவு செய்த நீதிபதிகள், சிறையில் உள்ள சிவக்குமாரை உடனடியாக விடுதலை செய்யும்படி, இடைக்கால உத்தரவிட்டனர். சிவக்குமாருக்கு நஷ்டஈடு வழங்குவது குறித்த விசாரணையை தள்ளிவைத்தனர்.


=========================

நான்கு ஆண்டுகளாக ஆள்மாறாட்டம் செய்து ஒரு ஆளை சிறையிலடைத்து வைத்திருக்கிறார்கள். இது தான் இன்றைய நிலைமை. இதுவே இப்படியென்றால் பொய் வரதட்சணை கேசுகள் எப்படி கையாளப்படும் என்று யோசித்துப்பாருங்கள். கிடைக்கின்ற அப்பாவிகள் எல்லாம் சட்டத்திற்கு முன் பலியாடுகள் தான். காப்பாற்றத்தான் மனிதாபிமானமுடைய மனிதர்கள் இல்லை.




உண்மை நிலையை உணர்ந்திருக்கும் நோபல் விஞ்ஞானி

இந்திய மாணவர்களின் அறிவியல் திறன் : நோபல் விஞ்ஞானி கருத்து
தினமலர் டிசம்பர் 23,2009

சென்னை : ""இந்திய மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்த, நான் வழிமுறைகளை சொல்வது சரியாக இருக்காது; அதற்கான பொறுப்பும் எனக்கு இல்லை,'' என நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.


பள்ளி கல்லூரி மாணவர்களிடையே, அடிப்படை அறிவியல் துறைகளில் ஆர்வத்தை ஏற்படுத்தவும், அவர்களது ஆய்வு நோக்கை மேம்படுத்தவும், சென்னை பல்கலையில் ஏ.எல். முதலியார் அடிப்படை அறிவியல் வளர்ச்சி மையத்தை ஏற்படுத்தியுள்ளது. நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் இம்மையத்தை நேற்று துவக்கி வைத்து, மாணவர்களின் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு, பரிசுகளை வழங்கி, அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.


அப்போது அவர் பேசியதாவது:
நோபல் பரிசு பெற வேண்டும் என்ற நோக்கம் மாணவர்களுக்கு தேவையில்லை; அறிவியல் படித்து, சிறந்த விஞ்ஞானியாக வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் போதுமானது. நோபல் பரிசு என்பது ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. நூறு விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளில், ஒன்றுதான் நோபல் பரிசுக்காக தேர்வு செய்யப்படுகிறது. இதனால், மீதம் உள்ள விஞ்ஞானிகள் திறமையற்றவர்கள் என்று கூற முடியாது. 1978ம் ஆண்டு முதல் எனது ஆராய்ச்சியை துவங்கினேன். ஆராய்ச்சிகளின் முடிவில், நோபல் பரிசு எனக்கு கிடைத்தது. இந்த பரிசு கிடைக்காவிட்டாலும், சிறந்த விஞ்ஞானி என்ற பெருமையை பெற்றிருப்பேன். இவ்வாறு வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் பேசினார்.


தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
வெளிநாடுகளில் அறிவியல் ஆய்வுகளுக்கு தேவையான வசதிகள் அதிகம் உள்ளன. அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு அதிகம் செலவிட வேண்டி வருகிறது. இந்தியாவிலும் சிறந்த அறிவியல் சோதனை மையங்கள் உள்ளன. சிறந்த விஞ்ஞானிகள் உள்ளனர். நான் சிறுவயதிலேயே, இங்கிருந்து சென்று விட்டதால், இங்குள்ள சூழலை அறிய முடியவில்லை. இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் ஆய்வுப்படிப்புகளில் ஈடுபடும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இந்திய மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்த நான் வழிமுறைகளை சொல்வது சரியாக இருக்காது; அதற்கான பொறுப்பும் எனக்கு இல்லை. இங்குள்ள அரசும், விஞ்ஞானிகளும்தான் இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.


வெளிநாட்டில் வசிக்கும் இந்திய விஞ்ஞானிகள் நாடு திரும்ப வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளார். சீனாவில், இதே போன்று விஞ்ஞானிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில், உலக நாடுகளில் வசித்த சீன விஞ்ஞானிகள் சீனா திரும்பியுள்ளனர். பிரதமரின் அழைப்பை ஏற்று, விஞ்ஞானிகள் இந்தியா திரும்பி பணிபுரிவதற்கு ஏற்ற அரசியல், அதிகார வர்க்க சூழல் அமைய வேண்டும். அப்படி உரிய சூழல் அமையுமானால், அவர்கள் இந்தியா திரும்புவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

===========================

இந்தியாவில் படித்தவர்களும், திறமையுள்ள பல வல்லுநர்களும் எந்தவகையான இழிநிலையில் தள்ளப்பட்டிருக்கிறார்களென்று இதிலிருந்து நன்றாகத் தெரிகிறதல்லவா?

குறிப்பாக அரசாங்க உதவியுடன் நடக்கும் சட்ட தீவிரவாதம் என்னும் பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கித்தவிப்பது பெரும்பாலும் நன்கு படித்த திறமையான பல்துறை வல்லுநர்களும், விஞ்ஞானிகளும், மருத்துவர்களும், பொறியாளர்களும் தான்.

பல கோடி புத்திசாலிகளின் அறிவும், திறமையும் இப்படி அரசாங்கத்தால் அவமானப்படுத்தப்பட்டு, வீனாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் போது சுயபுத்தியுள்ள எந்தவொரு திறமையானஅறிஞரும் தங்களுக்கு தற்போது வெளிநாடுகளில் உள்ள மரியாதையையும், மதிப்பையும், அவர்களுக்குக் கிடைக்கும் ஆதரவையும் விட்டுவிட்டு இந்த நாட்டிற்கு வருவதற்கு அஞ்சுவார்கள். இந்தியாவில் நடக்கும் இந்த அப்பாவிகளுக்கெதிரான சட்ட வன்முறை உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட ஒரு உண்மை.
யாராவது தெரிந்தே பாழுங்கிணற்றுக்குள் விழுவார்களா?




Sunday, December 20, 2009

அப்பாவி போலிஸ் (பகுதி - 2)

தினமலர் டிசம்பர் 21,2009
மதுரை : ஒருவரை போலீசார் கைது செய்யும்போது, 11 நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மதிக்காததால், போலீசார் தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்குகின்றனர்.

மதுரை மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர் உரிமையாளர் வெற்றிவேல் பாண்டியன் டிச.,17ல் துப்பாக்கி முனையில் கடத்தப் பட்டார். விசாரணையில், செக் மோசடி வழக்கில் ஆந்திரா போலீசார் உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அழைத்துச் சென்றது தெரியவந்தது. பின் "பேக்ஸ்' மூலம் அவர்கள், மதுரை போலீசாருக்குதகவல் தெரிவித்தனர். அதேபோல், திருட்டு நகை தொடர்பாக நகைக்கடை உரிமையாளர்களை விசாரணைக்காக, தகவல் தெரிவிக்காமல் போலீசார் அழைத்துச் செல்வது வழக்கம். இதைக் கண்டித்து உரிமையாளர்கள் கடையடைப்பு போராட் டங்களில் ஈடுபடுவதும், பின் போலீசார் சமரசம் செய்வதும் தொடர்கதையாக நடக்கிறது. இந்த குழப்பங்களுக்கு எல்லாம் காரணம், கைது செய்யும்போது சில நடைமுறைகளை போலீசார் பின்பற்றுவதில்லை. இதுகுறித்து, 1996ல் சுப்ரீம் கோர்ட் 11 கட்டளைகளை பிறப்பித்தது.

1. கைது செய்யும் போலீஸ் அதிகாரி, அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும்.
- ஆனால் மதுரையில் எந்தஅதிகாரியும் அடையாள அட்டையை பொருத்தி, கைது செய்ததாக தெரியவில்லை.


2. கைது செய்தவுடன், அங்கேயே "கைது குறிப்பு' தயாரிக்க வேண்டும்.
- சட்டம் ஒழுங்கு, குற்றவழக்குகளில் இந்த நடைமுறையை போலீசார் கண்டுகொள்வது இல்லை. லஞ்ச வழக்கில் மட்டும் சம்பவ இடத்தில் கைது குறிப்பு தயாரிக்கப்படுகிறது.


3. கைது செய்யும் தகவலை, உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும்.
- சாதாரண வழக்குகளில் கைது செய்தால் மட்டுமே, உறவினர், நண்பர்களுக்கு தகவல் தெரிவிக் கின்றனர்.


4. கைது செய்த விபரத்தை 12 மணி நேரத்திற்குள் உறவினர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
-"விசாரணை' என்ற பெயரில், போலீசார் தகவல் தெரிவிப்பதில்லை. இதனால் ஐகோர்ட்டில், போலீசிற்கு எதிராக "ஆட்கொணர்வு மனுக்கள்' தாக்கல் செய்வது அதிகரிக்கிறது.


5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிக்கும் உரிமை உண்டு, என்பதை கைதானவருக்கு தெரிவிக்க வேண்டும்.
- இந்த நடைமுறை போலீசிற்கு தெரிந்தாலும், "கைது செய்த விபரம் வெளியே தெரிந்துவிடும்' என்பதற்காக, கைதானவர்களுக்கு இந்த உரிமை வழங்கப்படுவதில்லை.


6. காவலில் உள்ள இடத்தில், கைது விபரம், கைது குறித்த தகவல், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட விபரம் மற்றும் எந்த அதிகாரி பொறுப்பில் உள்ளார் என்பதை பதிவேட்டில் குறிப்பிட வேண்டும்.
- பல ஸ்டேஷன்களில் இதை பின்பற்றுவதில்லை. உயர் அதிகாரிகளுக்கு மட்டும் தெரிவிக்கின்றனர்.


7. கைதானவரின் உடல் நிலையை பரிசோதிக்க வேண்டும்.
- போலீசாரின் "கவனிப்பில்' காயம் ஏற்பட்டால் மட்டுமே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். மற்றபடி, கைதானவருக்கு ஸ்டேஷனே கதி.


8. கைதானவரை 48 மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.
- இந்த நடைமுறையை பின்பற்றாததால்தான் "லாக்கப் மரணம்' நிகழ்கிறது.


9. கைது குறித்த ஆவணங்களை குற்றவியல் நடுவருக்கு அனுப்ப வேண்டும்.
- கோர்ட் கண்டிப்பிற்கு ஆளாகக் கூடாது என்பதற்காக இந்நடைமுறையை மட்டும் போலீசார் பின்பற்றுகின்றனர்.


10. கைதானவரை விசாரிக்கும்போது வக்கீல் உடன் இருக்க வேண்டும்.
-பிரச்னைக்குரிய வழக்குகளில் மட்டும் வக்கீல்களைஉடன்இருக்க அனுமதிக்கின்றனர்.


11. கைது பற்றிய தகவலை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.
- இதை போலீசார் எப்போதும் பின்பற்றுவதே கிடையாது. இந்த உத்தரவுகளை அனைத்து ஸ்டேஷன்களிலும் வைக்க வேண்டும், என்றும் உத்தரவிடப்பட்டது. கோர்ட் உத்தரவை பின்பற்றாமல் இருந்தால், "கோர்ட்டை அவமதிப்பதற்கு சமம்' என்று தெரிந்தும் உத்தரவுகளை மீறுகின்றனர்.


போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது :கோர்ட்டின் கட்டளைகளை பின்பற்றும் போது, நடைமுறை சிக்கல் உருவாகும். தகவல் தெரிவித்துவிட்டு கைது செய்ய வந்தால், குற்றவாளி தலைமறைவார். கைது செய்யப்பட்டது தெரிந்தால், உறவினர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துவர். விசாரணை பாதிக்கும். உடல்நிலையை பரிசோதிக்க வேண்டும் என்றால், "நெஞ்சுவலி, வயிற்றுவலி' என்று ஏதாவது கூறி, மருத்துவமனையில் சேர்ந்துகொண்டு விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டர். கைது விபரத்தை மக்கள் பார்வைக்கு வைத்தால், தேவையில்லாத சர்ச்சை ஏற்படும், என்றார். 

=================================

பொய் வரதட்சணை கேசுகளில் அப்பாவிகளை கைது செய்யக்கூடாது என்று நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் சுற்றறிக்கையாக மூலை முடுக்கிலுள்ள காவல்நிலையத்திற்கெல்லாம் அனுப்பப்பட்டிருந்தாலும்  அந்த சுற்றறிக்கையெல்லாம் காவல் நிலைய டாய்லெட் கிளின் செய்யும்  துடைப்பான்களாகத்தான் மதிக்கப்படுகிறது.  எத்தனை நீதிமன்றங்கள் எத்தனை சுற்றறிக்கை அனுப்பினாலும் அந்த சுற்றறிக்கையை அனுப்பிய நீதிபதி மட்டும் தான் அதை நினைவில் வைத்திருப்பார்.  அந்த அறிவுரைகளை பின்பற்றவேண்டியவர்களுக்கு அது ஒரு நாள் செய்தித்தாளில் வந்த செய்தி மட்டுமே.

 இது சென்னை உயர்நீதிமன்றம் 2008 ஆகஸ்ட்டில் அனுப்பிய பொய் வரதட்சணை கேசுகள் தொடர்பான நெறிமுறைகள்.

குடும்ப பிரச்னைகளில் சிறை? ஐகோர்ட் அறிவுரை-தினமலர் ஆகஸ்ட் 13,2008,

இதன்பிறகும் செய்தித்தாள்களில் எத்தனை கைது செய்திகளை நீங்கள் தினம் தினம் படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். 

பொய் வரதட்சணை கேசுகளில் ஒரு வேதனையான விஷயம் என்னவென்றால்  நடுஇரவிலோ அல்லது அதிகாலையிலோ தான் விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி வயதான பெரியவர்களை ஏதோ ஒரு மிகக் கொடிய தீவிரவாதி தப்பிவிடாமல் பிடித்துக்கொண்டு செல்லும் ஒரு பெருமிதத்துடன் இழுத்துச்செல்வார்கள். பொய்வழக்குப் போடும் பெண் தரப்பிலிருந்து எந்த அளவிற்கு "எனர்ஜி" கொடுக்கிறார்களோ அந்த அளவிற்கு இந்த கைது நடவடிக்கையிலும்  ஒரு வேகம் இருக்கும். நீதிமன்ற சுற்றறிக்கைகள் எல்லாம் மதிக்க ஆளில்லாமல் சுற்றிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். 




Saturday, December 19, 2009

மனுநீதிச் சோழனும் பெண்கள் போடும் பொய் வழக்குகளும்

தினமலர் டிசம்பர் 20,2009

புதுடில்லி:
"காதலன் கற்பழித்ததாக பெற்றோர் தான், புகார் கொடுக்க சொல்லி என்னை வற்புறுத்தினர்" என, கோர்ட்டில் கல்லூரி மாணவி சாட்சியம் சொல்லியுள்ளார்.
டில்லி, படா ஹிந்துராவ் காலனியை சேர்ந்த கல்லூரி மாணவி, பக்கத்து வீட்டு சாப்ட்வேர் இன்ஜினியர் பவான் காஷ்யப்(22) என்பவர் தன்னை கற்பழித்து விட்டதாக போலீசில் புகார் கூறினார். இதையடுத்து பவான் காஷ்யப் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக கோர்ட்டில் நடந்த விசாரணையின் போது வக்கீல்கள் குறுக்கு விசாரணை செய்ததில்," பவானும், நானும்
காதலித்தோம். நானே விரும்பி தான் அவனுடன் உடல் ரீதியாக தொடர்பு கொண்டேன். திடீரென காஷ்யப் அவருடன் பணிபுரியும் பெண்ணுடன் பழகினார். நான் சந்தேகப்பட்டு பவானுடன் சண்டை போட்டேன்; இதனால் எங்கள் காதல் முறிந்தது. பெற்றோர், பவானை எங்கள் வீட்டுக்கு அழைத்து பேசினர். ஆனால், அவர் என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். இதையடுத்து பவான் என்னை கற்பழித்து விட்டதாக புகார் கொடுக்கும் படி பெற்றோர் என்னை வற்புறுத்தினர். இதனால், பவான் மீது கற்பழிப்பு புகார் கொடுத்தேன்' என்றார்.

இந்த பெண்ணின் வாக்குமூலத்தையடுத்து, பவான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது கல்லூரி மாணவியின் பெற்றோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
==================================

100 க்கு 99 கற்பழிப்பு கேசுகள் நாட்டில் இ
ப்படித்தான் இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது. கடையில் ஏதோஅல்வா வாங்கி சாப்பிடுவது போல சுலபமாக பெண்கள் அப்பாவிகள் மீது பல அபாண்டமான பழிகளைப் போட்டு விட்டு ஒன்றும் தெரியாத அப்பாவிகள் போல இருக்கிறார்கள். இதை இங்கொன்றும் அங்கொன்றுமாக இந்திய நீதிமன்றமும் "கற்பை பாதுகாத்துக்கொள்ள வேண்டியது பெண்கள் பொறுப்பு தான் " என்றும், கொரியநாட்டு நீதிமன்றமும் "பெண்கள் குழந்தைகள் அல்ல, அவர்களுக்கும் பொறுப்பு உண்டு" என்றும் தோலுரித்துக்காட்டிவிட்டன .

ஆனால் அந்த உண்மையை ஏற்பதற்குத் தான் யாருக்கும் மனம் வரவில்லை. ஏனென்றால் உண்மைக்கும் இந்த நாட்டிற்கும் தான் வெகு தூரமாயிற்றே! எவ்வளவு தூரம் என்று தெரிந்து கொள்ள ஆவலகா இருந்தால் உண்மைக்காக கடைசி வரைப் போராடி அனைத்தையும் துறந்த அரிச்சந்திர மகாராஜா இன்று உங்கள் ஊரில் சிலையாக எங்கு நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறார் என்று யோசித்துப் பாருங்கள் புரியும். அதனால் தான் என்னவோ சென்னை உயர்நீதிமன்றத்தில் கூட நீதிநெறி வழுவாமல் இருக்க தன் மகனையே தேர்க்காலில் இட்டு தண்டனை அளித்த மனுநீதி சோழனும் நீதிமன்றத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படாமல் வெளியே நிற்கவைக்கப்பட்டிருக்கிறார் போலும்!

படத்தின் மீது கிளிக் செய்து பெரிதாக்கிப் பாருங்கள் நீதிக்காக ஆராய்ச்சி மணியடிக்கும் பசுவும் அதற்கு நீதி வழங்கிய மன்னர் தன் மகனை தேர்ச்சக்கரத்தில் இட்டுக் கொன்ற காட்சியும் தெளிவாகத் தெரியும்.
விலங்குகளுக்குக் கூட சமமான நீதி வழங்கப்படவேண்டும், தவறு செய்தது தனது மகனாக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும் என்று எண்ணிய அந்த மாமன்னர் இப்போது இந்திய சட்டங்களும், நீதிமன்றங்களும் பெண்களுக்கு மட்டும் குறிப்பாக இளம் பெண்களுக்கு மட்டும் சாதகமாக ஒருதலைபட்சமாக செயல்பட்டு பல அப்பாவி ஆண்களுக்கும், தாய்மார்களுக்கும் அநீதி இழைக்கப்படுவதை தினம் தினம் கண்டு வேதனையடையாமல் இருக்கவே அவர் நீதிமன்றத்திற்குள் இல்லாமல் வெளியே வளாகத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார் என்பது புரிந்திருக்கும்.

பாதிக்கப்பட்டது ஒரு விலங்காக இருந்தாலும் குற்றம் செய்தவர் அதற்குச் சமமான தண்டனையை அனுபவித்து அந்த அப்பாவிகள் அனுபவித்த அந்த வலியையும் வேதனையையும் உணர வேண்டும் என்று அனைத்து உயிர்களுக்கும் சமநீதி வழங்கிய உன்னதமான நீதியரசர் வாழ்ந்த நாட்டில் இப்போது பெண்கள் அப்பாவிகள் மீது அபாண்டமான பழிகளைப் போட்டு சிறையில் அடைத்துத் துன்புறுத்தி, 6-7 ஆண்டுகள் நீதிமன்றங்களில் அலைந்து அதற்குப்
பிறகு கடைசியில் அந்த அப்பாவிகள் குற்றமற்றவர் என்று சொன்னால் அதுவரை அந்த அப்பாவிகள் அனுபவித்த அந்த வேதனைகள் மறைந்து விடுமா?

சட்டத்தைத்
தவறாகப் பயன்படுத்தி அப்பாவிகளைத் துன்புறுத்தும் பெண்களுக்கு அந்த அப்பாவிகள் அடைந்த வேதனையையும், துன்பத்தையும், இழப்புகளையும், அவமானங்களையும் இன்றைய சட்டங்களும், நீதிமன்றங்களும் என்றாவது உணர்த்தியிருக்கின்றனவா? அல்லது இனியாவது உணர்த்துமா?

ஒருவரை நிரபராதி என்று சொல்வதை விட அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குச் சரியான நீதி தரப்படவேண்டும். சட்டங்கள் குற்றவாளிகளை தண்டிப்பதை விட அப்பாவிகளைக் காப்பாற்றுவதிலும் அவர்களுக்கு நீதி வழங்குவதிலும் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று உணர்த்தியவர் தான் மனுநீதிச்சோழன்.

பல ஆண்டுகளுக்கு முன்பிருந்த மனுநீதிச் சோழனுக்கு இருந்த நடுநிலைதவறாத நீதி வழங்கும் அறிவும், அனைவரையும் சமமாக சீர்தூக்கிப் பார்த்து நேர்மையாக நீதி வழங்கிய திறமையும் இன்று நாகரீகத்திலும் (?), அறிவியல்
முன்னேற்றத்திலும், தொழில்நுட்பங்களிலும் பல மடங்கு முன்னேறியிருக்கும் அரசாங்கத்திற்கும், நீதித்துறைக்கும் இருக்கிறதா? வெளிநாட்டிலுள்ள சட்ட நடைமுறைகளைத் தெரிந்து கொள்ளப் பல நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் நீதித்துறை வல்லுனர்கள் தங்கள் நாட்டிலேயே ஒரு அற்புதமான நீதியரசர் நடுநிலை தவறாமல் நீதி வழங்கிய முறைகள் இருப்பது பற்றி யோசித்திருப்பார்களா? நீங்களாவது யோசித்துப்பாருங்கள்.

தினம் தினம் நீதிமன்றத்திற்கு செல்லும்போது இந்த மனுநீதி சோழனைப் பார்த்துவிட்டு யாராவது ஒரே ஒரு நீதிபதியோ அல்லது வழக்கறிஞரோ இந்தக் கேள்வியை ஒரு முறையாவது தங்கள் மனதுக்குள்ளாவது கேட்டுப் பார்த்திருப்பார்களா?

மாமன்னர் நீதியரசர் மனுநீதிச் சோழனின் மாண்புமிக்க வரலாறு தெரியாதவர்கள் தங்களது வீட்டிலிருக்கும் மூத்தோரைக் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். ஆனால் பாவம், பெரும்பாலான வீடுகளில் இப்போதெல்லாம் பெரியவர்கள் இருப்பதில்லை. ஒன்று மருமகளால் முதியோர் இல்லத்திற்கு விரட்டப்பட்டிருப்பார்கள், அல்லது அவளின் பொய் வரதட்சணை கேசில் சிக்கி நீதிமன்றங்களால் சிதைக்கப்பட்டிருப்பார்கள். அப்படிப் பெரியவர்களை இழந்துகொண்டிருக்கும் குடும்பங்களுக்காக அந்த வரலாறு கீழே தரப்பட்டுள்ளது.

வரலாற்றைத் தெரிந்து கொண்ட பிறகு செய்தித்தாளில் வந்துள்ள மேலுள்ள கற்பழிப்பு வழக்கு செய்தியை ஒப்பிட்டுப் பாருங்கள். இது போலத்தான் நாட்டில் பல பொய் வரதட்சணை வழக்குகளும் நீதிமன்றங்களில் கையாளப்படுகின்றன.

மனுநீதி சோழன் காலத்தில் ஒரு பசுவிற்குக் கிடைத்த நீதிகூட இன்று பலகோடி அப்பாவி ஆண்களுக்கும், வயதான தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும், குழந்தைகளுக்கும் கிடைப்பதில்லை. ஆனால் மனிதர்களே இல்லாத நிலவிற்கு ராக்கெட் விட்டு மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறோம். இது எந்த வகை வளர்ச்சி? சிந்தியுங்கள்.

அன்று சூர்ப்பநகை என்னும் ஒரு பெண்ணின் தவறால் ராவணன் என்னும் ஒரு மகா பேரரசனே தன் பெருமையிழந்து, பெருஞ் சுற்றத்தையிழந்து, கடைசியில் தனது நாட்டையே இழந்தான். இன்று பல சூர்ப்பநகைகள் பொய் சொல்லி பொய் வழக்குகள் போட்டு எந்த ராஜ்ஜியத்தை வேரறுக்கப்போகிறார்களோ?

கூடுதல் செய்திகள் உங்கள் சிந்தனைக்காக


மனுநீதிச் சோழன்

சோழ நாட்டு மன்னர்களுள் மனுநீதிச் சோழன் சிறப்புக்குரிய ஓர் அரசன், அவனது மகன் வீதியில் தேர் ஓட்டிக் கொண்டு செல்லும் போது, தேரின் சக்கரத்திற்குள் அகப்பட்டு ஒரு கன்று இறந்து விட்டது. தாய்ப்பசு அரண்மனைக்குச் சென்று ஆராய்ச்சிமணியை அடித்தது. உடனே மன்னன் தன் மகனை அழைத்து வரச் சொன்னான். அவன் மீது தேரை ஏற்றி அவனையும் கொலை செய்ய ஆணையிட்டான். தன் மகனைத் தானே கொன்ற பழிக்கு அவன் அஞ்சவில்லை.


மகனை, இழந்த அந்தத் தாய்ப்பசுவின் மனநிலையை எண்ணினான்.அந்தத் தாய்ப்பசுவின் துயரத்திற்குக் காரணமாக இருந்தவன் யாராகஇருந்தாலும் தண்டனைக்கு உரியவன். எனவே அங்கு மன்னனுக்கு எப்பக்கமும் சாராமல் நீதி வழங்க வேண்டும் என்ற மனநிலையே இருந்தது. பின் விளைவுகளுக்கு அவன் அஞ்சவில்லை. எனவே,மனுநீதிச் சோழனின் பெருமை இன்றும் பேசப்படுகிறது.

17 ஆம் நூற்றாண்டில் ஒரு மனுநீதிச் சோழன்

தனது மகனின் தேர், ஒரு பசுங்கன்றின் மீது தற்செயலாக ஏறி, அதைக் கொன்றதற்காக மகன் என்று கூடப் பாராமல், மரண தண்டனை விதித்தான் மனுநீதிச் சோழன். இது புராண காலத்து நீதி. ஆனால் தவறுதலாக செய்த ஒரு கொலைக்காக மனைவி என்று கூடப் பாராது மரண தண்டனை விதித்தான் ஒரு முகலாய சக்ரவர்த்தி! யாரிவன்? ஜஹாங்கீர்தான்! அக்பரின் மகன்! ‘ஜஹாங்கீர்! என்றால் ‘உலகை வென்றவன்’ என்று பொருள்.

மக்களுக்கு உடனடி நீதி வழங்க ஆக்ரா கோட்டையில், மனுநீதி ஆராய்ச்சி மணியொன்றை கட்டி வைத்திருந்தான் இவன். ஒரு சமயம், இவனுடைய மனைவியான நூர்ஜஹான் தவறுதலாக, ஒரு பீரங்கியை இயக்கியபோது ஒரு சலவைத் தொழிலாளி, குண்டு பட்டு இறந்தார்.

தன் மனைவி என்றும் பாராது நூர்ஜஹானுக்கு மரண தண்டனை விதித்தார் ஜஹாங்கீர். பின்பு அந்தத் தொழிலாளியின் மனைவி, கெஞ்சிக் கேட்டுக் கொண்டதின் பேரில் நூர்ஜஹானை விடுதலை செய்தார். அந்த சலவைத் தொழிலாளியின் மனைவிக்கு நிறைய மானியம் தந்தார்.

19 ம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை........

நீதி வேண்டுமா? தற்கொலை தான் ஒரே வழி! நீதி வேண்டுமா? தற்கொலை தான் ஒரே வழி என்று கட்டாயப்படுத்துகின்றன இன்றைய சமுதாயமும், தவறான சட்டங்களும்.



Friday, December 18, 2009

ஆகா பெண்களில் எத்தனை வகை!

இந்தக் காலத்திலுள்ள பெண்களின் வகைகளை படம்பிடித்துக்காட்டும் டி.வி. தொடர்களைப் பற்றி தினமணியில் வந்த கட்டுரையில் ஒரு பகுதி.
======================================================


தமிழ்த் தொலைக்காட்சி தொடங்கிய புதிதில் வந்த பல தொடர்கள் நெஞ்சை நிறைத்த அருமையுடையவை. இன்று வருபவையோ நஞ்சை விதைப்பவை. பல இல்லங்களில் பிரச்னைகளை உருவாக்குபவையே நெடுந்தொடர்கள் தாம்.

தொடர்களின் மையப் பொருள்கள் பெரும்பாலும் பெண்களே.

பொறாமையின் வடிவமாய்ச் சில பெண்கள்; கொடுமைக்காரிகளாய்ப் பல பெண்கள்.
பழிவாங்கும் அரக்கிகள் உருவில் பல பெண்கள்;
அரிவாளை ஏந்திக் கொலைசெய்யத் துடிக்கும் சிலபெண்கள். ஏற்கெனவே திருமணமானவன் என்று தெரிந்தும் அவனை வளைத்துக்கொள்ள எண்ணும் பெண்கள்;
வஞ்சனை, சூது, நம்பிக்கைத் துரோகம் முதலிய வக்கிர எண்ணங்களின் வடிவமாகவே பெண்கள்

இதில் என்ன வேதனையென்றால் பெண்களே இந்தத் தொடர்களை மெய்மறந்து ரசிப்பதுதான்.

===================================================

டி.வி. தொடர்களில் காட்டப்படுபவை அத்தனையும் உண்மை. சினிமாவிலும், சின்னத்திரையிலும் வரும் கதைகள் அத்தனையும் நாட்டில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட உண்மைக் கதைகள்.

பெண்கள் தான் இதை ரசித்துப் பார்க்கிறார்கள். இதில் ஆச்சரியப்படவோ வருத்தப்படவோ ஒன்றுமில்லை. தங்களுக்குப் பிடித்த காட்சிகளைத்தான் எல்லோரும் ரசித்துப் பார்ப்பார்கள்.
தங்களை பிரதிபலிக்கும் ஒரு கதாபாத்திரத்தை திரைப்படத்தில் காட்டும்போதோ அல்லது கதையில் படிக்கும்போதோ எல்லோருமே ஒரு தனி விருப்பத்துடன் ரசித்துப் பார்ப்பார்கள் அல்லது படிப்பார்கள். தங்களை அந்தக் கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து மகிழ்வது மனித குணத்தின் இயல்பு. அது போல இக்கால இளைய தலைமுறைப் பெண்களுக்குத் தங்களின் வாழ்க்கை முறையையும் குணங்களையும் பிரதிபலிக்கும் தொலைக்காட்சித் தொடர்களை பிடித்திருப்பதில் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது.

==========================================================
மேலுள்ள செய்திக்குத் தொடர்புடைய ஒரு கொசுறு செய்தி (வாரமலரில் வந்துள்ளது)
வெள்ளிக்கிழமை, "தடா!'
என் மாமியார் வீட்டில் ஹாலில் தான், "டிவி' இருக்கும். மற்ற நாட்களில், "டிவி' பக்கமே திரும்பாத மாமனார், வெள்ளிக் கிழமை விளக்கு வைக்கும் நேரத்தில், "டிவி'யை ஆன் செய்து, பக்தி சேனல் போட்டு, கர்ம சிரத்தையாக ரசிக்க ஆரம்பித்து விடுவார். மெகா சீரியல்கள் பார்க்காவிட்டால் எனக்குத் தலையே வெடித்துவிடும்; அதிலும், வெள்ளிக் கிழமைகளில் கண்டிப்பாக பார்த்தாக வேண்டும். குட்டி போட்ட பூனை மாதிரி குறுக்கும், நெடுக்கும் உலவித் தவித்த என் தவிப்பைப் புரிந்து கொண்ட என் நாத்தனார், "என்ன, மன்னி... சீரியல் பார்க்கணுமா?' என்றாள். தலையை ஆட்டினேன். "சாரி! உங்க ஆசையை அடக்கிக்கோங்க. இன்னிக்கு பார்க்க முடியாது!' என்றாள். "ஏன்?' என கண்களால் வினவினேன்.

"ஒவ்வொரு தொடரிலும் வெள்ளிக் கிழமை அன்னிக்குத் தான், யாரையாவது சாகடிச்சு, பொணத்தைப் போட்டு அழுது, ஆர்பாட்டம் பண்ணி, அதை சுடுகாட்டுக்குக் கொண்டு போய் எரிக்கவோ, புதைக்கவோ செய்யறது வரைக்கும் விஸ்தாரமா காட்டுறதை ஒரு கொள்கையாவே கடைபிடிக்குறாங்க.

"விளக்கு வெக்குற நேரத்துல வீட்டுல ஒப்பாரி சப்தமும், அழுகை சப்தமும், சாவு மேளமும் கேட்டுகிட்டு இருந்தா வீடு விளங்குமா? இல்ல, லட்சுமி தான் வீட்டுக்கு வருவாளா? அதான், வெள்ளிக்கிழமையில வீட்டுல சீரியல்களுக்குத் தடா...' என்று விளக்கினாள்.
===========================================================
அப்படியே இளமங்கைகள் இது போன்ற காட்சிகளைப் பார்ப்பதை
வீட்டிலிருக்கும் அன்னையர்கள் அறிவுரை சொல்லி திருத்த நினைத்தால் அவர்களை கொலை செய்யவும் தயங்காத மனநிலையில் தான் இந்தப் பெண்கள் இருக்கிறார்கள் ('டிவி'பார்க்காதே என திட்டிய மாமியாரை கொலை செய்த மருமகள் கைது). இதிலிருந்து தொலைக்காட்சித் தொடர்களில் வரும் பெண்களும் இன்றைய மருமகள்களும் குணத்திலும், செயலிலும் எப்படி ஒருமித்துப்போயிருக்கிறார்களென்று உங்களுக்குப் புரிகிறதா?

காலம் மாறிவிட்டது பெண்கள் மட்டும் அவர்களின் நற்குணங்களிலிருந்து மாறாமல் இருக்க அவர்கள் என்ன உயிரற்ற பாறைகளா? அவர்களை நற்பண்புகளிலிருந்து மாறக்கூடாது என்று சொல்வது பெண்ணுரிமையைப் பறிக்கும் ஆணாதிக்கத்தனம், மாமியார் கொடுமை என்று "பெண்ணுரிமை என்பது தங்களின் பதிவுரிமை செய்யப்பட்ட சொத்து" எனக்கருதும் பெண்ணுரிமைவாதிகள் சொல்லுவார்கள். யாராவது அதற்குப் பதில் சொல்லமுடியுமா?


போனஸ் செய்தி


நீங்கள் பல நாட்களாக இணைய தளங்களிலும், செய்தித்தாள்களிலும் பொய் வரதட்சணை புகார் செய்யும் மனைவிகளைப் பற்றிய செய்திகளைப் படித்துக்கொண்டிருப்பீர்கள். நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் உங்கள் மனைவி நல்லவராக இருக்கலாம். அதனால் உங்களுக்கு 498A மனைவி எப்படி இருப்பார் என்று பல நாட்களாக ஒரு யோசனை இருந்துகொண்டிருக்கும்.

498A பெண்களுக்கெதிராகஆண், பெண், வயது வித்தியாசமின்றி சங்கங்கள் அமைத்துக் காப்பாற்றுங்கள் என்று ஏன் இப்படி பலர் போராடிக் கொண்டிருக்கின்றனர்? இதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? என்ற பல கேள்விகள் உங்களின் மனதில் ஓடிக்கொண்டிருக்கலாம்.

பொய் வழக்குப் போடும் 498A மனைவி எப்படி இருப்பாள் என்ற உங்களின் சந்தேகங்களை தீர்க்க ஓர் அரிய வாய்ப்பு. மேலே சொல்லப்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் வரும் கதாபாத்திரப் பெண்கள் அத்தனையும் ஒரு சேர ஒரே உருவில் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். அது தான் பொய் வழக்குப் போடும் மனைவியரின் குணமும் உருவமும்.

இந்த உருவங்களிடம் சிக்கிய அப்பாவி கணவர்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். இந்த ராட்சச ஜந்துக்களுக்குத் துணையாக அவைகளின் படையாக அரசாங்கமும், அரசாங்க சட்டமும், காவல் துறையும், நீதித்துறையும் செயல்பட்டால் ஒரு நேர்மையான சாதாரண மனிதனும் அவனது குடும்பமும் எப்படி அவதிப்படும் என்று உங்களால் உணரமுடிகிறதா?

இன்று இதை செய்தியாக படித்துவிட்டு மறந்து போகும் உங்களுக்கும் நாளை இது போன்ற நச்சுப்பாம்புகளால் ஒரு எதிர்பாராத தாக்குதல் நடக்க 100% வாய்ப்புள்ளது. உங்களையும் உங்களின் வருங்காலத் தலைமுறையையும் இந்த கொடிய ஜந்துக்களிடமிருந்தும் அதற்கு துணை செய்யும் தீயசக்திகளிடமிருந்தும் காப்பாற்றவே பலர் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

அன்று நடந்தது வெள்ளையனுக்கெதிரான சுதந்திரப்போராட்டம். இன்று நடப்பதோ அநீதிகளுக்கும், தீயசக்திகளுக்கும் எதிரான இரண்டாம் விடுதலைப்போராட்டம். அன்று மக்கள் ஒன்று திரண்டு போராடினர். இன்று நீங்களே தான் உங்களைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.

நீங்களும் இந்தப் போராட்டத்தில் இணைந்து மற்றவர்களை காப்பாற்றாவிட்டாலும் பரவாயில்லை உங்களையாவது காப்பாற்றிக் கொள்ளுங்கள். ஏனென்றால் அப்பாவிகளின் மானத்தையும், உயிரையும் பாதுகாக்க எந்தவித உத்திரவாதமும் இல்லாத சூழ்நிலைதான் இப்போது நிலவிக்கொண்டிருக்கிறது.



Wednesday, December 16, 2009

அப்பாவி போலிஸ்

போலிஸ் எப்படி இருக்கிறார்கள் என்பதற்கு இந்தவார வாரமலரில் அந்துமணி அளித்துள்ள பதில். இது சரிதானா என்று உங்கள் மனசாட்சியை கேளுங்கள்.

வாரமலரில் வந்துள்ள கேள்வி பதில்

* போலீஸ் என்றாலே பொது மக்களிடம், மிகுந்த வெறுப்பும், அவநம்பிக்கையுமே தோன்றி நிற்கிறதே... இந்த நிலைக்கு காரணம் என்ன?

* ஒழுக்கமின்மையும், நேர்மையின்மையும் அத்துறையில் பெருகி விட்டது. "லைசென்ஸ்' பெற்ற ரவுடிகளாக அத்துறையினர் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து கொள்வதால் ஏற்பட்ட சூழ்நிலை இது!

======================

சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவதில்லை, நீதிமன்றங்கள் சொல்லும் அறிவுரைகளைப் பின்பற்றுவதில்லை. அப்பாவிகளை அவமரியாதை செய்து துன்புறுத்துவதில் ஒரு அலாதியான பிரியமும் அதிலிருந்து சந்தோஷமும் பெறும் விசித்திரப் பிராணிகள்.

இன்னும் கேவலம் என்னவென்றால் பொய் வரதட்சணை கேசு கொடுக்கும் பெண்கள் காவல் துறையை அரசாங்கத்தால் நடத்தப்படும் கூலிப்படை போல நினைத்து அவர்களைப் பயன்படுத்தி தங்களுக்குப் பிடிக்காதவர்களை துன்புறுத்தப் பயன்படுத்துகிறார்கள்.
அரசாங்கம் பெண்களுக்கு மட்டும் கொடுக்கும் சிறப்பு இலவச சேவையாக இந்தப் பெண்கள் அதை பெருமையுடன் நினைக்கிறார்கள். இதை உணரும் திறன் கூட இல்லாமல் காவல்துறையில் எத்தனை அப்பாவியான இரண்டுங்கெட்டான்கள் இருக்கிறார்களென்று பாருங்களேன்! இப்படி "அப்பாவி இரண்டுங்கெட்டானாக" "வெள்ளை மனதுடன்" இருந்தால் பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்?

என்ன கொடுமை சார்! இந்த அப்பாவி போலிஸை நீதிமன்றம் கூட எப்படி நையாண்டி செய்திருக்கிறதென்று இங்கு படித்துப் பாருங்கள்:
அடங்கா போலிஸுக்கு நெத்தியடி கொடுத்த நீதிமன்றம்.

வரதட்சணை வாங்காமலேயே
ஒரே ஒரு முறை ஒரு பொய் வரதட்சணை கேசில் சிக்கிப் பாருங்கள். இந்தக் கேள்விக்கு இதைவிட அதிகமான விஷயங்களை நீங்களே சொல்லுவீர்கள். இந்த இரண்டு வரி கேள்விக்கு பதில் சொல்ல நீங்கள் ஒரு புத்தகமே எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆனால் முக்கியமான விஷயத்தை மறந்து விடாதீர்கள், தவறு செய்து விட்டோ அல்லது வரதட்சணை வாங்கி திருமணம் செய்து பிறகு வரதட்சணை கேசில் மாட்டி காவல்நிலையத்திற்கு சென்று பார்க்கலாம் என்று தவறாக எண்ணிவிடாதீர்கள்! அப்படி ஒரு தவறை நீங்கள் செய்துவிட்டால் இது போன்ற காவல் நிலையங்களுக்குச் செல்லும் பாக்கியமே உங்கள் வாழ்க்கையில் ஏற்படாது. ஏனென்றால் வரதட்சணை வாங்கியதற்காக உங்களை தண்டிக்க நினைத்தால் காவல் துறையில் உள்ள IPS-களின் கதி என்னவாகும்?


அவர்கள் தான் அதிகமாக வரதட்சணை வாங்குவதாக ஒரு பெண்ணுரிமை பேரொளி தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறது.

==============================================
"Zealous reformers, Deadly Laws"

ToP News.in

Madhu Purnima Kishwar or Madhu Kishwar, as she is popularly known defies
convention in many ways and is always up in arms against system or law which tries to suppress the voice of women or suppressed class.

"Madhu Kishwar in the book says that the biggest violators of these laws are those in high positions in the
government. She says that the biggest violators of the Dowry Prohibition Act 1961 are those in the high positions in the government. Kishwar finds out that the biggest dowry transactions take place among the families of educated elites, especially those in high positions in thegovernment, with the elite administrative services, like IAS, IPS and IRS topping the list."

==============================================
அதனால் வரதட்சணை வாங்கி திருமணம் செய்தால் நீங்கள் பிழைத்துக்கொள்ளலாம். இல்லை நான் வரதட்சணை வாங்காமல்தான் திருமணம் செய்வேன் என்று நேர்மையாக இருக்கப்போவதாக பிடிவாதம் பிடித்தால் காவல் நிலையத்திற்குச் சென்று "அப்பாவி இரண்டுங்கெட்டான் போலிஸைப் பார்த்து" உங்களின் அனுவங்களை ஒரு புத்தகமாக எழுத வேண்டிய நிலைமை தான் ஏற்படும்.

விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொள்வார் !


மகளிர் எப்போதுமே ஸ்பெஷல் அல்லவா? அதனால் மகளிர் காவல் நிலையங்களின் சிறப்புகளை அறிந்து கொள்ள இங்கே சென்று படித்துப் பார்க்கவும்: 498A பொண்ணு




Tuesday, December 15, 2009

நீதி வேண்டுமா? தற்கொலை தான் ஒரே வழி!

நீதி வேண்டுமா? தற்கொலை தான் ஒரே வழி என்று கட்டாயப்படுத்துகின்றன இன்றைய சமுதாயமும், தவறான சட்டங்களும்.

முந்தைய செய்தியில் மருமகளால் கொடுமைப்படுத்தப்பட்ட மாமியார் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்ட போது அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படாமல் அவர் கடைசியில் எங்கும் பாதுகாப்பு கிடைக்காது என்று முடிவு செய்து தன்னை மருமகளின் கொடுமையிலிருந்து காப்பாற்றிக்கொள்ள தீக்குளிக்க முயற்சித்தபோது தான் போலிஸ் வழக்கு பதிவு செய்ய முடிவுசெய்தனர். ஆனால் அதிலும் என்ன கொடுமையென்றால் வழக்கு பதிவு செய்து அந்த வயதான தாயாரை தான் விசாரிக்க ஆரம்பித்ததாக செய்தி வந்திருந்ததை பார்த்தோம்.


இதுவே மருகளின் புகார் என்றால் மருமகளை முதலில் விசாரணை செய்யமாட்டார்கள். புகாரில் எழுதப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்து விடுவார்கள். அது தான் இந்த காட்டுமிராண்டி சட்டத்தின் கொடுந்தன்மை.


கொடுமைக்குள்ளாவது வயதான தாய்மார்கள் மட்டுமல்ல, அப்பாவி கணவர்களும் தான். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தாயாரை முதன்மைப்படுத்தி போற்றி வணங்கிய நாட்டில் இப்போது அந்தத் தாய்மார்களே அரசாங்கத்தின் சிறப்பு சட்டங்கள் மூலம் கீழ்த்தரமாக நடத்தப்படும்போது அப்பாவி கணவர்கள் எப்படி நடத்தப்படுவார்கள் என்று உங்களால் யூகிக்க முடியும் என்று நம்புகிறேன்.


அப்பாவி கணவர்கள் அனுபவிக்கும் கொடுமைக்கு அளவே இல்லை. எத்தனையோ கணவர்கள் தங்கள் மனைவியரால் தாங்கள் அனுபவிக்கும் கொடுமையை வெளியே சொல்லமுடியாமல் மனதுக்குள்ளேயே வைத்து சீழ் பிடித்த ரணம் போல் அழுகிப் போய்க்கொண்டிருக்கிறார்கள்.


ஏனென்றால் ஆண்கள் தாங்கள் அனுபவிக்கும் கொடுமையை வெளியே சொன்னால் அதை இந்த சமுதாயம் ஏற்றுக்கொள்வதில்லை. ஏனென்றால் இந்த சமுதாயத்திற்கும் சட்டத்திற்கும் பெண் என்பவள் எப்போதும் நல்லவள், ஆண் என்பவன் எப்போதுமே குற்றம் செய்பவன் என்ற ஒரு தவறான மனப்பான்மை இருப்பதால் பாதிக்கப்பட்ட ஆண்களைக் காப்பாற்ற யாரும் முன்வருவதில்லை. சமுதாயத்தின் இந்த தவறான மனப்பான்மையை பெரும்பாலான பெண்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அப்பாவி ஆண்களை கொடுமை செய்கிறார்கள்.


ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு துரோகம் என்னவென்றால் அனைத்து குடிமக்களையும் மதம், சாதி, பணக்காரன், ஏழை, ஆண், பெண் என்று வேறுபாடில்லாமல் சமமாக நடத்த வேண்டிய சட்டமும், நீதியும், அதை செயல்படுத்துபவர்களும் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு பாதிக்கப்படும் ஆண்களை காப்பாற்றாமல் ஏளனம் செய்து புறக்கணிக்கிறார்கள். இந்தக் கொடுமையை திரைப்படத்திலும் காட்டிவிட்டார்கள்.




இது காசுக்காக எடுக்கப்பட்ட காட்சியல்ல. இது நாட்டில் நடந்துகொண்டிருக்கும் அவலம் என்பதை பின்வரும் செய்தியைப் படித்தால் உங்களுக்குப் புரியும்.


மனைவியருக்காக அடுக்கடுக்காக IPC498A, வரதட்சணை தடுப்புச் சட்டம், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் என பலவிதமான சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த சட்டங்கள் எல்லாம் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? கணவன் தனிக்குடித்தனத்திற்கு வர சம்மதிக்கவேண்டும், மாமியாரை வீட்டை விட்டு விரட்ட வேண்டும், கணவன் தன் சகோதர சகோதரிகளை கவனிக்காமல் மனைவியின் வீட்டிற்கு எல்லா சம்பளப் பணத்தையும் கொடுக்க வேண்டும், கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதை கணவன் ஏன் என்று கூட கேட்கக் கூடாது போன்ற சலுகைகளை மனைவியர் அரசாங்க உதவியுடன் பெறுவதற்குத்தான் இந்த சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் தவறான பெண்கள் தான் இந்த சட்டங்களைப் பயன்படுத்துகிறார்கள்.


இதை ஆதரித்து சில கிழக்கோட்டான்களும் தவறான பெண்கள் கூட்டத்திற்குப் பின்னால் வெட்கமில்லாமல் நாட்டியமாடிக்கொடிருக்கின்றன. இந்தக் கிழக்கோட்டான்களை ஒழித்துக்கட்டினாலே பெரும்பாலான அப்பாவிக் கணவர்களும், தாய்மார்களும், சகோதரிகளும் காப்பாற்றப்படுவார்கள்.


உண்மையாகவே மனைவியால் பாதிக்கப்படும் கணவரை பாதுகாக்க ஒரு சட்டமும் கிடையாது. இது உண்மை. கொடுமையில் சிக்கித் தவிக்கும் அப்பாவி கணவர்களைப் பாதுகாக்க அரசாங்கம் எந்த சட்டமும் இதுவரை இயற்றவில்லை. அவர்கள் தற்கொலை செய்து கொண்டு கடவுளின் நீதிமன்றத்திற்கு சென்று அங்கு தான் நீதிபெறமுடியும். இது சத்தியமான உண்மை.


அந்த முடிவைத்தான் ஒரு கணவர் எடுத்திருக்கிறார். கீழுள்ள செய்தியைப் படித்துப் பாருங்கள்.


===============================


Harassed husband downs poison in police station

Date: 2009-12-15

Place: Bangalore

Harassed husband downs poison in police station says cops would not take him seriously when he told them his wife had threatened to file false case against him.

A 32-year-old cab driver who claimed his wife was harassing him attempted suicide at the Vyalikaval police station by consuming poison and is said to be in a serious condition in hospital.

Krishna T, the cab driver, was rushed to KC General hospital after the attempt to take his own life.

Dowry case threat

In his statement, Krishna told the police that his wife Usha and her family were making him go through unbearable torture and threatening to file a false case against him.

He said he had consumed poison at the police station because even the police were not sympathetic towards his plight since the time his wife had begun repeatedly threatening him with a dowry harassment case.

He said Usha harassed him everyday and doubted his character.

Krishna's mother Eeramma (65), who later approached the police with a complaint, said Krishna had married Usha four years ago and that since then her daughter-in-law had been harassing the family.

"She wanted Krishna to live separately from us and said he should not talk to us," she said in her complaint.

Fed up with frequent fights in the houshold, Eeramma finally decided to send the couple to a separate house, but she said Usha and her family did not cease the harassment, demanding a share in Krishna's ancestral property.

She said Krishna finally approached the police, but was not taken seriously. Eeeramma said the police did not believe him and even misbehaved with them.

Money, mobile gone


Unable to bear this, Krishna went to the police station with a bottle of rat poison and consumed it before the police.

Eeramma said the police rushed him to the hospital -- and informed Usha, who came to the hospital and went away after taking Rs 6,000 and his mobile phone.

Krishna's mother said since then Usha had been missing, and demanded the police initiate strong action against Usha and her family.

Physical abuse

Eeeramma told MiD DAY said Krishna had been beaten by members of Usha's family.

"The harassment is not only on her part but also that of her sister, Indrani, who has separated from her husband. Some time ago she beat up Krishna in public," said Eeramma. "Krishna fears Usha and has to cook and clean everyday. In her four years of married life, she never once lit the stove; she likes to eat out."

She said Usha now wanted to separate from Krishna.

"She wants separation but she also wants a share of his ancestral property," said Eeramma. "We are frustrated with her character; along with the police she made our life hell."


The Vyalikaval police are investigating the case, but Usha is absconded since the day Krishna took poison.
=======================================





Monday, December 14, 2009

மருமகள் கொடுமையால் மாமியார் தீக்குளிப்பு

மருமகள் கொடுமை: மாமியார் தீக்குளிக்க முயற்சி

தினமணி 17 Nov 2009


புதுக் ​கோட்டை,​ நவ. 16:​ புதுக்​கோட்​டை​யில் திங்​கள்​கி​ழமை மரு​ம​கள் கொடுமை கார​ண​மாக பெண் தீக்​கு​ளித்து தற்​கொலை செய்​து​கொள்ள முயன்​றார்.​ புதுக்​கோட்டை மாவட்​டம்,​ ஆவு​டை​யார்​கோ​வி​லைச் சேர்ந்த நாகு மனைவி ஆராயி ​(65). இவ​ரது மகன் ரவிக்​கு​மார் ​(36); மரு​ம​கள் வித்யா ​(32). ரவிக்​கு​மார் வெளி​நாட்​டில் இருக்​கி​றார். வீட்​டில் வித்​யா​வும் அவ​ரது தந்தை ராஜேந்​தி​ர​னும் சேர்ந்து ஆரா​யி​யைக் கொடு​மைப்​ப​டுத்​தி​ய​தா​கக் கூறப்​ப​டு​கி​றது. ஆரா​யி பல முறை இவர்​க​ளால் தாக்​கப்​பட்​ட​தா​க​வும் கூறப்​ப​டு​கி​றது.​ இது​கு​றித்து சில நாட்​க​ளுக்கு முன் ஆராயி ஆவு​டை​யார்​கோ​வில் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். ஆனால்,​ போலீ​ஸார் எவ்​வித நட​வ​டிக்​கை​யும் எடுக்​க​வில்​லை​யாம்.​

இத​னால் ஏற்​பட்ட மன உளைச்​சல் கார​ண​மாக தீக்​கு​ளித்து தற்​கொலை செய்​து​கொள்ள முடி​வெ​டுத்த ஆராயி,​ திங்​கள்​கி​ழமை காலை புதுக்​கோட்டை வந்​தார். மாவட்​டக் காவல் கண்​கா​ணிப்​பா​ளர் அலு​வ​ல​கம் எதிரே மண்​ணெண்​ணெ​யு​டன் அவர் தீக்​கு​ளிக்க முயன்​ற​போது அங்கு வந்த போலீ​ஸார் ஆரா​யி​யைத் தடுத்து அவ​ரைக் காப்​பாற்​றி​னர். அவரிடம் விசாரித்தபோது மருமகளின் கொடுமைகள் குறித்து தெரிவித்தார். போலீஸார் தொடர்ந்து​ அவரை விசா​ரித்து வரு​கின்​ற​னர்.

====================

இதுவே மருமகள் காவல்நிலையத்தில் ஒரு பொய் புகார் கொடுத்திருந்தால் உடனடியாக வேலைக்காரர்கள் போல ஓடிப் போய் அந்த வயதான மாமியாரை கைது செய்திருப்பார்கள்.

சில கேடு கெட்ட ஜென்மங்களுக்கு தன்னைப்பெற்ற அன்னையும் ஒரு பெண் தான் என்ற
எண்ணமில்லாமல் போய்விட்டது. அதனால்தான் இந்த வயதான தாயாரும் ஒரு பெண், அவருக்கும் பாதுகாப்பு தரவேண்டும் என்று தோன்றவில்லை போலும்.

சட்டத்தின் பார்வையில் பெண் என்பதற்கு ஒரு படம் வரைந்து வரையரை செய்திருக்கிறார்கள். அவர்களின் கவர்ச்சி கண்ணோட்டத்தின்படி மருமகள்கள் மட்டுமே இந்த நாட்டில் பெண்கள். சகோதரிகளோ, அன்னையரோ பெண்களாக கருதப்படுவதில்லை. இளம்பெண்களை மையமாக வைத்து 498A சட்ட வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு அன்னையரைப் பற்றி நினைக்கத் தோன்றுமா?

மேலுள்ள செய்தி செய்தித்தாளில் வந்திருப்பதே மிகவும் ஆச்சரியமான விஷயம். ஏனென்றால் செய்தித்தாள்கள் கூட இது போல பல வயதான தாயார்கள் படும் கஷ்டங்களை வெளியிடுவதில்லை. அவர்களுக்குக் கூட மருமகள் பற்றிய ஒருதலைபட்சமான செய்திகளை மட்டும் தான் வெளியிட விருப்பம். ஏனென்றால் மருமகள் பற்றிய செய்தி என்பது அவர்களுக்கு வியாபரத்திற்காக கவர்ச்சிப்பெண்களின் படங்களை போடுவது போல. எல்லாம் ஒருவகையில் பெண்களை இழிவு படுத்தி செய்யும் ஒரு வகை வியாபாரம் தான். இதை எத்தனை பேர் புரிந்து கொள்வார்கள்.

இது தான் இந்தக் காலத்தில் வயதான தாய்மார்களின் கதி: ஒன்று மருமகளின் பொய் வரதட்சணை கேஸால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் வயதான காலத்தில் அலைந்து கொண்டிருப்பார்கள். அல்லது மருகளின் உச்ச கட்ட கொடுமையை வெளியே சொல்லமுடியாமல் மனதுக்குள் குமுறிக்கொண்டிருப்பார்கள்.

இந்தக் காலத்தில் வயதான பெற்றோர்கள் மருமகள்களின் சதியால் எப்படி கொடுமைக்கு பலியாகிறார்கள்
என்ற கொடிய உண்மையை கூட இயக்குனர் தங்கர் பச்சான் தனது "ஒன்பது ரூபாய் நோட்டு" என்ற படத்தில் காட்டியிருக்கிறார்.

இந்தக் காலத்தில் பெரும்பாலான மருமகள்கள் தனது கணவன் அவளுக்கு அடிமையாக இருந்து சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் அவளது காலடியில் கொட்டி அழவேண்டும், அதே சமயம் அந்தக் கணவனை பெற்றெடுத்த வயதான தாய் நடுத்தெருவிற்கு விரட்டப்படவேண்டும் என்ற கீழ்த்தரமான எண்ணத்தில் இருக்கிறார்கள். அந்தத் தாய் இல்லாமல் இந்தக் கணவன் கிடைத்திருப்பானா என்று யோசிப்பதில்லை. மாமியார் என்பதை விட முதலில் அந்தப் பெண்மணி ஒரு தாய் என்ற கோணத்தில் இந்தக்காலத்தில் மருமகள்கள் பார்ப்பதில்லை.

அன்னையை மதித்துப் போற்றாத நாடு சொர்க்கத்தில் இருந்தாலும் நரகத்தைப்போலத்தான் திண்டாடி நிற்கும். அன்னையரின் கண்ணீர் அந்த நாட்டையே எரிக்கும் சக்தியுடையது. மருமகள்களை மட்டும் பெண்ணாக நினைத்து அன்னையரை புறக்கணிக்கும் நாட்டிற்கு அந்த அழிவு வெகு தூரத்தில் இல்லை.





Sunday, December 13, 2009

தாய்மை இல்லாத பெண்மை

குடும்ப தகராறில் விபரீதம் குழந்தையை உயிரோடு தீவைத்துக் கொன்ற தாய்

தினமலர் செய்தி டிசம்பர் 14,2009

ஓசூரில், குடும்பத்தகராறில் பெற்ற குழந்தையை தீ வைத்து கொன்ற தாய், தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.ஓசூர் ராஜகணபதி நகரை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சாமுவேல் (30). அவருக்கு திருமணமாகி முதல் மனைவி இறந்துவிட்டார். இரண்டாவதாக வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேரந்த கலைவாணி (20) என்பவரை சாமுவேல் காதலித்து இரு ஆண்டுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

ஜோன் என்ற ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. சாமுவேல் ஆட்டோ ஓட்டி வருகிறார். இதில் சம்பாதிக்கும் பணத்தில் குடும்பம் நடத்த முடியவில்லை. கலைவாணி கணவரை சென்னைக்கு சென்று வேறு வேலை பார்க்கும்படி கூறியுள்ளார். ஆனால் அவர், "எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சொந்த ஊரை விட்டு வேறு எங்கும் சென்று தொழில் செய்ய முடியாது' என கூறி விட்டார்.


கணவன், மனைவிக்கு இடையே கடந்த சில வாரமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவும் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. மனமுடைந்த கலைவாணி, நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு தனது ஒரு வயது குழந்தை மீது கெரஸின் ஊற்றி தீ வைத்துவிட்டு, தானும் கெரஸின் ஊற்றி தீ வைத்து கொண்டார். இருவரும் தீயில் கருகி சம்பவ இடத்தில் பலியாகினர்.


ஓசூர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், எஸ்.ஐ., சசிகுமார் தீயில் கருகி இறந்த தாய், மகனின் சடலங்களை கைபற்றி விசாரிக்கின்றனர். திருமணமாகி இரு ஆண்டு மட்டும் ஆவதால், ஆர்.டி.ஓ., ரத்திவேலு விசாரிக்கிறார்.

=========================

ஒரு அப்பாவிக் குழந்தையை கொல்லும் உரிமையை அந்தப் பெண்ணுக்கு கொடுத்தது யார்?

தான் வாழ இயலவில்லை என்றாலும் தனது குழந்தை எங்காவது பிழைத்து நன்றாக வாழவேண்டும் என்று நினைப்பவள் தான் தாய். அந்த தியாக மனப்பான்மைக்காகத்தான் பெண்கள் இந்த சமுதாயத்தில் பல ஆண்டுகளாக போற்றப்பட்டு பல சிறப்பான சலுகைகள் பெண்களுக்கு மட்டும் சட்டத்தில் கூட தரப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்தக்காலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு பெண்மைக்கே உரிய
அந்த தாய்மையும் தியாக மனப்பான்மையும் கிடையவே கிடையாது. அதை விட தனக்கு கிடைக்கவில்லையென்றால் யாருக்குமே கிடைக்கக்கூடாது என்ற வஞ்சகமான மனப்பான்மை தான் மேலோங்கி இருக்கிறது. அதன் வெளிப்பாடுகள் தான் இன்றைய காலங்களில் இது போன்ற குழந்தைகளை பெற்ற தாயே கொஞ்சமும் கருணை இல்லாமல் கொல்லும் செய்திகள். பெரும்பாலான வரதட்சணை புகார்களில் தன்னால் குடும்பத்தில் அனுசரித்து வாழ இயலாத இயலாமையை ஏற்க மறுக்கும் மனைவியர் கணவரின் அனைத்து சகோதரிகளையும், தாயாரையும், குழந்தைகளையும் குற்றவாளிகளாக சித்தரித்து பொய் புகார்களை எழுதி அவர்களின் வாழ்க்கையையும் சிதைக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு அலைகிறார்கள்.

இப்படித் தாய்மைக்கு கொடுக்கப்பட்ட மரியாதையையும், சலுகைகளையும் இந்தக்காலத்தில் பல பெண்கள் தவறாகப்பயன்படுத்தி சட்டத்தையும் சமுதாயத்தையும் முட்டாள்களாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இது போன்ற இழிசெயல்கள் வரதட்சணை கேசுகளில் மிக அதிகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதற்கு உதாரணம் இந்த வீடியோ செய்தி - "வரதட்சணை வழக்கில் இரண்டு மாதக் குழந்தையும் குற்றவாளி". செய்தியை எழுத்துவடிவில் காண இரண்டு மாதக் குழந்தைக்கு இழைக்கப்பட்ட அநீதி.



இரண்டுமாதக் குழந்தையை குற்றவாளி பட்டியலில் சேர்த்து அதற்கு நீதிமன்றத்தில் ஜாமினும் வழங்கிய நாடு இந்த உலகத்தில் எங்காவது நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த சிறுமைக்குறிய செயலை செய்ததும் ஒரு பெண் தான். அதற்கு துணைபோனதும் பெண்களை பாதுகாப்பதாக கூறிக்கொள்ளும் சட்டங்கள்தான்.

இப்படி தாய்மையும், பெண்மையும் இல்லாமல்
மாறிவிட்ட பல பெண்களுக்காக இன்னும் எதற்காக அவர்களை பாதுகாப்பதாக சட்டங்கள் ஒருதலைபட்சமாக செயல்படுகின்றன என்பது தான் புரியவில்லை. அதன் பின்னனி தான் என்ன?

மேலுள்ள செய்தியில் பார்த்தீர்களா திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குள் மனைவி இறந்துவிட்டதால் ஆர். டி.ஓ. சிறப்பு விசாரணை செய்யப்படுகிறது. ஆனால் அதுவே ஒரு கணவர் திருமணமாகி ஒரே வாரத்திற்குள் இறந்தாலும் ஒருவர் கூட அது ஏன் நடந்தது? கொலையா, தற்கொலையா என்று யோசிக்கக் கூட மாட்டார்கள். ஏனென்றால் மனைவி இயற்கையாக இறந்தால் கூட அது
எப்போதும் கணவனோ அல்லது அவரது குடும்பத்தாரோ செய்த கொலையாக சந்தேகக்கண்ணோட்டத்துடன் தான் சட்டமும் சமுதாயமும் பார்க்கின்றன. ஆனால் அதுவே கள்ளக்காதலுக்காக மனைவி தனது கணவனை கொன்றிருந்தாலும் கூட அது பற்றி யாரும் கவலைப்படமாட்டார்கள். இது தான் இன்றைய சட்ட சமுதாய நடைமுறை.

பொம்பளை செத்தா போனது விலைமதிப்பற்ற உயிர் அதுவே ஒரு ஆம்பிளை செத்தால் இந்த சமுதாயத்திற்கு அது "தலையிலிருந்து உதிரும்
ஒரு முடிக்குச்" சமம் என்று இதைக்கூட இன்றைய திரைப்படத்தில் காட்டிவிட்டார்கள். அதைப்பார்த்து சிரிக்கும் கூட்டம் தான் அதிகம் சிந்திப்பவர்கள் மிக மிகக் குறைவு.



"தாய்மை" என்பது மனது சம்பந்தப்பட்ட விஷயம், உடல் சம்பந்தப்பட்ட விஷயமல்ல. பெண்களின் மனநிலை "தாய்மை" என்ற புனிதத்தன்மையை இழந்துவரும்போது சட்டங்களும் காலத்திற்கேற்ப மாறி ஆண், பெண் இருவரையும் சமமாக நடத்தினால் தான் இனிவரும் காலங்களில் மனித சமுதாயம் மனிதத்தன்மையுடன் இருக்கும். காலச்சக்கரத்திற்கேற்ப மாற்றமடையாத எந்தவொரு செயலும் இயற்கையால் புறக்கணிக்கப்பட்டுவிடும். அது பெண்கள் பாதுகாப்பு சட்டங்களானாலும் சரி. இயற்கையின் நீதிமன்றத்தில் மனித சட்டங்கள் செல்லாது.




Saturday, December 12, 2009

மக்கள் சக்தியை உணரத் தொடங்கியுள்ள நீதித்துறை

தாமதமாக நீதி வழங்கினால் மக்கள் புரட்சியில் ஈடுபடுவர்: தலைமை நீதிபதி எச்சரிக்கை

தினமலர் டிசம்பர் 13,2009

பெங்களூரு:
"தாமதமாக நீதி வழங்கினால், மக்கள் புரட்சியில் ஈடுபடத் துவங்கி விடுவர். சட்ட முறைகள் செயலிழந்து விடும்,'' என, தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
பெங்களூரில் நேற்று நடந்த மாநாடு ஒன்றில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறியதாவது:இந்திய நீதித்துறையின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால், இன்றோ, நாளையோ அல்லது நாளை மறுநாளோ நீதி கிடைத்து விடும் என, நம்புகின்றனர். இப்படி எத்தனை நாட்களுக்கு அவர்கள் காத்திருப்பர்? நாம் நீதி வழங்குவதில் காலத்தைக் கடத்த முடியாது.


அப்படி நடந்தால் மக்கள் புரட்சியில் ஈடுபடுவர்; நீதித்துறை ஸ்தம்பித்து விடும்.வழக்குகளில் தீர்ப்பு வழங்குவதில் எக்காரணம் கொண்டும் தாமதம் ஏற்படக் கூடாது. தாமதத்துக்கு, கோர்ட்டுகள், நீதிபதிகள் பற்றாக்குறையும் ஒரு காரணம். வக்கீல்களும் தங்கள் பங்குக்கு வழக்குகளை இழுத்தடிக்கின்றனர்.நாட்டில் உள்ள கோர்ட்டுகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. மொத்தம் 16 ஆயிரம் கீழ் கோர்ட்டுகள் தான் இருக்கின்றன. இவற்றில் 2,000 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. 16 ஆயிரமாக உள்ள கீழ் கோர்ட்டுகளின் எண்ணிக்கையை 35 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும். நீதிபதிகளின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த வேண்டும். இதைச் செய்யவில்லை எனில், இந்திய நீதித்துறை, முன்னேற்றப் பாதையில் செல்ல முடியாது.கோர்ட்டுகளை அதிகரிக்க மாநில அரசுகள் முன்வருவதில்லை. 4,000 கிராம கோர்ட்டுகள் ஆரம்பிப்பதற்கு இதுவரை எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை. இந்தியா எல்லாவகையிலும் முன்னேறி இருந்தாலும், வழக்குகளை முடிப்பதில் அதிக காலம் எடுத்துக் கொள்கிறது.


வழக்குகளை விரைவில் முடிப்பதற்கு கோர்ட் தவிர சமரசம் மற்றும் மத்தியஸ்தம் என்ற இரண்டு சுலபமான வழிகள் இருக்கின்றன. சீனாவில் 20 சதவீத வழக்குகள் மட்டுமே கோர்ட் விசாரணைக்கு வருகின்றன. மீதி 80 சதவீத வழக்குகள் சமரசம் மற்றும் மத்தியஸ்தத்திலேயே முடிக்கப்பட்டு விடுகின்றன.அதுபோல நம்நாட்டிலும் சமரசம் மற்றும் மத்தியஸ்த வழிகளில் வழக்குகளை முடிப்பதை ஊக்கவிக்க வேண்டும். இங்கு கோர்ட்டில் வழக்கிடுவது என்பது மலிவான செலவாக இருப்பதால் சமரசம் மற்றும் மத்தியஸ்தத்தை மக்கள் நாடுவதில்லை. இவ்வாறு கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.


++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++

ஏற்கனவே பாதி சட்ட நடைமுறைகள் செயலிழந்து தான் இருக்கின்றன. இனி புதிதாக செயலிழக்க என்ன இருக்கிறது? இந்த நாட்டில் அப்பாவிப்பெண்களும், குழந்தைகளும், வயதானவர்களும் கேவலமான பொய் வரதட்சணை கேசுகளுக்காக தீவிரவாதிகளை விட மிகவும் கீழ்த்தரமாக நடத்தப்படுகிறார்கள். இதற்கு உதாரணம் இந்த வீடியோ செய்தி - "வரதட்சணை வழக்கில் இரண்டு மாதக் குழந்தையும் குற்றவாளி". செய்தியை எழுத்துவடிவில் காண: இரண்டு மாதக் குழந்தைக்கு இழைக்கப்பட்ட அநீதி.



இன்றும் தினம் தினம் இந்த கொடுமை நடந்துகொண்டுதான் இருக்கிறது. எந்தவொரு முறையான, நேர்மையான சட்ட நடைமுறையும் இல்லாமல் இந்த அப்பாவிகளுக்கு இழைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த கொடிய அநீதியை எந்த வகையில் யார் நியாயப்படுத்த முடியும்?


நீதிவழங்குவதில் ஏற்படும் தாமதங்களுக்கு பல காரணங்கள் கூறப்பட்டுள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் விட நாட்டிலுள்ள தவறான ஒருதலைபட்சமான பல சட்டங்களை அழித்தாலே நீதிமன்றங்களிலுள்ள முக்கால்வாசி வழக்குகள் ஒழிந்து விடும்.

தாமதமாக நீதி வழங்கினால் மட்டுமல்ல, அப்பாவிகளுக்கு எதிராக பொய்வழக்குகள் போட்டு அநீதி இழைக்கப்பட்டாலும் மக்கள் புரட்சியில் ஈடுபட ஆரம்பித்துவிடுவார்கள்.




“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.