இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, October 28, 2010

இந்தியாவின் அவலம் சென்னையில் ஆரம்பம்?

வியாழக்கிழமை, அக்டோபர் 28, 2010 Thats Tamil

நெல்லை: முதியோர்க்கு கொடுமைகள் இழைக்கப்படும் இடங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது என நெல்லையில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

நெல்லையில் ஹெல்பேஜ் இந்தியா சார்பில் பள்ளி மாணவர்கள் மத்தியில் முதியோர் பராமரிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து பள்ளி முதல்வர்கள், தளாளர்கள் பங்கேற்ற கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.

அப்போது ஹெல்பேஜ் இந்தியா நிறுவனத்தின் சிறப்பு ஆலோசகர் இந்திராணி ராஜதுரை பேசியதாவது,

முதியோர்களை மதிக்காத போக்கு அதிகரித்து வருகிறது. பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் சேர்ப்பது, சொத்துகளை எழுதிவாங்கிவிட்டு விரட்டி அடிப்பது, அடிப்படைத் தேவைகளைக் கூட கவனிக்காமல் புறக்கணிப்பது அதிகரித்துள்ளது.

கடந்த 2004-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்போது நாடு முழுவதும் 80 மில்லியன் முதியோர்கள் இருந்தனர். 2025-ம் ஆண்டில் 160 மில்லியன், 2040-ம் ஆண்டில் 324 மில்லியன் முதியோர்கள் இருப்பர் என கணக்கிடப்பட்டுள்ளது.

முதியோர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளும் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. 12 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வி்ல் முதியோர்களுக்கு கொடுமைகள் இழைக்கப்படும் நகரங்களில் சென்னையும், போபாலும் முதலிடத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.

பராமரிப்பு இல்லாத முதியோர்களுக்கு உதவும் வகையில் சென்னையில் தொலைபேசி எண் 1253 செயல்படுகிறது.

இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு பேசினால் எங்கள் நிறுவன ஊழியர்கள் விரைந்து வந்து ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவுவர். அடுத்தகட்டமாக தமிழகம் முழுவதும் ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவ திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

===========


மாதா, பிதா, குரு, தெய்வம் என்று உலகிற்கு சொல்லிக்கொடுத்த தமிழகத்தில் பெற்றோரை வீதியில் நிறுத்தும் அவலம் அதிகரித்திருப்பது ஒரு அவமானமாகும்.

இதுபோன்று வயதான பெற்றோரை வீட்டிலிருந்து விரட்டுவதில் பல மருமகள்களுக்கு அதிக பங்கு இருக்கிறது. திருமணமாகி வந்தவுடன் பெரும்பாலான மருமகள்கள் கணவனை மிரட்டி அவனது பெற்றோரை நிராதரவாக விட்டுவிட்டு தனிக்குடித்தனம் போகவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். அல்லது கணவனை மிரட்டி அவனது பெற்றோரை வீட்டை விட்டு விரட்டவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். இந்த கட்டளைகளுக்கு அடிபணியாத கணவர்கள் மீதும் அவர்களது வயதான பெற்றோர்கள் மீதும் பொய் வரதட்சணை வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இது காவல்துறை மற்றும் நீதித்துறையின் ஆதரவோடு அமோகமாக நடந்துகொண்டிருக்கும் அவலம்.

தமிழ்நாடு காவல்துறை புள்ளிவிபரப்படி 2007 முதல் 2009 வரை மருமகள்களுக்கு நடந்திருக்கும் கொடுமை என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைப் பாருங்கள்.


S.NO
HEADS
2007
2008 2009
1
CRUELTY BY HUSBAND AND HIS RELATIVES (IPC498A)
1976
1648
1460
2
DOWRY PROHIBITION ACT
368
262
207

தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையான 6,63,96,000 பேரில் 1,460 குடும்பங்கள் மட்டும்தான் மனைவியை வரதட்சணைக்காக கொடுமை செய்திருக்கின்றனரா? அல்லது 207 கணவர் குடும்பத்தார் மட்டும்தான் வரதட்சணை வாங்கி திருமணம் செய்திருக்கிறார்களா?

இதைப்படிக்கின்ற ஒவ்வொருவரும் மனசாட்சியைக் கேட்டுப்பாருங்கள். வரதட்சணை வாங்கி திருமணம் செய்தவனும் அவனது குடும்பமும் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்த ஆண்கள் மனைவியின் கட்டளைக்கு அடிபணிந்து பெற்றோரை வீட்டை விட்டு விரட்டாததால் அந்த அப்பாவி ஆண்கள் மீதும் அவரது பெற்றோர்கள் மீதும் மட்டும்தான் இந்த பொய் வரதட்சணை வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன என்பது தெளிவாகப் புரியும்.

அதனால் இதுபோன்ற மருமகள்கள் போடும் பொய் வரதட்சணை வழக்குகளுக்குப் பயந்து பல கோழையான ஆண்கள் தங்களது பெற்றோரை வீட்டை விட்டு விரட்டும் நிலை அதிகரித்திருக்கிறது என்பதையே மேலுள்ள செய்தி காட்டுகிறது.

இந்த அவலநிலைக்குக் காரணம் மருமகள்கள் தவறாகப் பயன்படுத்துவதற்காகவே அரசாங்கம் கொடுத்திருக்கும் முறையற்ற வரதட்சணை தடுப்புச்சட்டங்கள்தான் என்பது பலருக்கும் தெரியாத உண்மை.
இந்த பொய் வழக்குகளால் பல முதியோர்கள் நாடு முழுதும் சொல்லமுடியாத துயரை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மற்றொரு வேதனையான உண்மை.

பெற்றோரையும், மூத்தோர்களையும் தவறான சட்டங்கள் மூலம் துன்புறுத்தும்நாடு மிகவிரைவில் சிதைந்துபோகும்.




Wednesday, October 27, 2010

பெற்ற தாயை விரட்டியடித்த மகள்


சென்னை: தள்ளாத வயதில் தாயை வீட்டை விட்டு விரட்டிய மகளையும், மருமகனையும் அந்த மூதாட்டியை நன்றாக பார்த்துக் கொள்ளும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகரீக மோகம் பிடித்து பெற்றவர்களை வயதான காலத்தில் வீட்டை விட்டு துரத்தியடிப்பது சென்னையில் அதிகம் நடநது வருகிறது.

சென்னையில் உள்ள உள்ளகரத்தைச் சேர்ந்தவர் சுந்தரி (70). அவர் தனது சொந்த வீட்டில் வசித்து வந்தார். அவரின் கணவர் இறந்தபோது, துக்க செயதி கேட்டு வந்த சுந்தரியின் மகளும், மருமகனும் அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டனர்.

நிலத்தாசை கொண்ட அவர்கள் மூதாட்டியை வீட்டை விட்டு வெளியேற்றி ஒரு விடுதியில் சேர்த்தனர். அவர்கள் விடுதிக் கட்டணமும் சரிவர செலுத்தவில்லை. இதனால் மனவேதனை அடைந்த சுந்தரி தன்னை மறுபடியும் தனது சொந்த வீட்டில் குடியமர்த்தும்படி சமூக நலத்துறை அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அதன் பிறகு சுந்தரியின் மகள், மருமகன் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீவத்சன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த அவர் சுந்தரியை அவரது சொந்த வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும். அவர் விருப்பத்திற்கு மாறாக அவரை வெளியேற்றக் கூடாது. மேலும், அவருடைய மகளும், மருமகனும் அவரை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.

===========

சொத்திற்காக பெற்ற தாயை விரட்டியடிக்கும் மகள்களும், தனது கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் கணவன் மீது பொய் வரதட்சணை வழக்குப்போடும் மனைவியரும், கணவன் குடும்பத்தில் பணத்தைப் பிடுங்குவதற்காக மாமியார் குடும்பத்தார் மீது பொய் வரதட்சணை வழக்குப்போடும் மருமகள்களும் சர்வசாதரணமாக நாட்டில் உலவிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களை ஆதரவு கொடுத்து வளர்த்துவிடுவதுதான் பெண்கள் பாதுகாப்பு சட்டங்களின் தலையாய பணி! பெண்கள் நாட்டின் கண்கள். ஆனால் நாட்டின் கண்களுக்கு தவறான சட்டங்கள் மூலம் பார்வையிழப்பு வந்துகொண்டிருக்கிறது.




சூப்பர் ஓட்டம் - பெண்ணுக்கு காமம் தலைக்கேறினால்


நெல்லை: களக்காடு அருகே 2 குழந்தைகளை தவிக்கவிட்டு மருமகனுடன் அவருடைய அத்தை வீட்டை விட்டு ஓடினார்.

களக்காடு அருகே உள்ள மாவடிபுதூரைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி முருகேஸ்வரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். முருகேஸ்வரி கடந்த 22-ம் தேதி உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவமனை செல்வதற்காக கணவரிடம் ரூ.500 வாங்கிச் சென்றார்.

ஆனால் அவர் வீடு திரும்பவி்ல்லை. என்ன ஆனார் என்றும் தெரியாமல் இருந்தது. தாயைக் காணாமல் குழந்தைகள் தவித்தனர்.

இது குறித்து செல்வம் திருக்குறுக்குடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பு ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இதில் முருகேஸ்வரிக்கும், செல்வத்தின் அக்கா மகன் ரூபன் என்பவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்தது தெரிய வந்தது. இவர்கள் இருவருக்கும் அத்தை-மருமகன் உறவு ஆகும்.

ஆனால் காமம் கண்ணை மறைக்க இருவரும் ஊரை விட்டு ஓட்டம் பிடித்தனர். அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. 2 குழந்தைகளை தவிக்கவிட்டு மருமகனுடன் அத்தை ஓடிய சம்பவம் அப்பகுதியி்ல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
==============

பெண்கள் இப்படியெல்லாம் இருக்கிறார்கள். ஆனால் சட்டங்களை இயற்றுபவர்கள் மட்டும் இவர்களை மட்டும்தான் பாதுகாப்போம் என்று சட்டங்களை இயற்றுகிறார்கள்.

தாயுள்ளம் கொண்ட உண்மையான பெண்களை IPC498A, DP Act, DV Act போன்ற தவறான சட்டங்கள் மூலம் அரசாங்கம் அழித்துக்கொண்டிருக்கிறது. கடைசியில் நாட்டில் மிஞ்சியிருக்கப்போவது மேலுள்ள செய்தியில் இருப்பதுபோன்ற “சுய ஆட்சி (Empowered Woman)” பெற்ற இதுபோன்ற பெண்கள்தான். இவர்கள்தான் அரசாங்கத்தின் செல்லப் பெண்மணிகள்! நாட்டின் கண்கள்!!



Monday, October 25, 2010

தீயவற்றை (மனைவியின் கள்ளக்காதலை)ப் பார்க்காதே!

கோவை : மனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்ய முயன்ற, கலாசு தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். சின்னவேடம்பட்டி, அஞ்சுகம் வீதியைச் சேர்ந்தவர் சகாயராஜ் (27); கலாசு தொழிலாளி. இவரது மனைவி சவீதா(23). இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் பெயின்டர் ராஜன்(25). கோத்தகிரியைச் சேர்ந்த இவர் மனைவி, குழந்தையை பிரிந்து இங்கு தங்கியுள்ளார். இச்சூழலில், ராஜனுக்கும், சவீதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவர் வேலைக்கு சென்ற பிறகு ராஜன் வீட்டுக்கு செல்வதை சவீதா வழக்கமாக கொண்டிருந்தார். தகவல் அறிந்த சகாயராஜ் மனைவியை கண்டித்தார். ஆனாலும் அவர்களது கள்ளத்தொடர்பு தொடர்ந்தது.

நேற்று முன்தினம் வேலைக்குச் சென்ற சகாயராஜ், வீட்டுக்கு திரும்பியபோது, மனைவியை காணவில்லை. சந்தேகமடைந்தவர், அருகில் இருந்த பெயின்டர் வீட்டுக்கு சென்றார். அங்கு தனது மனைவியுடன் ராஜன் தனிமையில் இருப்பது கண்டு ஆத்திரமடைந்தவர் மனைவியை அடித்து உதைத்தார். இதை தடுக்க வந்த கள்ளக்காதலன் ராஜனை தாக்கினார். இதில் காயமடைந்து ராஜன் மயங்கி கீழே விழுந்ததும் சகாயராஜ் தலைமறைவானார். காயமடைந்த ராஜன் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சரவணம்பட்டி போலீசார் நேற்று சகாயராஜை கைது செய்தனர்.

=============


தீயவற்றை பார்க்காதே, கேட்காதே, பேசாதே என்று காந்தி அன்றே சொல்லியிருக்கிறார். அதனால் அவரது வழியைப் பின்பற்றி கணவன்கள் தங்களது மனைவி கள்ளக்காதலில் ஈடுபட்டால் அந்த தீய செயலை கண்டும் காணாததுபோல் கண்ணை மூடிக்கொண்டு செல்லவேண்டும். யாரிடமும் அதைப்பற்றி பேசவும் கூடாது. மற்றவர்கள் அதைப்பற்றி கணவனுக்கு தெரியப்படுத்தினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவும்கூடாது.

இந்த காந்தி போதனையை கணவன் மீறினால் மனைவி கொடுக்கும் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கி குடும்பத்தோடு சிறைக்குச் செல்லவேண்டும். அல்லது மனைவியும் கள்ளக்காதலனும் சேர்ந்து போடும் சதித்திட்டத்தில் கொலை செய்யப்படலாம். அல்லது மேலுள்ள செய்தியில் உள்ளது போல உணர்ச்சி வசப்பட்டு ஏதாவது செய்ய நினைத்து அப்பாவிக் கணவர்கள் சிறைக்குச் செல்லவேண்டியதுதான்.

மனைவி தானாக விருப்பப்பட்டு கள்ளக் காதலில் ஈடுபட்டால் அது சட்டப்படி தண்டணைக்குரிய குற்றம் கிடையாது. இந்திய சட்டம் அப்படித்தான் சொல்கிறது.


IPC 497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.


அதனால் மனைவியின் கள்ளக்காதலை ஒரு தீய செயலாகக் கருதி காந்தி சொன்னது போல் தீயவற்றைக் காணாமல் இருக்க பழகிக்கொள்ளவேண்டும்! அப்படியிருந்தால்தான் கணவன்கள் மானத்தோடும், உயிரோடும் வாழமுடியும்.





தாயுள்ளமும் கள்ளக்காதலும்

கள்ளத்தொடர்பில் பிறந்த சிசுவைக் கொலை செய்த தாய்

அக்டோபர் 25,2010 தினமலர்

மதுரை : சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே கள்ளத்தொடர்பில் பிறந்த சிசுவை, தாயே கொலை செய்தது குறித்து விசாரித்து, இரு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய, சாலைக்கிராமம் இன்ஸ்பெக்டருக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

இளையான்குடி மாடக்கோட்டை ஆறுமுகம் தாக்கல் செய்த மனு: மகன் மாதவனுக்கும், திருவாடானை அருகே கம்பகுடியை சேர்ந்த ரேணுகாவிற்கும், நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இரண்டரை வயதில் அவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். தனிக்குடித்தனம் நடத்தினர். மாதவன் வேலைக்காக வெளிநாடு சென்றார். ரேணுகாவிற்கும், பக்கத்து வீட்டை சேர்ந்தவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. ரேணுகா கர்ப்பமுற்றார். தவறான உறவில் பிறந்த சிசுவை ரேணுகா கொலை செய்து வீட்டருகே புதைத்தார். பின் துர்நாற்றம் வீசவும், அதை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளார். சாலைக்கிராமம் இன்ஸ்பெக்டரிடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை. புகார் தெரிவித்ததால், ரேணுகாவிற்கு நெருக்கமான சிலர், மிரட்டல் விடுக்கின்றனர். எஸ்.பி., கலெக்டரிடம் புகார் கூறியும், நடவடிக்கை இல்லை. ரேணுகா மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. நீதிபதி ஜி.ராஜசூர்யா, ""இதுகுறித்து விசாரித்து இரு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,'' என இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டார்.



Friday, October 15, 2010

கொலை = பொய் = மனைவி?

கொலை, பொய், வஞ்சகம், சுயநலம், அரக்க குணம், மனைவி இவை எல்லாவற்றிற்கும் ஒரே அர்த்தம்தான் போலிருக்கிறது.

அக்டோபர் 09,2010 தினமலர்

சென்னை: சேர்ந்து வாழ்ந்த இரண்டாவது கணவனுடன் ஏற்பட்ட சண்டையில் பெற்ற மகனை தீவைத்து கொளுத்திவிட்டு, தீக்காயங்களுடன் நாடகமாடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரத்தை சேர்ந்தவர் லதா (26). இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்தவருடன் திருமணமாகி, வசந்த் (5) என்ற மகன் உள்ளான். கணவரை பிரிந்த லதா, சென்னை வந்து எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் வசித்து வந்தார். அப்போது அதே பகுதியில் வசித்து வந்தவர் செல்வம் (35). பெயின்டரான இவருக்கு திருமணமாகி வித்யா (7), காவ்யா (4) என்ற இரு மகள்கள் உள்ளனர். செல்வத்தின் மனைவி கிரேசி கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தனிமையில் இருந்த லதாவிற்கும், செல்வத்திற்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு, காதலாகி பின், இருவரும் ஜாபர்கான்பேட்டை, அன்னை சத்யா நகரில் உள்ள ஒரு வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், செல்வத்திற்கு மேலும் சில பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த லதா, செல்வத்திடம் கேட்டு சண்டையிட்டுள்ளார்.

கருத்து வேறுபாடு இருந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து மகன் வசந்த் மீது ஊற்றி லதா தீ வைத்தார். தன்மீதும் மண்ணெண்ணெய் ஊற்றியிருந்ததால், லதாவின் உடலிலும் தீக்காயம் ஏற்பட்டிருந்தது. கையில் மண்ணெண்ணெய் கேனுடன் எம்.ஜி.ஆர்., நகர் போலீஸ் நிலையம் சென்ற லதா, போலீசில் தனது கணவன் செல்வம் தன்மீதும், குழந்தை மீதும் தீ வைத்துவிட்டு சென்றதாக புகார் அளித்தார். போலீசார், லதாவை தனியார் மருத்துவமனையில் சேர்த்ததுடன், கருகிய நிலையில் கிடந்த வசந்தை "108' உதவியுடன் கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வசந்த் இறந்தான். லதாவிடம், போலீசார் நடத்திய விசாரணையில், தனது மகன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். தற்போது, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார். லதாவின் இரண்டாவது கணவர் செல்வம், தனது இரண்டு பெண்குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, எங்கோ மாயமாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

======================

பொய் வழக்குப்போட்டு கணவனைப் பிரிந்து பிறகு தனிமை ஏக்கத்தில் கிடைக்கின்ற ஆணுடன் கூடி வாழ்ந்து அதில் பிரச்சனை ஏற்படும்போது தான் பெற்ற குழந்தைக்கு தானே தீ வைத்து பிறகு அந்தப் பழியை தவறு செய்யாத ஆள்மீது சுமத்தி குற்றவாளியாக்கி காவல்நிலையத்திலும் நீதிமன்றத்திலும் சிக்கவைத்து சுகம் காணும் இழிபிறவியாகிவிட்டனரே! பெண்களின் நிலை ஏன் இப்படி தாழ்ந்து கொண்டிருக்கிறது? இதற்கு யார் காரணம்?
அரசாங்கம் கொடுத்திருக்கும் தவறான சட்டங்களைப் பயன்படுத்தி
வாழ்க்கையில் தனிமைப்படுத்தப்பட்டு தவறிழைக்க இதுபோல பல பெண்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளே ஜாக்கிரதை!




Tuesday, October 12, 2010

அம்மாவுக்கு “எய்ட்ஸ்” ஊசி போட்ட பாசக்கார மகள்கள்

சொத்திற்காக பெற்ற தாய்க்கே எய்ட்ஸ் ஊசி போடுவது, கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் கணவனை கூலிப்படை வைத்து கொல்வது போன்ற அரிய செயல்களை எல்லாம் இப்போது நம்ம ஊர் பெண்கள் சர்வ சாதாரணமாக செய்கிறார்கள். ஆகா, பெண்களிடையே எவ்வளவு முன்னேற்றம்! "Women Empowerment" நன்றாகவே வேலை செய்கிறதே.

Two women arrested for injecting HIV blood into mother

India Talkis 7/10/2010

Hyderabad, Oct 7 – Angry with their mother for refusing to write the property in their names, two women and the husband of one injected her with HIV-contaminated blood in Andhra Pradesh's Guntur town. The three were arrested Thursday.

Durga, 35, Kameshwari, 32, and Kameshwari's husband Sambasiva Rao, 36, have been arrested, police said. They were later produced in a court, which sent them to jail for two weeks.

The trio were after the property of 59-year-old Bharati and allegedly injected her with HIV-infected blood. Bharati complained to police that Durga, her step-daughter from her earlier husband, in connivance with Kameshwari and her husband took her to a hospital where they injected her with the HIV-infected blood.

Kameshwari works as a nurse in a government-run hospital, where she with the help of her husband and sister committed the crime.

Bharati, who was undergoing treatment for fever, grew suspicious when her condition worsened and she underwent blood tests which confirmed that she was injected with contaminated blood.

She alongwith her husband, Rachakonda Ranga Rao, a retired government employee, lodged a complaint with the police.

A case under Domestic Violence Act was booked against her daughters and son-in-law.

The accused were mounting pressure on Bharati to hand over to them her property estimated at Rs.50 lakh and when she refused they hatched a plan to ensure her death.





Monday, October 11, 2010

மனைவி “குக்கர்” போலவும் வெடிப்பாள்

மனைவி என்பவள் “குக்கர்” அல்ல. என்று ஒரு செய்தி வந்திருக்கிறது. மற்றொரு செய்தி மனைவி என்பவள் குக்கர் போல் சில சமயம் வெடித்து கள்ளக்காதலுக்காக கணவனையே போட்டுத்தள்ளவும் தயங்கமாட்டாள் என்று வந்திருக்கிறது. இந்த இரண்டு செய்திகளில் எந்த செய்தி தற்போதைய காலகட்டத்தில் பெண்களை படம்பிடித்துக் காட்டுகிறது என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

"மனைவி குக்கர் அல்ல; அவளுக்கும் உணர்வு உண்டு'

தினமலர் அக்டோபர் 11,2010

பொங்கலூர் : ""உலகில் வணங்கத்தக்கது மூன்று. அவை, தாவரம், தொழிலாளர்கள், பெண்மை; இவற்றில் உயர்ந்தது பெண்மை. தனக்காக வாழாமல் பிறருக்காக வாழும் பெண்கள், சமுதாயத்தில் இரண்டாமிடத்தில் இருக்க காரணம் சமுதாயம் அல்ல; தத்துவம்,'' என அழகர் ராமானுஜம் பேசினார்.

பொங்கலூர், திருப்பூர் லயன்ஸ் கிளப் மற்றும் பொங்கலூர் மனவளக்கலை மன்றம் சார்பில், மனைவி நல வேட்பு தின விழா, கொடுவாயில் நடந்தது. மனவளக்கலை மன்ற தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். துணை தலைவர் நாச்சிமுத்து, திருப்பூர் டாலர்சிட்டி லயன்ஸ் கிளப் தலைவர் கந்தசாமி முன்னிலை வகித்தனர். லயன்ஸ் அறக்கட்டளை தலைவர் பழனி சிவக்குமார் வரவேற்றார்.

தஞ்சை பேரளம், வேதாத்திரி மகரிஷி அமைதி மற்றும் ஆன்மிக மேம்பாட்டு நிறுவனத்தின் நிறுவனர் அழகர் ராமானுஜம் பேசியதாவது:ஆன்மிகம் வருங்கால சமுதாயத்தை உருவாக்குகிறது; துயரம், பேரழிவு போன்ற காலங்களில், இணைப்பு பாலமாக செயல்படும் லயன்ஸ் கிளப், நிகழ்கால சமுதாயத்தை உருவாக்குகிறது. கணவன், மனைவி உறவு சமுதாயத்தில் மிகவும் நெருக்கமானது; புனிதமானது. இல்லற வாழ்வில் சில விரிசல்கள் வரலாம்; அன்பை பரிமாறிக் கொள்வது சிறந்த இல்லறம்; ஒருவர் குற்றம் செய்யும்போது, மற்றொருவர் மன்னித்து ஏற்பது தெய்வீகம். மனைவி மட்டும் தன் பக்கமிருந்தால், உலகமே எதிர்த்தாலும் ஒருவனால் ஜெயிக்க முடியும்.திருமண உறவில் இணைந்த குடும்பம், எக்காரணம் கொண்டும் பிரியக்கூடாது. தாயாகவும், தாரமாகவும், தமக்கையாகவும் வருவது பெண்கள். அவர்களை போற்ற வேண்டும். உலகில் வணங்கத் தக்கது மூன்று. அவை, தாவரம், தொழிலாளர்கள், பெண்மை; இவற்றில் உயர்ந்தது பெண்மை. தனக்காக வாழாமல் பிறருக்காக வாழும் பெண்கள், சமுதாயத்தில் இரண்டாமிடத்தில் இருக்க காரணம் சமுதாயம் அல்ல; தத்துவம்.அனைவரும் தாயை வணங்க வேண்டும்; தாரத்தை பாராட்ட வேண்டும். மனைவி என்பவள் குக்கர் அல்ல; அவளுக்கும் உணர்வு உண்டு; மதிப்பு கொடுக்க வேண்டும்; மதிப்பு கொடுக்காதபோது துன்பம் வருகிறது. வாழ்க்கை என்பது விட்டுக் கொடுப்பது; அறிவில் உயர்ந்தவர்கள் விட்டுக்கொடுக்கிறார்கள். பிறர் சுதந்திரத்தை பறிப்பது ஆணவம்; பிறருக்கு சுதந்திரம் கொடுப்பது அன்பு. எவ்வுயிரும் தன்னுயிரே; பரஸ்பர அன்பில் குடும்பம் மலர்கிறது. தாய் இல்லாதபோது மனைவி துணையிருக்கிறாள்; தாரத்தை இழந்தவர் அனாதையாகிறார். எதை கொடுத் தேனும் இல்லறத்தை காப்பாற்ற வேண்டும்.இவ்வாறு, அழகர் ராமானுஜம் பேசினார்.

கணவனைக் கொல்ல திட்டம் போட்ட மனைவியும் அதனை செயல்படுத்திய கள்ளக் காதலனும் கைது

அக்டோபர் 11,2010 தினகரன்

சென்னை : கீழக்கரையில் இருந்து சென்னை வந்து லாட்ஜில் தங்கியிருந்த கணவனை, தீர்த்துக்கட்ட முயன்ற மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.


ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் முகமது பாசில் (40), வியாபாரி. இவர் அதே ஊரை சேர்ந்த நண்பர் ஆஜார் யாசின் என்பவருக்கு ^4 லட்சம் கடன் கொடுத்திருந்தார். ஆஜார் யாசின் மண்ணடியில் உணவு விடுதி நடத்துகிறார். பல முறை கேட்டும் யாசின் பணத்தை தரவில்லை. உடனே பணத்தை வசூலிக்க, கடந்த வாரம் சென்னை வந்த முகமது பாசில், லாட்ஜில் தங்கினார். கடந்த 4ம் தேதி மண்ணடி தெருவுக்கு சென்ற பாசிலை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளது. படுகாயமடைந்த அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

வடக்கு கடற்கரை இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப் பதிவு செய்து, ஆஜார் யாசினை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில், அவர் பாசிலை வெட்டவில்லை என்பது தெரிந்தது. முகமது பாசிலுக்கு வந்த செல்போன் அழைப்புகளை வைத்து போலீசார் விசாரித்தனர். சம்பவத்தன்று காலை ஸ்ரீபெரும்புதூரில் இருந்தும், இரவில் மண்ணடியில் இருந்தும் அழைப்பு வந்துள்ளது. அந்த எண் தாரிக் மொய்தீன் (35) என்பவருக்கு சொந்தமானது என தெரிந்தது. இதையடுத்து ஸ்ரீபெரும்புதூரில் பதுங்கியிருந்த தாரிக் மொய்தீனை போலீசார் பிடித்தனர். விசாரணையில் கிடைத்த தகவல்கள்:

பாசிலின் மனைவி லாபிரா (32). அதே ஊரை சேர்ந்தவர் தாரிக் மொய்தீன். பாசில் அடிக்கடி வெளிநாடு சென்றுவிட்டு, 2, 3 மாதங்கள் தங்கிவிட்டு திரும்பி வருவார். இந்த சமயத்தில் தாரிக் மொய்தீனுக்கும் லாபிராவுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது தெரிந்து இருவரையும் பாசில் கண்டித்துள்ளார். இதனால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்ட லாபிரா முடிவு செய்துள்ளார். பாசில் சென்னை சென்ற விவரத்தை தாரிக் மொய்தீனிடம் லாபிரா போன் செய்து கூறியுள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் உறவினர் வீட்டுக்கு சென்ற தாரிக் மொய்தீன், அங்கிருந்து பாசிலின் நடவடிக்கைகள் பற்றி லாபிராவிடம் கேட்டறிந்துள்ளார்.

சம்பவத்தன்று யாசின் போனில் அழைப்பது போல பேசி, மண்ணடி மூர் தெருவில் உள்ள ஒரு லாட்ஜிக்கு, பாசிலை வரச் சொல்லியுள்ளார் தாரிக் மொய்தீன். அந்த லாட்ஜ் வாசலுக்கு வந்ததும் ‘உன் மனைவியை தலாக் சொல்லிவிடு, நாங்கள் திருமணம் செய்யப் போகிறோம்’ என்று தாரிக் மொய்தீன் கூறியுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த தாரிக் மொய்தீன், அரிவாளை எடுத்து பாசிலின் தலை, கழுத்தில் வெட்டியுள்ளார். அந்த சமயத்தில் போலீஸ் ரோந்து வந்ததும், பாசிலை விட்டுவிட்டு தாரிக் மொய்தீன் தப்பியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறினர். உதவி கமிஷனர் காதர் மொய்தீன் உத்தரவுப்படி தாரிக் மொய்தீனை கைது செய்த போலீசார், அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், கீழக்கரைக்கு சென்று லாபிராவையும் கைது செய்தனர்.


சென்னை : கழுத்தை அறுத்து வாலிபர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே தீர்த்துக் கட்டினாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

கல்பாக்கம் அருகேயுள்ள வசுவசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (36). இவருக்கும் செங்கல்பட்டு அருகேயுள்ள சிறுமணி கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த பூங்கொடி(33) என்பவக்கும் 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு விமலா (13), வினோதினி (11) என 2 குழந்தைகள் உள்ளனர்.

திருமணத்துக்கு பிறகு சிறுமணி கண்டிகை அரசு பள்ளி எதிரேயுள்ள ஒரு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார் செல்வம். உதயம் கிராமத்தில் உள்ள ஒரு ரைஸ் மில்லில் ஆபரேட்டராக வேலை செய்து வந்தா. அதே பகுதியில் உள்ள ஆடை ஏற்றுமதி நிறுவனத்ல் பூங்கொடி வேலை செய்து வருகிறார். காலையில் வேலைக்கு செல்லும் செல்வம், இரவு நீண்ட நேரத்துக்கு பிறகுதான் வீடு திரும்புவார். இதனால், கணவன்&மனைவி இடையே அடிக்கடி தகராறு நடக்கும் என கூறப்படுகிறது. 3 மாதங்களுக்கு முன் கணவனுடன் கோபித்துக் கொண்டு, குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றார் பூங்கொடி.

இந்நிலையில், நேற்று காலை செல்வம் வீட்டு ரேடியோவில் அதிக ஒலி கேட்டது. வகுப்பு நடத்துவதற்கு இடைஞ்சலாக இருந்ததால், எதிரேயுள்ள பள்ளியில் இருந்து சில ஆசிரியர்கள் செல்வம் வீட்டுக்கு வந்தனர். கதவு அருகே ரத்த வெள்ளத்தில் செல்வம் சடலம் கிடந்தது. அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.செங்கல்பட்டு கூடுதல் எஸ்.பி. சேவியர் தன்ராஜ், இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் தலைமையில் போலீசார் வந்தனர். செல்வத்தின் கழுத்து அறுக்கப்பட்டும், முதுகில் கத்தியால் குத்தியும், மணக்கட்டையால் அடித்து மண்டை சிதைக்கப்பட்டும் இருந்தது தெரிய வந்தது. ரத்தம் உறைந்த கத்தி மற்றும் மணக்கட்டை சடலம் அருகே கிடந்தன.

போலீஸ் மோப்ப நாய் சிறிது தூரம் ஓடிவிட்டு நின்று விட்டது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாவது: ‘பூங்கொடிக்கும் அதே பகுதியை சேர்ந்த தனசேகரன் என்ற வாலிபருக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளதாக தெரிகிறது. செய்வினை உள்ளிட்ட பூஜைகளை தனசேகரன் செய்வார் என்றும் கூறப்படுகிறது. இதை, செல்வம் கண்டித்துள்ளார். இதனால், செல்வத்தை பிரிந்து பூங்கொடி தாய் வீடு சென்றார். அதன்பிறகு, தனசேகரன் மற்றும் தாயுடன் சேர்ந்து செல்வத்துக்கு நெருக்கடி கொடுத்துள்ளார் பூங்கொடி. சில மாதங்களுக்கு முன், தனசேகரன், பூங்கொடி மற்றும் சிலர் சேர்ந்து செல்வத்தை சரமாரியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், செல்வத்தின் உடல் நலம் பாதிக்கும் வகையில் யாகம் வளர்த்து பூஜை செய்திருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர்’. இந்த தகவல்கள் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர். பூங்கொடி, அவரது தாயாரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள தனசேகரனை போலீசார் தேடி வருகின்றனர்.



Saturday, October 09, 2010

காதல் காதல் புனிதமான கள்ளக்காதல்

தான் பெற்ற மகனுக்கும் வயது 23, தனது காதலனுக்கும் வயது 23. நல்ல புனிதமான காதல்.

சட்டங்கள் சமமாக இல்லாமல் பாரபட்சம் காட்டுவதால் கள்ளக்காதலில் இந்த வயது வித்தியாசங்கள் காட்டப்படுவதில்லை.


ஈரோட்டில் பரபரப்பு 23 வயது காதலனை பிரித்ததால் 42 வயது காதலி தற்கொலை

தினகரன் 10/10/10

கொடுமுடி: இளம் வயது காதலனை பிரித்ததால் 42 வயது காதலி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த பாஸ்கரன் மனைவி சரசு(42). 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு 23 வயதும், இளைய மகனுக்கு 18 வயதும் ஆகிறது. சரசு கூலி வேலைக்காக சிவகங்கை மாவட்டம் முடிக்கரைக்கு அடிக்கடி செல்வார். அங்கு வசிக்கும் சதீஷ்குமார்(23) என்ற வாலிபருடன் காதல் ஏற்பட்டது. கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினர். இவர்கள் இங்கு தனிக்குடித்தனம் நடத்துவது சதீஷ்குமாரின் பெற்றோருக்கு தெரியவந்தது. சதீஷ்குமாரின் பெற்றோரும், உறவினர்களும் ஊஞ்சலூர் வந்து, தங்களுடன் அழைத்து செல்ல முயன்றனர். காதலனை தன்னிடமிருந்து பிரித்து விடுவார்களோ என அஞ்சிய சரசு, தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.




வெளிநாட்டு மாணவருக்கு உதவி செய்த பெண்

பெண் அதிகாரிகளின் உதவி மனப்பான்மைக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது!

உதவி செய்யாத சூடான் மாணவனின் பாஸ்போர்ட்டை முடக்கிய பெண் ஊழியர் சஸ்பெண்ட்
தினகரன் 10/10/2010

கோவை: வெளிநாட்டு மாணவனின் பாஸ்போர்ட்டை முடக்கிய பெண் ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கோவை மாநகர காவல்துறை கமிஷனர்அலுவலக கட்டடத்தில் மூன்றாவது தளத்தில் பாஸ்போர்ட் பிரிவு உள்ளது. மாநகரை சேர்ந்தவர்கள் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்யும்போது, பரிசீலனை செய்து மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அனுப்புவது இப்பிரிவின் பணி. தவிர, கோவையிலிருந்து வெளிநாடு செல்கிறவர்கள், வெளிநாடுகளில் இருந்து கோவைக்கு வருகிறவர்கள் பற்றிய முழு விவரமும் இவ்வலுவலகத்தில் பராமரிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து கோவைக்கு வருகை தருவோர் விசா காலம் முடிந்த பிறகும் நாடு திரும்பவில்லையெனில் இப்பிரிவு அலுவலர்களிடம் அதற்குரிய விளக்கம் அளித்து, தடையின்மை சான்றிதழ் பெற்ற பிறகே மீண்டும் நாடு திரும்ப முடியும்.

இந்த அலுவலகத்தில் சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனியை சேர்ந்த ஸ்வர்ணலதா (40) என்பவர் எழுத்தராக பணிபுரிகிறார். இவர், சூடான் நாட்டை சேர்ந்த ஒரு மாணவனிடம் சில உதவிகளை கேட்டுள்ளார். ஆனால், அவர் தன்னால் செய்துகொடுக்க இயலாது எனக்கூறியுள்ளார். இதையடுத்து, அம்மாணவனின் பாஸ்போர்ட்டை கடந்த 6 மாத காலமாக முடக்கிவைத்துள்ளார். இதனால், அம்மாணவன் நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அவர் மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் புகார்செய்தார். இதுபற்றி விசாரணை நடத்திய அவர், நேற்று முன்தினம் ஸ்வர்ணலதாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதுபற்றி கமிஷனர் கூறுகையில், ஸ்வர்ணலதா மீது இதுபோன்று பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. அதுபற்றியும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.



Thursday, October 07, 2010

மூத்தோர் இல்லாத வீட்டில் போலிஸ் புகும்

திருமணமானவுடன் மாமியார் மாமனாரை விரட்டிவிட்டு கணவனை அடிமைப்படுத்த நினைக்கும் புரட்சிப் பெண்கள் பலர் இப்போது உருவாகிவிட்டார்கள். பெற்றவர்களை வெளியே விரட்டவேண்டும் அல்லது தனிக்குடித்தனம் போகவேண்டும் என்று பல மனைவியர் கணவனுக்கு வரதட்சணை தடுப்புச் சட்டங்களைக் காட்டி “அன்புக் கட்டளை” போடுகிறார்கள்.

இதுபோன்ற மூத்தோர் இல்லாத குடும்பங்களில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாட்டை களைவதற்கும், தக்க அறிவுரை கூறுவதற்கும் ஆளில்லாமல் எல்லாக் குடும்பப் பிரச்சனைகளுக்கும் “குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில் வழிகாணலாம்” “வரதட்சணை தடுப்புச் சட்டங்களைக் காட்டி மிரட்லாம்” என்று பெண்களுக்குத் தவறான வழிகாட்டப்படுவதால் மூத்தோர் இல்லாத வீட்டில் போலிசும் சட்டமும்தான் புகுந்து குடும்பங்களை சிதைத்துவிட்டுச் செல்லும். இதனால் நஷ்டப்படப்போவது பெண்களும், அப்பாவிக் குழந்தைகளும்தான்.

தலைவிகள் சொல்லும் பின்வரும் அறிவுரைகளைப் படித்துவிட்டு அதனைத் தொடர்ந்து வரும் செய்தியையும் படியுங்கள்.


"I want to teach men what their mothers didn’t"

"I am here to teach men what their mothers didn't teach them," declared Women and Child Development Minister Renuka Chaudhury
August 29, 2007
http://www.rediff.com/news/2007/aug/29men.htm

• • • • • • • • • •

Thats Tamil News, 3/4/2008
கணவன் அடித்தால் திருப்பி அடியுங்கள். குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என்று குடும்பத் தலைவிகளுக்கு மாநில மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் கூறினார்.

• • • • • • • • • •

கணவருடன் சேர்த்து வைக்க கோரி தர்ணா நடத்திய மனைவி

அக்டோபர் 07,2010 தினமலர்

விருதுநகர்: விருதுநகரில் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கணவர் வீட்டு முன் பெண் தர்ணா போராட்டம் நடத்தினார். போலீசார் சமரசத்திற்கு பின் போராட்டத்தை கைவிட்டார்.

விருதுநகர் பெரிய கிணற்று தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி மகள் அஷ்டலட்சுமி(32). இவருக்கும் முத்தமிழ் வீதி குறுக்கு தெருவைச் சேர்ந்த ஜெயபாலன் மகன் சிவசங்கருக்கும் 1998ல் திருமணம் நடந்தது. வரதட்சணையாக 53 சவரன் நகைகள், பொருட்கள் வழங்கப்பட்டன.

சிவசங்கர், பழைய பாலி பேக் இயந்திரங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு பாலகணேஷ்(12) பாலமுருகன்(9) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.தொழிலுக்காக ஊர், ஊராக சென்று வருபவர். இவர் மனைவியையும், குழந்தைகளையும் கவனிப்பதில்லை. இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு ஒன்றரை ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். மகளிர் போலீசில் புகார் செய்ததில் இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்து சமரசம் செய்து அனுப்பினர். இந்நிலையில், சிவசங்கர், மனைவிக்கு நேற்று விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார்.

இதனால் கணவருடன் சேர்த்து வைக்கும் படி கூற மாமனார் வீட்டிற்கு அஷ்டலட்சுமி வந்தார். அங்கு யாரும் இல்லாத நிலையில், பிற்பகல் 3 மணி முதல் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். பாண்டியன் நகர் போலீசார், புகார் தெரிவிக்க கூறியதால், இரவு 7.15 மணிக்கு அஷ்டலட்சுமி தன் போராட்டத்தை கைவிட்டார்.

=======

“வெளிச்சம் புகாத வீட்டில் வைத்தியன் புகுவான்” என்பது பழமொழி

“மூத்தோர் இல்லாத வீட்டில் போலிஸ் புகும்” என்பது புதுமொழி

ஆரோக்கியமற்ற வீட்டிற்குள்தான் வைத்தியன் புகவேண்டிய சூழ்நிலை ஏற்படும். வைத்தியன் புகுந்து குடும்பத்திற்குள் ஆரோக்கியத்தை மீண்டும் கொண்டு வருவான்.

அழியப்போகின்ற குடும்பத்திற்குள்தான் போலிஸ் புகும். குடும்பத்திற்குள் போலிஸ் புகுந்த பிறகு பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேர்வதை விட குடும்ப அழிவு விரைவுபடுத்தப்பட்டு அதன் அழிவு உறுதிப்படுத்தப்பட்டுவிடும்.

இதுதான் பழமொழிக்கும் புதுமொழிக்கும் உள்ள ஒற்றுமையும் வேற்றுமையும்.




Monday, October 04, 2010

பெண்களே தாய்மையைப் பழிக்காதீர்

திருநெல்வேலி : நெல்லையில் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நெல்லை விரைவு கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் இசக்கியம்மாள்(29). இவரது முதல் கணவர் இறந்ததையடுத்து அவர்களது குழந்தை இசக்கியப்பன் என்ற கார்த்திக்(2) தாத்தா பராமரிப்பில் இருந்தது. கடந்த 2007ம் ஆண்டு இசக்கியம்மாளுக்கும், நெல்லை தச்சநல்லூர் அருகேயுள்ள தேனீர்குளம் நியூ காலனியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவருக்கும் இரண்டாவது திருமணம் நடந்தது. பின்னர் தந்தையின் பராமரிப்பில் இருந்த தனது குழந்தை கார்த்திக்கை தானே வளர்த்துக் கொள்வதாக கூறி இசக்கியம்மாள் தனது பராமரிப்பில் வளர்த்து வந்தார். இதற்கிடையே இசக்கியம்மாளுக்கும், கணவர் பாலசுப்பிரமணியன் நண்பர்களுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை பாலசுப்பிரமணியனும் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி குழந்தை கார்த்திக் திடீரென இறந்தது. குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இறந்ததாக கூறி, ராஜபாளையத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு இசக்கியம்மாளும், அவரது கணவரும் ஒரு காரில் குழந்தையின் உடலை எடுத்துச் சென்றனர். அப்போது குழந்தையின் உடல் முழுவதும் தீக்காயங்கள் உள்ளதால் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, இசக்கியம்மாளின் தந்தை ஆறுமுகம் தச்சநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பல்வேறு "திடுக்' தகவல்கள் வெளியாயின.

இசக்கியம்மாளுக்கும், பாலசுப்பிரமணியனின் நண்பர்களான லாரி டிரைவர்களான சங்கரன்கோவில் குருசாமி(38), கோவை அம்சாவுக்கும்(42) இடையே கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்தது. அவர்கள் இசக்கியம்மாளிடம் உல்லாசத்தில் இருக்கும் போது குழந்தை கார்த்திக் இடையூறு செய்ததால், அவனது உடலில் சிகரெட்டால் சூடு வைத்தது விசாரணையில் கண்டறியப்பட்டது. இதன் காரணமாவே குழந்தை இறந்ததாக தெரிந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் தாய் இசக்கியம்மாள், தந்தை பாலசுப்பிரமணியன், கள்ளக் காதலர்கள் குருசாமி, அம்சா ஆகிய 4 பேரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட இரண்டாவது விரைவு கோர்ட்டில் நேற்று நடந்தது.வழக்கை நீதிபதி கமலாவதி விசாரணை செய்தார். கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால், குழந்தையை கொலை செய்ததது உறுதி செய்யப்பட்டதால் இசக்கியம்மாளுக்கு ஆயுள் தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதமும், பாலசுப்பிரமணியனுக்கு 7 ஆண்டு சிறைதண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார். குற்றச்சாட்டு நிருபிக்கப்படாததால் குருசாமி, அம்சா இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.கள்ளத்தொடர்புக்காக பெற்ற குழந்தையை கொலை செய்த தாய்க்கு ஆயுள்தண்டனை விதித்து நெல்லை கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது நெல்லையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

===========

இவர்களுக்குப் பெயர்தான் அபலைப் பெண்கள். இவர்களைப் பாதுகாக்கத்தான் பல சட்டங்கள் இருக்கின்றன!




Saturday, October 02, 2010

இளம்பெண்ணின் இரட்டைக் காதலில் சிறையில் தள்ளப்பட்ட ஆண்

இளம்பெண்ணின் இரட்டைக் காதலில் பலியாகி சிறையில் தள்ளப்பட்ட ஆண்

தினமலர் அக்டோபர் 02,2010

வேலூர் : இரண்டு பேரை காதலித்ததால் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண், மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர், காட்பாடி அடுத்த தொண்டான் துளசி கிராமத்தை சேர்ந்தவர் ரேவதி (20). இவர், காட்பாடி காந்தி நகரில் உள்ள தனியார் மருத்துவ பரிசோதனை நிலையத்தில் லேப் டெக்னீஷியனாக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த இரு ஆண்டாக தொண்டான் துளசியை சேர்ந்த சக்திவேல் (22) என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் காதலுக்கு இரு வீட்டினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், வாணியம்பாடியைச் சேர்ந்த சேட்டு (23) என்பவருக்கும், ரேவதிக்கும் திடீரென காதல் ஏற்பட்டது. இதனால், சக்திவேலை, ரேவதி ஒதுக்கித் தள்ளினார். இது தொடர்பாக கடந்த வாரம் ரேவதிக்கும், சக்திவேலுக்கும் தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். நண்பர்கள் சமரசம் செய்ததன் பேரில் சக்திவேலை திருமணம் செய்து கொள்ள ரேவதி சம்மதித்தார். இதனால், சேட்டு கோபமடைந்தார்.

கடந்த 23ம் தேதி வேலைக்கு சென்ற ரேவதி வீடு திரும்பவில்லை. "சேட்டு, ரேவதியை கடத்திச் சென்று கொலை செய்திருக்கலாம்' என, சந்தேகப்படுவதாக ரேவதியின் தந்தை பாலகிருஷ்ணன், லத்தேரி போலீசில் புகார் செய்தார். சேட்டிடம் விசாரணை செய்ததில், ரேவதியை கழுத்தை நெரித்து கொலை செய்து திம்மாம்பேட்டை பாலாற்றில் புதைத்து விட்டதாக கூறினார். போலீசார் சேட்டை அழைத்துச் சென்று திம்மாம்பேட்டை பாலாற்றில் ரேவதி புதைக்கப்பட்ட இடத்தை தேடினர். ஆனால் இதோ, அதோ என சேட்டு கைகாட்டிய இடங்களை தோண்டிப் பார்த்து, ரேவதி பிணம் கிடைக்காமல் போனதால் போலீசார் ஏமாற்றம் அடைந்தனர். நேற்று சேட்டிடம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்த போது, திருமணக் கோலத்தில் ரேவதியும், சக்திவேலும் நண்பர்கள் புடை சூழ லத்தேரி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர்.

இரு வீட்டிலும் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கணியம்பாடியில் உள்ள நண்பர்கள் வீட்டில் மறைந்து இருந்ததாகவும், 30ம் தேதி திருமணம் செய்து கொண்டதாகவும் ரேவதியும், சக்திவேலும் போலீசாரிடம் கூறினர். "ஏன் ரேவதியை கொன்று விட்டதாக பொய் சொன்னாய்?' என, சேட்டிடம் கேட்ட போது, போலீஸ் விசாரணையில் இருந்து தப்பிக்கவே இப்படி சொன்னதாகவும், பாலாற்றில் தோண்டிப் பார்த்த போது தப்பித்து விடலாம் என நினைத்த போது முடியாமல் போனதாக கூறினார். சேட்டு மீது போலீசாரை ஏமாற்றிய குற்றப் பிரிவில் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

=========

போலிஸ் கொடுமையிலிருந்து தப்பிக்க தான் செய்யாத தவறை செய்ததாகக் கூறிய ஆண்மீது போலிசை ஏமாற்றியதாக வழக்குப்போட்டிருக்கிறார்கள். ஆனால் பல பெண்கள் பொய்யான புகார்களை கணவன் மற்றும் அவரது குடும்பத்தார் மீது சுமத்தினாலும் காவல்துறைக்கு அது பொய் என்று தெரிந்தாலும் அந்த வழக்கை நீதிமன்றத்திற்கு அனுப்பி அப்பாவிகளை அலைய விடுகிறார்கள். பொய் வழக்குப்போட்டு அப்பாவிகளை அலைக்கழிக்கும் பெண்களுக்கு எந்தவித தண்டனையும் கிடையாது. காவல்துறையோ, நீதித்துறையோ அதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படமாட்டார்கள். என்ன ஒரு விசித்திரமான சட்ட நடைமுறை!

பெண்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு தண்டனை பெறுவது அப்பாவி ஆண்கள்தான்.






மகளிர் காவல் நிலையங்களுக்கு பாவ மன்னிப்பு கிடைக்குமா?

Thats Tamil News வியாழக்கிழமை, பிப்ரவரி 19, 2009

சென்னை: சென்னையில் 8 மாத கர்ப்பிணியிடம் தாலி சங்கிலியை லஞ்சமாக கேட்ட பெண் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.

சென்னை வியாசர்பாடி, பெரியார் நகரைச் சேர்ந்தவர் ஜீவிதா (18). இவரது கணவர் மோகன். ஜீவிதா திருவான்மியூரில் பெண்கள் விடுதி நடத்தி வருகிறார்.
திருமணமானவுடன் ஜீவிதா கர்ப்பமடைந்தார். ஆனால், ஜீவிதாவின் நடத்தையில் மோகன் சந்தேகப்பட ஆரம்பித்தார். சேர்ந்து வாழ வேண்டுமென்றால் பெரிய அளவில் வரதட்சணை வேண்டும் என்றும் சித்ரவதை செய்ய ஆரம்பித்தார்.

ஒரு கட்டத்தி்ல் ஜீவிதாவின் நகைகளைப் பறித்துக் கொண்டு வீட்டை விட்டு விரட்டிவிட்டார். இதையடுத்து ஜீவிதா தனது பெற்றோர் வீட்டில் தஞ்சமடைந்தார்.

கடந்த 2ம் தேதி தனது தந்தை முரளிகுமார், தாயார் தமிழ்செல்வி ஆகியோரோடு ஜீவிதா அடையார் மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்று இன்ஸ்பெக்டர் கீதாவிடம், தனது கணவர் செய்யும் கொடுமைகள் குறித்து புகார் தந்தார்.

மனுவை வாங்கிக்கொண்ட இன்ஸ்பெக்டர் கீதா, ஜீவிதாவையும் மோகனையும் ஒன்றாக வைத்து விசாரணை நடத்தினார். அப்போது இனிமேல் ஜீவிதாவோடு வாழமாட்டேன் என்று மோகன் பிடிவாதம் செய்தார்.

ஜீவிதா தினமும் தனது பெற்றோருடன் அடையார் போலீஸ் நிலையத்துக்கு நடையாக நடந்தும் கூட இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்காமல் இன்ஸ்பெக்டர் கீதா இழுத்தடித்ததார்.

கணவர் பறித்து வைத்துள்ள நகைகளையாவது மீட்டுத்தாருங்கள் என்று ஜீவிதா கோரினார்.

பலநாள் ஜீவிதாவை அலைய விட்ட இன்ஸ்பெக்டர் கீதா, இனிமேல் இந்த வழக்கை நான் விசாரிக்க மாட்டேன், கோர்ட்டில் பார்த்துக் கொள்கிறேன் என்று எழுதிக்கொடு என்று ஜீவிதாவிடம் கூறியுள்ளார்.

ஜீவிதா கதறி அழவே, உன் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் ரூ.5,000 தர வேண்டும் என்று கூறியுள்ளார். தன்னிடம் அவ்வளவு பணமில்லை என்று கூறிய ஜீவிதாவிடம், கழுத்துல கிடக்கிற தாலிய வித்துக்கு வந்து காச குடுடி என்று சினிமா வில்லி போல இன்ஸ்பெக்டர் கீதா பேசவே, அதிர்ந்துபோன ஜீவிதா லஞ்ச ஒழிப்பு போலீசில் கீதா மீது புகார் கொடுத்தார்.

இதையடுத்து கீதா மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்புப் பிரிவு இயக்குனர் ராமானுஜம், ஐ.ஜி. துக்கையாண்டிக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து எஸ்பி பவானீஸ்வரி, துணை எஸ்பி பொன்னுசாமி, இன்ஸ்பெக்டர்கள் பரமசாமி, அசோகன், இம்மானுவேல் ஞானசேகரன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

நேற்று மாலை அடையாறு போலீஸ் நிலையத்தில் மாறுவேடத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காத்திருக்க, ஜீவிதா ரூ.5,000 பணத்தோடு, இன்ஸ்பெக்டர் கீதாவை போய் பார்த்தார்.

அப்போது பணத்தை கையில் வாங்காமல், தன்னுடைய டைரியை கொடுத்து அதற்குள் பணத்தை வைக்கும்படி இன்ஸ்பெக்டர் கீதா கூறினார். ஜீவிதாவும் பணத்தை டைரிக்குள் வைத்தார்.

அப்போது அங்கு புகுந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இன்ஸ்பெக்டர் கீதாவை கைது செய்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சண்டை போட்ட கீதா பி்ன்னர் தரையில் விழுந்து புரண்டு அழுது நாடகமாடினார்.

ஆனாலும் அவரை போலீசார் விடவில்லை. அவரைக் கைது செய்ததோடு சைதாப்பேட்டை போலீஸ் குடியிருப்பில் உள்ள கீதாவின் வீட்டிலும் சோதனை நடத்தி ஏராளமான சொத்துப் பத்திரங்களை கைப்பற்றியுள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக அடையார் காவல் நிலையத்தில் பணியாற்றும் கீதா மீது ஏற்கனவே ஏராளமான லஞ்ச குற்றச்சாட்டுகள் உள்ளன.

நேற்று இரவு லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரித்தபோது திடீரென்று தரையில் விழுந்து உருண்டு அழுததோடு நெஞ்சு வலிப்பதாகக் கூறினார்.

பின்னர் 'மயக்கம்' போட்டு விழுந்தார். டாக்டர் வரவழைக்கப்பட்டு அவருக்கு 'சிகிச்சை' அளிக்கப்பட்டது. அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு வழக்குக்கும் இன்ன விலை என நிர்ணயித்து ஆட்டம் போட்டு வந்த கீதா வரதட்சணை புகார்களில் இரு தரப்பினரிடமும் பணம் வாங்கிக் கொண்டு கணவன்-மனைவியை பிரித்து அனுப்பும் வேலையை செய்வதில் கில்லாடி.

இதுவரை ஒரு தம்பதியைக் கூட கவுன்சிலிங் மூலம் சேர்த்து வைக்காதவர் என்ற பெருமையுடைவர்.

கீதாவுக்கு லஞ்சம் வாங்கித் தருவதில் பெண் ஏட்டு சோபியா என்பவரும் பக்க பலமாக இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இதற்கிடையே இன்ஸ்பெக்டர் கீதாவை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ள போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், போலீஸ் வேலையை பொது மக்களுக்கு சேவை செய்வதற்காக பயன்படுத்துங்கள். சட்டவிரோதமாக சம்பாதிக்க முயலும் போலீசார் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். லஞ்சம் கேட்கும் போலீஸ் அதிகாரிகள் பற்றி பொதுமக்கள் என்னிடம் நேரடியாக புகார் செய்யலாம் என்றார்.

மகளிர் காவல் நிலையங்களில் பொது காவல் நிலையங்களுக்கு இணையாக அநியாயங்களும், கட்டப் பஞ்சாயத்துகளும், லஞ்சம்-ஊழலும் கொடி கட்டிப் பறந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் புகார் தருவோர், பிடிபட்டோரிடம் கெட்ட வார்த்தைகளை பிரயோகப்படுத்துவதிலும் மகளிர் காவல் நிலையங்கள் எந்த விதத்திலும் சளைத்தவை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

==============

மகளிர் காவல்நிலையங்களில் பொய் வரதட்சணை வழக்குகளில் அப்பாவிகளை துன்புறுத்தி அவமானப்படுத்தும் - செய்த பாவத்திற்கும், செய்துகொண்டிருக்கின்ற பாவத்திற்கும், செய்யப்போகிற பாவத்திற்கெல்லாம் விமோசனம் கிடைக்கவேண்டுமென்றால் கீழுள்ள படத்தில் உள்ளதுபோல் செய்தால் கிடைத்துவிடுமா?

செய்தியும் படமும் தினமலரில் வந்துள்ளது.



புது பயிற்சி: பெண் போலீஸ் கோலம்மெல்லாம் போடுறாங்க ஏதாவது புது பயிற்சியா இல்ல கோலப் போட்டி நடக்குதான்னு நினைச்சிடாதீங்க. போலீஸ், பொதுமக்கள் நல்லுறவுக்காக பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு முன்னதாக போடப்பட்ட கோலம்தான் இது. பரவாயில்லை வீடு போல் பாவித்து இப்படியெல்லாம் செய்தா, மக்கள் மத்தியில போலீஸ் "உங்கள் நண்பன்னு' நிருபிக்கலாமில்ல. (தினமலர் அக்டோபர் 2, 2010)




Friday, October 01, 2010

கொத்து கொத்தாக செத்து மடியும் ஆண்கள்


திருப்பூர் : திருப்பூரில், திருமணமான 15வது நாளில், கணவனுக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்ற இளம் மனைவியை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

அவினாசியை அடுத்துள்ள நரியம்பள்ளியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகள் ஜமுனா (25). இவரும், திருப்பூர் பி.என்., ரோடு பகுதியைச் சேர்ந்த பிரபுவும் காதலித்தனர். இதையறிந்த ஜமுனாவின் பெற்றோர், அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மண்ணரை பகுதியைச் சேர்ந்த செல்வராஜூக்கும் (25), ஜமுனாவுக்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரும் முடிவு செய்தனர். கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி, திடீரென ஜமுனாவின் தந்தை மாணிக்கம் இறந்து விட்டார். எனினும், நிச்சயித்தபடி, செப்டம்பர் 12ம் தேதி, கருவலூர் பொன்காளியம்மன் கோவிலில் செல்வராஜூக்கும், ஜமுனாவுக்கும் திருமணம் நடந்தது.பிரபுவின் மீது தீராத காதல் கொண்டிருந்த ஜமுனா, திருமணத்துக்கு பிறகும் பிரபுவை மறக்க முடியாமல் தவித்தார். கணவர் செல்வராஜை கொலை செய்துவிட்டு, காதலன் பிரபுவுடன் சென்றுவிட முடிவு செய்தார்.

திருமணமான 15வது நாளான செப்டம்பர் 26ம் தேதி, கோவிலில் வழங்கப்பட்ட தீர்த்தத்தில் விஷம் கலந்து, செல்வராஜூக்கு தந்தார். அதை குடித்த சில நிமிடங்களில் செல்வராஜ் மயங்கி விழ, அவரை திருப்பூர் வலையங்காடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின், அங்கிருந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செல்வராஜ் குடித்த தீர்த்தத்தில் விஷம் கலந்திருந்தது தெரியவந்தது. செல்வராஜூக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயன்றதாக ஜமுனா மீது, செல்வராஜின் தந்தை சுப்ரமணியம், திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், ஜமுனாவை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஜமுனாவை, 15 நாள் சிறைக்காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.



சூப்பர் நியூஸ்!

அக்டோபர் 1, 2010, Thats Tamil

போளூர்: வரதட்சணை புகார் தொடர்பாக போளூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேடியப்பன் திடீர் என தலைமறைவாகி உள்ளார்.

கடந்த 1991-ம் அண்டு அதிமுக கட்சி சார்பாக போளூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வேடியப்பன்.

இவரது மகன் தண்டபானிக்கும், சத்யா என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் சத்யா போளூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வேடியப்பன் மீது ஒரு புகார் மனு அளித்துள்ளார்.

அதில் தனது கணவர் தண்டபாணி, மாமனார் வேடியப்பன், மாமியார் சந்தியா ஆகியோர் 100 சவரன் நகை, கார், ஜே.சி.பி. இயந்திரம் வேண்டும் என வரதட்சனை கேட்டு தன்னை அடித்து துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் போளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வேடியப்பனைத் தேடி அவரது வீட்டிற்குச் சென்றனர்.

ஆனால் அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. வேடியப்பன் மற்றும் அவரது மனைவி சந்தியா, மகன் தண்டபாணி ஆகியோர் திடீரென தலைமறைவாகி விட்டனர். இதையடு்த்து அவர்களை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.



“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.