இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, September 27, 2009

விவாகரத்துக்களுக்கு (ஆண்களுக்கு) விடிவுகாலம் வருமா?

விவாகரத்து வழக்கு தொடர்ந்தால் ஒரே ஆண்டில் தீர்ப்பு கிடைக்கும் : சட்டத்தில் திருத்தம் கொண்டு வருகிறது மத்திய அரசு
செப்டம்பர் 28,2009

மும்பை : தேங்கிக் கிடக்கும் விவாகரத்து வழக்குகளை விரைவில் முடிக்க, சட்ட திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தால், ஒரே ஆண்டுக்குள் அந்த வழக்கை முடிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட உள்ளன.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு கோர்ட்டுகளில் பெருமளவிலான வழக்குகள் தேங்கி கிடக்கின்றன. குறிப்பாக, குடும்ப நல கோர்ட்டுகளில் விவாகரத்து வழக்குகள் அதிக அளவில் தேங்கி கிடக்கின்றன. தலைநகர் டில்லியில் மட்டும் ஆண்டுக்கு 9,000 விவாகரத்து வழக்குகள் பதிவாகின்றன. மும்பையில் 2007ல் 6,761 வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2008ல் 7,526 ஆக விவாகரத்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள் ளன. மும்பை பாந்த்ராவில் மட்டும் 10 ஆயிரம் விவாகரத்து வழக்குகள் தேங்கியுள்ளன. நாடு முழுவதும் இதே நிலை தான் உள்ளது. இது மட்டுமல்லாமல், தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால், குழந்தைகள் யாரிடம் இருக்க வேண் டும் என்பது குறித்தும் ஆயிரக்கணக்கில் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியதாவது: ஏற்கனவே பிரிந்து வாழ்வது என்று முடிவு செய்து விட்ட தம்பதியர்களுக்கு இடையே, விவாகரத்து வழக்கை தேவையில்லாமல் ஆண்டு கணக் கில் இழுத்தடிப்பதால், பயன் ஒன்றுமில்லை. மனமொத்த கருத்தில்லாத தம்பதியர்களின் வழக்கை, கூடுமான வரையில் ஒரு ஆண்டுக்குள் குடும்ப நல கோர்ட்டுகள் முடிக்க வேண்டும். இதுபோன்ற வழக்குகளில் விரைவில் தீர்ப்பு கிடைக்கும் பட்சத்தில், தம்பதிகள் மறுவாழ்வைத் துவங்குவதற்கு உபயோகமாக இருக்கும். குழந்தைகளை யார் வைத்துக் கொள்வது என்ற பிரச்னையிலும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் வழக்கை முடித்தால்தான் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாது.

விவாகரத்து வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. மேலும், விவாகரத்து மற்றும் குழந்தைகள் வழக்குகள் தேங்குவதைத் தவிர்க்க "கிராம நியாயாலயம்' என்ற அமைப்பின் மூலம் வழக்குகளை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. குடும்ப நல கோர்ட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இவ்வாறு வீரப்ப மொய்லி தெரிவித்தார்.

================================

மனைவி சந்தேகப்படுகிறார் என்பதற்காக விவாகரத்து வழங்க முடியாது: சுப்ரீம் கோர்ட்
செப்டம்பர் 28,2009

மும்பை: "மனைவி சந்தேகப்படுகிறார் என்ற காரணத்துக்காக, விவாகரத்து வழங்க முடியாது' என, மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த தம்பதி ராஜேஷ், ஸ்மிதா (பெயர் மாற்றப் பட்டுள்ளது). மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவகாரத்து வழங்க கோரி, மும்பை ஐகோர்ட்டில் ராஜேஷ் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில்,"வேறொரு பெண்ணுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக என் மனைவி சந்தேகப்படுகிறாள். இது தொடர்பாக என் நண்பர்களிடம் அடிக்கடி விசாரிக்கிறாள். இதனால், எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே, விவாகரத்து வழங்க வேண்டும்' என, குறிப்பிடப் பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், "மனைவி சந்தேகப்படுகிறாள் என்ற காரணத்தை கூறி விவகாரத்து கோர முடியாது' என, கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தனர். (ஆனால் இதுவே மனைவி மனஉளைச்சல் என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும் கணவர் மீதும் அவர் குடும்பத்தார் மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும். நல்ல சட்டம்!)

பின்னர் அவர்கள் கூறியதாவது: திருமணத்துக்கு பின், தனது கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதை எந்த மனைவியும் பொறுத்துக் கொள்ள மாட்டார். குறிப்பாக, இரவு நேரங்களில் கணவர் வீட்டில் இருக்க வேண்டும் என மனைவி விரும்புவது வழக்கம். இதுபோன்ற சூழ்நிலையில், தனது கணவர் இரவு நேரங்களில் தொடர்ந்து தாமதமாக வருவது, எந்த மனைவிக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தத் தான் செய்யும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Saturday, September 26, 2009

தொடரும் கள்ளக்காதல் கொலைகள்....இன்னும் தொடரும்.....

கணவரை கொன்ற மனைவி

அவனியாபுரம்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர். மதுரை, பெருங்குடியைச் சேர்ந்தவர் முருகேசன்(45); தள்ளுவண்டியில் ஜூஸ் கடை நடத்தினார்.

மனைவி செல்வி (29). இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஜெய்ஹிந்புரம் சத்துணவு மையத்தில், செல்வி சமையல் உதவியாளராக உள்ளார். மூன்று மாதங்களுக்கு முன் அவனியாபுரம் அருகே கரிசல்குளத்தில் குடியிருந்தபோது, செல்விக்கும், கொத்தனார் சக்திவேல் (20) என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இது தெரிந்ததால் பெருங்குடியில் குடும்பத்துடன் முருகேசன் குடியேறினார். ஆனாலும், செல்வியின் கள்ளக்காதல் தொடர்ந்தது.

நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று விட்டு முருகேசன் வீடு திரும்பினார். கதவை தட்டியபோது திறக்கப்படவில்லை. சந்தேகப்பட்டு கதவின் மேல் இருந்த பெரிய துவாரம் வழியே வீட்டிற்குள் குதித்தார். அங்கு, செல்வியுடன் சக்திவேல் இருந்ததைக் கண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். "வெளியில் தெரிந்தால் அவமானம்' எனக்கருதி அவரை கொலை செய்ய செல்வியும், சக்திவேலுவும் முடிவு செய்தனர். தான் கொண்டு வந்த பட்டாக்கத்தியால், முருகேசனை பல இடங்களில் சக்திவேல் வெட்டினார். பின் கழுத்தை அறுத்து கொன்றார்.

உடலை, ஜூஸ் கடை தள்ளுவண்டியில் வைத்து சுடுகாட்டிற்கு கடத்தினர். ஆள்நடமாட்டம் இருந்ததால் நடுரோட்டில் நிறுத்திவிட்டு இருவரும் தப்பினர். இதுகுறித்து முருகேசன் தந்தை காந்திக்கு, அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். கள்ளக்காதலனுடன் சேர்ந்து செல்வி கொலை செய்திருக்கலாம் என்று அவர், போலீசில் புகார் செய்தார்.பரம்புபட்டி ரோட்டில் பதுங்கியிருந்த அவர்களை, திருப்பரங்குன்றம் போலீசார் கைது செய்தனர்.

தொடரும் கள்ளக்காதல் கொலைகள்: சமீபகாலமாக கள்ளக்காதல் தொடர்பாக கொலைகள் நடப்பது அதிகரித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன், விளாத்திக்குளத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., குமரகுருபர ராமநாதன் சகோதரர் ராஜராஜனை, கள்ளக்காதலன் ஷாஜகானுடன் சேர்ந்து மனைவி கிருஷ்ணகுமாரி கொலை செய்தார்.

கடந்த 4ம் தேதி மதுரை யாகப்பா நகரில் சந்தேகத்தின் பேரில் மனைவி தமிழச்செல்வியை, ரவுடி பாண்டி கொலை செய்தார். ஜூலை 29ல் பொன்மேனியில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகன் கிருஷ்ணமூர்த்தியை, காதலனுடன் சேர்ந்து தாயார் மேரி கூறு கூறாக வெட்டி கொலை செய்தார். இந்த பட்டியலில் தற்போது செல்வியும், சக்திவேலுவும் சேர்ந்துள்ளனர்.

பலருடன் தொடர்பு வைத்த மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை

மேலும் பல கள்ளக் காதல் வெறி பிடித்த கொலைகளை இங்கே காணலாம்: http://tamil498a.blogspot.com/

=====================

இது போன்ற கொலைகள் மேலும் தொடரும் அபாயம் இருக்கின்றது. அரசாங்கம் செய்யத் தவறியதை அப்பாவிகளின் சாபத்தீ செய்ய ஆரம்பித்திருக்கிறது. அப்பாவிகளின் சாபத்தீ அழிக்கப்படவேண்டிய கயவர்களிடையே காமத்தீயாக பரவி அழித்துக் கொண்டிருக்கிறது. இது போன்ற கயவர்களுக்கு இரண்டு வன்முறை ஆயுதங்கள்: ஒன்று- அரசாங்கம் கொடுக்கும் தவறான வரதட்சணை சட்டங்கள், இரண்டாவது கள்ளக் காதல் கொலை. அழிக்கப்படவேண்டிய நச்சுயிரிகள். இயற்கையின் விளையாட்டு தொடரட்டும்.




Thursday, September 24, 2009

குடும்ப வன்முறை

அதிகரித்து வரும் குடும்ப வன்முறைகள்: சமூகநலத்துறை அலுவலகங்கள் திணறல்

செப்டம்பர் 25,2009

குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருவதால், சமூக நலத்துறை அலுவலகங்கள், "கவுன்சிலிங்' நடத்த முடியாமல் திணறி வருகின்றன. மாவட்ட சமூக நல அலுவலரே, அந்தந்த மாவட்டங்களில் குடும்ப வன்முறை பாதுகாப்பு அலுவலராகவும் பணியாற்றி வருகிறார்.

இவரது தலைமையில், குடும்ப வன்முறை தொடர்பாக வரும் மனுக்களை, கவுன்சில் குழு விசாரித்து வருகிறது. கவுன்சிலிங்கிற்கு உட்படாத மனுக்களை மட்டும்,போலீசாருக்கு பரிந்துரை செய்வர். கடந்த சில மாதங்களாக, அனைத்து மாவட்டங்களிலும், குடும்ப வன்முறை குறித்த மனுக்கள் அதிகம் வருவதால், வாரம் முழுக்க கவுன்சிலிங் நடத்தியும் மனுக்கள் குறையவில்லை. குடும்ப வன்முறையில் பெரும்பாலும் பெண்கள் பாதிப்பிற்கு உள்ளாவதால், அதிகநாள் கிடப்பில் போடவும் முடியாது. (ஆண்கள் பாதிக்கப்பட்டால் கிடப்பில் போட்டு விடுவார்கள்)இதனால், தேங்கி வரும் மனுக்களை விரைந்து முடிக்க என்ன செய்வது என, மாவட்ட சமூகநல அலுவலர்கள் திணறி வருகின்றனர்.

=====================

குடும்ப வன்முறை அதிகரித்து வருவதற்கு காரணமென்ன? நடுநிலையற்ற சட்டங்கள். ஒரு பாலினத்திற்கு எதிராக அதிக சட்டங்கள் இயற்றப்பட்டுக் கொண்டிருப்பதால் ஏற்பட்ட பாதிப்பு. பெண்கள் சட்ட உதவியுடன் வன்முறையில் இறங்கிவிட்டதால் இன்று வன்முறை அதிகரித்து விட்டது.


குரங்கு கையில் கொடுத்த பூமாலை

சுயஉதவி குழு உறுப்பினர் பெயரில் ரூ. 2 லட்சம் கடன் மோசடி: சேவா சங்க தலைவி கைது

செப்டம்பர் 25,2009

விருதுநகர்: மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பெயரில், பாங்கில், இரண்டு லட்ச ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த, சேவா சங்க தலைவி கைது செய்யப்பட்டார். மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த உறுப்பினர்களை, சமீப காலமாக, தலைவர்களாக இருப்பவர்கள் ஏமாற்றி பண மோசடி செய்வது அதிகரித்து வருகிறது.

இதற்கு காரணம், மகளிர் சங்க தலைவவிகளாக இருப்பவர்கள் மட்டுமே, வங்கியுடன் தொடர்பு வைத்திருக்கின்றனர். சங்க கணக்கு வழக்குகள் அனைத்தும், தலைவிகள் கைவசம் மட்டுமே உள்ளது. மேலும், உறுப்பினர்களாக இருப்பவர்கள் அனைவரும் கல்வி அறிவு பெற்றவர்களில்லை. பாங்குகள் கடன் மட்டுமே வழங்குகின்றன. கடன் தொகையை சம்பந்தப்பட்ட நபர்கள் வந்தால் மட்டுமே வழங்க வேண்டும். கடன் தொகைக்கான தீர்மானம் போடும் போது தலைவர், செயலர், பொருளாளர் கையெழுத்திட வேண்டும். பாங்கில் இவர்கள் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

மகளிர் சுய உதவிக்குழுக்களின் தீர்மானம் போட்டு கொடுத்தால் மட்டும் போதுமானது. இதனால், ஆள் மாறாட்டம் செய்து மற்றவர்கள் கடன்தொகையை பெற்று விடுகின்றனர். பெரும்பான்மையான மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கடன் வாங்காமலே கடனாளி ஆகின்றனர். விருதுநகர், திருச்சுழி பள்ளிவாசல் அருகே வசிப்பவர் தனசேகரன். இவர் மனைவி பாக்கியலட்சுமி சேவா சங்க தலைவராக உள்ளார்.

ஆணைக்குளம் மகளிர் சுய உதவிக்குழு, அன்னை ரோஜா மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடம், கடன் வாங்கி தருவதாக, திருச்சுழி ஸ்டேட் வங்கிக்கு அழைத்து சென்றார். இவர்களது பெயரில், இரண்டு லட்ச ரூபாய் வரை கடன் பெற்று, உறுப்பினர்களுக்கு வழங்காமல் மோசடி செய்தார். இதுகுறித்து, ஆணைக்குளத்தை சேர்ந்த முத்துமாணிக்கம் மனைவி பேச்சியம்மாள் மற்றும் ஒன்பது பேர், போலீசில் புகார் செய்தனர். விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், பாக்கியலட்சுமியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

==========================

இப்படித்தான் மகளிருக்காக கொண்டுவரப்படும் அனைத்து நல்ல திட்டங்களும் குரங்கு கையில் கொடுத்த பூமாலை போல அதன் தலைவிகள் தங்களின் சுயநலத்திற்காக பயன்படுத்துகிறார்கள். வரதட்சணை மற்றும் பெண்கள் பாதுகாப்பு சட்டங்களும் இப்படித்தான் நகரங்களில் வாழும் மேல்தட்டு வர்க்க பெண்களால் தவறாகப்பயன்படுத்தப்படுகிறது. உண்மையான அப்பாவி பெண்கள் இந்த சட்டங்களை ஒருபோதும் பயன்படுத்த முடியாமல் நீதிமன்றங்கள் பொய் கேசுகளால் நிரம்பி வழிகின்றன.



கொலைக்கு தூண்டிய மனைவி

கொலைக்கு தூண்டிய மனைவி, கள்ளக்காதலனுடன் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் முன்னாள் எம்.எல்.ஏ., குமரகுருபர ராமநாதனின் தம்பி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், "திடுக்' திருப்பமாக, அவரை கொலை செய்யத் தூண்டிய மனைவி, கொலை செய்த கள்ளக் காதலனை போலீசார் கைது செய்தனர்.

விளாத்திகுளம் தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., குமரகுருபர ராமநாதன், தற்போது ம.தி.மு.க.,வில் உள்ளார். அவரது தம்பி ராஜராஜன்(40), செப்.,21 இரவு அரியநாயகிபுரம் கரிசல் காட்டுப் பகுதியில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். மூன்று தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடிவந்தனர். மனைவி, கள்ளக்காதலன் கைது: வழக்கில், "திடுக்' திருப்பமாக ராஜராஜனை கட்டையால் அடித்துக் கொலை செய்ததாக, அதே ஊர் வாலிபர் ஷாஜகான்(24), அவரை கொலை செய்ய தூண்டியதாக ராஜராஜன் மனைவி கிருஷ்ணகுமாரி(32) ஆகிய இருவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

போலீசார் கூறியதாவது: ராஜராஜனும், ஷாஜகானும் பக்கத்து வீட்டில் வசித்து வந்தனர். ஷாஜகான், ராஜராஜன் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார். அப்போது ஷாஜகானுக்கும், கிருஷ்ணகுமாரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதமாக, ஷாஜகான் சென்னை கே.கே., நகரில் ஒரு கடையில் வேலைபார்த்தார். அப்போது அவர் கிருஷ்ணகுமாரியை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அடிக்கடி குடிபோதையில் வரும் கணவர், தன்னை அடித்து துன்புறுத்துவதாக கிருஷ்ணகுமாரி வருத்தப்பட்டார்.

இந்நிலையில், ரம்ஜானுக்காக விடுமுறையில் அரியநாயகிபுரம் வந்த ஷாஜகான், கிருஷ்ணகுமாரியை சந்தித்தார். அவரிடம், கொடுமைப்படுத்தும் தனது கணவரை கொலை செய்துவிடுமாறு கிருஷ்ணகுமாரி வலியுறுத்தினார். மது ஊற்றிக் கொடுத்து கொலை: அதையடுத்து சம்பவத்தன்று, ஏற்கனவே நண்பர்களுடன் மது அருந்திவிட்டு வந்த ராஜராஜனுக்கு, ஷாஜகான் மது ஊற்றிக் கொடுத்தார். ராஜராஜன் நிலைதடுமாறி கீழே விழுந்தபோது, உருட்டுக்கட்டையால் அவரை அடித்து படுகொலை செய்தார். பின்னர் அதை கிருஷ்ணகுமாரியிடம் தெரிவித்தார்.

இவ்வாறு போலீசார் கூறினர். முதலில், கணவர் கொலை செய்யப்பட்டது குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என, கிருஷ்ணகுமாரி நாடகமாடினார். போலீசார், "உரிய முறையில்' விசாரித்தபோது நடந்த சம்பவம் அனைத்தையும் விவரித்தார். கிருஷ்ணகுமாரி, அவரது கள்ளக்காதலன் ஷாஜகானை விளாத்திகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் அவர்களை சிறையிலடைத்தனர்.

==========================

கொடுமைபடுத்தும் மனைவியிடமிருந்து விடுதலை பெற அப்பாவி கணவர்கள் பலர் வழி தெரியாமல் நீதிமன்றங்களுக்கும் வழக்கறிஞர் வீடுகளுக்கும் நடையாய் நடந்து கடைசிவரை நீதி கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். பெண்களிடமிருந்து தான் வழிமுறைகளை கற்றுக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது!



Monday, September 21, 2009

காதலால் வீழ்ந்தேன்!

குடும்பத்தினர் 7 பேரை விஷம் வைத்து கொன்ற இளம்பெண்: காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கொடூரம்!

ரோடக், செப்.20: ஹரியாணா மாநிலம் ரோடக் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் குடும்பத்தினர் 7 பேரை விஷம் வைத்து கொன்ற இளம்பெண் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த காதலரையும் போலீஸôர் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.

கபூல்பூர் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் சோனம். அதே ஊரைச் சேர்ந்தவர் நவீன். இவர்கள் இருவரும் சில ஆண்டுளாக காதலித்து வந்தனர்.

இவர்கள் ஒரே சாதி உட்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், ஒரே கோத்ரத்தை (ஒரே மாதிரியான சுபசடங்கு செய்பவர்கள்) என்பதாலும் இவர்களின் காதலுக்கு சோனத்தின் வீட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், எதிர்ப்பை பொருட்படுத்தாமல் இருவரும் காதலித்து வந்தனர்.

இதுதொடர்பாக நீடித்த குடும்பப் பிரச்னைக்கு முடிவுகட்ட சோனம், கொடூர வழியை தேர்ந்தெடுத்தார். தனது காதலனை விஷம் வாங்கி வரச் செய்தார். அதை தான் சமைத்த உணவில் கலந்து குடும்பத்தினருக்கு திங்கள்கிழமை இரவு பரிமாறி உள்ளார்.

இந்த உணவை சாப்பிட்ட பெற்றோர், பாட்டி, சகோதரர் உள்ளிட்ட 7 பேர் அவரவர் படுக்கையில் இறந்து கிடந்தது கடந்த செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

அதேவேளையில் குளியலறையில் மயங்கி கிடந்தவாறு நாடகமாடிய சோனத்திடம் போலீஸôர், தீவிரமாக விசாரணை நடத்தியபோது மேற்கண்ட தகவல்கள் சில நாள் கழித்து தெரியவந்தன. இதையடுத்து சோனம், நவீன் ஆகியோர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.


தனக்குத் தானே தண்டனை

டிவி நிகழ்ச்சியைப் பார்த்து இளம் பெண் தற்கொலை

ஆக்ரா, செப். 21: டிவி நிகழ்ச்சியைப் பார்த்து இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் "சச் கா சாம்னா' (உண்மையை எதிர்கொள்ளுதல்) என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

நாடு முழுவதும் புகழ்பெற்ற "மகாபாரதம்' தொடரில் திரெüபதியாக நடித்த ரூபா கங்குலி அந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சி சனிக்கிழமை ஒளிபரப்பப்பட்டது.

ரூபாவின் வாழ்க்கையும், தனது வாழ்க்கையைப் போலவே உள்ளதாக நினைத்து உள்ளம் உடைந்த ஆக்ராவைச் சேர்ந்த பல்லவி (32) என்பவர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

"உலகத்தில் என்னைத் தவிர எல்லோரும் நல்லவர்கள். நான் சிறந்த மகளாக, தாயாக, சகோதரியாக, மனைவியாக நடந்து கொள்ள முடியவில்லை. எனவே இந்த உலகை விட்டுச் செல்கிறேன்' என தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். (இது போல பொய் வரதட்சணை புகார்களை கொடுத்து பல அப்பாவி குடும்பங்களை சீரழிக்கும் பிசாசுகளும் தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொண்டால் தான் நாட்டில் நீதியும் தர்மமும் பிழைக்கும். நீதிமன்றங்கள் ஒரு போதும் இந்த உண்மையான குற்றவாளிகளை தண்டிப்பதில்லை)

தனது கணவரைப் பிரிந்த பல்லவிக்கு 12 வயதில் மகன் உள்ளார். இறப்பதற்கு முன் தர்மேந்திரா என்பவருடன் அவர் வாழ்ந்து வந்தார். தர்மேந்திராவும் முதல் மனைவியைப் பிரிந்தவர்.

"ரூபா கங்குலியின் நிகழ்ச்சியைப் பார்த்ததில் இருந்தே பல்லவி நிம்மதி இழந்து காணப்பட்டார். ரூபாவின் கடந்த கால வாழ்க்கை குறித்த சில கேள்விகள் பல்லவியை மிகவும் பாதித்தன' என தர்மேந்திரா கூறினார்.

"சச் கா சாம்னா' நிகழ்ச்சியில் பங்கேற்பவரிடம் உண்மையைக் கண்டறியும் கருவி முன் 50 கேள்விகள் கேட்கப்படும். அவர் கூறும் பதில் அவருக்கே தெரியாது. அதன் பின்னர் நிகழ்ச்சியின்போது முன்னர் கேட்ட கேள்விகளில் சில கேட்கப்படும். நிகழ்ச்சியில் அவர் கூறும் பதில் முன்னர் கூறியதற்கு முரண்பாடாக அமைந்தால் பங்கேற்றவர் தோற்றவராகக் கருதப்படுவார்.

பதில்கள் ஒரே மாதிரியாக இருந்தால் அடுத்தடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். ஒவ்வொரு சுற்றிலும் பரிசுத் தொகை வழங்கப்படும். 6-வது சுற்றில் ஒரே ஒரு கேள்வி கேட்கப்படும். அதில் வெல்பவருக்கு ரூ.1 கோடி பரிசு அளிக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவரின் அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி கேள்வி கேட்பதாக எதிர்ப்பு எழுந்தது.

இந்திய கலாசாரத்துக்கு எதிராக இருப்பதாகக் கூறி இந்த நிகழ்ச்சியைத் தடை செய்ய வேண்டும் என சமாஜவாதி எம்.பி. கமல் அக்தர் மாநிலங்களவையில் கோரிக்கை விடுத்தார்.

Sunday, September 20, 2009

கட்சிகள் செய்யும் கலாட்டா

கணவருடன் சேர்த்து வைக்க போராடிய பெண் பச்சிளம் குழந்தையுடன் கைது
செப்டம்பர் 21,2009

நாகர்கோவில் : கணவருடன் சேர்த்து வைக்க கோரி, போராட்டம் நடத்தி வந்த பெண்ணை, பச்சிளம் குழந்தையுடன் போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்த கண்ணனுக்கும், இரணியல் கோணம் பகுதியை சேர்ந்த எம்.சி.ஏ., பட்டதாரியான கோபிகா(23)வுக்கும் திருமணம் நடந்தது. சில மாதங்களில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கோபிகா தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில், கோபிகாவுக்கு குழந்தை பிறந்தது. கணருடன் பேசி சேர்ந்து வாழ விரும்பினார். ஆனால், கணவர் வீட்டார் விரும்பவில்லை.

கோபிகாவை அவரது கணவர் வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தை தே.மு.தி.க., அறிவித்தது. இதற்காக, கோபிகா தனது குழந்தையுடன் பாலப்பள்ளம் சென்றார். அங்கு வந்த போலீசார், கண்ணன் வீட்டில் யாரும் இல்லாததால், திரும்பி செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்து குழந்தையை ரோட்டில் படுக்க வைத்து கோபிகா போராட்டம் நடத்தினார். இதை தொடர்ந்து கோபிகாவை அவரது குழந்தையுடன் போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து, மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
=======================
இது போல பொய் வதட்சணை கேசுகளில் சிக்கித் தவிக்கும் பல அப்பாவி பெண்களையும் குழந்தைகளையும் காப்பாற்ற இந்த கட்சிகள் உண்மையாகவே போராடுமா?

Saturday, September 19, 2009

இது போலிஸ் மாதம்

காவல் துறையில் உள்ளவர்கள் உணர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு!

சில நாட்களுக்கு முன் வந்த மற்றொரு செய்தி
ஐ.பி.எஸ்., அதிகாரி மீது புது மனைவி புகார்

=================================
இப்போது வந்துள்ள செய்தி

மதுரை இன்ஸ்பெக்டர் மீது மனைவி புகார்
செப்டம்பர் 20,2009

சேலம்: "வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட என் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மதுரை இன்ஸ்பெக்டர் மீது, மனைவி புகார் கூறியுள்ளார். சேலம் கல்லூரி பேராசிரியை சாந்தி, போலீஸ் டி.ஜி.பி.,க்கு அனுப்பியுள்ள மனு விவரம்:

எனக்கும், சரவணரவி(43) என்பவருக்கும், 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்கு தீரஜ்(8) என்ற மகன் உள்ளான். திருமணத்தின் போது, 50 சவரன் நகை, 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசை கொடுக்கப்பட்டது (என்ன ஆச்சரியம் வரதட்சணை என்ற வார்த்தைக்கு பதிலாக சீர்வரிசை என்று எழுதப்பட்டுள்ளதே!). திருமணமான போது, சரவணரவி ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்தார். தொடர்ந்து, சங்ககிரி, ஏற்காடு, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் பணியாற்றினார். சேலம் கொண்டலாம்பட்டியில் உள்ள சவுடேஸ்வரி கல்லூரியில், நான் பேராசிரியையாக பணியாற்றுகிறேன்.

ஐந்து ஆண்டு கணவன், மனைவியாக சேர்ந்து வாழ்ந்த நிலையில், சரவணரவிக்கு பெண்கள் பலருடன் தொடர்பு இருந்தது தெரிந்தது. அதை தட்டிக் கேட்ட போது, அடித்து உதைத்ததுடன், தகாத வார்த்தைகளால் திட்டினார். மகன் தீரஜுக்கு ஜாதி சான்றிதழ் பெற முயற்சித்த போது, அவருடைய ஜாதி சான்றிதழை தர மறுத்துவிட்டார்.அவர் ஆவணத்தில், இசை வேளாளர் என்ற ஜாதியில் சான்றிதழ் பெறப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தேன். நாங்கள் இருவரும் செங்குந்தர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

ஆனால், இசைவேளாளர் பிரிவில் சான்றிதழ் பெற்று வேலையில் சேர்ந்துள்ளார். அதன் பின், என் சான்றிதழை கொண்டு, மகன் தீரஜுக்கு ஜாதி சான்றிதழ் பெற்றேன். ஏற்காட்டில் எஸ்.ஐ.,யாக பணியாற்றிய போது, வேறு ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பால், அவரை திருமணம் செய்து கொண்டார். அதற்கு அவரது பெற்றோரும் உடந்தையாக இருந்தனர். இது பற்றி கேட்டபோது, என்னை விரட்டியடித்து விட்டனர். என்னுடைய 70 சவரன் நகை மாமனார், மாமியார் வசம் உள்ளது. தற்போது, மதுரை வணிக கூட்டுறவு புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டராக சரவணரவி பணியாற்றி வருகிறார். பலமுறை அவரை தொடர்பு கொண்டு பேச முயற்சித்தும் முடியவில்லை. இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.



தமாசு - கொஞ்சம் சிரிச்சிட்டுப் போங்க

புதுடில்லி: "பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையைத் தவிர்க்க, பெண்கள் பாதுகாப்புச் சட்டத்தை, அனைத்து மாநிலங்களும், தீவிரமாக அமல்படுத்த வேண்டும்' என, மத்திய அரசு அறிவுறுத்துயுள்ளது.அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:வட மாநிலங்களில் நடைபெறும் கட்டாயத் திருமணத்தைத் தடுத்தால், அங்கு பெண்கள் தற்கொலையும், கவுரவத்தைக் காப்பாற்றுவதற்காக நடைபெறும் கொலைகளையும் தவிர்க்க முடியும்.பெண்களைப் பாதுகாக்க, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், தற்போதைய நிலைமை மோசமாகவே உள்ளது. கற்பழிப்பு மற்றும் வன்முறையால் பெண்கள் உயிரிழக்கையில், அதற்கான முதல் தகவல் அறிக்கையை, காவல் நிலையங்கள் பதிவு செய்வதே இல்லை என, புகார்கள் வந்த வண்ணம் உள்ளன (பொய் 498A புகார்களை எழுதி பிறகு பதிவு செய்வதற்கே நேரம் போதவில்லையே). பெண்களுக்கு எதிரான எந்தக் குற்றத்திற்கும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய காவல் நிலையங்கள் தயங்கக் கூடாது (ஆண்களுக்கு எதிராக சட்டத்தின் துணையோடு குற்றங்கள் செய்ய தயங்காமல் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்கிறார்களே போதாதா?).

குற்றம் நடந்த மூன்று மாதங்களுக்குள், பாரபட்சமற்ற புலனாய்வின் அடிப்படையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட வேண்டும் (பாரபட்சமற்ற புலனாய்வு என்றால் என்னவென்று தனியாக ஒரு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்!). புலனாய்வுக்கான தகவல்களைப் பெறுவதில் எந்தக் குறைபாடும் இல்லாமல் பார்த்துக் கொள்வது, காவல் துறை மற்றும் நிர்வாகத்தினரின் கடமை. (அதில் எந்த வித குறையுமில்லாமல் "வாங்கிக் கொள்கிறார்களே").காவல் துறையில் பெண்களை அமர்த்துவதில் 33 சதவீத இட ஒதுக்கீட்டை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் (50 சதவீதம் கொடுத்தால் என்ன குறைந்து விடப்போகிறது?).பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவிகளைப் பாதுகாக்கும் வகையில், குற்றம் அதிகம் நடக்கும் இடங்களை அடையாளம் கண்டு, அங்கு கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும்.(அப்படிப் பார்த்தால் காவல் நிலையங்களுக்குத்தான் முதலில் அதிக பாதுகாப்பு தரவேண்டும்).

மாணவிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க, விரைவு மற்றும் குடும்ப நல கோர்ட்டுகளை அமைக்க வேண்டும்.பெண் குழந்தைகள் இறப்பைத் தடுக்க, காவல் துறையினர், சுகாதாரத் துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும். கற்பழிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்வுக்கு முக்கியத்துவம் தந்து, அவர்களுக்கு அறிவுரை வழங்க, உளவியல் படித்தவர்களைப் பணியமர்த்த வேண்டும்.இவை உட்பட, மேலும் 31 நடவடிக்கைகளை, விரைந்து எடுக்குமாறு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் ஒரு கிராமத்தில், ஒரே கோத்திரம் கொண்ட பெண்ணை மணந்ததற்காக, கட்டப் பஞ்சாயத்து நடத்தப்பட்டு, அந்த உத்தரவின் பேரில் ஒருவர் கொல்லப்பட்டார்.இதையடுத்தே, பெண்கள் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

========================

இந்த செய்தியையும் படிச்சுடுங்க. அப்பதான் மேலுள்ள செய்தியில் சொல்லப்பட்ட காமெடியின் கருத்து முழுதாகப் புரியும்.

ஆயுதப்படை பெண் போலீசாருக்கு எஸ். ஐ.,க்கள் பாலியல் தொந்தரவு

செப்டம்பர் 20,2009

சேலம்: சேலம் ஆயுதப்படையில் பணி செய்யும் பெண் போலீசாரிடம், இரவு நேரங்களில், தணிக்கை என்ற பெயரில், எஸ்.ஐ.,க்கள் சிலர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக, டி.ஜி.பி.,க்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து, உயரதிகாரிகள் விசாரிக்கின்றனர். ஆயுதப்படை போலீசார், முதல்வர், டி.ஜி.பி., மற்றும் கமிஷனருக்கு அனுப்பிய மனு விவரம்: சேலம் மாநகர ஆயுதப்படையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் போலீசார் உள்ளனர். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின் போது, ஆயுதப்படை இன்ஸ்பெக்டர், தெரிந்த ஒருவரை அழைத்து வந்து, "சென்னையில் இருந்து டி.ஜி.பி., அனுப்பி வைத்துள்ளார். அவரிடம், 50 ரூபாய் கொடுத்து அனைவரும் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் செய்து தரும் அடையாள அட்டையை, கழுத்தில் மாட்டிக் கொள்ள வேண்டும்' என, கூறினார்.

ஆனால், தேர்தல் முடிந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் அடையாள அட்டை வழங்கப்படவில்லை. வங்கி ஏ.டி.எம்., கார்டு இருந்தும், சம்பளத்தை தவிர இ.டி.ஆர்., - டி.ஏ., நிலுவைத் தொகை பணத்தை, வங்கி கணக்கில் போடுவதில்லை. அந்த பணத்தை பெறுவதென்றால், 100, 200 ரூபாய் வரை லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வாங்க முடிகிறது. ஜி.பி.எப்., - இ.எல்., சரண்டர் போன்ற பணத்தை பெறும்போது, கருவூல ஏட்டாக பணியாற்றிய கோவிந்தனுக்கு, 300 ரூபாய் வரை கொடுக்க வேண்டிய நிலை இருந்தது. லஞ்சம் வாங்கும் பணத்தில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்களுக்கு பிரித்து கொடுத்து, அவர் அதே பதவியில் தொடர்ந்து நீடித்து வருகிறார்.

இதே போன்று, ஆயுதப்படையில், "எஸ்கார்ட்' பணி இல்லாமல், "கார்டு' பணி செய்ய, 500 ரூபாய் வரை போலீசாரிடம் பெறப்படுகிறது. மூன்று மாதத்துக்கு முன் லஞ்சம் வாங்கிக் கொண்டு டூட்டி போடுவதாக அளித்த புகாரையடுத்து, ரைட்டர்கள் அனைவரும் மாற்றப்பட்டனர். கணேசன் என்ற ரைட்டர் மட்டும் மாற்றப்படவில்லை. அவர் இன்ஸ்பெக்டருக்கு பணம் வசூல் செய்து தருவதால் அவரை கண்டுகொள்ளவில்லை. இரவு நேரங்களில் ஆயுதப்படையில், "கார்டு டூட்டி' செய்யும் பெண் போலீசாரிடம் தணிக்கை என்ற பெயரில், எஸ்.ஐ.,க்கள் சிலர் பாலியல் தொந்தரவு கொடுக்கின்றனர்.

இது பற்றி புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. சேலம் மாநகர ஆயுதப்படையில் பணியாற்றும் போலீசாரை, கொத்தடிமைகள் போல் நடத்துகின்றனர். இங்கு நடக்கும் ஊழல், முறைகேடுகளை உயரதிகாரிகள் விசாரிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் பழனிசாமி கூறுகையில், "தேவையில்லாத புகார் கூறுகின்றனர். அடையாள அட்டையைப் பொறுத்தவரை, ஒவ்வொரு மாவட்டத்துக்கு ஒரு ஆள் போட்டோ எடுக்க வந்தார். "

நைட் டூட்டியில்' பெண் போலீசார் நியமிப்பதில்லை' என்றார். போலீஸ் துணை கமிஷனர் ஜான்நிக்கல்சன் கூறியதாவது: மாநகர ஆயுதப்படை புகார் குறித்து எனக்கும் மனு வந்தது. டி.ஏ., - இ.எல்., சரண்டர் பணத்தை கையிலே கொடுப்பதில்லை, எஸ்.பி.ஐ., வங்கியில் அவரவர் கணக்கில் செலுத்தி விடுகிறோம். மாநகர ஆயுதப்படை போலீசாரிடம் தனித்தனியாக விசாரித்தும், ஒருவரும் புகார் குறித்து வாய்திறக்கவில்லை. ஆனால், மனுவாக அனுப்புகின்றனர். நாங்கள் எப்படி விசாரணை நடத்துவது? இவ்வாறு ஜான்நிக்கல்சன் கூறினார்.



Thursday, September 17, 2009

சராசரி இந்தியன்....

வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் பற்றிய விவாதம்
(நன்றி: http://tamil498a.blogspot.com/)

பகுதி 1


பகுதி 2


=========================
இது போன்று எத்தனை விவாதங்கள் நடந்தாலும் சராசரி இந்தியர்கள் பொம்பளை சொல்றத மட்டும் தான் கேட்பார்கள்....உண்மையைப் பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்கள்.

சராசரி இந்தியன்



என்ன தண்டனை தருவார்களோ ?

பீர் குடித்த பெண்ணுக்கு பிரம்படி தண்டனையை நிறைவேற்ற தீவிரம்

செப்டம்பர் 18,2009

கோலாலம்பூர்: "ஓட்டலில் பீர் குடித்த பெண் ணுக்கு விதிக்கப்பட்ட பிரம்படி தண்டனையை, விரைவில் நிறைவேற்ற வேண்டும்' என, மலேசியாவில் வசிக்கும் பெரும்பான்மை மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மலேசியாவைச் சேர்ந்தவர் கார்த்திகா சாரி தேவி சுகர்னோ என்ற மலேசிய பெண். ஓட்டல் ஒன்றில் பீர் குடித்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மலேசிய கோர்ட்டில் நடந்த விசாரணையின் முடிவில், பீர் குடித்ததற்காக இவருக்கு ஆறு பிரம்படிகள் கொடுக்கும்படி தீர்ப்பு வழங்கப்பட்டது.மலேசியாவில் முதல் முறையாக பெண் ஒருவருக்கு பிரம்படி தண்டனை வழங்கும்படி தீர்ப்பு அளிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்தன. ரம்ஜான் புனித மாதம் துவங்கியதை ஒட்டி, கார்த்திகாவுக்கு தண்டனை வழங்கப்படுவது ஒத்தி வைக்கப்பட்டது.இந்த வழக்கு தற்போது மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் ரம்ஜான் மாதம் முடிவுக்கு வரவுள்ளதை அடுத்து, கார்த்திகாவுக்கு பிரம்படி வழங்க வேண்டும் என, மலேசியாவில் வசிக்கும் பழமைவாத கொள்கை யை பின்பற்றுவோர் வலியுறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, கெலந்தன் மாகாணத்தில் வசிக்கும் பெரும்பாலானோர் இதை வரவேற்றுள்ளனர். அப்துல் ஹமீத் என்பவர் கூறுகையில், "கார்த்திகாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை மிக கடுமையானது அல்ல. பாடம் கற்பிக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவே இந்த தண்டனை விதிக்கப்பட் டுள்ளது. ரம்ஜான் மாதம் முடிந்ததும், அவருக்கான தண்டனை நிறைவேற்ற வேண்டும்' என்றார்.
============================
பீர் குடித்ததற்கே இந்த தண்டனை என்றால் நம்ம ஊரில் காசு பறிப்பதற்காக (நவீன விபச்சாரம்) பொய் கேசு போட்டு வயதான பெற்றோர்களையும், குழந்தைகளையும் சிறைக்கு அனுப்பும் குடும்ப "குத்து" விளக்குகளுக்கு என்ன தண்டனை தருவார்களோ அந்த நாட்டில்?

Wednesday, September 09, 2009

(மரச்)சட்டத்தை வளைக்கலாம் அல்லது உடைக்கலாம்!

ஐ.பி.எஸ்., அதிகாரி மீதான புகார்: அடக்கி வாசிக்க போலீசார் முடிவு

Dinamalar News: செப்டம்பர் 10,2009
இது தொடர்பான முந்தைய செய்தியை இங்கே காணலாம்: கணவர் மற்றும் அவரது "குடும்பத்தினர்"


ஐ.பி.எஸ்., அதிகாரிக்கும், அவரது மனைவிக்கும் இடையேயான பிரச்னை, ஜம்மு-காஷ்மீரில் நடந்துள்ளது. அதனால், மனைவியை துன்புறுத்தியதாக ஐ.பி.எஸ்., அதிகாரி மீது சென்னையில் வழக்கு பதிவு செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னையில் வங்கி அதிகாரியாக பணிபுரியும் பெண் சர்மிளா. இவரும் காஷ்மீரில் துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வரும் சாமுவேலுவும், பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். கொஞ்ச நாட்கள் ராமநாதபுரத்திலும், மதுரையிலும் தங்கிருந்த அவர்கள், பிறகு சென்னைக்கு வந்து ஓட்டலில் தங்கியுள்ளனர். அதன்பின் காஷ்மீர் சென்றுள்ளனர். சமீபத்தில், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் கொடுத்த சர்மிளா , "சென்னையில் தங்கியிருந்தபோது, எனது கணவர் கொடுமைப்படுத்தினார்' என, தெரிவித்திருந்தார்.

உடன் ஜம்முவில் இருந்து சென்னை வந்த ஐ.பி.எஸ்., அதிகாரி சாமுவேல், தன் விளக்கத்தை வரதட்சணை தடுப்புப் பிரிவு போலீசில் அளித்தார். இதிலிருந்தே, சாமுவேலும், சர்மிளாவும் பல இடங்களில் தங்கியிருந்துள்ளது தெரிகிறது. அப்படியானால், ஐ.பி.எஸ்., அதிகாரி மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்து, அதை ராமநாதபுரம் மாவட்ட போலீசாருக்கு அனுப்ப வேண்டும். ஜம்முவிலும் அவர்களுக்குள் பிரச்னை நடந்துள்ளது. இப்பிரச்னைக்கு கிடையே, "எங்களுக்குள் நடந்த திருமணம் செல்லாது' என அறிவிக்க கோரி, சென்னை கோர்ட்டில் ஐ.பி.எஸ்., அதிகாரி சாமுவேல் மனு தாக்கல் செய்தார்.

ஜம்முவில் இருந்து சாமுவேல், மனைவி புகாரால் சென்னைக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதே போல், மனைவி மீதான விவகாரத்தில், ஐ.பி.எஸ்., அதிகாரி ஜம்முவில் வழக்கு தொடர்ந்தால், சென்னையில் உள்ள சர்மிளா, அங்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இப்பிரச்னையை சட்ட ரீதியாக எதிர்கொள்ளாமல், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள குடும்பநல ஆலோசனை மையத்தில் அணுகி தீர்வு காண, அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. காஷ்மீர் ஐ.பி.எஸ்., அதிகாரி மீது சென்னையில் வழக்கு பதிவு செய்தால், அதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அதனால், ஐ.பி.எஸ்., அதிகாரி மீதான விவகாரத்தை தற்போதைக்கு சென்னை போலீசார் அடக்கி வாசிக்க முடிவு செய்துள்ளனர்.

=========================

நாடு விட்டு நாடு போய் நடக்காத சம்பவங்களை நடந்ததாக பொய் புகார் கொடுக்கும் போது கேசு பதிவு செய்து அப்பாவி கணவரின் குடும்பத்தாரை கூட்டமாக கைது செய்யும் போதும், வெளிநாட்டில் இருப்பவர்களை கேசுகளில் சிக்க வைக்கும் போது ஒரு துளி கூட இது போல சிந்திப்பதில்லையே?

பலமிருந்தால் (மரச்)சட்டத்தை வளைக்கலாம் அல்லது உடைக்கலாம். என்ன "பலம்" என்று உங்களுக்குத் தெரியும்!


Tuesday, September 08, 2009

ஆல் போல தழைத்துப் பெருகும் 498A வியாபாரம்

498A வியாபாரம் எத்தனை வியாபாரிகளை வாழவைத்துக் கொண்டிருக்கிறது பாருங்கள். தற்போது குடும்பங்களில் ஏற்படும் பிளவுகளுக்கு அடிப்படை காரணங்கள் வேறு. ஆனால், கல்லில் நார் உறித்து எல்லா விஷயத்திலேயும் காசு பார்த்துவிடுவார்கள்! எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம் தான்.

ஒரு பக்கம் குடும்பங்களை அழிக்கும் IPC498A, DV, DP3 போன்ற பாரபட்சமான சட்டங்கள் மறு பக்கம் விவாகரத்து எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று சுற்றுலா வியாபாரத்திட்டம். இரண்டு பக்கமும் வருமானம் தான்!

தனியாக சுற்றுலா சென்று வந்தவுடன், சுற்றுலா சென்ற இடத்தில் தனியாக இருக்கும் போது கணவன் வரதட்சணை கேட்டு கொலை செய்ய முயற்சித்தார் என்று பொய் 498A கேசு பதிவு செய்துவிடலாம். கணவனின் செலவிலேயே அவனுக்கு சமாதி கட்டி விடலாம். நல்ல திட்டம் தான்.

விவாகரத்து கோரும் தம்பதிகளுக்கு சுற்றுலா திட்டம்
Dinamalar News:செப்டம்பர் 09,2009

மும்பை: விவாகரத்து கோரும் தம்பதிகளுக்காக சிறப்பு சுற்றுலா திட்டத்தை மும்பையை சேர்ந்த நிறுவனங்கள் ஏற்பாடு செய்து வருகின்றன. ஒரு காலத்தில் மேற்கத்திய நாடுகளில் மட்டுமே இருந்த விவாகரத்து வழக்குகள் நம்நாட்டிலும் தற்போது அதிகரித்து விட்டன.

அதிகம் படித்த பெண்களும், அதிகம் சம்பளம் வாங்கும் பெண்களும் சுயமாக சிந்திக்க துவங்கி விட்டனர். இதன் காரணமாக தனித்து வாழும் தைரியம் அதிகரித்து விட்டது. எனவே, விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கையும் பெருகி விட்டது. கூட்டு குடும்பத்தில் உள்ள பெண்கள் தனி குடித்தனத்துக்கு சம்மதிக்காத கணவனை விவாகரத்து செய்ய துணிகின்றனர். இதுபோன்ற தம்பதியரை ஒன்றிணைத்து ஏதாவது ஒரு இடத்துக்கு சுற்றுலா அழைத்து செல்லும் திட்டத்தை,விவாகரத்து வழக்கை கவனிக்கும் வக்கீல்களின் துணையோடு செயல்படுத்தி வருகின்றன.

மும்பையை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனங்கள். மும்பையில் உள்ள கே.வி.டூர் அண்ட் டிராவல்ஸ் நிறுவன தலைவர் விஜேஷ் தாக்கர் குறிப்பிடுகையில், "விரக்தியின் விளிம்பில் உள்ள தம்பதிகளை தனிமையில் சந்தித்து உறவாட ஏற்பாடு செய்து அதன் மூலம் அவர்களது மணமுறிவை தடுக்கிறோம். உள்நாட்டில் உள்ள மலை வாசஸ்தலங்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ, தம்பதியர் விரும்பும் இடங்களுக்கு அனுப்பி வைக்கிறோம். இதற்கு 35 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகிறது' என்றார்.



Monday, September 07, 2009

கணவர் மற்றும் அவரது "குடும்பத்தினர்"

ஐ.பி.எஸ்., அதிகாரி மீது புது மனைவி புகார்
செப்டம்பர் 08,2009, Dinamalar News

English Version: IPS officer’s wife complains to cops

சென்னை : வரதட்சணை கேட்டு, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர், என்னை அடித்து கொடுமைப்படுத்தினர். ஐ.பி.எஸ்., அதிகாரியான என் கணவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தனியார் வங்கியில் பணியாற்றும் பெண் அதிகாரி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை, முத்தமிழ் நகர், வடக்கு அவென்யூ சாலையில் வசிக்கிறார் எம்.பி.ஏ., பட்டதாரி சர்மிளா. சென்னையில், கரூர் வைசியா வங்கியில், உதவி மேலாளராக வேலை பார்க்கிறார்.

அவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:என் கணவர், ராமநாதபுரத்தைச் சேர்ந்த சாமுவேல். ஜம்மு - காஷ்மீர் ஒதுக்கீடு ஐ.பி.எஸ்., அதிகாரி. ஜம்முவில் 13வது பட்டாலியன் கமாண் டன்டாக பணியாற்றி வருகிறார்.அவர், கிறிஸ்தவ யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவர். நான் இந்து யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவள். இரு குடும்பத்தினர் சம்மதத்துடன் சுயமரியாதை திருமணமாக, இந் தாண்டு பிப்ரவரி 2ம் தேதி சென்னையில் எங்கள் திருமணம் நடந்தது.சென்னை எழும்பூரில் உள்ள ஓட்டலில், எங்கள் முதல் இரவு நடந்தது. ஓட்டல் அறைக்கு நள்ளிரவில் குடிபோதையில் வந்த சாமுவேல், என்னையும், என் குடும்பத்தாரையும், ஆபாசமாகவும், கேவலமாகவும் பேசி, "டார்ச்சர்' செய்தார்.

கணவருடன், பிப்ரவரி 14ம் தேதி, டில்லி வழியாக காஷ்மீர் சென்றேன். அங்கும் என்னையும், என் குடும்பத்தாரையும் அசிங்கமாகப் பேசி, அடித்து சித்ரவதை செய்தார்.என் கணவர், போனில் யாரிடமோ, ஒரு பெண்ணை கொலை செய்து அதை விபத்தாக மாற்றி விடுவதாக பேசிக் கொண்டிருந்தார். அதை நான் கேட்டேன். ஐ.பி.எஸ்., அதிகாரியாக உள்ள அவர், என்னை கொலை செய்யக் கூட தயங்க மாட்டார் என்ற பயம் வந்து விட்டது. சென்னையில் உள்ள என் குடும்பத்தாரை போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தில் சிறையில் தள்ளி விடுவதாக மிரட்டினார்.என் கணவர் சாமுவேல், மனநோயாளி போல் என்னிடம் நடந்து கொண்டார். கடும் குளிர்பிரதேசமான காஷ்மீரில், படுக்கையில் இருந்த என்னை நள்ளிரவில் கீழே தள்ளி விட்டுள்ளார். காய்ச்சல், குளிர் ஜுரத்தில் படுத்தேன். மருத்துவ சிகிச்சை பெறக் கூட அனுமதிக்கவில்லை. இரவு நேரத்தில் வீட்டின் பால்கனியில் பல மணி நேரம் என்னை நிற்க வைத்து கொடுமை படுத்தினார்.

இதற்கிடையே, நான் சென்னைக்கு திரும்பி விட்டேன். என் பெற்றோரிடம், வரதட்சணை அதிகமாக வேண்டும் என கேட்டு மிரட்டினார். மதுரையில் உள்ள போலீஸ் கமிஷனர், மற்றும் சில அரசியல் பிரமுகர்கள், தன் குடும்பத்தினருக்கு நெருக்கம் என கூறி மிரட்டினார். என்னை ஏமாற்றி மோசடியாக திருமணம் செய்து, என் நகைகளை அபகரித்துக்கொண்ட ஐ.பி.எஸ்., அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.கமிஷனர் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை கமிஜனர் ஆசியம்மாளிடம், இந்த புகாரை சர்மிளா அளித்தார். அவர் மனு, குடும்ப நல வழக்குகளை விசாரிக்கும் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மனைவிக்கு கள்ளத்தொடர்பால் விவாகரத்து முடிவு : ஐ.பி.எஸ்., அதிகாரி சாமுவேல் வாக்குமூலம்:

சர்மிளா புகார் கொடுத்த தகவல் அறிந்து வந்த சாமுவேல், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகளிடம் கூறியதாவது:

எனது மனைவி சர்மிளா, பொய்யான புகாரைக் கொடுத்துள்ளார். எனது மனைவிக்கு வெறொருவருடன் தொடர்புள்ளது. அதை மறைக்கத்தான் இப்படி என் மீது அவதூறாக புகார் கொடுத்துள்ளார்.மனைவியை விவாகரத்து செய்ய, குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளேன். நீதிபதியின் முடிவுக்கு கட்டுப்படுவேன். என் மீதான புகாரை சட்ட ரீதியாக எதிர்கொள்ளவுள்ளேன். இவ்வாறு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இது குறித்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது:

சாமுவேல், 1999ம் ஆண்டு நேரடியாக தேர்வான ஐ.பி.எஸ்., அதிகாரி என தெரியவந்துள்ளது. அவரது மனைவி சர்மிளா கொடுத்துள்ள புகார், மத்திய குற்றப்பிரிவில் உள்ள வரதட்சணை தடுப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.புகார் கொடுத்த சர்மிளாவை அழைத்து விசாரிக்க, அப்பிரிவின் உதவி கமிஷனர் விமலாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சாமுவேலிடமும் விசாரிக்க வரதட்சணை தடுப்புப் பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்.ஐ.பி.எஸ்., அதிகாரி சாமுவேல், ஜம்முவில் நடந்ததைச் சொல்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். இப்பிரச்னை விசாரணை அளவிலேயே உள்ளது. இருவரிடமும் விசாரிக்க வேண்டும். கோர்ட்டில் வழக்கு உள்ளதால், கோர்ட் முடிவை பொறுத்து வழக்கு பதிவு செய்யப்படும். இவ்வாறு கமிஷனர் கூறினார்.



மருமகளின் கொடுமை தாங்கமுடியாத 105-வயது பெரியவரின் போராட்டம்

‘Harassed by bahu’, 105-yr-old leads 60 of family on dharna

Indian Express: Tuesday , Jun 09, 2009

Rajkot : This one could well turn the scripts of the teary saas-bahu TV serials on their head. A 105-year-old patriarch of a Rajkot joint family is on a hunger strike against its own daughter-in-law — with some 60 members of his joint family in tow — outside their home in Mahudi gav.

The family’s estranged bahu, they claim, has been harassing them to no end and there was no other way to get it to stop.

From the 105-year-old Arjan to five-year-old Abhay, these 60-odd members of the Thummar family have been holding their dharna in the scorching heat for two days now. They claim Rekha, Arjan’s daughter-in-law, has been a source of constant harassment.

Estranged for over a decade now, Arjan’s grandson, 30-year-old Shantilal, says his wife has been harassing his extended family including his father and his five brothers and their children.

Rekha, 28, on her part, claims it is the husband’s family that has been mentally and physically harassing her.

Rekha married Shantilal in 1996, and after the relationship collapsed, she has filed as many as five police cases under different sections against various members of the husband’s family. These cases were registered with police stations in as different places as Junagadh, Dhoraji, Jamkandorna, Jetput and Jamanagar between 1999 and 2004. The Thammars say the family was being harassed by the police and lawyers all these years, claiming Rekha had a “good rapport” with the cops.

Arjan says he is on an indefinite fast. “I won’t eat until justice is done to us.”

The Thummars have submitted a memorandum to the Rajkot Commissioner of Police. While the Malaviya Nagar police station has begun investigating the complaint, the Thummars maintain they want immediate action against the policemen and lawyers.

“The cops keep trooping into our home every now and then, harassing and even threatening the family members,” a family member claimed.

After the relationship fell through, Rekha has been receiving Rs 3,500 as alimony every month from Shantilal over the past five years. However, she claims that her belongings are still with the in-laws. Rekha and Shantilal have two children, a son (5) and a daughter (7). Both are in Shantilal’s custody.



Sunday, September 06, 2009

அப்பாவித் தாய்மார்களை காக்க ஒரு கூட்டமைப்பு

Moms-in-law of the world unite..

Times of India News:

CHENNAI: After woeful wives and harassed husbands, it’s the turn of mothers-in-law to form an organisation. More than 500 of them from across the country will come together in Bangalore to launch the All-India Mothers-in-law Protection Forum (AIMPF) on Sunday.

For some, it will provide a forum to be heard; for others, it is to break the ‘cruel woman’ stereotype that TV soaps have been reinforcing. So varied is the constitution of the forum that it has as members a university teacher from Chennai, a forensic expert from Delhi and a surgeon from Karnataka.

“In TV dramas, we are the villains; in real life, we are the victims,” said Nalini (name changed), a homemaker from Chennai, who has joined the AIMPF. The organization is being supported by the Save India Family Foundation (SIFF), a Bangalore-based NGO working for ‘harassed husbands’.

So will the AIMPF protect mothers-in-law only from their daughters-in-law and not sons-in-law? “Mostly the women are accused and dragged to court by their daughters-in-law. So we are focussing only on them. The organization is not against anyone; it is for mothers-in-law,” said SIFF public relations officer Virag Dhulia.

The forum plans to use its website, www.aimpf.org, to host discussions and debates. “The forum will take up issues, including amendments to inheritance laws and the Domestic Violence Act,” SIFF convenor Manoj David said.

Some AIMPF members TOI spoke to had horror tales to narrate. One said that whenever she went inside the bath to shower, her daughter- in-law would turn on the geyser from outside.

Supporters of the forum said that though there were several incidents of mothers-in-law torturing their daughters-in-law, there were also many mothers-in-law who silently bore the brunt of domestic violence. “There are several mothers-in-law who are victimised and threatened with Section 498 (a) of the IPC, which speaks of up to three years’ imprisonment for husband’s relatives in dowry harassment cases,” said Virag.
=============================

By Geeta Pandey

A group of Indian mothers-in-law have come together to fight the harassment they claim to endure at the hands of their daughters-in-law.

Fifty women have joined the All India Mothers-in-law Protection Forum (AIMPF), launched in Bangalore city.

A spokeswoman told the BBC that while there were 15 laws to protect the younger generation, there was nothing to protect mothers-in-law from abuse.

India's National Commission for Women has acknowledged the problem.

It says that cases against in-laws are often registered by brides who are protected by strict anti-dowry laws.

But a number of the accusations turn out to be false.

'As vamps'

"The mother-in-law is portrayed as a villain in our society," says Neena Thuliya, coordinator of AIMPF.

"In television serials, films and the media, we are shown as vamps. It's an age-old belief that the mother-in-law physically assaults and mentally tortures the daughter-in-law."

The AIMPF recently did a survey in Bangalore studying cases of abuse and torture filed against the mother-in-law.

Mrs Thuliya says that of the nearly 50 cases they researched, all turned out to be false allegations.

"There was a time when the daughter-in-law had to live with so many restrictions, but now the time has changed. Today's daughter-in-law is free and works outside the home. It's the old mother-in-law who now faces abuse at the hands of the daughter-in-law," Mrs Thuliya says.

"In tele-serials we are the villains, in real life we are the victims," she adds.

Mrs Thuliya says elderly women are sometimes thrown out of their homes by their daughters-in-law.

The forum, she says, will hold meetings every Sunday and will devise strategies to provide support to "harassed mothers-in-law".

The AIMPF says it will also campaign against the demonisation of the mother-in-law in popular culture.

For centuries, in many Indian families, daughters-in-law have been harassed for bringing in "inadequate dowry" - a South Asian tradition where the bride's parents give cash, jewellery and gifts to the groom's family.

The Indian government outlawed giving and accepting dowries in 1961, but the practice continues and even today few arranged marriages take place without an exchange of dowry.

Campaigners say the system has led to the abuse of young brides, making them vulnerable to domestic violence.

Every year, hundreds of women are scalded or even burned alive by their in-laws.

In the past few years, India has introduced several strict laws to protect new brides from abuse and torture.

But it is being accepted by the authorities that the laws are being increasingly misused by young women to harass their in-laws or settle scores.

Story from BBC NEWS:
http://news.bbc.co.uk/go/pr/fr/-/2/hi/south_asia/8241275.stm

Published: 2009/09/07

Saturday, September 05, 2009

இந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கம் கோவையில் கோலாகலத் தொடக்கம்

பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: வலைத்தளத்திற்கு நன்றி!

இந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கம் கோவையில் கோலாகலத் தொடக்கம்

Movement protecting men's rights launched

The Hindu

Tamilnadu - Coimbatore

Coimbatore: Save Indian Family Movement, an organisation focusing on abuse of women-centric laws against men, advocating gender-neutral laws and amendments to the existing laws, has launched its Coimbatore Chapter.

Convenors of the Save Indian Family Movement, Suresh Ram and M.P. Kalaiselvan (Chennai), Manoj David (Bangalore) and G. Prakash (Coimbatore) addressed journalists at Coimbatore on Friday.

They pointed out that laws aimed at protecting women, such as Sec 498 A of Indian Penal Code, Dowry Prohibition Act and Prevention of Domestic Violence Act, had been largely misused against men and this had affected the Indian family system.

Adverting to the suicide statistics of 2005 and 2006, they pointed out that in 2005, 52,483 husbands committed suicide while the number was 28,188 for wives and in 2006, 55,452 husbands committed suicide as against 29,869 suicides by wives.

In the event of the death of a married woman, the husband and his family members were subjected to prolonged legal trails. Such laws could never be a remedy for the sufferings of women and arming them with `terrorising legal weapons' only led to retribution.

They dubbed the cited legal provisions as `draconian women-centric laws'. More than 98 per cent of men faced domestic violence at the hands of their wives and in-laws in the form of verbal abuse, physical abuse, economic exploitation, cheating, infidelity and harassment, but there was no law to provide solace to them.

They said that laws needed to be gender neutral. Women-centric laws sought compensation for women in the event of a divorce even when the woman was a bread winner and saw fathers as incapable of bringing up children.

They demanded a separate Ministry for Men's Welfare, gender equal laws, besides amendments to legal provisions to tone down these legislations.

For help or more information call 98403-24551/99410-12958 or visit www.saveindianfamily.org or www.savefamily.org



Wednesday, September 02, 2009

கருப்பு சுனாமியில் சிக்கிய 89வயது இளைஞர்

89-yr-old gets arrest warrant

Sep 02 2009

Chennai, Sept 1: A family court in the city has issued an arrest warrant against an 89-year-old man who had recently made news by divorcing his 80-year-old wife, as he did not pay her alimony of Rs 1,500 for the last few months, thereby violating the court order.

Simpson Kannan and his wife Rajalakshmi were married in 1949 and have several children and grandchildren.

A few months ago, Simpson filed a divorce petition claiming that his wife and children were harassing him both physically and mentally.

The family court also granted the couple a divorce and ordered that the petitioner pay an alimony amount to his ex-wife to meet her expenses.

As Simpson failed to pay the alimony amount to Rajalakshmi, the woman filed a petition against him for violating the court order and demanded that the court intervene and ensure that the octogenarian paid her Rs 1,500 every month as directed by the courts.

After considering the petition, the family court had ordered Kannan to present himself before the court and give an explanation for not paying the alimony amount to her.

However, the old man did not turn up at the court when the petition was heard and, as a result, the court issued an arrest warrant against him.

Reacting to the court order, Simpson told the media that he did not have any source of income to give alimony.

“I can pay her Rs 1,500 only if my children give me money. But they don’t,” Simpson said.



சும்மா தமாசு!



செப்டம்பர் 03,2009

ஆமதாபாத்:போலீஸ் அதிகாரிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுவது வழக்கம் தான். ஆனால், போலீஸ் அதிகாரியின் அச்சுறுத்தலில் இருந்து அவர் மனைவியைக் காக்க, போலீஸ் பாதுகாப்பு அளிக்கப் பட்டுள்ள சம்பவம், குஜராத்தில் நடந்துள்ளது.குஜராத் மாநில டி.ஐ.ஜி., கமல் குமார் ஓஜா; இவரது மனைவி அமிதா. "அடிக்கடி வரதட்சணை பணம் கேட்டு கணவர் என்னை அடித்து துன்புறுத்துகிறார்'என்று போலீஸ் நிலையத்தில் அமிதா புகார் அளித்தார்.

மேலும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், முதலில் வழக்கு பதிவு செய்ய மறுத்துள்ளனர். (ராமசாமி அல்லது குப்புசாமி மனைவி புகார் கொடுத்தால் கண்ணை மூடிக்கொண்டு பொய் 498A கேசு பதிவு செய்து கூண்டோடு கைது செய்துவிடுவார்கள்) பின்னர் இந்த விவகாரம், உயர் அதிகாரிகள் காதுக்கு போக, அமிதா புகாரை பரிசீலித்து, அவருக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டனர். இதனால், கடுப்பான கமல், வீட்டில் இருந்து வெளியேறி, போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். "என் மனைவி அடிக்கடி இரவு விருந்துக்கு செல்பவள்; "பார்ட்டி கல்ச்சர்க்கு' அடிமையாகிவிட்டதால் இப்படி என் மீது புகார் சொல்கிறாள் என்று குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், தனக்கு செலவுக்கு கூட கமல் பணம் தருவதில்லை என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் அமிதா. இதை தொடர்ந்து, மனைவிக்கு 10 ஆயிரமும், மகன் மற்றும் மகளுக்கு தலா ஐந்தாயிரமும் மாதம் தோறும் வழங்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.தீர்ப்பை எதிர்த்து குஜராத் கோர்ட்டை அணுகினார் கமல் குமார் ஓஜா. தன் மனைவி உயர் பதவியில் இருக்கிறார்; ஆண்டுக்கு இரண்டு லட்சத்து 70 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார்' என்று பதில் மனுவில் கூறியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி தேவானி, கீழ் நீதிமன்ற தீர்ப்பிற்கு தடை விதித்தார். மேலும், பதில் மனு தாக்கல் செய்யுமாறு அமிதாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.



“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.