இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, December 31, 2010

பிறந்த குழந்தையை உயிரோடு மண்ணில் புதைத்தது யார்?

பின்வரும் வீடியோவையும், அதனைத் தொடர்ந்து வரும் செய்தியையும் படியுங்கள்.




மேலுள்ள வீடியோவில் யாரோ பெற்ற பிள்ளைக்கு தனது நன்றிக் கடனை செலுத்தும் வகையில் மிகுந்த பாசத்துடன் ஒரு நாய் வேடிக்கை விளையாட்டு காட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால் பின்வரும் செய்தியில் பெற்ற சிசுவை யாரோ மிகுந்த பாசத்துடன் உயிரோடு மண்ணில் புதைத்திருக்கிறார்கள். பெண்ணின் துணையில்லாமல் குழந்தை பிறக்கமுடியாது என்ற முக்கியமான விஷயத்தை மறந்துவிடாதீர்கள்.


பெரம்பலூர் : பெரம்பலூரில், பிறந்து மூன்று நாளே ஆன ஆண் குழந்தையை மண்ணுக்குள் புதைத்தார் கல் நெஞ்ச தாய். அக்குழந்தையை பெண் ஒருவர் உயிருடன் மீட்டு வைத்திருந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரிக்கின்றனர்.

பெரம்பலூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பா மகன் வேல்முருகன் (14). இவர் இதே பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறான். வேல்முருகன் நேற்று மதியம் 12 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள, பகுதியில் சிறுநீர் கழிப்பதற்காகச் சென்றான்.அப்போது, அங்கு குவிக்கப்பட்டிருந்த மண் முகட்டில் நாய் ஒன்று சுற்றி, சுற்றி வந்துள்ளது. இதை பார்த்த வேல்முருகன், "நாய் குட்டி போட்டிருந்தால் ஒரு குட்டியை எடுத்துச் சென்று வளர்க்கலாம்' என, நினைத்து அங்கு சென்று பார்த்துள்ளான். அப்போது, அங்கு குழந்தையின் தலை மட்டும் வெளியில் தெரிந்துள்ளது. இதை பார்த்த வேல்முருகன் அப்பகுதியில் உள்ள மக்களிடம் தெரிவித்துள்ளான்.

இதைத் தொடர்ந்து இதே பகுதியை சேர்ந்த தேவராஜன் என்பவரது மனைவி முத்துலட்சுமி (40) என்பவர் அங்கு சென்று பார்த்துள்ளார். பிறந்து மூன்று நாளே ஆன ஆண் குழந்தை மூக்கில் மட்டும் லேசான காயத்துடன் மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் உயிருடன் இருந்தது."குழந்தை இல்லாத தனக்கு ஆண் குழந்தை கிடைத்து விட்டது' என, சந்தோஷப்பட்ட முத்துலட்சுமி இக்குழந்தையை மீட்டு வீட்டுக்கு எடுத்துச் சென்று குளிப்பாட்டி, பவுடர் போட்டு அலங்கரித்து வைத்திருந்தார்.


பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சிவ சுப்ரமணியன் சம்பவ இடம் வந்து முத்துலட்சுமியிடம் இருந்த அக்குழந்தையை மீட்டு பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் உள்ள "அரசு தொட்டில் குழந்தைத் திட்டத்தில்' சேர்த்தார்.

பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் வழக்குப் பதிந்து, குழந்தையை உயிருடன் புதைக்கக் காரணம் என்ன?, புதைக்கப்பட்ட குழந்தையின் தாய் யார்? என்பது குறித்து விசாரிக்கிறார்.பிறந்த மூன்று நாட்களே ஆன குழந்தையை உயிருடன் மண்ணுக்குள் புதைத்த கல் நெஞ்ச கொண்ட தாயை பெரம்பலூர் போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

============

பண்பாடு, கலாச்சாரம், மன்னாங்கட்டி என்று புரளி பேசித்திரியும் நாட்டில்தான் இந்த அவலம் அரங்கேறியிருக்கிறது.

தாயுள்ளம் என்பது ஆண், பெண், விலங்கு என்று யாரிடம் வேண்டுமானாலும் இருக்கலாம். பெண் என்ற உருவத்திற்குள் மட்டும்தான் எப்போதுமே தாயுள்ளம் இருக்கும் என்று சொல்லக்கூடாது. அதனால் சட்டங்கள் தாய்மையை மதிப்பதாக இருந்தால் ஆண், பெண் என்ற உருவ வேறுபாட்டின் அடிப்படையில் இல்லாமல் அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும். அப்போதுதான் உண்மையான தாய்மைக்கு பாதுகாப்பும், மரியாதையும் கிடைக்கும். அதுவரை பெண் என்ற உருவில் பேய் கூட சட்டங்களின் துணையோடு வன்முறை செய்துகொண்டிருக்கும். யாரும் அவற்றை இனம்பிரித்துக் கண்டறிய முடியாது.




Thursday, December 30, 2010

குழந்தை பிறப்பதற்கு திருமணம் அவசியமா? - பகுதி 2

குழந்தை பிறக்க திருமணம் அவசியமா? - பகுதி 2

இந்தியாவில் நடக்கும் அதிசயங்கள் பல. அவற்றில் பெண்ணுக்கு அதிசயம் நடந்தால் அது மிகவும் குறிப்பிடப்படவேண்டிய விஷயமல்லவா? எங்கோ ஒரு குடிகாரன் தனது மனைவியை அடித்தால் உடனே நாடெங்கும் உள்ள எல்லாப் பெண்களும் தினம் தினம் தங்களது கணவனாலும் அவனது குடும்பத்தாலும் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று ஒரு புது சட்டமே எழுதிவிடுகிறார்கள்.

Friday, Dec 24, 2010 The Hindu

“Our organisation (All India Democratic Women Association) has dealt with, and continues to deal with, several thousand complaints of dowry harassment, dowry death and domestic violence on a daily basis. It would have been more relevant to consider strengthening of the dowry laws to ensure that women live a life free from violence.”

எங்காவது ஒரு பெண்ணுக்கு எது நடந்தாலும் அதை பிரபலப்படுத்தி அதை ஒரு சிறப்பான செய்தியாக்கி பூதாகாரமாக மாற்றி பணம் பார்த்துவிடவேண்டும் என்பதுதான் பெண்ணடிமைவாதிகளின் அடிப்படைக் கொள்கையாகும். அதன் அடிப்படையிலேயே பின்வரும் செய்தியையும் படித்து மகிழுங்கள்!


தினமலர் டிசம்பர் 29,2010

விழுப்புரம் : உளுந்தூர்பேட்டையில் பள்ளி மாணவிக்கு அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்ததால், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அடுத்த சேந்தமங்கலம் காலனியை சேர்ந்தவர் மல்லிகா (17) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் உளுந்தூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். வழக்கம்போல் நேற்று காலை பள்ளிக்கு வந்த மல்லிகா, தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறியதால், ஆசிரியர்கள் அவரை ஆட்டோ ஒன்றில் வகுப்பு தோழிகள் இருவருடன் வீட்டுக்கு அனுப்பினர். ஆனால், வீட்டிற்கு செல்லாமல், மல்லிகா உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சென்றதும் மருத்துவமனையில் உள்ள கழிவறைக்குள் சென்று சத்தம்போட்டு கதறினார். இதனால், மருத்துவமனை பணியாளர்கள் பதட்டமடைந்து கதவை திறந்து பார்த்த போது, மல்லிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது.தாயையும், குழந்தையையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்து வருகின்றனர். தகவலறிந்த ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள், மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



Wednesday, December 29, 2010

பெண்ணின் பங்களிப்பு இல்லாமல் எதுவும் நடக்காது

பெண்ணின் பங்களிப்பு இல்லாமல் எந்த செயலும் நடக்கமுடியாது. நல்ல காரியம் ஆனாலும் சரி, கள்ளக்காதலில் கணவனைக் கொல்வதானாலும் சரி. எல்லாவற்றிலும் பெண்ணின் பங்கு இருக்கிறது. ஆனால் குற்றம், வழக்கு, சட்டம் என்று வரும்போது பெண்கள் ஏதோ அப்பாவி போல சித்தரிக்கப்பட்டு சட்டங்கள் ஆண்களை மட்டும் தண்டிப்பது ஏன்? குறிப்பாக வரதட்சணை சட்டங்களில் தான் திருமணத்தின்போது வரதட்சணை கொடுத்ததாகக் கூறி ஒரு பெண் 10 ஆண்டுகள் கழித்து வேறு ஏதோ ஒரு காரணத்திற்காக கணவன் மீது வரதட்சணை சட்டத்தின் கீழ் புகார் கொடுத்தவுடன் வரதட்சணைக் கொடுத்த பெண்ணையும் தண்டிக்காமல் அவர் கொடுக்கும் புகாரில் இருக்கும் கணவனை மட்டுமே தண்டிக்கிறார்களே அது ஏன்? வரதட்சணை பரிவர்த்தனை என்ற குற்றம் நடக்க கொடுப்பவர் பெறுபவர் என்ற இரண்டு குற்றவாளிகள் தேவை. ஆனால் தண்டனை என்று வரும்போது “பெண்” என்ற ஒரே காரணத்திற்காக வரதட்சணைக் கொடுத்த குற்றவாளியை விட்டுவிடுகிறார்களே அது ஏன்? எல்லா விஷயங்களிலும் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கப்படவேண்டும். அதுதான் சரியான பெண் சுதந்திரம். இல்லையென்றால் அதற்குப்பெயர் “பேடித்தனம்”.

பின்வரும் செய்தியில் பெண்ணின் பங்களிப்பைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

கள்ளக்காதல் ஜோடிக்கு ஆயுள் : மதுரை கோர்ட் தீர்ப்பு
தினமலர் டிசம்பர் 30,2010

மதுரை : மதுரையில் கள்ள உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த வழக்கில் மனைவி, கள்ளக்காதனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டது.
மதுரை அவனியாபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர் முருகேசன் (34). இவர், தள்ளுவண்டியில் சர்பத் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி வேளாங்கண்ணி (30). இவர்களுக்கு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். அதேபகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் சக்திவேல் (20). இவர், முருகேசனிடம் வேலை பார்த்தார். இவருக்கும், வேளாங்கண்ணிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இவர்களை முருகேசன் பலமுறை கண்டித்தும் கேட்கவில்லை.

கடந்த 2009 செப்.,25ல் இரவு 11 மணிக்கு தனது வீட்டில் வேளாங்கண்ணியும், சக்திவேலும் ஜாலியாக இருந்தனர். அதை, முருகேசன் கதவு துவாரம் வழியாக பார்த்து அதிர்ந்தார். கதவை தட்டியும் திறக்கவில்லை. ஓடுகளை பிரித்து முருகேசன் வீட்டிற்குள் குதித்தார். தயாராக இருந்த வேளாங்கண்ணி, முருகேசனை பிடித்து கொள்ள, அவரது கழுத்தை சக்திவேல் கத்தியால் அறுத்து கொலை செய்தார்.

உடலை, தள்ளுவண்டியில் படுக்க வைத்து, கள்ளக்காதல் ஜோடி பெருங்குடி சுடுகாட்டிற்கு எரிப்பதற்காக மண்ணெண்ணெய் கேனுடன் சென்றனர். சுடுகாட்டிற்கு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை மடக்கினர். உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

இருவரையும் பெருங்குடியின் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கைது செய்தார்.இவ்வழக்கு மதுரை இரண்டாவது விரைவு கோர்ட்டில் நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் பி. அன்புசெல்வன் ஆஜரானார். வேளாங்கண்ணி, சக்திவேல் ஆகியோருக்கு தலா ஆயுள் சிறை தண்டனை, தலா 2,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஜி. தனராஜ் உத்தரவிட்டார். வேளாங்கண்ணி திருச்சி சிறையிலும், சக்திவேல் மதுரை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.



Tuesday, December 28, 2010

குழந்தை பிறக்க திருமணம் அவசியமா?

அதிசயம் இல்லை. ஆனால் உண்மை!

பெண்ணுக்கு பிறந்த குழந்தை
டிசம்பர் 27,2010 தினமலர்

திண்டுக்கல் : நிலக்கோட்டை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிக்கு நேற்று முன்தினம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் சுப்புராஜ். தனது மகளுக்கு ஆசிரியர் வேலை வேண்டி மதுரை பசும்பொன் நகரை சேர்ந்த தனுஷ்கோடி, அவரது மகள் லட்சுமிதேவி, விளாங்குடி ஓய்வு பெற்ற ஆசிரியர் சுந்தர்ராஜ் ஆகியோரிடம் 4 லட்ச ரூபாய் சில மாதங்களுக்கு முன்பு கொடுத்துள்ளார். வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதோடு பணத்தையும் திருப்பி தரவில்லை.

இது குறித்து சுப்புராஜ் மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் மேற்கண்ட மூவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தனுஷ்கோடி, சுந்தர்ராஜ் இருவரும் மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டனர். லட்சுமி தேவி நிலக்கோட்டை பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் இவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.அவருக்கு திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தாய், குழந்தை இருவரும் நேற்று ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

=========

திருமணம் இல்லாமல் ஏற்படும் கருவுருதலுக்கு அரசாங்க சிறப்பு நிதியுதவி கிடைக்குமா? பெண்கள் அமைப்புகள் ஏதாவது ஏற்பாடு செய்துதருவார்களா?

யார் யாரோ செய்கின்ற தவறுக்கு சிறு குழந்தைகள் சிறைக்குச் செல்வதும், தந்தையற்ற அனாதையாவதும் சாதாரணமாகிவிட்டது. பல பொய் வழக்குகளிலும் இப்படித்தான் பல குழந்தைகள் தந்தை இருந்தும் சட்டத்தின் துணையோடு அனாதைகளாக மாற்றப்படுகிறார்கள். இந்தப் பாவங்கள் சும்மா விடாது இந்த நாட்டை.



Saturday, December 25, 2010

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தமிழகம்?

தினமலர் 12/26/2010

தமிழகத்தில், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில், அவர்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழக காவல் துறை, பெண்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கைகளை குறைக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும், குற்றங்கள் குறைந்தபாடில்லை. தமிழக குற்ற ஆவண காப்பக பதிவின்படி, பெண்களுக்கெதிரான குற்றங்கள், கடந்தாண்டை விட 23 சதவீதம் அதிகரித்துள்ளது. பொதுவாக கற்பழிப்பு, மானபங்கம், கடத்தல், பாலியல் கொடுமை, வரதட்சணை கொடுமை, கணவன், உறவினர்களால் கொடுமைப்படுத்தப்படுதல் போன்ற குற்றங்கள் பெண்களுக்கெதிராக அதிகளவில் பதிவாகும். அந்த வகையில், 2008ல் 6,262 வழக்குகள் பதிவாயின. கடந்தாண்டு, 5,126ஆக குறைந்த நிலையில், நடப்பாண்டில் நவம்பர் வரை 5,508 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கற்பழிப்பு: கடந்தாண்டில் குறைந்தாலும், இந்தாண்டு மீண்டும் அதிகரித்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தாண்டில், 626 கற்பழிப்பு புகார்கள் பதிவாகியுள்ளன. சேலம், நெல்லை, விழுப்புரம் மற்றும் சென்னையில் தான் அதிகளவில் கற்பழிப்புகள் நடந்துள்ளன. ஊட்டி மற்றும் கோவையில், தலா ஒரு பள்ளி மாணவி கற்பழிக்கப்பட்டது என, கற்பழிப்பு பட்டியல் நீள்கிறது. கற்பழிப்பு சதவீதம், கடந்தாண்டை விட இந்தாண்டு 12 சதவீதம் அதிகம்.

கடத்தல்: இந்தாண்டு 1,278 புகார்கள் பதிவாகியுள்ளன. இதில், சேலம், விழுப்புரம், நெல்லை, தஞ்சை மாவட்டங்களில் அதிகளவு புகார்கள் வந்துள்ளன. சேலம் மாவட்டத்தில் மட்டும், கடந்தாண்டு 156 பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டுள்ளனர். பெண்கள், பெண் குழந்தைகள் கடத்தல் தொடர்பாக 1,323 புகார்கள் பதிவாகியுள்ளன. சேலத்தில் அதிகபட்சமாக 130 பெண்களும், தேனியில் 71, நெல்லையில் 56, சென்னை மாநகரில் 25 பேரும் கடத்தப்பட்டுள்ளதாக புகார்கள் பதிவாகியுள்ளன. இது கடந்தாண்டை விட 25 சதவீதம் அதிகம். பெண்களும் ஆண்களை விட அதிகளவில் சம்பாதிக்க துவங்கியது, ஐ.டி., துறையில் அதிகளவில் காதல் திருமணங்கள் உள்ளிட்ட காரணங்களால், வரதட்சணை கொடுமையால் இறப்பு இந்தாண்டு சற்று குறைந்துள்ளது. வரதட்சணை கொடுமையால் இந்தாண்டு, இதுவரை இறந்த பெண்கள் எண்ணிக்கை 155. கடந்தாண்டு இது 179ஆக இருந்தது. அடுத்தது, கணவன் மற்றும் உறவினர்களால் கொடுமைப்படுத்துதல் தொடர்பாக 1,409 புகார்கள் இந்தாண்டு பதிவாகியுள்ளன. சென்னை மாநகரில் அதிகபட்சமாக 117 மற்றும் திண்டுக்கலில் 94, தேனி மாவட்டத்தில் 115 புகார்கள் வந்துள்ளன. இது கடந்தாண்டை விட 5 சதவீதம் அதிகம்.

வரதட்சணை: வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ், இந்தாண்டு 183 புகார்கள் பதிவாகியுள்ளன. பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பாக, இந்தாண்டு 534 புகார்கள் பதிவாகியுள்ளன. இது கடந்தாண்டை விட 31 சதவீதம் குறைவு. இதில், அதிகபட்சமாக விருதுநகரில் 97, கன்னியாகுமரி 96, திருச்சியில் 87, சென்னை புறநகரில் 78 புகார்கள் பதிவாகியுள்ளன. இன்னும் டிசம்பர் மீதமிருக்கையில், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்கின்றனர் காக்கிச்சட்டை அதிகாரிகள்.

ஆண்களை பாடாய் படுத்தும் சட்டம்: பெண்களின் நடவடிக்கைகளே, அவர்களுக்கெதிரான குற்றங்களுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன. மேற்கத்திய பாணியில், உடல் பாகங்களை வெளிகாட்டும் நவநாகரிக உடைகள், மது, போதை பழக்கத்திற்கு அடிமையாகுதல், "சாட்டிங்', "டேட்டிங்' போன்றவை எதிர் தரப்பினரை குற்றம் புரிவதற்கு தூண்டுகின்றன. பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்ததும், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் சட்டம் கொண்டுவரப்பட்டது. சட்டம் கொண்டுவரப்பட்ட புதிதில், பெண்களுக்கு நன்மை பயத்த இந்த சட்டம், காலம் செல்லச் செல்ல, ஆண்களுக்கெதிராக பயன்படுத்தப்படும் சட்டமாக மாறிவிட்டது. தற்போது அந்த சட்டம், பிடிக்காத ஆண்கள் மற்றும் கணவரை பழிவாங்கும் நோக்குடன் பயன்படுத்தப்பட்டு வருகிறதே தவிர, உண்மை குற்றவாளியை தண்டிப்பதில் பயன்படுத்தப்படுவதில்லை. சாதாரண வீட்டுச் சண்டை, அலுவலக பிரச்னைகளை கூட பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் அடிப்படையில் கொண்டுவந்து, ஆண்களை படாத பாடு படுத்தி விடுகின்றனர்.

========

மேலுள்ள செய்தியில் செய்திக்கு தலைப்பு எப்படி கொடுத்திருக்கிறார்கள் என்று பாருங்கள். பிறகு கடைசி பகுதியில் அவர்களே உண்மை நிலையை எழுதியிருக்கிறார்கள். பதிவு செய்யப்படும் வழக்கு எண்ணிக்கை என்பது வேறு. வழக்கின் கடைசியில் எத்தனை உண்மையானவை என்பது வேறு.

காசு கொடுத்தால் ஜனாதிபதிக்கே பிடிவாரண்ட் போடும் நாட்டில்இதுபோன்ற “பதிவானவை” என்ற அடிப்படையில் புள்ளி விபரங்களைப் பற்றி எழுதும்போது கவனமாக இருக்கவேண்டும். இப்படித்தான் விஷயங்கள் வேறுவிதமான கோணத்தில் ஊதி பெரிதாக்கப்பட்டு ஒருதலைபட்சமான சட்டங்கள் சுயநலத்திற்காக இயற்றப்படுகிறது. எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம்தான். கடைசியில் எல்லா வீடுகளும் ஒரு நாள் எரியத்தான் போகிறது. அன்றுதான் உண்மை புரியும். இப்போது அந்தத் தீ எப்படி எரிந்துகொண்டிருக்கிறது என்பதைத்தான் செய்தியின் கடைசியில் வெளிச்சம்போட்டு காட்டியிருக்கிறார்கள்.




Thursday, December 23, 2010

உங்கள் ஊர் பெண் போலிஸ்!

தினமலர் டிசம்பர் 23,2010

குளித்தலை : மைனர் பெண்ணைக் கடத்தியதால், நிபந்தனை ஜாமீனில் கையொப்பமிட்டவரிடம், வழக்கை மாற்றி பதிவு செய்ய லஞ்சம் வாங்கிய குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரை, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த, இசக்கிமுத்து மகன் ஆனந்த்(26). கரூர் மாவட்டம், குளித்தலை கலப்புகாலனியில் வசிக்கும் அவர், அக்கா அன்னசெல்வியின் வீட்டில் கடந்த சில ஆண்டாக தங்கியுள்ளார். இதே பகுதியில் வசிக்கும் வேலுசாமி மகள் அனிதா(17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது); திருச்சி ஜெயேந்திரா மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 மாணவி. இவர் தினசரி பஸ்சில் பள்ளிக்கு செல்வது வழக்கம். அப்போது, அனிதாவுக்கும், ஆனந்துக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலானது. கடந்த ஜூன் 6ம் தேதி பள்ளிக்கு சென்ற அனிதா, வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து, குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வரலட்சுமியிடம், வேலுசாமி புகார் அளித்தார். புகாரை பதிவு செய்ய இன்ஸ்பெக்டர் மறுத்ததால், கரூரில் அப்போதைய எஸ்.பி., தினகரனிடம் முறையிட்டு ஒரு மாதம் தாமதமாக ஜூலை 9ம் தேதி புகார் பதிவு செய்யப்பட்டது. பின்னர் நடந்த விசாரணையில், அனிதா மற்றும் ஆனந்தை கண்டுபிடித்து கடந்த மாதம் குளித்தலை குற்றவியல் நீதிமன்றத்தில் மகளிர் போலீசார் ஆஜர் செய்தனர். அனிதா, "மைனர்' என்பதால், அவரை பெற்றோரிடம் ஒப்படைக்க கோர்ட் உத்தரவிட்டது.

ஆனந்த் கைது செய்யப்பட்டு, நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். நாள்தோறும் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஆனந்த் கையொப்பமிட்டுவந்தார். அனிதாவை தன்னுடன் சேர்த்துவைக்க இன்ஸ்பெக்டர் வரலட்சுமியிடம் ஆனந்த் கேட்டுள்ளார். அப்போது, தினசரி போலீஸ் ஸ்டேஷனில் கையொப்பமிடாமல் இருக்க, பதிவான வழக்கை பொய் வழக்காக மாற்றித் தருவதாகவும், இதற்கு 5,000 ரூபாய் ரொக்கம் மற்றும் இரண்டு கம்பளி ஸ்வெட்டர் தனக்கு வாங்கித் தருமாறும் இன்ஸ்பெக்டர் வரலட்சுமி கேட்டுள்ளார். லஞ்சம் அளிக்க மனமில்லாத ஆனந்த், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் நேற்று காலை புகார் அளித்தார். போலீசார் வழிகாட்டுதலின் படி, நேற்று மாலை 3.45 மணிக்கு குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டர் வரலட்சுமியிடம் 5,000 ரூபாய் மற்றும் இரண்டு ஸ்வெட்டரை அளித்தார். இன்ஸ்பெக்டர் வரலட்சுமி அவற்றை பெற்றுக்கொண்டதும், மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், டி.எஸ்.பி., அம்பிகாபதி தலைமையில், இன்ஸ்பெக்டரை கையும் களவுமாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

=====

குடும்பப் பிரச்சனைகளை மென்மையாகக் கையாளவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் தற்போது அங்கு நடந்துகொண்டிருக்கும் அவலங்கள் சொல்லி மாளாது. ஒரே ஒரு பொய் வரதட்சணை வழக்குக் கிடைத்துவிட்டால் போதும் இங்கு இருப்பவர்கள் ஒன்று கூடி கும்மியடித்துப் பாட்டுப்பாடி ஏமாந்த கணவன் வீட்டாரிடம் முடிந்தவரை கறந்துவிடுகிறார்கள். அதே சமயம் பொய்வழக்குக்கொடுக்கும் கயவர்களிடமிருந்தும் பணத்தைக் கறக்க மறந்துவிடுவதில்லை. இதுதான் இன்று பொய் வரதட்சணை வழக்குகளில் நடந்துகொண்டிருக்கும் அவலம்.

இந்த அவலத்தை சென்னை உயர்நீதிமன்றம் 2008ல் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து மகளிர் காவலர்களுக்கு காக்கியை மாற்றி வேறுவித நிற சீருடை கொடுக்கவேண்டும், மென்மையான குடும்பப் பிரச்சனைகளை எப்படி சரியாகக் கையாளவேண்டும் என்று பயிற்சி அளிக்கவேண்டும் என்று தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் வழக்கம்போல் அதை காதில் வாங்கிக்கொள்வதற்கு ஆள் இல்லை!

சென்னை உயர்நீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றறிக்கை

2. In respect of suggestion Nos.8 and 11 made by this Court; in the letter, dated 01.08.2008, of the Director General of Police, it has been stated as follows:-

" 2) With regard to the suggestion No.8, i.e., "A different Uniform other than the regular one may be recommended for these police officers" - the matter requires deliberations at length with Senior Police Officers in the State. All the Senior Officers have been addressed to send their view on the subject. After obtaining their views the matter will be discussed at State Headquarters and a report in this regard will be sent.

3) With regard to suggestion No.11 - Director General of Police, Training has been addressed to initiate action to conduct Education programme for Police Officers on the objects of the legislation, judicial pronouncements and development of law. Further progress report will be sent. "

It must also be pointed out that though several such suggestions and instructions were earlier made/issued in that perspective by the Honourable Supreme Court as well as this Court, there was no expected progress or outcome since, in course of time, the system started trailing with the same deviation and anomalies to reform/correct which the instructions were issued. At least now, this Court is anxious to see that the directives are strictly followed perpetually with letter and spirit by the Investigating Officers of the Department in particular the officers posted at the All Women Police Stations.



Monday, December 20, 2010

காதலுக்கு இது புதுசா?

காமம் ஒருபடி மேலே சென்று நன்றாகவே வளர்ச்சியடைந்திருக்கிறது.
இந்தியாவில் பொய் கற்பழிப்பு வழக்குகள் இப்படித்தான் உருவாகின்றன.

திருமணத்துக்கு வற்புறுத்தி துப்பாக்கியுடன் காதலனின் வீடு புகுந்து நர்ஸ் மிரட்டல்
தினகரன் 12/21/2010

மார்த்தாண்டம் : அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சத்தியாபதி (24). விருத்தாச்சலம் அரசு மருத்துவமனை நர்ஸ். மார்த்தாண்டம் கொடுங்குளத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (28). சென்னை அம்பத்தூரில் ஒரு கம்பெனியில் டிரைவராக உள்ளார். சத்தியாபதியின் அண்ணன் கதிரேசன் அதே கம்பெனியில் டிரைவராக உள்ளார். சத்தியாபதி அடிக்கடி செல்போனில் அண்ணனுடன் பேசுவது வழக்கம். அப்போது, செல்வகுமாருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதற்கிடையே திடீரென கடந்த சில தினங்களாக செல்வகுமார், சத்தியாபதியுடன் பேசுவதை நிறுத்தினார். இதனால், நேற்று காலை சத்தியாபதி மார்த்தாண்டத்தில் உள்ள காதலன் வீட்டுக்கு சென்றார்.

அங்கிருந்த அவரது தாயாரிடம் தனக்கு செல்வகுமாரை திருமணம் செய்து வைக்குமாறு கூறினார். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சத்தியாபதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்வதாக கூறி துப்பாக்கியை எடுத்து காட்டினார். திடீரென அறைக்குள் புகுந்து கதவை பூட்டி கொண்டார். அங்கு மின்விசிறியில் தூக்குபோட முயன்றுள்ளார். அவரை காப்பாற்றி வெளியே கொண்டு வந்தனர்.

தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார், அவரிடம் இருந்த போலி துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். போலீசாரிடம் சத்தியாபதி கூறுகையில், ‘’செல்வகுமார் திருமணம் செய்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்றார். இதில் நான் கர்ப்பமானேன். பின்பு கருக்கலைப்பு செய்தேன். இது ஊரில் எல்லோருக்கும் தெரியும். செல்வகுமாருக்கு வேறொரு இடத்தில் பெண் பார்ப்பதாக தகவல் கிடைத்தது. நான் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை. எனது பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துள்ளேன்’’ என்றார்.



Sunday, December 19, 2010

மறைந்துபோகும் கண்கள்

தாய்மையின் பெயரால் பெண்கள் செய்யும் அட்டூழியங்கள் கட்டுக்கடங்காமல் போய்விட்டது. பின்வரும் செய்தியில் ஒரு இளம் பெண் காதல் திருமணம் செய்துகொண்டு பிள்ளையும் பெற்றுவிட்டு பிறகு தனது சொந்தப் பிரச்சனைக்காக தான் பெற்ற சிசுவையே கிணற்றில் வீசி கொன்றுவிட்டு பெண்களின் சிறப்புத்தன்மையான தாய்மையை முகமூடியாக்கிக்கொண்டு அப்பாவிபோல நாடகமாடியிருக்கிறார். இதுபோலத்தான் நாட்டில் பல பெண்கள் “பெண்மை”, “தாய்மை” போன்றவற்றை முகமூடியாகப் பயன்படுத்தி பெண்கள் பாதுகாப்பு சட்டங்களுக்குப் பின்னால் மறைந்துகொண்டு பல அப்பாவிகளை துன்புறுத்திவருகிறார்கள்.

குறிப்பாக படித்த நவநாகரீக மங்கைகள் வரதட்சணை தடுப்புச் சட்டங்களை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி கணவனையும் அவனது குடும்பத்தையும் பழிவாங்கி வருகிறார்கள். இந்த கேவலமான நிலையைப் பற்றி நாட்டில் பலருக்கும் தெரியவில்லை. உயர்கல்வி கற்ற ஒரு பெண் தனது திருமணத்தில் தான் வரதட்சணை கொடுத்ததாகக் கூறி திருமணம் முடிந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு கணவன் மீதும் அவனது குடும்பத்தார் மீதும் வரதட்சணை வழக்குப் போடுகிறார் என்றால் அதன் பின்னணியில் ஒரு கள்ளக்காதல் அல்லது வேறு ஏதாவது ஒரு வஞ்சகத்தன்மை கண்டிப்பாக இருக்கும். அதை மறைப்பதற்காக போடப்படும் “அப்பாவிப் பெண்” வேஷத்திற்கு போட்டுக்கொள்ளப் பயன்படுத்தப்படும் முகமூடிதான் “வரதட்சணைக் கொடுமை”. இதைப் பலமுறை பல நீதிமன்றங்கள் வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கின்றன.

பெண்கள் நாட்டின் கண்கள். அதிலும் இந்தியாவில் பல “குருட்டுக் கண்கள்” இருந்துகொண்டுதான் இருக்கின்றன! அதற்கேற்ப சட்டங்களும் குருட்டுத்தனமாகத்தான் ஒருதலைபட்சமாக இருக்கின்றன. உண்மையான பெண்களுக்கு என்றுதான் மதிப்பும், மரியாதையும், பாதுகாப்பும் கொடுப்பார்களோ?


தாய்மையைப் பயன்படுத்தி நேற்று வந்த பொய்யான செய்தி 1


பொள்ளாச்சி: ரோட்டில் நடந்து சென்ற பெண்ணின் தாலியை பறித்த பைக் கொள்ளையர்கள், அவரது ஒன்றரை வயது குழந்தையை கிணற்றில் வீசி விட்டு தப்பினர். இதில், குழந்தை பரிதாபமாக இறந்தது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த சிங்காநல்லூர் அருகே அகிலாண்டபுரத்தை சேர்ந்தவர் தர்மராஜ் (27). அதே பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரி (24). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனமலையை அடுத்த தாத்தூரிலுள்ள ஒரு கம்பெனியில் பிட்டராக தர்மாராஜ் பணியாற்றி வருகிறார். இவர்கள் தாத்தூரிலேயே வசித்து வருகி ன்றனர்.

ஆனமலைக்கு சென்று விட்டு நேற்று மதியம் தாத்தூர் திரும்பிய காளீஸ்வரி, தனது ஒன்றரை வயது மகன் சவுந்தர்ராஜை தூக்கி கொண்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந் தார். அப்போது, பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென காளீஸ்வரியின் கழுத்தில் இருந்த 4 பவுன் தாலியை பறித்தனர். காளீஸ்வரி ‘திருடன் திருடன்’ என அலறியதால், அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதைப் பார்த்த கொள்ளையர்கள், காளீஸ்வரியின் கையில் இருந்த குழந்தை சவுந்தர்ராஜனை பிடுங்கிக் கொண்டு பைக்கில் புறப்பட்டனர்.

பொதுமக்கள் சிலர் அவர்களை பிடிக்க விரட்டினர். அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக கொள்ளையர்கள், கையில் இருந்த குழந்தையை அங்குள்ள பொது கிணற்றில் வீசி எறிந் தனர். அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், உடனடியாக கிணற்றில் இறங்கி குழந்தையை மீட்டனர்.

படுகாயமடைந்த குழந்தையை ஆனமலையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து, ஆனமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, வழிப்பறி ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

======

முகத்திரையைக் கிழித்துக்காட்டும் இன்றைய உண்மை செய்தி 2

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே தாத்தூரை சேர்ந்த தர்மராஜ் மனைவி காளீஸ்வரி(24). இவர் நேற்று மதியம் ஆனைமலைக்கு சென்றுவிட்டு, ஒன்றரை வயது மகன் சவுந்தர்ராஜை தூக்கி கொண்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அங்குள்ள ஒரு கிணறுக்கு சற்று தொலைவில் திடீரென காளீஸ்வரி கூச்சல் போட்டார். பைக்கில் வந்த 2 வாலிபர்கள் தனது 4 பவுன் செயினை பறித்து சென்று விட்டதாகவும், குழந்தையை கிணற்றில் வீசி சென்று விட்டதாகவும் கூறி கதறி அழுதார்.

ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பைக்கில் வந்த வாலிபர்கள் பற்றி விசாரித்தபோது காளீஸ்வரி முன்னுக்குப்பின் முரணாக பேசினார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் போலீசாரிடம் காளீஸ்வரி கூறியதாவது: நானும் தர்மராஜும் காதல் திருமணம் செய்து கொண்டோம். இதனால் இருவரது பெற்றோரும் எங்களை ஒதுக்கி வைத்தனர். எனது பெற்றோர் என்னை பார்க்க வருவதில்லை. இதனால் மனம் உடைந்தேன். ஒரு ஜோதிடரிடம் கேட்டபோது, இந்த குழந்தை பிறந்தநேரம் சரியில்லை. அதனால்தான் குடும்பத்துடன் சேர முடியவில்லை என தெரிவித்தார். பெற்றோரிடம் சேருவதற்காக குழந்தையை கிணற்றில் வீசினேன் என்று கூறி உள்ளார்.

இதுபோன்ற வஞ்சக எண்ணம் கொண்டவர்கள் பொய்வழக்குப்போட கொஞ்சமும் தயங்கமாட்டார்கள். தங்களை அபலைப்பெண்ணாக காட்டிக்கொள்வதற்காக தயங்காமல் எந்த வேஷம் வேண்டுமானாலும் போட்டுக்கொள்வார்கள். அதன்விளைவாக வெளிப்படுபவைதான் அப்பாவிகள் மீது போடப்படும் பல பொய் வரதட்சணை வழக்குகளும், பொய் கற்பழிப்பு வழக்குகளும்.

Saturday, December 18, 2010

இன்னுமா பெண்ணுரிமையை பறிக்கும் இழிநிலை?

சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னும் பெண்ணுக்கு தன் இஷ்டப்படி நடக்க சுதந்திரம் கொடுக்கப்படவில்லையே!

தினமலர் 18/12/2010

காரக்பூர் : மேற்குவங்கத்தில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில், கிராமத்தினர் ஒன்று திரண்டு நடத்திய தாக்குதலில், இளம்பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.

காரக்பூர் அருகேயுள்ள மத்கத்பூர் கிராமத்தைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், அங்குள்ள செங்கல் சூளையில் கூலி வேலை பார்த்து வந்தார். அவரது கணவர் வெளியூரில் கூலி வேலை செய்து வந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், அதே செங்கல் சூளையில் வேலை பார்க்கும் சக தொழிலாளி ஒருவருடன், அந்த பெண்ணுக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. கள்ளத் தொடர்பை விட்டுவிடுமாறு, அந்த பெண்ணை கிராமவாசிகள் எச்சரித்துள்ளனர். இதை பொருட்படுத்தாமல் அந்த பெண் கள்ளத் தொடர்பை தொடர்ந்துள்ளார். ஆத்திரமடைந்த கிராமவாசிகள் வீட்டிலிருந்த அந்த பெண்ணை வெளியில் இழுத்து வந்து, சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில், அப்பெண் படுகாயமடைந்து மயக்க நிலைக்கு சென்றார். பயந்துபோன கிராமவாசிகள், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

தற்போது, காரக்பூர் மருத்துவமனையில் அப்பெண் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். தன்னை தாக்கிய கிராமவாசிகள் 11 பேரின் பெயரை குறிப்பிட்டுள்ளார். ஆனால், தாக்குதலில் சம்பந்தப்பட்ட 11 பேரும், தலைமறைவாக உள்ளனர். அந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த செங்கல் சூளை தொழிலாளிக்கு, கிராம பஞ்சாயத்தில் ஏற்கனவே 12,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கள்ளக்காம பாதுகாப்பு சட்டப்படி கள்ளக்காமத்தில் ஈடுபடும் பெண் குற்றவாளியாகக் கருதப்படக்கூடாது. ஆனால் மேலுள்ள செய்தியில் பாருங்கள் என்ன ஒரு அநியாயம். ஒரு பெண் கள்ளக்காமத்தில் ஈடுபட்டார் என்பதற்காக கிராமத்தினர் சேர்ந்து அந்தப் பெண்ணை தாக்கியிருக்கிறார்கள். இந்தியப் பெண்கள் பாதுகாப்பு சட்டத்தை மீறி பெண்ணிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. யாராவது இதை பெண்கள் சங்கங்களின் காதில் போட்டுவிடுங்கள்.

IPC 497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.



Friday, December 17, 2010

பேருந்தில் 2 இளம் பெண்கள் செய்த சில்மிஷம்

எல்லா இளம்பெண்களுமே அப்பாவிகளாக இருக்கவேண்டிய அவசியமில்லை. அதுபோல கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் குற்றம்சாட்டி வரதட்சணை வழக்கு தொடுக்கும் எல்லா பெண்களும் உண்மையாகவே வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லவும் முடியாது. கீழுள்ள செய்தியைப் படித்தபிறகாவது நம்புங்கள். ஆனால் பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் மட்டும் எல்லாப் பெண்களுமே குற்றம் செய்யத் தெரியாதவர்கள் என்று ஒட்டுமொத்தமாக முத்திரை குத்தி ஒருதலைபட்சமாக இருக்கிறது!

ஓடும் பஸ்சில் ரூ.12 லட்சம் அபேஸ் செய்த 2 பெண்கள்

தினமலர் 18/12/2010

புதுச்சேரி:பஸ்சில் பயணம் செய்த, ஓய்வுப் பெற்ற ஏட்டிடம் 12 லட்சம் ரூபாயை திருடிய இரு பெண்களை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி காமராஜர் நகரில் வசிப்பவர் ஆட்டோ டிரைவர் குமாரசாமிநாதன்(40). இவர் நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு முருகா தியேட்டர் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது கைக்குழந்தையுடன் வந்த இரண்டு பெண்கள் ஜிப்மர் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமென கூறியுள்ளனர். அவர்களை மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றார்.

பெண்களின் நடவடிக்கைகள் சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்ததை ஆட்டோ டிரைவர் கவனித்தார். மருத்துவமனை எதிரில் ரோந்தில் ஈடுபட்டிருந்த தனவந்தரிநகர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். இரு பெண்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த பையில் கட்டு, கட்டாக 12 லட்சம் ரூபாய் பணம் இருந்தது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அண்ணாநகரைச் சேர்ந்த ரேகா(23), சூரியா(25) என்பதும், சென்னையில் இருந்து அரசு பஸ்சில் புதுச்சேரிக்கு வந்தபோது, சக பயணியிடம் 12 லட்சம் ரூபாயை திருடியதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இதற்கிடையில் கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்த ஓய்வுப் பெற்ற ஏட்டு கலியபெருமாள்(60), பஸ்சில் பயணம் செய்த தன்னிடம் இருந்து 12 லட்சம் ரூபாய் பணத்தை யாரோ திருடி விட்டதாக தன்வந்தரி நகர் போலீசில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து பெண்கள் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 12 லட்ச ரூபாய் பணத்தை கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

டிரைவருக்கு பாராட்டு: தன்வந்தரி நகர் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று காலை நடந்த நிகழ்ச்சியில், பணத்தை திருடிய பெண்கள் தொடர்பாக சரியான நேரத்தில் தகவல் தெரிவித்து உதவிய ஆட்டோ டிரைவர் குமாரசாமிநாதனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சீனியர் எஸ்.பி., அதுல் கத்தியார், தெற்கு பகுதி எஸ்.பி., நந்தகோபால் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் ஆட்டோ டிரைவருக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கினர்.



Thursday, December 16, 2010

போதை தரும் இளம் மனைவி!

பெண்கள் நாட்டின் கண்கள்!

படித்த நகரத்துப் பெண்ணுக்கு வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் ஆயுதம். படிக்காத கிராமப்புற பெண்ணுக்கு கையில் கிடைப்பதெல்லாம் ஆயுதம்! இந்த இரண்டிலுமே குறி தப்பாமல் சிக்குவது ஆண்கள்தான். ஐயோ பாவம்!



பல்லடம் : திருப்பூர் மாவட்டம் கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜன்(38). இவரது மனைவி கருப்பாத்தாள்(35). இருவரும் கூலி தொழிலாளர்கள். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இருவருக்குமே குடிப்பழக்கம் உண்டு. நேற்றுமுன்தினம் இரவும் இருவரும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தனர். அப்போது, அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் முற்றியது. ஆத்திரம் அடைந்த கருப்பாத்தாள் உருட்டுக்கட்டையால் கணவனின் தலையில் சரமாரியாக அடித்தார். இதில், ரத்தவெள்ளத்தில் சாய்ந்த ராஜனை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே ராஜன் இறந்தார். போலீசார் கருப்பாத்தாளை கைது செய்தனர்.



Tuesday, December 14, 2010

இந்தியாவில் 4 பேரை மணந்த பெண் 5ம் நபருடன் ஓட்டமா?

சபாஷ் சரியான பெண்மணி!

தினமலர் 15/12/2010

கோவை : தனியார் கல்லூரி பஸ் டிரைவரை ஏமாற்றி, நான்காம் திருமணம் செய்து கொண்ட கேரள பெண், அவரையும் உதறிவிட்டு வேறு துணையுடன் ஓட்டம் பிடித்தார். விஷயமறிந்த டிரைவர், விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோவை அருகேயுள்ள கிணத்துக்கடவு, ஏழூர், விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சரவணஹரி(27). சில ஆண்டுகளாக மினி பஸ் டிரைவராக வேலை செய்த இவர், சமீபத்தில் கோவையிலுள்ள தனியார் கல்லூரியில் பஸ் டிரைவராக பணியில் சேர்ந்தார். அப்போது, கேரளாவைச் சேர்ந்த காயத்ரி (25) என்பவருடன் காதல் ஏற்பட்டு ஆறு மாதத்துக்கு முன் திருமணம் செய்து கொண்டார். அடுத்த சில நாட்களிலேயே பிரச்னை ஏற்பட்டு பிரிந்து சென்ற காயத்ரி, வேறு நபருடன் சென்றுவிட்டார். இதனால், விரக்தியடைந்த சரவணஹரி, நேற்று முன் தினம் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், சரவணஹரியை திருமணம் செய்து ஏமாற்றிய காயத்ரி, அதற்கு முன் மூவரை திருமணம் செய்து ஏமாற்றியிருப்பது அம்பலமானது.

இது குறித்து போலீசார் கூறியதாவது: டிரைவர் சரவணஹரியின் தற்கொலைக்கு காரணமான கேரளாவைச் சேர்ந்த காயத்ரி, ஏற்கனவே மூவரை திருமணம் செய்துள்ளார். காயத்ரியை முதலில் திருமணம் செய்த நபர் இறந்துவிட, இரண்டாவதாக வேறு நபரை திருமணம் செய்துள்ளார்; பிறகு, அவரும் இறந்து விட்டார். மூன்றாவதாக திருமணம் செய்த நபர், காயத்ரியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்து பிரிந்து சென்றுவிட்டார். இதையறியாத சரவணஹரி, நான்காம் நபராக காயத்ரியை மணந்துள்ளார். சில நாட்களிலேயே காயத்ரியின் நடத்தையில் சந்தேகமடைந்த சரவணஹரி எச்சரித்துள்ளார். இதனால், இவரையும் விட்டுவிட்டு, ஐந்தாவதாக வேறு நபருடன் அவர் சென்று விட்டார். ஏமாற்றப்பட்டதால் மனமுடைந்த சரவணஹரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.

=========

இந்தப் பெண்மணியின் சாதனை மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தொடர்ந்து மூன்று கணவர்கள் மரணமடைந்திருக்கிறார்கள். போலிசிற்கு கொஞ்சமும் சந்தேகமே வரவில்லை. நல்ல புத்திசாலியானப் பெண்மணி!

மேலுள்ள செய்தியில் திருமணமாகி 6 மாதத்திற்குள் கணவன் தற்கொலை செய்துகொண்டார். அதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. ஆனால் இதுவே திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் மனைவி இறந்துவிட்டால் (இயற்கை மரணமாக இருந்தாலும்) அது வரதட்சணைக் கொலையாக கருதப்பட்டு போலிஸ், RDO விசாரணை செய்து கணவனையும் அவனது குடும்பத்தாரையும் விசாரணை என்ற பெயரில் கைதியாக சிறையில் அடைத்துவிடுவார்கள். பெண்ணின் பெற்றோர் கொஞ்சம் “லஞ்சம்” கொடுத்தால் போதும் அவ்வளவுதான் வழக்கு உறுதிசெய்யப்பட்டு எந்தவித விசாரணையும் இன்றி குற்றப்பத்திரிக்கை தயார் செய்து கணவனை நீதிமன்றதில் சந்தி சிரிக்கவைத்து நடைபிணமாக மாற்றிவிடுவார்கள். இதுதான் இந்திய நடைமுறை. அதைப் பற்றித் தெரிந்துகொள்ள இங்கே சென்று பாருங்கள் மனைவி இறந்தால் கணவனுக்கு சங்கு!




Sunday, December 12, 2010

யாருக்கு யாரோ? கடைசியில் அல்வா யாருக்கு?

காதலனுடன் ஓட்டம் பிடித்தார் மணப்பெண்
தினகரன் 13/12/2010

ஆரல்வாய்மொழி : நாகர்கோவில் அருகே திருமணத்துக்கு முதல்நாள் இரவில் மணப்பெண் காதலனுடன் ஓட்டம் பிடித்தார். ஆரல்வாய்மொழி சுப்பிரமணியபுரம் பாலநகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சுப்பிரமணியன் (24). செங்கல் சூளை தொழிலாளி. இவருக்கும், நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த தர்மலிங்கம் என்பவரின் மகள் அழகுமதிக்கும் (23) கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணத்தை நேற்று (12&ம்தேதி) பணகுடியில் உள்ள மணமகள் இல்லத்தில் நடத்தி ஆரல்வாய்மொழியில் உள்ள மண்டபத்தில் மாலையில் மணமக்கள் வரவேற்பு வைத்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.

நேற்று முன் தினம் இரவு இரு வீட்டு சார்பில் ஊர் அழைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. திருமண ஏற்பட்டால் மணமக்களின் வீடு களை கட்டியது. நேற்று (12&ம்தேதி) காலையில் மணமகன் அழைப்புக்கு முன், சுப்பிரமணியன் வீட்டில் இருந்து மணப்பெண்ணுக்கு பூ கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக ஆரல்வாய்மொழியில் இருந்து மணமகனின் உறவினர்கள் நேற்று காலை காரில் பணகுடி சென்றனர். பூக்களை கொடுத்து விட்டு மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்யும்படி கூறி விட்டு வந்து விட்டனர். காலை 8 மணியளவில் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி ஆரல்வாய்மொழியில் தொடங்கியது. சுப்பிரமணியன் பட்டு, வேட்டியுடன் மாப்பிள்ளை தோரணைக்கு வந்தார்.

மணமகனின் கார் புறப்படுவதற்கு தயாராக இருந்த நிலையில் திடீரென மணப்பெண் வீட்டில் இருந்து போன் வந்தது. அதில் மாப்பிள்ளை இங்கு கிளம்பி வர வேண்டாம். மணப்பெண்ணை காணவில்லை. திருமணத்தை நிறுத்தி விடுவோம் என கூறி விட்டு போனை துண்டித்து விட்டனர். அதிர்ச்சி அடைந்த மணமகன் மற்றும் உறவினர்கள் உடனடியாக பணகுடிக்கு விரைந்தனர். அப்போது தான் நேற்று முன்தினம் இரவு உறவினர்கள் ஊர் அழைப்புக்கு சென்ற போது, மணமகள் மாயமாகி விட்டார் என்பது தெரிய வந்தது. இதனால் திருமண வீடே சோகமயமானது.

மணமக்களின் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஊர் பெரியவர்கள் கூடி பேசி பணகுடி காவல் நிலையத்துக்கு விவகாரம் சென்றது. மணப்பெண்ணின் தந்தை தர்மலிங்கம், மகளை காணவில்லை என புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரித்த போது மணப்பெண் அழகுமதி, தனது அத்தை மகனை காதலித்து வந்ததும், அவருடன் தற்போது தலைமறைவாகி விட்டதும் தெரிய வந்தது. எனவே இரு தரப்பினரும் பேசி இனி உறவை முறித்து கொள்வது என முடிவு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

============

இதை ஒரு ஆண் செய்திருந்தால் அவன் மீது வரதட்சணைக் கொடுமை வழக்கு, கற்பழிப்பு வழக்கு என பல பிரிவுகளில் கூலிப்படை பாய்ந்திருக்கும். இதுதான் ஆணுக்கும் பெண்ணுக்கும் இந்தியாவில் கொடுக்கப்படும் சலுகைகள். இதற்கு இன்னொரு பெயர்தான் “சமஉரிமை”, “பெண் சுதந்திரம்”, “Women Empowerment”.




Wednesday, December 08, 2010

சேவல் மீது புகார் கொடுத்த வழக்கறிஞரும், சேவலை சிறைப்பிடித்த காவல்துறையும்

இந்தியாவில் காவல்துறையும், சட்டம் படித்தவர்களும் மிகவும் நேர்மையானவர்கள். சட்டத்தை அப்படியே கடைபிடிப்பவர்கள்! தவறுசெய்யும் கோழிகளை (மட்டும்) கண்டிப்பாக கடுமையாக தண்டிப்பார்கள். அதற்கு உதாரணம்தான் பின்வரும் செய்தி.

வாக்கிங் சென்ற வக்கீலை கொத்திய சேவல் "கைது'
தினமலர் 9/12/2010

சேலம்: சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த வக்கீல் விஜயகுமார் இரு தினங்களுக்கு முன், தேவேந்திரபுரம் எக்ஸ்டென்ஸன் பகுதியில் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது, வழியில் நின்ற சேவல், வக்கீல் விஜயகுமாரை கொத்தியுள்ளது.பொதுவாக கொத்திய சேவலை "கல்'லால் அடித்து துரத்தி விடுவர். ஆனால், சாலையில் நடந்து சென்ற போது சேவல் கொத்தியது குறித்து, வக்கீல் விஜயகுமார் சேலம் செவ்வாய்பேட்டை போலீஸில் புகார் தெரிவித்தார்.செவ்வாய்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, வக்கீல் விஜயகுமாரை கொத்திய சேவலை தேடிப்பிடித்து "கைது' செய்து, ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். சேவல் கைது செய்யப்பட்டது பற்றி தகவல் அறிந்த சேவலின் உரிமையாளர் கமலா என்பவர் நீதிமன்றத்திற்கு வந்து 200 ரூபாய் அபராதம் செலுத்தி, சேவலை மீட்டுச் சென்றார்.சேவல் மட்டுமல்ல, சாலையில் செல்லும் போது, எந்த விலங்கு தொந்தரவு செய்தாலும், போலீசில் புகார் தெரிவிக்கலாம் என, சேவலை "கைது' செய்த போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.

மேலும் பல சுவையான செய்திகள்:
அப்பாவி போலிஸ் (பகுதி - 1)
அப்பாவி போலிஸ் (பகுதி - 2)
அப்பாவி போலிஸ் (பகுதி - 3)

அப்பாவி போலிஸ் (பகுதி - 4)



=========




Tuesday, December 07, 2010

கள்ளக்காமத்தைத் தடுத்தால் குழந்தையைக் கொல்லும் பெண்கள்

கள்ளக்காமத்தைத் தடுத்தால் அதற்குப் பழிவாங்கும் நோக்கோடு அப்பாவிக் குழந்தைகளை வஞ்சமாகக் கொல்லும்போக்கு சமீபகாலமாக பெண்களிடையே ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன் கள்ளக்காதன் திருமணத்திற்கு மறுத்ததால் அவனின் குழந்தையை வெட்டிக் கூறுபோட்டு சூட்கேசில் அடைத்த வீரப்பெண்ணைப் பற்றி செய்தி வந்திருந்தது.

அதுபோல இப்போது கள்ளக்காமத்தைக் கணவன் தடுத்ததால் தான் பெற்ற பிஞ்சு மகனையே கழுத்தை அறுத்துக்கொன்றிருக்கிறாள் ஒரு பெண். பெண்கள் தங்களுக்கு இருக்கும் தாய்மை என்ற ஒரு பெருமையை காரணம் காட்டி எத்தனைக்கொடுமைகள் செய்து வருகிறார்கள். சட்டங்கள் இதுபோன்ற பெண்களுக்குச் சாதகமாக செயல்படுவதால் சர்வசாதாரணமாக பொய்வழக்குப் போடுவது, கொலை செய்வது போன்ற செயல்களில் பெண்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

3 வயது மகனை கழுத்தை அறுத்துக் கொன்றார் தாய்
தினகரன் 8.12.2010

மும்பை:மூன்று வயது குழந்தையின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொன்ற சைக்கோ அம்மா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:


நவிமும்பை பகுதியில் செக்டார் 4 கோன்சோலி என்ற இடத்தில் வசிப்பவர் சசிகாந்த் கோட்கே. பஸ் டிரைவர். இவருக்கும் வர்ஷா என்பவருக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயது ஆண் குழந்தை பிறந்தது. முன்னதாக மும்பையில் உள்ள வர்த்தக அரங்கில் வர்ஷா வேலை செய்துவந்தார். அப்போது அங்கே வேலை செய்யும் இன்னொரு வாலிபருடன் வர்ஷாவுக்கு பழக்கம் இருந்தது. இந்த விவரம் கணவருக்கு தெரியவரவே வர்ஷாவை கண்டித்தார். ‘இனிமேல் வேலைக்கு போக வேண்டாம். வீட்டிலேயே இருந்து குழந்தையை கவனித்துக் கொள்’ என்றார். இது வர்ஷாவுக்கு பிடிக்கவில்லை. ‘நான் வேலைக்கு சென்றால் உங்களுக்கு என்ன?’ என்று தகராறு செய்தார். அதை சசிகாந்த் ஏற்கவில்லை. இந்த கட்டுப்பாட்டை விரும்பாத வர்ஷா கோபித்துக்கொண்டு இந்த ஆண்டு தொடக்கத்தில் அம்மா வீட்டுக்கு சென்றார். அவரும் வர்ஷாவின் போக்கை அறிந்து வேலைக்கு போக வேண்டாம் என்று தடுத்தார்.

பின்னர் ஒருநாள் தானாகவே மனம் மாறி கணவன் வீட்டுக்கு வந்தார். தன்னை வேலைக்கு போகவேண்டாம் என்று கணவன் தடுப்பதும், அம்மாவே தன்னை கட்டுப்படுத்துவதும் வர்ஷாவுக்கு கோபத்தை அதிகரித்தது. ஒருநாள் ப்ரிஸ்கூல் முடிந்து 3 வயது மகன் வீடு திரும்பினான். அவனை தரதரவென பாத்ரூமிற்குள் இழுத்து சென்ற வர்ஷா கண்மூடித்தனமாக தாக்கினார். கையிலிருந்த கத்தியை எடுத்து குழந்தையின் கழுத்தை அறுத்தார். துடிதுடித்து குழந்தை இறந்தது.

பின்னர் வர்ஷாவே தன் கையிலும், முகத்திலும் கத்தியால் கீறிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று அட்மிட் ஆனார்.வர்ஷாவை நேரில் பார்க்கும்போது எந்த குறையும் தெரியவில்லை. ஆனால் கணவரும், அம்மாவும் தன்னை வேலைக்கு செல்லக்கூடாது என்று தடுத்தது அவரது மனதை பாதித்திருக்கிறது. மனதளவில் அவர் சைக்கோத்தனமாக நடந்து கொண்டிருக்கிறார். அந்த வெறியில் குழந்தையை கொன்றிருக்கிறார் என்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்திருக்கிறது.

============

மேலுள்ள செய்தியில் கள்ளக்காமத்தைக் கணவன் தடுத்ததால் பெண்ணின் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டதாம். அதனால் அந்தப்பெண் தான் பெற்ற குழந்தையை கழுத்தை அறுத்துக்கொன்றுவிட்டாராம். பெண்ணின் மனநிலை எந்த அளவு கீழ்த்தரமாக போய்க்கொண்டிருக்கிறது என்பதைத்தான் இந்த செய்தி காட்டுகிறது.

பெண்கள் அமைப்புகள் இந்த செய்தியை எப்படி வெளிப்படுத்துவார்கள் தெரியுமா?
கணவன் கொடுமை செய்ததால் மனைவிக்கு மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது. அதனால் கணவனுக்கு IPC498A பிரிவுப்படி தண்டனை கொடுக்கவேண்டும் என்று கோஷமிட்டு கணவனை சிறையில் தள்ளவேண்டும் என்று போராட்டம் செய்வார்கள். ஏனென்றால் இந்திய சட்டம் அப்படித்தான் சொல்கிறது மனைவியின் மனது புண்படும்படி கணவனோ அல்லது அவனது குடும்பத்தாரோ நடந்துகொண்டால் அது பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடுமையாக கருதி இந்த சட்டப்படி கணவனை சிறையில் அடைத்துவிடலாம். இதுதான் நாட்டில் இன்று பெண்சுதந்திரம் என்ற பெயரில் நடந்துகொண்டிருக்கும் அட்டூழியம். இதுபோன்ற பெண்களுக்குத்தான் அரசாங்கம் பல சட்டங்களைக் கொடுத்திருக்கிறது.

இதுபோன்ற பெண்களுக்கு அரசாங்கம் எந்த தண்டனையும் தருவதில்லை. அதற்கு பதிலாக பல தவறான சட்டங்களைக் கொடுத்து ஊக்குவித்துக்கொண்டிருக்கிறது. அதனால் வஞ்சக மனத்தோடு பொய்வழக்குப்போடும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயும், தாய்மை என்ற புனிதமான பெயரைப் பயன்படுத்தி அட்டூழியங்கள் செய்யும் பெண்களுக்கு கருப்பை புற்றுநோயும்தான் தண்டனையாகக் கொடுக்கப்படவேண்டும். அரசாங்கம் செய்யத் தவறுவதை இயற்கை செய்து முடிக்கும்.

அப்பாவி இந்தியக் கணவன்களுக்கு ஒரு அறிவியல்பூர்வமான எச்சரிக்கை

ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஒருவகை ஆற்றல் வேறுவகை ஆற்றலாகத்தான் மாறும். இது அறிவியல் பூர்வமான "Thermodynamics" விதி. பெண்ணின் கள்ளக்காமம் என்ற ஆற்றலை நீங்கள் அழிக்க நினைத்தால் அது வேறு வகையில் பொய்வழக்குப் போடுதல், கொலை செய்தல் என்று வேறு ஒரு ஆற்றலாக வெளிப்படும். அதனால் மனைவியின் கள்ளக்காமத்தைத் தடுத்து அப்பாவி குழந்தைகளின் உயிரை பலியாக்கிவிடாதீர்கள்! நீங்களும் பொய் வரதட்சணை வழக்கில் (IPC498A) சிக்கி சிறைக்குச் சென்றுவிடாதீர்கள்!



பெண்கள் செய்யும் கட்டுப்படுத்தமுடியாத சாதனைகள்


காசியாபாத் : நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ஊழல் செய்த குற்றச்சாட்டுக்காக, உ.பி., முன்னாள் தலைமைச் செயலர் நீரா யாதவுக்கும், பிரபல தொழில் அதிபர் அசோக் சதுர்வேதிக்கும், தலா நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நேற்று தீர்ப்பு அளித்தது.

உ.பி., மாநில முன்னாள் தலைமைச் செயலர் நீரா யாதவ். முலாயம் சிங் யாதவ் முதல்வராக இருந்தபோது, இவர் தலைமைச் செயலராக இருந்தார். ஏழு ஆண்டுக்கு முன், நொய்டா பெருநகர வளர்ச்சிக் குழு தலைவராக பதவி வகித்தார். அப்போது, தொழில் நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்வதில் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்தது. நிலம் ஒதுக்கீடு செய்வதற்கான விதிமுறைகளை மீறியதாகவும், தனது பெயரில் 300 ச.மீட்டர் நிலத்தை ஒதுக்கீடு செய்து கொண்டதாகவும் இவர் மீது புகார் கூறப்பட்டது. இந்த 300 ச.மீட்டர் நிலத்தை பின், 450 ச.மீட்டராக அதிகரித்துக் கொண்டதாகவும் நீரா யாதவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீராவின் மகள்கள் சன்ஸ்கிரிதி, சுக்ரிதி ஆகியோர் பெயரிலும் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதும் தெரியவந்தது.

விதிமுறைகளை பொருட்படுத்தாமல், தொழில் நிறுவனங்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கும் நிலத்தை ஒதுக்கீடு செய்ததும் தெரியவந்தது. விதிமுறைகளை மீறி, நிலத்தை பெற்றதாக பிளெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிட்., தலைவர் அசோக் சதுர்வேதி மீதும், சி.பி.ஐ., சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை, காசியாபாத்தில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் விசாரித்தது.நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, கோர்ட் வளாகத்தில் பரபரப்பான சூழல் காணப்பட்டது. நீரா யாதவ், அசோக் சதுர்வேதி உள்ளிட்டோர் கோர்ட்டில் ஆஜராகியிருந்தனர். அப்போது, தனது உடல் நிலையை காரணம் காட்டிய நீரா யாதவ், அமர்வதற்கு இருக்கை வேண்டும் என, கேட்டார். இதைத் தொடர்ந்து, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி ஏ.கே.சிங்., தீர்ப்பை வாசிக்கத் துவங்கினார். இதில், கைலாஸ் மருத்துவமனைக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான முதல் வழக்கில் நீரா யாதவை விடுதலை செய்து, நீதிபதி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை கேட்ட நீரா யாதவ் மகிழ்ச்சியாக காணப்பட்டார். இதையடுத்து, அடுத்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த வழக்கில், நீரா யாதவுக்கும், அசோக் சதுர்வேதிக்கும் தலா நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.

கதறி அழுதார்
: தீர்ப்பைக் கேட்ட நீரா, கதறி அழுதார். நீராவும், அசோக் சதுர்வேதியும் தஸ்னா மாவட்ட சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கைகளில் விலங்கு மாட்டப்பட்ட நிலையில், சதுர்வேதி அழைத்துச் செல்லப்பட்டார். நீரா யாதவ் மற்றும் சதுர்வேதிக்காக ஜாமீன் கோரி, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப் போவதாக அவர்கள் வக்கீல்கள் தெரிவித்தனர். சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டின் இந்த தீர்ப்பு, உ.பி.,யில் மட்டுமல்லாமல், தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தலைமைச் செயலர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டவர் நீரா யாதவ் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும், 1997ல் உ.பி.,யைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சார்பில், ஊழல் செய்த அதிகாரிகள் பற்றிய ஆய்வு நடத்தப்பட்டு, பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், நீரா யாதவ் அதிக ஊழல் செய்பவர் என்ற அடைமொழியுடன் இடம் பெற்றிருந்தார். மேலும், அதிக ஊழல் செய்தவர் என்று கூறி சுப்ரீம் கோர்ட்டும் அவரைத் தலைமைச் செயலர் பதவியில் இருந்து அகற்ற உத்தரவிட்டது. தவிரவும், முன்பு சி.பி.ஐ., டைரக்டராக இருந்த ஜோகிந்தர் சிங் காலத்தில் தொடரப்பட்ட வழக்கு இது. அதுவும் பெண் ஐ.ஏ.எஸ்.,அதிகாரி ஊழலில் சம்பந்தப்பட்டதை ஆய்வு செய்யும் வழக்காக இருந்தது. நேற்று இத்தீர்ப்பு குறித்து ஜோகிந்தர் கருத்துக் கூறுகையில், "இது நல்ல துவக்கம், இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வந்ததில் மகிழ்ச்சி' என்றார்.

============

வீட்டிற்குள்ளே பெண்ணை பூட்டிவைக்காதீர் என்று சொன்ன பாரதி இப்போது மீசையை முறுக்கிக் கொண்டு என்ன சொல்லியிருப்பார்?




“கிஸ்" அடித்து மாட்டிக்கொண்ட போலிஸ்!

காஞ்சி எஸ்பி ஆபீசில் பரபரப்பு பெண் ஊழியருக்கு எஸ்.ஐ. முத்தம்
தினகரன் 7.12.2010

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் இரவு பணியில் இருந்த பெண்ணுக்கு உதவி ஆய்வாளர் முத்தம் கொடுத்துவிட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய விவரம் வருமாறு: காஞ்சிபுரம் போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் உள்ள டெக்னிஷியன் பிரிவில் உதவி ஆய்வாளராக இருப்பவர் கந்தசாமி. இவருக்கு திருமணமாகி, 3 குழந்தைகள் உள்ளனர். இவர் நேற்றிரவு பணியில் இருந்தார். டெக்னிஷியன் உதவி பராமரிப்பு அலுவலராக பெண் ஒருவர் இரவு பணியில் இருந்தார். இருவரும் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். திடீரென எழுந்துவந்த கந்தசாமி, அந்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து விட்டாராம். இதனால் பதறிப்போன அந்த பெண், ‘ஐயோ, ஐயோ’ என்று கத்தினார். மற்ற அறையில் இருந்த அதிகாரிகள் பீதியில் ஓடிவந்தனர். வியர்த்துக்கொட்டி நிலையில் நின்ற கந்தசாமியை பிடித்தனர். இதுகுறித்து, டெக்னிஷியன் இன்ஸ்பெக்டர் ஜெயராமனிடம் பெண் புகார் கொடுத்துள்ளார். வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



The Committee on Petitions of the Rajya Sabha, under the Chairmanship of Shri Bhagat Singh Koshyari, Member, Rajya Sabha, is considering a petition praying for amendments in Section 498A of Indian Penal Code, 1860. The petitioner in his petition has pointed out the extensive abuse and misuse of this provision of the Penal Code. According to the petitioner, the abused population undergoes tremendous harassment and torture. As these provisions of the penal code presently go, a complaint without much authenticity or any weight of evidence is enough to arrest the husband or the in-laws or anyone else named in the complaint, irrespective of whether any crime has taken place or not. The petitioner, accordingly, has prayed for suitable modification in section 498A of Penal Code so as to check its abuse and protect the interest of innocent persons.

2. The petition is available on the Rajya Sabha's website (www.rajyasabha.nic.in) under the link: Committees → Standing Committees → Committee on Petitions → Petitions with the Committee.

3. The Committee has decided to undertake consultations with a wide cross-section of the society and invites written memoranda thereon. Those desirous of submitting memoranda to the Committee may send two copies (each in English and Hindi) thereof to Shri Rakesh Naithani, Joint Director, Rajya Sabha Secretariat, Parliament House Annexe, New Delhi – 110 001 (Tel: 011-23035433(O), 23794328 (Telefax) and E-mail: rsc2pet@sansad.nic.in) latest by 30th December, 2010.

4. Comments/suggestions, etc. submitted to the Committee would form part of its record and would be treated as confidential. Any violation in this regard may attract breach of privilege of the Committee.

5. Those who are willing to appear before the Committee besides submitting written comments/suggestions may indicate so. However, the Committee’s decision in this regard shall be final.

**********

To:

The Council of States (Rajya Sabha)

The petition of Dr. Anupama Singh a medical doctor and a resident of Hauz Khas, New Delhi.

Sheweth,

1. That Section 498A was inserted in Indian Penal Code in 1983 to protect married Indian women from cruelty, including dowry harassment. The offence under this section is cognizable, non-bailable, non-compoundable with provision to lodge a complaint against the husband or any relative of the husband of the women.

The section reads as hereunder:-


“Whoever, being the husband or the relative of the husband of a woman, subjects such women to cruelty shall be punished with imprisonment for a term which may extend to three years and shall also be liable to fine.”

2. That Section 498A of Indian Penal Code is being fearlessly abused and misused by a large section of unscrupulous people, who are using law as a weapon for ulterior motives.

3. That the abused population is undergoing tremendous harassment and torture, which includes atrocities inflicted on senior citizens, children, women (including pregnant women) and men.

4. That there is an urgent need to address the issue of abuse of this law as inter alia the ramifications of its abuse are far more damaging then the law makers had ever conceived:

(a) This law is being misused rampantly by unprincipled people. And given the time tested benefits it has reaped for them, its abuse is now widespread. Infact the gravity of the situation can be assessed from the fact that there are several cases of dowry death wherein the supposedly ‘dead victims’ have come back alive, and several cases where the same women has repeatedly alleged charges under this law in each of her repeat marriages;

(b) This law is being misused by women to enable a get-rich-quick-scheme to extort large amounts of money from innocent families. Women, their parents an instigators have used this law to extend threats and hold innocent families to ransom, thereby pressurizing them to accede to unjustified demands;

(c)
This law is being misused by women to alienate the husband from his parents and siblings, so as to gain control over his finances and social behavior including his lifestyle. Growing instances of abusive behaviors towards elderlies in families, including parents and senior citizens, are another ramification of its abuse;

(d) This law is also rampantly misused by those brides and her parents who conceal true facts about her mental health and educational level at the time of marriage, thereby adopting fraudulent means to forge the alliance. When these facts are unearthed by the groom and his family, the bride and her family prefer to take recourse to Section 498A of IPC.

(e) This law is being misused as a bargaining tool by those women who indulge in Adultery. When their nefarious acts are exposed they take recourse to misusing this law, thereby deflecting the needle of crime on innocent husband and his family. This law being an exception in Criminal Law presumes the accused as guilty until proven innocent; hence the women’s word is taken as a gospel of truth. And therefrom begins the saga of unending trials, tribulations and destruction for an innocent man and his family;

(f) The law is being misused to enable divorce so as to revive any pre-marital relationship that the wife may have had as she may have unwillingly given her consent for marriage to satisfy her parents;

(g) The law is being misused to deny custody of child/children to the father and his family. Infact several cases abound where children have been wrongfully deprived of fatherly care and affection through such indiscriminate, rampant misuse of this law;

(h) This law is being misused to inflict sufferings on husband and his family to settle scores and to wreak vengeance, thereby posing a grave threat to the very existence of a peaceful family unit in society. Law is to protect, not to destruct. Law is as much for protecting the innocent as it is to punish the guilty; and

(i) The language, content and structure of this law has enabled implication of thousands of innocent families in false cases. A complaint, without any authenticity and without any weight of evidence, is enough to arrest the husband, in-laws and anyone else name in the complaint, irrespective of whether a crime occurred or not. This has led to arrest of lakhs innocent citizens (thousands of families), with many committing suicide as they are unable to bear the indelible stigma on their honor and reputation.

5. That the following statistics corroborate the above contention of the petitioner:

5,01,020 people arrested under Section 498A of IPC;
2,94,147 people completed trial under Section 498A of IPC; and
58,842 people convicted (out of his many must have appealed to higher courts)
Source: NCRB (2003-2006), Ministry of Home Affairs, Government of India.

6. That misuse of Section 498A of IPC has been acknowledged/condemned by leading authorities;

(a) The Supreme Court of India in Sushil Kumar Sharma vs. U.O.I (2005) said that any misuse of this provision of law amounts to unleashing Legal Terrorism. It acknowledged that there are growing instances of women filing false charge.

(b) The World Health Organization (WHO), in its Report of India clearly cited Section 498A as one of the major reasons for growing Elder Abuse in India.

(c) The Law Commission in its 154th Report, the Malimath Committee Report (on Reforms of Criminal Justice System, 2003) and the 111th Report of the Parliamentary Standing Committee on Home Affairs, have all acknowledged that Section 498A is being widely misused;

(d) The Center for Social Research (India), in a study on implications of Section 498A IPC state that “educated and independent minded women misuse the section”.

7. That there is no remedy/provision in this law:

(a) for punishment to people who misuse and abuse this law;

(b) for people who are proved innocent after being falsely implicated under this law;

(c) for the indelible stigma that falsely accused people are forced to live with for the rest of their lives;

(d) for the immense financial, social and personal loss borne by the falsely accused;

(e) for resurrecting the lives of falsely accused and maligned people;

(f) for discouraging people from filing false cases.

(g) for punishment to guilty and corrupt law enforcement agencies who connive and collude with complainants to harass and torture and falsely accused;

(h) for preventing the media from maligning and defaming the falsely accused innocents; and

(i) for citizens to file complaints against women who inflict cruelties and atrocities on them and their family members.

8. That the Supreme Court of India in Sushil Kumar Sharma vs. U.O.I & others (JT 2005 (6) SC 266) clearly said that it is for the legislature to find ways on how to deal with misuses of this law as well as on how to wipe out the ignominies suffered during and after the trial by the falsely accused.

9. That the petitioner therefore prays for remedy to mitigate the sufferings of lakhs of Indian citizens, who through this law, have been unceremoniously exposed to the whims and fancies of corrupt, immoral unprincipled section of society, who for their own personal agendas do not hesitate in committing the worst possible crime under law, which is Misuse of Law. It is therefore prayed:

(a) that Section 498A be suitably amended so as to make it bailable, non-cognizable, and compoundable;

(b) that suitable provisions be specifically inserted in Section 498A so as to make it punishable for whosoever misuses of abuses it;

(c) that the misuser of this law should be made liable to compensate the financial loss suffered by the falsely accused in the process;

(d) that the law be made gender neutrall of protect the interests of any innocent, be it a man or a women; and

(e) that time bound trial should be make a statutory requirement under this law, with a 6 month maximum limit specified therein.

Name of Petitioner

Dr. Anupama Singh
D-40, Hauz Khas,
New Delhi-110 016
Sd/-




“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.