இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, July 30, 2010

498A-மனைவிக்கு மரியாதை செய்யும் கணவர்

இந்தியத் திருமணங்களில் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மனைவியின் காலைத் தொட்டு என் குடும்ப மரியாதையை உன்னிடம் ஒப்படைக்கிறேன் அதை நல்லமுறையில் காப்பாற்று என்று கணவன் மனைவியிடம் வேண்டும் வழக்கம் எல்லாம் இப்போது பழங்காலத்து வழக்கமாகிவிட்டது.

புதுமையை புகுத்தி பெண்களுக்கு விடுதலை கொடுக்கிறோம் என்ற பெயரில் “திருமணமில்லாத கூடிவாழும் முறையை” (Living Together) அரசாங்கமே அறிமுகப்படுத்திவரும் இந்த வேளையில் பழைய முறைப்படி பெண்கள் வாழ்வது எவ்வளவு முட்டாள்தனமானது என்று பல புதுமை பேசும் கண்மணிகள் கொடிபிடித்து கோஷமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதன்விளைவாகப் பல பெண்கள் திருமணம் என்பதின் அர்த்தத்தையே புறக்கணித்து கணவனின் குடும்ப மரியாதையை சிதைத்து கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் அழிப்பதற்குத்தான் திருமணம் என்று நினைத்து பொய் வரதட்சணை வழக்குப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

கணவர்களும் இந்த புதுமைப் பெண்களின் மனப்பாங்கிற்கு ஏற்ப நடந்துகொண்டு பொய்வழக்குப் போடும் மனைவியருக்கு சட்டத்தின் மூலம் தகுந்த பாடம் கற்பிக்கவேண்டும். இல்லையென்றால் காலத்திற்கேற்ப பெண்கள் மாறிவிட்டாலும் ஆண்கள் இன்னும் மாறாமல் பழைய காலத்து திருமண முறையை பின்பற்ற நினைக்கிறார்கள், ஆண்கள் எல்லாம் புதுமையை விரும்பாத பழமைவாதிகள் என்று முற்போக்குவாதிகள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் கூட்டம் அப்பாவி கணவர்களுக்கு முத்திரை குத்திவிடுவார்கள்.

அதனால் கலியுக மனைவிக்கு ஏற்ற மரியாதையை செயல்படுத்த ஆரம்பித்துவிட்டனர் அப்பாவிக் கணவர்கள். அதற்கான ஒரு துவக்கம்தான் பின்வரும் செய்தி.

மாலை மலர் ஜூலை. 30-2010

மதுரை நரிமேடு தெற்கு பூங்கா தெருவை சேர்ந்தவர் செண்பகராஜன். இவரது மகன் ரகுராமன் (வயது30), என்ஜினீயர். இவர் மதுரை 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தனது மனைவி சங்கீதா காயத்ரி மீது வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

மதுரை கலை நகரை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகள் சங்கீதா காய்த்ரிக்கும் எனக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது. சங்கீதா காய்த்ரி பிரபல சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

சங்கீதாவும் அவரது பெற்றோர்களும் எங்கள் குடும்பத்துக்கு பல வழிகளில் தொந்தரவு செய்தனர். எங்களது சொத்துக்களை பறிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சங்கீதாவை அவரது தந்தை தூண்டிவிட்டு தனிக்குடித்தனம் செல்லும்படி வற்புறுத்தினர்.

இதற்கு அனுமதிக்காத எனது பெற்றோரை தாக்கவும் முயற்சி செய்தனர். எங்களது பூர்வீக வீட்டை சங்கீதா காயத்ரி பெயருக்கு எழுதி வைக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் வரதட்சணை கேட்டு மிரட்டு வதாக போலீசில் புகார் கொடுப்போம் என்றும் மிரட்டினர்.

இந்த மிரட்டலுக்கு நானும் எனது பெற்றோரும் பணிய வில்லை. இதனால் சங்கீதா பெற்றோரின் தூண்டுதலின் பேரில் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நாங்கள் வரதட்சணை கேட்டு மிரட்டுவதாக பொய்புகார் அளித்துள்ளனர். பின்னர் போன் மூலமும், மிரட்டி வருகிறார். எனவே வரதட்சணை கேட்பதாக பொய் புகார் அளித்துள்ள சங்கீதா காயத்ரி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும்.

இவ்வாறு ரகுராமன் மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு மாஜிஸ்தி ரேட்டு உமா மகேஸ்வரி முன்னிலையில் விசா ரணைக்கு வந்தது. மனு தாரர் சார்பில் வக்கீல் சந்திரசேகரன் ஆஜரானார். ரகுராமன் அவரது மனைவி சங்கீதா காயத்ரி மற்றும் குடும்பத்தினரும் கோர்ட்டில் ஆஜரானார்கள்.

இந்த வழக்கை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ந்தேதிக்கு தள்ளி வைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.


இது குறித்து வக்கீல் சந்திரசேகரன் கூறியதாவது:-

பெண்களை பாதுகாக்க வேண்டும் என நோக்கத்தில் வரதட்சணை கொடுமை சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் கணவர் குடும்பத்தை பழி வாங்கவும், மிரட்டவும் இந்த சட்டத்தை சிலர் பயன் படுத்தி வருகிறார்கள். இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தும் பெண் ணுக்கு எதிராக முதல் முறையாக இந்த வழக்கை தொடர்ந்துள்ளோம். பொய் புகார் கொடுப்பவர்களுக்கு இது பாடமாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.


================

அப்பாவிக் கணவர்களே,

பொய் வரதட்சணை வழக்குப்போடும் பெண்களிடமிருந்து சட்டத்தின் மூலம் எப்படி புதுமை செய்வது என்று கற்றுக்கொள்ளுங்கள். இனியாவது பழமையை நினைத்துக்கொண்டிருக்கும் கணவர்கள் புதுமையாக செயல்பட ஆரம்பித்தால்தான் இந்தியாவில் உயிரோடு வாழமுடியும். இல்லையென்றால் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கி குடும்பத்தோடு சிதைந்து போகவேண்டியதுதான். அதனால் உங்களின் கலியுக 498A-மனைவிக்குத் தகுந்த மரியாதையை சட்டத்தின் மூலம் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்.





Thursday, July 29, 2010

தாயில்லாமல் பிறக்கும் குழந்தைகள்

ஜூலை 29,2010 தினமலர்

மேலூர் : பிறந்து ஒருவாரமே ஆன பெண் குழந்தை, மதுரை - மேலூர் நான்கு வழிச்சாலை ஓரத்தில் வீசப்பட்டது. ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்தக்குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நான்கு வழிச்சாலையில் மேலூருக்கு திரும்பும் இடத்தில் உள்ள வாழை தோட்டத்தில் கிணறு தோண்டியபோது எடுக்கப்பட்ட கற்கள் குவிக்கப்பட்டுள்ளன. நேற்று அதிகாலை அதற்குள் இருந்து பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தனர். இரு புறமும் பாறாங்கற்கள் வைக்கப் பட்டு, அதன் நடுவில் குழந்தை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. அதை அகற்றி பார்த்த போது, எறும்புகள் மொய்த்த நிலையில் காயங்களுடன், ஒல்லியான பெண் சிசு இருந்தது. அரசின் "108' இலவச ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சுரேஷ், விமல், சரவணன் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை சேர்த்தனர்.

டாக்டர்கள் கூறியதாவது:
இக்குழந்தை பிறந்து ஒரு வாரமே ஆகி உள்ளது. மேற்புறமாக கல் அழுத்தி உள்ளதால் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. வலது கால் உடைந்துள்ளதாக தெரிகிறது. முதலுதவி சிகிச்சைக்கு பின், மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக குழந்தை அனுப்பப் பட்டுள்ளது, என்றனர்.

மனிதாபிமானமற்ற பெற்றோர் யார்?
: நான்கு வழிச்சாலையில் வழியாக பயணம் செய்த யாரோ தான் இப்படி குழந்தையை போட்டு விட்டு சென்றிருக்க வேண்டும். குழந்தையின் கை மற்றும் காலில் கண்மை இடப்பட்டு உள்ளது. ஆசையுடன் கொஞ்சிய பச்சிளம் குழந்தையை இப்படி வீசியதற்கு பதில் அரசு தொட்டிலில் சேர்த்து இருக்கலாமே.

மனிதத்தாய்மைக்கும் விலங்கினத்தில் இருக்கும் தாய்மைக்கும் உள்ள வித்தியாசம்

பெற்றோரால் வீசியெறியப்பட்ட சிசு

அன்னையின் அரவணைப்பில் இருக்கும் குழந்தை

தாயில்லாமல் குழந்தைகள் பிறந்து தெருவில் கிடக்கும் அதிசயம் நடந்துகொண்டிருக்கிறதா? தாய்மை இன்னும் இருக்கிறதா? இல்லாத தாய்மையின் பெயரால் எதற்கு “பெண்கள் சிறப்புச் சட்டங்கள்”?


இதையும் செய்வாள் பெண்

எப்போதுமே கணவன்தான் மனைவியை கொடுமை செய்வான் என்று தவறான எண்ணம் கொண்டவர்களுக்கு ஒரு வித்தியாசமான செய்தி. ஆனால் இது உண்மை. இப்படி பல நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் வெளிச்சத்திற்கு வருவதில்லை.


கணவனை கொன்ற மனைவிக்கு ஆயுள்தண்டனை
ஜூலை 30,2010 தினமலர்

ஊட்டி : குடும்பத் தகராறு காரணமாக கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து, நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. குன்னூர் குமரன் நகரைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி(28); இவரது மனைவி பூங்காவனம். இருவரிடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி மாலை 3 மணியளவில் வீட்டில் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி இருவரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஆத்திரமடைந்த பூங்காவனம், வீட்டிலிருந்த இரும்பு குழாயால் பார்த்தசாரதியை தாக்கினார். இதில் படுகாயமடைந்த பார்த்தசாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கின் விசாரணை, ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கணவனை கொன்ற குற்றத்துக்காக பூங்காவனத்துக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி முருகன்.





Saturday, July 24, 2010

மனித இனத்தில் மட்டுமே நடந்துகொண்டிருக்கும் அதிசயம்!

மனித இனத்தில் மட்டும் நடக்கும் அதிசயம்!

குடும்பத் தகராறில் பெற்ற குழந்தைகளைக் கொன்ற பெண்
ஜூலை 24, 2010 தினமலர்

திருச்சி : திருச்சி அருகே உள்ள இனாங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி தனம். இவர்களுக்கு சஞ்சய் குமார் (3 1/2), கணேசன்(1) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுப்பிரமணியனுக்கும், தனத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் வழக்கம் போல் சுப்பிரமணியனுக்கும், தனத்திற்கும் இடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தனம், வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குழந்தைகள் இரண்டு பேரையும் தள்ளி விட்டு கொலை செய்துள்ளார். இது தொடர்பாக தனத்தை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

= = = = = = = = = = = =


உயிரினங்களில் மனித இனம்தான் பரிணாமத்தில் உயர்நிலையில் இருக்கிறது என்றும் அதிலும் குறிப்பாக “தாய்மை” என்ற பண்பிற்காக பெண்களுக்கு எல்லா விஷயத்திலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பல சிறப்புச் சட்டங்கள் மகளிருக்கென இயற்றப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தத்தாய்மைக்கு பெண்களால் உண்மையாகவே மரியாதை கொடுக்கப்படுகிறதா?

இந்தப் படங்களில் பாருங்கள். இதற்குப் பெயர் தாய்மையா அல்லது மனித இனத்தில் இருப்பது தாய்மையா?



விலங்குகளிடம் இருக்கும் “தாய்மை” என்ற புனிதத்தன்மை மனித இனத்திடம் மறைந்துவரும்போது ஆண், பெண் என்ற பேதம் காட்டி இல்லாத தாய்மையைக் காரணமாகவைத்து சட்டங்கள் மட்டும் ஒருதலைபட்சமாக இருப்பது ஏன்?





Wednesday, July 21, 2010

கர்ப்பவதி குற்றம் செய்யலாமா?

பின்வரும் செய்தியைப் படிப்பதற்கு முன் இந்த இணைப்பில் உள்ள செய்தியை படித்துக்கொள்ளுங்கள்.

பெண் லஞ்சம் வாங்கினால் குடியா மூழ்கிவிடும்?

• • • • • • • •

எஸ்.ஐ., ரேகாவுக்கு ஜாமீன் மறுப்பு

ஜூலை 21,2010 தினமலர்

சென்னை : லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனுவை, சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட் தள்ளுபடி செய்தது.

வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் லட்சுமி(40); லாரி உரிமையாளர். சென்னையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திடம் பத்திரங்களை அடகு வைத்து இரண்டு லட்ச ரூபாய் பெற்றார். பின், கடன் தொகையை செலுத்தியுள்ளார். ஆனால், மேலும் 41 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே, பத்திரத்தை கொடுக்க முடியும் என நிதி நிறுவனம் கூறியுள்ளது. இது குறித்து, சென்னை போலீஸ் கமிஷனரிடம் லட்சுமி புகார் செய்தார். யானைக்கவுனி பெண் சப்-இன்ஸ்பெக்டர் ரேகா விசாரித்தார். லட்சுமியிடம் 30 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கி தனியார் நிதி நிறுவனத்திடம் கொடுத்த ரேகா, லட்சுமியின் பத்திரங்களை வாங்கி வைத்துக் கொண்டார். அதன் பின், லட்சுமியிடம் 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். லட்சுமி கொடுத்த ஆயிரம் ரூபாயை வாங்க மறுத்தார். பின், அவர் கேட்ட பணத்தை கொடுத்தார். ரசாயனம் தடவிய பணத்தை வாங்கிக் கொண்டு சப்-இன்ஸ்பெக்டர் ரேகா புறப்பட்டார். அவரை பின் தொடர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், எஸ்.ஐ., ரேகாவை மடக்கிப் பிடித்தனர். அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரேகா, ஜாமீன் கோரி சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இம்மனு நீதிபதி தேவதாஸ் முன் விசாரணைக்கு வந்தது. ரேகா தரப்பில் ஆஜரான வக்கீல், நீண்ட நாட்களுக்கு பின் ரேகா கர்ப்பமாக உள்ளதால், மனிதாபிமான அடிப்படையில் ஜாமீன் வழங்க கோரினார். நீதிபதி தேவதாஸ் பிறப்பித்த உத்தரவு: லஞ்சம் வாங்கியதாக மனுதாரர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், அவர் ஊழல் போலீஸ் அதிகாரி என கூறப்படுகிறது. புழல் சிறையில் மருத்துவமனை உள்ளது. அங்கு பெண் டாக்டரும் உள்ளார். என்ன மருந்து தேவையோ அது வழங்கப்படும். சமீபத்தில் தான் ரேகா கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கின் தன்மை, சூழ்நிலை கருதி ஜாமீன் வழங்க விருப்பமில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி தேவதாஸ் உத்தரவிட்டுள்ளார்.

=======

ஒரு பெண் போலிஸ் அதிகாரியாக இருந்துகொண்டு புகார் கொடுக்க வந்த மற்றொரு பெண்ணிடம் லஞ்சம் கேட்டு மிரட்டிய இந்தப் பெண் இப்போது “தாய்மையைக்” காரணம் காட்டி ஜாமின் கேட்கிறார். பெண்ணுக்கு பெண்தான் எதிரி என்பது உண்மைதானோ?

தாய்மையுடன் இருக்கும்போது எப்படி ஒரு பெண்ணுக்கு இதுபோன்ற குற்றங்கள் செய்ய எண்ணம் தோன்றுகிறது. காலம் மாறிவிட்டது. தாய்மை என்பது இப்போதெல்லாம் குற்றம் செய்துவிட்டு தப்பித்துக்கொள்ள பயன்படுத்தும் கேடயமாகிவிட்டது. இந்தத் தாய்மையின் புனிதத்தின் பெயரால்தானே பல ஒருதலைபட்சமான சட்டங்கள் பெண்களுக்காக என்று இயற்றப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பல பெண்கள் இப்படித்தவறாகத்தானே பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். கடைசியில் “தாய்மையின்” புனிதத்தைப் பெண்களே மதிக்காதபோது பிறகு பெண்களை யார் மதிப்பார்கள்?



தன்வினை தன்னைச் சுடுமா? கண்டிப்பாகச் சுடும்.

செய்கின்ற ஒவ்வொரு செயலையும் நன்கு யோசித்து பிறகுதான் செய்யவேண்டும். தன்வினை தன்னைச் சுடும் என்று அன்று மூதாதையர்கள் சொன்னார்கள். அதைப் பின்பற்றி முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று சொன்னார்கள். பிறகு அதையே அறிவியல் என்ற பெயரில் ஒவ்வொரு விசைக்கும் எதிர்விசை உண்டு என்று சொன்னார்கள். இவ்வளவு சொல்லியும் அதை பெண்களுக்கு எடுத்துரைக்க சரியான ஆசிரியர் இல்லை. இந்த ஆன்மிக, அறிவியல் உண்மைகளை இந்தக் காலத்துப் பெண்கள் குறிப்பாக பொய் வரதட்சணை வழக்குப் போடும் பெண்கள் நன்கு உணரவேண்டும். அதற்குப் பெண்கள் வாரியம்தான் உதவி செய்யவேண்டும். வேறுயாரும் பொய்வழக்குப்போடும் பெண்களைக் காப்பாற்றவே முடியாது.



கிரகலட்சுமியின் அண்ணி தற்கொலை
ஜூலை 22,2010 தினமலர்

சென்னை : பிரபல நடிகரின் முன்னாள் மனைவியின் அண்ணி தற்கொலையில் சிலருக்கு தொடர்பிருப்பதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சென்னை, தி.நகர், மெலோனி தெருவைச் சேர்ந்தவர் பொன்குமார் தனசேகரன். இவர், பிரபல நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவியான கிரகலட்சுமியின் சகோதரர். பொன்குமாரின் மனைவி அபிராமி(30). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். பொன்குமாரின் சகோதரர் நாகராஜனும் தன் மனைவியுடன் இதே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர்.சொத்துப் பிரச்னை ஏற்பட்ட நிலையில், இருவரும் தனித்தனியே செலவுகளை கவனித்து வந்தனர். பொன்குமாரின் மனைவி அபிராமி, தன் படுக்கையறையில் தூக்கில் தொங்கினார். இது குறித்து, மாம்பலம் போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் அபிராமியின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், மாம்பலம் போலீசில் அபிராமியின் தாயார் ஜோன் சீனிவாசன், "பொன்குமாரின் சகோதரர் நாகராஜன், அவரது மனைவி ஜோதி மற்றும் ஜோதியின் சகோதரர் யுவகிருஷ்ணன் ஆகியோர் தான் தனது மகளை தற்கொலை செய்து கொள்ள தூண்டியுள்ளனர்' என புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



சூப்பர் ஷோ!


சபாநாயகரை நோக்கி செருப்பு வீச்சு :67 பேர் சஸ்பெண்ட்
தினமலர் ஜூலை 21, 2010
பெண்களுக்கு என்ன உரிமை கிடைக்கவில்லை இந்தத் திருநாட்டில்?
கருத்து சொல்லும் படம்


பாட்னா : முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, பீகார் சட்டசபையில் நேற்று இரண்டாவது நாளாக கடும் கூச்சல், குழப்பம், அமளி நிலவியது. சபாநாயகரை நோக்கி செருப்பும் வீசப்பட்டது. இதையடுத்து, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 67 பேர், மழைக்கால கூட்டத்தொடர் முழுவதற்கும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதன்பின் அதே கட்சியைச் சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ., பப்லு தேவை சபைக்காவலர்கள் வெளியேற்ற முற்பட்ட போது, மற்ற உறுப்பினர்கள் தடுக்க முற்பட்டனர். இந்த மல்லுக்கட்டின் போது, சபாநாயகரின் இருக்கையை நோக்கி செருப்பு ஒன்றும் வீசப்பட்டது. செருப்பை யார் வீசியது என்பது தெரியவில்லை. இருந்தாலும் அந்தச் செருப்பு, சபாநாயகர் மீது படவில்லை. இதேபோல், பீகார் சட்டசபை மேலவைக்கு வெளியேயும் பெரும் அமளி மற்றும் நாடகம் நடந்தது. நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.சி., ஜோதி குமாரி என்பவரை, சபைக்கு உள்ளே நுழைய விடாமல் காவலர்கள் தடுக்க முற்பட்ட போது, அவர் பூந்தொட்டிகளை தூக்கி வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டார். இதையடுத்து, அவரை பெண் காவலர்கள் சில அடி தூரத்திற்கு இழுத்துச் சென்று விட்டனர். சபையின் வெளியேதான் இந்த நிலைமை என்றால், உள்ளேயும் கடும் அமளி நிலவியது. ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.எல்.சி., சஞ்சய் பிரசாத், மேஜை மீதிருந்த மைக்குகளை பிடுங்கி ஆளும் கட்சியினரை நோக்கி எறிந்தார். சட்டசபை மேலவையில் ரகளையில் ஈடுபட்டதற்காக நேற்று முன்தினமே 14 எம்.எல்.சி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

=============



Tuesday, July 20, 2010

குழந்தைகளுக்கு எமனாகும் இந்தியக் கள்ளக்காதல் கலாச்சாரம்

சமீப காலமாக பத்திரிக்கைகள் விழிப்புடன் செய்திகள் வெளியிடுவதன் மூலம் பெண்கள் பாதுகாப்புச் சட்டம் என்ற இருட்டறைக்குள் இருந்துகொண்டு கொலைசெய்துகொண்டிருக்கும் பல பெண்களின் அப்பாவித்தனம் வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கிறது. இதுவரை கள்ளக்காதலுக்காக கணவனைக் கொல்லும் நிலை மாறி இப்போது குழந்தைகளையும் கொல்லும் இழிநிலையில் சென்றுகொண்டிருக்கிறது நிலவரம்.

சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பும், கருத்தும் எரிகின்ற தீயில் பெட்ரோல் ஊற்றியது போல பலருக்கும் நல்ல தன்னம்பிக்கையை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தக் கருத்துப்படி வயதுவந்த ஆண், பெண் இருவரும் விரும்பி உறவுகொண்டு அது கள்ளஉறவாக அதாவது இந்திய சட்டம் IPC497- Adultery சட்டப்படி அடுத்தவன் மனைவியுடனான உறவாக இல்லாதபட்சத்தில் அது சட்டப்படி தவறில்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியே அது அடுத்தவன் மனைவியுடனான உறவாக இருந்தால் உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும்தான் தண்டனை வழங்கப்படும் என்று சட்டத்தில் வரையறை செய்துவைத்திருக்கிறார்கள். அந்தத் தீர்ப்பின் பகுதியையும் அந்த சட்டப்பிரிவையும் கீழே பாருங்கள்.

IN THE SUPREME COURT OF INDIA
CRIMINAL APPELLATE JURISDICTION
CRIMINAL APPEAL NO. 913 of 2010
[Arising out of SLP (Crl.) No. 4010 of 2008]

S. Khushboo ... Appellant
Versus
Kanniammal & Anr. ... Respondents

21. While it is true that the mainstream view in our society is that sexual contact should take place only between marital partners, there is no statutory offence that takes place when adults willingly engage in sexual relations outside the marital setting, with the exception of `adultery' as defined under Section 497 IPC. At this juncture, we may refer to the decision given by this Court in Lata Singh Vs. State of U.P. & Anr., AIR 2006 SC 2522, wherein it was observed that a live-in relationship between two consenting adults of heterogenic sex does not amount to any offence (with the obvious exception of `adultery'), even though it may be perceived as immoral. A major girl is free to marry anyone she likes or "live with anyone she likes". (பெண் விரும்பினால் யாருடனும் சேர்ந்து வாழலாம் அது திருமணம் ஆன ஆணுடனா அல்லது திருமணமாகாத ஆணுடனா என்று சொல்லப்படவில்லை)

IPC 497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.

மேலே கொடுக்கப்பட்டுள்ள சட்ட வரையறைப்படியும், நீதிமன்ற தீர்ப்பின் கருத்தின்படியும் கீழுள்ள செய்தியில் கள்ளஉறவு ஏற்பட்டு அதில் ஒரு குழந்தை பலியிடப்பட்டிருக்கிறது. கீழுள்ள செய்தியில் திருமணமான ஆண் திருமணமாகாதப் பெண்ணுடன் உறவுவைத்திருக்கிறார். இது சமீபத்திய தீர்ப்புப்படி இரு வயதுவந்த ஆண்,பெண் கொண்ட விருப்ப உறவாக அமையும் அதேநேரத்தில் IPC497 (Adultery) சட்டப்படி அடுத்தவன் மனைவியுடனான உறவாக இல்லாததால் இது Adultery என்ற பிரிவின் கீழ் குற்றமாகவும் வராது.

மேலும் அந்த ஆண் அந்தப் பெண்ணுடன் திருமணம் செய்திருந்தால்தான் அது அந்த ஆணைத் தண்டிக்க வழி செய்யும் இருதார மணம் (Bigamy) என்ற பிரிவில் கருதப்படும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் மனைவியல்லாத இரண்டாவது காதலியுடன் திருமணம் செய்யாமல் பல அரசியல்வாதிகள் உங்கள் கண்ணுக்கெதிரேயே பெருமையுடன் உங்கள் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதனால் கீழுள்ள செய்தியில் உள்ளதுபோன்ற குற்றங்களை சட்டங்களும் சமுதாயமும் எப்படி ஊக்குவித்துக்கொண்டிருக்கின்றன என்று தெளிவாகத் தெரிகிறதல்லவா.


சூட்கேசில் சிறுவன் பிணம் : கள்ளக்காதலியின் வெறிச்செயல் அம்பலம்

தினமலர் ஜூலை 20, 2010

கொலை செய்யப்பட்ட சிறுவன் ஆதித்யா உடல், நாகை சுடுகாட்டில் புதைக்கப்பட்ட போது கதறியழும் தாய் ஆனந்தி.

சென்னை :சென்னையில் காணாமல் போய், சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் ஆதித்யாவை, அவனது தந்தையின் கள்ளக்காதலி பூவரசியே கொன்று சூட்கேசில் எடுத்துச் சென்று நாகப்பட்டினத்தில் வீசியுள்ளது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பூவரசியை, போலீசார் கைது செய்தனர்.

சென்னை, விருகம்பாக்கம் பத்மாவதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (33). கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த இவர், சென்னையில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஆனந்தி (எ) அனந்த லட்சுமி (30). இவர்களுக்கு நிவேதா (6) என்ற மகளும், மூன்றரை வயதில் ஆதித்யா என்ற மகனும் உள்ளனர்.வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அடுத்த திருவலம் கிராமத்தை சேர்ந்தவர் பூவரசி (26). எம்.எஸ்சி., பட்டதாரியான இவர், ஜெயக்குமார் பணியாற்றும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஜெயக்குமாரும், பூவரசியும் முன்னரே, சென்னையில் வேறு ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய போது நெருக்கம் ஏற்பட்டு, கள்ளத் தொடர்பாக வளர்ந்தது. பூவரசியை, வேப்பேரியில் உள்ள ஒய்.டபிள்யூ.சி.ஏ., விடுதியில் ஜெயக்குமார் தங்க வைத்தார். இதை அறியாத ஆனந்தியும், அவரது குழந்தைகளும், பூவரசியிடம் நெருக்கமாக பழகினர்.ஜெயக்குமார் அடிக்கடி தனது மகன் ஆதித்யாவை அலுவலகத்திற்கு அழைத்து வரும் போது, பூவரசி தன்னுடன் அழைத்துச் செல்வது வழக்கம். கடந்த சனிக்கிழமை 17ம் தேதி வழக்கம் போல் ஆதித்யா, அலுவலகம் வந்த போது, அரண்மனைக்காரன் தெருவில் உள்ள ஆண்டர்சன் சர்ச்சில் விழா நடப்பதாகவும், அங்கு ஆதித்யாவை அழைத்துச் செல்வதாகவும் பூவரசி கூறினார். தொடர்ந்து, ஜெயக்குமார், ஆதித்யாவை பூவரசியுடன் அனுப்பி வைத்தார். அன்று மாலை 6 மணிக்கு தனது மகன் ஆதித்யாவை காணவில்லை என்று எஸ்பிளனேடு போலீசில் ஜெயக்குமார் புகார் அளித்தார். விசாரணையில், தனது மகனை, நண்பியான பூவரசியுடன் அனுப்பியதாகவும், அவர் சர்ச்சில் மயங்கி விழுந்த போது மகனை காணவில்லை என்றும் கூறியிருந்தார். தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்த பூவரசியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவரும் அப்படியே கூறியதால், மறுநாள் விசாரணைக்கு வருமாறு போலீசார் கூறியிருந்தனர். மறுநாள் காலை போலீசும், ஜெயக்குமாரும் தொடர்பு கொண்ட போது, பூவரசியின் மொபைல் "சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. பிற்பகல் இணைப்பு கிடைத்த நிலையில், போலீசார் மீண்டும் பூவரசியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நாகை மாவட்ட புதிய பஸ் நிலையத்தில் சூட்கேசில் இறந்த நிலையில் சிறுவன் பிணம் மீட்கப்பட்டது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த படத்தை வைத்து கேட்ட போது ஜெயக்குமாரும், பூவரசியும் மறுத்துவிட்டனர். ஆனால், ஆனந்திக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவர் அடையாளம் காட்ட நாகைக்கு அனுப்பப்பட்டார்.அங்கு சென்ற ஆனந்தி, சூட்கேசில் இருந்த சிறுவன் உடல் தனது மகன் ஆதித்யாவுடையது தான் என தெரிவித்தார். தொடர்ந்து, பூவரசியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், ஆதித்யாவை கொன்றதை ஒப்புக் கொண்டார். போலீசார், பூவரசியை கைது செய்தனர். சிறுவனின் தந்தை ஜெயக்குமார் தற்போது நாகை விரைந்துள்ளார்.

சிறுவன் உடல், நாகை அரசு மருத்துவமனையில் குளிரூட்டப்பட்ட பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.இது குறித்த செய்தி பத்திரிகைகளில் வெளிவந்ததையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை போலீசாருடன், நாகை அரசு மருத்துவமனைக்கு வந்த ஆனந்தி, சிறுவன் உடலை பார்த்து கதறியழுது மயங்கி விழுந்தார். மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் ஆனந்தி சேர்க்கப்பட்டார்.நேற்று மாலை சிறுவன் ஆதித்யா உடல், பிரேத பரிசோதனைக்கு பின், நாகை சுடுகாட்டில் போலீஸ் பாதுகாப்புடன் புதைக்கப்பட்டது. இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் சோகத்தோடு பங்கேற்றனர்.நாகை பஸ் ஸ்டாண்டு முழுப்பகுதியையும் கண்காணிக்க, நவீன கேமரா பொருத்தப்பட்டு இதன் கட்டுப்பாட்டு அறை டி.எஸ்.பி., அலுவலகத்தில் 24 மணி நேரமும், தனி அலுவலரால் கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில், பஸ் ஸ்டாண்டின் மையப்பகுதியில், சிறுவனை கொலை செய்து உடலை அடைத்து வைத்திருந்த சூட்கேஸ் இறக்கி வைக்கப்பட்டு, அனாதையாக கிடந்துள்ளது. இது நவீன கண்காணிப்பு கேமராவில் பதிவாகாத மர்மம் போலீசாருக்கு புரியாத புதிராக உள்ளது.

"ஜெயக்குமாரை பழிவாங்கவே கொன்றேன்'

ஜெயக்குமாருக்கும், எனக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தொடர்பு ஏற்பட்டது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம். நான் கர்ப்பமடைந்த நிலையில், ஜெயக்குமாரின் வற்புறுத்தலால் கருவை கலைத்தேன். இரண்டு முறை அப்படி நடந்தது. தொடர்ந்து அவர், கருவை கலைக்கச் சொன்னதால் நான் ஆத்திரமடைந்தேன். திருமணம் செய்யுமாறு கூறியபோது ஜெயக்குமார் மறுத்தார். எனக்கு உருவான குழந்தையை கொன்றுவிட்டு, ஜெயக்குமார் மட்டும் குழந்தையுடன் சந்தோஷமாக இருக்கக் கூடாது என்று எண்ணினேன்.கடந்த 17ம் தேதி, சிறுவன் ஆதித்யாவை கூட்டிக் கொண்டு எனது விடுதிக்குச் சென்று, அங்கு அவன் அணிந்திருந்த டிரஸ்சில் இருந்து நைலான் கயிறை எடுத்து கழுத்தில் இறுக்கி கொன்றேன். பின்பு, தலையை பிளாஸ்டிக் கவரை கொண்டு மூடி உடலை சூட்கேசில் வைத்தேன். அங்கிருந்து ஆண்டர்சன் சர்ச்சிற்கு பாவமன்னிப்பு கேட்கச் சென்ற போது மயங்கி விழுந்து விட்டேன். போலீசார், மருத்துவமனையில் வைத்து விசாரிக்கும் போது, ஆதித்யாவின் உடல் சூட்கேசில் எனது அறையில் இருந்தது.மறுநாள் காலை மருத்துவமனையில் இருந்து வந்து, ஆட்டோவில் சூட்கேசை ஏற்றி கோயம்பேடு சென்று, அங்கிருந்து பஸ்சில் ஏற்றி புதுச்சேரி சென்றேன். அங்கு, நாகை பஸ்சில் சூட்கேசை ஏற்றி வைத்து விட்டு, மீண்டும் சென்னை திரும்பி விட்டேன். ஜெயக்குமாரை பழிவாங்கவே நான் இந்த கொலையை செய்தேன்.

==============

இந்த செய்தியிலிருந்து பெண்ணியவாதிகள் என்ன சொல்வார்கள் என்றால் பெண்ணை கர்ப்பம் அடையச் செய்து ஏமாற்றிவிட்டான் ஆண் என்று சொல்வார்கள். ஆனால் செய்தியில் பார்த்தீர்களா? முதல் முறை கர்ப்பம் அடைந்து அது கலைக்கச்சொல்லியும் மீண்டும் பெண்ணின் ஒத்துழைப்பு இல்லாமலா இரண்டாவது கர்ப்பம் எப்படி ஏற்பட்டிருக்கும்? இப்படித்தான் கள்ள உறவு IPC497 (Adultery) சட்டம் சொல்கிறது. கள்ள உறவில் ஈடுபடும் பெண் குற்றவாளி இல்லை என்று சொல்லி பெண்ணிற்கு தண்டணையிலிருந்து விலக்கு அளித்து பெருமைப்படுத்தினால் அப்பாவிக் குழந்தைகளின் உயிரை பணயம்வைத்து இதுபோன்ற சிறுமைத்தனங்கள்தான் நாட்டில் இனி பெருகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக ''தாய்மை" என்ற பண்பு சட்டங்கள் மூலம் சமுதாயத்தில் அழிக்கப்பட்டு வருகிறது என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. ஆனால் தாய்மை என்ற பெயரில் பெண்களுக்கு ஒருதலைபட்சமான சிறப்புச் சட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. கடைசியில் அந்தத் தவறான சட்டங்களை பயன்படுத்துபவர்கள் கொடூர குணம் கொண்ட அரக்கிகள் மட்டுமே. உங்கள் வீட்டிலிருக்கும் உங்களது தாய் மற்றும் சகோதரிகளை இந்த சட்டங்கள் ஒருபோதும் பாதுகாக்கவில்லையே ஏன்?

இதுபோலத்தான் பல பொய் வரதட்சணை வழக்குகள் நாட்டில் உலவிக்கொண்டிருக்கிறது. இதுபோலத்தானே ஒரு பெண் இரண்டுமாதக் குழந்தையைக் கூட வரதட்சணை வழக்கில் குற்றவாளியாகச் சேர்த்தார்.

Stepmom Names Two-Month-Old Baby in Dowry Complaint (link)

In diapers, lying in her mother's lap and yet to sprout teeth, but Zoya is an accused in a dowry harassment case. The two-month-old baby was named along with seven adults by her stepmother in a complaint letter to the police. What is worse is that the police has included the child's name in the FIR [“First Information Report,” the Indian equivalent of a police report]. Her mom: I told them (police) that she is a baby and how can you write her name in the police FIR.

கடைசியில் பெண்களுக்குச் சரியான சட்ட விழிப்புணர்ச்சி இல்லாததால்தான் இதுபோன்ற செயல்கள் நடைபெறுகிறது என்று பெண்கள்வாரியம் சொல்கிறது.



Elaborating on false cases being filed in recent times, the CJI said that relatives not involved with a matrimonial dispute were unfairly implicated. "In some cases, 498A is grossly misused,'' he said. Balakrishnan was speaking at a seminar, `Marriage laws -- issues and challenges', organised by the National Commission for Women.

The IPC section allows for immediate arrest of the husband and in-laws by the police on the basis of a woman's complaint and has been controversial. Several pro-male organisations have been protesting against the section saying that the law is being misused by women for selfish gains and should include a penalty provision against its misuse. But women activists have been lobbying for no change in the law.

Faced with adverse comments from the CJI, National Commission for Women (NCW) chairperson Girija Vyas said that it was lack of awareness that led to false cases under 498A. "I would not like to use the term misuse. There is lack of awareness amongst people that is exploited by lawyers and police. We feel there is no need to review the law,'' Vyas said.


இதுபோன்ற கள்ளக்காதல் கொலை, பொய் வரதட்சணை வழக்கு போன்ற செயல்களில் ஈடுபடும் பெண்கள் யாரும் கல்வியறிவில்லாத அறியாமையில் உழலும் அப்பாவிகள் கிடையாது. அனைவரும் நன்கு படித்து நல்ல பணியில் இருக்கும் மேல்தட்டுவர்க்க நகரத்துப் பெண்கள். இவர்கள் இப்படி செய்வதற்குக்காரணம் என்ன அறியாமையா? பழிவாங்கத்துடிக்கும் வஞ்சக குணம், ஆணவம், அனைவரையும் அடக்கியாளத் துடிக்கும் கொடூர எண்ணம். இந்தக் குணங்களை பெண்ணுரிமை என்ற பெயரில் பல அமைப்புகள் பெண்களிடையே புகுத்திவருகிறார்கள். அதன் வெளிப்பாடுகள்தான் பின்வரும் வீர வசனங்கள்.

"I want to teach men what their mothers didn’t"

"I am here to teach men what their mothers didn't teach them," declared Women and Child Development Minister Renuka Chaudhury
August 29, 2007
http://www.rediff.com/news/2007/aug/29men.htm

• • • • • • • • • •

Thats Tamil News, 3/4/2008
கணவன் அடித்தால் திருப்பி அடியுங்கள். குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என்று குடும்பத் தலைவிகளுக்கு மாநில மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் கூறினார்.

• • • • • • • • • •

அந்த வக்கிர ஆசையை தவறான பெண்கள் பூர்த்தி செய்துகொள்ள உதவுபவைதான் இன்றைய நடுநிலையற்ற பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள். இதுபோன்ற நடுநிலையற்ற சட்டங்கள் தவறானப் பெண்களை ஊக்குவிப்பதை நிறுத்தும்வரை இதுபோன்ற அப்பாவிப் பிஞ்சுக்குழந்தைகள் தங்களது உயிரை உங்களுக்காகத் தியாகம் செய்துகொண்டிருக்கும் அவலநிலை தொடரும்.




Monday, July 19, 2010

பெண் லஞ்சம் வாங்கினால் குடியா மூழ்கிவிடும்?

பெண்களுக்குப் பாதுகாப்பாக எத்தனையோ சட்டங்களை இயற்றியவர்கள் அவர்கள் லஞ்சம் வாங்கினால் மட்டும் ஏன் குற்றம் சொல்கிறார்கள். ஆண்கள் செய்யாததையா செய்துவிட்டார்கள். பெண் லஞ்சம் வாங்கினால் என்ன குடியா மூழ்கிவிடப்போகிறது? இதற்கும் தனியாக ஒரு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்படவேண்டும். அதுவரை பல “அப்பாவிப் பெண்கள்” இப்படித்தான் மாட்டிக்கொண்டு கஷ்டப்படவேண்டியிருக்கிறது. பெரும்பாலான பொய் வரதட்சணை வழக்குகள் இப்படி லஞ்சத்தின் உதவியால்தானே பதிவாகிறது. அவற்றை மட்டும் கண்டுகொள்ளாமல் இப்படி நடக்கும் விஷயத்தை மட்டும் ஏன் பெரிதுபடுத்துகிறார்கள்?

லஞ்சம் வாங்கி சிக்கிய பெண் போலீஸ் எஸ்.ஐ.

ஜூலை 19,2010 தினமலர்


யானைக்கவுனி: விசாரணையை முடிக்க பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய, பெண் போலீஸ் எஸ்.ஐ., லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கினார்.

வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் லட்சுமி(40); லாரி உரிமையாளர். லாரி நிறுவனத்தை மேம்படுத்த தனது வீட்டின் பத்திரங்களை, சென்னையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திடம் சில மாதங்களுக்கு முன் அடகு வைத்து இரண்டு லட்ச ரூபாய் பெற்றார். பின், கடன் தொகையை கட்டி தீர்த்துள்ளார். ஆனால் அந்த நிதி நிறுவனம் காலதாமதம், கூடுதல் தவணை போன்ற காரணங்களுக்காக மேலும் 41 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே, பத்திரத்தை கொடுக்க முடியும் என்று கூறியுள்ளது.

இது குறித்து, லட்சுமி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். கமிஷனரின் உத்தரவின் பேரில், யானைக்கவுனி எஸ்.ஐ.,ரேகா விசாரித்தார். லட்சுமியிடம் 30 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கி, தனியார் நிதி நிறுவனத்திடம் கொடுத்த ரேகா, அங்கிருந்து வீட்டின் பத்திரங்களை வாங்கி வைத்துக் கொண்டார். அதன் பின் லட்சுமியிடம், தனது விசாரணைக்காக எஸ்.ஐ., ரேகா மூவாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். இதற்கு லட்சுமி கொடுத்த ஆயிரம் ரூபாயை வாங்க மறுத்தார்.""நான் கேட்ட பணத்தை கொடுத்தால் தான் பத்திரத்தை தருவேன் என்று கட்டாயப்படுத்தினார்.

இது குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி., துர்க்கையாண்டி உத்தரவின்படி, எஸ்.பி., நிர்மல் குமார் ஜோஷி மேற்பார்வையில், டி.எஸ்,பி., சம்பந்தம், இன்ஸ்பெக்டர்கள் கந்தசாமி, விஜய் ஆனந்த் ஆகியோர் கொண்ட போலீசார் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். ரேகா கேட்டு கொண்டதன் பேரில், கொடுங்கையூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார் லட்சுமி. அப்போது கொடுங்கையூர் போலீஸ் நிலையம் அருகில், டூவீலரில் காத்திருந்த ரேகா ரசாயனம் தடவிய பணத்தை வாங்கிக் கொண்டு புறப்பட்டார். அப்போது மற்றொரு ஆட்டோவில் பின் தொடர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் எஸ்.ஐ.,ரேகாவை மடக்கிப் பிடித்தனர். லஞ்சமாக வாங்கிய ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரை போலீசார் கைது செய்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.

======================

கொஞ்ச நாட்களுக்கு முன் ஒரு பெண் போலிஸ் தான் கொடுத்தப் புகாரை மகளிர் காவல் நிலையத்தில் வாங்க மறுத்ததாக அழுது ஆர்ப்பாட்டம் செய்து புலம்பியிருந்தார். அவருக்கு பதில் சொல்லும் விதமாக அவரது துறையைச் சேர்ந்த தோழி மேற்கண்ட செய்தி மூலம் அந்த மர்ம முடிச்சை கட்டவிழ்த்திருக்கிறார்.

கணவனின் இரண்டாம் திருமணத்தை தர்ணா செய்து நிறுத்திய பெண் போலீஸ்
ஜூலை 02,2010 தினமலர்



சென்னை வேப்பேரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணிபுரியும் செந்தில்குமாரி (34) என்பவர், "எனக்கும், கோபாலகிருஷ்ணனுக்கும் ஏற்கனவே திருமணம் நடந்து விட்டது. தற்போது என்னை விட்டு, விட்டு வேறு பெண்ணின் கழுத்தில் தாலி கட்ட இருப்பதால், இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும்' என, சிப்காட் மகளிர் போலீசாரிடம் நேற்று காலை 8 மணிக்கும், திருவலம் போலீசாரிடம் காலை 9 மணிக்கும் புகார் செய்தார். செந்தில்குமாரி கொடுத்த புகாரை வாங்க போலீசார் மறுத்தனர். தானும் ஒரு போலீஸ் தான் என்று கூறியதையும் ஏற்கவில்லை. அதிர்ச்சியடைந்த செந்தில்குமாரி, திருமணத்தை தடுக்க நேரடியாக களம் இறங்கினார். ராணிப்பேட்டை, வாலாஜா பேட்டையில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு தகவல் கொடுத்தார். திருமண மண்டபத்தின் முன் உட்கார்ந்து தர்ணா போராட்டம் செய்தார்.

போலீசான நான் கொடுத்த புகாரையே வாங்க மறுத்து விட்டனர். எனக்கே இந்த கதி என்றால், பொது மக்களின் நிலை என்ன என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
===============

மகளிர் காவல்நிலையங்களில் ஒவ்வொரு நாளும் எத்தனையோ அப்பாவிப் பெண்களும், ஆண்களும், வயதானவர்களும், குழந்தைகளும் பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள். அப்பாவிகளை தரக்குறைவாக நடத்தி பொய் வழக்குகள் பதிவுசெய்து அநாகரிகமாக நடத்தும்போது அந்த அப்பாவிகளுக்கு ஏற்படுவது என்ன இன்பவேதனையா? எந்த ஒரு வரதட்சணை வழக்கும் முறையாக விசாரணை செய்யப்படுவதில்லை. புகார் பொய் என்று தெரிந்தாலும் புகாரில் இருப்பதை அப்படியே “வாந்தியெடுத்து” குற்றப்பத்திரிக்கையாக நீதிமன்றங்களுக்கு அனுப்பி அப்பாவிகளை அலைக்கழிக்கும்போது அந்த அப்பாவிகள் என்ன இன்பத்தில் மூழ்கித் திளைக்கிறார்களா?

மகளிர் காவல் நிலையங்கள் பல அப்பாவிகளின் வாழ்வை சிதைக்கும் கூடாரங்கள். பொய் வரதட்சணை வழக்குகளின் களஞ்சியம். தனக்கு என்று வரும்போதுதான் அந்த வேதனை புரியும். சட்டங்கள் செய்யாததை அப்பாவிகளின் சாபம் தப்பாமல் செய்யும்.




காலமெல்லாம் கள்ளக்காதல் வாழ்க!

இந்திய ஆண்களுக்கு செத்தாலும் புத்தி வராது என்று பெண்கள் நன்றாகத் தெரிந்து கொண்டார்கள்.

கள்ளக்காதலுக்கு இடையூறு கணவனை கொன்ற மனைவி

தினமலர் 20 ஜூலை 2010

வாழப்பாடி: வாழப்பாடி அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வாழப்பாடி அடுத்த ரங்கனூர் ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணன்(60). அவரது இரண்டாவது மனைவி நீலாம்பாள் (35). அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அங்கமுத்து(58) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. மனைவி மீது சந்தேகம் கொண்ட விவசாயி கிருஷ்ணன் அடிக்கடி அவரிடம் தகராறு செய்துள்ளார்.

கடந்த 16ம் தேதி இரவு மனைவியுடன் தகராறு செய்த விவசாயி கிருஷ்ணன் மர்மமான முறையில் அவரது வீட்டு கூரை சட்டத்தில் கயிற்றில் பிணமாக தொங்கினார். பிணத்தை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.பிரேத பரிசோதனையில் விவசாயி கிருஷ்ணன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நீலாம்பாள், தனது கள்ளக்காதலன் அங்கமுத்துடன் சேர்ந்து கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது தெரியவந்தது.நீலாம்பாள் மற்றும் அவரது கள்ளக்காதலன் அங்கமுத்து ஆகியோரை பிடித்து வாழப்பாடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Saturday, July 17, 2010

சட்டம் படித்த பெண் செய்த சுவாரஸ்யமான கொலை


How a fiancée killed Intel employee
A murder most foul and crimes that rocked cities acrosss India

MSN News 15/7/2010

Crime file opens with a murder of Bangalore-based Intel engineer that was cleverly planned by his fiancee.


This was the first time that cellphone records were used to crack a case.

Investigators said Shubha, then a student of BMS College of Law, had been in love with Verma, her junior in college and two years younger to her. Her parents, who got to know of the affair, forced her into engagement with Girish, their neighbour for 15 years.

Following the engagement, Shubha and Verma conspired to eliminate Girish. Dinakar helped his cousin to plot the murder, and even hired Venkatesh. They carried out their plan three days after Girish was engaged to Shubha.

Girish was a brilliant student. His death shook his father who died of shock and depression 2007.

Based on the investigations, the police arrested Shubha, her lover Arun Verma and his cousin Dinakar alias Dinesh. The fourth convict, tempo driver Venkatesh, has been languishing in jail since 2004.

According to the prosecution, Girish had parked his two-wheeler on the road, and the couple went to watch aircraft landing. Meanwhile, Verma and Venkatesh were watching the couple from the other side of the road. As Girish was watching the landings, Venkatesh sneaked in from behind, and hit him on the head with a shock observer. He then fled on Verma's bike.

The 17th Fast Track court in Bangalore on Wednesday sentenced Shubha, her boyfriend Arun Verma and two of his associates to life imprisonment. A fine of Rs 50,000 each was also levied on the four accused and the amount will be handed over to Girish's family.

Shubha was given two years extra jail term and Rs 20,000 fine for trying to destroy evidence.

When Shubha came to the court, she looked unmoved and had a deadpan expression. Arun and Dinesh covered their faces and tried to flee from the media.

=============

சட்டம் படித்த பெண் எப்படி நன்றாக திட்டமிட்டுக் கொலை செய்திருக்கிறார் பாருங்கள். காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த பெற்றோரை “சட்டப்படி” சந்தித்து தனது திருமணத்தைக் காதலனுடன் சந்தோஷமாக அனுபவித்திருக்கலாமே. அப்படிச் செய்யாமல் ஒரு அப்பாவியை அல்லவா கொன்றிருக்கிறார்கள்.

சட்டம் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் இந்தியாவில் இளம் பெண்களும், இளம் மனைவியரும் “அப்பாவிகள்” தான் என்று ISI முத்திரை குத்தி வைத்திருக்கிறார்கள். அதனால் தாங்கள் நினைப்பதை எவ்வழியிலாவது செய்து முடித்துவிடுகிறார்கள் பல பெண்கள். குறிப்பாக பொய் வரதட்சணை வழக்கானாலும் சரி, கணவனை கொலை செய்வதானாலும் சரி பெண்கள் செய்தால் அதில் எந்தத் தவறும் கிடையாது என்று இன்னும் பலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்!




உள்நாட்டு ‘ஸ்டைலில்’ ஒரு இலவச "செக்ஸ்" கல்வி?!

தினமலரில் வந்த படம் ஜூலை 17, 2010

இதையெல்லாம் தடுக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்திற்கும், பெண்கள் நல வாரியத்திற்கும் நேரமில்லை போலிருக்கிறது! இவர்கள் வரதட்சணை வழக்குகளுக்கு மட்டும்தான் முன்னுரிமை தருவார்கள். ஏன் என்ற கேள்வி எழுப்பும் சிந்தனையாளர்கள் இதற்குப் பின்னால் இருக்கும் வெளிநாட்டு நிதியுதவி வலைப்பின்னலைப் பற்றி இங்கே சென்று பாருங்கள் இந்திய குடும்ப அழிப்புச் சட்டங்களை இயற்ற “குடும்ப வன்முறை சட்ட நிதி” என்ற பெயரில் வெளிநாடு கொடுக்கும் நிதியுதவி!

இவற்றில் உருவாகிக்கொண்டிருப்பவைதான் சமீப காலமாக உருவாகிக்கொண்டிருக்கும் 2005 Domestic Violence Act போன்ற சட்டங்கள்.

  1. வரதட்சணை தடுப்புச் சட்டம் (1961) - இதில் இதுவரை வரதட்சணை கொடுத்த எந்தப் பெண்ணும் தண்டிக்கப்பட்டதில்லை.
  2. IPC498A (1984) - இந்த சட்டப்படி மனைவி சொல்வது மட்டும்தான் உண்மை. மனைவி பொய்யாகப் புகார் கொடுத்தால் தண்டிக்க எந்தவித பிரிவுகளும் கிடையாது.
  3. குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் (2005) - இந்த சட்டப்படி பெண் என்பவள் எந்த வன்முறையும் செய்யத் தெரியாதவள். ஆண்தான் எப்போதும் குற்றவாளியாகக் கருதப்படுவான்.
  4. கள்ளக் காதல் உறவு (IPC497) - இந்த சட்டப்படி பெண்ணின் கள்ள உறவு என்பது புனிதமானது. இந்த தவறான உறவில் ஈடுபடும் பெண் தானே விரும்பி தவறு செய்தாலும் எந்த தண்டணையும் கிடையாது. ஆனால், ஆணுக்கு தண்டனை உண்டு.

ஒரேவித நோக்கத்திற்காக இதுவரை அடுக்கடுக்காகப் பலவித சட்டங்கள் தொடர்ந்து இயற்றப்பட்டு வருகிறது. ஆனால் சட்டத்தின் நோக்கத்தை முழுமையாகச் செயல்படுத்தாமல் வரதட்சணை கொடுப்பவர்களையும், சட்டத்தை சுயநலத்திற்காகப் பயன்படுத்துபவர்களையும் தண்டிக்காமல் ஆதரித்து வளர்க்கும் வகையில் இந்த சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

அதற்குக் காரணம் பல பொய் வழக்குகள் பதிவானால்தான் அதிக புள்ளிவிபரம் காட்டி நிதியுதவி பெறமுடியும். எப்போதும் இதுபோன்ற புள்ளிவிபரங்களில் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை மட்டும்தான் காட்டப்படும். கடைசியில் எத்தனை வழக்குகள் நீதிமன்றத்தில் குற்றம் என நிருபிக்கப்பட்டது என்று குறிப்பிடமாட்டார்கள். ஏனென்றால் புள்ளிவிபரம் காட்ட எண்ணிக்கையே இல்லாமல் போய்விடும் அல்லவா? அதனால் காவல்நிலையத்தில் எத்தனை FIR பதிவாகிறது என்பது மட்டும்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதிக எண்ணிக்கையில் வழக்குகள் பதிவாக பலவகையான சட்டங்கள் தேவை. அவற்றை தவறாகப் பயன்படுத்தினால்தானே பதிவாகும் புகார்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். இந்த தந்திரம் தெரிந்தவர்கள் பெண்களின் பெயரால் பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த உண்மையை உணர்ந்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?

இந்த சட்டங்களால் நாட்டில் நடந்துகொண்டிருக்கும் அவலநிலைக்கு ஒரு துளி உதாரணம் கீழே உள்ளசெய்திகள்.


Stepmom Names Two-Month-Old in Dowry FIR (link)
In diapers, lying in her mother's lap and yet to sprout teeth, but Zoya is an accused in a dowry harassment case. The two-month-old baby was named along with seven adults by her stepmother in a complaint letter to the police. What is worse is that the police has included the child's name in the FIR [“First Information Report,” the Indian equivalent of a police report]. Her mom: I told them (police) that she is a baby and how can you write her name in the police FIR.



92 year old woman dragged to police stations (link)

The officer in-charge of Bainsada police station had arrested Badan Devi (92), a widow, and her 40-yearold daughter Minatee of Ichhapur village on Saturday. The police action followed an FIR lodged by the woman's daughter-in-law, Santilata. Police did not even bother to make special arrangements for the old woman. They virtually dragged the tottering accused" to court along with other criminals.

இதுபோன்ற சட்டங்களால் பெண்கள் சட்டங்களை எப்படித் தவறாகப் பயன்படுத்தி தங்களது குடும்பங்களைத் தங்களுக்குத் தெரியாமலேயே எப்படி அழிந்துகொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை நீதிமன்றம் விரிவாகச் சொல்லியிருக்கிறது. இதுபோன்ற குடும்ப அழிப்புகளுக்குக் காரணம் பொய் வழக்குப் போடும் மனைவிகளா? அல்லது பெண்கள் சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தும் விதத்தில் ஊக்குவிக்கும் அமைப்புகளா? அல்லது இதுபோன்ற பல சட்டங்களை இயற்ற வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் நிதியுதவியா? சிந்தியுங்கள்.


N THE HIGH COURT OF DELHI AT NEW DELHI, CRL. R 462/2002 DATE OF DECISION: May 19, 2003,
HON’BLE MR. JUSTICE J.D. KAPOOR

23.These provisions were though made with good intentions but the implementation has left a very bad taste and the move has been counter productive. There is a growing tendency amongst the women which is further perpetuated by their parents and relatives to rope in each and every relative- including minors and even school going kids nearer or distant relatives and in some cases against every person of the family of the husband whether living away or in other town or abroad and married, unmarried sistes, sister-in-laws, unmarried brothers, married uncles and in some cases grand-parents or as many as 10 to 15 or even more relatives of the husband. Once a complaint is lodged under Sections 498A/406 IPC whether there are vague, unspecific or exaggerated allegations or there is no evidence of any physical or mental harm or injury inflicted upon woman that is likely to cause grave injury or danger to life, limb or health, it comes as an easy tool in the hands of Police and agencies like Crime Against Women Cell to hound them with the threat of arrest making them run here and there and force them to hide at their friends or relatives houses till they get anticipatory bail as the offence has been made cognizable and non-bailable. Thousands of such complaints and cases are pending and are being lodged day in and day out.

24.These provisions have resulted into large number of divorce cases as when one member of the family is arrested and sent to jail without any immediate reprieve of bail, the chances of salvaging or surviving the marriage recede into background and marriage for all practical purposes becomes dead. Result is that major bulk of the marriages die in their infancy, several others in few years. The marriage ends as soon as a complaint is lodged and the cognizance is taken by the police.




Thursday, July 15, 2010

இந்தியக் கணவனின் தலையெழுத்து

கள்ள உறவில் ஈடுபடும் மனைவியை தண்டிக்க சட்டங்கள் கிடையாது. அதனால் கணவன்தான் தற்கொலை செய்துகொள்ளவேண்டும். இது எழுதப்படாத சட்டம். அப்படி செய்யாமல் மனைவியின் தவறை சுட்டிக்காட்டினால் கணவன் மீது பொய் வரதட்சணை வழக்குகள் தொடரப்படும். பொய் வரதட்சணை வழக்கில் சிக்கும் கணவன் சட்ட தீவிரவாதக் கூட்டத்தில் சிக்கி தினம் தினம் சாகவேண்டும். இதுதான் நாட்டில் நடந்துகொண்டிருக்கும் நடைமுறை சட்டம்.

கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: கணவன் தற்கொலை

ஜூலை 16,2010 தினமலர்

ஓமலூர்: ஓமலூர் அருகே மனைவி கள்ளக்காதலனுடன் உல்லாசத்தில் இருப்பதை பார்த்த கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.ஓமலூரை அடுத்த காங்கியானூர் காலனி பகுதியை சேர்ந்த மாரியப்பன், கூலி தொழிலாளி. அவரது மனைவி அம்சவேணி.சில மாதங்களாகவே அம்சவேணிக்கும் அதே பகுதியில் உள்ள சிலருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வருவதாக மாரியப்பனுக்கு தெரியவந்தது. மனமுடைந்த நிலையில் மாரியப்பன் இருந்து வந்தார்.நேற்று முன்தினம் மாரியப்பன் வீட்டில் இல்லாத நேரத்தில் அம்சவேணி வேறு ஒருவருடன் இருந்தார்.

திடீரென வீட்டிற்கு வந்த மாரியப்பன், தன் மனைவி வேறு ஒருவருடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தன் மனைவி அம்சவேணியிடம் தகராறு செய்தார். ஆத்திரமடைந்த அம்சவேணி தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.மாரியப்பன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அருகில் இருந்தவர்கள் மாரியப்பனை ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். வழியிலேயே மாரியப்பன் உயிரிழந்தார்.தீவட்டிப்பட்டி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.


IPC 497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.




Wednesday, July 14, 2010

எதிர்கால மாணவிக்குத் தேவை புத்தகமா அல்லது கர்ப்பமா?

சமீபத்தில் டில்லி உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் தீர்க்க தரிசனமான ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் எதிர்கால கல்லூரி மாணவிகள் கல்லூரிக்குச் செல்லும் நிலை எப்படி இருக்கும் என்று சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி ஒரு புதுமையான சமூக சீர்திருத்தக் கருத்தும் சொல்லப்பட்டிருக்கிறது.

கர்ப்ப காலத்தில் சட்டக் கல்லூரிக்கு சரியாக செல்லாமல் வருகைப் பதிவு குறைந்ததால் தேர்வு எழுத அனுமதிக்காத பல்கலைக் கழகத்திற்கு எதிராக மாணவிகள் தொடுத்த வழக்கில் தீர்ப்பு சொல்லும்போது முடிவுரையில் அந்த புரட்சிகரமான கருத்தையும் சேர்த்து சொல்லியிருக்கிறது நீதிமன்றம்.

if any female candidate is deprived or detained in any of the semester just on the ground that she could not attend classes being in the advanced stage of pregnancy or due to the delivery of the child, then such an act on the part of any of the university or college would not only be completely in negation of the conscience of the Constitution of India but also of the women rights and gender equality this nation has long been striving for. It is a saying that “Motherhood is priced of God, at price no man may dare to lessen or misunderstand”. By not granting these students relaxation, we will be making motherhood a crime which no civilized democracy in the history of mankind has ever done or will ever do. We cannot make them pay the price for the glory that is motherhood.

தாய்மை என்பது புனிதமானது. இது திருமணத்தின் மூலம் ஒவ்வொரு பெண்ணிற்கும் ஏற்படும் ஒரு உடல் நிலை மாறுபாடு. இது வியாதியல்ல. அதனால் இதனைக் காரணம் காட்டி விடுப்பு எடுக்கும் மாணவியரை வருகைப்பதிவு குறைவாக இருக்கிறது என்ற காரணத்தால் தேர்வு எழுத அனுமதி மறுப்பது மனிதத்தன்மையற்ற செயல் என்று மாணவியர் தொடுத்த வழக்கில் நீதிபதி தீர்ப்புக் கூறினார். மிகவும் சரிதான்.

ஆனால், அந்தத் தீர்ப்பின் முடிவுரையில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் இந்தியப் பெண்களின் கற்பு, கலவு பற்றி கூறிய தீர்ப்பை மேற்கோள் காட்டி இனிவரும் காலங்களில் திருமணம் செய்யாமல் கர்ப்பம் தரித்து பல மாணவிகள் கல்லூரிக்கு வரும் சூழ்நிலை இருக்கிறது. அதனால் பல்கலைக்கழக விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்று டில்லி நீதிமன்றம் கூடுதல் அறிவுரையும் வழங்கியிருக்கிறது. திருமணம் செய்யாமல் கூடி வாழ்வது தவறில்லை என்று உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டதால் சமுதாயத்தில் ஏற்படப்போகும் மாற்றத்திற்கு ஏற்ப சட்டங்கள் வளைந்துகொடுக்கவேண்டுமே தவிர சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு தடையாக இருக்கக்கூடாது என்று நீதிபதி தனது கருத்தைத் தெளிவாகச் சொல்லியிருகிறார். தீர்ப்பின் அந்தப் பகுதியை கீழே படித்துப்பாருங்கள்.

IN THE HIGH COURT OF DELHI AT NEW DELHI
Judgment delivered on: 12.07.2010
முழுத் தீர்ப்பை இங்கே காணலாம் W.P.(C) No. 8302/2009

“It would not be inappropriate to mention at this juncture the recent rulings of the Apex Court in the cases of Lata Singh vs. State Of U.P AIR 2006 SC 2522 and S. Khushboo vs. Kanniamal & Anr MANU/SC/0310/2010 where it has given liberty to the live-in relationship from the shackles of being an offence and also in the latter case where it has held that premarital sex is not an offence. The society today is changing at a rapid pace and we must be in tune with the realities and not hold on to archaic social mores. Once such a right, however unpopular, is recognized then it cannot be ruled out that there can be more cases of girl students proceeding on maternity leave when while they are still in college. Law should be an instrument of social change and not a defender of it. Motherhood is not a medical condition but a promise. We all kowtow to our mothers to whom we owe our existence and to punish a woman for becoming a mother would surely be the mother of all ironies.

Bar Council of India, although not a party in the present writ petitions, is hereby suggested to make rules for women students claiming relaxation on ground of maternity relief so that they are not deprived of appearing in the LLB
examinations due to pregnancy.

தாய்மை என்பது புனிதமானதுதான். ஆனால் அந்த புனிதத்தை எந்த வகையில் பெண் பெற நினைக்கிறாள் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். திருமணம் செய்யாமல் கூடி வாழும் நிலை சமூகத்தில் உருவாகிக்கொண்டிருக்கிறது அதற்கேற்ப சட்டங்கள் மாறவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. சமுதாயத்தில் ஏற்படும் நல்ல மாற்றங்களை சட்டங்கள் ஆதரிக்கவேண்டும். அதே சமயம் சமுதாயம் தவறான பாதையில் மாற்றம் அடைந்து கொண்டிருந்தால் அதை தட்டிக்கேட்கும் விதமாகவும் இருக்கவேண்டும். சமுதாய மாற்றம் என்ற பெயரில் தன்னிச்சைப்படி சமுதாயம் செல்லும் வழியில் தானும் செல்வது சட்டமா? அல்லது சமுதாயத்திற்கு நல்ல வழியைக் காட்டி ஆரோக்கியமான சமுதாய மாற்றத்திற்கு உதவுவது சட்டமா?

கடைசியில் திருமணம் இல்லாமல் வரைமுறையின்றி தன்னிஷ்டப்படி பலருடன் கூடி வாழ்ந்து கர்ப்பம் தரிப்பதும், துன்பம் அனுபவிக்கப்போவதும் பெண்கள்தான்! சமுதாய மாற்றங்கள் தொடரட்டும்!! தந்தையற்ற குழந்தைகள் பெருகட்டும்!!!

Saturday, July 10, 2010

ராத்திரி நேரத்து பூஜை ஆரம்பம்!

தமிழ் நாட்டில் இரவு நேரத்திலும், விடுமுறை நாட்களிலும் குடும்ப நீதிமன்றங்கள் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. நல்ல முன்னேற்றம். நாட்டில் பல விவாகரத்து வழக்குகள் அதிகமாகியிருப்பதுதான் இதற்குக் காரணம்.

சென்னை, ஜூலை 10: கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் இலவச ஆலோசனை வழங்குவதற்காக சட்ட உதவி மையத்தில் "ஹெல்ப் லைன்' தொடங்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தெரிவித்தார்.

இதன் மூலம் குடும்பத்தில் ஏற்படும் சிறிய பிரச்னைகள் விவாகரத்து வரை செல்வது தடுக்கப்படுவதோடு, விவாகரத்து மனுக்களும் பெருமளவில் குறைக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

வார விடுமுறையில் குடும்ப நல நீதிமன்றங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் தொடக்க விழா சென்னை உயர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பேசியது: நாட்டிலேயே முதல்முறையாக வார விடுமுறை நாள்களில் குடும்ப நல நீதிமன்றங்கள் இங்கு செயல்பட உள்ளன.

இந்தத் திட்டம் விரைவிலேயே நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.10 லட்சம் மக்கள்தொகை கொண்ட நகரத்துக்கு ஒரு குடும்ப நல நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் தாக்கல் செய்யப்படும் குடும்ப நல வழக்குகளுக்கு இப்போதுள்ள 3 நீதிமன்றங்கள் போதுமானவையாக இல்லை.

இந்த நீதிமன்றங்களின் எண்ணிக்கையை 5 ஆக அதிகரிக்க வேண்டும் என்றும், மாவட்டத் தலைநகரங்கள் தோறும் குடும்ப நல நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்றும் அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.கடந்த 2000- ல் விவாகரத்து கோரி 972 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2009-ல் இந்த எண்ணிக்கை 2,425 ஆக அதிகரித்துள்ளது.

விவாகரத்து தவிர ஜீவனாம்ச வழக்குகளும் இதேபோன்று பல மடங்கு அதிகரித்துள்ளன.மொத்தம் 12,659 வழக்குகள் சென்னையிலுள்ள 3 குடும்ப நல நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இவற்றில் பெரும்பாலான வழக்குகள் நல்ல ஆலோசனைகள் வழங்கினால் தீர்க்கப்பட்டு விடும்.கணவன், மனைவி இடையே மனக்கசப்பு ஏற்பட்ட உடனேயே அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் பிரச்னை சிறிதாக இருக்கும்போதே தீர்வு காண்பதோடு, விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கையை பெருமளவு குறைக்கலாம். இதற்காக சட்ட உதவி மையத்தில் "ஹெல்ப் லைனை' தொடங்கும் திட்டம் உள்ளது.

அதேபோல், சட்ட உதவி மையத்தில் செயல்படும் ஆலோசனை மையங்களையும் இரவு 10 மணி வரை நீட்டிக்கும் திட்டம் உள்ளது.குடும்ப நல நீதிமன்றங்களுக்கு வரும் பெண்கள், குழந்தைகளுக்கு உதவும் வகையில் புதிய கட்டடம் ஒன்றும் அமைக்கப்பட வேண்டும் என்றார் எம்.ஒய்.இக்பால்.நீதிபதி எலிப் தர்மாராவ்: மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் மாவட்ட நீதிபதிகளுக்கு வழங்கப்படுவதில்லை.


மாவட்ட நீதிமன்றங்கள், நீதிபதிகளின் அறைகள், வீடுகளில் ஏ.சி. வசதி செய்யப்பட வேண்டும் என்றார் எலிப் தர்மாராவ்.நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா, நீதிபதி டி.முருகேசன், குடும்ப நல முதன்மை நீதிபதி பி.ராமலிங்கம், லா அசோசியேஷன் தலைவர் டி.வி. கிருஷ்ணகுமார், பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் டி.பிரசன்னா, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி. பால்கனகராஜ் உள்ளிட்டோர் பேசினர்.

இதுபோல விவாகரத்து வழக்குகள் அதிகமானதற்குக் காரணம் கணவன் மனைவியிடையே ஏற்படும் சிறு பிரச்சனைகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்க ஆளில்லாமல்போனதுதான் காரணம் என்று நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் நாட்டில் என்ன நடக்கிறது. பெண்களுக்கு நல்வழி காட்வேண்டிய பெண்கள் வாரியம் சொல்லிக்கொடுப்பது என்ன என்று கீழுள்ள செய்தியில் பாருங்கள்:

நெல்லை: கணவன் அடித்தால திருப்பி அடியுங்கள், உடல் ரீதியான வன்முறைக்கு இடம் கொடுக்காதீர்கள் என்று குடும்பத் தலைவிகளுக்கு மாநில மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் கூறினார்.

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் நெல்லை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி இணைந்து குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் குறித்த கருத்தரங்கை நடத்தியது. கல்லூரி வாளகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரகாஷ் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், பொருளாதார வன்முறை, பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். கணவன் மனைவியை அடிப்பது இயல்பானது என்றும் அன்பின் வெளிப்பாடு என்றும் கூறப்படுகிறது.

அல்வாவும், பூவும் கொடுத்து பெண்களை சமாதானம் செய்து விடலாம் என்பது போன்ற காட்சிகள் திரைப்படங்களில் சித்தரிக்கப்படுகிறது.

குட்ட குட்ட குனிவதை தவிர்த்து எதிர்த்து நில்லுங்கள். கணவன் அடித்தால் திருப்பி அடியுங்கள். உடல் ரீதியான வன்முறைக்கு இடம் கொடுக்காதீர்கள். குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என்றார் அவர்.

உண்மையை சொல்லவேண்டுமென்றால் நாட்டில் என்ன நடக்கிறதென்றால் கணவன் மனைவிக்கிடையே சிறு பிரச்சனை ஏற்பட்ட உடனே பெண்களுக்கு வழங்கப்படும் அறிவுரை என்னவென்றால் பொய் வரதட்சணை வழக்குத் தொடரவேண்டும் என்பதுதான். இதுதான் பல சட்டமேதைகள் தங்களிடம் வரும் பெண்களுக்கு சொல்லித்தரும் அறிவுரை. பிரச்சனைக்குக் காரணம் என்ன என்றுகூட யாரும் கேட்கமாட்டார்கள். பிறகு இதற்கு “காசிற்காக” தூபம் போடுவதுபோல் மகளிர் காவல்நிலையத்தில் நடக்கும் கட்ட பஞ்சாயத்து, கணவனையும் அவனது குடும்பத்தையும் சிறையிலடைத்து அவமானப்படுத்தி மிரட்டும் கொடுஞ்செயல். இவையெல்லாம் கடைசியில் எல்லா குடும்பத்தையும் விவாகரத்தில்தான் கொண்டுபோய் சேர்க்கும்.

இந்த விஷயத்தை 2003ம் ஆண்டில் தில்லி உயர்நீதிமன்றம் சொல்லிவிட்டது:

IN THE HIGH COURT OF DELHI AT NEW DELHI,
DATE OF DECISION: May 19, 2003,

23.These provisions were though made with good intentions but the implementation has left a very bad taste and the move has been counter productive. There is a growing tendency amongst the women which is further perpetuated by their parents and relatives to rope in each and every relative- including minors and even school going kids nearer or distant relatives and in some cases against every person of the family of the husband whether living away or in other town or abroad and married, unmarried sisters, sister-in-laws, unmarried brothers, married uncles and in some cases grand-parents or as many as 10 to 15 or even more relatives of the husband. Once a complaint is lodged under Sections 498A/406 IPC whether there are vague, unspecific or exaggerated allegations or there is no evidence of any physical or mental harm or injury inflicted upon woman that is likely to cause grave injury or danger to life, limb or health, it comes as an easy tool in the hands of Police and agencies like Crime Against Women Cell to hound them with the threat of arrest making them run here and there and force them to hide at their friends or relatives houses till they get anticipatory bail as the offence has been made cognizable and non-bailable. Thousands of such complaints and cases are pending and are being lodged day in and day out.

24.These provisions have resulted into large number of divorce cases as when one member of the family is arrested and sent to jail without any immediate reprieve of bail, the chances of salvaging or surviving the marriage recede into background and marriage for all practical purposes becomes dead. Result is that major bulk of the marriages die in their infancy, several others in few years. The marriage ends as soon as a complaint is lodged and the cognizance is taken by the police.

அதனால் விவாகரத்து வழக்குகள் அதிகமாகிவிட்டன என்பதற்காக நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அதே நேரத்தில் ஏன் இப்படி அதிகமானது என்ற அடிப்படைக் காரணத்தை ஆராய்ந்து அதை சரி செய்தால்தான் சமுதாயத்தில் குடும்பக் கட்டமைப்பு சிதையாமல் இருக்கும். நீதிமன்றங்கள் அதிகரிப்பதால் பலருக்கு வருமானம் கிடைப்பதைத்தவிர அப்பாவிகளுக்கு எந்த நன்மையும் ஏற்படாது.


பொய் வரதட்சணை வழக்குகள் உருவாவதை தடுக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்படாதவரை இந்தியக்குடும்பங்கள் அழிவதை யாராலும் தடுக்க முடியாது. பணம் கிடைக்கிறது என்பதற்காக அடுத்தவன் குடிதானே கெடுகிறது நமக்கென்ன என்றிருப்பவர்களுக்கு தன்குடி கெடும்போதுதான் அந்த உண்மை புரியும். அதுவரை இந்த ராத்திரி நேரத்து நீதிமன்ற பூஜைகள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கும்.




Thursday, July 08, 2010

மகளிர் காவல் நிலையத்தில் நடக்கும் ரகசியம்!

சமீபத்தில் வந்த செய்தியில் ஒரு பெண்காவலர் தான் கொடுத்த புகாரை மகளிர் காவல்நிலையத்தில் வாங்க மறுத்ததாகவும் காவலரான தனக்கே இந்த நிலை என்றால் பொதுமக்களுக்கு என்ன நடக்கும் என்று கேள்விக்கணை தொடுத்திருந்தார். அந்த செய்தியை இங்கே (தனக்கு வந்தால்தான் அந்த இன்பவலியை உணரமுடியுமோ?) படித்துவிட்டு அதற்கான பதிலை கீழே படித்து தெரிந்துகொள்ளுங்கள். அப்பாவி பொதுமக்கள் கண்டிப்பாக படித்துத் தெரிந்துகொள்ளவேண்டும்.

Woman ASI caught taking Rs 500 bribe



VADODARA: A woman cop from mahila police station was caught allegedly accepting a bribe of Rs 500 from a complainant on Thursday. Assistant sub-inspector Laksmi Parmar was arrested by the anti-corruption bureau (ACB) when she was accepting bribe from Raju Shrimali. Shrimali had approached the ACB officials two days ago when Parmar asked him to dole out cash for making some documents.

This is for the first time that a woman cop from mahila police station that was established last year was caught accepting bribe. According to ACB officials, Shrimali's wife Hema had registered complaint against him for demanding dowry in 2009. The couple had got married in 2008. "Shrimali was called to the mahila police station on Tuesday for investigation. Parmar told him that he will have to give Rs 500 cash for preparing some documents," said ACB officials.

"Shrimali told her that he is poor and doesn't have money, but she kept insisting for money. She even threatened to arrest him. So, he approached ACB following which we laid a trap," the officials added.

மேலுள்ள இந்த செய்திதான் அந்த கேள்விக்கான பதில். வரதட்சணை வழக்கு என்றால் ஒரே கொண்டாட்டம்தான். அந்தப் புகார் உண்மையா பொய்யா என்ற கவலையே கிடையாது.




ஈரானுக்கும் இந்தியாவிற்கும் உள்ள வித்தியாசம்

சமீபத்திய செய்தி என்னவென்றால் ஈரான் நாட்டில் கள்ள உறவு என்ற குற்றம் சாட்டப்பட்ட பெண்ணிற்கு கல்லால் அடித்து மரணதண்டனை என்று அந்த நாட்டு நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. அதை எதிர்த்து உலகநாடுகள் அனைத்தும் மனித உரிமை மீறல் என்று குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஈரான் நாட்டில் கள்ள உறவிற்கு இப்படி ஒரு சட்டம் வைத்திருக்கிறார்கள். அது சரியா தவறா என்பது இங்கு விவாதமல்ல. இந்தியாவில் என்ன நடக்கிறது என்று ஒரு ஒப்பீடு செய்வதற்காக மட்டுமே இந்த செய்தி.

CNN News July 5, 2010
Iranian Woman Faces Stoning for Adultery
Mother of two could be put to death as soon as this weekend
  • Sakineh Ashtiani was sentenced to death on adultery charges
  • Human rights activist: only international pressure campaign can save her
  • Mother of two will be killed by stoning, says her Tehran lawyer
  • He says she was forced to confess under duress

ஆனால் இந்தியாவில் நிலைமையே தலைகீழ். இந்திய நாட்டு சட்டம் என்ன சொல்கிறதென்றால் கணவன் இருக்கும்போதே கள்ள உறவில் பெண் தானே விரும்பி ஈடுபட்டாலும் அந்தப் பெண்ணை தண்டிக்கக்கூடாது என்று திட்டவட்டமாக 1860-லேயே எழுதிவிட்டார்கள் நம்நாட்டு சட்ட மேதைகள்.



IPC 497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.


சட்டம் கொடுமையாக இல்லாவிட்டாலும் தவறு செய்பவர்களை கொஞ்சம் யோசிக்கவைக்கும் அளவிலாவது இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் அதற்குப் பெயர் சட்டம். நம்ம ஊரில் பெண்ணிற்கு சாதகமாக ஒருதலைபட்சமான சட்டங்கள் இருப்பதால் செய்திகள் எப்படியெல்லாம் வந்துகொண்டிருக்கிறது பாருங்கள்.

இந்தியாவில் நடப்பது..... தினமலர் செய்தி ஜூலை 09,2010

திருப்பரங்குன்றம்:பசுமலை ஜோன்ஸ்புரத்தை சேர்ந்தவர்கள் முருகேசன், மகாலட்சுமி. இவர்களது மகள் திவ்யா (21). தாய்மாமன் ராஜகோபாலுடன் திவ்வாவிற்கு திருமணமாகி ஒரு வயதில் குழந்தை உள்ளது. மதுரை கோமதிபுரம் பகுதியை சேர்ந்த அருண் (24) என்பவருடன் திவ்யாவிற்கு தொடர்பு ஏற்பட்டு, இருவரும் ஆறு மாதங்களுக்கு முன் சென்னை சென்றனர்.ராஜகோபால் மதுரை ஐகோர்ட் கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததின் பேரில் திவ்யாவை போலீசார் கோர்ட்டில் ஒப்படைத்தனர். தாய் வீட்டில் இருக்குமாறு கோர்ட் உத்தரவிட்டது.

கடந்த ஒன்றாம் தேதி கோர்ட்டில் ஆஜரான போது, திவ்யா தாய் வீட்டிற்கு செல்ல மாட்டேன் என கூறியதால், மேலூரில் பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.கடந்த 5ல் திவ்யா, மகாலட்சுமி, ராஜகோபால், தாத்தா நவநீதகிருஷ்ணன் கோர்ட்டிற்கு வரும் போது, அருண் மற்றும் அவரது அண்ணன் அசோகன் வழிமறித்து மிரட்டினர். மகாலட்சுமி திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் அருண், அசோகனை போலீசார் கைது செய்தனர்.
மேலுள்ள செய்தியில் திருமணமாகி குழந்தையும் இருக்கிறது. ஆனால் பெண் வேறு ஒருவருடன் சென்றுவிட்டார். கணவனை பிடிக்கவில்லையென்றால் முறையாக விவாகரத்து செய்திருக்கலாமே. ஆனால் அந்தப் பெண்ணிற்கு நீதிமன்றம் என்ன செய்திருக்கிறது பாருங்கள். பத்திரமாக மகளிர் இல்லத்தில் சேர்த்திருக்கிறார்கள். தாலி கட்டிய கணவனுக்கு அல்வா. (கள்ளக்)காதலருக்கு பெண்கொடுமை சட்டத்தில் சிறை. அருமையான சட்டம்.

அப்படியே இந்த சம்பவம் தலைகீழாக நடந்திருந்து கணவன் மனைவியை விட்டு சென்றிருந்தால் அப்போதும் கணவனுக்குத்தான் சிறை.

மற்ற செய்திகளையும் பாருங்கள்.

திருச்சி:"தன்னுடைய தாயுடன் தவறான தொடர்பு வைத்துக் கொண்டு கொடுமைப்படுத்தும் கணவன் மற்றும் தாய் மீதும், அவர்களுக்கு உதவும் வகையில் கொலை மிரட்டல் விடுக்கும் முன்னாள் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பிரின்ஸ் தங்கவேல் உள்ளிட்ட பலர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பாதிக்கப்பட்ட இளம்பெண் கோரியுள்ளார்.


திண்டுக்கல்: கள்ளக்காதலனுடன் பத்து மாதங்களுக்கு முன்பு ஓடிப்போன தாயை கோர்ட்டில்அவரது இரண்டு ஆண் குழந்தைகளும் கதறி அழுது தங்களுடன் வருமாறு அழைத்தனர். திண்டுக்கல் அருகேயுள்ள கள்ளிமந்தையம் செரியன்நகரைச் சேர்ந்தவர் சாமுவேல் (35). இவருக்கும் உஷா (27) என்பவருக்கும் ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. சாம்பிரசன்னா (5), சுதன் (3) இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் படிக்கும் போதே காதலித்த பிரகாஷ் என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் ஓடிப்போனார்.இது குறித்து சாமுவேல் கள்ளிமந்தையம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

இந்தியாவில் கள்ளக்காதலில் ஈடுபடும் பெண் என்றால் எவ்வளவு மரியாதை கிடைக்கிறது! எந்த தண்டணையும் கிடையாது! இதுபோன்ற பெண்களை கட்டுப்படுத்த எந்த சட்டமும் கிடையாது. மற்ற நாடுகளில் ஆண், பெண் என்ற பேதமில்லாமல் தவறு செய்பவர்களை தண்டிக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் பெண் எந்தத் தவறு வேண்டுமானாலும் செய்யலாம். பெண் செய்யும் குற்றத்திற்கும் ஆணைத்தான் தண்டிப்பார்கள். அதுதான் இந்தியநாட்டு சட்டத்தின் சிறப்பு. இன்னும் சொல்லப்போனால் பெண் தன் குற்றத்தை மறைத்து ஆண் மீது பழி சுமத்துவதற்காகவே பல சட்டங்களை பெண்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். அவைதான் IPC498A, Domestic Violence Act, Dowry Prohibition Act. இதுபோன்ற வசதி பெண்களுக்கு வேறெந்த நாட்டிலாவது கிடைக்குமா?

செய்தியின் தொடக்கத்தில் ஒரு பெண்ணிற்கு இந்த தண்டணை கொடுக்கக்கூடாது என்று உலக நாடுகளும், மனித உரிமை சங்கங்களும் குரல் எழுப்புகிறார்கள். ஆனால் இந்தியாவில் பல அப்பாவித் தாய்மார்களும், ஆண்களும், குழந்தைகளும் பொய் வரதட்சணை வழக்குகள் மூலம் சட்டத்தின் மூலம் தினம் தினம் உயிரோடு கொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் குரலுக்கு உள்நாட்டுக்காரர்களும், வெளிநாட்டுக்காரர்களும் ஒருவரும் இதுவரை செவி சாய்க்கவில்லையே? ஏன்?

Wednesday, July 07, 2010

காவல்துறைக்கு சரியான வேலை கொடுக்கும் பெண்கள்!!

போலிஸ் வாங்கும் சம்பளத்திற்கு சரியான வேலையை சில பெண்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சபாஷ். அரசாங்கம் சரியாக வேலை வாங்கவில்லையென்றால் இதுபோல பெண்கள்தான் வேலைகொடுக்கவேண்டும்.

தங்களது கற்பை பாதுகாத்துக்கொள்ளாமால் போனால் கூட பரவாயில்லை உடம்பையாவது பாதுகாத்துக்கொள்ளலாம். ஆனால் அதையும் பாதுகாத்துக்கொள்ளாமல் எவனோ ஏமாற்றிவிட்டான் என்று காவல்துறையில் கற்பழிப்பு புகார் கொடுப்பது. அல்லது திருமணமாகிவிட்டால் கணவன் தன் வழிக்கு வரவில்லையென்றால் உடனே வரதட்சணை வழக்கு கொடுப்பது என்று தங்கள் பணியை செவ்வனே செய்துவரும் கண்மணிகள் இப்போது நாட்டில் அதிகரித்து வருகிறார்கள். இவர்களுக்காகத்தான் காவல்துறையே இருக்கிறது! இந்த “அப்பாவிகளை” காப்பதற்குத்தான் காவல்துறையோ என்று எண்ணத்தோன்றுகிறது. எது எப்படியோ இதுபோன்ற வழக்குகளால் காவல்தெய்வங்களின் காட்டில் மழைதான்!!!

காவல்துறை இனிவரும் நாட்களில் மக்கள் திருடர்களிடம் பறிகொடுத்த பொருட்களை தேடுவதற்குப் பதிலாக “அப்பாவிப்” பெண்கள் தொலைத்த (தொலைப்பதற்கும் பறிகொடுப்பதற்கும் இருக்கும் வித்தியாசத்தை இங்கு நன்கு கவனியுங்கள்) கற்பைத்தான் தேடிக்கொண்டிருப்பார்கள் போலிருக்கிறது!

ப.வேலூர்:காதலனுடன் சேர்த்து வைக்குமாறு, எட்டாம் வகுப்பு பள்ளி மாணவி, மகளிர் போலீசில் மனு அளித்துள்ளார்.நாமக்கல் மாவட்டம் ப.வேலூர் அடுத்த எல்லைமேடு பகுதியைச் சேர்ந்த பூவேந்திரன் மகள் மீனா (13); பாலப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கிறார். அதே பகுதியைச் சேர்ந்த கோபாலின் மகன் பெரியசாமி (22); ஹாலோ பிளாக் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இருவரும் ஓராண்டாக காதலித்து வந்தனர்.

பெரியசாமிக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய பெற்றோர் முயன்றதை அறிந்த மீனா, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பெரியசாமியிடம் கூறினார்; அதற்கு பெரியசாமி மறுத்துள்ளார்.ஆத்திரமடைந்த மீனா, ப.வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார் மனுவில், "பெரியசாமியும், நானும் கடந்த ஓராண்டாக காதலித்தோம். அவரும் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். தற்போது, வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகிறார். அதனால், என்னை பெரியசாமியுடன் சேர்த்து வைக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.இரு வீட்டாரையும் அழைத்த மகளிர் போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
==============

விழுப்புரம்:காதலித்து ஏமாற்றிய காதலனை சேர்த்து வைக்க கோரி, விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில், பெண் உண்ணாவிரதம் மேற்கொள்ள முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சின்னப் பொன்னம்பூண்டியைச் சேர்ந்த அண்ணாமலை மகள் ஜோதி(20). இவர் தனது தாய் தேவகியுடன், நேற்று காலை விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்தார். அலுவலக வளாகம் முன் அமர்ந்து, திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, பலாத்காரம் செய்த அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் அய்யப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். போலீசாரிடம் ஜோதி கூறுகையில்," இருவரும் காதலித்தோம். திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இந்நிலையில் ஏழு மாத கர்ப்பமானேன். கடந்த மாதம், நேரில் சென்று திருமணம் செய்துகொள்ள கூறியபோது மறுத்த அய்யப்பன் என்னை மிரட்டி வருகிறார். இது குறித்து, கடந்த 6ம் தேதி சத்தியமங்கலம் போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கையில்லை' என்றார்.ஜோதி கொடுத்த மனுவைப் பெற்றுக்கொண்ட, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராமநாதன் உள்ளிட்ட போலீசார் விசாரித்து, நடவடிக்கை எடுப்பதாக சமாதானம் செய்து அவரை அனுப்பி வைத்தனர்.


“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.