இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, July 24, 2010

மனித இனத்தில் மட்டுமே நடந்துகொண்டிருக்கும் அதிசயம்!

மனித இனத்தில் மட்டும் நடக்கும் அதிசயம்!

குடும்பத் தகராறில் பெற்ற குழந்தைகளைக் கொன்ற பெண்
ஜூலை 24, 2010 தினமலர்

திருச்சி : திருச்சி அருகே உள்ள இனாங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி தனம். இவர்களுக்கு சஞ்சய் குமார் (3 1/2), கணேசன்(1) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுப்பிரமணியனுக்கும், தனத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் வழக்கம் போல் சுப்பிரமணியனுக்கும், தனத்திற்கும் இடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தனம், வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குழந்தைகள் இரண்டு பேரையும் தள்ளி விட்டு கொலை செய்துள்ளார். இது தொடர்பாக தனத்தை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

= = = = = = = = = = = =


உயிரினங்களில் மனித இனம்தான் பரிணாமத்தில் உயர்நிலையில் இருக்கிறது என்றும் அதிலும் குறிப்பாக “தாய்மை” என்ற பண்பிற்காக பெண்களுக்கு எல்லா விஷயத்திலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பல சிறப்புச் சட்டங்கள் மகளிருக்கென இயற்றப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தத்தாய்மைக்கு பெண்களால் உண்மையாகவே மரியாதை கொடுக்கப்படுகிறதா?

இந்தப் படங்களில் பாருங்கள். இதற்குப் பெயர் தாய்மையா அல்லது மனித இனத்தில் இருப்பது தாய்மையா?



விலங்குகளிடம் இருக்கும் “தாய்மை” என்ற புனிதத்தன்மை மனித இனத்திடம் மறைந்துவரும்போது ஆண், பெண் என்ற பேதம் காட்டி இல்லாத தாய்மையைக் காரணமாகவைத்து சட்டங்கள் மட்டும் ஒருதலைபட்சமாக இருப்பது ஏன்?





No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.