இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, June 25, 2012

தமிழ்நாட்டில் கலாச்சாரம் எங்கே செல்கிறது???


மருமகனுடன் ஜாலி...மகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற தாய் கைது! Linkதிங்கள்கிழமை, ஜூன் 25, 2012, One India Tamil

தர்மபுரி: மருமகனுடன் உல்லாசமாக இருப்பதற்கு மகள் தடையாக இருக்கிறாரே என்று விபரீதமாக யோசித்த ஒரு பெண், தனது மகள் என்றும் கூட பாராமல் டானிக்கில் விஷத்தைக் கலந்து கொண்டு கொடூரமாக கொலை செய்துள்ளார்.

அந்தக் கொடுமைத் தாயாரையும், அவருடைய மருமகனையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

செய்தியை தொடர்ந்து படிக்க...மருமகனுடன் ஜாலி...மகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற தாய் கைது!






Friday, June 22, 2012

தீயில் பொசுங்கிய திருட்டு காதல்!

இந்த செய்தியை படிப்பதற்கு முன் இந்திய கள்ளக்காதல் சட்டம் சொல்லும் அரிய விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள். இந்திய கள்ளக்காதல் சட்டப்படி கள்ளக் காமத்தில் ஈடுபடும் ஆண் மட்டுமே குற்றவாளி. கள்ளக்காமத்தில் ஈடுபடும் மனைவி குற்றவாளி கிடையாது. அதனால் பின்வரும் செய்தியில் அக்னி பகவான் இந்திய சட்டத்திற்கு எதிராக ஒரு பெண்ணை பலிவாங்கி விட்டார் என்று வன்மையாக கண்டிக்கலாம்!

IPC497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man , such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.

ஜூன் 22,2012 தினமலர்


திருச்சி: திருச்சி அருகே கள்ளக்காதலன் சந்தேகப்பட்டதால் தீக்குளித்த பெண்ணும், அவரை காப்பாற்ற முயன்ற கள்ளக்காதலனும் மருத்துவமனையில் பரிதாபமாக அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த அம்மாப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா (30). இவர் கடந்த ஏழாண்டுக்கு முன் காரைக்குடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றபோது, அங்கிருந்த ப்ரியா (24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது லோகநாதன் என்ற ஏழு வயது மகன் உள்ளார்.

திருமணத்துக்கு பின் காரைக்குடியில் சில ஆண்டு மனைவியுடன் ராஜா வசித்தபோது, அவரது சித்தப்பா மகன் மணிகண்டன் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அப்போது, மணிகண்டனுக்கும், ப்ரியாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

இதையறிந்த ராஜா இருவரையும் கண்டித்து, மனைவி, குழந்தையை அழைத்துக் கொண்டு வந்து, திருச்சி திருவெறும்பூர் போலீஸ் காலனியில் குடியேறினார். அதன்பின் ராஜாவுக்கு வேலூரில் உள்ள பால் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.
இதையடுத்து தனது குடும்பத்தை வேலூருக்கு ராஜா மாற்றினார். அங்கு சென்றதும் ப்ரியாவுக்கு சட்டக்கல்லூரியில் இடம் கிடைத்தது. இதையடுத்து தனது மகனை திருவெறும்பூர் போலீஸ் காலனியில் தனது தாயாரிடம் ப்ரியா ஒப்படைத்து, அங்கே படிக்க ஏற்பாடு செய்தார்.

இந்நிலையில் ப்ரியாவின் கள்ளக்காதலன் மணிகண்டன் சிங்கப்பூரில் இரண்டு ஆண்டு வேலை பார்த்துவிட்டு இரண்டு மாத விடுமுறையில் வந்திருந்தார். இதை கேள்விப்பட்ட ப்ரியா, மகனை பார்க்க வருவதாக கூறிவிட்டு, திருச்சி வந்துள்ளார்.

ப்ரியா திருச்சி வந்ததும் குழந்தையை விட்டுவிட்டு, அவரது தாயார் காரைக்குடி சென்றுவிட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மணிகண்டன் திருவெறும்பூர் போலீஸ் காலனி வந்து, ப்ரியாவுடன் ஒரு வாரம் தங்கியிருந்துள்ளார்.
இருவரும் ஜாலியாக இருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ப்ரியா தனது மொபைல்ஃபோனில், வேலூரில் உள்ள கணவர் ராஜாவுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த மணிகண்டன் யாருடன் பேசுகிறாய்? என்று சந்தேகத்துடன் கேட்டுள்ளார். அதற்கு ப்ரியாவே, கணவனுடன் தான் பேசுகிறேன் என்று கூறியுள்ளார். அவரிடம் எப்படி பேசலாம்? என்று மணிகண்டன் கேட்க, அதற்கு ப்ரியாவோ, கணவனுடன் பேசுவதை கேட்க நீ யார்? என்று கேட்டுள்ளார்.

அப்போது இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ப்ரியா திடீரென தீக்குளித்தார். அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டன், தீக்குளித்த ப்ரியாவை காப்பாற்ற முயன்றார். இதில் இருவரும் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் நள்ளிரவு மணிகண்டனும், நேற்று காலை ப்ரியாவும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதுகுறித்து நவல்பட்டு போலீஸார் விசாரிக்கின்றனர்.

=====

அன்னையின் கள்ளக்காமத்தால் கடைசியில் ஒரு அப்பாவிக் குழந்தை அம்மா இல்லாத அனாதையாகிவிட்டது. இந்திய சட்டம் இது போன்ற குழந்தைகளைப் பற்றி எப்போதாவது கவலைப்பட்டதுண்டா?



Tuesday, June 19, 2012

இந்திய மக்களை நம்பிக்கை இழக்க வைக்கும் நீதித்துறை!!

தினமும் செய்தித்தாள்களில் வரும் செய்திகளை படிக்கும்போது இந்திய மக்கள் நீதித்துறையை நம்புவதா வேண்டாமா என்று எண்ணத் தோன்றுகிறது.

முன்னாள் இந்திய தலைமை நீதிபதி மீது சொத்து குவிப்பு வழக்கு நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஆந்திராவில் ஒரு முன்னாள் நீதிபதியும், ஒரு இன்னாள் நீதிபதியும் லஞ்ச வழக்கில் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள்.

எந்த ஒரு வழக்கிலும் ஒருவர் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்று தீர்மானிப்பது நீதிமன்றங்கள். இந்த நீதிமன்றங்களில் இருக்கும் நீதிபதியே குற்றவாளியானால் அவர் இதுவரை வழங்கிய தீர்ப்புகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும் அல்லவா? அப்படியென்றால் சாதாரண பொது மக்கள் நீதித்துறையை எப்படி நம்புவார்கள்?

இதுவே இப்படியென்றால் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கி இதுபோன்ற நீதிமன்றத்திற்கு செல்லும் அப்பாவிகள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.


இதனால்தான் என்னவோ சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஒரு கட்டுரையில் “உங்கள் எதிரியை பழிவாங்க வேண்டுமென்றால் இந்தியாவில் ஒரு பொய் வழக்கை போட்டு அவனை நீதிமன்றத்திற்கு அலையவிட்டால் போதும். அவனை பழிவாங்கும் வேலையை நீதிமன்றம் கவனித்துக்கொள்ளும்” என்று அழகாக உண்மையை எழுதியிருந்தார்கள். அது முற்றிலும் உண்மை என்பது இப்போது தெள்ளத் தெளிவாக புரிகிறது.


ஐதராபாத்: சுரங்க ஊழல் புகாரில் சிக்கிய, கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமின் வழங்க லஞ்சம் பெற்ற, சஸ்பெண்ட் செய்யப்பட்ட சி.பி.ஐ., கோர்ட் நீதிபதி பட்டாபி ராமராவை, லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று கைது செய்தனர்.

சஸ்பெண்ட்: கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி. இவருக்கு சொந்தமானது ஒபுலாபுரம் சுரங்க நிறுவனம். இந்த நிறுவனம், ஆந்திராவில் சுரங்க ஊழல் புகாரில் சிக்கியதை அடுத்து, ஜனார்த்தன ரெட்டி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அவரை ஜாமினில் விடுவிக்க, ஐதராபாத் சி.பி.ஐ., கோர்ட் நீதிபதி பட்டாபி ராமராவ், 1.60 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, விசாரணை நடத்திய சி.பி.ஐ., அதிகாரிகள், ராமராவிற்கு சொந்தமான வங்கிகளில் உள்ள ஐந்து லாக்கர்களில் இருந்து, 1.60 கோடி ரூபாயை கைப்பற்றினர்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த ஆந்திர மாநில உயர் நீதிமன்றம், நீதிபதி பட்டாபி ராமராவை, கடந்த மாதம் 31ம் தேதி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. அத்துடன் ராமராவிற்கு எதிரான ஊழல் புகாரை, ஆந்திர மாநில லஞ்ச ஒழிப்பு தடுப்புப் பிரிவினர் விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதையடுத்து, நீதிபதி பட்டாபி ராமராவ், முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மூத்த சகோதரரும், பெல்லாரி நகர எம்.எல்.ஏ.,வுமான சோமசேகர ரெட்டி மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி சலபதிராவ் என்பவர் உட்பட எட்டு பேர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அழைத்து வந்து விசாரணை
: இந்நிலையில், லஞ்ச ஒழிப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர், நேற்று காலை நீதிபதி பட்டாபி ராமராவின் வீட்டிற்குச் சென்று, அவரை தங்களின் அலுவலகத்திற்கு அழைத்து வந்து, ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமின் கொடுக்க லஞ்சம் பெற்றது தொடர்பாக, விசாரணை நடத்தினர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். பட்டாபி ராமராவ் கைது செய்யப்பட்டதை உறுதி செய்த, ஆந்திர மாநில ஊழல் தடுப்பு பிரிவு இயக்குனர் ஜெனரல் பிரசாத ராவ், "அவர் நீதிமன்ற காவலுக்காக கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்படுவார்' என்றார்.


மூன்றாவது நபர்
: இந்த வழக்கு தொடர்பாக, ஏற்கனவே ஓய்வு பெற்ற நீதிபதி சலபதிராவ் மற்றும் பட்டாபி ராமராவின் மகன் ரவிச்சந்திரா ஆகியோர், கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இப்போது மூன்றாவதாக, நீதிபதி பட்டாபி ராமராவ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Sunday, June 17, 2012

இந்தியாவில் பெண்களின் நிலை எப்படி இருக்கிறது பாருங்கள்

கிராமப்புறங்களில் வாழும் இந்தியப் பெண்களின் வாழ்வு என்றுதான் மேம்பாடு அடையுமோ? நகர்ப்புறத்தில் வாழும் மேல்தட்டு வர்க்கப் பெண்களின் Pub, குடி, கூத்தாட்டம், கள்ளக் காதல் என்ற ஆடம்பர வாழ்க்கையில் குறுக்கிடும் கணவன்களை பொய் வழக்குகள் மூலம் தண்டிக்க புதுப் புது சட்டங்களை இயற்றி அதற்குப் பெயர்தான் “பெண்கள் பாதுகாப்பு”, “பெண்ணுரிமை” என்று பெருமை பேசி குடும்பங்களை அழிக்கும் ஆட்சியாளர்களுக்கு கிராமப்புறங்களில் அடிப்படை வசதியே இல்லாமல் வாழும் பல கோடி அப்பாவிப் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுதான் உண்மையான “பெண்கள் பாதுகாப்பு” என்று சொல்லித் தரப்போவது யாரோ?



Wednesday, June 13, 2012

மருமகளை தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கறிஞரின் மனைவி கைது

பின்வரும் இரண்டு செய்திகளுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்...

National Commission for Women (NCW) chairperson Girija Vyas said that it was lack of awareness that led to false cases under 498A. " There is lack of awareness amongst people that is exploited by lawyers and police.''
(The Times of India, 1Feb 2009)


திருப்பூர்: மருமகளை தற்கொலைக்கு தூண்டியதாக, மாமியாரை, திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு, காந்தி நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி; வழக்கறிஞர். இவரின் மனைவி சரோஜினி,57. இவர்கள் மகன் வருண்குமார். 2004ல், புதுச்சேரியில் கல்லூரியில் படித்தபோது, உடன் படித்த செல்லிதாஸ் என்ற பெண்ணை, காதலித்து வந்தார். கடலூரில் உள்ள மஞ்சக்குப்பத்தில், சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்தனர். 2007ல் இருவரும், குடும்ப முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பின், திருப்பூர் மகாலட்சுமி நகரில், மனைவியுடன் வருண்குமார் வசித்தார்; இரண்டு வயதில் அவர்களுக்கு, ஆண் குழந்தை உள்ளது. வருண்குமாரின் பெற்றோர், திருப்பூரில் பனியன் கம்பெனி அமைத்துக் கொடுத்தனர்; அவ்வப்போது, திருப்பூர் வீட்டுக்கு வந்து தங்கினர். கடந்த மார்ச், 18ம் தேதி, டில்லியில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்துக்கு செல்ல வேண்டும் என, கணவர் வருண்குமாரிடம், செல்லிதாஸ் கேட்டார்; அடுத்த வாரம் செல்லலாம் என, கணவர் கூறினார்.

இதற்கிடையே செல்லிதாஸ், தூக்கு போட்டு உயிரிழந்தார். அனுப்பர்பாளையம் போலீசார், தற்கொலை வழக்காக பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இந்நிலையில், செல்லிதாசின் தாய் அமிர்தா தாஸ் மற்றும் அவர்களது உறவினர்கள், மே 26ம் தேதி, போலீசில் புகார் அளித்தனர். அதில், "செல்லிதாஸ் தானாக தற்கொலை செய்து கொள்ளவில்லை; வரதட்சணை கேட்டு மாமியார் சரோஜினி துன்புறுத்தியதால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்' என, கூறியிருந்தனர்.

விசாரணையில், செல்லிதாசை அவரது மாமியார் சரோஜினி துன்புறுத்தியது தெரிய வந்ததால், தற்கொலை வழக்கை, தற்கொலைக்கு தூண்டியதாக மாற்றி, போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

திருப்பூர் வடக்கு உதவி எஸ்.பி., சிபிசக்ரவர்த்தி, அனுப்பர்பாளையம் இன்ஸ்பெக்டர் சக்திவேல் முருகன் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை, நேற்று முன்தினம் இரவு, ஈரோடு சென்று சரோஜினியை கைது செய்தது. திருப்பூர் அழைத்து வரப்பட்ட அவர், ஜே.எம்., கோர்ட் எண் 1ல் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இளம் பெண் எஸ்.ஐ.-யின் “பேண்ட் பாக்கெட்டில்” இருந்தது என்ன? மாவட்ட எஸ்.பி.யின் நேரடி விசாரணை

பெண்கள் தொடர்பான வழக்குகளில் பெண் போலிஸார் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. பொய் வரதட்சணை வழக்கு எழுதுவது, கணவனின் குடும்பத்தாரை அவமரியாதை செய்வது, தகாத வார்த்தைகளால் திட்டுவது, தாக்குவது, மிரட்டுவது, லஞ்சம் வாங்குவது என ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது.

இதுபோன்ற லட்சணத்தில் இருக்கும் இடத்தில் பெண்கள் பாதுகாப்பு சட்டங்களை செயல்படுத்தும் அதிகாரங்கள் இருந்தால் எப்படி இருக்கும்! நாட்டில் உருவாகும் பொய் வரதட்சணை வழக்குகளின் பிறப்பிடமே மகளிர் காவல் நிலையங்கள்தான். மனைவியின் தரப்பிலிருந்து லஞ்சம் பெற்றுக் கொண்டு சாதாரண குடும்பப் பிரச்சனைக்கு பொய் வரதட்சணை வழக்கு பதிவு செய்து கணவனின் குடும்பத்தை கைது செய்வதாக மிரட்டி அங்கேயும் பணம் பறிப்பார்கள்.

எல்லாம் முடிந்த பிறகு குற்றப் பத்திரிக்கை என்ற பெயரில் ஒரு பொய்யான அறிக்கையை நீதிமன்றத்திற்கு அனுப்பிவிட்டு அப்பாவிகளின் குடும்பத்தை அழித்துவிட்ட நிம்மதியோடு சந்தோஷமாக அடுத்த பொய் வழக்கிற்கு சென்றுவிடுவார்கள். இதுதான் இன்றைய நிலை. அதுதான் இன்றைய செய்தியில் வந்திருக்கிறது.

புதன்கிழமை, ஜூன் 13, 2012, One India Tamil

உடுமலைப்பேட்டை : வழக்கில் இருந்து தப்பிக்க வைப்பதற்காக ரூ. 25 ஆயிரம் லஞ்சம் பெற்ற உடுமலைப் பேட்டை உதவி ஆய்வாளரை திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அஸ்ரா கார்க் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலைப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளராக இருப்பவர் பூர்ணிமா (வயது 32). இவரிடம், கடந்த மாதம் சிவபதி காலனியை சேர்ந்த மணிவண்ணன் என்பவரின் மனைவி அங்கையர்கண்ணி என்பவர் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் தனது கணவர் மணிவண்ணனுக்கும், சுமதி என்ற ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும், தனது கணவரை சுமதியிடமிருந்து மீட்டு தன்னுடன் சேர்த்து வைக்கும்படியும் கேட்டு மனு கொடுத்துள்ளார்.

இந்த புகார் மனுவின்படி போலீசார் மணிவண்ணன் மீது வழக்கு பதிவு செய்ததும், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு சென்ற மணிவண்ணன் முன் ஜாமீன் வாங்கிக்கொண்டு வந்து விட்டார்.

போலிஸ் உதவி ஆய்வாளர் பூர்ணிமாவால் இந்த வழக்கில், நேரடியாக மணிவண்ணனை கைது செய்ய முடியாமல் போனாலும், அவர் மீது குற்றம் இல்லாத மாதிரி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டுமானால் தனக்கு 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று மணிவண்ணனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

பூர்ணிமாவுக்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிவண்ணன் நேராக திருப்பூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அஸ்ராகர்க்கிடம் சென்று பூர்ணிமா தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதை பற்றி புகார் கொடுத்துள்ளார்.

எஸ்.பி.அஸ்ராகர்க்கின் ஆலோசனைப்படி, செவ்வாய்கிழமை ஒன்பது மணிக்கு காவல் நிலையத்துக்கு தனியாக சென்ற மணிவண்ணன் பூர்ணிமா கேட்டபடி பணம் 25 ஆயிரம் கொண்டு வந்திருப்பதாக கூறி அந்த பணத்தை பூர்ணிமாவிடம் கொடுத்துள்ளார்.

பணத்தை பூர்ணிமா பெற்றுக்கொண்டதும், அதை குறுந்தகவல் மூலம் வெளியில் இருந்த எஸ்.பி.அஸ்ராகர்க்கிர்க்கு தெரிவித்து விட்டு. தன்மீது மனைவி கொடுத்துள்ள புகாரிலிருந்து தனக்கு ஆதரவாக குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யுமாறு பூணிமாவிடம் பேசிக்கொண்டு நேரத்தை ஓட்டியுள்ளார் மணிவண்ணன்.

மணிவண்ணனிடமிருந்து பணத்தை வாங்கிய ஐந்தாவது நிமிடம் காவல் நிலையத்துக்குள் நுழைந்த எஸ்.பி.அஸ்ராகர்க், சத்தமில்லாமல் எஸ்.பி வந்ததை பார்த்த போலீசார் அனைவரும், அரண்டு போய்விட்டனர். நேராக மணிவண்ணன் பூர்ணிமா இருவரும் பேசிக்கொண்டு இருந்த இடத்துக்கு சென்றுள்ளார்.

அங்கிருந்த பூர்ணிமாவிடம் பணத்தை எடுக்கும்படி சொல்லியுள்ளார். எஸ்.பி க்கு "சல்யூட்" அடித்துவிட்டு பேந்த பேந்த விழித்த பூர்ணிமாவிடம், இவரிடம் வாங்கிய பணம் 25 ஆயிரத்தை எடு என்று கூறியுள்ளார்.

மணிவண்ணன் பணம் கொண்டுவந்தது எஸ்.பிக்கு தெரியும் என்பதை தெரிந்து கொண்ட பூர்ணிமா தனது பேண்டு பாய்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து எஸ்.பி யிடம் கொடுத்துள்ளார். இரவு பத்து மணிவரை பூர்ணிமாவிடமும், மணிவண்ணனிடமும் காவல் நிலையத்தில் விசாரணை நடத்திய எஸ்.பி அஸ்ராகர்க் அதன் பிறகு எஸ்.ஐ பூர்ணிமாவை மட்டும் கைது செய்து திருப்பூருக்கு அழைத்துக்கொண்டு சென்றுள்ளார்.

போலீசார் லஞ்சம் கேட்டதற்காக அவர்கள் மீது விசாரணை, இடமாற்றம், என்று வெட்டி நடவடிக்கைகளை எடுக்காமல், கைது செய்து நேரடி நடவடிக்கையில் இறங்கியுள்ள அஸ்ராகர்க்கின் அதிரடி நடவடிக்கையால் திருப்பூர் மாவட்ட போலீசார் மிரண்டு போயுள்ளனர். மதுரையில் இருந்து திருப்பூர் மாவட்ட எஸ்.பி யாக கடந்த மாதம் பொறுப்பேற்ற அஸ்ரா கார்க், லஞ்சம் வாங்கும் போலீசார் உடனடியாக கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் அல்லது டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Tuesday, June 12, 2012

இந்தியாவில் விவாகரத்து இனி காவல் நிலையத்திலேயே கிடைத்துவிடும்!

இன்றைய செய்தி இந்திய நீதிமன்றங்களையும், இந்திய திருமணச் சட்டங்களையும் கேலிக்கூத்தாக எண்ண வைத்திருக்கிறது.


மேலூர்: மேலூர் அருகே கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண், போலீசாரின் உதவியுடன் தாலியை கழற்றி கொடுத்து விட்டு, காதலனை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

மேலூர் அருகே தும்பைப்பட்டியை சேர்ந்த ரங்கநாதன் மகள் அம்பிகா,19. இவரும், உறவினர் கருப்பசாமி மகன் பார்த்திபனும், 22, நான்கு ஆண்டுகளாக காதலித்தனர். வேலை இல்லாமல் சுற்றிய பார்த்திபனுக்கு பெண் கொடுக்க மறுத்து, சகோதரி மகன் பாண்டீஸ்வரனுக்கு, மகள் அம்பிகாவை திருமணம் செய்ய முடிவு செய்தார் ரங்கநாதன். பாண்டீஸ்வரன் சென்னையில் பெட்ரோ கெமிக்கல் என்ஜினீயராக வேலை செய்கிறார்.

இத்திருமணத்திற்கு அம்பிகா எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் மகளை சகோதரி வீட்டிற்கு அழைத்து சென்றார் ரங்கநாதன். ஜூன் 8ந் தேதி திருச்சுனை கோயிலில் அம்பிகாவிற்கும், பாண்டீஸ்வரனுக்கும் திருமணம் நடந்தது. இதுதெரிந்து அம்பிகாவை மீட்டு தருமாறு பார்த்திபன் மேலூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அனைவரையும் அழைத்து ஸ்டேஷனில் பேச்சுவார்த்தை நடத்தினர். நடந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை என அம்பிகா பிடிவாதமாக இருக்க, வேறு வழியின்றி அவர் மதுரை காப்பகத்திற்கு அனுப்பப்பட்டார்.

மகளின் பிடிவாதத்தை பார்த்த பெற்றோர், மூன்று நாட்களுக்கு பின், அவரின் விருப்பப்படி காதலனுக்கு திருமணம் செய்வதாக சம்மதித்தனர். நேற்று முன்தினம் இரவு அம்பிகா, பாண்டீஸ்வரன் கட்டிய தாலியை கழற்றி கொடுத்தார். பின் மணப்பட்டி விநாயகர் கோயிலில் பார்த்திபனுக்கும் அவருக்கும் திருமணம் நடந்தது. இத்திருமணத்திற்கு பாண்டீஸ்வரனின் குடும்பத்தினர் ஒப்பு கொண்டு, போலீசார் முன் எழுதி கொடுத்தனர். காதலியை கண் கலங்காமல் பாதுகாப்பதாக பார்த்திபனும் எழுதி அம்பிகா பெற்றோரிடம் கொடுத்தார்.

======

பெண்ணின் பெற்றோர் பெண்ணை கட்டாயப் படுத்தி திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். காதலன் போலிஸில் புகார் கூறியவுடன் காவல் நிலையத்தில் பெண்ணின் தாலியை அறுக்க வைத்து திருமணத்தை செல்லாததாக மாற்றிவிட்டு காதலனுடன் திருமணம் செய்து வைத்தார்களாம்.

  • அப்படியென்றால் திருமணங்களை ரத்து செய்ய நீதிமன்றங்கள் எதற்கு?
  • திருமணத்தை ரத்து செய்ய இந்திய திருமணச் சட்டங்கள் எதற்கு?
  • பெண்ணை கட்டாயப் படுத்தி திருமணம் செய்து வைத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப் படவில்லை? அப்படியென்றால் பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் எதற்கு?
இந்தக் கேள்விகளையெல்லாம் யோசித்துப் பார்த்தால் கிடைக்கும் பதில்:
  • இந்திய திருமண சட்டங்கள் பிடிக்காத கணவனை பழிவாங்க பயன்படுத்தப் படும் ஆயுதங்கள் மட்டுமே.
  • அப்பாவி கணவன்களை விவாகரத்து வழக்கு என்ற பெயரில் பல ஆண்டுகள் நீதிமன்றத்தில் அலைய வைத்து வாழ்வை நாசமாக்கி மனைவிக்குத் தேவையான பணத்தை வாங்கிக் கொடுக்கும் இடங்கள்தான் நீதிமன்றங்கள்.
  • பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் கணவன் குடும்பத்தார் மீது பொய் வழக்குப் போட மட்டுமே பயன்படுத்தப்படும் சட்ட வழிமுறை.
  • போலிஸ் எந்த சட்டத்தையும் மதிக்கத் தேவையில்லை தாங்கள் நினைப்பதையெல்லாம் செய்வார்கள். நீதிமன்றங்கள் இவர்களை கட்டுப்படுத்த முடியாது.

இப்படித்தான் இந்த செய்தியிலிருந்து பதில் கிடைக்கிறது. யோசித்துப் பாருங்கள்.

Saturday, June 09, 2012

திருமணத்திற்கு முன்பே “அதுவா”? - ஆபத்து காத்திருக்கிறது!

திருமணத்திற்கு முன் “அது” தவறு கிடையாது. செய்தித்தாளில் “உல்லாசம்” என்று அடிக்கடி எழுதுவார்களே அதுதான் “அது”.

சட்டப்படியாக “மேஜரான” பெண் தன் விருப்பப்படி யாருடன் வேண்டுமானாலும் கூடி வாழலாம், உறவில் ஈடுபடலாம். இது சமுதாயத்தின் பார்வையில் வேண்டுமானால் தவறாகத் தெரியலாம் ஆனால் இந்திய சட்டத்தின் பார்வையில் இதை குற்றம் என்று சொல்ல முடியாது என்று “கற்பு - கத்தரிக்காய்” வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொன்னவுடன் அதனை வெளிப்படையாக அமலுக்கு கொண்டு வர பல மேல் தட்டு வர்க்க பெண்கள் அரும்பாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனை சமீபத்தில்கூட “இஷ்டம்” என்ற திரைப்படத்தில் தெளிவு படுத்தியிருக்கிறார்கள்.

IN THE SUPREME COURT OF INDIA
CRIMINAL APPELLATE JURISDICTION
CRIMINAL APPEAL NO. 913 of 2010
[Arising out of SLP (Crl.) No. 4010 of 2008]

S. Khushboo ... Appellant
Versus
Kanniammal & Anr. ... Respondents

21. While it is true that the mainstream view in our society is that sexual contact should take place only between marital partners, there is no statutory offence that takes place when adults willingly engage in sexual relations outside the marital setting, with the exception of `adultery' as defined under Section 497 IPC. At this juncture, we may refer to the decision given by this Court in Lata Singh Vs. State of U.P. & Anr., AIR 2006 SC 2522, wherein it was observed that a live-in relationship between two consenting adults of heterogenic sex does not amount to any offence (with the obvious exception of `adultery'), even though it may be perceived as immoral. A major girl is free to marry anyone she likes or "live with anyone she likes".

முன்பெல்லாம் இதுபோன்ற விஷயத்தில் ஈடுபடும் பெண்கள் “விஷயம்” பெரிதாகி பிரச்சனை வந்துவிட்டால் உடனே தனது ஆண் துணைவன் மீது “திருமண ஆசை காட்டி என் விருப்பத்தோடு பல முறை உறவு கொண்டு கற்பழித்துவிட்டான்” என்று பக்குவமாக இந்திய சட்டத்தின் துணையோடு வழக்கு பதிவு செய்து விடுவார்கள்.

இப்போது இதுபோன்ற “கற்பழிப்பு வழக்கு” விஷயங்கள் வெளியே தெரிய ஆரம்பித்துவிட்டதாக “இஷ்டம்” திரைப்படத்தில் காட்டியிருக்கிறார்கள். அதனால் கூலிப்படை வைத்து கொல்லும் மாற்று வழிக்கு செல்ல ஆரம்பித்துவிட்டார்கள் போலிருக்கிறது!

அதுபோன்ற விஷயம் இன்று செய்தித்தாளில் வந்திருக்கிறது. “அது” தேவைப்படும்வரை காதலித்துவிட்டு பிறகு தேவையில்லாதபோது கூலிப்படை வைத்து காதலனை கொன்றிருக்கிறார் ஒரு இளம் பெண்.



பெங்களூரு:காதலனாக மாறிய கார் டிரைவரை, பெங்களூரு மல்லேஸ்வரம் கல்லூரியில் படித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கூலிப்படையின் மூலம் கொலை செய்ய முயற்சித்தார். இதில், காதலனின் நண்பன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், காதலி உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் சுஷ்மா. இவர், தன் தாயார், சகோதரனுடன் ஜாலஹள்ளியில் தங்கி படித்து வந்தார். மல்லேஸ்வரம் எம்.இ.எஸ்., கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.யூ.சி.,யில் தேர்ச்சி பெற்றதால், அவரது தந்தை, "பொலீரோ' கார் வாங்கி கொடுத்திருந்தார். தொடர்ச்சியாக பி.பி.எம்., முதலாண்டு படிப்பு படித்து வந்தார். கார் டிரைவராக மஞ்சுநாத் நிங்கேலப்பா, 25, என்பவரை அவரது தந்தையே நியமித்தார்.

உல்லாசம்:ஆரம்பத்தில் டிரைவராக இருந்த மஞ்சுநாத், நாளடைவில் காதலராக மாறியதுடன், சுஷ்மாவுடன், டில்லி, மங்களூரு, கோவா போன்ற இடங்களுக்குச் சென்று, ஓட்டல்களில் புதுமணத் தம்பதிகள் போன்று தங்கி உல்லாசமாக இருந்ததுடன், நெருக்கமாக புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர். நாட்கள் செல்ல செல்ல, மஞ்சுநாத்திடமிருந்து சுஷ்மா விலக முயற்சித்தார். இதை விரும்பாத மஞ்சுநாத், இருவரும் நெருக்கமாக எடுத்துக் கொண்டபுகைப்படங்களை வெளியிடப் போவதாக மிரட்டினார்.

ரூ.5 லட்சம் பேரம்: மஞ்சுநாத்தை திருமணம் செய்து கொள்ளும்படி அவரது நண்பர் அலி ஹூசேனும், 24, வற்புறுத்தினார். மஞ்சுநாத் யோசனையின்படி சுஷ்மாவை, அலி ஹூசேன் கண்காணித்து வந்தார். இதனால் எரிச்சலடைந்த சுஷ்மா, இருவரையும் ஒழித்துக் கட்ட திட்டமிட்டார். தன் பள்ளி நண்பரான பசவேஸ்வரா நகரைச் சேர்ந்த அஜய்குமாரிடம், 20, சுஷ்மா ஆலோசனை கேட்டார். இருவரையும் கொலை செய்வதன் மூலமே பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்று கூறிய அஜய், கிரிமினல் பின்னணி கொண்ட லட்சுமண், 20, தீபக், 19, அபிஷேக், 19, ஆகியோருடன் திட்டம் தீட்டினார். மஞ்சுநாத், அலி ஹூசேன் இருவரையும் கொலை செய்து, உடல்களை கொண்டு போய் மறைக்க, ஐந்து லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டது.

தப்பி ஓட்டம்:திட்டமிட்டப்படி, கடந்த மே 11ம் தேதி, இரவு 9 மணியளவில் மஞ்சுநாத், அலி ஹூசேனுடன், ஜாலஹள்ளியில் உள்ள ஹெச்.எம்.டி., ஆடிட்டோரியம் அருகில் பேச விரும்புவதாக சுஷ்மா அழைத்தார். இருவரும் அங்கு சென்றனர். சிறிது நேரத்தில் மேலும் நான்கு பேர் ஜீப்பில் வந்து, அங்கு இறங்குவதை பார்த்த மஞ்சுநாத், ஏதோ தவறு நடக்கப்போகிறது என்பதை உணர்ந்து, ரிங் ரோடு வழியாக ஓடினார். மாட்டிக்கொண்ட அலி ஹூசேன், சுஷ்மாவின் கண் எதிரிலேயே கொலை செய்யப்பட்டார். அவரது உடல், தொட்டபல்லாபூர் அருகில் வீசியெறியப்பட்டது.

போலீசில் புகார்:உடனடியாக வேலூர் கிளம்பிச் சென்ற சுஷ்மா, அங்குள்ள தன் காதலன் ரசன் குமாருடன் தங்கியிருந்தார். இரு நாள் கழித்து மஞ்சுநாத், போலீசாரிடம் புகார் கொடுத்ததையடுத்து, ஹூசேன் உடல் கண்டெடுக்கப்பட்டது. வேலூரிலிருந்த சுஷ்மா கைது செய்யப்பட்டு, பெங்களூரு அழைத்து வரப்பட்டார். விசாரணைக்கு பின், சுஷ்மாவுக்கு உதவியாக இருந்த அஜய்குமார், தீபக், லட்சுமண், அபிஷேக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.