இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, December 27, 2012

காவல்துறை சொன்னால் இளம் பெண்கள் கேட்பார்களா?

பல தவறான குடும்ப அழிப்பு சட்டங்கள் மூலம் கூட்டுக் குடும்பங்களை ஒழித்து வயதில் மூத்தவர்களை பொய் வரதட்சணை வழக்குகள் மூலம் வீட்டை விட்டே விரட்டியடித்துவிட்டார்கள். 

இப்போது குடும்பங்களில் அறிவுரை சொல்ல மூத்தவர்கள் யாரும் கிடையாது.  அதனால் இளம்பெண்கள் தங்கள் இஷ்டப்படி நடந்து கொள்கிறார்கள்.  இது அவர்களின் தவறு கிடையாது. குடும்பங்களில் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் போனதுதான் காரணம்.

ஆனால், இதுபோன்ற திசைகெட்டு செல்லும் பெண்களை சரியாக தவறான பாதைக்கு அழைத்துச்செல்ல பெண்கள் நல வாரியமும், பெண்கள் அமைச்சகமும் புதுப் புது சட்டங்களை இயற்றி வருகிறார்கள்.  இவர்களது இப்போதைய புதிய சட்டப்படி பெண்கள் எப்படி வேண்டுமானாலும் ஆடை அணியலாம். அதனை விமர்சனம் செய்தால் “பாலியல் கொடுமை தடுப்பு சட்டத்தின்” கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.



மகளை நல்வழிப்படுத்த முயற்சிக்கும் தந்தை மீது “குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின்” கீழ் வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பலாம்.  இவையெல்லாம் பெண்ணுரிமை என்கிறார்கள்.

இப்போது  பிரதமர் காவல்துறையை பெண்களுக்கு புத்திமதி சொல்லச் சொல்கிறார்.  அவர்கள் என்ன புத்திமதி சொல்ல முடியும்? அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம் என்று உலகத்திற்கு சொல்லிய இந்திய நாட்டில் குடும்பங்களை ஒழித்துவிட்டு காவல்துறை மூலம் பெண்களுக்கு புத்திமதி சொல்லச் சொல்கிறார்கள். நல்ல வேடிக்கை!!! இன்னும் நிறைய இருக்கிறது. ஒவ்வொன்றாக பார்க்கத்தானே போகிறோம்.
தினமலர் 27 டிசம்பர் 2012

புதுடில்லி: நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுத்திட போலீசார் தகுந்த பாதுகாப்பு வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும் இளம் பெண்களுக்கு பொது இடங்களில் எப்படி நடந்து கொள்வது குறித்து சில அறிவுரைகளை வழங்கிட வேண்டும் என பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன் டில்லியில் ஓடும் பஸ்சில் 23 வயது மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டார். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனை கண்டித்து டில்லியில் முக்கிய பகுதிகளில் மாணவர்கள், மகளிர் அமைப்பினர் கடந்த 8 நாட்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பெண்களுக்கு போலீசார் அறிவுரை வழங்க வேண்டும்
இந்நிலையில் ஐ.பி.எஸ். அந்தஸ்து பெற்ற அதிகாரிகள் குழுவினர் பிரதமர் மன்மோகன்சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அவர்களிடம் உரையாற்றிய பிரதமர் ‌மன்மோகன்சிங் கூறியதாவது: போலீஸ் என்றால் பொதுமக்களிடையே தவறான கண்ணோட்டம் ஏற்படக்கூடாது. இதனை தவிர்க்க வேண்டும். போலீசாரின் பணி சட்டம் ,ஒழுங்கை பாதுகாப்பது தான். இதில் அவர்களுக்கு தலையாய பொறுப்பு உள்ளது. அதே நேரத்தில் மக்களின் அடிப்படை உரிமை மீறப்படக்கூடாது. மனித உரிமை பாதுகாக்க வேண்டும்.நாட்டில் உள்ள பல்வேறு சமூக குற்றங்களை தடுப்பதில் போலீசாரின் பங்கு முக்கியமானது. பாலியல் பலாத்கார சம்பவங்கள் உள்‌ளிட்ட சமூக குற்றங்கள் நடப்பது ஏன் என்பன குறித்து மனதத்துவ ரீதியில் கண்டறிய வேண்டும்.

இது போன்ற கொடூர செயல்கள் கொண்ட மனப்போக்கினை ஒழித்து கட்ட வேண்டியது அவசியம்.நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுத்திட போலீசார் பெண்‌களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.



மேலும் பொது இடத்தில் பெண்கள் நடந்து ‌கொள்ள வேண்டியது குறித்து அவர்களுக்கு அறிவுரை வழங்கியும், எது நல்லது? , எது கெட்டது? என்பதனை போலீசார் எடுத்து கூற வேண்டும். இந்த விஷயத்தில் பொதுமக்களுக்கு போலீசார் நல்ல ஆலோசகராக , நண்பனாக இருக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் ‌மன்மோகன்சிங் கூறினார்.

கொசுறு செய்தி:
ஆந்திர மாநில காவல்துறை தலைவர் சொன்னது: பெண்கள் கற்பழிப்புக்கு காரணம் ஆண்களல்ல

Sunday, December 23, 2012

கணவன்களைக் கொல்ல வசதியான நாடு இந்தியாவா!

கள்ளக்காதல், கணவனின் சொத்தை அபகரித்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் மனைவியருக்கு தடையாக இருக்கும் கணவர்களை கொல்வதற்கும், பொய் வரதட்சணை குற்ற வழக்கு மூலம் சிறையில் அடைப்பதற்கும் பல இந்திய சட்டங்கள் உதவுகின்றன என்பதை நன்கு தெரிந்துகொண்டு பல இந்திய மனைவியர் இந்த வழிமுறைகளை பல காலமாக பக்குவமாக செயல்படுத்தி வருகிறார்கள். 

இந்த ரகசியம் இப்போது உலகளவில் பரவி வேறு நாட்டு மனைவியரும் தங்களது கணவரைக் கொல்ல இந்தியாவிற்கு சுற்றுலா கிளம்பிவிட்டார்கள் போலிருக்கிறது.  சுவிஸ் நாட்டை சேர்ந்த ஒரு பெண் தனக்குத் தேவையில்லாத கணவனை இந்தியாவில் தூக்கியெறிந்துவிட்டு தனது சுகபோக வாழ்வை  சுவிஸ் நாட்டில் நடத்திக்கொண்டிருந்திருக்கிறார்.  இந்த உண்மைகளை தெரிந்துகொண்ட சுவிஸ் நாட்டு அரசாங்கம் அந்தப் பெண்ணுக்கு சிறைத்தண்டனை அளித்திருக்கிறது.

அது சுவிஸ் நாடு என்பதால் ஆண், பெண் என்ற பேதமின்றி நேர்மையாக தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.  இந்தியாவாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

கவனிக்கப்படவேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம்.  இந்திய அரசாங்கம் இந்த சம்பவம் பற்றி கவலைப்பட்டதாகவோ, எந்த நடவடிக்கையும் எடுத்ததாகவோ செய்தியில் குறிப்பிடப்படவில்லை.  மொத்தத்தில் கணவனைக் கொல்ல ஏற்ற நாடு இந்தியா என்று  எண்ண வைத்துவிட்டார்களே!

டில்லியில் கணவரை தனியாக தவிக்க விட்ட வங்கி அதிகாரிக்கு நான்கு ஆண்டு சிறை
 
டிசம்பர் 24,2012 தினமலர்

லண்டன்:மாற்று திறனாளியான கணவரை, டில்லியில் தனியாக தவிக்க விட்ட, சுவிட்சர்லாந்து வங்கி அதிகாரிக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது.சுவிட்சர்லாந்தின், ஜூரிச் நகரை சேர்ந்த, 65 வயதான வங்கி அதிகாரி, தனது, 74 வயது கணவரை, 2008ல், இந்தியாவுக்கு சுற்றுலா அழைத்து வந்தார்.

நடக்க முடியாத நிலையில், சக்கர நாற்காலி உதவியுடன் நடமாடும், அவரது கணவரை, டில்லியில் ஒரு வீட்டில் தங்க வைத்து விட்டு, இவர் சுவிட்சர்லாந்தில் சுகபோக வாழ்வு வாழ்ந்தார்.

போதிய ஆதரவில்லாத நிலையில், ஒன்பது மாதத்தில், அவரது கணவர் இறந்து விட்டார். இதையடுத்து, டில்லியிலேயே கணவரை அடக்கம் செய்து விட்டார் இந்த வங்கி அதிகாரி.இந்தியாவில், இந்த முதியவரை பராமரித்து வந்த ஊழியர் மூலம், இந்த விஷயம், சுவிஸ் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இது குறித்து அந்த பெண்ணிடம், போலீசார் விசாரித்தனர்.

"கணவருக்கு குளிர் ஒத்து கொள்ளாததால், மிதமான வெப்பம் கொண்ட டில்லியில் தங்க வைத்தேன்' என, கூறினார். ஆனால், கணவரை பராமரிக்க மாதம், ஐந்து லட்சம் ரூபாய் செலவிட்டதாக, கணக்கு காட்டிஉள்ளார்.

புதிய சூழலில், போதிய பராமரிப்பின்றி கணவரை இறக்க விட்ட காரணத்துக்காக, இந்த பெண் அதிகாரிக்கு கடந்த ஆண்டு, ஆறு மாதம், சிறை தண்டனை அளிக்கப்பட்டது.ஆனால், அரசு தரப்பு வழக்கறிஞர்கள், இவருக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனை அளிக்க கோரினர். இதையடுத்து, தற்போது, வங்கி அதிகாரிக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது.


Friday, December 21, 2012

பெண்களை தவறிழைக்கத் தூண்டுவதில் பெரும்பங்கு வகிக்கும் செய்தித்தாட்கள்


இன்றைய செய்தியில் ஏற்கனவே திருமணமான பெண் வேறு ஒரு ஆணை மணந்து அந்த ஆணையும் ஏமாற்றிவிட்டு பெற்ற குழந்தையையும் விட்டுவிட்டு  படிக்கும் வயதில் இருக்கும் ஒரு இளைஞனுடன் ஓடியிருக்கிறார்.  ஆனால் செய்தித்தாள் இந்த செய்திக்கு கொடுத்திருக்கும் தலைப்பு “திருமணமான பெண்ணுடன் மாணவர் ஓட்டம்”.   எப்படி இருக்கிறது கதை.  வயதில் மூத்த இருமுறை திருமணமான பெண்ணை ஏதோ இந்த இளைஞர் கட்டாயப்படுத்தி இழுத்துக்கொண்டு ஓடிவிட்டதாக செய்தித்தாள் சித்தரித்திருக்கிறது.

இப்படித்தான் மீடியாக்கள் தவறிழைக்கும் பெண்களை அப்பாவி போல சித்தரித்து ஊக்கப்படுத்திவருகிறார்கள்.  அதே சமயம் ஆண்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்படும்போது உண்மை என்னவென்றுகூட  கவலைப்படாமல் ஆண்களை குற்றவாளி போல சித்தரித்து  பரபரப்பாக  செய்தி வெளியிடுகிறார்கள். 

மொத்தத்தில் பெண்களை சீரழிப்பதில் மீடியாக்களின் பங்கு மிகவும் முக்கியமானது.  தெரிந்துகொண்டவர்கள் புரிந்துகொள்வார்கள். 

விலங்குகளிடம் என்றும் மாறாமல் இருக்கும் ஒரு குணமான தாய்மை இப்போது மனிதர்களிடம் மிகவும் அரிதாகக் காணப்படுகிறது என்று பின்வரும் செய்தியில் பாருங்கள்.




துவரங்குறிச்சி: திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயாக உள்ள பெண்ணுடன், இன்ஜினியரிங் படிக்கும் மாணவர் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகேயுள்ள பில்லுப்பட்டியைச் சேர்ந்தவர் அழகர்சாமி, 30. திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் உள்ள ஸ்வீட் கடையில் மாஸ்டராக வேலை பார்க்கிறார். இவருக்கும், எடமலைப்பட்டி புதூரைச் சேர்ந்த, ஏற்கனவே திருமணமான, மாலா, 35, என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.மாலாவின் அழகில் மயங்கிய அழகர்சாமி, மாலாவை திருமணம் செய்து கொண்டார்.

இருவரும், மேட்டுப்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் வீட்டில், வாடகைக்கு குடியிருந்தனர். இவர்களுக்கு, ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளதுராஜேந்திரனின் மகன் கார்த்திக், 18. விராலிமலை அருகேயுள்ள எம்.ஏ.எம்., இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாமாண்டு பி.இ., படித்து வந்தார்.

அழகர்சாமி வேலைக்கு சென்ற பின் வீட்டில் தனியாக இருக்கும் மாலாவுக்கும், "படித்து' கொண்டிருந்த கார்த்திக்கும் தொடர்பு ஏற்பட்டது.இருவரும் தனிமையில் சந்தித்து தொடர்பை வலுப்படுத்தி வந்தனர். இவர்களின் கள்ளத்தொடர்பை அறிந்த அழகர்சாமி மற்றும் ராஜேந்திரன், இருவரையும் கடுமையான கண்டித்தனர்.

இவர்கள் சந்திப்பதற்கு தடை விதித்தனர்.ராஜேந்திரன் வீட்டை காலி செய்ய சொன்னதால், அழகர்சாமி வீட்டை காலிச் செய்துவிட்டு, பில்லுப்பட்டிக்கு சென்றுவிட்டார். இதனால் வேதனைக்கு உள்ளான இருவரும், அவ்வப்போது தனிமையில் சந்தித்து, ஊரை விட்டு ஓடிவிட திட்டம் தீட்டினர்.

கடந்த, 15 நாட்களுக்கு முன், மாலா, தனது பெண் குழந்தையை வீட்டிலேயே விட்டுவிட்டு, கார்த்திக்குடன் மாயமானார். அழகர்சாமியும், ராஜேந்திரனும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ராஜேந்திரன், வளநாடு போலீஸில் புகார் கொடுத்தார்.எஸ்.ஐ., அப்துல் ரகீம் மற்றும் போலீஸார் வழக்குப்பதிந்து, மாயமான கள்ளக்காதல் ஜோடியை தேடி வருகின்றனர். ஏற்கனவே, 2 திருமணமாகி, ஒன்றரை வயதில் குழந்தைக்கு தாயான பெண்ணும், இன்ஜினியரிங் மாணவரும் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Wednesday, December 19, 2012

சோரம் போன மனைவி திருந்துவாளா?

இந்திய கள்ளக்காதல் சட்டப்படி தவறு செய்யும் மனைவி குற்றவாளி கிடையாது.  ஆனால் பின்வரும் செய்தியில் ஒரு கணவர் இந்த விஷயம் தெரியாமல் சோரம் போன மனைவி திருந்துவாள் என்று தனது வாழ்வை அழித்துக் கொண்டிருக்கிறார்.  

இந்தக் கணவரின்  செய்கை சமூகத்தின் பார்வைக்கு ஒரு வேடிக்கையாகத்தான் இருக்கும்.  ஆனால் கணவன் தனது மனைவியை தவிக்க விட்டு வேறு ஒரு பெண்ணுடன் சென்றுவிட்டால் அந்த மனைவி கணவன் வீட்டு முன் தர்ணா என்று செய்தி வெளியிட்டால் அது கணவன் மனைவிக்கு செய்த கொடுமை என்று மக்கள் பேசுவார்கள்.  விந்தையான சமுதாயம்.

டிசம்பர் 20,2012 தினமலர்

லக்னோ:உத்தர பிரதேசத்தில், "சோரம் போன மனைவி, மனம் திருந்தி வரும் வரை, செய்த தவறுகளுக்காக அவள் மன்னிப்பு கேட்கும் வரை, மரத்திலிருந்து இறங்க மாட்டேன்' என, ஒன்பது மாதங்களாக, கணவர் ஒருவர், மரத்தில் ஏறி, போராட்டம் நடத்தி வருகிறார்.

வாரணாசி அருகே உள்ள ராம்காவ் என்ற இடத்தை சேர்ந்தவர், சஞ்சய், 25. இவர் மனைவி, தாரா, 22. சஞ்சய்க்கு, வாரணாசியில் வேலை சரிவர கிடைக்காததால், மனைவி தாராவுடன், மும்பை சென்றார். அங்கு கிடைத்த வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்.ஒரு நாள், வழக்கமாக வரும் நேரத்திற்கு முன்னதாகவே, வீடு திரும்பிய சஞ்சய்க்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரின் மனைவி தாரா, பக்கத்து வீட்டு வாலிபருடன், படுக்கையில் இருப்பதை கண்டார்.

நிலைமையை புரிந்து கொண்ட அவர், மனைவியை கண்டித்தார். தாராவுடன் வாரணாசி திரும்பினார். அங்கு சென்ற பிறகும், தம்பதிக்குள் இணக்கமான உறவு இல்லை. மும்பை வாலிபர் நினைவாகவே, தாரா இருந்துள்ளாள்.இதனால், அந்த பெண்ணை, அவளின் தாய் வீட்டில் விட்டு வந்த சஞ்சய், மனைவி தாரா மனம் மாற வேண்டும் என அறிவுறுத்தினார். எனினும், அந்த மும்பை இளைஞனை மறக்க முடியாமல் தாரா தவித்தாள்.இதனால் கோபம் கொண்ட சஞ்சய், அவர்கள் வசிக்கும் ஊரின் வெளிப்பகுதியில் இருந்த, மரம் ஒன்றில் ஏறி உட்கார்ந்து கொண்டார். மரத்தை விட்டே கீழே இறங்குவதில்லை. உணவு, உறக்கம் எல்லாம் மரத்தில் தான்.இந்த தகவல் அறிந்து, சஞ்சயின் உறவினர்கள், அவர் மனைவி, தாராவிடம் பேசிப்பார்த்தனர்.

அவளும் மனம் மாறவில்லை; சஞ்சயும், தன் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார்.மார்ச், 9ம் தேதி, மரத்தில் ஏறிய சஞ்சய், ஒன்பது மாதங்களாக, தன் போராட்டத்தை கைவிடவில்லை. வலுக்கட்டாயமாக யாராவது இறக்க முயன்றால், "மரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன்' என, மிரட்டுகிறார்.ஆட்கள் யாரும் அருகில் இல்லாத நேரத்தில், மரத்திலிருந்து கீழே இறங்கி, இயற்கை உபாதைகளை முடித்துக்கொள்வதும், பிறகு ஏறி உட்கார்ந்து கொள்வதுமாக, ஒன்பது மாதங்களாக, மரத்தில் உட்கார்ந்து போராட்டம் நடத்தி வரும் சஞ்சயை பார்க்க, ஏராளமானோர் வந்த வண்ணமாக உள்ளனர்.எனினும், அவர் மனைவி தாரா மட்டும் மனம் மாறவேயில்லை; போராட்டம் நடத்தும் கணவன் சஞ்சயை சமாதானப்படுத்தவோ, மும்பை வாலிபனை மறக்கவோ இயலாமல், தன் தாய் வீட்டில் தனித்தே வாழ்கிறாள். இதனால், சஞ்சயின் மர போராட்டம் தொடர்கிறது.

Saturday, November 24, 2012

வினை விதைக்கும் மருமகள்களுக்கு இது அறுவடைக்காலம்!

தன்னுடைய சுய லாபத்திற்காக வரதட்சணை தடுப்புச் சட்டங்களை தவறாகப் பயன்படுத்தி அப்பாவிக் கணவர்கள் மீதும், அவர்களுடைய குடும்பத்தார் மீதும் பொய் வழக்குகளை மருமகள்கள் தொடுக்கும் செயல் பல ஆண்டுகளாக இந்திய பாரம்பரியமாக நடந்துவருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. 

பொதுவாக பெண்ணிற்கு மட்டும்தான் கற்பிருப்பதாக ஒரு மூடநம்பிக்கை இருந்துவருகிறது.  அதனால் ஒரு பெண்ணைப்  பற்றி தவறாகக் கூறுவது ஒரு கொடிய செயலாக கருதப்படுகிறது.  ஆனால் அதே சமயத்தில் ஒரு ஆணின் நடத்தையைப் பற்றி தவறாகக் கூறினால் அது அந்த ஆணின் நற்பெயரை கற்பழித்ததற்கு சமம் என்று ஒருவர்கூட நினைப்பதில்லை.  இதனை பல ஆண்டுகளாக நீதிமன்றங்களும் உணரவில்லை.  ஒரு மனைவி தனது கணவனின் நடத்தையை களங்கப்படுத்தி பொய் வழக்குகளை உருவாக்கி அவனின் வாழ்வை நாசப்படுத்துவது சர்வசாதாரணமாக இந்தியாவில் நடந்துவரும் செயல்.  இதற்கு நீதிமன்றங்கள் மலர்தூவி மருமகள்களுக்கு வாழ்த்துகூறிக்கொண்டிருக்கும்.

இப்போது அரிதாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பைக் கூறி மனைவி தன் கணவன் மீது அவதூறாக வழக்குத் தொடர்வது கணவனை கொடுமைப்படுத்தியத்ற்கு சமம் என்று கூறி 24 ஆண்டுகள் நடந்த விவாகரத்து வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது.

இந்த வழக்கில் நாம் சந்தோஷப்படுவதா அல்லது வருத்தப்படுவதா என்று தெரியவில்லை. ஏனென்றால்... ... ...

1.  ஒரு அப்பாவிக் கணவன் தவறான மனைவியிடமிருந்து விடுபட இந்திய நீதிமன்றங்கள் அந்தக் கணவனை 24 ஆண்டுகள் அலைய வைத்திருக்கின்றன.

2.  ஒரு மனைவியை அவளது கணவன் தவறானவள் என்று கூறிவிட்டால் அவனை மனைவியை மனதளவில் கொடுமை செய்தததாகக்கூறி IPC498Aன் கீழ் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை கொடுத்துவிடுவார்கள்.  ஆனால் இந்த வழக்கில் மனைவி கணவனின் நடத்தையை கலங்கப்படுத்தி அவனது வாழ்வை சீரழித்ததற்கு ஒரு தண்டனையும் இல்லை.

3. 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவருக்கு நீதி கிடைத்தால் என்ன கிடைக்காவிட்டால் என்ன? இழந்த காலங்கள் மீண்டும் வருமா?

இதுபோன்ற நீதித்துறையின் தாமதித்து  நீதி வழங்கும் முறை நீதி மறுக்கப்பட்டதற்கு சமம்.  இதனை நீதித்துறை வல்லுனர்கள்  Delayed Justice is Denied Justice  என்று சொல்வார்கள்.  இதுபோன்ற நீதிமறுக்கப்பட்ட சூழலில் பல கணவர்கள் மனம் நொந்து தவறான மனைவியை கொலை செய்து உடனடியாக தங்களுக்கான நீதியை பெற்றுக்கொள்கிறார்கள்.   அப்பாவிகளை கொலைகாரர்களாக மாற்றுவதில் இந்திய நீதித்துறையின் தாமதித்து நீதி வழங்கும் முறை முக்கிய பங்காற்றுகிறது. 

இந்த ஒரு கணவருக்கு 24 ஆண்டுகள் கழித்து நீதி கொடுக்கப்பட்டதாக கருதலாம்.  ஆனால் இதுபோன்று பல கணவர்கள் இன்னும் நீதி கிடைக்காமல் பல ஆண்டுகளாக நீதிமன்றங்களில் அலைந்துகொண்டிருக்கிறார்கள்.  அவர்கள் மனம் நொந்து கொலைகாரர்களாக மாறாமல் இருந்தால் நல்லது.

  Saturday, November 24, 2012 One India Tamil

மதுரை: கணவர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறுவதும் ஒருவகையான மன ரீதியான கொடுமைதான் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்துள்ளார். இதனை காரணமாக வைத்து கணவர் விவாகரத்து மனு தாக்கல் செய்யலாம் என்றும் அந்த தீர்ப்பில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த கே.அய்யனாருக்கு அவருடைய அக்காள் மகள் முனியம்மா உடன் 10.6.1988 ஆம் திருமணம் நடந்தது. பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.
பின்னர், 4 ஆண்டுகளுக்கு பின் இருவரையும் உறவினர்கள் சமரசம் செய்து சேர்த்து வைத்துள்ளனர். அதன்பின்னர்  பிரசவத்துக்கு பெற்றோர் வீட்டுக்கு சென்ற முனியம்மாள் பின்னர் கணவன் வீட்டுக்கு வரவில்லை.

இதற்கிடையில் கணவன் அய்யனாருக்கு, முனியம்மாள் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ‘வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளதாகவும், வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாகவும் கணவர் மீது குற்றம் சுமத்தியிருந்தார்.

இதையடுத்து, தென்காசி சார்பு கோர்ட்டிலும், பின்னர் திருநெல்வேலி மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டிலும் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு அய்யனார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டன. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அய்யனார் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

அதேபோல, தன் கணவர் விவாகரத்து வழங்க கூடாது என்றும் தன்னுடன் சேர்ந்து வாழ அவருக்கு அய்யனாருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தென்காசி சார்பு நீதிமன்றத்தில் முனியம்மாள் மனு தாக்கல் செய்த மனு 17.7.2000 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து திருநெல்வேலி கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் முனியம்மாள் தாக்கல் செய்த அப்பீல் மனு ஏற்றுக் கொண்ட நீதிபதி மனைவியுடன் சேர்ந்து வாழ அய்யனாருக்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவையும் எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அய்யனார் அப்பீல் செய்தார்.

இந்த 2 இரண்டு அப்பீல் மனுக்களும், பின்னர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.விமலா பரபரப்பான தீர்ப்பினை அளித்தார். அந்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
அய்யனார், முனியம்மாள் தம்பதியினருக்கு திருமணமாகி 28 ஆண்டுகள் ஆகி விட்டன. அய்யனாரும், முனியம்மாளும் திருமணத்துக்கு முன்பே ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்தவர்கள். ஆனால், இருவரும் ஓர் ஆண்டு கூட ஒற்றுமையாக குடும்பம் நடத்தவில்லை. இரண்டு பேரும் மாறி மாறி வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அய்யனார் மீது முனியம்மாள் சுமத்திய குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என்று குறுக்கு விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுபோல் பொய்யான குற்றச்சாட்டை கூறி கணவனின் ஒழுக்கத்தை முனியம்மாள் படுகொலை செய்து, தன்னுடைய திருமண வாழ்வுக்கு சாவு மணி அடித்துள்ளார்.

ஒரு பொய்யான குற்றச்சாட்டை கணவனுக்கு எதிராக மனைவி சுமத்தி வழக்கு தொடர்ந்தால், அது அந்த கணவனை மன ரீதியான கொடுமை செய்வதாக அர்த்தம் என்று உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது.

முனியம்மாள் விதைத்ததை அறுவடை செய்துள்ளார். இவர் கணவன் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி செய்த தவறு, பிற பெண்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கும். எனவே இவரிடம் இருந்து விவாகரத்துக்கு கேட்டு அய்யனார் தாக்கல் செய்த மனு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. கீழ் கோர்ட்டு உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி விமலா தன்து தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Sunday, November 18, 2012

தாலி அறுக்க வரிசையில் காத்திருக்கும் தமிழக இளம் தம்பதிகள்

தவறான பெண்ணியக் கோட்பாடுகளால் பல காலமாக இந்தியாவில் குடும்பங்கள் மிகவும் ஆபத்தான அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றன என்று சமூகத்தின் மீது அக்கறையுள்ளவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

எரிகின்ற தீக்கு எண்ணைய் ஊற்றுவது போல பொய் வரதட்சணை வழக்குகள், அதற்குத் துணையாக பெண்கள் பாதுகாப்பு அல்லது பெண் சுதந்திரம் (Women Empowerment) என்ற பெயரில் பல அடுக்கடுக்கான ஒரு தலைபட்டசமான சட்டங்கள் அரசாங்கத்தால் சமுதாயத்தில் விஷம் போல பரவச்செய்து பெண்களை தவறிழைக்கத் தூண்டி இப்போது சமுதாயத்தின் சமநிலையை பாதிக்கும் அளவிற்கு நாட்டை சீர்குலைத்திருக்கிறது.

இதன் விளைவாக இப்போது திருமணம் செய்த கையோடு தேனிலவிற்கு செல்ல வேண்டிய பல இளம் தம்பதிகள்  தாலியை அறுத்து  திருமண பந்தத்தை முறித்துக்கொள்ள  நீதிமன்ற வளாகங்களில் காத்துக் கிடக்கிறார்கள்.  நீதிமன்றங்களும் அதனைச் சார்ந்தவர்களும் வழக்கம்போல வழக்கை விரைந்து முடிக்காமல் காலதாமதம் செய்து அந்த காலதாமதக் காலத்தில் குளிர் காய்ந்து கணவன் மனைவி இருவரிடமும் வழக்கு என்ற பெயரில் முடிந்த அளவிற்கு பணம் சம்பாதித்துவிடலாம் என்று ஆவலுடன் காத்துக்கிடக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரியும்.

திருமணம் முடிந்த கையோடு காம வேட்கையுடன் இருக்கும் பலர் நீதிமன்ற காலதாமதத்தை தாங்கமுடியாமல் கள்ளக்காதல், கூடிவாழ்தல்,  அடுத்தவளின் கணவனை அபகரித்தல், கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவனின் தலையில் கல்லைப் போட்டுக் கொல்லுதல், கணவனின் குடும்பத்தார் மீது பொய் வரதட்சணை வழக்குப் போடுதல்,  குடும்ப வன்முறை சட்டத்தைப் பயன்படுத்தி கணவனின் சொத்துக்களை பிடுங்குதல் போன்ற செயல்களை சர்வசாதரணமான இந்திய சட்டங்களின் துணையோடும், காவல் மற்றும் நீதித்துறைகளின் துணையோடும் செய்துவருகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

இந்த சமுதாயக் குழப்பத்திற்கு நடுவே பிறக்கும் பல குழந்தைகள் இன்னும் சில ஆண்டுகளில் பெற்றோர் இல்லாத வழி தவறிய இளைய தலைமுறையை உருவாக்கி 2020ல் இந்தியாவை ஒளிரச் செய்யப்போகிறார்கள் என்பதை அனைவரும் கண்கொள்ளக் காட்சியாக காணப்போகிறோம்.

ஆண்டுக்கு 1500 விவாகரத்து வழக்குகள் "பெண்டிங்' :கூடுதல் குடும்ப கோர்ட் எப்போது? 

தினமலர் நவம்பர் 19, 2012

 மண வாழ்க்கையில் இணைந்த கணவன் மனைவியை சட்டப்படி பிரிப்பதும், மீண்டும் சேர்த்து வைப்பதும் குடும்ப கோர்ட்களில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளாக உள்ளன. ஆயிரக்காலத்து பயிர்களை, ஆர்வக் கோளாறு காரணமாக ஆறு மாதத்தில் அறுத்து எரியத் தயாராகி விட்டனர் இளம் வயது ஜோடிகள்.

தாலியுடன் இளம் பெண்களும், ஏக்கப் பார்வையில் ஆண்களும் அதிகமாக காத்துக்கிடக்கும் இடமாக குடும்ப கோர்ட் வளாகம் மாறி விட்டது. காலை முதல் மாலை வரை தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ஜோடிகளை இங்கு பார்க்கலாம். தொடர்ந்து "வாய்தா'வில் ஓடும் வழக்குகளின் விசாரணை எப்போது முடியும், விவாகரத்து எப்போது கிடைக்கும், புது வாழ்க்கையை எப்போது துவக்கலாம் என திக்குத் தெரியாமல் ஆண்டுக்கணக்கில் இவர்கள் காத்திருக்கின்றனர்.

விவாகரத்து வழக்குகள் நிலுவையில் இருக்கும் போதே, ஊராருக்கும், கோர்ட்டுக்கும் தெரியாமல், தாலி கட்டி சிலர் குடித்தனம் துவங்கி விட்டனர். இன்னும் சிலர், தாலி கட்டாமல் தனியாக வாழ்ந்து வருகின்றனர். ஒரு சிலர் முடிவு தெரியாமல் 10 ஆண்டுகளாகக் கூட கோர்ட்டுக்கு நடையாய் நடக்கின்றனர்.கோர்ட்களில் வழக்குகள் தேங்குவதற்கு, ஒரே ஆண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகளும், ஜீனாம்சம் கேட்பு வழக்குகளும் பதிவு செய்வதே இதற்கு காரணமாக உள்ளன.

வழக்குகள் அதிகமாவதால், வாய்தாவுக்கே கோர்ட்டில் நேரம் சரியாக உள்ளது. இதனால் வழக்குகளின் விசாரணை தேதிகள், ஆண்டுக்கு ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. அந்தளவுக்கு வழக்குகள் வரிசையாக வந்து கொண்டே இருக்கின்றன. கோவை குடும்ப நீதிமன்றத்தைப் பொறுத்த அளவில், ஒவ்வொரு ஆண்டும் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி விட்டன.கடந்த நான்கு ஆண்டுகளாக இது தொடர்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 1300க்கும் அதிகமான விவாகரத்து வழக்குகளும், 200க்கும் மேற்பட்ட ஜீவனாம்சம் கேட்பு வழக்குகளும் பதிவாகின.நடப்பு ஆண்டில், கடந்த 10 மாதங்களில் 1,225க்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகளும், 200க்கும் மேற்பட்ட ஜீவனாம்சம் கேட்பு வழக்குகளும் பதிவாகியுள்ளன.இப்படி ஒவ்வொரு ஆண்டும் விவாகரத்து வழக்குகள் அதிகரித்திருப்பது சமூகத்தில் ஒரு இக்கட்டான சூழலை உருவாக்கி உள்ளது.குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற மன உளைச்சலில்,குடும்ப பெரியவர்கள் சங்கடத்தில் ஆழ்ந்துள்ளனர்.

விவாகரத்து மற்றும் சேர்ந்து வாழக் கோரும் வழக்குகள் குடும்ப கோர்ட் மட்டுமல்லாது, கோவை சட்ட மையத்திலும் நடக்கிறது. இங்கு ஒரு நாளைக்கு 5 முதல் 7 வழக்குகள் இருதரப்பு சம்மதத்துடன் விசாரிக்கப்படுகின்றன. இவ்வழக்குகள் அனைத்தும் குடும்ப கோர்ட்டில் இருந்து பெறப்பட்டவையாகும்.தொடர்ந்து அதிகரித்து வரும் வழக்குகளால், விரைந்து வழக்குகளை விசாரிக்கமுடியாமல் கோவை குடும்ப நீதிமன்றம் திணறுகிறது. இதனால் வழக்குகள் முடிய தாமதமாகின்றன. இதை தவிர்க்க, கூடுதலாக ஒரு கோர்ட் துவக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

சமீபத்தில் ஐகோர்ட் இதற்கான அனுமதி வழங்கியும், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில், கோர்ட் கட்டடம் கட்ட இடம் இல்லாததால் நின்று போனது. ஏற்கனவே 2001க்கு முன், கோர்ட்கள் செயல்பட்ட குதிரை வண்டி கோர்ட் வளாகம் தற்போது உபயோகத்தில் இல்லாமல் இருக்கிறது.இந்த வளாகத்தில் நீதிபதிகளுக்கான குடியிருப்பு கட்ட பல ஆண்டுகளாக திட்டம் இருந்த போதிலும், ஒரு பகுதியில் புதிய நீதிமன்றங்கள் அமைக்கலாம் என்ற முடிவும் ஏற்பட்டுள்ளதால், குதிரை வண்டி கோர்ட் வளாகத்தில் புதிய நீதிமன்றம் அமைக்க வேண்டும் என,கோவை வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் சென்னை ஐகோர்ட்டுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Sunday, November 04, 2012

கணவனிடம் மனைவி உறவு கொள்ள உதவும் காவல்துறை!

இந்திய சட்டங்கள் எப்படியெல்லாம் பெண்களுக்கு உதவுகின்றன என்று செய்தியைப் பார்த்தால் மிகவும் வியப்பாக இருக்கிறது.  எத்தனை வகையான பாதுகாப்பு சட்டங்கள்!

"வரதட்சணை" என்ற மசாலா தடவாமல் எந்த வழக்கையும் காவல் நிலையத்தில் பதிவு செய்யமாட்டார்கள். 

10 ஆண்டுகளுக்கு முன் கணவனுக்கு வயது 28, மனைவிக்கு வயது 20.  இளமை துள்ளும் வயதில் பஞ்சும் நெருப்பும் பத்திக்கொள்ளவில்லை.  என்ன ஒரு ஆச்சரியமான வழக்கு! காமதேவனுக்கு மட்டும்தான் இந்த வழக்கின் உண்மை தெரியும்!!!  செய்தித்தாள் கூசாமல் விளக்கு பிடித்து இதை ஒரு செய்தியாக வெளியிட்டுவிட்டது.

மனைவியிடம் "உறவு'' வைக்காத கணவர் கைது

நவம்பர் 05,2012  தினமலர்

ஓசூர்:சூளகிரி அருகே, 10 ஆண்டாக மனைவியிடம் தாம்பத்திய உறவு வைக்காமல் கொடுமை செய்த கணவரை, போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அழகுபாவியை சேர்ந்தவர் விவசாயி சங்கர், 38. இவரது மனைவி பாரதி, 30. இருவருக்கும், 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, பாரதியின் பெற்றோர், ஐந்து சவரன் நகை, ரொக்கம் ஆகியவற்றை வரதட்சணையாகக் கொடுத்தனர். ஆனால், சங்கருக்கு மனைவி பாரதியை பிடிக்கவில்லை.

திருமணமாகி, இதுவரை அவருடன் ஒருநாள் கூட, சங்கர் தாம்பத்திய உறவு வைக்கவில்லை. மேலும், வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததை கண்டித்த சங்கரை, பாரதி கண்டித்துள்ளார். அதனால், அவரது பெற்றோர் வீட்டிற்கு துரத்தி விட்டுள்ளார்.  இது குறித்து பாரதி, ஓசூர் மகளிர் டவுன் போலீசில் புகார் செய்தார். புகாரில், "கணவர் சங்கர், தன்னுடன் தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளவில்லை. அதை தட்டிக் கேட்டதால், தன்னை கொடுமை செய்து, பெற்றோர் வீட்டிற்கு துரத்தி விட்டார்'' என கூறியிருந்தார். இன்ஸ்பெக்டர் சித்ரா தேவி விசாரித்து, சங்கரை கைது செய்தார்.

Tuesday, October 23, 2012

பெண்கள் மாறிவிட்டார்கள்!! இந்திய சட்டங்கள் மட்டும் மாறவில்லை!!!

இந்தியாவைப் பொறுத்தவரை இளம் பெண் சொல்வது அனைத்தும் உண்மை, பெண் என்பவள் தாய்மையை போற்றுபவள் அதனால் அவளுக்கு எல்லாவிதங்களிலும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற மனப்பான்மை பல ஆண்டுகளாக இருந்துவருகிறது. 

காலப்போக்கில் பெண்களின் குணங்கள் மாறிவிட்டன.  ஆனால் பெண்கள் மீதான கனிவான மனப்பான்மை குருட்டுத்தனமாக மாறிவிட்டது.  அதன்விளைவாக பெண்களுக்கு பாதுகாப்பு தருகிறோம் என்ற பெயரில் பல குருட்டுத்தனமான ஒருதலைபட்சமான சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.  இந்த சட்டங்கள் அனைத்தும் காலப்போக்கில் பெண்களிடையே ஏற்பட்டுள்ள மாற்றங்களை கணக்கில் கொள்ளாமல் பெண் சொல்வது அனைத்தும் உண்மை, ஆண் என்பவன் எப்போதும் குற்றவாளி என்ற தவறான கண்ணோட்டத்திலேயே இயற்றப்பட்டிருக்கிறது.

உதாரணமாக வரதட்சணை தடுப்பு சட்டப்படி பெண் சொல்வது மட்டுமே உண்மை, குடும்ப வன்முறை தடுப்புச் சட்டப்படி பெண் என்பவள் பாதிக்கப்படும் அப்பாவி என்றும் ஆண் என்பவன் பெண்ணை தாக்கும் காட்டுடைமிராண்டி என்றும் மறைமுகமாக கூறப்பட்டிருக்கிறது.  இதெல்லாம் இன்றைய காலகட்டத்தில் எந்த அளவிற்கு உண்மை என்று அனைவருக்கும் தெரியும்.  ஆனால் சட்ட மேதைகள் கண்மூடித்தனமாக இருப்பதால் பல இளம்பெண்கள் இந்த சட்டங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திவருகிறார்கள்.

தாய்மையால்தான் பெண்ணுக்கு பெருமை.  அது இல்லையென்றால் அது பேய்க்குச் சமம்.  அதுபோலவே தாய்மை என்பது பெண்ணிடம் மட்டும்தான் இருக்கும் குணம் என்று ஒரு ஒரு முட்டாள்தனமான கருத்து சமுதாயத்தில் நிலவிவருகிறது.  ஆண்களிடமும் தாய்மை குணம் இருக்கிறது என்பதை பின்வரும் அடுத்த செய்தி காட்டுகிறது.
அக்டோபர் 08,2012  தினமலர்

ஆதம்பாக்கம் : குழந்தைகளை தவிக்கவிட்டு, கள்ளக் காதலனுடன் சென்ற பெண்ணை, நீதிமன்றத்தில் போலீசார் இன்று ஆஜர் படுத்துகின்றனர்.ஆதம்பாக்கம், குமாரபுரம் தெருவைச் சேர்ந்தவர் முகம்மது இஸ்மாயில்,37, விளம்பர நிறுவன உரிமையாளர். இவரது மனைவி பாத்திமாபானு,29. இரு குழந்தைகள் உள்ளன. குடும்பத்துடன், ஒன்றரை வருடத்திற்கு முன், ராயபுரம் பகுதியில் தற்காலிகமாகக் குடியிருந்தனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஐசக்,27, என்பவருடன், பாத்திமாபானுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன், ஆதம்பாக்கத்தில் புது வீடு கட்டி முகம்மது இஸ்மாயில் குடும்பத்துடன் குடியேறினார். அப்போதும் பாத்திமாபானு, ஐசக் உடனான உறவு தொடர்ந்துள்ளது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி, முகம்மது இஸ்மாயில் மனைவியைக் காணவில்லை என, ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார், பாத்திமாபானுவை அழைத்து, சமாதானம் பேசி கணவருடன் அனுப்பி வைத்தனர். இரு குழந்தைகளும் தாயைக் கட்டிப்பிடித்து, "எங்களை விட்டு போகாதம்மா, நீதான் எங்களுக்கு வேணும், நீ இல்லை என்றால் நாங்கள் அனாதையாகி விடுவோம்' என, காலில் விழுந்து கதறி அழுதுள்ளனர். எந்தவிதச் சலனமும் அடையாமல், மீண்டும் கள்ளக் காதலனுடன் சென்று விட்டார்.இந்த நிலையில், முகம்மது இஸ்மாயில் மனைவியைக் காணவில்லை, கண்டுபிடித்துத் தரவேண்டுமென, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். போலீசார் பாத்திமாபானுவை கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின் பேரில், மகளிர் காப்பகத்தில் சேர்த்தனர். இந்த வழக்கு, இன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. பாத்திமாபானுவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர். அப்போது, யாருடன் சேர்ந்து வாழ்வார் என்பதை நீதிமன்றத்தில் முடிவு செய்வார்.


(தினமலர் 23/10/2/12)

This rickshaw puller has a child strapped to his chest

October 20, 2012 NDTV

Bharatpur: It's an unusual sight on the streets of Bharatpur in Rajasthan - a rickshaw puller goes to earn his daily wage with his small newborn daughter strapped to his chest.

A month ago, rickshaw puller Babloo's wife died after childbirth due to anaemia. It left Babloo all alone with a small infant to take care for. With no close relatives on hand, Babloo decided to take his small daughter with him to work.

"She was born on September 15. Five days later her mother died. Since then I have been taking care of her all by myself. I can't leave her at home because nobody is there to take care of her, so I've been taking her with me to work every day," said Babloo.

"When she grows up, I will send her to school. I don't want her to grow up on the streets. I want proper upbringing for her," said the ambitious father.

However, being out in the open has taken its toll on the infant. The little baby is ill and has been in a government hospital in Bharatpur for two days now.

But for a state like Rajasthan, which has among the lowest sex ratios in the country and incidents of families abandoning baby girls is high, Babloo is indeed a shining example of paternal love.

NDTV is organising bank account details for this family and will post relevant information soon for anyone who wants to assist.

Saturday, October 20, 2012

தரமற்ற நீதிமன்றங்களால் தவறாகப் பயன்படுத்தப்படும் பெண்களுக்கு எதிரான பாலியல்கொடுமை தடுப்புச் சட்டங்கள்!


பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்க குழு அமைக்கவேண்டும் என்று மற்ற துறைகளுக்கு உத்தரவு போட்டிருக்கும் உச்ச நீதிமன்றம்  (பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் தடுக்க குழு : சுப்ரீம் கோர்ட், அக்டோபர் 19,2012 தினமலர்) தனது நீதித்துறையில் டில்லி மாவட்ட நீதிமன்றத்தில் பணி புரிந்த இளம் பெண் தனது குறுக்கு சட்ட அறிவு, நீதிமன்றங்களின் செயல்பாடற்ற தன்மை (Inefficiency)  இவற்றை நன்றாகத் தெரிந்துகொண்டு தனது கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த திருமணமான கள்ளக்காதலனின் மனைவி மற்றும் அவரது சகோதரர் மீது கூலிப்படையுடன் சேர்ந்து தன்னை கட்டிவைத்து மாதக்கணக்கில் கற்பழித்ததாக பொய்யான கற்பழிப்பு வழக்கு போட்டு கடைசியில் அது பொய்யான வழக்கு என்றும் வழக்கு உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காக கற்பனையாக இரண்டு ஆண்களின் பெயரையும் வழக்கில் சேர்த்து காவல்துறையையும், நீதிமன்றத்தையும் ஏமாற்றியிருக்கிறார் என்று நீதிபதி கண்டுபிடித்துவிட்டார்.
ஒரு இளம் பெண் கொடுத்த இந்த பொய்யான கற்பழிப்பு வழக்கில் சிக்கி பாதிக்கப்பட்டிருப்பது இரண்டு பெண்கள், ஒரு ஆண், இரண்டு கற்பனையாக ஜோடிக்கப்பட்ட ஆண்கள்! இவர்களுக்கு நீதி வழங்கப்போவது யார்?
IN THE COURT OF SH. RAKESH TEWARI ASJVI
ROHINI COURTS, DELHI
SC NO.271/10
FIR NO. 895/05
U/S 365/366/342/376(2) IPC
PS Sultan Puri
State
Vs.
1. Ritu @ Gudia w/o Ram Niwas
2. Kishan Pal (discharged vide order dated 08.01.2007)
3. Ram Niwas (Proclaimed Offender)
4. Balvinder (Proclaimed Offender) - கற்பனையாக ஜோடிக்கப்பட்ட ஆண்
5. Munna (Proclaimed Offender) - கற்பனையாக ஜோடிக்கப்பட்ட ஆண்
Date when committed to the court of Sessions :28.09.2006
Judgment pronounced on :12.07.2012

JUDGMENT:
34. I am conscious of the doctrine of judicial restraint which commands me not to pass such comments which may not be part of the “lis” and at the same time, I am also conscious of the law that nobody has got a right to commit a rape upon a woman even of easy virtue but the theory of rape against the present prosecutrix has been already discarded by me, as discussed above, but despite all restraints at my command, my judicial conscience pricks me that I would be failing in my duty if I do not point out that present prosecutrix, admittedly working in District Courts has no fear or by virtue of her said job her fear has gone out of her mind towards the law and she can play with the law and legal procedures as a master juggler and she can go to any extent by levelling allegations against anyone as I have already held that she has no regard even for the human relations, as discussed above, and in this sense, such kind of alleged victims of rape are potentially dangerous to the society in the sense that from tomorrow onwards the general public as well as the courts will start disbelieving the version given by even the real victims of rape and in the second sense, as she has become fearless, she can level allegations against her colleagues with whom she is working or against any other person of the society with whom she will be having a clash of interest. I have no hesitation in drawing an inference that she is a cold blooded thinker whereby she can implicate any person, having inadvertence towards the consequences and at the same time, she has no repentance over her said false allegations. These comments have been passed with a hope that the said prosecutrix would reform herself in future and it is in this background that I am thinking it inexpedient in the circumstances not to lodge a report against her for the criminal offences she has committed before this court during her said deposition u/s 340 Cr.PC and not reporting the matter to her department for her departmental action because prevention is always better than cure and for further humanitarian reason that she got her job on compassionate ground after her father was murdered.

இந்த தீர்ப்பு தொடர்பாக செய்தித்தாளில் வந்துள்ள செய்தி....பலாத்காரம் செய்ததாக பொய் புகார் கூறும் பெண்கள்:சமூகத்திற்கு ஆபத்தானவர்கள்,தினமலர் 17 ஜூலை 2012
=====

 ஆனால் வழக்கின் முடிவில் நடந்தது என்ன?  காவல்துறையையும், நீதித்துறையையும் முட்டாளாக்கி அப்பாவிகள் மீது அபாண்டமான கற்பழிப்பு வழக்கு சுமத்திய பெண்ணை ஆண் நீதிபதி வழக்கம்போல் “இளம்பெண்” என்று கடைக்கண் பார்வையில் கருணை காட்டி எந்தவித தண்டனையும் கொடுக்காமல் எச்சரிக்கை செய்து விடுவித்துவிட்டார்.  மேலும் இப்படி ஒரு அபாண்டமான குற்றத்தை சுமத்தும் இந்த தரங்கெட்ட இளம் பெண்ணை எந்தவித துறை ரீதியான நடவடிக்கைக்கும் உட்படுத்தாமல் தொடர்ந்து நீதிமன்றத்தில் பணியாற்றவும் உதவி செய்திருக்கிறார்.   இப்படி தரங்கெட்டத்தனமாக நீதிமன்றங்கள் வழக்கை நடத்தினால் பெண்களுக்கு எதிராக பாலியல் கொடுமைகளை தடுக்க உருவாகும் சட்டங்கள் எந்த நோக்கத்திற்கு பயன்படுத்தப்படும் என்று  இந்த வீடியோவில் பாருங்கள்.



அக்டோபர் 19,2012 தினமலர்



புதுடில்லி:பணிபுரியும் இடங்களில், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளை தடுப்பதற்கு, ஒரு குழுவை அமைக்கும்படி, இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., உட்பட, சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மேத்தா ஷா என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு:

பணிபுரியும் இடங்களில், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளை தடுப்பது தொடர்பாக, 1997ல் நடந்த விசாகா வழக்கில், சுப்ரீம் கோர்ட், முக்கிய உத்தரவை பிறப்பித்திருந்தது. இதற்காக, வழிகாட்டும் குறிப்புகள் உருவாக்கப்பட்டன.

இதன்படி, பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும், பாலியல் கொடுமைகளைத் தடுக்க வேண்டிய பொறுப்பு, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது உயரதிகாரியைச் சார்ந்தது.பாலியல் கொடுமைகளைத் தடுக்க வகை செய்யும் விதிமுறைகள், அறிவிப்பாக வெளியிடப்பட வேண்டும்.இது தொடர்பான, சுற்றறிக்கையும் வெளியிடப்பட வேண்டும். குற்றத்தில் ஈடுபட்டவர் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால், இந்த விதிமுறைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் மட்டுமே பின்பற்றப் படுகின்றன.எனவே, தனியார் உள்ளிட்ட, அனைத்து நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களும், இந்த விதிமுறைகளை பின்பற்றும்படி செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

பணிபுரியும் இடங்களில், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளை தடுப்பது குறித்து, சம்பந்தப்பட்ட துறை தொடர்பான ஒழுங்குமுறை அமைப்புகளால், குழு அமைக்கப்பட வேண்டும். குறிப்பாக, மருத்துவத் துறையை பொறுத்தவரை, அத்துறையின் ஒழுங்குமுறை அமைப்பான, எம்.சி.ஐ., இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Tuesday, October 16, 2012

திருமண பந்தத்தை ரத்து செய்ய இனி நீதிமன்றத்திற்கு செல்லவேண்டாம்!

 இந்தியாவில் இந்து மத முறைப்படி நடந்த திருமணத்திலிருந்து பிரிந்து செல்ல இந்து திருமண சட்டத்தில் கூறியுள்ள ஏதாவது ஒரு வழிமுறையைப் பின்பற்றி நீதிமன்றத்தில் விண்ணப்பித்து பல ஆண்டுகள் அலைந்து திரிந்து பிறகு நீதிமன்றம் முடிவு செய்தால்தான் விவாகரத்து பெறமுடியும்.  இது ஒத்துவராத திருமணபந்தத்திலிருந்து விடுபட நினைக்கும் அப்பாவி கணவன்களுக்கு  “சட்ட நடைமுறை” என்ற பெயரில் நடந்துகொண்டிருக்கும் அவலம்.  

ஆனால் ஒரு பெண் திருமண பந்தத்திலிருந்து விடுபட நினைத்தால் எந்தவித சட்ட நடைமுறையையும் பின்பற்ற வேண்டியதில்லை. இந்து திருமண முறைப்படி நடந்த திருமணத்தில் கட்டிய தாலியை கழற்றி கணவனிடம் கொடுத்துவிட்டால் போதும்.  எந்த சட்ட நடைமுறையையும் பின்பற்ற வேண்டியதில்லை.  இதற்கு காவல்துறை நன்கு ஒத்துழைப்புக் கொடுக்கும் என்று இன்றைய செய்தியில் அறிந்துகொள்ளலாம்.

காவல்நிலையத்திலேயே திருமணத்தை முறித்துக்கொள்ளும் வசதியிருக்கிறதென்றால் இந்து திருமண சட்டங்கள் எதற்கு? நீதிமன்றங்கள் எதற்கு?

கணவனை உதறிவிட்டு காதலனுடன் நடையைக் கட்டிய புதுப்பெண் ..சென்னையில் பரபரப்பு! 

செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2012 One India


சென்னை: சென்னையில் திருமணமான ஒரு மாதத்தில் கணவரிடம் தாலியை கழற்றி கொடுத்து விட்டு, காதலனுடன் புதுப்பெண் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் சதீஷ் (25). இவருக்கும், உறவுப்பெண் சங்கீதாவுக்கும், கடந்த 1 மாதத்துக்கு முன்புதான் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின் சங்கீதா புரசைவாக்கத்தில் உள்ள செல்போன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தார். வேலைக்கு சென்ற அவரை திடீரென்று காணவில்லை. இது குறித்து அயனாவரம் போலீஸ் நிலையத்தில் சதீஷ் புகார் அளித்தார்.

வழக்குப் பதிவு செய்த போலீசார் சங்கீதா தேடிவந்தனர். அப்போது சங்கீதா தன்னுடன் வேலை பார்த்த வாலிபர் ஒருவருடன், ஓடிப்போய் மதுரையில் தங்கி இருப்பதாக தெரியவந்தது.

காதலர்கள் போலீசில் சரண்

இதனிடையே சங்கீதா, தனது புது காதலருடன் அயனாவரம் போலீஸ் நிலையத்தில் ஞாயிறன்று சரண் அடைந்தார். அப்போது சங்கீதா, நான் எனது கணவரை விரும்பி திருமணம் செய்யவில்லை. திருமணத்துக்கு முன்பே என்னுடன் வேலை பார்த்தவரை நான் காதலித்து வந்தேன். எனது காதல் விவகாரத்தை எனது கணவரிடம் சொல்லி விட்டேன். காதல் விவகாரத்தை தெரிந்து கொண்டு, அவர் என்னை வற்புறுத்தி திருமணம் செய்து கொண்டார் என்று போலீசில் தெரிவித்தார்.

மனதை ஒருவருக்கும், உடலை ஒருவருக்கும் பங்கு போட நான் விரும்பவில்லை. மேலும் எத்தனை நாள்தான் போலி வாழ்க்கை வாழ முடியும். அதனால் இதற்கு ஒரு முடிவு கட்ட எனது காதலருடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன் என்றும் கூறினார். இதனையடுத்து சதீஸ் கட்டிய தாலியையும் கழற்றிக் கொடுத்துவிட்டார்.

எங்கிருந்தாலும் வாழ்க

சங்கீதா கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மைதான் என்றும், அவள் சந்தோஷமாக வாழ வழி விடுகிறேன் என்றும், அவள் மீதும், அவளது காதலன் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என்றும், அவர்கள் சந்தோஷமாக வாழட்டும் என்றும், சதீஷ் பெருந்தன்மையோடு போலீசாரிடம் கூறி விட்டார். மனைவி சங்கீதா எங்கிருந்தாலும் வாழ்க, என்று கண்கலங்கியபடி வாழ்த்தி விட்டு, எழுதியும் கொடுத்து விட்டு போய் விட்டார்.
திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் ஒருவர் கணவனை விட்டுவிட்டு காதலனுடன் சென்ற சம்பவம் அயனாவரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Friday, September 28, 2012

சிங்கப்பூர் அரசாங்கம் இந்தியாவிற்கு பூசிய கரி! (தன்வினை தன்னைச் சுடும்)

உயர் கல்வி கற்று நல்ல பணியிலும் அந்தஸ்திலும் இருக்கும் இளைஞர்கள் இந்தியாவில் திருமணம் செய்துகொண்டார்கள் என்ற காரணத்தை வைத்து அவர்கள் மீது  பொய் வரதட்சணை வழக்குப் போட்டு அவர்களை குடும்பத்தோடு கைது செய்து மிரட்டி பணம் பறிக்கும் தொழில் இந்தியாவில் பல ஆண்டுகளாக அமோகமாக நடந்துகொண்டிருக்கிறது என்பது உலகத்தினர் அறிந்த உண்மை.

பொய் வரதட்சணை வழக்குகளை உருவாக்கி பணம் பறிக்கும் சதிவேலைகளில் ஈடுபடும் பெண்களுக்கு  “பெண்கள் பாதுகாப்பு” என்ற பெயரில் காவல்துறை,  நீதித்துறை, அரசாங்க நிர்வாகம் பல வழிகளில் உதவி வருகிறது என்று இந்திய பொய் வரதட்சணை வழக்குகள்  என்ற  இந்த இணைய தளங்களில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


இதுபோன்ற சூழலில் வெளிநாடு வாழ் இளைஞர்களை திருமணம் செய்யும் இந்திய இளம் பெண்கள் பெரும் தொகை தேவைப்பட்டாலோ அல்லது பழைய காதலனுடன் உல்லாச வாழ்க்கையை தொடர நினைத்தாலோ  உடனடியாக இந்தியாவிற்கு தனது குழந்தையுடன் ஓடிவந்து வெளிநாட்டில் இருக்கும் கணவன் மீதும், இந்தியாவில் இருக்கும் கணவனின் குடும்ப உறுப்பினர்கள் அனைவர்மீதும் பொய் வரதட்சணை வழக்கு பதிவு செய்து காவல்துறையின் உதவியுடன் “பிளாக் மெயில்” செய்து வருகிறார்கள் என்பதும் உலகறிந்த உண்மை.

இதன்விளைவாக பல அப்பாவி இந்திய இளைஞர்கள் தங்களது குழந்தையைக் காணமுடியாமல் பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படியே அவர்கள் தங்களது குழந்தையைக் காண இந்தியாவிற்கு வந்தால் பொய் வரதட்சணை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்து பணம் பறிக்க ஒரு பெரிய கூட்டமே சுற்றிக்கொண்டிருக்கிறது.

இந்திய அரசாங்கமோ, காவல்துறையோ, நீதிமன்றங்களோ தந்தையரை ஒரு உயிருள்ள மனிதனாகவே கருதுவதில்லை.  தந்தைக்கும் பாசமுண்டு என்பதை ஏற்க மறுத்து குழந்தையையும், தந்தையும் பிரித்து இப்போது இந்தியாவில் பல குழந்தைகளை “தகப்பன்” இல்லாத குழந்தைகளாக மாற்றிவிட்டார்கள்.   தகப்பன் இல்லாத குழந்தைகளின் தாக்கம் சமுதாயத்தில் எப்படி இருக்கப்போகிறது என்பதை இன்னும் 10 - 20 ஆண்டுகளில் அனைவரும் காணப்போகிறோம்.

வெளிநாடுகளில் இருக்கும் தந்தையரிடமிருந்து பிரிக்கப்பட்ட பல குழந்தைகள் இந்தியாவில் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.  குழந்தைகள் தொடர்பான சர்வதேச ஒப்பந்தத்தில் (Hague Child Abduction Convention) கையெழுத்திடாமல் ஒதுங்கியிருந்து இந்திய தந்தையர்களை புறக்கணித்துவந்த இந்திய சட்டம் இப்போது  இந்தியாவில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு வெளிநாட்டில் தந்தையுடன் இருக்கும் குழந்தையை பெற்றுத்தர முயற்சிசெய்து  தனது முகத்தில் கரிபூசிக்கொண்டது என்று பின்வரும் செய்தி சொல்கிறது! இதற்குப் பெயர்தான் “தன்வினை தன்னைச் சுடும்” என்பதோ!!


மதுரை: போலி ஆவணங்கள் மூலம் பட்டுக்கோட்டை பெண் டாக்டரின் குழந்தையை, சிங்கப்பூருக்கு கணவர் கடத்திய வழக்கில், "சர்வதேச குழந்தைகள் கடத்தல் சம்பந்தமான ஒப்பந்தத்தில், இந்தியா கையெழுத்திடவில்லை. இதனால், உதவி செய்ய முடியாது என சிங்கப்பூர் அரசு தெரிவித்துவிட்டது,' என மத்திய அரசு, மதுரை ஐகோர்ட் கிளையில் பதில் மனு தாக்கல் செய்தது.

பட்டுக்கோட்டை வளவன்புரம் பல் டாக்டர் அன்புக்கரசி தாக்கல் செய்த மனு: எனக்கும், கணவர் மனோகரனுக்கும், 2009 ல் திருமணம் நடந்தது. கணவருடன் சிங்கப்பூர் சென்றேன். அங்கு, மாமியார் கொடுமைப்படுத்தினார். 2010 ஜூலை 8 ல் எனக்கு பட்டுக்கோட்டையில் ஆண் குழந்தை பிறந்தது. சொந்த ஊரில் இருந்த அவரது தாயிடம் காண்பித்து வருவதாகக்கூறி, 2011 மே 30 ல், 11 மாத குழந்தையை மனோகரன் சிங்கப்பூர் கொண்டு சென்றுவிட்டார். குழந்தையை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஏற்கவே மனு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள்: மனுதாரரின் கணவர், சென்னை தலைமை "இமிக்கிரேஷன்' அதிகாரியிடம், போலி ஆவணங்களை சமர்ப்பித்து குழந்தையை சிங்கப்பூர் கொண்டு சென்றுள் ளார். சிங்கப்பூர் கோர்ட் எத்தகைய உத்தரவிட்டாலும், மைனர் குழந்தையை தாயிடம்தான் ஒப்படைக்க வேண்டும். தந்தையுடன், குழந்தை யை வெளியுறவுத்துறை செயலாளர் ஆஜர்படுத்த வேண்டும், என்றனர். மனு நேற்று நீதிபதிகள் கே.சுகுணா, ஆர்.மாலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் கருணாநிதி ஆஜரானார்.

வெளியுறவுத்துறை செயலாளர் சார்பில், மதுரை பாஸ்போர்ட் அலுவலர் சுந்தரராமன் பதில் மனு: சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சக உதவியை நாடினோம். சர்வதேச குழந்தைகள் கடத்தல் சம்பந்தமான ஒப்பந்தத்தில், இந்தியா கையெழுத்திடவில்லை. இதனால், இவ்வழக்கில் உதவி செய்ய முடியாது என சிங்கப்பூர் அரசு தெரிவித்துவிட்டது. சிங்கப்பூரில் இந்திய தூதரகம் மூலம், அங்கு வக்கீலை நியமித்து மனுதாரருக்கு உதவி செய்யலாம் என, அந்நாட்டு மத்திய ஆணையம் தெரிவித்துள்ளது. ஐகோர்ட் கிளை உத்தரவை, சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பினோம். எங்களால் குழந்தையை, இந்தியா கொண்டுவர முடியவில்லை. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
=====
(இந்த பதிவிற்கு தொடர்புடைய சுவையான மற்றொரு செய்தி: பொய் வரதட்சணை வழக்குப்போடும் இளம் மனைவிகளை அனுபவிப்பது யார் தெரியுமா?)

Wednesday, September 26, 2012

இரண்டு பெண்கள் செய்தது என்ன?

பெருங்குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் செய்தது என்ன? செய்தியைப் படித்துப் பாருங்கள்.

சிதம்பரம் குடும்பத்தினர் ஆக்கிரமித்திருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு
 
செப்டம்பர் 26,2012 தினமலர்


திருப்போரூர்: மத்திய நிதி அமைச்சர், சிதம்பரம் குடும்பத்தினர் ஆக்கிரமித்திருந்த, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், முட்டுக்காடு அருகே, கரிக்காட்டு குப்பத்தில், மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் பெயரில் ,10 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்துடன், 4,413 சதுர அடி, அரசு புறம்போக்கு நிலத்தை சேர்த்து, சுற்றுச்சுவர் எழுப்பினர். இது குறித்து, கரிக்காட்டு குப்பத்தை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் செய்தனர். அதை அடுத்து, செங்கல்பட்டு தாசில்தார் இளங்கோ தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள், நேற்று காலை அங்கு சென்றனர். ஜே.சி.பி., இயந்திரம் உதவியுடன் சுற்றுச்சுவரை அகற்றி, அரசு நிலத்தை மீட்டனர். இந்நிலத்தின் மதிப்பு, 50 லட்சம் ரூபாய். சிதம்பரம் குடும்பத்தினரிடமிருந்து, அரசு நிலம் மீட்கப்பட்டது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த3ம்தேதி, கரிக்காட்டு குப்பத்தை சேர்ந்த மீனவர்கள், 100க்கும் மேற்பட்டோர் எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் , நில அபகரிப்பில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்திக் சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

========================================

 
புதுடில்லி: முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டில் தனக்கு கிடைத்த பரிசு பொருள்‌களை வரும் ஜனவரி 13-ம் தேதிக்குள் ஜனாதிபதி மாளிகையில் ஒப்படைக்க வேண்டுமென தகவல் அறியும் சட்ட ஆர்வலர் சுபாஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியாக பிரதீபா பாட்டில் தான் பதவி வகித்த காலத்தில் தனக்கு கிடைத்த பரிசு பொருள்களை ஓய்வு பெற்ற பின்னர் தற்போது வசித்து வரும் அமரவாதிக்கு ‌‌எடுத்து சென்றார். இவ்விவகாரம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளிப்பட்டது. இது குறித்த விவரம் வெளியே தெரிந்த நிலையில் பிரதீபா பாட்டில் கொண்டு சென்ற பரிசு பொருள்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என ஜனாதிபதி மாளி்கை ‌கேட்டுக்கொண்டுள்ளது. பரிசு பொருளை பிரதீபா ‌கொண்டு செல்ல அனுமதித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை மேற்‌‌கொள்ள வேண்டும் என சுபாஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். முன்னதாக அப்துல் கலாம் தான்பதவி வகித்த காலத்தில் தனக்கு கிடைத்த பரிசு பொருள்களை தன்னுடன் ‌எடுத்து சென்றார். ஆனால் அவை அனைத்தும் பயனுள்ள ஆராய்ச்சிக்காகவே பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதியாக பதவிகித்த காலத்தில் பிரதீபா பாட்டில் வெளிநாட்டு பயணம் செய்வதில் அதிகளவில் அரசு பணத்தை செலவிட்டது,மற்றும் ஓய்வு ‌பெற்ற பின்னர் வசிப்பதற்காக கட்டப்ப்டட வீட்டிற்கு அரசுப்பணத்தை செலவிட்டது உட்பட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்குது.



Saturday, September 22, 2012

மேலைநாட்டு கலாச்சாரம் இந்தியாவை அழித்துவிட்டதா!

நேற்று நடந்த பெண் வக்கீல்களின் மாநாட்டில் மேலை நாட்டு கலாச்சார மோகத்தில் இந்தியர்கள் தங்களது காலாச்சாரத்தை மறந்து அழிவுப் பாதையில் செல்கிறார்கள் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பேசியிருக்கிறார்கள்.  அது உண்மையா என்று தெரியவில்லை.  ஆனால் சமீபத்தில் இளம் பெண் ஒருவர் அஸாம் மாநிலத்தில் “பப்புக்கு” சென்று பிறந்த நாள் கொண்டாட்ட களியாட்டங்களில் குதூகலிக்கச் சென்றபோது ஆண் நண்பர்களுடன் நடந்த தகராறுக்கு மத்தி மந்திரி சிதம்பரம் முதல் தேசிய பெண்கள் ஆணையம் வரை கண்டனம் தெரிவித்தார்கள்.  இது இந்திய கலாச்சாரத்தின் எந்தப் பக்கம் என்று தெரியவில்லை!

நீதிபதிகள் நாட்டின் கலாச்சாரத்தைப் பற்றி கவலைப்படுகிறார்கள்.  ஆட்சியாளர்கள் மக்கள் எக்கேடாவது கெட்டுப் போகட்டும். பல குடிகளை கெடுத்து தன்னை வளமாக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இந்தியாவிற்கு பொருந்தாத பல தவறான  சட்டங்களை இயற்றி வருகிறார்கள் என்று சமீபத்தில் வந்த பல செய்திகள் மூலம் அறிந்து கொள்ளலாம். 

இப்படி கலாச்சாரத்தைப் பற்றி கவலைப்படுபவர்கள் பொய் வரதட்சணை வழக்குகள் மூலம் நீதிமன்றங்களை தவறாகப் பயன்படுத்தி குடும்பங்களை சிதைக்கும் பெண்களுக்கு தண்டனை கொடுத்திருக்கிறார்களா? அல்லது பொய் வரதட்சணை வழக்கு மூலம் குடும்பங்களை சிதைக்கும் காவல் அதிகாரிகள் எத்தனை பேருக்கு தண்டனை அளித்திருப்பார்கள்?   தெரியவில்லை.

குடும்பப் பிரச்சனைகளில் பொய் வழக்கு மூலம் பழிவாங்கத் துடிக்கும் இளம்பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் இந்திய நீதிமன்றங்கள் எப்படி தீர்ப்பு எழுதுகின்றன என்று நேரம் கிடைக்கும்போது படித்துப் பாருங்கள். படிப்பது ராமாயணம், இடிப்பது ராமன் கோயில் என்ற பழமொழி நினைவிற்கு வரும்!
 

கோவை: மேற்கத்திய கலாசாரம் சீரழிக்கிறது என்று, பெண் வக்கீல்களின் முதல் மாநில மாநாட்டில், கருத்து தெரிவிக்கப்பட்டது.

கோவை பெண் வக்கீல்கள் சங்கம், தமிழ்நாடு மகளிர் வக்கீல்கள் சங்க கூட்டமைப்பு ஆகியன சார்பில்,"முதல் மாநில மாநாடு,' கோவையில், நேற்று நடந்தது. கோவையில், ஐ.எம்.ஏ.,ஹாலில் நடந்த மாநாட்டுக்கு, தமிழ்நாடு பெண் வக்கீல்கள் சங்க கூட்டமைப்புத் தலைவர் சாந்தகுமாரி, தலைமை தாங்கினார்.

வாதம் தான் பலம்: சிறப்பு அழைப்பாளர் ஐகோர்ட் நீதிபதி விமலா பேசியதாவது: நீதிமன்றங்களில், பெண்களுக்கே உரித்த போராட்ட குணம், ஒரு சில வக்கீல்களிடம் பார்க்க முடிகிறது. இதனால், அவர்களுக்கு, தங்களது வழக்குகளில் வெற்றி பெற வேண்டும் என்ற, எண்ணம் ஏற்படுகிறது. தற்போது, மேலை நாடுகளில், வழக்குளை வீட்டில் இருந்தே தாக்கல் செய்வது, பதில் தெரிவிப்பது, வாதிடுவது ஆகிய நடைமுறைகள், வீடியோ கான்பரன்சிங் மூலம் நடக்கின்றன. வெளியில் செல்ல பயந்த பெண்கள், வேலையில் இருப்பவர்கள், இம்முறையை பயன்படுத்த, உரிமை அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் அமலுக்கு வந்துள்ள இம்முறை, நம் நாட்டுக்கு வர, வெகு தூரமில்லை. பெண்கள் வீட்டில் இருந்தபடியே, சாதிக்கலாம்; சாதிக்க முடியும். மேலை நாட்டு கலாசாரத்தை பின்பற்றுவதில், ஆர்வம் காட்டி வருகிறோம். அதே சமயம்,மேல்நாட்டவர்கள் நம்நாட்டுக்கு வந்து, நம்மிடையே உள்ள நல்லொழுக்கத்தை கற்றுக் கொண்டு, அவர்களின் வாழ்க்கையை, தற்சமயம் வளமாக்கி கொண்டுள்ளனர். ஆனால், நாம் மேல்நாட்டு கலாசாரத்தை பின்பற்றி, சீரழிந்து கொண்டுள்ளோம். இதை தடுக்க வேண்டும். அறியாமை, கிராமங்களில் அதிகம் காணப்படுகிறது; நகரங்களில், வெகுவாக குறைந்துள்ளது. வாதம் தான், வழக்குகளை வெற்றிக்கு இட்டுச் செல்லும். எனவே, வழக்குகளை புரிந்து கொண்டு, வாதிட்டு வெற்றி பெற வேண்டும், என்றார்.

ஐகோர்ட் நீதிபதி ஜோதிமணி பேசும்போது,"வக்கீல் தொழிலில், வெற்றி பெறுவது அவரவர் மனத்தின்மையை பொருத்தது. வழக்கில் சொல்லப்பட்டிருப்பதை, நன்றாக புரிந்து கொண்டு,வாதிட வேண்டும். வாதம், வழக்கில் மிக முக்கியமான பகுதி; இதில், நம் திறமையை காட்டினால் நிச்சயம் வெற்றி பெறலாம். வேகமாக பரவிவரும் மேற்கத்திய கலாசாரம், கடவுள் நம்பிக்கையை குறைக்கிறது. இதனால், நம்மால் எதிலும் நிலைத்து நிற்க முடிவதில்லை,' என்றார்.

அகில இந்தியா பெண் வக்கீல்கள் சங்கத் தலைவர் ஆமீ யாஜ்னிக், ஐகோர்ட் சீனியர் பெண் வக்கீல் ஹேமா சம்பத், கோவை பார்கவுன்சில் தலைவர் நந்தகுமார், பெண்களுக்கான மாநில கமிஷன் சேர்மன் சரஸ்வதி ரங்கசாமி, மாவட்ட நீதிபதி ஆதிநாதன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். தமிழ்நாடு பெண் வக்கீல்கள் சங்க கூட்டமைப்பின் செயலாளர் நிஷாபானு நன்றி கூறினார். கோவை மகளிர் வக்கீல்கள் சங்கத் தலைவர் தேன்மொழி வரவேற்றார். பிற்பகலில், "மீடியேசனில் பெண் வக்கீல்கள்' என்ற தலைப்பில், சென்னை ஐகோர்ட் வக்கீல் உமா ராமநாதன், பாரத் சக்கரவர்த்தி ஆகியோரும், "குழந்தைகளின் உரிமைகள்' பற்றி, நீதிபதி அலமேலு நடராஜன், குழந்தைகள் நல கமிட்டியின் முன்னாள் தலைவர் மனோரமா, சி.பி.ஐ.,சிறப்பு அரசு வக்கீல் கீதா ராமசேஷன் ஆகியோரும் பேசினர்.

Sunday, September 02, 2012

குழந்தைகளை கொல்லும் புதிய இந்திய காதல் கலாச்சாரம்

இந்தியாவில் சமீப காலமாக காதலுக்காக கூலிப்படை வைத்து கணவனை கொல்வது, கள்ளக் காதலனுடன் சேர்ந்துகொண்டு திட்டம் தீட்டி கணவனை கொல்வது, கள்ளக் காதலுக்கு இடையூறாக இருக்கும் வயதான மாமனார், மாமியார், குழந்தைகள் போன்றவர்களை ஈவு இரக்கமின்றி கொல்வது போன்ற கொடூர செயல்களில் பல இளம் பெண்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்று தினமும் வரும் செய்திகள் மூலம் அறியலாம்.

இதுபோன்ற காதலில் ஈடுபடும் பெண்கள் ஏன் இப்படிக் கொல்கிறார்கள் என்று யோசித்தால் இந்திய பெண்கள் பாதுகாப்பு சட்டத்தைப் பற்றிய போதிய விழிப்புணர்ச்சி இல்லாததால்தான் இவர்கள் தங்களது காதலை மறைக்க இந்த கொடூரமான செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று தெரிகிறது.

இந்திய கள்ளக்காதல் சட்டப்படி மனைவி கள்ளக்காதலில் ஈடுபடுவதை கணவன் கையும் கலவுமாக பிடித்தாலும் மனைவியை சட்டத்தின் முன்னால் நிறுத்தி தண்டிக்க முடியாது என்ற இந்திய பெண்கள் பாதுகாப்பு சட்டம் பற்றி பல அப்பாவி இளம் பெண்களுக்கு போதிய விழிப்புணர்ச்சி இல்லை.

IPC497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man , such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.

அதுபோலவே தனது கள்ளக்காதலை கண்டுபிடித்துவிடும் கணவன் மற்றும் அவனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மீது பொய் வரதட்சணைக் கொடுமை வழக்குத் தொடர்ந்தால் கணவனையும் அவனது குடும்பத்தையும் எளிதாக சிறையில் அடைத்துவிடலாம். இதுதான் பலகாலமாக படித்த பெண்கள் பயன்படுத்தி வரும் நடைமுறை. இந்த வழக்கம் பற்றி இன்னும் பல இளம் பெண்களுக்கு சரியான விழிப்புணர்ச்சி இல்லை!

மனைவி கள்ளக்காதலில் ஈடுபட்டால் கணவனால் அந்த மனைவி மீது எந்த வித குற்றவழக்கையும் தொடரமுடியாது. ஆனால் விவாகரத்து கோரலாம். அதற்கும் கணவன்தான் அனைத்துவித ஆதாரங்களையும் திரட்டி நீதிமன்றத்தில் மனைவியின் கள்ளக்காதலை நிரூபிக்க வேண்டும். நீதிமன்றங்களில் பொதுவாக கணவன் தரப்பு வாதத்தை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் கணவன் நடமாடும் நடைபிணமாக வாழவேண்டியதுதான். வேறு வழியே இல்லை என்று இந்த வீடியோவை முழுதுமாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.



ஆனால் கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவி கணவன் மீதும், அவனது குடும்பத்தார் மீதும் பொய்யான வரதட்சணைக் கொடுமை வழக்குத் தொடர்ந்தால் நீதிமன்றத்தில் கணவனும் அவனது குடும்பத்தாரும்தான் தாங்கள் எந்தவித வரதட்சணைக் கொடுமையும் செய்யவில்லை, தாங்கள் நிரபராதி என்று நிரூபித்துக் கொள்ள வேண்டும். இந்த சட்டம் பல பெண்களுக்கு கள்ளக் காதலை வளர்த்துக் கொள்ள மிகவும் சாதகமாக இருந்து வருகிறது என்று உலகத்திற்கு தெரியும்!

THE DOWRY PROHIBITION ACT, 1961

(Act No. 28 of 1961)

8-A. Burden of proof in certain cases.- Where any person is prosecuted for taking or abetting the taking of any dowry under Sec. 3, or the demanding of dowry under Sec.4, the burden of proving that he had not committed an offence under those sections shall be on him.
இப்படி இந்திய சட்டம் அழகாக இளம் மனைவியர் தங்கள் காதலை வளர்த்துக்கொள்ள பாதுகாப்பு அளிக்கும்போது எதற்காக இந்த இளம் மனைவியர் கணவனையும், குழந்தைகளையும் கொன்று தங்கள் காதலை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று யோசித்தால் அதற்குப்பின்னால் இந்த அப்பாவிப் பெண்களின் அறியாமைதான் காரணம் என்று தெரிகிறது. அதனால் போலியான பெண்ணியவாதிகள் இதுபோன்ற சட்ட விழிப்புணர்வை இளம் பெண்களுக்கு ஏற்படுத்தி குறைந்தபட்சம் குழந்தைகளின் உயிரையாவது காப்பாற்ற முயற்சி செய்யலாம்.


ஓசூர் : கள்ளக்காதல் விவகாரத்தில், அண்ணியும், அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து, பள்ளி மாணவனை வெட்டி படுகொலை செய்தது, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

தர்மபுரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த கொத்தூரை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி திம்மராயப்பா. இவரின் கடைசி மகன் சதீஷ்,7; இரண்டாம் வகுப்பு மாணவன். நேற்று முன்தினம் மாலை, பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் விளையாட சென்றான். அதன்பின், வீடு திரும்பவில்லை. இரவு, 9.00 மணியளவில், திம்மராயப்பா வீட்டிற்கு பின்புறம், விவசாய தோட்டத்தில் கிடந்த சாக்கு மூட்டையில், சிறுவன் சதீஷ், வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், பிணமாக கிடந்தான்.

உத்தனப்பள்ளி போலீசார், சிறுவன் உடலை கைப்பற்றி விசாரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய், கொலையான சிறுவனின் அண்ணன் சங்கர் வீட்டிற்கு அருகே போய் நின்றது.

இதனால், போலீசார், சிறுவனின் அண்ணி கலாவை விசாரித்தனர். விசாரணையில், முன்னுக்கு பின் முரணான தகவலை அவர் தெரிவித்ததால், அவர் மீது சந்தேகம் எழுந்தது. தொடர் விசாரணையில், கொலை சம்பவத்திற்கான முடிச்சு அவிழ்ந்தது.

போலீஸ் விசாரணையில் தெரியவந்த தகவல்: சதீஷின் அண்ணன் சங்கரின் மனைவி கலாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த புட்டப்பாவுக்கும், கள்ளக்காதல் இருந்துள்ளது. இருவரும், அவ்வப்போது தனிமையில் சந்தித்து, உல்லாசமாக இருந்துள்ளனர். நேற்று முன்தினம், கலா வீட்டில், புட்டப்பா இருந்த போது, சதீஷ் அவர்களை பார்த்து விட்டான். இது பற்றி, அண்ணணிடம் கூறுவேன் என்று, சதீஷ் கூறியதால், ஆத்திரமடைந்த புட்டப்பாவும், கலாவும் சேர்ந்து, சிறுவனை அரிவாளால் வெட்டி, கொலை செய்தனர்.

கொலையை மறைக்க, சதீஷ் உடலை சாக்கு மூட்டையில் கட்டி, அருகேயுள்ள விவசாய தோட்டத்தில் வீசியுள்ளனர். அதன்பின் கலா, குடும்பத்தினருடன் சேர்ந்து, தேடுவது போல் நாடகமாடியுள்ளார் என்பது, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கலாவையும், புட்டப்பாவையும் போலீசார் கைது செய்தனர்.

Wednesday, August 29, 2012

இவர் நேர்மையான பெண்ணா?

குடும்பத்தினரின் விருப்பத்திற்கு எதிராக காதலிக்கும் இளம் பெண்கள் பொதுவாக திருமணம் வரை வாயை பொத்திக்கொண்டு இருந்து விட்டு பிறகு திருமணம் ஆனவுடன் கணவனிடமிருந்து சற்று தள்ளியே இருப்பார்கள். தக்க சமயம் பார்த்து கணவன் மற்றும் அவனது குடும்பத்தார் மீது பொய் வரதட்சணை வழக்கு பதிவு செய்து விட்டு பழைய காதலை புதுப்பிக்க ஆரம்பித்து விடுவார்கள். இது நகரத்தில் படித்த பெண்கள் கையாளும் தந்திரம்.

இதற்கு அடுத்த நிலையில் இருக்கும் பெண்கள் காதலனுடன் சேர்ந்துகொண்டு கூலிப்படை அமைத்து கணவனை கொலை செய்து விட்டு அப்பாவி போல பழைய காதலை சந்தோஷமாக வளர்க்க ஆரம்பித்துவிடுவார்கள். உதாரணத்திற்கு இன்று வந்துள்ள செய்தி இது: தங்கச்சி, கள்ளக்காதலனுடன் சேர்ந்து புருஷன் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற மனைவி! (One India Tamil 30/08/2012)

இதுதான் இந்தியாவின் தேசிய நடைமுறை. இதற்கு பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள், வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் பல ஆண்டுகளாக உதவி வருகின்றன என்று இப்போது எல்லா இளம் பெண்களுக்கும் தெரிந்திருக்கிறது.

இன்றைய செய்தியில் காதலனை கைப்பிடிக்க நினைத்த மணப்பெண் திருமணத்தன்று மாலையை வீசியெறிந்து காவல் நிலையத்தில் பஞ்சாயத்திற்கு சென்றிருக்கிறார். கணவன் வீட்டாருக்கு திருமண செலவை திருப்பித் தருவதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். இவரை நேர்மையானவர் என்று சொல்லலாமா?

திருமணத்தன்று காவல் நிலையத்திற்கு சென்ற பெண் திருமணத்திற்கு முன்பே சென்று தனது காதலை வளர்த்திருந்தால் அனாவசியமாக ஒரு அப்பாவி ஆண் மணமேடையில் அவமானப்பட்டிருக்க வேண்டியதில்லை. ஆனால் இந்திய சட்டங்களின்படி இளம் பெண்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம். இதே சம்பவத்தை ஒரு மணமகன் செய்திருந்தால் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்தியதாக அவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும். இதுதான் இந்திய திருமண நடைமுறை.

தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் ஓட்டம்: காதலரை கை பிடிப்பதில் உறுதி
ஆகஸ்ட் 30,2012 தினமலர்



பெரியகுளம்: தேனி பெரியகுளத்தில், காதலித்தவரை திருமணம் செய்ய முடியாததால், மணமேடை வரை வந்த பட்டதாரி பெண், மாலையை வீசி விட்டு ஓட்டம் பிடித்தார்.

பெரியகுளம் அழகர்சாமிபுரத்தை சேர்ந்தவர் சந்திரசேகன், 39; பி.காம்., பட்டதாரி. இவருக்கும், மதுரை கே.புதூர், பாரதியார் நகரைச் சேர்ந்த பாண்டிமீனாவுக்கும், 28, திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. (பாண்டிமீனாவின் தந்தை கார்த்திகேயன், சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்). பெரியகுளத்தில் நேற்று காலை 6 மணிக்கு திருமணம் நடப்பதாக இருந்தது.

மணமக்கள் மணமேடையில் அமர்ந்திருந்த நிலையில் தாலி கொண்டுவரப்பட்டது. ஆவேசமாக எழுந்த பாண்டிமீனா, மாலையை கழற்றி வீசி, "எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை' என்றார். உறவினர்கள், பாண்டிமீனாவுடன், பேசியும் பலன் இல்லை. பின், தாய் கவுசல்யாராணியுடன், மண்டபத்தில் இருந்து, தென்கரை போலீஸ் ஸ்டேஷன் சென்று, இன்ஸ்பெக்டர் இளங்கோவிடம், "தனக்கு திருமணம் பிடிக்கவில்லை,' என்றார்.

மணமகனின் தந்தை நாகராஜன், "பாண்டிமீனா ஏமாற்றிவிட்டார்' என, போலீசில் புகார் அளித்தார். போலீசார், மணமகளிடம் பேச்சு நடத்தினர்.

பாண்டிமீனா போலீசாரிடம் எழுதிக்கொடுத்த விளக்கம்: மதுரையைச் சேர்ந்த ஒருவரை காதலித்து வருகிறேன். இது குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்தேன். எனது பேச்சை கேட்காமல், திருமணம் பேசி முடித்தனர். மணமகன் வீட்டார், வரதட்சணை பெறவில்லை. "மண்டபச்செலவு உட்பட ஒரு லட்சம் ரூபாய் வேண்டும்,' என, மணமகன் வீட்டார் கேட்டுள்ளனர். எனது பெரியம்மா வத்சலகுமாரி, 2013 ஜூனில் பணி ஓய்வு பெறுகிறார். அதில் இருந்து 30 நாட்களில், மணமகன் வீட்டாருக்கு பணம் கொடுத்துவிடுகிறோம், என தெரிவித்து உள்ளார்.

Saturday, August 25, 2012

“டேட்டிங்” செய்யும் விடலைப் பையன்களுக்கு புழல் சிறை காத்திருக்கிறது!

வயது வந்த பெண் தன் விருப்பப்படி யாருடன் வேண்டுமானாலும் திருமணம் செய்யாமல் உறவு கொள்ளலாம் என்று இந்திய உச்ச நீதிமன்றம் கூறியுள்ள வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பில் உறவு கொண்ட பிறகு காதல் உறவை பையன் உடைத்துக் கொண்டால் என்ன செய்வது என்று சரியாகக் கூறாததால் “டேட்டிங்” செய்யும் விடலைப் பையன்கள் ஏதோ காரணத்தால் உறவை முறித்துக் கொண்டால் புழல் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று பின்வரும் செய்தியில் தெரிகிறது.
IN THE SUPREME COURT OF INDIA
CRIMINAL APPELLATE JURISDICTION
CRIMINAL APPEAL NO. 913 of 2010
[Arising out of SLP (Crl.) No. 4010 of 2008]

S. Khushboo ... Appellant
Versus
Kanniammal & Anr. ... Respondents

21. While it is true that the mainstream view in our society is that sexual contact should take place only between marital partners, there is no statutory offence that takes place when adults willingly engage in sexual relations outside the marital setting, with the exception of `adultery' as defined under Section 497 IPC. At this juncture, we may refer to the decision given by this Court in Lata Singh Vs. State of U.P. & Anr., AIR 2006 SC 2522, wherein it was observed that a live-in relationship between two consenting adults of heterogenic sex does not amount to any offence (with the obvious exception of `adultery'), even though it may be perceived as immoral. A major girl is free to marry anyone she likes or "live with anyone she likes".

பெண்ணை ஏமாற்றிய பொறியாளர் கைது
ஆகஸ்ட் 26,2012 தினமலர்

அண்ணாநகர்: திருமண ஆசை காட்டி பெண் மென்பொருள் பொறியாளரை, ஏமாற்றிய மென்பொருள் பொறியாளர் சிறையில் அடைக்கப்பட்டார்.

நீலகிரியைச் சேர்ந்தவர் சுகன்யா, 25 (பெயர் மாற்றப்பட்டுள்ளது); மென் பொருள் பொறியாளர். இவர் நீலகிரி பகுதியில் உள்ள, பள்ளி ஒன்றில் படித்த போது, அதே பள்ளியில் படித்தவர் நீலகிரி, அரவங்காடு பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் மகன் கார்த்திக், 28; மென் பொருள் பொறியாளர்.

நட்பு: சுகன்யா, கார்த்திக்கிற்கும் இடையே இருந்த நட்பு, கடந்த 2007ம் ஆண்டு இறுதியிலிருந்து காதலாக மாறியது. இந்நிலையில், 2008ம் ஆண்டு சுகன்யாவிற்கு பெங்களூரிலுள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணி கிடைத்தது. பணி கிடைக்காமல் இருந்த கார்த்திக், நீலகிரியிலிருந்து அடிக்கடி பெங்களூரு சென்று, சுகன்யாவுடனான தன் காதலை வளர்த்து வந்தார். இச்சூழலில், கடந்த ஆண்டு மே மாதம் சென்னை, காரம்பாக்கத்திலுள்ள தனியார் மென்பொருள்நிறுவனத்தில் கார்த்திக்கிற்கு பணி கிடைத்ததையடுத்து, வாரம்தோறும் சுகன்யா, சென்னை, முகப்பேர் ஏரித்திட்டம் பகுதியிலுள்ள தன் உறவினர் வீட்டிற்கு வந்து தங்கி, கார்த்திக்கை சந்தித்து வந்தார்.

ஜாதகம்: சுகன்யாவை திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி, அவருடன் கார்த்திக் 2008ம் ஆண்டிலிருந்து மூன்றரை ஆண்டுகள் உடலுறவு கொண்டு வந்தார். இந்நிலையில் கார்த்திக், "உனக்கும், எனக்கும் ஜாதகப் பொருத்தம் இல்லை' என்று சுகன்யாவிடம் கூறி, கடந்த ஓராண்டாக திருமணம் செய்ய மறுத்து வந்துள்ளார். இதுகுறித்து விசாரித்த திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், திருமண ஆசைக் காட்டி சுகன்யாவை மோசம் செய்த கார்த்திக்கை கைது செய்து, நேற்று எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில்அடைத்தனர்.

====

பையன்கள் படிக்கவேண்டிய மற்றொரு பதிவு

திருமணத்திற்கு முன்பே “அதுவா”? - ஆபத்து காத்திருக்கிறது!




Saturday, August 18, 2012

வெளிநாடுவாழ் கணவர்களே உங்களது பணமும், மனைவியும் இந்தியாவில் பாதுகாப்பாக இருக்கிறார்களா?

இன்றைய சூழலில் உறவுகளை பிரிந்து உழைப்பதற்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் கணவர்களின் வாழ்க்கைதான் இந்திய சட்டங்கள் மூலம் மிகுந்த கேள்விகுறியாகியிருக்கிறது.

கள்ளக்காதலை தட்டிக் கேட்கும் கணவனை பொய் வரதட்சணை வழக்கில் குடும்பத்தோடு சிறையில் அடைப்பது அல்லது கள்ளக்காதலர்களுடன் சேர்ந்துகொண்டு கணவனை கொலைசெய்வது. இந்த இரண்டும் இப்போது சர்வ சாதாரணமாக இந்தியாவில் நடந்துகொண்டிருக்கிறது.

இந்த இரண்டுவகை செயலுக்கும் “பெண்கள் பாதுகாப்பு” என்ற பெயரில் இந்திய சட்டங்கள் தூண்டுகோலாகவும், சட்டங்களை செயல்படுத்துபவர்கள் பக்க பலமாகவும் இருக்கிறார்கள் என்பது உலகறிந்த உண்மை. இவற்றால் சீரழிந்த ஒரு இந்தியக் குடும்பத்தின் கதை இன்றைய செய்தியில் வந்திருக்கிறது.

மதகுபட்டி பெண் கொலையில் கள்ளக்காதலனுக்கு தொடர்பு?
ஆகஸ்ட் 18,2012 தினமலர்

சிவகங்கை : சிவகங்கை மதகுபட்டி அருகே, கும்பலால் பெண் குத்திக் கொல்லப்பட்ட வழக்கில், கள்ளக்காதலனுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற அடிப்படையில், தனிப்படையினர் விசாரிக்கின்றனர்.

சிவகங்கை ஏரியூரை சேர்ந்தவர் கலைச்செல்வன்; மனைவி ஜெகதீஸ்வரி, 40. கலைச்செல்வன், 20 ஆண்டுகளாக வெளிநாட்டில் பணி செய்தார்; மனைவிக்கு அனுப்பிய பணத்திற்கு சரியான கணக்கு இல்லாததால், இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டு, பிரிந்தனர்.

மதுரையில் தங்கி, மதகுபட்டியில் "சீட்டு' நடத்திய ஜெகதீஸ்வரி, ஆக.,14 ல், உதவியாளர் சித்ராவுடன் இருசக்கர வாகனத்தில் சென்றார்; அலவாக்கோட்டை அருகில் மறித்த கும்பல், கத்தியால் குத்தியதில், ஜெகதீஸ்வரி இறந்தார். சித்ரா சிகிச்சையில் உள்ளார். இரண்டு தனிப்படையினர், மதுரையில் விசாரிக்கின்றனர்.

ஜெகதீஸ்வரிக்கு 3 பேருடன் கள்ளத் தொடர்பு இருந்ததும், குடிப் பழக்கத்திற்கு அடிமையானதும், விசாரணையில் தெரிந்தது. கள்ளத்தொடர்பு போட்டியில், ஜெகதீஸ்வரியை கொலை செய்திருக்கலாம் என, போலீசார் விசாரிக்கின்றனர். கணவர் தூண்டுதலில் கொலை செய்தார்களா எனவும் சந்தேகிக்கின்றனர். அவரது ஒரே மகள் விசாரணைக்கு ஒத்துழைத்தால் தான், உண்மை தெரியவரும்.

Thursday, August 16, 2012

இந்தியாவில் உண்மை பேசும் பெண்ணை தண்டிப்பார்களா?

கடந்த இரு நாட்களாக பரப்பான செய்தியாக இருப்பது நீதித்துறையை விமர்சித்து உண்மையை பேசிய வீரமான மேற்கு வங்க முதல்வரைப் பற்றிய செய்தியாக இருக்கிறது.

“இன்று ஒரு சில தீர்ப்புகள், விலை கொடுத்து வாங்கப்படுகின்றன; பணம் வாங்கிக் கொண்டு, பணம் கொடுத்தவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்படுகிறது”. நீதித்துறையை விமர்சிக்கும் வகையிலான, மம்தாவின் இந்தப் பேச்சுக்கு, பல தரப்பிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மம்தாவின் இந்த உண்மையான வெளிப்படையான வார்த்தைகள் எந்த அளவிற்கு உண்மை என்று பொதுமக்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் உண்மையை ஏற்றுக்கொள்ள மனப்பக்குவம் இல்லாத சிலர் குரல் கொடுத்திருக்கிறார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் கடந்த 2010ம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியே இந்திய நீதித்துறையைப் பற்றி மிகவும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். மக்கள் நீதித்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டனர் என்று கூறியிருக்கிறார். அதனால் மம்தா கூறியிருப்பது உச்ச நீதிமன்ற நீதிபதியால் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு விஷயம். இதை கல்கத்தா உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்காக்க முயற்சி செய்வது மம்மதாவின் கூற்று முற்றிலும் உண்மை என்பதை மற்றொரு முறை நிரூபிக்கிறது!
=====

நீதித்துறையை விமர்சித்த மம்தா பானர்ஜி மீது அவதூறு வழக்கு
ஆகஸ்ட் 16,2012 தினமலர்

கோல்கட்டா: "நீதித்துறையை விமர்சித்த, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது, கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக்கோரி, கோல்கட்டா ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், "மம்தாவின் பேச்சு தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திகள் உண்மையானவையா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்' என, இரண்டு "டிவி' சேனல்களுக்கும், பத்திரிகைகளுக்கும் உத்தரவிட்டனர்.

மேற்கு வங்க சட்டசபையின் ஆண்டு விழாவையொட்டி, கோல்கட்டாவில், நடந்த விழாவில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, "இன்று ஒரு சில தீர்ப்புகள், விலை கொடுத்து வாங்கப்படுகின்றன; பணம் வாங்கிக் கொண்டு, பணம் கொடுத்தவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்படுகிறது' என்று தெரிவித்தார். நீதித்துறையை விமர்சிக்கும் வகையிலான, மம்தாவின் இந்தப் பேச்சுக்கு, பல தரப்பிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

"சிடி' ஒப்படைப்பு: இதையடுத்து, மம்தா மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி, மூத்த வழக்கறிஞரான பிகாஷ் பட்டாச்சார்யா என்பவரும் மற்றும் பலரும், கோல்கட்டா ஐகோர்ட்டில், மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுவை, நீதிபதிகள் சென்குப்தா மற்றும் மண்டல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், நேற்று விசாரித்தது. அப்போது, பிகாஷ் பட்டாச்சார்யா, ""மம்தாவிற்கு எதிராக, கோர்ட் தானாகவே முன்வந்து, அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், மம்தா பேசியுள்ளார்,'' என்றார். அத்துடன், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட மம்தாவின் பேச்சுக்கள் அடங்கிய இரண்டு"சிடி'க்கள் மற்றும் அவரின் பேச்சுக்கள் வெளியான இரண்டு பத்திரிகைகளின் பிரதிகளையும் நீதிபதிகளிடம் ஒப்படைத்தார். இதையடுத்து, மம்தாவின் பேச்சை ஒளிபரப்பிய இரண்டு "டிவி' சேனல்களும் மற்றும் அவரின் பேச்சை செய்தியாக வெளியிட்ட இரண்டு ஆங்கில பத்திரிகைகளும், "அந்தப் பேச்சுக்கள் உண்மையானவையா என்பதற்கு, மூன்று வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கிடையில், நீதித்துறையை விமர்சிக்கும் வகையில் பேசிய, மம்தா பானர்ஜி மீது, கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி, சுப்ரீம் கோர்ட்டிலும் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

புகழுக்கு களங்கம்: ஜம்மு - காஷ்மீர் சிறுத்தைகள் கட்சி நிறுவனரும், மூத்த வழக்கறிஞருமான பீம்சிங், இந்த மனுவை தாக்கல் செய்தார். மனுவில், "மம்தாவின் பேச்சு, நீதித்துறை மீது, மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை சீர்குலைப்பதாக உள்ளது. நீதி முறையின் நேர்மை மற்றும் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது' என தெரிவித்துஇருந்தார்.

"மீடியாக்கள் திரித்து வெளியிட்டு விட்டன': மேற்கு வங்க மாநில தலைமைச் செயலகத்தில், நேற்று நிருபர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி கூறியதாவது: "நீதித்துறை நியாயமுறையில் செயல்பட வேண்டும்' என்ற அர்த்தத்தில், நான் சில கருத்துகளை தெரிவித்தேன். அதை சில மீடியாக்கள் திரித்து வெளியிட்டு விட்டன. நாட்டில் நல்லவர்களும் உள்ளனர்; கெட்டவர்களும் உள்ளனர். அரசியல்வாதிகள் எல்லாரும் ஊழல்வாதிகள் என்பது உண்மையல்ல. அதுபோலத்தான், அனைத்து நீதிபதிகளும் ஊழல்வாதிகள் என, நான் ஒரு போதும் சொல்லவில்லை. நீதித்துறையிலும், அரசியலிலும், நிர்வாகத்திலும், சுதந்திரத்திற்குப் பின், சீர்திருத்தங்கள் மேற் கொள்ளப் படவில்லை. அந்த நிலை மாற வேண்டும். இவற்றில் சீர்திருத்தங்கள் மேற் கொள்ளப்பட வேண்டும். தேர்தலில் போட்டியிடுவோருக்கு அரசே நிதி அளிக்க வேண்டும். நான் சொல்லும் இவை எல்லாம் தவறு எனில், ஆயிரம் முறை மீண்டும், மீண்டும் சொல்வேன். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.


சென்னை: சென்னை ஜுடிசியல் அகடமியில் ‘சமரசம் மற்றும் மத்தியஸ்தம் ஆகியவற்றின் அடுத்த கட்டம்’ என்ற கருத்தரங்கம் நேற்று நடந்தது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் தலைமை வகித்தார். இதில், உச்ச நீதிமன்ற நீதிபதி ரவீந்திரன் பேசியதாவது:

சமரசம் மற்றும் மத்தியஸ்தம் தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பந்தங்களில் பேசி விட்டோம். இந்த நடைமுறைகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் தற்போதைய தேவையாக உள்ளது. இதற்காக நீதிபதிகள் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். உரிமை யியல் நடைமுறைச் சட்டம் (சிவில் சட்டம்) மக்களுக்கு எவ்வளவு தூரம் பயன் தருகிறது என்பதை பார்க்க வேண்டும்.

பொதுமக்களுக்கு நீதித்துறை மீது பல தவறான எண்ணங்கள் ஏற்பட்டுள்ளன. வழக்கு விசாரணையில் தாமதம், வளைந்து கொடுக்க முடியாத நிலை, எதிர்பாராத தீர்வு, அதிகமான வழக்குச் செலவு, உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதம், அசாதாரணமான சூழ்நிலை இவைகள் தான் நீதித்துறை மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை குறைத்து வருகிறது.
குற்ற வழக்குகளில் மேல்முறையீடு விசாரணை முடிவதற்கு அதிக காலதாமதமாகிறது. ஒரு மேல்முறையீட்டு வழக்கு முடிவதற்கு அலகாபாத்தில் 20 முதல் 22 ஆண்டுகளும், பஞ்சாப்பில் 18 ஆண்டுகளும் ஆகின்றன. ஒரு வழக்கு வெற்றி பெற்றால்கூட அதற்கு தடைபெறும் நிலை உள் ளது.

இதுபோன்ற நிலை இருந்தால், மக்களுக்கு நீதிமன்றங்களின் மேல் எப்படி நம்பிக்கை ஏற்படும். நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் பல பிரச்னைகள். வழக்கு தொடர்ந்தவர் வக்கீல்களிடமும், அவர்களின் குமாஸ்தாக்களிடமும் சிக்கி தவிக்கிறார். நட்பு ரீதியான அணுகுமுறை நீதிபதிகளிடமும் இல்லை; வக்கீல்களிடமும் இல்லை.

குற்றவியல் வக்கீலிடம் சிவில் வழக்கு சென்றால். அந்த வழக்கு எப்படியாவது குற்ற வழக்காக மாற்றப்படும் நிலை உள்ளது. தேர்தல் வழக்கு கள், மோசடி, நிர்வாக சீரழிவு மற்றும் கொடிய குற்றங்கள் தொடர்பான வழக்குகளை மட்டுமே நீதிமன்றத்தில் விசாரிக்கலாம். இதர வழக்குகளுக்கு மாற்று முறை தீர்வையே நாட வேண்டும்.

மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்), சமரசம் மற்றும் மத்தியஸ்த மையங்களை அணுகலாம். குடும்பநல வழக்குகள், செக் மோசடி வழக்குகள், கடன் உறுதி பத்திரம் வழக்குகள் ஆகிய வழக்குகளை நீதிபதிகள் விசாரிக்கக் கூடாது. நீதிபதிகள் அறுவைச் சிகிச்சை தெரிந்தவர்களை போன்றவர் கள். அவர்கள் அறுவைச் சிகிச்சைதான் செய்ய வேண்டுமே தவிர, மருந்து சீட்டு எழுதித் தரும் வேலையை செய்யக் கூடாது.

தற்போது, உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் 95 சதவீத வழக்குகள், முன்சீப் நீதிமன்றங்களில் கூட விசாரிக்க லாயக்கற்றவை. அதேபோல், உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் பெரும்பாலான வழக்குகள், உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கக்கூட லாயக்கில்லாத வழக்குகளாக உள்ளன. எதை நாம் செய்ய வேண்டுமோ, அதை செய்ய வேண்டும். மக்கள் தொகை பெருகி வருகிறது. அதற்கு ஏற்றாற்போல் பிரச்னைகளும் அதிகரி த்து வருகின்றன. அடித்தட்டில் உள்ள மக்களெல் லாம் தற்போது அதிகாரம் பெற்று வருகிறார்கள். உரிமைகளுக்காக போராடுகிறார்கள். இதனால், நீதிமன்றங்களுக்கு மேலும் சுமை ஏற்படுகிறது. அதனால், தேவையற்ற வழக்குகளை விசாரிப்பதை தவிர்த்துவிட்டு, தரமான வழக்கு களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். இவ்வாறு நீதிபதி ரவீந்திரன் பேசினார். இந்த கருத்தரங்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, நீதிபதி நாகப்பன் வரவேற்றார். முடிவில், நீதிபதி தனபாலன் நன்றி கூறினார்.

======

மம்மதா பானர்ஜியின் கூற்று எவ்வளவு உண்மை என்று தெரிந்துகொள்ள இந்த இணைப்பிலுள்ள செய்தியை படித்துப்பாருங்கள் : நீதித்துறையின் பிடியில் சிக்கித்தவிக்கும் அப்பாவி குடிமக்கள்



Friday, August 10, 2012

தவறான வாழ்க்கை முறையில் செல்லும் தமிழக மருமகள்கள்!

இதையெல்லாம் இப்ப வருஷா வருஷம் விழா கொண்டாடி சொல்ல வேண்டியிருக்கிறது. பொறுப்பற்ற விஷயமாவிட்டது தாய்மை! இளம் மருமகள்கள் பொய் வரதட்சணை வழக்குப் போடுவதில் காட்டும் ஆர்வத்தை தங்களது குழந்தையை வளர்ப்பதில் காட்டுவதில்லை போலிருக்கிறது!

குழந்தைகளுக்கு முழுமையான தாய்ப்பால் ஊட்டுவதில் பின்தங்கிய நிலையில் தமிழகம்

ஆகஸ்ட் 11,2012 தினமலர்
சென்னை: குழந்தைகள் பிறந்து முதல் ஆறு மாதத்திற்கு, முழுமையாக தாய்ப்பால் ஊட்டுவதில், இந்தியளவில் தமிழகம், 20வது இடத்தில் உள்ளது என, ஒரு புள்ளி விவரம் அதிர்ச்சி தெரிவிக்கிறது.

குழந்தைகள் பிறந்து, முதல் ஆறு மாதத்திற்கு, அவர்களுக்கு தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும் என, மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். இதனால், கர்ப்பமடைவதற்கு முன் இருந்த மாதிரியே, வயிறு சுருங்குவது, மார்பகப் புற்றுநோய், கர்ப்பப் பை வாய் புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைவது, அடுத்த கர்ப்பத்திற்கான கால இடைவெளி நீட்டிக்கப்படுவது என, தாய்க்கு பல நன்மைகள் உள்ளன. இதுபோல், நோய் தொற்றுகளை தடுத்து, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, தாயுடனான பிணைப்பைக் கூட்டுவது, மன வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சியை அதிகரிப்பது என, குழந்தைக்கு பல நன்மைகள் உள்ளன.ஆனால், குழந்தைகள் பிறந்து முதல் ஆறு மாதத்திற்கு, அவர்களுக்கு, முழுமையாக தாய்ப்பால் ஊட்டுவதில், இந்தியளவில் தமிழகம், 20வது இடத்தில் உள்ளது என, ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இதுகுறித்து, எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனை இயக்குனர் ஜெயா கூறியதாவது:இந்தியளவில், முதல் ஆறு மாதம், முழுமையாக தாய்ப்பால் ஊட்டும் விகிதம், தமிழகத்தில், 33.3 சதவீதமாக தான் உள்ளது. இது, தமிழகத்தில், பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம், ஒரு மாதத்தில், 1,000க்கு 18; இளம் குழந்தைகள் இறப்பு விகிதம், ஒரு ஆண்டிற்கு, 24 ஆகவும் இருப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது.இந்தியாவில் இந்த இறப்பு விகிதங்கள், முறையே, 39 மற்றும், 57ஆக உள்ளன.

பல மாதங்கள் தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்தால், தங்கள் அழகு கெட்டு விடும் என்ற, பெண்களின் பொதுவான மனநிலையே, அவர்கள் குழந்தைகளுக்கு சரிவர தாய்ப்பால் கொடுக்காததற்கு முக்கிய காரணம். இதுகுறித்து, இளம் தாய்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, எங்கள் மருத்துவமனையில் ஒரு வாரம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
=======
முதல் கணவன் மூலம் பிறந்த தனது குழந்தைக்கு இரண்டாவது கணவனை தந்தை என தந்தையின் பெயரை மாற்றக்கோரிய மனைவியின் வழக்கு தள்ளுபடி
ஆகஸ்ட் 11,2012 தினமலர்

மதுரை:தாய் இரண்டாவதாக வேறொருவரை திருமணம் செய்து கொண்டதால், குழந்தைக்கு தந்தையின் பெயரை (இன்ஷியல்) மாற்றக்கோரி தாக்கலான வழக்கை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.

காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் ரேவதி. இவருக்கும் உறவினர் வெங்கடேஷனுக்கும் 2003 ல், திருமணம் நடந்தது. ரேவதிக்கு 2005 ல் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அதற்கு பிரதீப் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என பெயரிட்டனர். வெங்கடேஷன், ரேவதி 2009 ல் விவகாரத்து பெற்றனர்.

புதுச்சேரியை சேர்ந்த பாலாஜியை, ரேவதி இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். பிரதீப் பெயருக்கு முன்னெழுத்தாக (இன்ஷியல்) தனது பெயரை அவரது பிறப்பு சான்றிதழில் சேர்க்க வேண்டும் என, புதுச்சேரி பிறப்பு, இறப்பு பதிவு அதிகாரியிடம் பாலாஜி விண்ணப்பித்தார்.
அவர், "இதில் தான் முடிவெடுக்க முடியாது. கோர்ட் மூலம் பரிகாரம் தேடிக்கொள்ளலாம்' என, 2012 மார்ச் 1 ல் உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஐகோர்ட்டில் பாலாஜி மனுதாக்கல் செய்தார். மனு நீதிபதி ஆர்.சுதாகர் முன் விசாரணைக்கு வந்தது.

நீதிபதி: குழந்தை பிறந்த 6 ஆண்டுகளுக்கு பின், அதை தனது குழந்தை என மனுதாரர் உரிமை கொண்டாடுகிறார். மனுதாரர் தான் குழந்தைக்கு தந்தை என, குழந்தையின் தாயும் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதைக்கொண்டு, குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் மனுதாரரின் பெயரை தந்தையாக குறிப்பிட உத்தரவிட வேண்டும் என்பதை ஏற்க முடியாது. இதனால், பிறப்புச் சான்றிதழின் புனிதம் கெட்டுவிடும்.

ஐ.நா.,வின் குழந்தைகள் உரிமை சாசனத்தை இந்தியா ஏற்றுள்ளது. குழந்தையின் அடையாளம், பெயரை பாதுகாப்பதில் யாரும் சட்டவிரோதமாக தலையிடக்கூடாது என, கூறப்பட்டுள்ளது. தாய், எவ்வித சட்டப்பூர்வ ஆவணங்கள் ஏதுமின்றி, மனுதாரர் தான் தன் மகனுக்கு தந்தை, என கூறுவதை ஏற்க முடியாது. இது மகனின் பிறப்பையே சந்தேகப்படுத்தும். குழந்தையின் வாழ்நாள் முழுவதும் மாறாத வடுவை ஏற்படுத்தும். தாயின் நடத்தை, வாழ்ந்த சூழ்நிலையை வெளிப்படுத்தும். பிறப்பு, இறப்புச் சட்டப்படி, குழந்தையின் பிறப்பை மோசடியாக பதிவு செய்திருந்தால், திருத்தம் கொண்டு வரலாம். இது அப்படியல்ல. பிறப்பு, இறப்பு பதிவு அதிகாரியின் உத்தரவு சரியானதே. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது, என உத்தரவிட்டார்.


“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.