இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, January 30, 2011

சோரம்போகும் பாசக்கார மருமகள்கள்

தன்னாட்சி பெற்றதாக நினைத்துக்கொள்ளும் இளம் மருமகள்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் பாருங்கள்! புருசனை நம்புவதில்லை, வயதில் மூத்த மாமனார் மாமியாரை மதிப்பதில்லை.

இதுபோன்ற மருமகள்கள் மாமியார் குடும்பத்தை அழிப்பதாக நினைத்துக்கொண்டு கடைசியில் காசைக்கொடுத்து போலிச் சாமியார்களிடம் சோரம் போகிறார்கள். அல்லது கணவன் மீது பொய் வழக்குப்போட்டு காவல் நிலையத்திலும், நீதிமன்றங்களிலும் தங்களைத் தாங்களே அலங்கரித்துக்காட்டும் கிளுகிளுப்பான காட்சிப் பொருளாக தினம் தினம் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

இதுபோன்ற மருமகள்களைப் பற்றி காவல் நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று ஒருநாள் அங்கு சென்று கவனித்துப்பாருங்கள். உங்கள் காதுகள் கூசும்!

தினகரன் 31 ஜனவரி 2011

கோவை : பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட மோசடி ஜோதிடரின் பூஜை அறையில் இருந்து பல பெண்களின் போட்டோக்கள் கைப்பற்றப்பட்டன. அவை செய்வினை வைப்பதற்காக மருமகள்கள் கொடுத்த, மாமியார்களின் போட்டோக்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை செல்வபுரம் எல்ஐசி காலனி அருகே உள்ள சிவிஜி நகரில் வசிப்பவர் வி.டி.ஈஸ்வரன். ஹம்சவேணி ஜோதிட சித்த மருத்துவ மாந்த்ரீக நிலையம் நடத்தி வந்தார். ஜோதிடம் பார்க்க சென்ற ஒரு பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்தது தொடர்பாக போலீசார் ஈஸ்வரனை கைது செய்தனர். தற்போது, இவர் மீது ஏராளமானோர் புகார் செய்து வருகின்றனர்.

புகார் அளித்தவர்கள் சொன்ன தகவல்படி ஜோதிடர் ஈஸ்வரன் மாதம் ஸீ3 லட்சம் வரை சம்பாதித்ததாக தெரிகிறது. அவரது பூஜை அறையில் இருந்து 300க்கும் மேற்பட்ட காதல்ஜோடிகளின் போட்டோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

காதலன் அல்லது காதலியை வசியப்படுத்துவதற்காக அவர்கள் கொடுத்த போட்டோக்கள்தான் அவை என்பது தெரியவந்தது. மேலும், பல மாமியார்களின் போட்டோக்களும் இருந்தன. அவை, செய்வினை வைப்பதற்காக மருமகள்கள் கொடுத்ததாக ஈஸ்வரன் கூறியிருக்கிறார்.




Saturday, January 29, 2011

“சுதந்திரக்” கதை சொல்லும் படங்கள் - காணத்தவறாதீர்!

ஆளும் வர்க்கம், ஆளப்படும் வர்க்கம், அதிகார வர்க்கம் என அனைத்து தரப்பிலும் இருக்கும் பெண்களுக்கும் அளவிற்கு அதிகமாகவே சுதந்திரமும், உரிமையும் கிடைத்துவிட்டது என்பதைத்தான் இந்தப் படங்கள் காட்டுகின்றன.

பின்வரும் படங்கள் ஒரு சிறு துளி மட்டுமே. இந்தப் படங்களை விளக்குவதற்கு வார்த்தையும் தேவையோ?

ஆளும் வர்க்கம்...
தினமலர் ஜூலை 21, 2010
நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.சி., ஜோதி குமாரி என்பவரை, சபைக்கு உள்ளே நுழைய விடாமல் காவலர்கள் தடுக்க முற்பட்ட போது, அவர் பூந்தொட்டிகளை தூக்கி வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டார்.

அதிகார வர்க்கம்....
1) சீருடைப் பணியிலும்...
தினமலர் டிசம்பர் 23,2010

ஜனவரி 25,2011 தினமலர்

ஆளப்படும் வர்க்கம்...
“அப்பாவிப் பெண்கள்” என்ற மற்றொரு பெருமைமிக்க பெயரும் இவர்களுக்கு உண்டு...

ஒடியா புவனேஸ்வரில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் இடிக்கப்பட்டன. இதில் ஏற்பட்ட தகராறில், பெண் போலீஸ் ஒருவரை அங்கு வசிக்கும் பெண்கள் தாக்கினர்.
(Dinamalar Photo 30 January 2011)


ஆனந்த சுதந்திரம் பெற்றுவிட்ட வருங்காலத் தலைமுறையிலும்...

பொதுமக்கள் கூடும் இடத்தில் அக்கம் பக்கத்தினரை கூட, மறந்து இப்படி காதல் களியாட்டத்தில் ஈடுபட்டுள்ள காதலர்கள். இடம்: சென்னை, பெசன்ட் நகர் எலீயாட்ஸ் பீச். (படமும் கருத்தும் - தினமலர் 16 நவம்பர் 2010)

கடைசியில் இந்த எல்லாத்தரப்புப் பெண்களுக்கும் “உரிமையையும், சுதந்திரத்தையும்” வாங்கித் தருவதற்காக செயல்படும் வாரியம்... இது ஆளும் வர்க்கமா, அதிகார வர்க்கமா என்று ஒரு பெரும் குழப்பமே இருக்கிறது....நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.



Nirmala Venkatesh,EX MLC & Ex Member NCW,addressing a press confrence to demand the resignation of Girija Viyas,chairperson of National Commission for Women,at Press Club, in New Delhi.

தேசிய பெண்கள் வாரியத்திற்குள் பணிபுரியும் பெண்களுக்கு வாரியத்தின் தலைவியால் கொடுமை செய்யப்படுவதாக முன்னாள் உறுப்பினர் புகார் செய்கிறார். பெண்களுக்குப்பிரச்சனை வெளியிலிருந்து வருவதில்லை, பெண்கள் வாரியத்திற்குள்ளேயே சகபெண் ஊழியர்களால் தான் பிரச்சனை ஏற்படுத்தப்படுகிறதாம்.


இப்போதாவது பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என நம்புவீர்களா? இனியும் யாராவது உங்களிடம் வந்து இந்தியாவில் பெண்ணடிமைத்தனமும் ஆணாதிக்கமும் இருக்கிறது என்று சொல்லி அதை நீங்கள் நம்பினால் அந்த முட்டாள்தனத்திற்கு யார் முழுப்பொறுப்பு?



Thursday, January 27, 2011

கல்லூரியில் இதையும் கற்றுத்தருவார்களா?


திருநகர் அருகேயுள்ள விளாச்சேரியில், மூதாட்டிகளுக்கு கையெழுத்து பயிற்சி அளித்த, மதுரைக்கல்லூரிஎன்.எஸ்.எஸ்., மாணவிகள். தினமலர் படம் 27.1.2011


இதேபோல திருமணத்திற்குப் பிறகும் தங்களது வீட்டில் இருக்கும் வயதான மாமியார்களையும் பாசத்துடனும், மரியாதையுடனும் இளம்பெண்கள் நடத்தினால் நாட்டில் பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வராது. முதியோர் இல்லங்கள் உருவாகவேண்டிய அவசியமும் இருக்காது அல்லவா?



Tuesday, January 25, 2011

குடியரசில் கொடிகட்டிப் பறக்கும் பெண் அதிகாரிகள்!

பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்ததுகூட தெரியாமல் பல ஆண்டுகளாக தூங்கிக்கொண்டிருப்பவர்கள் இந்த குடியரசு தினத்திலாவது தெரிந்துகொள்ளுங்கள்.


திருச்சி : திருச்சியில் பத்திரம் பதிவு செய்வதற்கு, 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, மாவட்ட பதிவாளர் நிலையில் உள்ள, பெண் அதிகாரியை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி, உறையூர் பாண்டமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி ராஜேஷ் கண்ணா (40). சில நாட்களுக்கு முன், உறையூர் பாண்டமங்கலத்தில் உள்ள, தன் இரண்டு வீட்டுமனைகளை, குளித்தலையைச் சேர்ந்த லட்சுமி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குமாருக்கு விற்பனை செய்தார். அவர்களது பெயரில் வீட்டுமனைகளை பதிவுச் செய்து பத்திரம் பெறுவதற்காக, ஜன., 24ம் தேதி உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், மாவட்ட பதிவாளர் நிலையில் உள்ள சசிகலாவை (36) அணுகினார். "பத்திரம் பதிவு செய்ய வேண்டும் என்றால், ஒரு பத்திரத்துக்கு தலா, 10 ஆயிரம் என, 20 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தர வேண்டும்; மறு நாள் பணம் கொடுத்தால் தான் பத்திரப் பதிவு செய்ய முடியும்' என்று சசிகலா கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜேஷ் கண்ணா, நேற்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் கொடுத்தார். அவர்கள், ரசாயனம் பூசப்பட்ட, 20 ஆயிரம் ரூபாயை, ராஜேஷ் கண்ணாவிடம் கொடுத்தனர். நேற்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., அம்பிகாபதி தலைமையிலான போலீசார், சார் பதிவாளர் அலுவலகத்தில் மாறு வேடத்தில் காத்திருந்தனர்.

ராஜேஷ் கண்ணாவிடம் இருந்து சசிகலா பணம் வாங்கிய போது கையும், களவுமாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி ராஜசேகரன் முன் சசிகலா ஆஜர்படுத்தப்பட்டார். சசிகலாவை, 15 நாள், ரிமாண்ட் செய்ய நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, வயலூர் சாலையில் உள்ள சசிகலா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். அவர் வருமானத்துக்கு அதிகமாக, சொத்து சேர்ந்திருந்தது தெரிய வந்தது. அங்கிருந்து, வங்கி கணக்கு புத்தகம் உட்பட முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாக தெரிகிறது.



Monday, January 24, 2011

பையில் பிறந்த குழந்தை!

இப்போதெல்லாம் இந்தியாவில் குழந்தைகள் கருப்பையிலிருந்து பிறக்கிறதா அல்லது ஏதாவது ஒரு பையில் பிறக்கிறதா என்று விஞ்ஞானத்திற்கே சவால் விடும் அளவிற்கு பிறந்த குழந்தைகளை வீதியிலும், குப்பைத்தொட்டியிலும், சாக்கடையிலும் வீசியெறியும் வினோதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

வெளிநாட்டுக் கூட்டு முயற்சியில் இந்திய மக்கள் தொகையைக் குறைக்க இப்படி ஏதாவது ஒரு புது திட்டம் போட்டிருக்கிறார்களா என்றும் தெரியவில்லை!


டிராவல் பேக்கில் ஆண் குழந்தை வீசிச் சென்ற தாய் யார்?
தினகரன் 25.1.2011

சென்னை : பிறந்த ஆண் குழந்தையை டிராவல் பேக்கில் வைத்து ரோட்டில் வீசியது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். எஸ்பிளனேடு பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் நேற்று குழந்தை அழுகுரல் கேட்டது. அங்கு வந்த மாநகர பஸ் கண்டக்டர் சத்தம் கேட்டு தேடினார். அப்போது ரோட்டோரத்தில் கிடந்த டிராவல் பேக்கில் இருந்து சத்தம் வந்ததை கேட்டார். உள்ளே பார்த்தபோது,

பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை அழுது கொண்டிருந்தது. அந்த குழந்தையின் தொப்புள் கொடிக்கூட வெட்டப்படாமல் ரத்த வெள்ளத்தில் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கண்டக்டர் அழுது கொண்டிருந்த குழந்தையை தூக்கி உடல் முழுவதும் இருந்த ரத்தத்தை கழுவினார். அதன் பிறகு எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்திற்கு சென்று இன்ஸ்பெக்டர் அருளிடம் ஒப்படைத்தார்.

பிறந்து சில மணி நேரத்தில் ஈவு இரக்கம் இல்லாமல் குழந்தையை இப்படி தூக்கி வீசிவிட்டு சென்றவர்கள் யார்? கள்ளக்காதலில் பிறந்தா? என போலீசார் விசாரணை நடத்துகின்றனர். இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியது. அப்பகுதி மக்கள் போலீஸ் நிலையத்தில் கூடிவிட்டனர். குழந்தையை எங்களிடம் கொடுங்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என பாசத்தோடு சிலர் கேட்டனர்.

ஆனால் போலீசார், குழந்தையின் உடல்நிலை மோசமாக இருப்பதால் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறினர். கொடுங்கையூரில் அன்பு இல்லத்தில் அந்த குழந்தை ஒப்படைக்கப்பட்டது. டாக்டர்கள் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

==========

மேலுள்ள செய்தியைப் பார்க்கும்போது அமெரிக்க நாட்டு பள்ளிச் சிறுமிகள் எவ்வளவோ பரவாயில்லை! பள்ளியில் படிக்குபோதே குழந்தை பெற்றாலும் அதை வீதியில் வீசி எறியாமல் பத்திரமாக பாசமுடன் வளர்க்கிறார்கள். இந்தியாவில் மேலைநாடுகளைப் பார்த்து பாதி விஷயங்களை மட்டுமே கற்றுக்கொள்கிறார்கள். இப்போதுதான் திருமணம் செய்யாமல் கூடிவாழும் முறையில் அல்லது சரியான திருமண வயதிற்கு முன்பாகவே குழந்தை பெற்றுக்கொள்ளும் முறையை தெரிந்துகொண்டிருக்கிறார்கள். அப்படிப் பெற்றுக்கொள்ளும் குழந்தையை வீதியில் வீசியெறியாமல் இருக்கும் மனப்பக்குவம் வருவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?

விடுதலை விரும்பிகள் இதற்கு ஏதாவது ஒரு சிறப்புத் திட்டம் வகுத்தால் நல்லது.





Friday, January 21, 2011

பெண்ணைக் கற்பழிக்க அரசாங்க நிதியுதவி!



சென்னை : நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த பெண் கீதா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:


கடந்த 1984ம் ஆண்டு எனக்கும் எனது மைத்துனிக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது. இதுபற்றி போலீசில் புகார் தர நான் நாங்குனேரி சர்கில் போலீஸ் நிலையத்துக்கு சென்றேன். அங்கு இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கள தன்ராஜ் என்பவர் என்னை கற்பழித்து விட்டார். பாதிக்கப்பட்ட எனக்கு ரூ.9 லட்சம் நஷ்டஈடு தொகையை வட்டியுடன் சேர்த்து தர அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

வழக்கை தனி நீதிபதி விசாரித்து, மனுதாரருக்கு ரூ.9 லட்சம் நஷ்டஈடு தொகையை அரசு ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் சேர்த்து தர வேண்டும், ஏற்கனவே அரசு ரூ.1 லட்சம் நஷ்டஈடு கொடுத்துள்ளதால் மீதம் உள்ள 8 லட்சம் ரூபாயை அரசு தர வேண்டும் என்று கடந்த 2009ம் ஆண்டு தீர்ப்பு கூறினார். இதை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை தலைமை நீதிபதி இக்பால் ,நீதிபதி சிவஞானம் ஆகியோர் விசாரித்து, ரூ.9 லட்சம் நஷ்டஈடு தொகையை அரசு தான் தர வேண்டும். ரூ.8 லட்சம் ரூபாய் மட்டும் அரசு கொடுத்தால் போதும் என்று தனி நீதிபதி உத்தரவிட்டது தவறானது.

ஏற்கனவே அரசு ஒரு லட்சம் நஷ்டஈடு தொகை கொடுத்திருந்தாலும் மேலும் ரூ.9 லட்சம் நஷ்டஈடு தொகை அரசு தர வேண்டும். அதுவும் ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் 6 வாரத்திற்குள் தர வேண்டும். இந்த தொகையை அரசு முன்னாள் டி.எஸ்.பி. மங்கள் தன்ராஜிடம் இருந்து வசூலித்து கொள்ளலாம். அரசு மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர்.

=======

காவல் நிலையத்திற்கு வரும் பெண்ணை கற்பழிப்பது என்பது அவ்வப்போது செய்தித்தாள்களில் வந்துகொண்டிருக்கும் செய்தி. இவர்களை நம்பித்தான் பல வரதட்சணை வழக்குகள் பதிவுசெய்யப்படுகின்றன. இதுபோன்ற பொய் வரதட்சணை வழக்குகளை விசாரணை செய்யாமலேயே குற்றப்பத்திரிக்கை தயார் செய்து அப்பாவிகளை நீதிமன்றத்தில் அலையவிடுவதும் இவர்கள்தான்.

சில நாட்களுக்கு முன் கோவையில் சிறுவர்களை கடத்திக் கொன்றதாக பிடிக்கப்பட்ட ஆளை நீதிமன்ற விசாரணை எதுவுமின்றி “எண்கவுட்ண்டர்” என்ற பெயரில் சுட்டுத்தள்ளி புகழை வாங்கிக் கட்டிக்கொண்டார்கள். ஆனால் காவல்துறையிலேயே இருந்துகொண்டு காவல்துறையின் கண்ணியத்தை சிதைத்ததோடு மட்டுமல்லாமல் பெண்ணிற்கு பாதுகாப்பு தரவேண்டிய கடமையை செய்யாமல் புகார் கொடுக்க வந்த பெண்ணையே கற்பழித்த போலிஸிற்கு “டபுள் எண்கவுண்ட்டர்” போட்டு மார்தட்டிக்கொள்வார்களா? போலிஸின் இதுபோன்ற வீரச்செயல் பற்றி எப்போதாவது நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இதுபோல புகார் கொடுக்க வரும் பெண்களை கற்பழிப்பவருக்கு தண்டணையாக வரும் அபராதத்தொகையை அரசாங்கம் கட்டுகிறதே. இது என்ன வினோதமான செயல்!

மேலுள்ள செய்தியில் ஒரு பெண் தனக்கு காவல்துறையால் இழைக்கப்பட்ட அநீதிக்கு சுமார் 25 ஆண்டுகளாக போராடிக்கொண்டிருக்கிறார். பெண்கள் நலவாரியம், பெண்கள் அமைச்சகம், பெண் விடுதலை விரும்பிகள் போன்றவர்களுக்கு மேலுள்ள செய்தியில் இருக்கும் பெண்ணைப் போல பாதிக்கப்பட்டவர்களெல்லாம் கண்ணுக்குத் தெரிவதில்லையே அது ஏன்? எப்போதுமே இவர்கள் கண்களுக்குத் தெரிவதெல்லாம் தனது கள்ளக்காதலை பாதுகாக்க பொய்வரதட்சணை வழக்குப்போடும் “அபலைப் பெண்களும்” , ஆணுக்குச் சரிநிகர் சமமாக “பப்புகளில் (Pub)” குடித்துவிட்டு கூத்தடிக்க உரிமை கேட்கும் புரட்சிப் பெண்கள் மட்டுமே. என்ன ஒரு விசித்திரமான பெண் விடுதலைப்போராட்டத் தியாகிகள் !




Wednesday, January 19, 2011

பெண்ணுக்கு யுத்தம் செய்யத் தெரியுமா?

ஆண்களைப் போலத்தான் பெண்களும். காமம், குரோதம், வீரம், காதல், வெறுப்பு, வன்மம் என்று எல்லா குணங்களும் உண்டு. ஆனால் இந்திய சட்டங்கள் மட்டும் பெண்களை வெறும் காதல் பதுமைகளாக நினைத்து அப்பாவிபோல சித்தரிப்பது ஏன்?



Tuesday, January 18, 2011

வயிற்றில் பிள்ளையுடன் திரியும் பள்ளிச் சிறுமிகள்

ஒரு பள்ளியில் 15 வயது இளம் சிறுமிகள் 90 பேர் கர்ப்பத்துடன் பள்ளிக்கு வருவதாக சமீபத்தில் வந்த செய்தி. அந்த செய்தியை பின்வரும் வீடியோவில் பாருங்கள். இது நடந்திருப்பது அமெரிக்க நாட்டில்.




MCS Board working to deal with pregnancies at Frayser High School
Jan 12, 2011

MEMPHIS, TN (WMC-TV) - As Memphis City Schools leaders discuss the best way to deal with the crisis at Frayser High School, one young student is dealing with parenthood.

The Action News 5 Investigators recently discovered 90 girls who attend Frayser High School are now pregnant or have already had a baby this school year.

Frayser is in Memphis City School Board member Stephanie Gatewood's district. She said a former principal of the school first sounded the alarm about the issue about a year ago.

Read Full Story here: MCS Board working to deal with pregnancies at Frayser High School


“பெண்ணுரிமை” என்பதை தவறாகப் புரிந்துகொண்டு வரைமுறையைக் கடந்து இப்போது அமெரிக்க நாட்டுப் பள்ளி திண்டாடிக்கொண்டிருக்கிறது என்பது மேலுள்ள வீடியோவைப்பார்த்தால் புரியும்.

இந்த அமெரிக்க ஸ்டைல் பெண்ணுரிமை தான் இப்போது இந்தியாவிற்கும் "Women Empowerment" என்ற பெயரில் இறக்குமதி செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது என்று பலருக்கும் தெரியாது. இதன் ஒரு பகுதிதான் அடுக்கடுக்காக இயற்றப்படும் “மருமகள் பாதுகாப்பு சட்டங்கள்” என்று அழைக்கப்படும் IPC498A, Domestic Violence Act-2005 போன்றவை....

இந்தச் சட்டங்களும் எந்தவித வரைமுறையின்றி பழிவாங்கும் ஆயுதமாக பயன்படுத்தும் விதத்தில் இயற்றப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்துவதைவிட பழிவாங்குவதற்காகத்தான் இந்த சட்டங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இன்றும் அப்படித்தான் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இதனால் பல குடும்பங்கள் சிதைந்து பல குழந்தைகள் தந்தையற்ற அனாதைகளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பது ஒரு கசப்பான உண்மை.

நம்ம ஊரிலும் இங்கொன்றும் அங்கொன்றுமாக பல ஊர்களில் உள்ள பள்ளிகளில் அமெரிக்கநாட்டில் இருப்பதுபோல பள்ளிச் சிறுமிகள் கர்ப்பம் அடையும் சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கிறது என்பது செய்தித்தாள் படிப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

ஆனால் இதுதான் இனி இந்தியநாட்டில் ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளிலும் நடக்கப்போகிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

டில்லி உயர் நீதிமன்றம் தன்னுடைய ஒரு தீர்ப்பில் இதை ஒரு தீர்க்க தரிசனமாக எழுதியிருக்கிறது. இனிவரும் காலங்களில் திருமணம் செய்யாமல் கர்ப்பம் தரித்து பல மாணவிகள் கல்லூரிக்கு வரும் சூழ்நிலை இருக்கிறது. அதனால் பல்கலைக்கழக விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்று டில்லி நீதிமன்றம் கூடுதல் அறிவுரையும் வழங்கியிருக்கிறது.

திருமணம் செய்யாமல் கூடி வாழ்வது தவறில்லை என்று இந்திய உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டதால் சமுதாயத்தில் ஏற்படப்போகும் மாற்றத்திற்கு ஏற்ப சட்டங்கள் வளைந்துகொடுக்கவேண்டுமே தவிர சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு தடையாக இருக்கக்கூடாது என்று தீர்ப்பில் தெளிவாகச் சொல்லியிருகிறார்கள். தீர்ப்பின் அந்தப் பகுதியை கீழே படித்துப்பாருங்கள்.

IN THE HIGH COURT OF DELHI AT NEW DELHI
Judgment delivered on: 12.07.2010
முழுத் தீர்ப்பை இங்கே காணலாம் W.P.(C) No. 8302/2009

“It would not be inappropriate to mention at this juncture the recent rulings of the Apex Court in the cases of Lata Singh vs. State Of U.P AIR 2006 SC 2522 and S. Khushboo vs. Kanniamal & Anr MANU/SC/0310/2010 where it has given liberty to the live-in relationship from the shackles of being an offence and also in the latter case where it has held that premarital sex is not an offence. The society today is changing at a rapid pace and we must be in tune with the realities and not hold on to archaic social mores. Once such a right, however unpopular, is recognized then it cannot be ruled out that there can be more cases of girl students proceeding on maternity leave when while they are still in college. Law should be an instrument of social change and not a defender of it. Motherhood is not a medical condition but a promise. We all kowtow to our mothers to whom we owe our existence and to punish a woman for becoming a mother would surely be the mother of all ironies.

கடைசியில் திருமணம் இல்லாமல் வரைமுறையின்றி தன்னிஷ்டப்படி பலருடன் கூடி வாழ்ந்து கர்ப்பம் தரிப்பதும், துன்பம் அனுபவிக்கப்போவதும் பெண்கள்தான்! சமுதாய மாற்றங்கள் தொடரட்டும்!! தந்தையற்ற குழந்தைகள் பெருகட்டும்!!!

எது நடந்தாலும் கடைசியில் பெண்ணுக்கு ஆனந்த சுதந்திரம் கிடைத்துவிட்டால் அதுவே மிக்க மகிழ்ச்சியான விஷயம்!



Sunday, January 16, 2011

பெண்ணின் எல்லையில்லாத அன்பு

ஈரோடு மாநகராட்சி 43-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான நீலகிஸ் பின் புறம் மாநகராட்சி சார்பில் ஒரு குப்பை தொட்டி வைக் கப்பட்டுள்ளது. இந்த குப்பை தொட்டியில் வழக்கம்போல் இன்று காலை அப்பகுதி மக்கள் குப்பை கொட்டிக்கொண்டு இருந்தனர்.

அப்போது நடுத்தர வயது மதிக்கதக்க ஒரு பெண் தான் கையில் கொண்டு வந்த பச்சை கலர் பிளாஸ்டிக் பையை குப்பை தொட்டியில் வீசிவிட்டு அங்கிருந்து வேகமாக நடையை கட்டினாள். இதை அங்கு பேப்பர் பொறுக்கும் தொழிலாளி ராஜேந்திரன் என்பவர் பார்த்து விட்டார்.

சற்றுநேரம் கழித்து அவர் அந்த குப்பைதொட்டிக்கு சென்று அந்த பெண் போட்ட பையை எடுத்து கவிழ்த்தார். அப்போது அதில் இருந்து ஒரு பச்சிளம் பெண் குழந்தையின்உடல் விழுந்தது.இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இந்த தகவல்அங்கு காட்டுத்தீ போலபரவியது.

இதற்கிடையே அந்த பகுதியில்வசிக்கும்முஸ்லிம் பெண் ஒருவர் அந்த குழந்தையை கையில் எடுத் தார். அப்போது குழந் தைக்கு சிறுநீர் வந்தது. இதை கண்டு அவர் அந்த குழந்தை உயிருடன் இருப்பதாக கருதி தான் வளர்க்கப்போவதாக எடுத்துக்குகொண்டு அருகில் உள்ள ஆஸ்பத் திக்கு சென்றார்.

டாக்டர் குழந்தையை பாசோதித்துவிட்டு அது ஏற்கனவே இறந்து விட்டதாக தொவித்தார். வீசப்பட்ட அந்தகுழந்தை யின் தொப்புள் கொடிகூட காயவில்லை. சேலை யில் உடலை சுற்றி இருந்தனர். அதன் நெற்றியில் சிறிது காயம் இருந்ததாக கூறப் பட்டது.

எனவே பெண் குழந் தையை அடித்துக் கொன்று அதை குப்பை தொட்டியில் வீசி சென்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த அப்பகுதி கவுன்சிலர் கலைச் செல்வி அந்த குழந்தையின் உடலை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தார்.

இதுபற்றி ஈரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடும் நேரத்தில் பச்சிளம் பெண் குழந்தையை கொன்று குப்பை தொட்டியில் வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.





Wednesday, January 12, 2011

கவர்ச்சியான கல்யாணி!

மூவரை திருமணம் செய்து ஏமாற்றிய "கல்யாண ராணி'’

ஜனவரி 12,2011 தினமலர்


செங்கன்னூர் : மூன்று இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்து, பணம், நகைகளை மோசடி செய்த, "கல்யாண ராணி'யை போலீசார் கைது செய்தனர்.

அவரை காணவில்லை என, கணவர் கொடுத்த வழக்கில், கோர்ட் விடுவித்தது என்றாலும், ஒரு மணி நேரத்திற்கு பின், பணம், நகைகளை மோசடி செய்த வழக்கில் மீண்டும் கைதானார்.

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், சடையமங்கலத்தைச் சேர்ந்தவர் ஷாலினி (28). இவர் பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்த பிரமோத் (48) என்பவருடன் வாழ்ந்து வந்தார். தன்னுடன் வாழ்ந்து வந்த ஷாலினியை காணவில்லை என்றும், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறும் கோரி கேரள ஐகோர்ட்டில் அவர், "ஹேபியஸ் கார்ப்பஸ்' மனு தாக்கல் செய்தார்.ஐகோர்ட் உத்தரவின்படி செங்கன்னூர் போலீசார், ஷாலினியை தேடி வந்தனர். பத்திரிகைகளில் ஷாலினியின் படத்தை பார்த்த பாலக்காடு மாவட்டம், ஆலத்தூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தனது பகுதியில் அப்பெண் இருப்பதாக செங்கன்னூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த அவர்களிடம், அப்பெண் இருக்கும் இடத்தை காண்பித்து அப்பெண்ணை பிடிக்க உதவினார்.அப்பெண்ணுடன் இருந்த அவரது மகன் கண்ணன் (5) ஆகியோரை, போலீசார் செங்கன்னூர் கொண்டு சென்று, விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பல, "திடுக்' தகவல்கள் தெரியவந்தன.

வழக்கு குறித்து பத்திரிகைகளில் வெளிவந்த செய்தியை பார்த்த ஷாலினி, தன் குழந்தையுடன் தப்பியோட முயன்றபோது தான் போலீசாரின் பிடியில் சிக்கினார். இவர், 2010ம் ஆண்டு பத்திரிகையில் வெளிவந்த மறுமணத்திற்கு தயார் என்ற விளம்பரத்தை பார்த்து, பிரமோத் (48) என்பவரை தொடர்பு கொண்டார்.தான், ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாங்கூர் வங்கியில் உதவி மேலாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். அதன் பின் இருவரும், எர்ணாகுளத்தில் வசித்து வந்தனர். அப்போது பக்கத்து வீட்டில் இருந்து நகைகள் மாயமான புகார் காரணமாக அங்கிருந்து இருவரும் செங்கன்னூரில் வாடகை வீட்டிற்கு இடம் பெயர்ந்தனர்.அங்கு பல மோசடி வழக்குகள் இருவர் மீதும் பதிவு செய்யப்பட்டு, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தனர். அப்போது, டிசம்பர் மாதம் 7ம் தேதி குழந்தையுடன் ஷாலினி மாயமாகி விட்டார். இதுகுறித்து தான் பிரமோத் வழக்கு தொடர்ந்தார். போலீசாரிடம் சிக்கிய ஷாலினி, மேலும் மூவரை திருமணம் செய்து ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.

அவரை செங்கன்னூர் போலீசார் அங்குள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை காணவில்லை என்று பிரமோத் கொடுத்த மனு மீது தான் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தியதால், கோர்ட் உடனடியாக விடுவித்தது. கோர்ட்டில் இருந்து அவர் விடுதலை பெற்றதும், வக்கீல் வீட்டுக்குச் சென்றார்.இதைஅறிந்த பிரமோத், தனது மூன்று லட்ச ரூபாய், 25 சவரன் நகைகளை ஷாலினி எடுத்துச் சென்று விட்டார் என மீண்டும் ஒரு புகாரை செங்கன்னூர் போலீசில் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார், ஷாலினி சென்ற வக்கீல் வீட்டுக்குச் சென்று காத்திருந்தனர். அவர் வெளியே வந்ததும் போலீசார் அவரை கைது செய்தனர்.கைதாகி உள்ள பெண் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு, அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசாருக்கு தெரியவந்துள்ளது.



Tuesday, January 11, 2011

விதவிதமாக திருமண உறவை அனுபவிக்கும் பெண்கள்

பெண்களுக்கு சட்டங்கள் சாதகமாக இருப்பதால் திருமண உறவை எப்படியெல்லாம் அனுபவித்து மகிழ்கிறார்கள்! ஆண் இதுபோல திருமணத்தை விதவிதமாக அனுபவிக்க நினைத்தால் அவன் மீது பலதார மண தடுப்புச் சட்டம், கற்பழிப்பு, வரதட்சணைக் கொடுமை, பெண் கொடுமை என அடுக்கடுக்காக பல சட்டங்கள் பாய்கின்றன. அதுவே ஒரு பெண் இந்த வேலைகளைச் செய்தால் அந்தப் பெண்ணை ஆதரித்து திரும்பவும் ஆணைத்தான் சட்டங்கள் தண்டிக்கின்றன. விசித்திரமான பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள்!

2 வது கணவர் ஓட்டம் : கர்ப்பிணி மனைவி புகார்
தினமலர் ஜனவரி 11, 2011

இளஞ்செம்பூர் : இளஞ்செம்பூர் அருகே வீரம்பலில் முதல் கணவரை பிரிந்த நிலையில், இரண்டாவதாக மணமுடித்த கணவர் ஓட்டம் பிடித்ததால், கர்ப்பிணி மனைவி ஐகோர்ட் உத்தரவுபடி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இளஞ்செம்பூர் அருகே வீரம்பலை சேர்ந்த முத்துக்குமாரி (23) அதே ஊரை சேர்ந்த ஞானராஜ் என்பவரை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். குழுந்தை ஒன்றும் பிறந்தது. வேலைக்காக ஞானராஜ் வெளிநாட்டுக்கு சென்ற நிலையில், முத்துகுமாரிக்கும் அதே ஊரை சேர்ந்த இருதயராஜுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இதற்கு முத்துக்குமாரி வீட்டார் எதிர்ப்பு தெரிவிக்காமல், இருவரையும் கணவன் மனைவியாக சேர்த்து, இருதயராஜிடம் 50 ரூபாய் பத்திரத்தில் , முத்துகுமாரியை பிரியமாட்டேன் என எழுதி வாங்கி கொண்டு, சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

ஐந்து மாதங்கள் கணவன் மனைவியாக வாழ்ந்த இருதயராஜ், முத்துக்குமாரியை கர்ப்பிணியாக்கி விட்டு தலைமறைவானார். தலைமறைவான இருதயராஜ் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி ,மதுரை ஐகோர்ட் கிளையில் முத்துக்குமாரியின் தந்தை ஞானஒளிவு மனு செய்தார். அதன்படி தலைமறைவான இருதயராஜ் மீது வழக்கு பதிவு செய்ய, மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து ,இளஞ்செம்பூர் இன்ஸ்பெக்டர் துரைராஜ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.

===============

நாகர்கோவில் : மனைவியை ஏமாற்றி, இரண்டாவது திருமணம் செய்ய முயன்றவர், மண மேடையில் நேற்று கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே கடம்பன்குழியைச் சேர்ந்தவர் வினோ (35). இவருக்கும், அஞ்சுகிராமம் பாப்பையன் மகள் ஹெப்சிபாவுக்கும், எட்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜோன்சி (8), மிஸ்பா (7) என இரு மகள்கள் உள்ளனர்.

கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ஹெப்சிபா தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், காட்டாத்துறையை சேர்ந்த, சாந்திரி (28) என்ற பெண்ணை, வினோ, இரண்டாம் திருமணம் பேசி, சாமியார் மடத்தில் உள்ள ஒரு மண்டபத்தில், நேற்று திருமணம் நடக்க ஏற்பாடானது. இது பற்றி தகவல் கிடைத்த ஹெப்சிபா, தக்கலை போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்குச் சென்ற போது வினோ, சாந்திரி கழுத்தில் தாலி கட்டிவிட்டார். மனைவிக்கு தெரியாமல் மற்றொரு பெண்ணை திருமணம் செய்ததற்காக, போலீசார் அவரை கைது செய்தனர். இதனால், திருமணத்துக்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தனக்கு திருமணம் ஆனதை மறைத்து, சாந்திரி பெற்றோரை வினோ ஏமாற்றியதும் விசாரணையில் தெரிய வந்தது.

============

மேலுள்ள இரண்டு செய்திகளையும் பாருங்கள். முதல் செய்தியில் கணவன் வெளிநாடு சென்றதும் மனைவி இரண்டாவதாக ஒரு ஆளை தேர்வு செய்து சந்தோஷமடைந்து பிறகு அந்த இரண்டாவது ஆள் மீது புகார் கொடுத்திருக்கிறார். இதில் ஏமாற்றப்பட்ட முதல் கணவனைப் பற்றி சட்டம் கவலைப் பட்டதா? அல்லது அந்தப் பெண் செய்தது சரியா என்று யாராவது யோசிப்பார்களா?

இரண்டாவது செய்தியில் இதேபோல கணவன் முதல் மனைவியை விட்டு இரண்டாவது திருமணம் செய்ததும் போலிஸ் அவரை கைது செய்துவிட்டார்கள்.

இந்த இரண்டு சம்பவங்களும் ஒரே மாதிரியாக இருந்தாலும் சட்டம் ஆண், பெண் இருவரையும் எப்படி வெவ்வேறு விதமாக பார்க்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள். ஆணும் பெண்ணும் சமமாக நடத்தப்படவேண்டும் என்று எண்ணுபவர்கள் முதலில் சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்படவேண்டும் என்று புரிந்துகொள்ளவேண்டும். அதுதான் பெண்ணுக்குக் கொடுக்கப்படும் சரியான சமஉரிமை.



Monday, January 10, 2011

வைகை அணையில் பொங்கிப் பெருகிய தாய்மை!

திங்கட்கிழமை, ஜனவரி 10,2011 மாலை மலர்

ஆண்டிப்பட்டி, ஜன. 10-

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. அணையின் ஆற்றை ஒட்டியுள்ள சலவை செய்யும் பகுதியில் புதருக்குள் குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனே அங்கு சலவை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் புதருக்குள் சென்று பார்த்தனர்.

அங்கு பச்சிளம் ஆண் குழந்தையை எறும்புகள் கடித்து கொண்டிருந்தன. உடனே சலவை தொழிலாளர்கள் குழந்தையை வெளியில் எடுத்து வைகை அணை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. குழந்தை தேனி அரசு ஆஸ் பத்திரிக்கு எடுத்து செல்லப் பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

தேனி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 3-ந்தேதி இந்த குழந்தை பிறந்துள்ளது. அதற்கான அடையாள அட்டையும் குழந்தையின் கையில் கட்டப்பட்டு இருந் தது. அதில் தாயார் பெயர் முருகேஸ்வரி என்றும் பெரியகுளம் மின்வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி என்றும் எழுதப்பட்டு இருந்தது.

தேனி போலீஸ் சூப் பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தையை புதரில் வீசி சென்ற முருகேஸ்வரியை பிடிக்க போலீசார் பெரியகுளத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

==========


விலங்குகளிடம் இருக்கும் பாசம் கூட மனித இனத்தில் இருப்பதில்லையோ? (படம்- தினமலர் ஜனவரி,11, 2011)

கணவன் வரதட்சணை கேட்டு மிரட்டினான் என்று ஒரு பெண் சொன்னவுடன் கவணவனை அவனது குடும்பத்தோடு சேர்த்து கூண்டோடு கைது செய்து சிறையில் அடைத்துவிட்டுப் பிறகுதான் விசாரணையே செய்ய ஆரம்பிக்கிறார்கள். அதுபோல ஒரு பெண் தன்னை காதலன் ஏமாற்றிவிட்டான் என்று கண்ணை கசக்கினால் உடனே அவன் மீது கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்து உள்ளே தள்ளிவிடுகிறார்கள்.

ஆனால் இதுபோன்ற அப்பாவிக் குழந்தைகளை வீசியெறியும் மிருகங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்படுகிறது. யாராவது இதுவரை இதுபோன்ற குற்றத்திற்கு தண்டிக்கப்பட்டிருக்கிறார்களா? அல்லது இதுபோன்ற குழந்தைகளை பாதுகாக்க ஏதாவது சிறப்புச் சட்டம் இருக்கிறதா? இதுபோன்ற கொடிய குற்றங்களுக்கு ஆண், பெண் இருவருமே தண்டிக்கப்படவேண்டியவர்கள். ஆனால் சட்டங்கள் வழக்கம்போல யாராவது ஒரு ஆணைக்காட்டி அவன்தான் இதற்குப் பொறுப்பு என்று பெண்ணை அரவணைத்துத் தட்டிக்கொடுக்கும்.




Sunday, January 09, 2011

சுயஉரிமை பெற்ற பெண்ணின் சாதனை!

புதுடெல்லி, ஜன.9-

டெல்லி ரோகிணி பகுதியை சேர்ந்த பெண் ஷேனாஸ் (வயது 35). இவர் திருமணமான சில வருடங்களிலேயே கணவரை விவாகரத்து செய்தாள். அதன்பறகு 2-வது திருமணம் செய்தாள். அவருடனும் சில வருடங்களே குடும்பம் நடத்தி அவரையும் விவாகரத்து செய்தாள். 2 கணவர்கள் மூலம் அவளுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. 2-வது மகளுக்கு 14 வயதும், 3-வது மகளுக்கு 5 வயதும் ஆகிறது. இந்த நிலையில் 35 வயதான ஷேனாஸ் தன்னை விட 6 வயது குறைந்த 29 வயதான ராகேஷ்குப்தா என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.

இருவரும் கடந்த 3 வருடங்களாக கணவன்-மனைவியாக குடும்பம் நடத்தி வந்தனர்.இதற்கிடையே ராகேஷ் குப்தாவை கடந்த அக்டோபர் மாதம் திடீர் என்று காணவில்லை. இதுபற்றி ஷேனாஸ் போலீசில் புகார் செய்தாள். போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்தனர்.

ஷேனாசுக்கு சகீல், சாகித் என்ற 2 சகோதரர்கள் உள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். எந்த துப்பும் கிடைக்கவில்லை. இவர்கள் ஷேனாஸ் குடியிருக்கும் பகுதியிலேயே வசித்து வந்தனர். சில மாதங்கள் கழித்து போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினார்கள்.

இதில் சாகித் பழைய குற்றவாளி என தெரியவந்தது. சந்தேகப்பட்டு அவனது வீட்டை போலீசார் சோதனையிட்டனர். அப்போது சாகித்தின் வீட்டு “செப்டிக் டேங்கில் இருந்து துர்நாற்றம் அடித்தது. சந்தேகப்பட்டு பார்த்த போது அங்கே ஒரு பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. அது காணாமல் போன ராகேஷ் குப்தா என தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் ஷேனாசை பிடித்து விசாரித்தபோது அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். சம்பவத்தன்று ராகேஷ் குப்தாவிடம் ஷேனாஸ் பணம் கேட்டாள். ஆனால் ராகேஷ் குப்தா டெய்லர் தொழில் பார்த்து வந்ததால் ஷேனாஸ் கேட்ட தொகையை கொடுக்க முடியவில்லை.
இதனால் தகராறு ஏற்பட்டது. அப்போது கிரிக்கெட் மட்டையால் ஷேனாஸ், ராகேஷ்குப்தாவை தலையில் அடித்தாள். இதில் அவர் செத்துப் போனார். பிணத்தை 24 மணி நேரம் தனது வீட்டிலேயே வைத்து இருந்தாள். மறுநாள் சகோதரர்கள் மூலம் பிணத்தை அங்கிருந்து எடுத்துச் சென்று செப்டிக் டேங்குக்குள் போட்டு விட்டனர்.

கொலையை மூடி மறைக்க ராகேஷ்குப்தா காணாமல் போய்விட்டதாக ஷேனாஸ் போலீசில் புகார் செய்து நாடகமாடினாள். ஆனால் போலீசார் துப்பு துலக்கி ஷேனாசையும், அவளது சகோதரர் சகீல் ஆகியோரை கைது செய்தனர். சாகித் தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகிறார்கள்.





Thursday, January 06, 2011

கடவுளை தண்டிக்க ஒரு கடவுள் வேண்டும்

குடும்பப் பிரச்சனைகளால் பாதிக்கப்படும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் போன்றவர்கள் மகளிர் காவல் நிலையங்களை நாடும்போது அவர்களை அன்பாக நடத்தி அவர்களின் பிரச்சனைகளை அன்பான அகிம்சை வழியில் தீர்த்துவைத்து தங்களை நாடி வந்தவர்களின் குடும்பம் சந்தோஷமாக திரும்பிச் செல்வதைக் கண்டு உள்ளம் பூரித்திடும் பூலோக சொர்க்கம் அல்லவா மகளிர் காவல் நிலையங்கள்.

குடும்பப் பிரச்சனை காரணமாக அவசரப்பட்டு பொய் வரதட்சணைப் புகார் கொடுக்கும் பெண்களை அன்பாக நடத்தி அவர்களுக்கு தக்க அறிவுரை வழங்கி தவறை உணரவைத்து குடும்பங்கள் சிதையாமல் போற்றிப் பாதுகாக்கும் நடமாடும் தெய்வங்கள் அல்லவா பெண் காவலர்கள்.

மருமகள் அவசரப்பட்டு தவறாக ஒரு பொய் வரதட்சணை புகாரினை கணவனின் குடும்பத்தில் உள்ள அனைவர் மீதும் பதிவு செய்யவந்தால் பொய் வரதட்சணை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை அழைத்து மிகவும் கனிவாக விசாரணை செய்து நேர்மையான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்திற்கு அனுப்பி பல குடும்பங்கள் சிதையாமல் பாதுகாக்கும் கண்ணியமிக்கவர்கள் அல்லவா பெண் காவலர்கள்.

இதுபோன்ற பொய் வரதட்சணை வழக்குகளில் பல வயதான பெண்களும், உடல் நலம் குன்றிய வயதானவர்களும், இளம் பெண்களும், குழந்தைகளும் சிக்கவைக்கப்படும்போது வழக்கின் உண்மை தண்மையை ஆராய்து இதுபோன்ற அப்பாவிகளின் கண்ணியம் சிதையாமல் அவர்களை பாதுகாக்கும் குலதெய்வங்களாயிற்றே பெண் காவலர்கள்.

கடவுள் ஒரே ஒரு நாள் மகளிர் காவல்நிலைய வாசலில் நின்றுகொண்டு அங்கு நடக்கும் நிகழ்வுகளைக் கண்டால் ஏதோ ஒரு காரணத்தால் சிதையும் தருவாயில் இருக்கும் பல குடும்பங்கள் மகளிர் காவல்நிலையத்திற்கு வந்த பிறகு பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு எப்படி சந்தோஷமாக கைகோர்த்துக்கொண்டு திரும்பிச்செல்கிறார்கள் என்றும் அதற்காக இந்தப் பெண் காவலர்கள் எத்தனை பாடுபட்டு இதுபோன்ற குடும்பப் பிரச்சனைகளில் சிக்கும் அப்பாவிக் குழந்தைகளின் நலன் கருதி இந்தப் பிரச்சனைகளை ஒரு மலரைப் போல மென்மையாக எப்படிக் கையாளுகிறார்கள் என்றும் உணரமுடியும்.

இதுபோன்ற பண்பான காவல்தெய்வங்களுக்கு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு பிரச்சனைகளை கொடுக்கும் கடவுளுக்கு கொஞ்சமும் இரக்கமே கிடையாதா? இந்தக் கடவுளை தண்டிக்க ஒரு கடவுள் வரவேண்டும்.


தினமலர் ஜனவரி 07, 2010

மதுரை : மதுரையில் பெண்களின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பெண் போலீஸ் எஸ்.ஐ.,க்கள் இருவரின் தற்கொலை போலீஸ் துறையை மட்டுமல்லாது, அனைத்து துறையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தடுக்க, பெண் போலீசாருக்கு முறையான கவுன்சிலிங் கொடுத்து பாதிக்கப்பட்டோரின் மனநலத்தை காப்பது போலீஸ் துறை முக்கிய கடமை.

மதுரை மாவட்டத்தில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 20 - 40 வயது பெண்கள் தீக்குளித்தல், தூக்கு, விஷம் சாப்பிட்டு தற்கொலை முடிவை அதிகமாக தேடியுள்ளனர். கடந்த 2008ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 354 பேர். 2009ம் ஆண்டு 399 பேர். இதில் செல்லூரில் மட்டும் 68 பேர். 2010ல் செல்லூரில் 46 பெண்கள் தற்கொலை முடிவை தேடியுள்ளனர். விவாகரத்து, கணவருடன் தகராறு, பொருளாதார பின்னடைவு, குடும்ப பிரச்னைகளால் தான் பெரும்பாலும் பெண்கள் இந்த முடிவுக்கு வருகின்றனர். இப்பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாவர்கள் படிக்காதவர்கவே அதிகம் இருந்தனர். ஆனால் சமீபத்தில் படித்த, பட்டம் பெற்ற, அரசு வேலைகளில் இருக்கும் பெண்களும் இந்த விபரீத முடிவை தேடுவது அதிகரித்து வருவது வேதனையான விஷயம்.மேலூர் எஸ்.ஐ., எஸ்தர் ராணி(33) மதுரை புதூர் மண்மலை மேட்டிலுள்ள வீட்டில் டிச. 23ல் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். நாகமலைப்புதுக்கோட்டை எஸ்.ஐ., ரங்கநாயகி, மதுரை வைகை வடகரையில் அப்பார்ட்மென்ட் வீட்டில் ஜன., 5ல் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இந்த இரு சம்பவங்களும் மதுரை மாவட்ட போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் ஸ்டேஷன்களில் ஆண் போலீசாருக்கு சமமாக பெண் போலீசாருக்கும் பணிகள் வழங்கப்படுகின்றன. ஆண்களே தனியாக செல்ல தயங்கும் பாதுகாப்பற்ற இடங்களிலும் பெண் போலீசார் இரவில் தனியாக செல்லும் சூழல், இடைவெளியின்றி பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுதல், ஓய்வின்மை, அதிகாரிகளின் நெருக்கடி இதனால் ஏற்படும் மனச்சோர்வு, மனஅழுத்தம், தாழ்வுமனப்பான்மை போன்ற பல காரணங்களும் குடும்ப பிரச்னைகளும் தான் பெண் போலீசாருக்கு தற்கொலை முடிவை தேடும் நிலையை ஏற்படுத்துகிறது.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள், மனநல டாக்டரிடம் கருத்து கேட்டோம்:

சமுதாயத்திலும் பிரச்னை: தென் மண்டல ஐ.ஜி.,கிருஷ்ணமூர்த்தி: பெண்களிடம் விழிப்புணர்வு தேவை. மேலைநாட்டு கலாசாரத்தை பின்பற்றினால் அது ஆபத்தை ஏற்படுத்தி விடும். சிலர் பல ஆண்டுகள் ஆண்களுடன் தொடர்பு வைத்துவிட்டு, பின் திருமணம் என வரும் போது யாரையாவது ஒருவரை தேர்வு செய்கின்றனர். அவர்கள் தங்களுடன் ஒத்துப்போகவில்லை என தகராறுகளில் ஈடுபடுவதும், பிரச்னைகளில் நேரத்தை செலவு செய்வதும், முடிவில் விவாகரத்து என செல்கிறது. சமுதாயம் குறித்த விழிப்புணர்வை அனைத்து நிலையிலும் ஏற்படுத்த வேண்டும். பெண் போலீசாருக்கு இது போன்ற பிரச்னைகளுக்கு கவுன்சிலிங் ஆரம்பிப்பது புதிது அல்ல. தற்கொலை முடிவை எடுக்கும் அளவிற்கு போலீஸ் துறையில் பணி நெருக்கடி இல்லை. தென் மண்டலத்தில் அனைத்து போலீசாருக்கும் விரைவில் சிறந்த மனோதத்துவ நிபுணர்களைக் கொண்டு பயிற்சி நடத்தப்படும்.

பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்
: மனோகர், மதுரை, எஸ்.பி., :பெண் போலீசாருக்கு ஏற்படும் பிரச்னை குறித்து அவர்கள் புகார்கள் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு என்ன பிரச்னை இருந்தாலும் என்னிடம் நேரில் தெரிவிக்க வாரந்தோறும் செவ்வாய்கிழமை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட, குடும்ப, பணி தொடர்பான எந்த பிரச்னைகளானாலும் தெரிவிக்கலாம். தைரியமாக தங்கள் புகார்களை தெரிவித்து பலர் பிரச்னைகளில் இருந்து விடுபட்டுள்ளனர். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. பெண் போலீசாரின் வீடுகள் அருகே ஸ்டேஷன்கள், பாதுகாப்பு பணியில் கூட பெண் போலீசார் தனிமைப்பட்டு விடக்கூடாது என ஒரு குழுவாகவே நியமிக்கப்படுகின்றனர். மனதில் வைக்காமல் பிரச்னைகளை தைரியமாக எடுத்துக்கூறி நிவாரணத்தை பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, தற்கொலை முடிவு எல்லாம் கோழைத்தனமானது.

வாரத்தோறும் பயிற்சி
: போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியம் (மதுரை): மதுரை நகர் பகுதியில் பெண் போலீசார் யாரும் இது போன்ற அபத்தமான முடிவை எடுக்கவில்லை. இந்த சம்பவங்கள் போலீஸ் துறையின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன. மதுரை நகர் போலீசாருக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் அணிவகுப்பின் போது, இனி மனநலம் குறித்த சிறப்பு பயிற்சி கூடுதலாக ஒரு மணிநேரம் நடத்தப்படும். சிறந்த நிபுணர்களை கொண்டு தொடர் பயிற்சி மற்றும் யோகா போன்ற வகுப்புகள் மூலம் இது போன்ற அனைத்து பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி எடுக்கப்படும்.

மன அழுத்தமே காரணம்
: மதுரை அரசு மருத்துவமனை மனநலப் பிரிவு பேராசிரியர் ராமானுஜம்: போலீஸ் துறை பெண்களுக்கு புதிதான விஷயம். பணி செய்யும் எல்லாப் பெண்களுக்குமே வீட்டுவேலை, அலுவலக வேலை பளுவின் காரணமாக மனஅழுத்தம் ஏற்படும். குழந்தைகளை கவனிக்க ஆள் இல்லாவிட்டால் கூட, மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுவர். போலீஸ் துறையில், கூடுதல் பணிச்சுமை இருக்கும். இதை தாக்குபிடிக்க முடியாமல் இருக்கலாம். அல்லது உயரதிகாரியின் கட்டளைக்கு பணிந்து போகமுடியாத நிலையில் இருக்கலாம். மன அழுத்தம் அதிகரித்து, தாங்க முடியாத நிலையில் தற்கொலை செய்கின்றனர். மனச்சோர்வாக, எதையும் விரக்தியாக பேசுவதை வைத்து, அவர்களை இனம் காண முடியும். உரிய நேரத்தில் "கவுன்சிலிங்' செய்தால், தற்கொலை எண்ணத்திலிருந்து மீட்கமுடியும். மதுரை அரசு மருத்துவமனையில், "தற்கொலை தடுப்பு கிளினிக்' செயல்படுகிறது. ஏற்கனவே தற்கொலைக்கு முயன்று சிகிச்சையில் இருப்பவர்களை, சரியான விதத்தில் "கவுன்சிலிங்' கொடுக்கிறோம் என்றார்.

காத்திருக்கும் "புதுயுகம்'
: மதுரை மாவட்டத்தில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் மூன்று மாதங்களுக்கு முன் "புதுயுகம்' அமைப்பு துவக்கப்பட்டது. செல்லூர் மகப்பேறு மருத்துவமனையில் இது செயல்படுகிறது. தினமும் மாலை 5 முதல் இரவு 7 மணி வரை இங்கு தற்கொலை எண்ணத்துடன் அவதிப்படும் நபர்களுக்குகவுன்சிலிங் வழங்கப்படுகிறது. செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் மதுரை இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ் மூலம் பல பகுதிகளில் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. புதுயுகம் மாவட்ட ஒருங்கிணைப்பாளரான டாக்டர் சிவரஞ்சனி, "" தற்கொலை முடிவை தேர்வு செய்த பலரை கவுன்சிலிங் மூலம் காப்பாற்றியுள்ளோம். ஒரு குடும்பத்தில் ஒருவர் தற்கொலை செய்தால், அந்த எண்ணம் மற்றவர்களுக்கும் வந்துவிடும். அதனால் கடந்த ஆண்டுகளில் தற்கொலை செய்த குடும்பத்தினரின் வீடுகளுக்கும் சென்று கவுன்சிலிங் கொடுக்கிறோம்.24 மணி நேரமும் இலவச அழைப்பு எண் மூலம் 0452- 258 0011 ல் தொடர்பு கொள்ளலாம். தொழில் மற்றும் பொருளாதார நெருக்கடியால் தற்கொலை முடிவை யாராவது எடுத்தால், அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவிகள் கிடைக்க வழிகாட்டியாகவும் இம்மையம் செயல்படும்'', என்றார்.



கண்ணகி செய்தது சரியா?

அன்று கண்ணகி தனது கணவனுக்காக மதுரையை எரித்தாள். இன்று மனைவி தனது கள்ளக்காமத்திற்காக கணவனையே கொல்ல முயன்றாள். இந்த இருவரில் யார் புத்திசாலி?

கண்டிப்பாக கண்ணகியை யாரும் புத்திசாலி என்று சொல்லமாட்டார்கள். ஏனென்றால் கணவனுக்காக அவள் எதைச்செய்தாலும் அவையெல்லாம் சரி என்று நினைத்து விட்டாள். இந்தக்காலத்தில் அந்தச் செயலுக்குப் பெயர்தான் சுயசிந்தனையற்ற “பெண்ணடிமைத்தனம்”. தனக்கென்று எதையும் சிந்திக்கத்தெரியவில்லையே!

இந்தக்காலத்தில் தன் விருப்பத்திற்குத் தடையாக வரும் கணவனையும் எதிர்க்கலாம், அதையும் தாண்டி கொல்லவும் செய்யலாம் என்ற தெளிவான சுய சிந்தனையுடன் இருப்பதற்குப் பெயர்தான் சுயமாக சிந்திக்கத் தெரிந்த பெண்ணடிமைத்தனத்திலிருந்து விடுபட்ட “சுதந்திரப் பெண்”.

தினமலர் ஜனவரி 07,2011

தூத்துக்குடி:தூத்துக்குடியில், கள்ளக்காதலனோடு சேர்ந்து, கணவர் முகத்தை தலையணையால் அழுத்தி, கொல்ல முயன்ற பெண் கைது செய்யப்பட்டார்.தூத்துக்குடி, தாளமுத்துநகரை அடுத்த அய்யர்விளையைச் சேர்ந்தவர் நடராஜன்(49); மளிகை கடை வியாபாரி. இவரது மனைவி பால்கனி(40). இவர்களுக்கு குழந்தையில்லை. இந்நிலையில், பால்கனிக்கும், உறவினர் பழனிக்கும்(43), கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அதை, நடராஜன் கண்டித்தார்.நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணியளவில், பால்கனி வீட்டிற்கு வந்த பழனி, அவருடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, தூக்கத்தில் இருந்து திடீரென கண் விழித்த நடராஜன், அதை பார்த்து விட்டார். அதனால், அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.உடனே பால்கனியும், பழனியும் சேர்ந்து, தலையணையை எடுத்து, நடராஜன் முகத்தில் அழுத்தினர். அதில், அவர் மூச்சுத்திணறி இறந்தது போல நடித்ததால், அவர் இறந்துவிட்டதாக கருதி, இருவரும் வீட்டை விட்டுவெளியேறினர்.சிறிது நேரம் கழித்து எழுந்த நடராஜன், நடந்த சம்பவம் குறித்து தாளமுத்துநகர் போலீசில் புகார் செய்தார். அவரை கொலை செய்ய முயன்ற மனைவி பால்கனி, கள்ளக்காதலன் பழனியை போலீசார் கைது செய்தனர்.

Wednesday, January 05, 2011

பெண் “கை” வைக்க ஆரம்பித்தால்!

"டீன்' பதவி ஆசை: சான்றிதழில் திருத்தம் செய்து புனிதமான டாக்டர் தொழிலுக்கு களங்கம்

Dinamalar ஜனவரி 06,2011

"அரசு மருத்துவக் கல்லூரி டீன் பதவிக்கு ஆசைப்பட்டு, கல்வி சான்றிதழில், "கை' வைத்த பேராசிரியை மீது, விரைவில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்; முதற்கட்டமாக, "சஸ்பெண்ட்' நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என, தமிழக சுகாதாரச் செயலர் சுப்புராஜ் தெரிவித்தார்.சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில், அறுவை சிகிச்சை பேராசிரியையாக வேலை செய்பவர் பூங்கோதை. சில மாதங்களுக்கு முன், தன்னுடைய சான்றிதழ் காணவில்லை என, புகார் செய்தார்; மாற்று சான்றிதழ் பெற்றார்.அதில், தன்னுடைய பிறந்த ஆண்டை 1953 என்பதற்கு பதிலாக, 1956 என திருத்தம் செய்துள்ளார்.

அதேபோல, பணிக்கால பதிவேட்டிலும் திருத்தம் செய்து, அத்துடன் மாற்றுச் சான்றிதழை இணைத்துள்ளார்.இந்த மோசடி காரணமாக, அரசு மருத்துவக் கல்லூரி டீன் பதவி உயர்வுக்கான பட்டியலில், பூங்கோதை பெயர் முதலிடத்துக்கு வந்தது. இதுகுறித்து, பதவி உயர்வு பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டதால் பாதிக்கப்பட்ட டாக்டர் ஒருவர், அப்போதைய சென்னை மருத்துவக் கல்லூரி டீன் மோகனசுந்தரத்துக்கு புகார் அனுப்பினார்.

அதன் எதிரொலியாக, அரசு கெஜட்டில் பதிவாகி இருந்த பூங்கோதையின் வயது உள்ளிட்ட விவரங்கள், ஆய்வு செய்யப்பட்டது. அதில், பேராசிரியை பூங்கோதை பிறந்த ஆண்டு, 1953 என்று இருப்பது உறுதியானது. அதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக, அவரது பள்ளிப் படிப்பு சான்றிதழ் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டன.பள்ளி சான்றிதழிலும் 1953 என பதிவு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பூங்கோதை வயது தொடர்பாக நடத்தப்பட்ட ரகசிய விசாரணையில், அவர் செய்துள்ள மோசடி அம்பலமாகியுள்ளது.இது தொடர்பாக, தீவிர விசாரணை நடத்தி வரும், சென்னை மருத்துவக் கல்வி இயக்குனர் கனகசபை கூறுகையில், "மருத்துவக் கல்லூரி பேராசிரியை பூங்கோதை, சான்றிதழில் பிறந்த ஆண்டை திருத்தி மோசடி செய்திருப்பது, பள்ளி சான்றிதழ் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து விசாரணை நடக்கிறது."இரண்டொரு நாளில் சுகாதாரச் செயலர் சுப்புராஜ் வசம் அறிக்கை தாக்கல் செய்யப்படும். துறை ரீதியாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, கட்டாய ஓய்வு வழங்கவும் வாய்ப்புள்ளது' என்றார்.சுகாதாரத் துறைச் செயலர் சுப்புராஜ் கூறுகையில், "பேராசிரியை மீதான அறிக்கை கைக்கு கிடைத்ததும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை நிச்சயம் உண்டு. முதற்கட்டமாக "சஸ்பெண்ட்' செய்யப்பட்டு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.அரசு மருத்துவக் கல்லூரியில் டீன் பதவிக்கு வர வேண்டும் என்றால், ஓய்வு பெறுவதற்கான கால அவகாசம் குறைந்தது ஓராண்டாவது இருக்க வேண்டும். ஆனால், பூங்கோதை ஓய்வு பெற இன்னும் ஆறு மாதங்களே உள்ளது.எனவே, டீன் பதவிக்கு ஆசைப்பட்டு, திட்டமிட்டு இந்த மோசடியில் ஈடுபட்டு, புனிதமான டாக்டர் தொழிலுக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளார் என, பாதிக்கப்பட்ட டாக்டர்கள் கூறினர்.

======

பணியிடத்தில் பாலியல் கொடுமை தடுப்புச் சட்டம் (THE PROHIBITION OF SEXUAL HARASSMENT OF WOMEN AT WORKPLACE BILL, 2010) என்று ஒரு புது சட்டம் சமீபத்தில் அரசாங்கம் இயற்றியிருப்பதுபற்றி பணிபுரியும் பல பெண்களுக்குத் தெரியாது போலிருக்கிறது! மாமியார் வீட்டில் ஏற்படும் “இன்னல்களை” ஒடுக்க மருமகள்களுக்கு வரதட்சணை தடுப்புச் சட்டம் பயன்படுவது போல பணிபுரியும் இடத்தில் ஏற்படும் “சிக்கல்களை” சமாளிக்க இந்த புது சட்டம் பல பெண்களுக்குப் பயன்படும். புத்திசாலிகள் இந்த சட்டத்தை நன்றாகப் புரிந்துகொள்வார்கள்.

குறிப்பு: வழக்கம்போல் இந்த சட்டமும் பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கும். ஆண்கள் இந்த சட்டத்தைப் பயன்படுத்த முடியாது.

THE PROHIBITION OF SEXUAL HARASSMENT OF WOMEN AT WORKPLACE BILL, 2010 சட்டத்தின் ஒரு பகுதி

3. At any workplace, no woman, shall be subjected to sexual harassment including unwelcome sexually determined behavior, physical contact, advances, sexually coloured remarks, showing pornography, sexual demand, request for sexual favours or any other unwelcome conduct of sexual nature whether verbal, textual, physical, graphic or electronic or by any other actions, which may include, but is not limited to -

(i) implied or overt promise of preferential treatment in employment; or
(ii) implied or overt threat of detrimental treatment in employment; or
(iii) implied or overt threat about the present or future employment status;
(iv) conduct which interferes with work or creates an intimidating or offensive or hostile work environment; or
(iv) Humiliating conduct constituting health and safety problems.





Tuesday, January 04, 2011

இப்படியும் ஒரு மனைவி, இப்படியும் ஒரு போலிஸ்


நெல்லை: பாளையங்கோட்டையில் பார்வையற்றவர் மனைவியுடன் முன்னாள் காவலர் ஓட்டம் பிடித்துள்ளார். தனது மனைவியை மீட்டுத் தருமாறு கணவர் நெல்லை எஸ்பியிடம் புகார் கொடுத்தார்.

பாளை கக்கன்நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் ராஜ்குமார். பார்வையற்றவரான இவர் நேற்று எஸ்பி விஜேந்திர பிதாரியிடம் அளித்த மனுவில் குறிப்பி்ட்டுள்ளதாவது,

எனக்கும், கக்கன்நகரைச் சேர்ந்த அந்தோணியம்மாள் என்பவருக்கும் கடந்த 1995-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மகன் 8-ம் வகுப்பிலும், மகள் 6-ம் வகுப்பிலும் படித்து வருகின்றனர். மனைவி சத்துணவு ஊழியராக வேலை செய்தார். நான் பூத் ஒன்றை நடத்துகிறேன்.

எங்கள் பூத்திற்கு சாந்தி நகர் போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்த சுப்பையா என்பவர் வருவார். அவர் இன்ஸ்பெக்டர் என கூறி பல இடங்களில் மோசடி செய்ததால் டிஸ்மி்ஸ் செய்யப்பட்டார். அவர் என மனைவியுடன் தொடர்பு வைத்தார்.

இதை நான் கண்டித்ததால் என் மனைவியை அழைத்து கொண்டு சென்று விட்டார். நான் அவர்களை பல இடங்களில் தேடியும் பலன் இல்லை. மகளிர் காவல் நிலையத்திலும் புகார் செய்தேன். எனவே பார்வையற்ற எனக்கு எனது மனைவியை மீ்ட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.




“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.