இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, July 31, 2011

போலிஸ் திருடன் விளையாட்டு!

போலிஸ், திருடன் விளையாட்டா அல்லது போலிஸ் திருடன் விளையாட்டா என்று செய்தியைப் படித்து நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.

லஞ்சப்பணத்துடன் போலீஸ் ஏட்டு ஓட்டம் திருடன் என துரத்திய இன்ஸ்பெக்டர்
ஆகஸ்ட் 01,2011 தினமலர்

ஆலங்குடி : ஆலங்குடியில் லஞ்சப்பணத்துடன் ஓடியவர் போலீஸ் ஏட்டு என தெரியாமல், இன்ஸ்பெக்டர், துப்பாக்கியுடன் துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டராக செந்தில்குமார் உள்ளார். இவர், பல்வேறு அதிரடிகளை அரங்கேற்றி அதனால், கெட்ட பெயரை சம்பாதித்துள்ளார்.

கடந்த மாதம், ஆலங்குடி பாப்பம்பட்டி முக்கத்தில், அதிகாலையில் டாஸ்மாக் சரக்கு விற்ற பார் உரிமையாளர் முத்துக்குமாரை, தெருவில் அடித்து, உதைத்து ஊர்வலமாக ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்றார். இதை கண்டித்து, பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். உயர் அதிகாரிகள் "டோஸ்' விட்டதால், சில நாட்கள் அமைதியாக இருந்தார்.

நேற்று காலை மீண்டும் இன்ஸ்பெக்டர் தனது பார்வையை, "டாஸ்மாக்' கடைபக்கம் திருப்பினார். காலை 8 மணிக்கு சரக்கு விற்ற முத்துக்குமாரை பிடித்தார். ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றால் பிரச்னையாகி விடும் என்று, மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கச் சென்றார். அவர் சென்ற நேரத்தில் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் கணேசன் உட்பட யாரும் இல்லை. ரெய்டுக்கு சென்றிருப்பதாக அங்கிருந்த போலீஸ் ஏட்டு ஒருவர் கூறினார்.

அங்கேயே காத்திருந்த செந்தில்குமாரை தூரத்திலேயே பார்த்து விட்ட மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் கணேசன், மாமூல் பணப்பையை ஏட்டு அம்பிகாபதியிடம் கொடுத்து, நான் சொன்ன பின், தந்தால் போதும் என்று கூறிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று செந்தில்குமாரிடம் பேசிக்கொண்டிருந்தார்.

ஸ்டேஷனுக்கு வந்திருப்பது யார்? என்று தெரியாமல், தூரத்தில் நின்று கொண்டிருந்த ஏட்டு அம்பிகாபதியை, ஆபீசுக்குள் போ' என்று கணேசன் சைகை காட்டினார். சைகையை தவறாக புரிந்து கொண்ட அம்பிகாபதி, லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு வந்து விட்டதாகக் கருதி, பணப்பையுடன் ஓட்டம் பிடித்தார். அதை பார்த்து, கணேசன் சத்தம் போட்டதால், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், அவரை துரத்தினர்.

காம்பவுண்ட் சுவரெல்லாம் ஏறிக் குதித்து ஓடிய ஏட்டுவை பிடிக்க முடியாததால், ஆத்திரமடைந்த செந்தில்குமார், "துப்பாக்கியை எடுத்து சுட்டு விடுவேன்' என்று மிரட்டினார். அதனால், பணப்பையை மட்டும் வீசியெறிந்து விட்டு, அம்பிகாபதி தப்பிச்சென்றார். அவர் வீசியெறிந்த, 40 ஆயிரம் ரூபாயை செந்தில்குமார் கைப்பற்றினர்.

ஆலங்குடி டி.எஸ்.பி., செல்லப்பாண்டியன் விடுமுறையில் சென்றிருப்பதால், அறந்தாங்கி டி.எஸ்.பி., முருகேசன் கூடுதல் பொறுப்பாக பார்க்கிறார். தகவலறிந்த அவர், செந்தில்குமாரை மொபைல் போனில் அழைத்து கண்டித்தார். அவரை, செந்தில்குமார் எதிர்த்து பேசியதால், எஸ்.பி., முத்துச்சாமியிடம் புகார் செய்தார். உடனடியாக இன்ஸ்பெக்டரை மைக்கில் அழைத்து எஸ்.பி., "டோஸ்' விட்டார். இறுதியாக, சரக்கு விற்ற முத்துக்குமாரும், பணப்பையுடன் ஓட்டம் காட்டிய ஏட்டு அம்பிகாபதியும் விடுவிக்கப்பட்டனர்.

===

ஐயோ பாவம் இந்திய மக்கள். இதுபோன்றவர்களின் பாதுகாப்பில்தான் தாங்கள் மிகுந்த பாதுகாப்புடன் வாழ்வதாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் தலையெழுத்தை யாரால் மாற்ற முடியும்?



Saturday, July 30, 2011

ஒவ்வொரு கொலையிலும் ஒரு பெண்ணா?

ஒவ்வொருவரின் வாழ்விலும் ஏற்படும் வெற்றி அல்லது தோல்விக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்வார்கள். அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

ஆனால் கண்டிப்பாக ஒவ்வொரு கொலைச் சம்பவத்திற்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் அதுவும் மனைவியாக இருக்கிறாள் என்று உறுதியாக சொல்லும் அளவிற்கு தினசரி செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

படித்த நாகரீகமான பெண்கள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு இந்திய வரதட்சணை தடுப்புச் சட்டங்களும், காவல்+நீதித்துறைகளும் இலவசமாக உதவிசெய்கின்றன. போதிய படிப்பறிவும் அனுபவும் இல்லாத பெண்களுக்கு கூலிப்படைகள் உதவி செய்கின்றன.

வழிமுறை வேறாக இருந்தாலும் மனைவியரின் நோக்கம் ஒன்றுதான். அதுபோலவே உதவிசெய்பவர்களின் உருவங்கள் வேறாக இருந்தாலும் கடைசியில் மனைவி எதிர்பார்த்தது போலவே கணவனின் வாழ்வை சிதைத்துவிடுவார்கள்.


ஆட்டோ டிரைவர் கடத்தல்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொல்ல சதித்திட்டம் மனைவி உள்பட 3 பேர் கைது



ராசிபுரம், ஜூலை.29-2011 மாலைமலர்

ராசிபுரம் அருகே ஆட்டோ டிரைவரை கடத்தி கழுத்தை அறுத்துவிட்டு ஆட்டோவை திருடிச்சென்ற சம்பவத்தில் மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய தகவல்கள் அம்பலம் ஆனது. இதையட்டி ஆட்டோ டிரைவரின் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் உள்பட 3 பேரை வெண்ணந்தூர் போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:- ராசிபுரம் அருகே உள்ள வி.ஐ.பி. நகரைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 45) இவர் சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளார். தினந்தோறும் ஆண்டகளூர்கேட்டில் ஆட்டோவை நிறுத்திவைத்து வாடகைக்கு அவரே ஓட்டி வந்தார்.

இவரது மனைவி சுமதி என்கிற காந்திமதி (43). இவர்களுக்கு பூவரசன் (15) என்ற மகனும், சொர்ணமுகி (14) என்ற மகளும் உள்ளனர். சண்முகசுந்தரத்தின் மனைவி சுமதி வெண்ணந்தூர் அருகே உள்ள சவுதாபுரம் ஊராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக மக்கள் நலப்பணியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 13-6-11-ந் தேதி இரவு 11 மணியளவில் ஆட்டோ டிரைவர் சண்முகசுந்தரம் ஆண்டகளுர்கேட்டில் ஆட்டோவை நிறுத்தி இருந்தார். அந்த சமயத்தில் அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் சண்முகசுந்தரத்திடம் வையப்பமலை அருகேயுள்ள ஆத்துமேடு என்ற இடத்திற்கு போக வேண்டும் என்று கூறி ஆட்டோவில் சென்றுள்ளனர்.

ஆட்டோவை சண்முகசுந்தரம் ஆத்துமேடு பக்கமுள்ள தொட்டிப்பட்டி சாலையில் ஓட்டிச் சென்றபோது திடீரென்று ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் சண்முகசுந்தரத்தை கத்தியால் குத்தினர். இதில் அவருக்கு கழுத்து, கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. சண்முகசுந்தரத்தை தாக்கிவிட்டு ஆட்டோவை அந்த மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

பலத்தகாயம் அடைந்த சண்முகசுந்தரத்தை ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுபற்றி வெண்ணந்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சண்முகசுந்தரத்தை கத்தியால் குத்திவிட்டுச் சென்ற மர்ம நபர்களையும், திருடப்பட்ட ஆட்டோவையும் தேடி வந்தனர். இந்த நிலையில் கடத்தப்பட்ட ஆட்டோ சங்ககிரி பக்கமுள்ள எடப்பாடி ரோட்டில் அனாதையாக கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றினார்கள்.

சண்முகசுந்தரத்தை கத்தியால் குத்திவிட்டு தப்பித்துச் சென்ற மர்ம நபர்களை தொடர்ந்து போலீசார் தேடிவந்தனர். இதற்கிடையில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் உத்தரவின் பேரில் நேற்றுமுன்தினம் அதிகாலையில் ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்செல்வன் தலைமையில் வெண்ணந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு பாலகிருஷ்ணன், சப்&இன்ஸ்பெக்டர் அன்பழகன், சிறப்பு சப்&இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, வேலாயுதம், போலீஸ்காரர்கள் பாலமுருகன், கணேசன், கனகராஜ், பெண் போலீஸ் உமா ஆகியோர் வாகன சோதனை செய்தனர்.

அப்போது சேலம்-நாமக்கல் மெயின்ரோட்டில் ஆட்டையாம்பட்டி பிரிவு ரோடு அருகில் சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த வெள்ளித்திருப்பூரைச் சேர்ந்த செந்தில் (30) சங்கர் (29) ஆகிய 2 பேர்களை கைது செய்தனர். அப்போது அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கைது செய்யப்பட்ட செந்தில் என்பவனின் தங்கை பிரியாவின் வீடு சவுதாபுரத்தில் இருப்பதாகவும் தங்கையை பார்க்க வந்தபோது அங்கு மக்கள் நலப்பணியாளராக பணியாற்றி வந்த ஆட்டோ டிரைவர் சண்முகசுந்தரத்தின் மனைவி சுமதிக்கும் தனக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

பின்னர் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருந்ததாகவும், இதைக் கருத்திற்கொண்டு சுமதியின் கணவர் சண்முகசுந்தரத்தை கொலைசெய்ய திட்டம் தீட்டி இருந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்படி கடந்த 13-6-11-ந் தேதி செந்திலும் அவனது மாமன் மகன் சங்கர் என்பவனும் ஆண்டகளுர்கேட்டிற்கு வந்துள்ளனர்.

அங்கிருந்து சுமதிக்கு போன் செய்து உன் கணவரை (சண்முகசுந்தரத்தை) முடிக்க வந்துள்ளோம் என்று கூறிவிட்டு அங்கு இருந்த ஆட்டோ டிரைவர் சண்முகசுந்தரத்திடம் ஆட்டோவை வாடகைக்கு பேசி எடுத்துச் சென்றனர். பிறகு வையப்பமலை பக்கமுள்ள ஆத்துமேடு தொட்டிபட்டி சாலையில் சென்றபோது ஆட்டோ டிரைவர் சண்முகசுந்தரத்தை கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு ஆட்டோவை கடத்திச் சென்றதை போலீசாரிடம் கைது செய்யப்பட்ட செந்தில் மற்றும் சங்கர் ஆகியோர் தெரிவித்தனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சுமதியிடம் விசாரணை செய்தனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தனது கணவர் சண்முகசுந்தரத்தை கொலை செய்ய திட்டமிட்டுக் கொடுத்த குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதன்பேரில் ஆட்டோ டிரைவர் சண்முகசுந்தரத்தை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக அவரது மனைவி சுமதி, மற்றும் கள்ளக்காதலன் செந்தில், அவரது உறவினர் சங்கர் ஆகிய 3 பேர்களையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட செந்தில் லாரி டிரைவர் ஆவார். சங்கர் லாரியில் கிளீனராக வேலை பார்த்து வருகிறார் கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ய மனைவியே திட்டம் தீட்டிய இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.