இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, February 22, 2012

ஆசை வார்த்தை கூறி பெண்ணை ஏமாற்றுவது எப்படி தெரியுமா?

ராமநாதபுரம்:முதல் திருமணத்தை மறைத்து ராமநாதபுரத்தை சேர்ந்த இருவரை காதலித்து திருமணம் செய்த பெண், யாருக்கு சொந்தம் என கடைசி இரண்டு கணவர்களிடையே தகராறு ஏற்பட்டது.

பட்டுக்கோட்டை சுப்பிரமணி மகள் ரேணுகா, 27. இவரது 14 வயதில் அதே பகுதியை சேர்ந்த தென்னரசுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். தென்னரசு, வேலை தேடி வெளிநாட்டிற்கு சென்றார். பட்டுக்கோட்டையில் ராமநாதபுரத்தை சேர்ந்த கார் டிரைவர் செந்தில்குமார் என்பவரை ரேணுகா சந்தித்தார். அப்போது முதல் திருமணத்தை மறைத்த ரேணுகா, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் செந்தில்குமாரை திருமணம் செய்து கொண்டார். (செந்தில்குமார் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தவர்).

இருவரும் ராமநாதபுரம் அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்தநிலையில், அரண்மனை அருகே ஒரு கடையில் ரேணுகா வேலைக்கு சென்றார். அங்கு வந்து சென்ற வாடிக்கையாளரான மதுரை திருப்பரங்குன்றம் செந்தில்மனோகரன் என்பவரிடம் ரேணுகா, முதல் இரண்டு திருமணம் மற்றும் குழந்தைகள் விபரத்தை மறைத்தார். இவர்கள், கடந்த ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருமணம் செய்தனர். பின்னர் இவர்கள் ராமநாதபுரம் சக்கரக்கோட்டையில் வசித்து வந்தனர்.மனைவியை காணவில்லை என செந்தில்குமார் தேடி வந்தபோது, சக்கரக்கோட்டையில் வசித்து வருவது தெரிந்தது. அங்கு சென்று ரேணுகாவை தன்னுடன் அனுப்பி வைக்க செந்தில் மனோகரனை வற்புறுத்தினார். இருவருக்கும் இடையே, ரேணுகா, யாருக்கு சொந்தம் என்பதில் தகராறு ஏற்பட்டது. இருவரும் ராமநாதபுரம் மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

ராமநாதபுரம் இன்ஸ்பெக்டர் மீனாம்பாள், ரேணுகாவிடம் நடத்திய விசாரணையில், ""ஆடம்பரமாகவும், வசதியாகவும் வாழவே, முதல் மற்றும் இரண்டாவது திருமணத்தை மறைத்து மூன்றாவது திருமணமும் செய்து கொண்டேன்,'' என தெரிவித்தார்."இனி ராமநாதபுரம் பக்கமே தலைகாட்டக்கூடாது' என எச்சரித்து, பட்டுக்கோட்டையில் உள்ள பெற்றோரிடம் ரேணுகாவை, போலீசார் ஒப்படைத்தனர். இதில் ஏமாற்றமடைந்த செந்தில்மனோகரன், செந்தில்குமாருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
=======

இந்த செய்தி மூலம் இந்திய குடிமக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் மேலே செய்தியில்உள்ளது போன்ற சம்பவத்தை ஒரு ஆண் செய்திருந்தால் “ஆசை வார்த்தை கூறி பெண்ணை கற்பழித்ததாக” வழக்கு பதிவு செய்வார்கள். இந்த சம்பவத்தை ஒரு பெண் செய்தால் அறிவுரை கூறி அனுப்பிவைப்பார்கள். ஏனென்றால் இதுபோன்ற பெண்கள்தான் இந்திய (நாட்டின்) காவல்துறையின் கண்கள்!!!



Tuesday, February 14, 2012

இப்படியும் நடக்குமா? நடக்கும்... ... ...


ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆசிரியரை ஆட்டோவில் கடத்தி, கட்டாய திருமணம் செய்த, பெண் தலையாரியை போலீசார் கைது செய்தனர்.விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு புதுப்பட்டியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்,27. பி.எஸ்சி, பி.எட்., பட்டதாரியான இவர் ,வன்னியம்பட்டி தனியார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்.

இவருக்கு திருமணம் செய்ய , பூவாணியில் தலையாரியாக வேலை பார்க்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டின்பட்டியை சேர்ந்த முத்துலட்சுமி,28,யை, கடந்த ஒரு ஆண்டுக்கு முன் பெண் பார்த்தனர்.

இதன் பின் முத்துகிருஷ்ணன் வீட்டார் ,முத்து லெட்சுமியை திருமணம் செய்ய வேண்டாம் என கூறினர். ஆனால் பெண்ணிடம், முத்துக்குமார் தொடர்ந்து மொபைல் போனில் பேசி வந்துள்ளார். இதில் முத்துலட்சுமி முன்னுக்கு பின் முரணாக பேசியதாக கூறி, அவருடனான மொபைல் போன் தொடர்பை துண்டித்தார். இந்நிலையில், முத்துக்குமாருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் செய்ய, அவரின் பெற்றோர் முடிவு செய்தனர். இதையறிந்த முத்துலட்சுமி, நேற்று முன் தினம் மாலை, பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய ஆசிரியர் முத்துக்குமாரை, தனது உறவினர்களுடன் சேர்ந்து, ஆட்டோவில் கடத்தி , மேல தொட்டியப்பட்டியில் வைத்து கட்டாய திருமணம் செய்தார். வேலைக்கு சென்றவர் வீடு திரும்பாதது குறித்து, அவரது தந்தை பிலாவடியான்,வன்னியம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்படி ,போலீசார் முத்துலட்சுமி உட்பட ஏழு பேர் மீது வழக்கு தொடர்ந்து,முத்துலட்சுமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Sunday, February 05, 2012

அண்ணனின் பாசமும், தங்கையின் கள்ளக் காதலும்

இந்தியக் குடும்பங்களில் நடக்கும் கள்ளக்காம பிரச்சனைகளுக்கு அவரவர்களே நீதி வழங்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுவிட்டது. ஏனென்றால் “கள்ளக் காமத்தில்” ஈடுபடும் பெண்ணை தண்டிக்க இந்திய சட்டத்தில் இடமே இல்லை.

IPC497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man , such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.



அவினாசி : அவினாசி அனைத்து மகளிர் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டர் கண்ணெதிரே, தங்கையை அண்ணன் அரிவாளால் வெட்டினார். ஸ்டேஷனுக்குள் நடந்த கொலைவெறி தாக்குதலால், போலீசார் நிலைகுலைந்து போயினர். உயிருக்குப் போராடி வரும் பெண்ணுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அவினாசி அருகே நம்பியாம்பாளையம் ஊராட்சி, அனந்தகிரியைச் சேர்ந்த அய்யாசாமி மகள் அம்பிகா, 18. இரு மாதம் முன், சுண்டக்காம்பாளையத்தைச் சேர்ந்த சண்முகம், 22, என்பவருடன் திருமணம் நடந்தது. ஒரே வாரத்தில், "சண்முகத்துடன் வாழப் பிடிக்கவில்லை' என்று கூறிய அம்பிகா, தாய் வீடு வந்து விட்டார். இந்நிலையில், சுண்டக்காம்பாளையத்தைச் சேர்ந்த வடிவேல் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. ஒரு வாரம் முன், காதலனுடன் அம்பிகா வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

அவரது தாய் பழனியம்மாள் நேற்று காலை, அவினாசி அனைத்து மகளிர் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். அதில், "மகள் அம்பிகாவை, அவரது கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். அதன்படி பெண் இன்ஸ்பெக்டர் குப்பு, அம்பிகாவை அழைத்து நேற்று மாலை, ஸ்டேஷனில் விசாரித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அம்பிகாவின் அண்ணன் வெள்ளியங்கிரி, 21, விசாரணைக்காக ஸ்டேஷனுக்குள் வந்துள்ளார். "வடிவேலுவுடன் தான் வாழ்வேன்' என்று அம்பிகா, இன்ஸ்பெக்டரிடம் கூறிக் கொண்டிருந்தார். அதைக் கேட்டு ஆத்திரமடைந்த வெள்ளியங்கிரி, ஆவேசத்துடன், "திரும்பத் திரும்ப சொல்லியும், அவனுடன் போகிறேன் என்றா சொல்கிறாய்' என்று கேட்டுக் கொண்டே, மறைத்து வைத்திருந்த அரிவாளால், அம்பிகாவின் முதுகில் வெட்டியுள்ளார்.

இதைக் கண்ட இன்ஸ்பெக்டர் குப்பு, அதிர்ச்சியடைந்து கூச்சல் போட்டார். அவர் போட்ட சத்தம் கேட்டு, ஸ்டேஷனிலிருந்து போலீசார் ஓடிச் சென்று வெள்ளியங்கிரியை பிடித்தனர். உயிருக்கு போராடிய அம்பிகாவை, அவினாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுவி அளிக்கப்பட்ட அவர், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். போலீஸ் ஸ்டேஷனில் வைத்து தங்கையை, அண்ணன் அரிவாளால் வெட்டியதை அறிந்த திருப்பூர் எஸ்.பி., பாலகிருஷ்ணன், நேரில் விசாரணை நடத்தினார்.



Wednesday, February 01, 2012

கணவன் வேண்டுமா? கலெக்டரிடம் மனு கொடுக்கலாம்!

பின்வரும் செய்தித்தாள் செய்தியிலிருந்து இந்தியத் திருமண வாழ்க்கை பற்றி கீழ்கண்ட உண்மைகள் தெரிய வருகிறது!

  • திருமணம் செய்தால் கணவன் தனது குடும்பத்திற்கு (பெற்றோர்களுக்கு) செய்ய வேண்டிய கடமைகளை செய்யமுடியாது!
  • கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் உறவினர்கள், நண்பர்களின் உதவியை நாடுவதைவிட போலிஸ், நீதிமன்றம், கலெக்டர் இவர்களை நாடினால் நல்ல பலன் கிடைக்கும்! (தொடர்புடைய பதிவு: கலெக்டரை கல்யாணத் தரகராக்கும் இளம் பெண்கள்!)
======






கோவை: கல்லூரியில் படிக்கும்போது திருமணம் செய்து, பிரிந்த காதல் ஜோடி, 10 மாத குழந்தை, முன்னிலையில் மீண்டும் தங்கள் திருமண ஒப்பந்தத்தை, "சட்டப்படி' நேற்று உறுதி செய்தது.

மதுரை, அலங்காநல்லூரைச் சேர்ந்தவர் செல்வம், 23; கோவை, அரசு கல்லூரி மாணவர்கள் விடுதியில் தங்கி கல்லூரியில், படித்தார். இவருடன் ஒரே வகுப்பில், கோவை, கணுவாயைச் சேர்ந்த சரண்யா,23;வும் படித்தார்.
கடந்த 2008-10 வரையிலான கல்லூரி நாட்களில், இவர்களுக்குள் ஏற்பட்ட காதல், 2010, ஜூன் 26 அன்று, திருமணத்தில் முடிந்தது.

நண்பர்கள் பாதுகாப்பில் தங்கியிருந்த இவர்கள், மதுரை, அலங்காநல்லூர் சென்றனர். செல்வத்தின் பெற்றோர், சரண்யாவை மருமகளாக ஏற்றனர்.
அடுத்த சில மாதங்களில், இவர்களுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது; கர்ப்பமாக இருந்த சரண்யா கோவை திரும்பினார்.

பெற்றோர் பாதுகாப்பில் இருந்த சரண்யாவுக்கு, பெண் குழந்தை பிறந்தது. ஒரு முறை மட்டும் கோவை வந்த, செல்வம், மனைவியையும் குழந்தையையும் பார்த்து விட்டுச் சென்று விட்டார்.

குழந்தையை பெற்றோர் பராமரிப்பில் ஒப்படைத்து விட்டு, தனியார் கம்பெனியில் வேலைக்குச் சென்றார், சரண்யா.

இந்நிலையில், மக்கள் குறைகேட்பு நாளில், கோவை கலெக்டரை சந்தித்து, கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என, சரண்யா மனு கொடுத்தார்.

கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு விசாரணைக்கு, இந்த மனு அனுப்பப்பட்டது. மாவட்ட நீதிபதி ஆதிநாதன் உத்தரவில், சட்ட ஆணைக்குழு செயலாளர் நீதிபதி மகிழேந்தி, சட்ட ஆலோசகர் வக்கீல் சுவாமிநாதன் ஆகியோரின் விசாரணைக்கு, மனு எடுத்துக் கொள்ளப்பட்டது. புகார் அளித்த சரண்யா, கணவர் செல்வம் ஆகியோர் வரவழைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டனர்.
"மனைவியையும் குழந்தையையும் ஏற்றுக் கொள்கிறேன். தற்போது, சென்னை மேயரின் "மனிதநேய அறக்கட்டளை'யில், ஐ.ஏ.எஸ்.,தேர்வு எழுத பயிற்சி பெறுகிறேன். இதேபோல், மதுரையில் இருக்கும் குடும்பத்துக்கு செய்ய வேண்டிய, சில கடமைகள் உள்ளன. இவற்றை முடித்துவிட்டு, மூன்று மாதங்களுக்குப் பின், மனைவி, குழந்தையை அழைத்துச்செல்கிறேன்'' என, செல்வம் உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து, இருவருக்கும் 10 மாத பெண் குழந்தையின் முன்னிலையில், திருமண ஒப்பந்தத்தை உறுதி செய்து, அதிகாரிகள் கையெழுத்து பெற்றனர்.

===========



“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.