இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, February 05, 2012

அண்ணனின் பாசமும், தங்கையின் கள்ளக் காதலும்

இந்தியக் குடும்பங்களில் நடக்கும் கள்ளக்காம பிரச்சனைகளுக்கு அவரவர்களே நீதி வழங்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுவிட்டது. ஏனென்றால் “கள்ளக் காமத்தில்” ஈடுபடும் பெண்ணை தண்டிக்க இந்திய சட்டத்தில் இடமே இல்லை.

IPC497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man , such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.



அவினாசி : அவினாசி அனைத்து மகளிர் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டர் கண்ணெதிரே, தங்கையை அண்ணன் அரிவாளால் வெட்டினார். ஸ்டேஷனுக்குள் நடந்த கொலைவெறி தாக்குதலால், போலீசார் நிலைகுலைந்து போயினர். உயிருக்குப் போராடி வரும் பெண்ணுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அவினாசி அருகே நம்பியாம்பாளையம் ஊராட்சி, அனந்தகிரியைச் சேர்ந்த அய்யாசாமி மகள் அம்பிகா, 18. இரு மாதம் முன், சுண்டக்காம்பாளையத்தைச் சேர்ந்த சண்முகம், 22, என்பவருடன் திருமணம் நடந்தது. ஒரே வாரத்தில், "சண்முகத்துடன் வாழப் பிடிக்கவில்லை' என்று கூறிய அம்பிகா, தாய் வீடு வந்து விட்டார். இந்நிலையில், சுண்டக்காம்பாளையத்தைச் சேர்ந்த வடிவேல் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. ஒரு வாரம் முன், காதலனுடன் அம்பிகா வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

அவரது தாய் பழனியம்மாள் நேற்று காலை, அவினாசி அனைத்து மகளிர் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். அதில், "மகள் அம்பிகாவை, அவரது கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். அதன்படி பெண் இன்ஸ்பெக்டர் குப்பு, அம்பிகாவை அழைத்து நேற்று மாலை, ஸ்டேஷனில் விசாரித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அம்பிகாவின் அண்ணன் வெள்ளியங்கிரி, 21, விசாரணைக்காக ஸ்டேஷனுக்குள் வந்துள்ளார். "வடிவேலுவுடன் தான் வாழ்வேன்' என்று அம்பிகா, இன்ஸ்பெக்டரிடம் கூறிக் கொண்டிருந்தார். அதைக் கேட்டு ஆத்திரமடைந்த வெள்ளியங்கிரி, ஆவேசத்துடன், "திரும்பத் திரும்ப சொல்லியும், அவனுடன் போகிறேன் என்றா சொல்கிறாய்' என்று கேட்டுக் கொண்டே, மறைத்து வைத்திருந்த அரிவாளால், அம்பிகாவின் முதுகில் வெட்டியுள்ளார்.

இதைக் கண்ட இன்ஸ்பெக்டர் குப்பு, அதிர்ச்சியடைந்து கூச்சல் போட்டார். அவர் போட்ட சத்தம் கேட்டு, ஸ்டேஷனிலிருந்து போலீசார் ஓடிச் சென்று வெள்ளியங்கிரியை பிடித்தனர். உயிருக்கு போராடிய அம்பிகாவை, அவினாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுவி அளிக்கப்பட்ட அவர், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். போலீஸ் ஸ்டேஷனில் வைத்து தங்கையை, அண்ணன் அரிவாளால் வெட்டியதை அறிந்த திருப்பூர் எஸ்.பி., பாலகிருஷ்ணன், நேரில் விசாரணை நடத்தினார்.



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.