இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, July 22, 2013

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடமாக மாறிவிட்ட நீதிமன்றங்கள் - பெண் வழக்கறிஞர்கள் குமுறல்

பெண்கள் மற்றும் குழந்தைகளின் வழக்குகளுக்கு முன்னுரிமை தருவோம் என்று இந்தியத் தலைமை நீதிபதி கூறிவரும் நிலையில் சட்டம் படித்த பெண் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தங்களுக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை இருப்பதாக தலைமைநீதிபதிக்கு கடிதம் அனுப்பியிருப்பது இந்திய நீதித்துறையின் பாதுகாப்பற்ற நிலையை காட்டுகிறது.   சட்டம் படித்த பெண்களுக்கே இந்தநிலை என்றால் சாதாரண பெண்களின் நிலை எப்படி இருக்கும் இந்த நாட்டில்?

இதில் கவனிக்கப்படவேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் குடும்பப் பிரச்சனையை தீர்த்துக்கொள்ள நீதிமன்றத்திற்கு சென்றதால் பல ஆண்டுகளாக வழக்கை நடத்தாமல் நீட்டித்துக்கொண்டிருக்கும் நீதிமன்றத்தின் பிடியில்  சிக்கியிருக்கும் கணவனும் மனைவியும் விரைவில் விடுபடவேண்டும் என்று சனி ஞாயிறு நாட்களில் வழக்கை நடத்தலாம் என்றால் அதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். 

குடும்பநல நீதிமன்றங்கள் கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள பிரச்சனையை தீர்த்துவைக்க முன்னுரிமை கொடுத்து ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் இன்று  வழக்கறிஞர்கள் அதனையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள்.  இது எங்கு போய் முடியுமோ?

ஐகோர்ட் நீதிபதி பணியிடங்களில்பெண்களுக்கு 33 சதவீதம் கோரிக்கை
 ஜூலை 22,2013 தினமலர்
சென்னை:ஐகோர்ட் நீதிபதிகள் பணியிடங்களில், பெண் வழக்கறிஞர்களுக்கு, 33 சதவீத ஒதுக்கீடு கோரி, புதிய தலைமை நீதிபதிக்கு, பெண் வழக்கறிஞர்கள் சங்கம், கடிதம் அனுப்பியுள்ளது.

சுப்ரீம் கோர்ட் புதிய தலைமை நீதிபதியாக, தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவம் பொறுப்பேற்று உள்ளார். சென்னை ஐகோர்ட்டில், தற்போது, 17 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஏற்கனவே, நீதிபதிகள் பணியிடங்களுக்கு, 15 பேர் பரிந்துரைக்கப்பட்டு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.இந்நிலையில், புதிய தலைமை நீதிபதிக்கு, சென்னையில் உள்ள, பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவி பிரசன்னா, துணைத் தலைவி நளினி, செயலர் மஞ்சுளா தேவி ஆகியோர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஐகோர்ட் நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பும்போது, பெண்களுக்கான, 33 சதவீத ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும். தற்போது ஐகோர்ட்டில், பெண் நீதிபதிகள், ஏழு பேர் உள்ளனர். இவர்களில், இரண்டு பேர், வழக்கறிஞராக இருந்து, ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்கள். மீதி, ஐந்து பேர், கீழமை கோர்ட்டுகளில் இருந்து, பதவி உயர்வு மூலம், ஐகோர்ட் நீதிபதியாக ஆனவர்கள். நீதிபதிகள் பணியிடங்கள், வழக்கறிஞர்கள் மத்தியில் இருந்து, 60 சதவீதம், நீதித் துறையில் இருந்து, 40 சதவீதம் (கீழமை கோர்ட்டுகளில் நீதிபதிகளாக பணியாற்றுவோர்) என்கிற அடிப்படையில் நிரப்பப்படுகிறது.

எனவே, நீதிபதிகள் பணியிடங்களில், பெண் வழக்கறிஞர்களுக்கு, 33 சதவீத அடிப்படையில் நிரப்ப வேண்டும். சனி, ஞாயிறு கிழமைகளில் செயல்படும், விடுமுறை கால குடும்ப நல கோர்ட்டுகளுக்கு, எதிர்ப்பு தெரிவிக்கிறோம். அன்றைய நாட்களில், கட்சிக்காரர்களை சந்திக்க முடியும்.மேலும், விடுமுறை நாட்களில் கோர்ட்டுக்கு வருவதில், பாதுகாப்புப் பிரச்னையும் அடங்கிஉள்ளது. எனவே, விடுமுறை நாட்களுக்குப் பதில், கூடுதலாக, குடும்ப நல கோர்ட்டுகளை திறக்க வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.


Thursday, July 11, 2013

காதலித்த ஆணை எப்படி முறைப்படி திருமணம் செய்வது என்று தெரியுமா?

பெண்கள் ஆணின் அழகிலோ, பணத்திலோ மயங்கி மனதை பறிகொடுத்து பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்யும்போது பல சமுதாய சிக்கல்களை சந்திக்கவேண்டியிருக்கிறது.  இது பெண்ணடிமைத் தனத்தினால் புதுமையை விரும்பும் இளம் பெண்களுக்கு ஏற்படும் கொடுமை. மும்பையில் ஒரு புதுமைப் பெண் தான் விரும்பிய ஆணை திருமணம் செய்ய நேர்வழியில் சென்று  நீதிமன்றத்தில் கண்ணியமாக ஆதரவு கேட்டிருக்கிறார்.  இவரது கள்ளங்கபடம் இல்லாத அணுகுமுறையை  எப்படிப் பாராட்டுவது என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்!

ஜூலை 11,2013

மும்பை : திருமணமான போலீஸ்காரரை காதலித்து, அவரை, சட்டப்படி திருமணம் செய்ய அனுமதி கோரிய பெண்ணின் மனுவை, மும்பை ஐகோர்ட், தள்ளுபடி செய்தது.

மும்பையை சேர்ந்த பெண் மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு:பிரசாத் மர்தே என்ற போலீஸ்காரரை, பல ஆண்டுகளாக, உயிருக்கு உயிராக காதலிக்கிறேன். அவரை, கணவனாக பாவித்து, கனவு காண்கிறேன். முறைப்படி, அவரை திருமணம் செய்து, அவர் மனைவியாக வேண்டும் என, ஆசைப்படுகிறேன்.இதற்காக, 14 ஆண்டுகளாக காத்திருக்கிறேன். அவருக்கு, ஏற்கனவே திருமணமாகி, மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். எனவே, அவரை, திருமணம் செய்ய, சட்டப்பூர்வமாக அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில், அந்த பெண் கூறியிருந்தார்.

இந்த மனு, மும்பை ஐகோர்ட் தலைமை நீதிபதி, மொகித் ஷா மற்றும் நீதிபதி சாதனா ஜாதவ் ஆகியோர் அடங்கிய, "பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:போலீஸ்காரர் பிரசாந்த் முர்தேவுக்கு, ஏற்கனவே திருமணமாகி விட்டது. அவருக்கு, இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அவர்களின் வாழ்க்கை, இனிமையாகவும், அமைதியாகவும் செல்கிறது.இந்த சூழ்நிலையில், உங்களின் மனுவை ஏற்றால், அது, அவர்களின் இனிமையான வாழ்க்கையை, சீர்குலைத்து விடும்.இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த பெண்ணின் மனுவை, தள்ளுபடி செய்தனர்.

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.