இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, April 30, 2010

காவல் குடும்பத்தில் புகுந்து கலக்கும் குடும்ப வன்முறைச் சட்டம்!

எத்தனை நாள் அடுத்தவருக்குக் கொடுத்துக்கொண்டிருப்பது? தான் அப்பாவிகளுக்குக் கொடுத்துக்கொண்டிருப்பதை தானும் ஒருநாள் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். அது காவலானாலும் சரி, நீதியானாலும் சரி. அதுதான் இயற்கையின் நீதி.

=================================================

'மனைவி, குழந்தைக்கு தொந்தரவு தரக்கூடாது' பெண் எஸ்.ஐ., தொடர்ந்த வழக்கில் கணவருக்கு கோவை கோர்ட் உத்தரவு
தினமலர் மே 01,2010
கோவை : பெண் எஸ்.ஐ., தொடர்ந்த வழக்கில், 'மனைவி, குழந்தைக்கு எந்த வகையிலும் தொந்தரவு தரக்கூடாது' என, கணவருக்கு கோர்ட் தடை விதித்தது. பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள ஜி.கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் பிரியம்வதா(25). போலீஸ் எஸ்.ஐ., ஆக பணியாற்றும் இவர், கோவை ஜே.எம்.எண்: 6 கோர்ட்டில் தனது கணவர் மீது, குடும்ப வன்முறைச் சட்டத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.

கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றிய ஜெயக்குமாருக்கும், எனக்கும் 2003, நவ., 3ல் ராசிபுரம், அத்தனூர் அம்மன் கோவிலில் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின், சிறை அருகே வாடகை வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தினோம். திருமணமாகி எட்டாவது மாதத்தில் போலீஸ் எஸ்.ஐ., ஆக தேர்வு செய்யப்பட்டேன்.

'எதிர்கால வாழ்க்கை மற்றும் பணியின் காரணமாக, இரண்டு ஆண்டுக்கு குழந்தை வேண்டாம்' என தெரிவித்தேன், ஆனாலும், எஸ்.ஐ., பணியில் சேர்ந்த இரண்டு மாதத்தில் கர்ப்பமானேன். இச்சூழலில் கணவர் ஜெயக்குமாரின் அம்மாவும், தங்கையும் எங்களுடன் வந்து தங்கினர். அவர்களுக்கு அதிகமாக செலவு செய்ததால், எங்களிடையே பணத்தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் 2006, ஆக., 29ல் எனக்கு குழந்தை பிறந்தது. குழந்தையைப் பார்க்க எனது பெற்றோரை கணவர் அனுமதிக்கவில்லை. எனது ஒவ்வொரு செயலிலும் குறை கண்டுபிடித்து தகராறு செய்தார். தொடர்ந்து இருவருக்கும் இடையே பணத்தகராறு ஏற்பட்டது. ஒருமுறை, 10 மாத குழந்தையை பைக்கில் எடுத்துச் சென்றவர், குழந்தையை கொலை செய்து விடுவதாக மிரட்டி என்னிடம் பணம் பறித்தார்.

கணவர் செய்யும் சித்ரவதைக்கு, அவரது அம்மாவும், சகோதரியும் உடந்தையாக இருந்தனர். குடும்பத்தில் உள்ளவர்களிடம் எப்போதும் தகராறு செய்வதாக உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் சொல்வதாக மிரட்டல் விடுத்தார். தொடர்ந்து எனக்கு கொடுத்த சித்ரவதையாலும், குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும் கோவை குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தேன். வழக்கு நிலுவையில் உள்ளது. இதேபோல், 'கணவரால் எந்த தொந்தரவும் வரக்கூடாது' என்று கோரியும், அவரது செயல்களுக்கு நிரந்தர தடை கோரியும், மாவட்ட முதன்மை முன்சீப் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.

தனியாக வசிக்கும் என்னை நேரிலும், போனிலும் மிரட்டக்கூடாது. எஸ்.எம்.எஸ்., அனுப்புவதை தடை செய்ய வேண்டும். வீட்டுக்கு எதிரே ரோட்டில் நின்று தகாத வார்தைகளால் திட்டுவதும், பள்ளிக்குச் சென்று குழந்தையை மிரட்டுவதையும் நிறுத்திக்கொள்ள, கணவருக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார்.

மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் ஜோதி, 'எந்த வகையிலும் மனைவிக்கும், குழந்தைக்கும் தொந்தரவு தரக்கூடாது; மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என பெண் எஸ்.ஐ.,யின் கணவருக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
======================================================

இன்று அப்பாவிகளுக்குப் பொய்வழக்குப் போட்டுக்கொண்டிருக்கும் சதிகாரக்கூட்டம் நாளை இயற்கை கொடுக்கப்போகும் தண்டனையை அனுபவிக்கவேண்டும். இது மாற்றமுடியாத மாறாத உலக நீதி. அதன் வெளிப்பாடுகள் தோன்ற ஆரம்பித்திருக்கின்றன.

Thursday, April 29, 2010

காதலுக்காகத் தியாகம் செய்த தியாகப் பெண்!

பெண்கள் ஆணாதிக்கத்தின் பிடியில் சிக்கித்தவிக்கும் இந்த 21ம் நூற்றாண்டிலும் தன் காதலுக்காக ஒரு தியாகப்பெண் எந்தவகையான தியாகத்தை செய்திருக்கிறார் பாருங்கள். இவர்கள்தான் இந்தியத்தாயின் அணிகலன்களில் மின்னும் நவரத்தினக்கற்கள். இதுபோன்றவர்களைப் பாதுகாக்கத்தான் புதுப்புது சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. ஏனென்றால் இவர்கள்தான் கொடுமைக்கார ஆண்களின் பிடியில் சிக்கி கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் இந்த நாட்டில்.

இந்திய ஆண்களின் கொடுமையில் சிக்கித்தவிப்பதை விட பாகிஸ்தான் காதலருடன் உல்லாசமாக இருக்கலாம் என்று முடிவு செய்து தனது சொந்த நாட்டையே தியாகம் செய்யும் அளவிற்கு இந்தியாவில் பெண்களுக்கெதிராக வரதட்சணை மற்றும் பெண்கொடுமை நடந்துகொண்டிருக்கிறது போலிருக்கிறது! இப்படித்தான் பெண்கள் அமைச்சகமும், மத்திய அரசும் பெண்கள் தொடர்பான ஒருதலைபட்சமான சட்டங்கள் இயற்றும்போது புள்ளிவிபரம் காட்டிக்கொண்டிருக்கிறது. அவர்களின் புள்ளிவிபரக்கணக்கிற்கு இந்த செய்தி நன்கு உதவும்.


பணம், காதலுக்காக பாகிஸ்தானுக்கு 'போட்டுக் கொடுத்த' இந்திய பெண் அதிகாரி
தினமலர் மே 02,2010


நம்பிக்கை என்ற வார்த்தை பிறந்தபோதே, துரோகம் என்ற வார்த்தையும் பிறந்துவிட்டது. தனிப்பட்ட ஒருவருக்கு, தனிப் பட்ட காரணங்களுக்காக நம்பிக்கை துரோகம் செய்வது பெரிய விஷயம் அல்ல. இதனால், பெரிய அளவில் பாதிப்பும் ஏற்படப் போவது இல்லை. ஆனால், ஆயிரக்கணக்கில் சம்பளம் கொடுத்து, நாட்டின் அதிமுக்கியமான ரகசியங்களைக் கையாளும் பணியையும் கொடுத்த தாய்நாட்டை, எதிரிகளிடம் காட்டிக் கொடுப்பது மன்னிக்க முடியாத குற்றம் அல்லவா? இந்த குற்றத்தை தான் செய்துள்ளார், மாதுரி குப்தா என்ற இந்தியாவைச் சேர்ந்த பெண் அதிகாரி.

மாதுரி குப்தா:
காற்றில் அலை பாயும் 'கலரிங்' செய்யப்பட்ட கூந்தல், அறிவு ஜீவிகளின் அடையாளமான விலை உயர்ந்த மூக்கு கண்ணாடி, அலட்சியமான பார்வை, 53 வயது என்பதை நம்ப முடியாத தோற்றம், எப்போதும் உதட்டில் தேக்கி வைத்துள்ள மெல்லிய புன்னகை, இவற்றின் ஒட்டு மொத்த அடையாளம் தான் மாதுரி குப்தா. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்திய வெளியுறவு அலுவலகத்தின் மூத்த அதிகாரி; 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிகிறார். இதற்கு முன், பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றினார். கடந்த 2007ல், பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணிக்கு அமர்த்தப் பட்டார்.

காதலும், பணமும்:
மாதுரி குப்தாவுக்கு, பாகிஸ்தானைச் சேர்ந்த உளவுப்பிரிவு அதிகாரி ராணா என்பவருடன் காதல் ஏற்பட்டது. இந்த காதலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர் பாக்., உளவு அதிகாரிகள். இந்தியாவிலிருந்து, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்துக்கு வரும் முக்கியமான தகவல்களை எல்லாம், மாதுரி குப்தா மூலமாக பாக்., உளவு அதிகாரிகள், கடந்த இரண்டு ஆண்டுகளாக பெற்று வந்துள்ளனர். இதற்காக, மாதுரிக்கு தேவையான பணத்தை கொட்டிக் கொடுத்துள்ளனர். காதல், பணம் ஆகிய காரணங்களுக்காக, அவர்கள் கேட்ட அனைத்து தகவல்களையும், முக்கிய ஆவணங்களையும் கொடுத்துள்ளார் மாதுரி. பல்வேறு நாடுகளில் பணியாற்றும் 'ரா' உளவுப்பிரிவு அதிகாரிகள் பற்றிய தகவல்களையும், பாகிஸ்தானுக்கு அவர் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இஸ்லாமாபாத்தில் உள்ள ஷாப்பிங் மால்கள், காபி ஷாப்கள் போன்றவற்றில் ராணாவும், மாதுரியும் அடிக்கடி சந்தித்து, தங்கள் காதலை பரிமாறிக் கொண்டதுடன், இந்திய அரசின் நடவடிக்கைகள் பற்றிய ரகசியங்களையும் பரிமாறிக் கொண்டனர்.

வசமாக சிக்கினார்:
மாதுரியின் நடவடிக்கைகள், இந்திய உளவு அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவரை கண்காணித்து வந்தனர். சில நாட்களுக்கு முன், சார்க் மாநாடு குறித்து பேச வேண்டும் என, மாதுரியை டில்லிக்கு வரவழைத்தனர். அப்போது, இந்தியாவின் ரகசியங்களை, பாகிஸ்தானுக்கு தெரிவித்த குற்றத்துக்காக மாதுரி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

விசாரணையில் அதிர்ச்சி தகவல்:
மாதுரியிடம் இந்திய அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, ரகசிய ஆவணங்களை பாகிஸ்தானுக்கு கொடுத்ததை ஒப்புக்கொண்டார். இது மட்டுமல்லாமல், இஸ்லாமாபாத்தில் உள்ள 'ரா' (இந்திய உளவு அமைப்பு) தலைவர் ஷர்மாவே, பாகிஸ்தான் உளவாளி தான் என்றும் அதிர்ச்சி தகவலை தெரிவித்ததோடு, பணத்துக்காவே இந்த குற்றத்தை செய்தேன் என்றும் கூறியுள்ளார். மேலும், மாதுரிக்கும், முக்கியமான அதிகாரிகளுக்கும் இடையே ரகசியமான இ-மெயில்கள் பரிமாறப்பட்டுள்ள தகவலும் வெளியாகியுள்ளது.

பெரும் சந்தேகம்:
மாதுரி குப்தா விவகாரம், இந்திய பாதுகாப்புக்கே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. காதலுக்காகவும், பணத்துக்காகவும் ஒரு பெண் அதிகாரி இது போன்ற துரோகச் செயலை செய்துள்ளது, வெளியுறவுத் துறை அதிகாரிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, உலகின் பல்வேறு நாடுகளில் பணியாற்றும் இந்திய தூதரக அதிகாரிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டிய அவசியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாதுரி விவகாரத்தில், இயற்கையாகவே சில சந்தேகங்களும், கேள்விகளும் எழுகின்றன.

* பாகிஸ்தான் அதிகாரி ராணாவுக்கும், மாதுரிக்கும் தொடர்பு ஏற்பட்டது எப்படி? இவர்களின் நட்புக்கான பின்னணியில் இருந்தவர்கள் யார்?

* இந்திய வெளியுறவுத் துறையின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களையும், ரகசிய விஷயங்களையும் கையாளும் அதிகாரம், இஸ்லாமாபாத் இந்திய தூதரகத்தில் பணியாற்றிய மாதுரிக்கு கொடுக்கப்பட்டு இருந்ததா?

* அப்படியானால், கடந்த மூன்று ஆண்டுகளில் எந்தெந்த ஆவணங்களை அவர் கையாண்டுள்ளார்?

* மாதுரி குப்தாவின் ரகசியமான நடவடிக்கைகளை, இந்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் தெரிந்து கொள்வதற்கு எவ்வளவு காலமானது?

* பணம், காதல் இவற்றைத் தவிர, பாகிஸ்தானுக்கு ஆதரவாக மாதுரி செயல்பட்டதற்கான காரணங்கள் என்ன?

நாட்டின் பாதுகாப்புக்கே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள மாதுரி விவகாரம், சர்வதேச அளவில் தலைக்குனிவையும் ஏற்படுத்திவிட்டது என்பதையும் மறுக்க முடியாது. எதிரிகளின் கைகளுக்கு இனிமேலும், நம் நாட்டின் ரகசியங்கள் கிடைக்கக்கூடாது என்பதே அனைவரின் விருப்பம். இந்த விஷயத்தில் மத்திய அரசு, மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதுடன், மேலே எழுப்பப்பட்டுள்ள சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் விடை காண வேண்டும்.

மாதுரியின் மறுபக்கம்:
மாதுரி குப்தா, தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் உடையவர். அடிக்கடி 'பியூட்டி பார்லர்'களுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தனது தலைமுடியை அடிக்கடி 'கலரிங்' செய்து கொள்வார். விலை உயர்ந்த அழகான உடைகளை அணிந்து கொள்வார். தனது வசீகரமான பேச்சின் மூலம், எப்படிப்பட்ட நபரையும் எளிதில் வளைத்து விடுவார். லண்டன் அல்லது வாஷிங்டனில் பணியாற்ற வேண்டும் என்பது இவரது கனவு. இஸ்லாமாபாத்துக்கு பணி நியமனம் செய்யப்பட்டதை அடுத்து, அவசரம், அவரமாக உருது மொழியைக் கற்றுக் கொண்டார். உருது மொழியைக் கற்றுக் கொடுப்பதற்காக ஒரு பெண்ணை ஆசிரியராக நியமித்துக் கொண்டார். வெகு விரைவிலேயே, உருது மொழியில் சரளமாக பேசவும், படிக்கவும் கற்றுக் கொண்டார். இதனால், பாகிஸ்தான் சென்ற உடனேயே, அங்குள்ளவர்களுடன் சகஜமாக பழகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பாகிஸ்தானில் உள்ள ஆங்கில மொழி பத்திரிகைகளை விட, உருது மொழி பத்திரிகைகளையே படிப்பதற்கு ஆர்வம் காட்டுவார். யாருடன் பேசினாலும், மேக்-அப், ஹேர் ஸ்டைல், உடைகள் பற்றித் தான் அதிகம் பேசுவார்.


திம்பு : 'பாகிஸ்தான் உளவுத்துறைக்கு இந்தியாவைப் பற்றிய ரகசியத் தகவல்களை கடத்திய இந்திய ஐகமிஷன் உயர் அதிகாரி மாதுரி குப்தாவின் கைது சம்பவம் கவலை அளிக்கக் கூடியது. அது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது' என்று, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இயங்கி வரும் இந்திய ஐகமிஷனின் உயர் அதிகாரி மாதுரி குப்தா. இவர், பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.,யின் உயரதிகாரி ஒருவருக்கு இந்தியாவைப் பற்றிய ரகசிய தகவல்களைக் கடத்தியதாக, சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

இவ்விவகாரம் குறித்து, பூடான் தலைநகர் திம்புவில் நடக்கும் 'சார்க்' மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியதாவது: விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. விசாரணையின் முடிவில்தான் , அவர் செயல்பட்ட விதம் , அதற்காக அவர் போட்ட திட்ட செயலாக்கங்கள் ஆகியவை தெரியவரும். அவர் தற்போது போலீஸ் பிடியில் இருக்கிறார். இச்சம்பவம் மிகவும் கவலை அளிக்கக் கூடியதுதான். விசாரணை அறிக்கை கிடைத்தவுடன், உரிய நடைமுறைகளின் படி இந்திய அரசு அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளும் . இவ்வாறு எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.

மேலும், பாகிஸ்தானில் அரசு தூதரகத்தில் செயல்பட்ட அவரை திம்பு மாநாடு குறித்து அவசரமாகப் பேச வேண்டும் என்று கூறி அழைத்து வரப்பட்டதாக கூறப்பட்டது.

பெண்கொடுமை: 1991 முதல் 2010 வரை

ஒரு பெண்ணால் ஒரு அப்பாவி ஆணுக்கு 1991 முதல் 2010 வரை செய்யப்பட்ட கொடுமை. தற்காலத்தில் பெண்களுக்கு சட்ட அறிவு நன்றாகவே வளர்ந்துவிட்டது. இந்த சட்டங்கள் மூலம் கணவனை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தலாம் என்று நன்கு தெரிந்துவைத்திருக்கின்றனர். இதுவும் ஒருவகையில் பெண்கள் முன்னேற்றம்தான்!

மும்பை: பத்து ஆண்டுகளாக, சந்தேகப்பட்டே கொடுமைப்படுத்திய மனைவியிடமிருந்து, அப்பாவி கணவனுக்கு விவாகரத்து மூலம் விடுதலை கொடுத்துள்ளது மும்பை குடும்ப நல கோர்ட். அமித் (47), மீனா (49) இருவரும் 1991, ஜூலையில் மணம் புரிந்து கொண்டனர். இவர்களின் திருமண வாழ்வு 1992, ஜூன் மாதத்தோடு முடிந்து போனது. தன் கணவரின் டைரியில் அவர் எழுதி வைத்திருந்த ஒரு கவிதையை பார்த்து, அவருக்கு கள்ளத் தொடர்பு உள்ளது என்று மனைவி சந்தேகப்பட்டார். இது தான் பிரச்னைக்கு காரணம்.

இதையடுத்து, மீனா தன் சகோதரருடன் போய் விட்டார். இருந்தும் கணவர் மீது கொண்ட சந்தேகப் பேய் மீனாவைத் தொடர்ந்து விரட்டியதால் 1994, ஜூனில் கணவரின் வீட்டுக் கதவை உடைத்து, குடிபுகுந்தார். கணவருக்கு எதிராக போலீசில் புகார் கொடுத்து, அவரை வீட்டுக்குள் நுழையவிடாமல் செய்து விட்டார். கடந்த 2000ல் கோர்ட் இடைக்காலத் தடை உத்தரவு பெற்று, அமித் தன் வீட்டுக்குள் நுழைந்தார். சந்தேகம் தீராத மீனா, தன் கணவருக்கு பல வழிகளில், 'டார்ச்சர்' கொடுக்க ஆரம்பித்தார். திருமணமானதிலிருந்து இருவருக்குள்ளும் தாம்பத்ய உறவு ஏற்பட அவர் சம்மதிக்கவில்லை. சின்ன, சின்ன விஷயங்களுக்கெல்லாம் அமித்திடம் சண்டை போட்டார். தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார். அமித்தை அடிக்க ஆரம்பித்தார். ஒழுங்காக சமையல் செய்வதில்லை. அமித்துக்கு உடல்நலம் சரியில்லாத போது கூட, அவரை கவனித்துக் கொள்ளவில்லை.

மனைவியின் தொந்தரவு தாங்க முடியாமல், அமித் மனம் உடைந்து போனார். மன உளைச்சலுக்கு ஆளானார். தேவையில்லாத செலவுகள் செய்ய வேண்டியவரானார். இதனால் குடும்ப நல கோர்ட்டில், விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். அவருடன் வாழ விரும்புவதாக அவரது மனுவை எதிர்த்து வேறொரு மனு தாக்கல் செய்தார் மீனா. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,'கள்ளத் தொடர்பு என்ற சந்தேகத்தால் மீனா, அமித்தை பயங்கரமாகக் கொடுமைப்படுத்தியுள்ளார். 8 ஆண்டுகள் தனியாக வாழ்ந்து, பின் 10 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த பின்னும் கூட, மீனா தன் கொடுமையை குறைக்கவில்லை. மீனாவின் நடத்தைகள் யாவும் புகுந்த வீட்டில் வாழ விரும்பும் மனைவியின் நடத்தையாகத் தெரியவில்லை' என்று கூறி, அமித்துக்கு மீனாவிடமிருந்து விவாகரத்து கொடுத்து அவரை 'விடுதலை' செய்தனர்.

==============================

ஒரு பெண்ணால் ஒரு அப்பாவி ஆணுக்கு 1991 முதல் 2010 வரை செய்யப்பட்ட கொடுமை. தற்காலத்தில் பெண்களுக்கு சட்ட அறிவு நன்றாகவே வளர்ந்துவிட்டது. இந்த சட்டங்கள் மூலம் கணவனை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தலாம் என்று நன்கு தெரிந்துவைத்திருக்கின்றனர். இதுவும் ஒருவகையில் பெண்கள் முன்னேற்றம்தான்!

அதேசமயம் தேவையற்ற அதிகவளர்ச்சியும் ஆபத்தில்தான் போய் முடியும். தேவையில்லாமல் வளரும் திசுக்களுக்கு மருத்துவத்தில் “புற்றுநோய்” என்று பெயர். அதுபோலத்தான் பெண்சுதந்திரம் என்பது இன்றையகாலகட்டத்தில் தவறான திசையில் வளர்ந்து புற்றுநோய் போல சமுதாயத்தில் பரவி அப்பாவிகளை பலிவாங்கிக்கொண்டிருக்கிறது. “புற்றுநோய்க்கு” இதுவரை சரியான மருத்துவ சிகிச்சை கிடையாது. அதுபோல இந்தத் தவறான சமுதாயப் புற்றுநோய்க்கும் மருந்து இல்லை. மருத்துவம் செய்யவும் இதுவரைஅரசாங்கமும் முன்வரவில்லை. இந்தியக் கணவன்களுக்கு வேறு வழியே இல்லை. இந்த புற்றுநோய்களுக்கு பலியாகவேண்டியதுதான். இந்தியக் கணவன்கள் கொடுமைகளை அனுபவித்துத்தான் ஆகவேண்டும்!

தீமையாக இருந்தாலும் பெண்கள் முன்னேற்றம் அடைந்து சட்ட அறிவு பெற்றுவிட்டார்கள் என்று ஒரு கொடூர மகிழ்ச்சி கிடைக்கிறதல்லவா! பெண்பித்துப்பிடித்த பெண்ணடிமைகளுக்கு
அது போதும்.





Thursday, April 22, 2010

கடமை தவறிய காவல்துறையும் கண்ணியம் காத்த அப்பாவிப் பெண்ணும்

இந்தியாவில் பல அப்பாவிப் பெண்களுக்கு காவல் நிலையம் எங்கிருக்கிறது என்றுகூட தெரியாத நிலையில் அறியாமையில் மூழ்கியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தப்பித்தவறி காவல் நிலையத்திற்கு சென்றாலும் அங்கு அவர்களை காவல்துறை மனிதர்களாகவே மதிப்பதில்லை. ஊதாசீனம் செய்து அவமானப்படுத்துகிறார்கள். இப்படியிருந்தால் அப்பாவிப் பெண்கள் எப்படி காவல்துறையை நம்புவார்கள்?

காவல்நிலையம் எங்கிருக்கிறது என்று தெரிந்த படித்த மேல்தட்டுவர்க்கப் பெண்கள் பக்குவமாக பொய் வரதட்சணை வழக்குகளை எழுதி தங்களின் ஆசையை பூர்த்திசெய்துகொள்கிறார்கள். காவல் நிலையம் எங்கிருக்கிறது என்று தெரியாத பெண்கள் கீழுள்ள செய்தியில் உள்ளதுபோல கொலைசெய்து தாங்களாகவே நீதியைத் தேடிக்கொள்கிறார்கள். சமூக ஆர்வலர்களும், சமுதாயப் புரட்சி பேசி திரிபவர்களும் இதுபோன்ற அப்பாவிப் பெண்களின் அறியாமையைப் போக்கவேண்டும்.

கீழுள்ள செய்தியில் பாருங்கள் கணவனை கொலைசெய்த பத்தினி சட்டத்தை மதித்து காவல்நிலையத்தில் சரணடையச்சென்றாலும் அங்கு அவர் எப்படி அலைக்கழிக்கப்பட்டிருக்கிறார். பாவம் அந்த அபலைப் பெண். அவரது மனம் நீதிக்காக என்ன பாடுபட்டிருக்கும்.

இதுவே அந்தப் பெண் வரதட்சணை வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் போதும். காவல்நிலையத்தில் ராஜமரியாதை கொடுத்து கவனித்திருப்பார்கள் (ஏனென்ற காரணம் தெரியாதவர்கள் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கியவர்களை கேட்டுத் தெரிந்துகொள்ளவும்).

பாவம். செய்தியில் சொல்லப்பட்டுள்ள அந்த அபலைப் பெண்ணுக்கு இந்திய சட்டங்களைப் பற்றி போதிய விழிப்புணர்ச்சி இல்லை. அரசியலில் 33% வேண்டும் என்று போராடும் புரட்சிப் பெண்களும் அவர்களுக்குப் பின்னால் புதுமைப்பெண்கள் எங்களது கண்கள் என்று துதிபாடி நிற்கும் அடிப்பொடி புரட்சியாளர்களும் முதலில் இதுபோன்ற பெண்களுக்கு வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் பற்றியும், புகார் எப்படி எழுதுவது என்பது பற்றியும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவேண்டும்.


கணவனை கொலை செய்துவிட்டு போலீஸ் ஸ்டேஷனை தேடி அலைந்த பெண்
தினமலர் ஏப்ரல் 23,2010

மேலூர்: சந்தேக கணவனை கொலை செய்த பெண் சரணடைய மேலூர் போலீஸ் ஸ்டேஷனை தேடி அலைந்து, நீண்ட அலைக்கழிப்புக்கு பின், போலீசாரை சந்தித்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு தன் மீது தீராத சந்தேகம் கொண்டு துன்புறுத்திய கணவர் நல்லியப்பனை டி. தர்சானப் பட்டியில் அவரது மனைவி மலர், கணவன் தலையில் பாறாங்கல்லை போட்டும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தார்.

தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த மலர், வெட்டிய அரிவாளை ஒரு பையில் எடுத்துக் கொண்டு அதிகாலை மேலூருக்கு வந்தார். நத்தம் பகுதியை சேர்ந்த இவருக்கு மேலூர் போலீஸ் ஸ்டேஷன் எங்குள்ளது என தெரியவில்லை. இதனால் கண்ணில் படும் பலரிடம் ஸ்டேஷன் எங்குள்ளது, என கேட்டபடி தாலுகா அலுவலகத்திற்கு வந்துள்ளார். அங்குள்ளவர்கள் ஸ்டேஷனை காட்டவே, அங்கு சென்று வெளியில் நின்று கொண்டிருந்த போலீசாரிடம் பேச முயன்றுள்ளார். கொலை சம்பவம் குறித்த தகவல் அறிந்திருந்த போலீசார் பரபரப்பில் இருந்தனர். இவரிடம் யாரும் பேச முன்வரவில்லை. எதுவாக இருந்தாலும் 10 மணிக்கு வா என அவரிடம் கூறி உள்ளனர்.

இரண்டு, மூன்று போலீசாரிடம் தகவலை சொல்ல முயன்றும் முடியாததால், போலீஸ் ஸ்டேஷன் ஓரமாக அவர் சென்று அமர்ந்து விட்டார். கொலை நடந்த இடத்திற்கு போன பிறகு தான், கொலையாளி தங்களை தேடி வந்தது போலீசாருக்கு தெரிய வந்தது. பதறிப் போன போலீசார் உடனடியாக ஒரு வேனில் அவரை ஏற்றிக் கொண்டு மீண்டும் சம்பவ இடத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். முடிவில் தானாக வந்து சரணடைந்த அவரை தாங்கள் கைது செய்ததாக கூறி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து பெருமூச்சு விட்டனர்.




Wednesday, April 14, 2010

மருமகள் கொலைசெய்தால் குற்றமா? என்று திருத்துவார்களோ சட்டத்தை!

கள்ளக்காதலை தட்டிக்கேட்கும் மாமனாரையோ அல்லது கணவரையோ மருமகள் கொலைசெய்தால் அது குற்றமா? அது குற்றமில்லை என்று பெண்கள் பாதுகாப்பு சட்டத்தில் ஏன் இன்னும் திருத்தம் கொண்டுவரப்படவில்லை என்று தெரியவில்லை!

கும்மிடிப்பூண்டி : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமனாரை கொலை செய்ய திட்டம் தீட்டிய மருமகள், கள்ளகாதலன் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.

=========================================================

புதுடில்லி : வரதட்சணை கொடுப்பவர்கள், வாங்குபவர்களுக்கு எதிராக புகார் கொடுத்துவிட்டு, தண்டனையில் இருந்து தப்பலாம் என்ற வகையில், புதிய சட்டதிருத்தம் வர உள்ளது.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சகம், இந்த சட்டத்திருத்தத்தை விரைவில் கேபினட்டின் ஒப்புதலுக்காக அனுப்ப உள்ளது. கேபினட் ஒப்புதல் வழங்கியதும், பார்லிமென்ட்டில் அறிமுகப்படுத்தப்படும்.

இதுகுறித்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில்,'வரதட்சணை தடுப்பு சட்டம் மணமகள் வீட்டாருக்கு எவ்வித சலுகையும் அளிப்பதில்லை என்ற புகார் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த தடையை நீக்குவதே, இந்த சட்டத்திருத்தத்தின் முக்கிய நோக்கம்' என்றார்.

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வரதட்சணை தடுப்பு சட்டத்தில் கொண்டு வரப்படும் திருத்தத்தின் படி, மணமகள் வீட்டார், தாங்கள் மணமகன் வீட்டாருக்கு கொடுத்த வரதட்சணை குறித்து போலீசில் புகார் செய்து விட்டு, தண்டனையில் இருந்து தப்பலாம். இதனால், மணமகள் வீட்டாருக்கு எந்த பாதிப்பும் இல்லை' என்றார்.
=========================================================

பொய் வரதட்சணை வழக்குகள் போடுவதெல்லாம் மிகவும் பழையமுறையாகிக்கொண்டுவருகிறது. இந்தக் காலத்தில் வரதட்சணை சட்டங்களை திருத்தி மருமகள்களுக்கு மிகச்சிறிய சலுகை கொடுப்பதைவிட மருமகள் கொலைசெய்தால் கூட அது குற்றமில்லை என்று அரசாங்கம் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தால் பல மருமகள்களுக்கு உதவியாக இருக்கும். முற்போக்காக சிந்தித்து மகளிர் ஆணையம் இந்தியப்பெண்களுக்கு முழுச்சலுகைகளை வாங்கித்தருவார்களா?

=======================================================


தினமலர் ஏப்ரல் 15,2010

கும்மிடிப்பூண்டி : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமனாரை கொலை செய்ய திட்டம் தீட்டிய மருமகள், கள்ளகாதலன் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். கொலை செய்த கூலிப்படையை சேர்ந்த மூவரை தேடி வருகின்றனர்.கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பஜார் பகுதியில் வசித்து வந்தவர் ஜெயவேல்ரெட்டி(68). அதே பகுதியில் இயங்கி வரும் ரைஸ்மில் மற்றும் பல வணிக வளாகங்களின் உரிமையாளராக இருந்தவர். இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர்.கடந்த 6ம் தேதி இரவு, ஆரம்பாக்கம் பஜாரில் இருந்து நாயுடுகுப்பம் சாலையில் உள்ள ரைஸ்மில்லுக்கு நடந்து சென்றார். அப்போது மர்மநபர்கள் சிலரால் அடித்து கொலை செய்யப்பட்டார்.மறுநாள் காலை சாலையோர முட்புதரில், அவரது உடலை கண்ட அப்பகுதி மக்கள் ஆரம்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., வனிதா, கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., நாகஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரித்தனர்.வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார் இன்ஸ்பெக்டர் அகமது அப்துல்காதர் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

விசாரணையில்,ஜெயவேல் ரெட்டியின் மூத்த மகன் பாலமுருகன் மனைவி புவனேஸ்வரி(37).ஆரம்பாக்கம் அருகே உள்ள எடகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன்(37).சொந்தமாக விவசாய டிராக்டர் வைத்துள்ளார். வேலை காரணமாக ஜெயவேல் ரெட்டி வீட்டிற்கு அடிக்கடி வந்து போன சீனிவாசனுக்கும், புவனேஸ்வரிக்கும் இடையே கள்ள காதல் உருவானது. இதை அறிந்த ஜெயவேல் ரெட்டி இருவரையும் கண்டித்துள்ளார்.இந்நிலையில், ஜெயவேல் ரெட்டி, தனது சொத்துகளில் பாகம் பிரித்த போது, மகன்களை விட, மகள்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளார். இதனால், கள்ள காதல் தொடர்பாக கோபமாக இருந்த புவனேஸ்வரி மேலும் ஆத்திரமடைந்தார்.

இதை காரணம் காட்டி, சொத்துகளை பெற்று தனி குடித்தனம் செல்ல புவனேஸ்வரி முயன்றார். இதற்கும் ஜெயவேல் ரெட்டி தடையாக இருந்துள்ளார். இதையடுத்து, சீனிவாசன் உதவியுடன் ஜெயவேல் ரெட்டியை கொலை செய்ய, புவனேஸ்வரி திட்டம் தீட்டினார். இதன்படி, சீனிவாசன் நண்பரான எடகண்டிகை ஸ்ரீதர் உதவியுடன், திருவொற்றியூர் ஷேக் பாரி(35) என்பவரை அணுகினர்.அவர், கொலை திட்டத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் பேசி முடித்து, முன்பணமாக, 46 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டார். இதன்படி, ஷேக் பாரி கூட்டாளிகளான பிரபாகரன்(30), பாலாஜி(25) ஆகியோருடன் சேர்ந்து ஜெயவேல் ரெட்டியை கொடூரமாக கொலை செய்தனர், என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து புவனேஸ்வரி, சீனிவாசன், அவரது நண்பர் ஸ்ரீதர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், ஷேக் பாரி, பிரபாகரன்,பாலாஜி ஆகியேரை தேடி வருகின்றனர்.


“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.