இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, April 14, 2010

மருமகள் கொலைசெய்தால் குற்றமா? என்று திருத்துவார்களோ சட்டத்தை!

கள்ளக்காதலை தட்டிக்கேட்கும் மாமனாரையோ அல்லது கணவரையோ மருமகள் கொலைசெய்தால் அது குற்றமா? அது குற்றமில்லை என்று பெண்கள் பாதுகாப்பு சட்டத்தில் ஏன் இன்னும் திருத்தம் கொண்டுவரப்படவில்லை என்று தெரியவில்லை!

கும்மிடிப்பூண்டி : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமனாரை கொலை செய்ய திட்டம் தீட்டிய மருமகள், கள்ளகாதலன் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.

=========================================================

புதுடில்லி : வரதட்சணை கொடுப்பவர்கள், வாங்குபவர்களுக்கு எதிராக புகார் கொடுத்துவிட்டு, தண்டனையில் இருந்து தப்பலாம் என்ற வகையில், புதிய சட்டதிருத்தம் வர உள்ளது.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சகம், இந்த சட்டத்திருத்தத்தை விரைவில் கேபினட்டின் ஒப்புதலுக்காக அனுப்ப உள்ளது. கேபினட் ஒப்புதல் வழங்கியதும், பார்லிமென்ட்டில் அறிமுகப்படுத்தப்படும்.

இதுகுறித்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில்,'வரதட்சணை தடுப்பு சட்டம் மணமகள் வீட்டாருக்கு எவ்வித சலுகையும் அளிப்பதில்லை என்ற புகார் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த தடையை நீக்குவதே, இந்த சட்டத்திருத்தத்தின் முக்கிய நோக்கம்' என்றார்.

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வரதட்சணை தடுப்பு சட்டத்தில் கொண்டு வரப்படும் திருத்தத்தின் படி, மணமகள் வீட்டார், தாங்கள் மணமகன் வீட்டாருக்கு கொடுத்த வரதட்சணை குறித்து போலீசில் புகார் செய்து விட்டு, தண்டனையில் இருந்து தப்பலாம். இதனால், மணமகள் வீட்டாருக்கு எந்த பாதிப்பும் இல்லை' என்றார்.
=========================================================

பொய் வரதட்சணை வழக்குகள் போடுவதெல்லாம் மிகவும் பழையமுறையாகிக்கொண்டுவருகிறது. இந்தக் காலத்தில் வரதட்சணை சட்டங்களை திருத்தி மருமகள்களுக்கு மிகச்சிறிய சலுகை கொடுப்பதைவிட மருமகள் கொலைசெய்தால் கூட அது குற்றமில்லை என்று அரசாங்கம் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தால் பல மருமகள்களுக்கு உதவியாக இருக்கும். முற்போக்காக சிந்தித்து மகளிர் ஆணையம் இந்தியப்பெண்களுக்கு முழுச்சலுகைகளை வாங்கித்தருவார்களா?

=======================================================


தினமலர் ஏப்ரல் 15,2010

கும்மிடிப்பூண்டி : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமனாரை கொலை செய்ய திட்டம் தீட்டிய மருமகள், கள்ளகாதலன் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். கொலை செய்த கூலிப்படையை சேர்ந்த மூவரை தேடி வருகின்றனர்.கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பஜார் பகுதியில் வசித்து வந்தவர் ஜெயவேல்ரெட்டி(68). அதே பகுதியில் இயங்கி வரும் ரைஸ்மில் மற்றும் பல வணிக வளாகங்களின் உரிமையாளராக இருந்தவர். இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர்.கடந்த 6ம் தேதி இரவு, ஆரம்பாக்கம் பஜாரில் இருந்து நாயுடுகுப்பம் சாலையில் உள்ள ரைஸ்மில்லுக்கு நடந்து சென்றார். அப்போது மர்மநபர்கள் சிலரால் அடித்து கொலை செய்யப்பட்டார்.மறுநாள் காலை சாலையோர முட்புதரில், அவரது உடலை கண்ட அப்பகுதி மக்கள் ஆரம்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., வனிதா, கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., நாகஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரித்தனர்.வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார் இன்ஸ்பெக்டர் அகமது அப்துல்காதர் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

விசாரணையில்,ஜெயவேல் ரெட்டியின் மூத்த மகன் பாலமுருகன் மனைவி புவனேஸ்வரி(37).ஆரம்பாக்கம் அருகே உள்ள எடகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன்(37).சொந்தமாக விவசாய டிராக்டர் வைத்துள்ளார். வேலை காரணமாக ஜெயவேல் ரெட்டி வீட்டிற்கு அடிக்கடி வந்து போன சீனிவாசனுக்கும், புவனேஸ்வரிக்கும் இடையே கள்ள காதல் உருவானது. இதை அறிந்த ஜெயவேல் ரெட்டி இருவரையும் கண்டித்துள்ளார்.இந்நிலையில், ஜெயவேல் ரெட்டி, தனது சொத்துகளில் பாகம் பிரித்த போது, மகன்களை விட, மகள்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளார். இதனால், கள்ள காதல் தொடர்பாக கோபமாக இருந்த புவனேஸ்வரி மேலும் ஆத்திரமடைந்தார்.

இதை காரணம் காட்டி, சொத்துகளை பெற்று தனி குடித்தனம் செல்ல புவனேஸ்வரி முயன்றார். இதற்கும் ஜெயவேல் ரெட்டி தடையாக இருந்துள்ளார். இதையடுத்து, சீனிவாசன் உதவியுடன் ஜெயவேல் ரெட்டியை கொலை செய்ய, புவனேஸ்வரி திட்டம் தீட்டினார். இதன்படி, சீனிவாசன் நண்பரான எடகண்டிகை ஸ்ரீதர் உதவியுடன், திருவொற்றியூர் ஷேக் பாரி(35) என்பவரை அணுகினர்.அவர், கொலை திட்டத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் பேசி முடித்து, முன்பணமாக, 46 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டார். இதன்படி, ஷேக் பாரி கூட்டாளிகளான பிரபாகரன்(30), பாலாஜி(25) ஆகியோருடன் சேர்ந்து ஜெயவேல் ரெட்டியை கொடூரமாக கொலை செய்தனர், என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து புவனேஸ்வரி, சீனிவாசன், அவரது நண்பர் ஸ்ரீதர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், ஷேக் பாரி, பிரபாகரன்,பாலாஜி ஆகியேரை தேடி வருகின்றனர்.


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.