இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, June 12, 2013

சில இரவுகளுக்கு பல இலட்சம் கேட்கும் இளம் மனைவிகள்

தற்போது இந்தியாவில் இளம் பெண்களிடையே பரவலாக ஒரு புது வியாபார யுக்தி பரவிவருகிறது.  சில இரவுகள் கணவனுடன் படுக்கையை பகிர்ந்துகொண்டதற்காக தேய்மானச் செலவாக பல இலட்சங்களை நஷ்ட ஈடாக கணவனிடம் கேட்கிறார்கள்.  இதற்கு அவர்கள் “குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தை” பயன்படுத்துகிறார்கள். 

இந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் 2005ம் ஆண்டு நடைமுறைப் படுத்தப்பட்டது.  இந்த சட்டத்தின் மூலம் கணவனுடன் சில இரவுகளை கழித்ததற்காக கணவனின் சொத்துக்கள், வீடு, மாதந்தோறும் பல ஆயிரங்களில் பராமரிப்பு செலவு மற்றும் தன்னை கணவன் பயன்படுத்தியதற்காக தேய்மானச் செலவு பல இலட்சங்கள் என பட்டியலிட்டு நீதிமன்றத்தில் ஒரு மனு கொடுத்தால் உடனடியாக நீதிபதி இவையனைத்தையும் கணவன் கொடுக்க வேண்டும் என்று உத்தரவு போட்டுவிடுவார். 

கணவன் போதிய அளவு பண வசதியில்லாதவர் என்றால் சிறுநீரகத்தை விற்றாவது பணத்தைக் கட்டவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடும்.

Punjab: Man wants to sell kidney to pay alimony - Times Of India

 The Times of India

CHANDIGARH: Unable to pay maintenance to his wife, a man has approached a court in Punjab to allow him to sell his one of his two kidneys so that he could pay up.

The Ropar resident, who found the sum stipulated by the court way beyond his means, filed an application under section 125 of CrPC (order for maintenance of wives, children) in the court of the judicial magistrate on August 22, seeking permission to sell his kidney to pay Rs 8,000 as interim maintenance to his wife.

Narrating his ordeal in the application, he said the court had ordered him to pay his wife a monthly interim allowance of Rs 3,500 under CrPC and another interim maintenance of Rs 4,500 per month under the Domestic Violence Act. Denying any permanent means of livelihood, he said he found it difficult to sustain himself as his small monthly earnings made up for only Rs 3,600 per month.

Despite his meagre income, the man tried to pay maintenance to his wife regularly. But, under the circumstances, he is left with no option but to sell his body organs.
இதுபோன்ற வழக்குகளில் விசித்திரமான விஷயம் என்னவென்றால் இந்தியாவில் கல்வியறிவில்லாத பல ஏழைப் பெண்கள்கூட கூலி வேலை செய்து தங்களது வாழ்வை தானே சுயமாகவும், கௌரவமாகவும் நடத்துகிறார்கள்.  கல்வி கற்க வேண்டிய வயதில் பல குழந்தைகள்கூட தொழிலாளிகளாகவேலை செய்து  வாழ்கிறார்கள்.    

ஆனால்  உயர் கல்வி கற்று சுயமாக சம்பாதிக்கும் திறனும், அறிவும் உள்ள பல இளம் மனைவிகள்
சட்டம் சாதகமாக இருக்கிறது என்பதற்காக தங்களது கணவனுடன் சில இரவுகள் கழித்ததற்காக பல இலட்சங்களை கணவனிடம் வாங்கித் தரும்படி நீதிமன்றத்தை நாடுகிறார்கள்.  இவர்களால் பணம் ஈட்டி சுயமாக தங்களை பராமரித்துக் கொள்ள முடிந்தாலும்  இப்படி பணம் சம்பாதிக்க நினைப்பது  பாரம்பரியம் மிக்க ஒரு தொழிலை நினைவு படுத்துவது போல இருக்கிறது அல்லவா!!!! இந்திய சட்டங்கள் இப்படி பெண்களை மாற்றிவிட்டதா? அல்லது இளம் பெண்கள் இப்படி மாறிவிட்டார்களா?  



குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமான இன்று  கல்வி கற்க முடியாமல் கடினமாக உழைத்து வாழ்க்கையை நடத்தும் குழந்தைகள் படும் இன்னல்களை ஒரு பக்கம் நினைத்துப் பார்க்கும் போது மற்றொரு பக்கம் நன்கு படித்து அனைத்து வசதிகளுடன் கூடிய இளம் பெண்கள் இப்படி சுய கௌரவத்தை இழந்து பணம் ஈட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துப் பார்த்தால் அருவருப்பாக இருக்கிறது.


5 comments:

Unknown said...

மருமகள்களை விலை மாதர்களாக கருதும் வரதட்சினை தடுப்பு சட்டம்.

http://arasuganabathy.blogspot.in/2012/06/blog-post.html

Unknown said...

மருமகள்களை விலை மாதர்களாக கருதும் வரதட்சினை தடுப்பு சட்டம்.

http://arasuganabathy.blogspot.in/2012/06/blog-post.html

Unknown said...

திருமணம் பொருளாதாரத்தின் அடிப்படையில் இருக்க கூடாது என்றால், பெண் தனக்கு கணவனாக வரப்போகிறவனின் சொத்து, வேலை, சம்பளம் போன்றவற்றை கருத்தில் கொண்டு ஆணை திருமணம் செய்ய மறுக்கிறாளே அவளுக்கு என்ன தண்டனை உள்ளது?

அடுத்தவர்களின் ஆடம்பர வாழ்வை போல வாழ எண்ணி தன் கணவனை வற்ப்புறுத்தி மன உளைச்சல் கொடுக்கும் பெண்ணிற்கு என்ன தண்டனை உள்ளது?

Unknown said...

ஒரு பெண் தான் வரதட்சனை கொடுக்கமாட்டேன் என்று கூற வேண்டுமானால் அவள் மாப்பிள்ளையின் சொத்தை பற்றியோ, வேலை, சம்பளம் என்று எதை பற்றியும் கருத்தில் கொள்ளாமல் அவனது ஒழுக்கத்தையும், பண்பையும் மட்டுமே ஆராய்ந்து ஏற்பதும், அதன் பின் வாழ்வின் அணைத்து துன்பங்களிலும், இன்பங்களிலும் தனது கணவனுக்கு தோலோடு தோல் கொடுத்து நின்று, தனது கணவன் எல்லா துன்பங்களில் இருந்தும் மீள்வதற்கு எல்லா விதங்களிலும் உட்றதுணையாக இருந்து, தனது கணவனின் பாரத்தை பகிர்ந்து கொள்ளும் அன்பான மூன்றாவது கையாக இருக்க வேண்டும்

Unknown said...

ஒரு ஆணும், பெண்ணும் LIFE PARTNER களாக, வாழ்க்கை துணைகளாக திருமண வாழ்வில் இணைகிறார்கள். பங்குதாரர்கள் சேர்ந்து செய்யும் எந்த ஒரு செயலானாலும் சம்மந்தப்பட்டவர்கள் தங்கள் பங்களிப்பை வழங்கவேண்டும் என்பது ஒரு நியாயமான முறை ஆகும். தம்பதிகளாக வாழ்வில் இணையும் இவர்களின் வாழ்வு மகிழ்ச்சியாக தொடங்க பொருளாதாரம் அடிப்படை தேவை. ஆணின் பெற்றோர் தன் பங்கிற்கு சொத்துக்களையோ அல்லது சொத்து இல்லை என்றாலும் தன் மகனை வாழ்நாள் முழுவதும் உழைத்து போடா கடமை பட்டவனாக அனுப்புகின்றனர். அதே போல் பெண்ணின் பெற்றோர் தங்கள் பங்கிற்கு என்ன செய்கிறார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிரார்கள். அதுவும் ஆணின் பெற்றோர்களின் பங்களிப்பிற்கு சமமான பங்களிப்பை கேட்பதில்லை. இது எப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் ? ஆணின் இன்பத்தில் சமபங்கு கேட்கும் பெண்தரப்பு தனது பங்கை தட்டி கழிப்பது எவ்விதத்தில் நியாயமாகும் ?


திருமணமாகும் பெண்களை உடலை விற்கும் விலை மாதர்கள் என்றும், நுகர்வோர்களான ஆண்களுக்கு இந்த விலை மாதர்களிடமிருந்து பொருளாதார பங்களிப்பை பெற எந்த உரிமையும் இல்லை என்று பெண்களை தரம் தாழ்த்துவதே இந்த சட்டத்தின் உண்மையான அர்த்தம் ஆகும் .

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.