இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, January 27, 2010

பத்துக் கட்டளைகள்!


Join “TEN-India” if you believe in equity and justice irrespective of gender!

Join “TEN-India” to oppose gender war!

பெண்களை உண்மையாக மதிப்பவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய பத்துக் கட்டளைகள்

Click for Details



Monday, January 25, 2010

பெண்கள் இல்லாத இந்தியா!

இந்தியாவில் பெண்கள் நல்வாழ்வுத்துறை என்று ஒரு அமைச்சகமும் அதற்கு ஒரு அமைச்சரும் இருக்கிறார். அவர்கள் என்ன வேலை செய்கிறார்களென்று ஒரே மர்மமாக இருக்கிறது!

முன்பு அமைச்சராக இருந்தவர் இந்தியப் பெண்களுக்கு பார்களில் "குடியுரிமை" வாங்கித்தருவது தான் அமைச்சகத்தின் முழு வேலை என்று சொல்லும் அளவிற்கு முழு மூச்சுடன் களத்தில் இறங்கி வேலைசெய்தார் (Pub bharo' to beat moral police: Renuka Choudhary).

இப்போது இருக்கும் அமைச்சர் பாகிஸ்தான் நாட்டுத் தளபதியை பெருமைபடுத்தியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் பெண்களே கிடையாது என்று சொல்லி அமெரிக்க நாட்டுப் பெண்ணை இந்தியப்பெண்ணாக உருவகம் செய்து பெண்கள் இல்லாத இந்தியாவை கற்பனை கூட செய்யமுடியாது என்று சொல்லி விளம்பரம் செய்திருக்கிறார்.

a photograph of Sunita L Williams, Born in Euclid, Ohio, is a US citizen and a naval officer, next to that of Lok Sabha speaker Meira Kumar, singer Lata Mangeshkar. It asked “Can you imagine India without women”.

இந்த பெண்கள் துறை அமைச்சர்கள் இந்தியப் பெண்களுக்கு என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை! 19 வருடங்களாக ஒரு இந்திய சிறுமியின் குடும்பம் நீதிகேட்டுப் போராடி சீரழிந்து கொண்டிருக்கிறது. ஆனால் இவர்கள் இதுபோன்ற இந்தியப் பெண்களுக்கு உதவி செய்யாமல் வெளிநாட்டவரைப் போற்றிப் புகழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நாட்டில் நடப்பதெல்லாம் விசித்திரமாக இருக்கிறது!

வெளிநாட்டுக்காரர்களுக்கு சலாம் அடித்து இந்த போஸ்டர் அடித்த செலவில் பல ஏழைக்குழந்தைகளுக்கு கல்வியுதவி செய்திருக்கலாம். பல ஏழைப்பெண்களுக்கு திருமண உதவி செய்திருக்கலாம்.

பாக். மாஜி விமானப்படைத் தளபதியை இந்திய ஹீரோவாக்கிய பெண்கள் மேம்பாட்டு அமைச்சகம்!



டெல்லி: இந்திய அரசு வெளியிட்ட முழு பக்க பத்திரிகை விளம்பரத்தில், 'இந்திய ஹீரோ'க்களின் மத்தியில் பாகிஸ்தான் விமானப்படையின் முன்னாள் தளபதியின் படமும் இடம்பெற்றது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை ஒட்டி, மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ஆங்கில பத்திரிகைகளில் முழுபக்க கலர் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்க முத்திரையுடன் வெளியிடப்பட்ட இந்த விளம்பரத்தில் பெண் சிசுக்கொலை தடுப்பு பற்றிய வாசகங்களுடன், கபில்தேவ், ஷேவாக், அம்ஜத் அலிகான், சோனியா, மன்மோகன்சிங் போன்றவர்களின் படம் இடம் பெற்றுள்ளது.

இவற்றின் கூடவே, பளிச்சென்று பாகிஸ்தானின் முன்னாள் விமானப்படை தளபதி தண்வீர் அகமதுவின் படமும் இடம்பெற்றுள்ளது.

'தாய் என்ற பெண் இல்லை என்றால் இதுபோன்ற தேசிய ஹீரோக்கள் சாத்தியமா' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ள இந்த விளம்பரத்தில் இந்திய சாதனையாளர்களுக்கு இணையாக பாகிஸ்தான் விமானப்படைத் தளபதியையும் சேர்த்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

A rush job to publicise the National Girl Child Week beginning Sunday went horribly wrong when half-page advertisements put out by the government placed a former Pakistani Air Force chief’s photograph alongside Prime Minister Manmohan Singh’s.

“We regret the inclusion of a foreign national’s photograph in a Government of India advertisement,” a statement by the Prime Minister’s Media Adviser Harish Khare said.Singh’s office apologised for the faux pas and ordered an inquiry to find out how former chief of the Pakistani Air Force Tanvir Mahmood Ahmed’s photograph was included in an advertisement issued by the Ministry of Women and Child Development (WCD).

Krishna Tirath, WCD minister of state, initially accused the media of hair-splitting, insisting that the image wasn’t important, the message was.

The Bharatiya Janata Party (BJP) was quick to react. Party spokesman Rajiv Pratap Rudy said the goof-up was “in consonance with the thought process of the Congress party”.

“We regret the inclusion of a foreign national’s photograph in a Government of India advertisement,” a statement by the Prime Minister’s Media Adviser Harish Khare said.

“While an internal inquiry has been instituted, the PMO apologises to the public for this lapse,” it said.

Initial inquiries revealed that the WCD ministry had woken up to the need to issue the advertisements to commemorate the girl child week rather late and signed a contract for four half-page advertisements with a private agency attached with a national daily for the material on Friday.

Overnight, the agency prepared the four advertisements. The one that attracted the maximum attention had national heroes such as Kapil Dev, Virender Sehwag and Amjad Ali Khan along with the Pakistani air force officer; their photographs downloaded from the Internet. But that wasn’t the only ad with a bloomer.

Another carried a photograph of Sunita L Williams, the Indian-origin Nasa astronaut next to that of Lok Sabha speaker Meira Kumar, singer Lata Mangeshkar. It asked “Can you imagine India without women”. Born in Euclid, Ohio, Williams is a US citizen and a naval officer.

=======================

“Can you imagine India without women”

பெண்கள் இல்லாத இந்தியாவை கற்பனை செய்யமுடியுமா? என்று பெண்கள் நலத்துறை அமைச்சகம் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக கீழுள்ள இந்த செய்தி செய்தித்தாளில் வந்துள்ளது!

நாட்டில் பெண்கள் இதுபோன்ற வேலைபார்த்துக்கொண்டிருந்தால் பிறகு ஏழைக்குடும்பங்களில் பிறக்கும் பெண் குழந்தைகளை பெற்றவர்கள் என்ன செய்வார்கள்? இது நடந்திருப்பதும் மதுரை பக்கம் தான்!

பெண்கள் இல்லாத இந்தியாவில் பிறகு ஏழைப் பெண்ணுக்குத் திருமண உதவி வழங்கும் இதுபோன்ற வேலைகளை யார் செய்யமுடியும்?



மதுரை : மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில், தமிழக அரசின் திருமண நிதி உதவித் தொகை வழங்க, 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, இரண்டு பெண் ஊழியர்களிடம், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரிக்கின்றனர். மதுரை ஆத்திகுளத்தை சேர்ந்தவர் ராஜேஷ். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சண்முகப்பிரியா. ராஜேஷ் திருமண நிதி உதவி கோரி, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ரேவதியிடம் (57) விண்ணப்பித்தார். ரேவதி 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். பேரம் பேசி 1,000 ரூபாய் தர ராஜேஷ் சம்மதித்தார். அவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார்.

நேற்று மாலை 4 மணிக்கு, ரசாயனக் கலவை தடவிய 1,000 ரூபாயை, ரேவதியிடம் ராஜேஷ் கொடுத்தார். மறைந்திருந்த இன்ஸ்பெக்டர்கள் தமிழ்ச்செல்வன், மணிமாறன் ஆகியோர், ரேவதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஊர்நல அலுவலர் பழனியம்மாளை (52) கையும், களவுமாக பிடித்தனர். அவர்களிடம், கணக்கில் வராத 4,700 ரூபாயை பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்கு பின், துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.






Thursday, January 14, 2010

கற்பழிப்பை வைத்து அரசியல் வியாபாரம்

கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை

தினமணி 14 Jan 2010

பெண்களிடம் கற்பழிப்பு போன்ற பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு மிகக் கடுமையான தண்டன வழங்கிட சட்டத்தில் தக்க மாற்றம் கொண்டு வரப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் தேசிய மகளிர் ஆணைய தலைவர் கிரிஜா வியாஸ். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை புதன்கிழமை சந்தித்து இந்த கோரிக்கையை வைத்தார்.

19 ஆண்டுகளுக்கு முன் 14 வயது ருசிகா என்ற சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எதிரொலியாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவர்கள் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அரசு ஊழியர்களாக இருந்தால் தண்டனையை இன்னும் கடுமையாக்க வேண்டும் என்றும் அவர் அமைச்சரிடம் யோசனை தெரிவித்தார்.

அமைச்சரை சந்தித்த பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பெண்கள் மீதான பாலியல் குற்றச் செயல்கள் தொடர்பான சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவது மிக மிக அவசியம். பாலியல் குற்றச்செயல்கள் தொடர்பான விளக்கத்தை விரிவுபடுத்தி குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும தண்டனையை அதிகரிக்கவேண்டும். தற்போது உள்ள சட்ட விதிகள்படி பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க முடியும். இத்தகைய குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சம் ஆயுள் அல்லது 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்து சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப் படவேண்டும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் அரசு ஊழியர்களாக இருந்தால் அவர்களுக்கு தண்டனையை மேலும் கடுமையாக்க வழி செய்தாகவேண்டும் என்று அமைச்சரிடம் வலியுறுத்தினேன்.பாலியல் வன்முறை தொடர்பான சட்டங்கள் குறித்து மத்திய உள்துறைச் செயலர் தலைமையில் மத்திய, மாநில அரசுகளின் காவல்துறை அமைச்சகங்களின் ஒருங்கிணைப்புக் குழு ஆராய்ந்து வருகிறது என்று சிதம்பரம் உறுதி அளித்தார். பெரும்பாலான கற்பழிப்பு வழக்குகளில் புகாரே பதிவு செய்யப்படுவதில்லை என்பது வேதனை தரும் விஷயம் என்றார் வியாஸ்.


=======================

திடீரென்று பெண்கள் நல்வாழ்வுத்துறை வாரியத் தலைவி கற்பழிப்புப் போன்ற பாலியல் குற்றங்களுக்கு தண்டனை கொடுக்க இதுவரை நாட்டில் எந்த சட்டங்களும் இல்லாதது போல புதிதாக ஒரு வேடிக்கை செய்து கொண்டிருக்கிறார்.

இப்போதிருக்கும் சட்டங்களை செயல்படுத்தாமல் ஒரு DGPக்கு எதிரான கற்பழிப்பு வழக்கை பதிவு செய்யாமல் ஏமாற்றியது காவல்துறை. அதற்கு சட்டம் என்ன செய்யும்? அப்படி காலம் தாழ்த்தி பதிவு செய்யப்பட்ட வழக்கை விரைவாக விசாரிக்காமல் ஏமாற்றியது நீதித்துறை.
எத்தனை சட்டங்கள் இயற்றினாலும் அவற்றை செயல்படுத்தப் போவது காவல் துறையும் நீதித் துறையும் தான் என்ற அடிப்படையை அரசியலார் காரணத்தோடு மறந்துவிட்டார்கள் போலுள்ளது.

புதிய கடுமையான சட்டங்கள் கொண்டுவந்தால் இதுபோல மற்றொரு DGP ஒரு வழக்கில் மாட்டி போலிஸ் வழக்கை பதிவுசெய்யாமல் ஏமாற்றினால் அப்போது கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்த அமைச்சர்கள் என்ன செய்ய முடியும்? மீண்டும் புதிய சட்டங்களை இயற்றுவார்களா?


அடிப்படை பிரச்சனையை தீர்க்க வழியை கண்டுபிடிக்காமல் இப்படி அடுக்கடுக்காக சட்டங்களை இயற்றினால் அவையெல்லாம் தவறான வழியில் தான் பயன்படுத்தப்படும். உண்மையான அப்பாவிகளுக்கு ஒருபோதும் உதவப் போவதில்லை. மேலும் மேலும் அதிகாரத்தில் இருக்கும் கிரிமினல்கள் தான் பலனடையப் போகிறார்கள்.
எப்போதும் நாட்டில் சட்டங்களுக்கு பஞ்சமே கிடையாது. புதிய பல சட்டப்பிரிவுகளை இயற்றி தானே பல பேரின் தொழிலே இங்கு நடந்து கொண்டிருக்கிறது.

எனக்கு ஒரு சந்தேகம் 19 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்திற்கு இன்று வரை நீதி கிடைக்காமல் ஒரு பெண் அலைக்கழிக்கப்பட்டதிற்கு காரணம் இந்த குற்றத்தை தண்டிக்க சட்டங்கள் இல்லாமல் போனதா காரணம்?


கர்நாடகாவில் "Pub" ல் பெண்கள் வெளியேற்றப்பட்டத்திற்கு வரிந்துகட்டிக்கொண்டு பல விசாரணைக் கமிட்டிகளை அனுப்பி பெண்களுக்கு "குடியுரிமை" வாங்கிக்கொடுக்க Pub நிரப்பும் போரட்டத்தை முன்னின்று நடத்த முழு முனைப்புடன் போராடிய பெண்கள் நல்வாழ்வு அமைச்சகமும், பெண்கள் வாரியமும் ஒரு சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நீதி வேண்டி 19 ஆண்டுகளாக போரடிய இந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு எந்த வகையில் உதவி செய்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி வாங்கித் தர என்ன செய்திருக்கிறது? யாருக்காவது தெரியுமா?

19 ஆண்டுகளாக பெண்கள் அமைச்சகத்திற்கோ, பெண்கள் நல வாரியத்திற்கோ இந்த வழக்குப் பற்றி ஒன்றுமே தெரியாமல் போனது எப்படி? இதுபோன்ற பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வாங்கித் தரும் பணியல்லாமல் வேறு என்ன வகையான வேலைகள் செய்து கொண்டிருக்கிறார்கள்?


இத்தனைக்கும் பெண்கள் அமைச்சகம், தேசிய பெண்கள் வாரியம், மாநில பெண்கள் வாரியம் என பல இருக்கின்றன. ஒருவர் கூட இந்த 19 ஆண்டுகளில் இதைப் பற்றி கண்டுகொள்ளவில்லையே! மிகவும் வியப்பாக இருக்கிறது.

பெண்களே விழித்துக்கொள்ளுங்கள். உங்களை வைத்து எல்லோருமே வியாபாரம் செய்யத்தான் முயற்சி செய்கிறார்கள். யாருக்கும் உண்மையான அக்கறை கிடையாது.




“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.