இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, November 24, 2012

வினை விதைக்கும் மருமகள்களுக்கு இது அறுவடைக்காலம்!

தன்னுடைய சுய லாபத்திற்காக வரதட்சணை தடுப்புச் சட்டங்களை தவறாகப் பயன்படுத்தி அப்பாவிக் கணவர்கள் மீதும், அவர்களுடைய குடும்பத்தார் மீதும் பொய் வழக்குகளை மருமகள்கள் தொடுக்கும் செயல் பல ஆண்டுகளாக இந்திய பாரம்பரியமாக நடந்துவருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. 

பொதுவாக பெண்ணிற்கு மட்டும்தான் கற்பிருப்பதாக ஒரு மூடநம்பிக்கை இருந்துவருகிறது.  அதனால் ஒரு பெண்ணைப்  பற்றி தவறாகக் கூறுவது ஒரு கொடிய செயலாக கருதப்படுகிறது.  ஆனால் அதே சமயத்தில் ஒரு ஆணின் நடத்தையைப் பற்றி தவறாகக் கூறினால் அது அந்த ஆணின் நற்பெயரை கற்பழித்ததற்கு சமம் என்று ஒருவர்கூட நினைப்பதில்லை.  இதனை பல ஆண்டுகளாக நீதிமன்றங்களும் உணரவில்லை.  ஒரு மனைவி தனது கணவனின் நடத்தையை களங்கப்படுத்தி பொய் வழக்குகளை உருவாக்கி அவனின் வாழ்வை நாசப்படுத்துவது சர்வசாதாரணமாக இந்தியாவில் நடந்துவரும் செயல்.  இதற்கு நீதிமன்றங்கள் மலர்தூவி மருமகள்களுக்கு வாழ்த்துகூறிக்கொண்டிருக்கும்.

இப்போது அரிதாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பைக் கூறி மனைவி தன் கணவன் மீது அவதூறாக வழக்குத் தொடர்வது கணவனை கொடுமைப்படுத்தியத்ற்கு சமம் என்று கூறி 24 ஆண்டுகள் நடந்த விவாகரத்து வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது.

இந்த வழக்கில் நாம் சந்தோஷப்படுவதா அல்லது வருத்தப்படுவதா என்று தெரியவில்லை. ஏனென்றால்... ... ...

1.  ஒரு அப்பாவிக் கணவன் தவறான மனைவியிடமிருந்து விடுபட இந்திய நீதிமன்றங்கள் அந்தக் கணவனை 24 ஆண்டுகள் அலைய வைத்திருக்கின்றன.

2.  ஒரு மனைவியை அவளது கணவன் தவறானவள் என்று கூறிவிட்டால் அவனை மனைவியை மனதளவில் கொடுமை செய்தததாகக்கூறி IPC498Aன் கீழ் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை கொடுத்துவிடுவார்கள்.  ஆனால் இந்த வழக்கில் மனைவி கணவனின் நடத்தையை கலங்கப்படுத்தி அவனது வாழ்வை சீரழித்ததற்கு ஒரு தண்டனையும் இல்லை.

3. 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவருக்கு நீதி கிடைத்தால் என்ன கிடைக்காவிட்டால் என்ன? இழந்த காலங்கள் மீண்டும் வருமா?

இதுபோன்ற நீதித்துறையின் தாமதித்து  நீதி வழங்கும் முறை நீதி மறுக்கப்பட்டதற்கு சமம்.  இதனை நீதித்துறை வல்லுனர்கள்  Delayed Justice is Denied Justice  என்று சொல்வார்கள்.  இதுபோன்ற நீதிமறுக்கப்பட்ட சூழலில் பல கணவர்கள் மனம் நொந்து தவறான மனைவியை கொலை செய்து உடனடியாக தங்களுக்கான நீதியை பெற்றுக்கொள்கிறார்கள்.   அப்பாவிகளை கொலைகாரர்களாக மாற்றுவதில் இந்திய நீதித்துறையின் தாமதித்து நீதி வழங்கும் முறை முக்கிய பங்காற்றுகிறது. 

இந்த ஒரு கணவருக்கு 24 ஆண்டுகள் கழித்து நீதி கொடுக்கப்பட்டதாக கருதலாம்.  ஆனால் இதுபோன்று பல கணவர்கள் இன்னும் நீதி கிடைக்காமல் பல ஆண்டுகளாக நீதிமன்றங்களில் அலைந்துகொண்டிருக்கிறார்கள்.  அவர்கள் மனம் நொந்து கொலைகாரர்களாக மாறாமல் இருந்தால் நல்லது.

  Saturday, November 24, 2012 One India Tamil

மதுரை: கணவர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறுவதும் ஒருவகையான மன ரீதியான கொடுமைதான் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்துள்ளார். இதனை காரணமாக வைத்து கணவர் விவாகரத்து மனு தாக்கல் செய்யலாம் என்றும் அந்த தீர்ப்பில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த கே.அய்யனாருக்கு அவருடைய அக்காள் மகள் முனியம்மா உடன் 10.6.1988 ஆம் திருமணம் நடந்தது. பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.
பின்னர், 4 ஆண்டுகளுக்கு பின் இருவரையும் உறவினர்கள் சமரசம் செய்து சேர்த்து வைத்துள்ளனர். அதன்பின்னர்  பிரசவத்துக்கு பெற்றோர் வீட்டுக்கு சென்ற முனியம்மாள் பின்னர் கணவன் வீட்டுக்கு வரவில்லை.

இதற்கிடையில் கணவன் அய்யனாருக்கு, முனியம்மாள் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ‘வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளதாகவும், வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாகவும் கணவர் மீது குற்றம் சுமத்தியிருந்தார்.

இதையடுத்து, தென்காசி சார்பு கோர்ட்டிலும், பின்னர் திருநெல்வேலி மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டிலும் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு அய்யனார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டன. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அய்யனார் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

அதேபோல, தன் கணவர் விவாகரத்து வழங்க கூடாது என்றும் தன்னுடன் சேர்ந்து வாழ அவருக்கு அய்யனாருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தென்காசி சார்பு நீதிமன்றத்தில் முனியம்மாள் மனு தாக்கல் செய்த மனு 17.7.2000 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து திருநெல்வேலி கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் முனியம்மாள் தாக்கல் செய்த அப்பீல் மனு ஏற்றுக் கொண்ட நீதிபதி மனைவியுடன் சேர்ந்து வாழ அய்யனாருக்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவையும் எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அய்யனார் அப்பீல் செய்தார்.

இந்த 2 இரண்டு அப்பீல் மனுக்களும், பின்னர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.விமலா பரபரப்பான தீர்ப்பினை அளித்தார். அந்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
அய்யனார், முனியம்மாள் தம்பதியினருக்கு திருமணமாகி 28 ஆண்டுகள் ஆகி விட்டன. அய்யனாரும், முனியம்மாளும் திருமணத்துக்கு முன்பே ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்தவர்கள். ஆனால், இருவரும் ஓர் ஆண்டு கூட ஒற்றுமையாக குடும்பம் நடத்தவில்லை. இரண்டு பேரும் மாறி மாறி வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அய்யனார் மீது முனியம்மாள் சுமத்திய குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என்று குறுக்கு விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுபோல் பொய்யான குற்றச்சாட்டை கூறி கணவனின் ஒழுக்கத்தை முனியம்மாள் படுகொலை செய்து, தன்னுடைய திருமண வாழ்வுக்கு சாவு மணி அடித்துள்ளார்.

ஒரு பொய்யான குற்றச்சாட்டை கணவனுக்கு எதிராக மனைவி சுமத்தி வழக்கு தொடர்ந்தால், அது அந்த கணவனை மன ரீதியான கொடுமை செய்வதாக அர்த்தம் என்று உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது.

முனியம்மாள் விதைத்ததை அறுவடை செய்துள்ளார். இவர் கணவன் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி செய்த தவறு, பிற பெண்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கும். எனவே இவரிடம் இருந்து விவாகரத்துக்கு கேட்டு அய்யனார் தாக்கல் செய்த மனு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. கீழ் கோர்ட்டு உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி விமலா தன்து தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Sunday, November 18, 2012

தாலி அறுக்க வரிசையில் காத்திருக்கும் தமிழக இளம் தம்பதிகள்

தவறான பெண்ணியக் கோட்பாடுகளால் பல காலமாக இந்தியாவில் குடும்பங்கள் மிகவும் ஆபத்தான அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றன என்று சமூகத்தின் மீது அக்கறையுள்ளவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

எரிகின்ற தீக்கு எண்ணைய் ஊற்றுவது போல பொய் வரதட்சணை வழக்குகள், அதற்குத் துணையாக பெண்கள் பாதுகாப்பு அல்லது பெண் சுதந்திரம் (Women Empowerment) என்ற பெயரில் பல அடுக்கடுக்கான ஒரு தலைபட்டசமான சட்டங்கள் அரசாங்கத்தால் சமுதாயத்தில் விஷம் போல பரவச்செய்து பெண்களை தவறிழைக்கத் தூண்டி இப்போது சமுதாயத்தின் சமநிலையை பாதிக்கும் அளவிற்கு நாட்டை சீர்குலைத்திருக்கிறது.

இதன் விளைவாக இப்போது திருமணம் செய்த கையோடு தேனிலவிற்கு செல்ல வேண்டிய பல இளம் தம்பதிகள்  தாலியை அறுத்து  திருமண பந்தத்தை முறித்துக்கொள்ள  நீதிமன்ற வளாகங்களில் காத்துக் கிடக்கிறார்கள்.  நீதிமன்றங்களும் அதனைச் சார்ந்தவர்களும் வழக்கம்போல வழக்கை விரைந்து முடிக்காமல் காலதாமதம் செய்து அந்த காலதாமதக் காலத்தில் குளிர் காய்ந்து கணவன் மனைவி இருவரிடமும் வழக்கு என்ற பெயரில் முடிந்த அளவிற்கு பணம் சம்பாதித்துவிடலாம் என்று ஆவலுடன் காத்துக்கிடக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரியும்.

திருமணம் முடிந்த கையோடு காம வேட்கையுடன் இருக்கும் பலர் நீதிமன்ற காலதாமதத்தை தாங்கமுடியாமல் கள்ளக்காதல், கூடிவாழ்தல்,  அடுத்தவளின் கணவனை அபகரித்தல், கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவனின் தலையில் கல்லைப் போட்டுக் கொல்லுதல், கணவனின் குடும்பத்தார் மீது பொய் வரதட்சணை வழக்குப் போடுதல்,  குடும்ப வன்முறை சட்டத்தைப் பயன்படுத்தி கணவனின் சொத்துக்களை பிடுங்குதல் போன்ற செயல்களை சர்வசாதரணமான இந்திய சட்டங்களின் துணையோடும், காவல் மற்றும் நீதித்துறைகளின் துணையோடும் செய்துவருகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

இந்த சமுதாயக் குழப்பத்திற்கு நடுவே பிறக்கும் பல குழந்தைகள் இன்னும் சில ஆண்டுகளில் பெற்றோர் இல்லாத வழி தவறிய இளைய தலைமுறையை உருவாக்கி 2020ல் இந்தியாவை ஒளிரச் செய்யப்போகிறார்கள் என்பதை அனைவரும் கண்கொள்ளக் காட்சியாக காணப்போகிறோம்.

ஆண்டுக்கு 1500 விவாகரத்து வழக்குகள் "பெண்டிங்' :கூடுதல் குடும்ப கோர்ட் எப்போது? 

தினமலர் நவம்பர் 19, 2012

 மண வாழ்க்கையில் இணைந்த கணவன் மனைவியை சட்டப்படி பிரிப்பதும், மீண்டும் சேர்த்து வைப்பதும் குடும்ப கோர்ட்களில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளாக உள்ளன. ஆயிரக்காலத்து பயிர்களை, ஆர்வக் கோளாறு காரணமாக ஆறு மாதத்தில் அறுத்து எரியத் தயாராகி விட்டனர் இளம் வயது ஜோடிகள்.

தாலியுடன் இளம் பெண்களும், ஏக்கப் பார்வையில் ஆண்களும் அதிகமாக காத்துக்கிடக்கும் இடமாக குடும்ப கோர்ட் வளாகம் மாறி விட்டது. காலை முதல் மாலை வரை தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ஜோடிகளை இங்கு பார்க்கலாம். தொடர்ந்து "வாய்தா'வில் ஓடும் வழக்குகளின் விசாரணை எப்போது முடியும், விவாகரத்து எப்போது கிடைக்கும், புது வாழ்க்கையை எப்போது துவக்கலாம் என திக்குத் தெரியாமல் ஆண்டுக்கணக்கில் இவர்கள் காத்திருக்கின்றனர்.

விவாகரத்து வழக்குகள் நிலுவையில் இருக்கும் போதே, ஊராருக்கும், கோர்ட்டுக்கும் தெரியாமல், தாலி கட்டி சிலர் குடித்தனம் துவங்கி விட்டனர். இன்னும் சிலர், தாலி கட்டாமல் தனியாக வாழ்ந்து வருகின்றனர். ஒரு சிலர் முடிவு தெரியாமல் 10 ஆண்டுகளாகக் கூட கோர்ட்டுக்கு நடையாய் நடக்கின்றனர்.கோர்ட்களில் வழக்குகள் தேங்குவதற்கு, ஒரே ஆண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகளும், ஜீனாம்சம் கேட்பு வழக்குகளும் பதிவு செய்வதே இதற்கு காரணமாக உள்ளன.

வழக்குகள் அதிகமாவதால், வாய்தாவுக்கே கோர்ட்டில் நேரம் சரியாக உள்ளது. இதனால் வழக்குகளின் விசாரணை தேதிகள், ஆண்டுக்கு ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. அந்தளவுக்கு வழக்குகள் வரிசையாக வந்து கொண்டே இருக்கின்றன. கோவை குடும்ப நீதிமன்றத்தைப் பொறுத்த அளவில், ஒவ்வொரு ஆண்டும் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி விட்டன.கடந்த நான்கு ஆண்டுகளாக இது தொடர்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 1300க்கும் அதிகமான விவாகரத்து வழக்குகளும், 200க்கும் மேற்பட்ட ஜீவனாம்சம் கேட்பு வழக்குகளும் பதிவாகின.நடப்பு ஆண்டில், கடந்த 10 மாதங்களில் 1,225க்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகளும், 200க்கும் மேற்பட்ட ஜீவனாம்சம் கேட்பு வழக்குகளும் பதிவாகியுள்ளன.இப்படி ஒவ்வொரு ஆண்டும் விவாகரத்து வழக்குகள் அதிகரித்திருப்பது சமூகத்தில் ஒரு இக்கட்டான சூழலை உருவாக்கி உள்ளது.குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற மன உளைச்சலில்,குடும்ப பெரியவர்கள் சங்கடத்தில் ஆழ்ந்துள்ளனர்.

விவாகரத்து மற்றும் சேர்ந்து வாழக் கோரும் வழக்குகள் குடும்ப கோர்ட் மட்டுமல்லாது, கோவை சட்ட மையத்திலும் நடக்கிறது. இங்கு ஒரு நாளைக்கு 5 முதல் 7 வழக்குகள் இருதரப்பு சம்மதத்துடன் விசாரிக்கப்படுகின்றன. இவ்வழக்குகள் அனைத்தும் குடும்ப கோர்ட்டில் இருந்து பெறப்பட்டவையாகும்.தொடர்ந்து அதிகரித்து வரும் வழக்குகளால், விரைந்து வழக்குகளை விசாரிக்கமுடியாமல் கோவை குடும்ப நீதிமன்றம் திணறுகிறது. இதனால் வழக்குகள் முடிய தாமதமாகின்றன. இதை தவிர்க்க, கூடுதலாக ஒரு கோர்ட் துவக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

சமீபத்தில் ஐகோர்ட் இதற்கான அனுமதி வழங்கியும், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில், கோர்ட் கட்டடம் கட்ட இடம் இல்லாததால் நின்று போனது. ஏற்கனவே 2001க்கு முன், கோர்ட்கள் செயல்பட்ட குதிரை வண்டி கோர்ட் வளாகம் தற்போது உபயோகத்தில் இல்லாமல் இருக்கிறது.இந்த வளாகத்தில் நீதிபதிகளுக்கான குடியிருப்பு கட்ட பல ஆண்டுகளாக திட்டம் இருந்த போதிலும், ஒரு பகுதியில் புதிய நீதிமன்றங்கள் அமைக்கலாம் என்ற முடிவும் ஏற்பட்டுள்ளதால், குதிரை வண்டி கோர்ட் வளாகத்தில் புதிய நீதிமன்றம் அமைக்க வேண்டும் என,கோவை வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் சென்னை ஐகோர்ட்டுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Sunday, November 04, 2012

கணவனிடம் மனைவி உறவு கொள்ள உதவும் காவல்துறை!

இந்திய சட்டங்கள் எப்படியெல்லாம் பெண்களுக்கு உதவுகின்றன என்று செய்தியைப் பார்த்தால் மிகவும் வியப்பாக இருக்கிறது.  எத்தனை வகையான பாதுகாப்பு சட்டங்கள்!

"வரதட்சணை" என்ற மசாலா தடவாமல் எந்த வழக்கையும் காவல் நிலையத்தில் பதிவு செய்யமாட்டார்கள். 

10 ஆண்டுகளுக்கு முன் கணவனுக்கு வயது 28, மனைவிக்கு வயது 20.  இளமை துள்ளும் வயதில் பஞ்சும் நெருப்பும் பத்திக்கொள்ளவில்லை.  என்ன ஒரு ஆச்சரியமான வழக்கு! காமதேவனுக்கு மட்டும்தான் இந்த வழக்கின் உண்மை தெரியும்!!!  செய்தித்தாள் கூசாமல் விளக்கு பிடித்து இதை ஒரு செய்தியாக வெளியிட்டுவிட்டது.

மனைவியிடம் "உறவு'' வைக்காத கணவர் கைது

நவம்பர் 05,2012  தினமலர்

ஓசூர்:சூளகிரி அருகே, 10 ஆண்டாக மனைவியிடம் தாம்பத்திய உறவு வைக்காமல் கொடுமை செய்த கணவரை, போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அழகுபாவியை சேர்ந்தவர் விவசாயி சங்கர், 38. இவரது மனைவி பாரதி, 30. இருவருக்கும், 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, பாரதியின் பெற்றோர், ஐந்து சவரன் நகை, ரொக்கம் ஆகியவற்றை வரதட்சணையாகக் கொடுத்தனர். ஆனால், சங்கருக்கு மனைவி பாரதியை பிடிக்கவில்லை.

திருமணமாகி, இதுவரை அவருடன் ஒருநாள் கூட, சங்கர் தாம்பத்திய உறவு வைக்கவில்லை. மேலும், வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததை கண்டித்த சங்கரை, பாரதி கண்டித்துள்ளார். அதனால், அவரது பெற்றோர் வீட்டிற்கு துரத்தி விட்டுள்ளார்.  இது குறித்து பாரதி, ஓசூர் மகளிர் டவுன் போலீசில் புகார் செய்தார். புகாரில், "கணவர் சங்கர், தன்னுடன் தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளவில்லை. அதை தட்டிக் கேட்டதால், தன்னை கொடுமை செய்து, பெற்றோர் வீட்டிற்கு துரத்தி விட்டார்'' என கூறியிருந்தார். இன்ஸ்பெக்டர் சித்ரா தேவி விசாரித்து, சங்கரை கைது செய்தார்.

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.