இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, January 10, 2011

வைகை அணையில் பொங்கிப் பெருகிய தாய்மை!

திங்கட்கிழமை, ஜனவரி 10,2011 மாலை மலர்

ஆண்டிப்பட்டி, ஜன. 10-

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. அணையின் ஆற்றை ஒட்டியுள்ள சலவை செய்யும் பகுதியில் புதருக்குள் குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனே அங்கு சலவை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் புதருக்குள் சென்று பார்த்தனர்.

அங்கு பச்சிளம் ஆண் குழந்தையை எறும்புகள் கடித்து கொண்டிருந்தன. உடனே சலவை தொழிலாளர்கள் குழந்தையை வெளியில் எடுத்து வைகை அணை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. குழந்தை தேனி அரசு ஆஸ் பத்திரிக்கு எடுத்து செல்லப் பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

தேனி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 3-ந்தேதி இந்த குழந்தை பிறந்துள்ளது. அதற்கான அடையாள அட்டையும் குழந்தையின் கையில் கட்டப்பட்டு இருந் தது. அதில் தாயார் பெயர் முருகேஸ்வரி என்றும் பெரியகுளம் மின்வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி என்றும் எழுதப்பட்டு இருந்தது.

தேனி போலீஸ் சூப் பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தையை புதரில் வீசி சென்ற முருகேஸ்வரியை பிடிக்க போலீசார் பெரியகுளத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

==========


விலங்குகளிடம் இருக்கும் பாசம் கூட மனித இனத்தில் இருப்பதில்லையோ? (படம்- தினமலர் ஜனவரி,11, 2011)

கணவன் வரதட்சணை கேட்டு மிரட்டினான் என்று ஒரு பெண் சொன்னவுடன் கவணவனை அவனது குடும்பத்தோடு சேர்த்து கூண்டோடு கைது செய்து சிறையில் அடைத்துவிட்டுப் பிறகுதான் விசாரணையே செய்ய ஆரம்பிக்கிறார்கள். அதுபோல ஒரு பெண் தன்னை காதலன் ஏமாற்றிவிட்டான் என்று கண்ணை கசக்கினால் உடனே அவன் மீது கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்து உள்ளே தள்ளிவிடுகிறார்கள்.

ஆனால் இதுபோன்ற அப்பாவிக் குழந்தைகளை வீசியெறியும் மிருகங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்படுகிறது. யாராவது இதுவரை இதுபோன்ற குற்றத்திற்கு தண்டிக்கப்பட்டிருக்கிறார்களா? அல்லது இதுபோன்ற குழந்தைகளை பாதுகாக்க ஏதாவது சிறப்புச் சட்டம் இருக்கிறதா? இதுபோன்ற கொடிய குற்றங்களுக்கு ஆண், பெண் இருவருமே தண்டிக்கப்படவேண்டியவர்கள். ஆனால் சட்டங்கள் வழக்கம்போல யாராவது ஒரு ஆணைக்காட்டி அவன்தான் இதற்குப் பொறுப்பு என்று பெண்ணை அரவணைத்துத் தட்டிக்கொடுக்கும்.




No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.