இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, January 16, 2011

பெண்ணின் எல்லையில்லாத அன்பு

ஈரோடு மாநகராட்சி 43-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான நீலகிஸ் பின் புறம் மாநகராட்சி சார்பில் ஒரு குப்பை தொட்டி வைக் கப்பட்டுள்ளது. இந்த குப்பை தொட்டியில் வழக்கம்போல் இன்று காலை அப்பகுதி மக்கள் குப்பை கொட்டிக்கொண்டு இருந்தனர்.

அப்போது நடுத்தர வயது மதிக்கதக்க ஒரு பெண் தான் கையில் கொண்டு வந்த பச்சை கலர் பிளாஸ்டிக் பையை குப்பை தொட்டியில் வீசிவிட்டு அங்கிருந்து வேகமாக நடையை கட்டினாள். இதை அங்கு பேப்பர் பொறுக்கும் தொழிலாளி ராஜேந்திரன் என்பவர் பார்த்து விட்டார்.

சற்றுநேரம் கழித்து அவர் அந்த குப்பைதொட்டிக்கு சென்று அந்த பெண் போட்ட பையை எடுத்து கவிழ்த்தார். அப்போது அதில் இருந்து ஒரு பச்சிளம் பெண் குழந்தையின்உடல் விழுந்தது.இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இந்த தகவல்அங்கு காட்டுத்தீ போலபரவியது.

இதற்கிடையே அந்த பகுதியில்வசிக்கும்முஸ்லிம் பெண் ஒருவர் அந்த குழந்தையை கையில் எடுத் தார். அப்போது குழந் தைக்கு சிறுநீர் வந்தது. இதை கண்டு அவர் அந்த குழந்தை உயிருடன் இருப்பதாக கருதி தான் வளர்க்கப்போவதாக எடுத்துக்குகொண்டு அருகில் உள்ள ஆஸ்பத் திக்கு சென்றார்.

டாக்டர் குழந்தையை பாசோதித்துவிட்டு அது ஏற்கனவே இறந்து விட்டதாக தொவித்தார். வீசப்பட்ட அந்தகுழந்தை யின் தொப்புள் கொடிகூட காயவில்லை. சேலை யில் உடலை சுற்றி இருந்தனர். அதன் நெற்றியில் சிறிது காயம் இருந்ததாக கூறப் பட்டது.

எனவே பெண் குழந் தையை அடித்துக் கொன்று அதை குப்பை தொட்டியில் வீசி சென்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த அப்பகுதி கவுன்சிலர் கலைச் செல்வி அந்த குழந்தையின் உடலை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தார்.

இதுபற்றி ஈரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடும் நேரத்தில் பச்சிளம் பெண் குழந்தையை கொன்று குப்பை தொட்டியில் வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.





No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.