இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, January 18, 2011

வயிற்றில் பிள்ளையுடன் திரியும் பள்ளிச் சிறுமிகள்

ஒரு பள்ளியில் 15 வயது இளம் சிறுமிகள் 90 பேர் கர்ப்பத்துடன் பள்ளிக்கு வருவதாக சமீபத்தில் வந்த செய்தி. அந்த செய்தியை பின்வரும் வீடியோவில் பாருங்கள். இது நடந்திருப்பது அமெரிக்க நாட்டில்.




MCS Board working to deal with pregnancies at Frayser High School
Jan 12, 2011

MEMPHIS, TN (WMC-TV) - As Memphis City Schools leaders discuss the best way to deal with the crisis at Frayser High School, one young student is dealing with parenthood.

The Action News 5 Investigators recently discovered 90 girls who attend Frayser High School are now pregnant or have already had a baby this school year.

Frayser is in Memphis City School Board member Stephanie Gatewood's district. She said a former principal of the school first sounded the alarm about the issue about a year ago.

Read Full Story here: MCS Board working to deal with pregnancies at Frayser High School


“பெண்ணுரிமை” என்பதை தவறாகப் புரிந்துகொண்டு வரைமுறையைக் கடந்து இப்போது அமெரிக்க நாட்டுப் பள்ளி திண்டாடிக்கொண்டிருக்கிறது என்பது மேலுள்ள வீடியோவைப்பார்த்தால் புரியும்.

இந்த அமெரிக்க ஸ்டைல் பெண்ணுரிமை தான் இப்போது இந்தியாவிற்கும் "Women Empowerment" என்ற பெயரில் இறக்குமதி செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது என்று பலருக்கும் தெரியாது. இதன் ஒரு பகுதிதான் அடுக்கடுக்காக இயற்றப்படும் “மருமகள் பாதுகாப்பு சட்டங்கள்” என்று அழைக்கப்படும் IPC498A, Domestic Violence Act-2005 போன்றவை....

இந்தச் சட்டங்களும் எந்தவித வரைமுறையின்றி பழிவாங்கும் ஆயுதமாக பயன்படுத்தும் விதத்தில் இயற்றப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்துவதைவிட பழிவாங்குவதற்காகத்தான் இந்த சட்டங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இன்றும் அப்படித்தான் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இதனால் பல குடும்பங்கள் சிதைந்து பல குழந்தைகள் தந்தையற்ற அனாதைகளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பது ஒரு கசப்பான உண்மை.

நம்ம ஊரிலும் இங்கொன்றும் அங்கொன்றுமாக பல ஊர்களில் உள்ள பள்ளிகளில் அமெரிக்கநாட்டில் இருப்பதுபோல பள்ளிச் சிறுமிகள் கர்ப்பம் அடையும் சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கிறது என்பது செய்தித்தாள் படிப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

ஆனால் இதுதான் இனி இந்தியநாட்டில் ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளிலும் நடக்கப்போகிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

டில்லி உயர் நீதிமன்றம் தன்னுடைய ஒரு தீர்ப்பில் இதை ஒரு தீர்க்க தரிசனமாக எழுதியிருக்கிறது. இனிவரும் காலங்களில் திருமணம் செய்யாமல் கர்ப்பம் தரித்து பல மாணவிகள் கல்லூரிக்கு வரும் சூழ்நிலை இருக்கிறது. அதனால் பல்கலைக்கழக விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்று டில்லி நீதிமன்றம் கூடுதல் அறிவுரையும் வழங்கியிருக்கிறது.

திருமணம் செய்யாமல் கூடி வாழ்வது தவறில்லை என்று இந்திய உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டதால் சமுதாயத்தில் ஏற்படப்போகும் மாற்றத்திற்கு ஏற்ப சட்டங்கள் வளைந்துகொடுக்கவேண்டுமே தவிர சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு தடையாக இருக்கக்கூடாது என்று தீர்ப்பில் தெளிவாகச் சொல்லியிருகிறார்கள். தீர்ப்பின் அந்தப் பகுதியை கீழே படித்துப்பாருங்கள்.

IN THE HIGH COURT OF DELHI AT NEW DELHI
Judgment delivered on: 12.07.2010
முழுத் தீர்ப்பை இங்கே காணலாம் W.P.(C) No. 8302/2009

“It would not be inappropriate to mention at this juncture the recent rulings of the Apex Court in the cases of Lata Singh vs. State Of U.P AIR 2006 SC 2522 and S. Khushboo vs. Kanniamal & Anr MANU/SC/0310/2010 where it has given liberty to the live-in relationship from the shackles of being an offence and also in the latter case where it has held that premarital sex is not an offence. The society today is changing at a rapid pace and we must be in tune with the realities and not hold on to archaic social mores. Once such a right, however unpopular, is recognized then it cannot be ruled out that there can be more cases of girl students proceeding on maternity leave when while they are still in college. Law should be an instrument of social change and not a defender of it. Motherhood is not a medical condition but a promise. We all kowtow to our mothers to whom we owe our existence and to punish a woman for becoming a mother would surely be the mother of all ironies.

கடைசியில் திருமணம் இல்லாமல் வரைமுறையின்றி தன்னிஷ்டப்படி பலருடன் கூடி வாழ்ந்து கர்ப்பம் தரிப்பதும், துன்பம் அனுபவிக்கப்போவதும் பெண்கள்தான்! சமுதாய மாற்றங்கள் தொடரட்டும்!! தந்தையற்ற குழந்தைகள் பெருகட்டும்!!!

எது நடந்தாலும் கடைசியில் பெண்ணுக்கு ஆனந்த சுதந்திரம் கிடைத்துவிட்டால் அதுவே மிக்க மகிழ்ச்சியான விஷயம்!



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.