இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, June 09, 2012

திருமணத்திற்கு முன்பே “அதுவா”? - ஆபத்து காத்திருக்கிறது!

திருமணத்திற்கு முன் “அது” தவறு கிடையாது. செய்தித்தாளில் “உல்லாசம்” என்று அடிக்கடி எழுதுவார்களே அதுதான் “அது”.

சட்டப்படியாக “மேஜரான” பெண் தன் விருப்பப்படி யாருடன் வேண்டுமானாலும் கூடி வாழலாம், உறவில் ஈடுபடலாம். இது சமுதாயத்தின் பார்வையில் வேண்டுமானால் தவறாகத் தெரியலாம் ஆனால் இந்திய சட்டத்தின் பார்வையில் இதை குற்றம் என்று சொல்ல முடியாது என்று “கற்பு - கத்தரிக்காய்” வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொன்னவுடன் அதனை வெளிப்படையாக அமலுக்கு கொண்டு வர பல மேல் தட்டு வர்க்க பெண்கள் அரும்பாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனை சமீபத்தில்கூட “இஷ்டம்” என்ற திரைப்படத்தில் தெளிவு படுத்தியிருக்கிறார்கள்.

IN THE SUPREME COURT OF INDIA
CRIMINAL APPELLATE JURISDICTION
CRIMINAL APPEAL NO. 913 of 2010
[Arising out of SLP (Crl.) No. 4010 of 2008]

S. Khushboo ... Appellant
Versus
Kanniammal & Anr. ... Respondents

21. While it is true that the mainstream view in our society is that sexual contact should take place only between marital partners, there is no statutory offence that takes place when adults willingly engage in sexual relations outside the marital setting, with the exception of `adultery' as defined under Section 497 IPC. At this juncture, we may refer to the decision given by this Court in Lata Singh Vs. State of U.P. & Anr., AIR 2006 SC 2522, wherein it was observed that a live-in relationship between two consenting adults of heterogenic sex does not amount to any offence (with the obvious exception of `adultery'), even though it may be perceived as immoral. A major girl is free to marry anyone she likes or "live with anyone she likes".

முன்பெல்லாம் இதுபோன்ற விஷயத்தில் ஈடுபடும் பெண்கள் “விஷயம்” பெரிதாகி பிரச்சனை வந்துவிட்டால் உடனே தனது ஆண் துணைவன் மீது “திருமண ஆசை காட்டி என் விருப்பத்தோடு பல முறை உறவு கொண்டு கற்பழித்துவிட்டான்” என்று பக்குவமாக இந்திய சட்டத்தின் துணையோடு வழக்கு பதிவு செய்து விடுவார்கள்.

இப்போது இதுபோன்ற “கற்பழிப்பு வழக்கு” விஷயங்கள் வெளியே தெரிய ஆரம்பித்துவிட்டதாக “இஷ்டம்” திரைப்படத்தில் காட்டியிருக்கிறார்கள். அதனால் கூலிப்படை வைத்து கொல்லும் மாற்று வழிக்கு செல்ல ஆரம்பித்துவிட்டார்கள் போலிருக்கிறது!

அதுபோன்ற விஷயம் இன்று செய்தித்தாளில் வந்திருக்கிறது. “அது” தேவைப்படும்வரை காதலித்துவிட்டு பிறகு தேவையில்லாதபோது கூலிப்படை வைத்து காதலனை கொன்றிருக்கிறார் ஒரு இளம் பெண்.



பெங்களூரு:காதலனாக மாறிய கார் டிரைவரை, பெங்களூரு மல்லேஸ்வரம் கல்லூரியில் படித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கூலிப்படையின் மூலம் கொலை செய்ய முயற்சித்தார். இதில், காதலனின் நண்பன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், காதலி உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் சுஷ்மா. இவர், தன் தாயார், சகோதரனுடன் ஜாலஹள்ளியில் தங்கி படித்து வந்தார். மல்லேஸ்வரம் எம்.இ.எஸ்., கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.யூ.சி.,யில் தேர்ச்சி பெற்றதால், அவரது தந்தை, "பொலீரோ' கார் வாங்கி கொடுத்திருந்தார். தொடர்ச்சியாக பி.பி.எம்., முதலாண்டு படிப்பு படித்து வந்தார். கார் டிரைவராக மஞ்சுநாத் நிங்கேலப்பா, 25, என்பவரை அவரது தந்தையே நியமித்தார்.

உல்லாசம்:ஆரம்பத்தில் டிரைவராக இருந்த மஞ்சுநாத், நாளடைவில் காதலராக மாறியதுடன், சுஷ்மாவுடன், டில்லி, மங்களூரு, கோவா போன்ற இடங்களுக்குச் சென்று, ஓட்டல்களில் புதுமணத் தம்பதிகள் போன்று தங்கி உல்லாசமாக இருந்ததுடன், நெருக்கமாக புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர். நாட்கள் செல்ல செல்ல, மஞ்சுநாத்திடமிருந்து சுஷ்மா விலக முயற்சித்தார். இதை விரும்பாத மஞ்சுநாத், இருவரும் நெருக்கமாக எடுத்துக் கொண்டபுகைப்படங்களை வெளியிடப் போவதாக மிரட்டினார்.

ரூ.5 லட்சம் பேரம்: மஞ்சுநாத்தை திருமணம் செய்து கொள்ளும்படி அவரது நண்பர் அலி ஹூசேனும், 24, வற்புறுத்தினார். மஞ்சுநாத் யோசனையின்படி சுஷ்மாவை, அலி ஹூசேன் கண்காணித்து வந்தார். இதனால் எரிச்சலடைந்த சுஷ்மா, இருவரையும் ஒழித்துக் கட்ட திட்டமிட்டார். தன் பள்ளி நண்பரான பசவேஸ்வரா நகரைச் சேர்ந்த அஜய்குமாரிடம், 20, சுஷ்மா ஆலோசனை கேட்டார். இருவரையும் கொலை செய்வதன் மூலமே பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்று கூறிய அஜய், கிரிமினல் பின்னணி கொண்ட லட்சுமண், 20, தீபக், 19, அபிஷேக், 19, ஆகியோருடன் திட்டம் தீட்டினார். மஞ்சுநாத், அலி ஹூசேன் இருவரையும் கொலை செய்து, உடல்களை கொண்டு போய் மறைக்க, ஐந்து லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டது.

தப்பி ஓட்டம்:திட்டமிட்டப்படி, கடந்த மே 11ம் தேதி, இரவு 9 மணியளவில் மஞ்சுநாத், அலி ஹூசேனுடன், ஜாலஹள்ளியில் உள்ள ஹெச்.எம்.டி., ஆடிட்டோரியம் அருகில் பேச விரும்புவதாக சுஷ்மா அழைத்தார். இருவரும் அங்கு சென்றனர். சிறிது நேரத்தில் மேலும் நான்கு பேர் ஜீப்பில் வந்து, அங்கு இறங்குவதை பார்த்த மஞ்சுநாத், ஏதோ தவறு நடக்கப்போகிறது என்பதை உணர்ந்து, ரிங் ரோடு வழியாக ஓடினார். மாட்டிக்கொண்ட அலி ஹூசேன், சுஷ்மாவின் கண் எதிரிலேயே கொலை செய்யப்பட்டார். அவரது உடல், தொட்டபல்லாபூர் அருகில் வீசியெறியப்பட்டது.

போலீசில் புகார்:உடனடியாக வேலூர் கிளம்பிச் சென்ற சுஷ்மா, அங்குள்ள தன் காதலன் ரசன் குமாருடன் தங்கியிருந்தார். இரு நாள் கழித்து மஞ்சுநாத், போலீசாரிடம் புகார் கொடுத்ததையடுத்து, ஹூசேன் உடல் கண்டெடுக்கப்பட்டது. வேலூரிலிருந்த சுஷ்மா கைது செய்யப்பட்டு, பெங்களூரு அழைத்து வரப்பட்டார். விசாரணைக்கு பின், சுஷ்மாவுக்கு உதவியாக இருந்த அஜய்குமார், தீபக், லட்சுமண், அபிஷேக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

1 comment:

Anonymous said...

விழிப்புணர்வு முக்கியம் ...!!!

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.