இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, December 21, 2012

பெண்களை தவறிழைக்கத் தூண்டுவதில் பெரும்பங்கு வகிக்கும் செய்தித்தாட்கள்


இன்றைய செய்தியில் ஏற்கனவே திருமணமான பெண் வேறு ஒரு ஆணை மணந்து அந்த ஆணையும் ஏமாற்றிவிட்டு பெற்ற குழந்தையையும் விட்டுவிட்டு  படிக்கும் வயதில் இருக்கும் ஒரு இளைஞனுடன் ஓடியிருக்கிறார்.  ஆனால் செய்தித்தாள் இந்த செய்திக்கு கொடுத்திருக்கும் தலைப்பு “திருமணமான பெண்ணுடன் மாணவர் ஓட்டம்”.   எப்படி இருக்கிறது கதை.  வயதில் மூத்த இருமுறை திருமணமான பெண்ணை ஏதோ இந்த இளைஞர் கட்டாயப்படுத்தி இழுத்துக்கொண்டு ஓடிவிட்டதாக செய்தித்தாள் சித்தரித்திருக்கிறது.

இப்படித்தான் மீடியாக்கள் தவறிழைக்கும் பெண்களை அப்பாவி போல சித்தரித்து ஊக்கப்படுத்திவருகிறார்கள்.  அதே சமயம் ஆண்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்படும்போது உண்மை என்னவென்றுகூட  கவலைப்படாமல் ஆண்களை குற்றவாளி போல சித்தரித்து  பரபரப்பாக  செய்தி வெளியிடுகிறார்கள். 

மொத்தத்தில் பெண்களை சீரழிப்பதில் மீடியாக்களின் பங்கு மிகவும் முக்கியமானது.  தெரிந்துகொண்டவர்கள் புரிந்துகொள்வார்கள். 

விலங்குகளிடம் என்றும் மாறாமல் இருக்கும் ஒரு குணமான தாய்மை இப்போது மனிதர்களிடம் மிகவும் அரிதாகக் காணப்படுகிறது என்று பின்வரும் செய்தியில் பாருங்கள்.




துவரங்குறிச்சி: திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயாக உள்ள பெண்ணுடன், இன்ஜினியரிங் படிக்கும் மாணவர் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகேயுள்ள பில்லுப்பட்டியைச் சேர்ந்தவர் அழகர்சாமி, 30. திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் உள்ள ஸ்வீட் கடையில் மாஸ்டராக வேலை பார்க்கிறார். இவருக்கும், எடமலைப்பட்டி புதூரைச் சேர்ந்த, ஏற்கனவே திருமணமான, மாலா, 35, என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.மாலாவின் அழகில் மயங்கிய அழகர்சாமி, மாலாவை திருமணம் செய்து கொண்டார்.

இருவரும், மேட்டுப்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் வீட்டில், வாடகைக்கு குடியிருந்தனர். இவர்களுக்கு, ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளதுராஜேந்திரனின் மகன் கார்த்திக், 18. விராலிமலை அருகேயுள்ள எம்.ஏ.எம்., இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாமாண்டு பி.இ., படித்து வந்தார்.

அழகர்சாமி வேலைக்கு சென்ற பின் வீட்டில் தனியாக இருக்கும் மாலாவுக்கும், "படித்து' கொண்டிருந்த கார்த்திக்கும் தொடர்பு ஏற்பட்டது.இருவரும் தனிமையில் சந்தித்து தொடர்பை வலுப்படுத்தி வந்தனர். இவர்களின் கள்ளத்தொடர்பை அறிந்த அழகர்சாமி மற்றும் ராஜேந்திரன், இருவரையும் கடுமையான கண்டித்தனர்.

இவர்கள் சந்திப்பதற்கு தடை விதித்தனர்.ராஜேந்திரன் வீட்டை காலி செய்ய சொன்னதால், அழகர்சாமி வீட்டை காலிச் செய்துவிட்டு, பில்லுப்பட்டிக்கு சென்றுவிட்டார். இதனால் வேதனைக்கு உள்ளான இருவரும், அவ்வப்போது தனிமையில் சந்தித்து, ஊரை விட்டு ஓடிவிட திட்டம் தீட்டினர்.

கடந்த, 15 நாட்களுக்கு முன், மாலா, தனது பெண் குழந்தையை வீட்டிலேயே விட்டுவிட்டு, கார்த்திக்குடன் மாயமானார். அழகர்சாமியும், ராஜேந்திரனும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ராஜேந்திரன், வளநாடு போலீஸில் புகார் கொடுத்தார்.எஸ்.ஐ., அப்துல் ரகீம் மற்றும் போலீஸார் வழக்குப்பதிந்து, மாயமான கள்ளக்காதல் ஜோடியை தேடி வருகின்றனர். ஏற்கனவே, 2 திருமணமாகி, ஒன்றரை வயதில் குழந்தைக்கு தாயான பெண்ணும், இன்ஜினியரிங் மாணவரும் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 comment:

Anonymous said...

நேற்று நடந்த தற்கொலை விடயத்திலும் ஒரு சிக்கல் இருந்ததாகவும் அது வெளிப்பட்ட பின்பே அவமானத்தில் தற்கொலை நடைபெற்றதாக ஒரு தகவல் கிடைக்க பெற்றுள்ளது.
மேலதிக தகவல் எமது பத்திரிகை அலுவலகத்துக்கு கிடைத்த பின் அறிய தருகின்றேன்

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.