இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, September 02, 2012

குழந்தைகளை கொல்லும் புதிய இந்திய காதல் கலாச்சாரம்

இந்தியாவில் சமீப காலமாக காதலுக்காக கூலிப்படை வைத்து கணவனை கொல்வது, கள்ளக் காதலனுடன் சேர்ந்துகொண்டு திட்டம் தீட்டி கணவனை கொல்வது, கள்ளக் காதலுக்கு இடையூறாக இருக்கும் வயதான மாமனார், மாமியார், குழந்தைகள் போன்றவர்களை ஈவு இரக்கமின்றி கொல்வது போன்ற கொடூர செயல்களில் பல இளம் பெண்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்று தினமும் வரும் செய்திகள் மூலம் அறியலாம்.

இதுபோன்ற காதலில் ஈடுபடும் பெண்கள் ஏன் இப்படிக் கொல்கிறார்கள் என்று யோசித்தால் இந்திய பெண்கள் பாதுகாப்பு சட்டத்தைப் பற்றிய போதிய விழிப்புணர்ச்சி இல்லாததால்தான் இவர்கள் தங்களது காதலை மறைக்க இந்த கொடூரமான செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று தெரிகிறது.

இந்திய கள்ளக்காதல் சட்டப்படி மனைவி கள்ளக்காதலில் ஈடுபடுவதை கணவன் கையும் கலவுமாக பிடித்தாலும் மனைவியை சட்டத்தின் முன்னால் நிறுத்தி தண்டிக்க முடியாது என்ற இந்திய பெண்கள் பாதுகாப்பு சட்டம் பற்றி பல அப்பாவி இளம் பெண்களுக்கு போதிய விழிப்புணர்ச்சி இல்லை.

IPC497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man , such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.

அதுபோலவே தனது கள்ளக்காதலை கண்டுபிடித்துவிடும் கணவன் மற்றும் அவனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மீது பொய் வரதட்சணைக் கொடுமை வழக்குத் தொடர்ந்தால் கணவனையும் அவனது குடும்பத்தையும் எளிதாக சிறையில் அடைத்துவிடலாம். இதுதான் பலகாலமாக படித்த பெண்கள் பயன்படுத்தி வரும் நடைமுறை. இந்த வழக்கம் பற்றி இன்னும் பல இளம் பெண்களுக்கு சரியான விழிப்புணர்ச்சி இல்லை!

மனைவி கள்ளக்காதலில் ஈடுபட்டால் கணவனால் அந்த மனைவி மீது எந்த வித குற்றவழக்கையும் தொடரமுடியாது. ஆனால் விவாகரத்து கோரலாம். அதற்கும் கணவன்தான் அனைத்துவித ஆதாரங்களையும் திரட்டி நீதிமன்றத்தில் மனைவியின் கள்ளக்காதலை நிரூபிக்க வேண்டும். நீதிமன்றங்களில் பொதுவாக கணவன் தரப்பு வாதத்தை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் கணவன் நடமாடும் நடைபிணமாக வாழவேண்டியதுதான். வேறு வழியே இல்லை என்று இந்த வீடியோவை முழுதுமாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.



ஆனால் கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவி கணவன் மீதும், அவனது குடும்பத்தார் மீதும் பொய்யான வரதட்சணைக் கொடுமை வழக்குத் தொடர்ந்தால் நீதிமன்றத்தில் கணவனும் அவனது குடும்பத்தாரும்தான் தாங்கள் எந்தவித வரதட்சணைக் கொடுமையும் செய்யவில்லை, தாங்கள் நிரபராதி என்று நிரூபித்துக் கொள்ள வேண்டும். இந்த சட்டம் பல பெண்களுக்கு கள்ளக் காதலை வளர்த்துக் கொள்ள மிகவும் சாதகமாக இருந்து வருகிறது என்று உலகத்திற்கு தெரியும்!

THE DOWRY PROHIBITION ACT, 1961

(Act No. 28 of 1961)

8-A. Burden of proof in certain cases.- Where any person is prosecuted for taking or abetting the taking of any dowry under Sec. 3, or the demanding of dowry under Sec.4, the burden of proving that he had not committed an offence under those sections shall be on him.
இப்படி இந்திய சட்டம் அழகாக இளம் மனைவியர் தங்கள் காதலை வளர்த்துக்கொள்ள பாதுகாப்பு அளிக்கும்போது எதற்காக இந்த இளம் மனைவியர் கணவனையும், குழந்தைகளையும் கொன்று தங்கள் காதலை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று யோசித்தால் அதற்குப்பின்னால் இந்த அப்பாவிப் பெண்களின் அறியாமைதான் காரணம் என்று தெரிகிறது. அதனால் போலியான பெண்ணியவாதிகள் இதுபோன்ற சட்ட விழிப்புணர்வை இளம் பெண்களுக்கு ஏற்படுத்தி குறைந்தபட்சம் குழந்தைகளின் உயிரையாவது காப்பாற்ற முயற்சி செய்யலாம்.


ஓசூர் : கள்ளக்காதல் விவகாரத்தில், அண்ணியும், அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து, பள்ளி மாணவனை வெட்டி படுகொலை செய்தது, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

தர்மபுரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த கொத்தூரை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி திம்மராயப்பா. இவரின் கடைசி மகன் சதீஷ்,7; இரண்டாம் வகுப்பு மாணவன். நேற்று முன்தினம் மாலை, பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் விளையாட சென்றான். அதன்பின், வீடு திரும்பவில்லை. இரவு, 9.00 மணியளவில், திம்மராயப்பா வீட்டிற்கு பின்புறம், விவசாய தோட்டத்தில் கிடந்த சாக்கு மூட்டையில், சிறுவன் சதீஷ், வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், பிணமாக கிடந்தான்.

உத்தனப்பள்ளி போலீசார், சிறுவன் உடலை கைப்பற்றி விசாரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய், கொலையான சிறுவனின் அண்ணன் சங்கர் வீட்டிற்கு அருகே போய் நின்றது.

இதனால், போலீசார், சிறுவனின் அண்ணி கலாவை விசாரித்தனர். விசாரணையில், முன்னுக்கு பின் முரணான தகவலை அவர் தெரிவித்ததால், அவர் மீது சந்தேகம் எழுந்தது. தொடர் விசாரணையில், கொலை சம்பவத்திற்கான முடிச்சு அவிழ்ந்தது.

போலீஸ் விசாரணையில் தெரியவந்த தகவல்: சதீஷின் அண்ணன் சங்கரின் மனைவி கலாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த புட்டப்பாவுக்கும், கள்ளக்காதல் இருந்துள்ளது. இருவரும், அவ்வப்போது தனிமையில் சந்தித்து, உல்லாசமாக இருந்துள்ளனர். நேற்று முன்தினம், கலா வீட்டில், புட்டப்பா இருந்த போது, சதீஷ் அவர்களை பார்த்து விட்டான். இது பற்றி, அண்ணணிடம் கூறுவேன் என்று, சதீஷ் கூறியதால், ஆத்திரமடைந்த புட்டப்பாவும், கலாவும் சேர்ந்து, சிறுவனை அரிவாளால் வெட்டி, கொலை செய்தனர்.

கொலையை மறைக்க, சதீஷ் உடலை சாக்கு மூட்டையில் கட்டி, அருகேயுள்ள விவசாய தோட்டத்தில் வீசியுள்ளனர். அதன்பின் கலா, குடும்பத்தினருடன் சேர்ந்து, தேடுவது போல் நாடகமாடியுள்ளார் என்பது, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கலாவையும், புட்டப்பாவையும் போலீசார் கைது செய்தனர்.

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.