இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, August 18, 2012

வெளிநாடுவாழ் கணவர்களே உங்களது பணமும், மனைவியும் இந்தியாவில் பாதுகாப்பாக இருக்கிறார்களா?

இன்றைய சூழலில் உறவுகளை பிரிந்து உழைப்பதற்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் கணவர்களின் வாழ்க்கைதான் இந்திய சட்டங்கள் மூலம் மிகுந்த கேள்விகுறியாகியிருக்கிறது.

கள்ளக்காதலை தட்டிக் கேட்கும் கணவனை பொய் வரதட்சணை வழக்கில் குடும்பத்தோடு சிறையில் அடைப்பது அல்லது கள்ளக்காதலர்களுடன் சேர்ந்துகொண்டு கணவனை கொலைசெய்வது. இந்த இரண்டும் இப்போது சர்வ சாதாரணமாக இந்தியாவில் நடந்துகொண்டிருக்கிறது.

இந்த இரண்டுவகை செயலுக்கும் “பெண்கள் பாதுகாப்பு” என்ற பெயரில் இந்திய சட்டங்கள் தூண்டுகோலாகவும், சட்டங்களை செயல்படுத்துபவர்கள் பக்க பலமாகவும் இருக்கிறார்கள் என்பது உலகறிந்த உண்மை. இவற்றால் சீரழிந்த ஒரு இந்தியக் குடும்பத்தின் கதை இன்றைய செய்தியில் வந்திருக்கிறது.

மதகுபட்டி பெண் கொலையில் கள்ளக்காதலனுக்கு தொடர்பு?
ஆகஸ்ட் 18,2012 தினமலர்

சிவகங்கை : சிவகங்கை மதகுபட்டி அருகே, கும்பலால் பெண் குத்திக் கொல்லப்பட்ட வழக்கில், கள்ளக்காதலனுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற அடிப்படையில், தனிப்படையினர் விசாரிக்கின்றனர்.

சிவகங்கை ஏரியூரை சேர்ந்தவர் கலைச்செல்வன்; மனைவி ஜெகதீஸ்வரி, 40. கலைச்செல்வன், 20 ஆண்டுகளாக வெளிநாட்டில் பணி செய்தார்; மனைவிக்கு அனுப்பிய பணத்திற்கு சரியான கணக்கு இல்லாததால், இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டு, பிரிந்தனர்.

மதுரையில் தங்கி, மதகுபட்டியில் "சீட்டு' நடத்திய ஜெகதீஸ்வரி, ஆக.,14 ல், உதவியாளர் சித்ராவுடன் இருசக்கர வாகனத்தில் சென்றார்; அலவாக்கோட்டை அருகில் மறித்த கும்பல், கத்தியால் குத்தியதில், ஜெகதீஸ்வரி இறந்தார். சித்ரா சிகிச்சையில் உள்ளார். இரண்டு தனிப்படையினர், மதுரையில் விசாரிக்கின்றனர்.

ஜெகதீஸ்வரிக்கு 3 பேருடன் கள்ளத் தொடர்பு இருந்ததும், குடிப் பழக்கத்திற்கு அடிமையானதும், விசாரணையில் தெரிந்தது. கள்ளத்தொடர்பு போட்டியில், ஜெகதீஸ்வரியை கொலை செய்திருக்கலாம் என, போலீசார் விசாரிக்கின்றனர். கணவர் தூண்டுதலில் கொலை செய்தார்களா எனவும் சந்தேகிக்கின்றனர். அவரது ஒரே மகள் விசாரணைக்கு ஒத்துழைத்தால் தான், உண்மை தெரியவரும்.

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.