இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, July 29, 2010

இதையும் செய்வாள் பெண்

எப்போதுமே கணவன்தான் மனைவியை கொடுமை செய்வான் என்று தவறான எண்ணம் கொண்டவர்களுக்கு ஒரு வித்தியாசமான செய்தி. ஆனால் இது உண்மை. இப்படி பல நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் வெளிச்சத்திற்கு வருவதில்லை.


கணவனை கொன்ற மனைவிக்கு ஆயுள்தண்டனை
ஜூலை 30,2010 தினமலர்

ஊட்டி : குடும்பத் தகராறு காரணமாக கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து, நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. குன்னூர் குமரன் நகரைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி(28); இவரது மனைவி பூங்காவனம். இருவரிடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி மாலை 3 மணியளவில் வீட்டில் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி இருவரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஆத்திரமடைந்த பூங்காவனம், வீட்டிலிருந்த இரும்பு குழாயால் பார்த்தசாரதியை தாக்கினார். இதில் படுகாயமடைந்த பார்த்தசாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கின் விசாரணை, ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கணவனை கொன்ற குற்றத்துக்காக பூங்காவனத்துக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி முருகன்.





No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.