இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, July 20, 2010

குழந்தைகளுக்கு எமனாகும் இந்தியக் கள்ளக்காதல் கலாச்சாரம்

சமீப காலமாக பத்திரிக்கைகள் விழிப்புடன் செய்திகள் வெளியிடுவதன் மூலம் பெண்கள் பாதுகாப்புச் சட்டம் என்ற இருட்டறைக்குள் இருந்துகொண்டு கொலைசெய்துகொண்டிருக்கும் பல பெண்களின் அப்பாவித்தனம் வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கிறது. இதுவரை கள்ளக்காதலுக்காக கணவனைக் கொல்லும் நிலை மாறி இப்போது குழந்தைகளையும் கொல்லும் இழிநிலையில் சென்றுகொண்டிருக்கிறது நிலவரம்.

சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பும், கருத்தும் எரிகின்ற தீயில் பெட்ரோல் ஊற்றியது போல பலருக்கும் நல்ல தன்னம்பிக்கையை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தக் கருத்துப்படி வயதுவந்த ஆண், பெண் இருவரும் விரும்பி உறவுகொண்டு அது கள்ளஉறவாக அதாவது இந்திய சட்டம் IPC497- Adultery சட்டப்படி அடுத்தவன் மனைவியுடனான உறவாக இல்லாதபட்சத்தில் அது சட்டப்படி தவறில்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியே அது அடுத்தவன் மனைவியுடனான உறவாக இருந்தால் உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும்தான் தண்டனை வழங்கப்படும் என்று சட்டத்தில் வரையறை செய்துவைத்திருக்கிறார்கள். அந்தத் தீர்ப்பின் பகுதியையும் அந்த சட்டப்பிரிவையும் கீழே பாருங்கள்.

IN THE SUPREME COURT OF INDIA
CRIMINAL APPELLATE JURISDICTION
CRIMINAL APPEAL NO. 913 of 2010
[Arising out of SLP (Crl.) No. 4010 of 2008]

S. Khushboo ... Appellant
Versus
Kanniammal & Anr. ... Respondents

21. While it is true that the mainstream view in our society is that sexual contact should take place only between marital partners, there is no statutory offence that takes place when adults willingly engage in sexual relations outside the marital setting, with the exception of `adultery' as defined under Section 497 IPC. At this juncture, we may refer to the decision given by this Court in Lata Singh Vs. State of U.P. & Anr., AIR 2006 SC 2522, wherein it was observed that a live-in relationship between two consenting adults of heterogenic sex does not amount to any offence (with the obvious exception of `adultery'), even though it may be perceived as immoral. A major girl is free to marry anyone she likes or "live with anyone she likes". (பெண் விரும்பினால் யாருடனும் சேர்ந்து வாழலாம் அது திருமணம் ஆன ஆணுடனா அல்லது திருமணமாகாத ஆணுடனா என்று சொல்லப்படவில்லை)

IPC 497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.

மேலே கொடுக்கப்பட்டுள்ள சட்ட வரையறைப்படியும், நீதிமன்ற தீர்ப்பின் கருத்தின்படியும் கீழுள்ள செய்தியில் கள்ளஉறவு ஏற்பட்டு அதில் ஒரு குழந்தை பலியிடப்பட்டிருக்கிறது. கீழுள்ள செய்தியில் திருமணமான ஆண் திருமணமாகாதப் பெண்ணுடன் உறவுவைத்திருக்கிறார். இது சமீபத்திய தீர்ப்புப்படி இரு வயதுவந்த ஆண்,பெண் கொண்ட விருப்ப உறவாக அமையும் அதேநேரத்தில் IPC497 (Adultery) சட்டப்படி அடுத்தவன் மனைவியுடனான உறவாக இல்லாததால் இது Adultery என்ற பிரிவின் கீழ் குற்றமாகவும் வராது.

மேலும் அந்த ஆண் அந்தப் பெண்ணுடன் திருமணம் செய்திருந்தால்தான் அது அந்த ஆணைத் தண்டிக்க வழி செய்யும் இருதார மணம் (Bigamy) என்ற பிரிவில் கருதப்படும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் மனைவியல்லாத இரண்டாவது காதலியுடன் திருமணம் செய்யாமல் பல அரசியல்வாதிகள் உங்கள் கண்ணுக்கெதிரேயே பெருமையுடன் உங்கள் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதனால் கீழுள்ள செய்தியில் உள்ளதுபோன்ற குற்றங்களை சட்டங்களும் சமுதாயமும் எப்படி ஊக்குவித்துக்கொண்டிருக்கின்றன என்று தெளிவாகத் தெரிகிறதல்லவா.


சூட்கேசில் சிறுவன் பிணம் : கள்ளக்காதலியின் வெறிச்செயல் அம்பலம்

தினமலர் ஜூலை 20, 2010

கொலை செய்யப்பட்ட சிறுவன் ஆதித்யா உடல், நாகை சுடுகாட்டில் புதைக்கப்பட்ட போது கதறியழும் தாய் ஆனந்தி.

சென்னை :சென்னையில் காணாமல் போய், சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் ஆதித்யாவை, அவனது தந்தையின் கள்ளக்காதலி பூவரசியே கொன்று சூட்கேசில் எடுத்துச் சென்று நாகப்பட்டினத்தில் வீசியுள்ளது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பூவரசியை, போலீசார் கைது செய்தனர்.

சென்னை, விருகம்பாக்கம் பத்மாவதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (33). கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த இவர், சென்னையில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஆனந்தி (எ) அனந்த லட்சுமி (30). இவர்களுக்கு நிவேதா (6) என்ற மகளும், மூன்றரை வயதில் ஆதித்யா என்ற மகனும் உள்ளனர்.வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அடுத்த திருவலம் கிராமத்தை சேர்ந்தவர் பூவரசி (26). எம்.எஸ்சி., பட்டதாரியான இவர், ஜெயக்குமார் பணியாற்றும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஜெயக்குமாரும், பூவரசியும் முன்னரே, சென்னையில் வேறு ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய போது நெருக்கம் ஏற்பட்டு, கள்ளத் தொடர்பாக வளர்ந்தது. பூவரசியை, வேப்பேரியில் உள்ள ஒய்.டபிள்யூ.சி.ஏ., விடுதியில் ஜெயக்குமார் தங்க வைத்தார். இதை அறியாத ஆனந்தியும், அவரது குழந்தைகளும், பூவரசியிடம் நெருக்கமாக பழகினர்.ஜெயக்குமார் அடிக்கடி தனது மகன் ஆதித்யாவை அலுவலகத்திற்கு அழைத்து வரும் போது, பூவரசி தன்னுடன் அழைத்துச் செல்வது வழக்கம். கடந்த சனிக்கிழமை 17ம் தேதி வழக்கம் போல் ஆதித்யா, அலுவலகம் வந்த போது, அரண்மனைக்காரன் தெருவில் உள்ள ஆண்டர்சன் சர்ச்சில் விழா நடப்பதாகவும், அங்கு ஆதித்யாவை அழைத்துச் செல்வதாகவும் பூவரசி கூறினார். தொடர்ந்து, ஜெயக்குமார், ஆதித்யாவை பூவரசியுடன் அனுப்பி வைத்தார். அன்று மாலை 6 மணிக்கு தனது மகன் ஆதித்யாவை காணவில்லை என்று எஸ்பிளனேடு போலீசில் ஜெயக்குமார் புகார் அளித்தார். விசாரணையில், தனது மகனை, நண்பியான பூவரசியுடன் அனுப்பியதாகவும், அவர் சர்ச்சில் மயங்கி விழுந்த போது மகனை காணவில்லை என்றும் கூறியிருந்தார். தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்த பூவரசியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவரும் அப்படியே கூறியதால், மறுநாள் விசாரணைக்கு வருமாறு போலீசார் கூறியிருந்தனர். மறுநாள் காலை போலீசும், ஜெயக்குமாரும் தொடர்பு கொண்ட போது, பூவரசியின் மொபைல் "சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. பிற்பகல் இணைப்பு கிடைத்த நிலையில், போலீசார் மீண்டும் பூவரசியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நாகை மாவட்ட புதிய பஸ் நிலையத்தில் சூட்கேசில் இறந்த நிலையில் சிறுவன் பிணம் மீட்கப்பட்டது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த படத்தை வைத்து கேட்ட போது ஜெயக்குமாரும், பூவரசியும் மறுத்துவிட்டனர். ஆனால், ஆனந்திக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவர் அடையாளம் காட்ட நாகைக்கு அனுப்பப்பட்டார்.அங்கு சென்ற ஆனந்தி, சூட்கேசில் இருந்த சிறுவன் உடல் தனது மகன் ஆதித்யாவுடையது தான் என தெரிவித்தார். தொடர்ந்து, பூவரசியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், ஆதித்யாவை கொன்றதை ஒப்புக் கொண்டார். போலீசார், பூவரசியை கைது செய்தனர். சிறுவனின் தந்தை ஜெயக்குமார் தற்போது நாகை விரைந்துள்ளார்.

சிறுவன் உடல், நாகை அரசு மருத்துவமனையில் குளிரூட்டப்பட்ட பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.இது குறித்த செய்தி பத்திரிகைகளில் வெளிவந்ததையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை போலீசாருடன், நாகை அரசு மருத்துவமனைக்கு வந்த ஆனந்தி, சிறுவன் உடலை பார்த்து கதறியழுது மயங்கி விழுந்தார். மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் ஆனந்தி சேர்க்கப்பட்டார்.நேற்று மாலை சிறுவன் ஆதித்யா உடல், பிரேத பரிசோதனைக்கு பின், நாகை சுடுகாட்டில் போலீஸ் பாதுகாப்புடன் புதைக்கப்பட்டது. இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் சோகத்தோடு பங்கேற்றனர்.நாகை பஸ் ஸ்டாண்டு முழுப்பகுதியையும் கண்காணிக்க, நவீன கேமரா பொருத்தப்பட்டு இதன் கட்டுப்பாட்டு அறை டி.எஸ்.பி., அலுவலகத்தில் 24 மணி நேரமும், தனி அலுவலரால் கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில், பஸ் ஸ்டாண்டின் மையப்பகுதியில், சிறுவனை கொலை செய்து உடலை அடைத்து வைத்திருந்த சூட்கேஸ் இறக்கி வைக்கப்பட்டு, அனாதையாக கிடந்துள்ளது. இது நவீன கண்காணிப்பு கேமராவில் பதிவாகாத மர்மம் போலீசாருக்கு புரியாத புதிராக உள்ளது.

"ஜெயக்குமாரை பழிவாங்கவே கொன்றேன்'

ஜெயக்குமாருக்கும், எனக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தொடர்பு ஏற்பட்டது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம். நான் கர்ப்பமடைந்த நிலையில், ஜெயக்குமாரின் வற்புறுத்தலால் கருவை கலைத்தேன். இரண்டு முறை அப்படி நடந்தது. தொடர்ந்து அவர், கருவை கலைக்கச் சொன்னதால் நான் ஆத்திரமடைந்தேன். திருமணம் செய்யுமாறு கூறியபோது ஜெயக்குமார் மறுத்தார். எனக்கு உருவான குழந்தையை கொன்றுவிட்டு, ஜெயக்குமார் மட்டும் குழந்தையுடன் சந்தோஷமாக இருக்கக் கூடாது என்று எண்ணினேன்.கடந்த 17ம் தேதி, சிறுவன் ஆதித்யாவை கூட்டிக் கொண்டு எனது விடுதிக்குச் சென்று, அங்கு அவன் அணிந்திருந்த டிரஸ்சில் இருந்து நைலான் கயிறை எடுத்து கழுத்தில் இறுக்கி கொன்றேன். பின்பு, தலையை பிளாஸ்டிக் கவரை கொண்டு மூடி உடலை சூட்கேசில் வைத்தேன். அங்கிருந்து ஆண்டர்சன் சர்ச்சிற்கு பாவமன்னிப்பு கேட்கச் சென்ற போது மயங்கி விழுந்து விட்டேன். போலீசார், மருத்துவமனையில் வைத்து விசாரிக்கும் போது, ஆதித்யாவின் உடல் சூட்கேசில் எனது அறையில் இருந்தது.மறுநாள் காலை மருத்துவமனையில் இருந்து வந்து, ஆட்டோவில் சூட்கேசை ஏற்றி கோயம்பேடு சென்று, அங்கிருந்து பஸ்சில் ஏற்றி புதுச்சேரி சென்றேன். அங்கு, நாகை பஸ்சில் சூட்கேசை ஏற்றி வைத்து விட்டு, மீண்டும் சென்னை திரும்பி விட்டேன். ஜெயக்குமாரை பழிவாங்கவே நான் இந்த கொலையை செய்தேன்.

==============

இந்த செய்தியிலிருந்து பெண்ணியவாதிகள் என்ன சொல்வார்கள் என்றால் பெண்ணை கர்ப்பம் அடையச் செய்து ஏமாற்றிவிட்டான் ஆண் என்று சொல்வார்கள். ஆனால் செய்தியில் பார்த்தீர்களா? முதல் முறை கர்ப்பம் அடைந்து அது கலைக்கச்சொல்லியும் மீண்டும் பெண்ணின் ஒத்துழைப்பு இல்லாமலா இரண்டாவது கர்ப்பம் எப்படி ஏற்பட்டிருக்கும்? இப்படித்தான் கள்ள உறவு IPC497 (Adultery) சட்டம் சொல்கிறது. கள்ள உறவில் ஈடுபடும் பெண் குற்றவாளி இல்லை என்று சொல்லி பெண்ணிற்கு தண்டணையிலிருந்து விலக்கு அளித்து பெருமைப்படுத்தினால் அப்பாவிக் குழந்தைகளின் உயிரை பணயம்வைத்து இதுபோன்ற சிறுமைத்தனங்கள்தான் நாட்டில் இனி பெருகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக ''தாய்மை" என்ற பண்பு சட்டங்கள் மூலம் சமுதாயத்தில் அழிக்கப்பட்டு வருகிறது என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. ஆனால் தாய்மை என்ற பெயரில் பெண்களுக்கு ஒருதலைபட்சமான சிறப்புச் சட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. கடைசியில் அந்தத் தவறான சட்டங்களை பயன்படுத்துபவர்கள் கொடூர குணம் கொண்ட அரக்கிகள் மட்டுமே. உங்கள் வீட்டிலிருக்கும் உங்களது தாய் மற்றும் சகோதரிகளை இந்த சட்டங்கள் ஒருபோதும் பாதுகாக்கவில்லையே ஏன்?

இதுபோலத்தான் பல பொய் வரதட்சணை வழக்குகள் நாட்டில் உலவிக்கொண்டிருக்கிறது. இதுபோலத்தானே ஒரு பெண் இரண்டுமாதக் குழந்தையைக் கூட வரதட்சணை வழக்கில் குற்றவாளியாகச் சேர்த்தார்.

Stepmom Names Two-Month-Old Baby in Dowry Complaint (link)

In diapers, lying in her mother's lap and yet to sprout teeth, but Zoya is an accused in a dowry harassment case. The two-month-old baby was named along with seven adults by her stepmother in a complaint letter to the police. What is worse is that the police has included the child's name in the FIR [“First Information Report,” the Indian equivalent of a police report]. Her mom: I told them (police) that she is a baby and how can you write her name in the police FIR.

கடைசியில் பெண்களுக்குச் சரியான சட்ட விழிப்புணர்ச்சி இல்லாததால்தான் இதுபோன்ற செயல்கள் நடைபெறுகிறது என்று பெண்கள்வாரியம் சொல்கிறது.



Elaborating on false cases being filed in recent times, the CJI said that relatives not involved with a matrimonial dispute were unfairly implicated. "In some cases, 498A is grossly misused,'' he said. Balakrishnan was speaking at a seminar, `Marriage laws -- issues and challenges', organised by the National Commission for Women.

The IPC section allows for immediate arrest of the husband and in-laws by the police on the basis of a woman's complaint and has been controversial. Several pro-male organisations have been protesting against the section saying that the law is being misused by women for selfish gains and should include a penalty provision against its misuse. But women activists have been lobbying for no change in the law.

Faced with adverse comments from the CJI, National Commission for Women (NCW) chairperson Girija Vyas said that it was lack of awareness that led to false cases under 498A. "I would not like to use the term misuse. There is lack of awareness amongst people that is exploited by lawyers and police. We feel there is no need to review the law,'' Vyas said.


இதுபோன்ற கள்ளக்காதல் கொலை, பொய் வரதட்சணை வழக்கு போன்ற செயல்களில் ஈடுபடும் பெண்கள் யாரும் கல்வியறிவில்லாத அறியாமையில் உழலும் அப்பாவிகள் கிடையாது. அனைவரும் நன்கு படித்து நல்ல பணியில் இருக்கும் மேல்தட்டுவர்க்க நகரத்துப் பெண்கள். இவர்கள் இப்படி செய்வதற்குக்காரணம் என்ன அறியாமையா? பழிவாங்கத்துடிக்கும் வஞ்சக குணம், ஆணவம், அனைவரையும் அடக்கியாளத் துடிக்கும் கொடூர எண்ணம். இந்தக் குணங்களை பெண்ணுரிமை என்ற பெயரில் பல அமைப்புகள் பெண்களிடையே புகுத்திவருகிறார்கள். அதன் வெளிப்பாடுகள்தான் பின்வரும் வீர வசனங்கள்.

"I want to teach men what their mothers didn’t"

"I am here to teach men what their mothers didn't teach them," declared Women and Child Development Minister Renuka Chaudhury
August 29, 2007
http://www.rediff.com/news/2007/aug/29men.htm

• • • • • • • • • •

Thats Tamil News, 3/4/2008
கணவன் அடித்தால் திருப்பி அடியுங்கள். குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என்று குடும்பத் தலைவிகளுக்கு மாநில மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் கூறினார்.

• • • • • • • • • •

அந்த வக்கிர ஆசையை தவறான பெண்கள் பூர்த்தி செய்துகொள்ள உதவுபவைதான் இன்றைய நடுநிலையற்ற பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள். இதுபோன்ற நடுநிலையற்ற சட்டங்கள் தவறானப் பெண்களை ஊக்குவிப்பதை நிறுத்தும்வரை இதுபோன்ற அப்பாவிப் பிஞ்சுக்குழந்தைகள் தங்களது உயிரை உங்களுக்காகத் தியாகம் செய்துகொண்டிருக்கும் அவலநிலை தொடரும்.




No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.