இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, July 15, 2010

இந்தியக் கணவனின் தலையெழுத்து

கள்ள உறவில் ஈடுபடும் மனைவியை தண்டிக்க சட்டங்கள் கிடையாது. அதனால் கணவன்தான் தற்கொலை செய்துகொள்ளவேண்டும். இது எழுதப்படாத சட்டம். அப்படி செய்யாமல் மனைவியின் தவறை சுட்டிக்காட்டினால் கணவன் மீது பொய் வரதட்சணை வழக்குகள் தொடரப்படும். பொய் வரதட்சணை வழக்கில் சிக்கும் கணவன் சட்ட தீவிரவாதக் கூட்டத்தில் சிக்கி தினம் தினம் சாகவேண்டும். இதுதான் நாட்டில் நடந்துகொண்டிருக்கும் நடைமுறை சட்டம்.

கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: கணவன் தற்கொலை

ஜூலை 16,2010 தினமலர்

ஓமலூர்: ஓமலூர் அருகே மனைவி கள்ளக்காதலனுடன் உல்லாசத்தில் இருப்பதை பார்த்த கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.ஓமலூரை அடுத்த காங்கியானூர் காலனி பகுதியை சேர்ந்த மாரியப்பன், கூலி தொழிலாளி. அவரது மனைவி அம்சவேணி.சில மாதங்களாகவே அம்சவேணிக்கும் அதே பகுதியில் உள்ள சிலருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வருவதாக மாரியப்பனுக்கு தெரியவந்தது. மனமுடைந்த நிலையில் மாரியப்பன் இருந்து வந்தார்.நேற்று முன்தினம் மாரியப்பன் வீட்டில் இல்லாத நேரத்தில் அம்சவேணி வேறு ஒருவருடன் இருந்தார்.

திடீரென வீட்டிற்கு வந்த மாரியப்பன், தன் மனைவி வேறு ஒருவருடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தன் மனைவி அம்சவேணியிடம் தகராறு செய்தார். ஆத்திரமடைந்த அம்சவேணி தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.மாரியப்பன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அருகில் இருந்தவர்கள் மாரியப்பனை ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். வழியிலேயே மாரியப்பன் உயிரிழந்தார்.தீவட்டிப்பட்டி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.


IPC 497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.




No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.