இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, July 19, 2010

காலமெல்லாம் கள்ளக்காதல் வாழ்க!

இந்திய ஆண்களுக்கு செத்தாலும் புத்தி வராது என்று பெண்கள் நன்றாகத் தெரிந்து கொண்டார்கள்.

கள்ளக்காதலுக்கு இடையூறு கணவனை கொன்ற மனைவி

தினமலர் 20 ஜூலை 2010

வாழப்பாடி: வாழப்பாடி அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வாழப்பாடி அடுத்த ரங்கனூர் ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணன்(60). அவரது இரண்டாவது மனைவி நீலாம்பாள் (35). அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அங்கமுத்து(58) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. மனைவி மீது சந்தேகம் கொண்ட விவசாயி கிருஷ்ணன் அடிக்கடி அவரிடம் தகராறு செய்துள்ளார்.

கடந்த 16ம் தேதி இரவு மனைவியுடன் தகராறு செய்த விவசாயி கிருஷ்ணன் மர்மமான முறையில் அவரது வீட்டு கூரை சட்டத்தில் கயிற்றில் பிணமாக தொங்கினார். பிணத்தை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.பிரேத பரிசோதனையில் விவசாயி கிருஷ்ணன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நீலாம்பாள், தனது கள்ளக்காதலன் அங்கமுத்துடன் சேர்ந்து கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது தெரியவந்தது.நீலாம்பாள் மற்றும் அவரது கள்ளக்காதலன் அங்கமுத்து ஆகியோரை பிடித்து வாழப்பாடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.