இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, July 10, 2010

ராத்திரி நேரத்து பூஜை ஆரம்பம்!

தமிழ் நாட்டில் இரவு நேரத்திலும், விடுமுறை நாட்களிலும் குடும்ப நீதிமன்றங்கள் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. நல்ல முன்னேற்றம். நாட்டில் பல விவாகரத்து வழக்குகள் அதிகமாகியிருப்பதுதான் இதற்குக் காரணம்.

சென்னை, ஜூலை 10: கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் இலவச ஆலோசனை வழங்குவதற்காக சட்ட உதவி மையத்தில் "ஹெல்ப் லைன்' தொடங்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தெரிவித்தார்.

இதன் மூலம் குடும்பத்தில் ஏற்படும் சிறிய பிரச்னைகள் விவாகரத்து வரை செல்வது தடுக்கப்படுவதோடு, விவாகரத்து மனுக்களும் பெருமளவில் குறைக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

வார விடுமுறையில் குடும்ப நல நீதிமன்றங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் தொடக்க விழா சென்னை உயர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பேசியது: நாட்டிலேயே முதல்முறையாக வார விடுமுறை நாள்களில் குடும்ப நல நீதிமன்றங்கள் இங்கு செயல்பட உள்ளன.

இந்தத் திட்டம் விரைவிலேயே நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.10 லட்சம் மக்கள்தொகை கொண்ட நகரத்துக்கு ஒரு குடும்ப நல நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் தாக்கல் செய்யப்படும் குடும்ப நல வழக்குகளுக்கு இப்போதுள்ள 3 நீதிமன்றங்கள் போதுமானவையாக இல்லை.

இந்த நீதிமன்றங்களின் எண்ணிக்கையை 5 ஆக அதிகரிக்க வேண்டும் என்றும், மாவட்டத் தலைநகரங்கள் தோறும் குடும்ப நல நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்றும் அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.கடந்த 2000- ல் விவாகரத்து கோரி 972 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2009-ல் இந்த எண்ணிக்கை 2,425 ஆக அதிகரித்துள்ளது.

விவாகரத்து தவிர ஜீவனாம்ச வழக்குகளும் இதேபோன்று பல மடங்கு அதிகரித்துள்ளன.மொத்தம் 12,659 வழக்குகள் சென்னையிலுள்ள 3 குடும்ப நல நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இவற்றில் பெரும்பாலான வழக்குகள் நல்ல ஆலோசனைகள் வழங்கினால் தீர்க்கப்பட்டு விடும்.கணவன், மனைவி இடையே மனக்கசப்பு ஏற்பட்ட உடனேயே அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் பிரச்னை சிறிதாக இருக்கும்போதே தீர்வு காண்பதோடு, விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கையை பெருமளவு குறைக்கலாம். இதற்காக சட்ட உதவி மையத்தில் "ஹெல்ப் லைனை' தொடங்கும் திட்டம் உள்ளது.

அதேபோல், சட்ட உதவி மையத்தில் செயல்படும் ஆலோசனை மையங்களையும் இரவு 10 மணி வரை நீட்டிக்கும் திட்டம் உள்ளது.குடும்ப நல நீதிமன்றங்களுக்கு வரும் பெண்கள், குழந்தைகளுக்கு உதவும் வகையில் புதிய கட்டடம் ஒன்றும் அமைக்கப்பட வேண்டும் என்றார் எம்.ஒய்.இக்பால்.நீதிபதி எலிப் தர்மாராவ்: மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் மாவட்ட நீதிபதிகளுக்கு வழங்கப்படுவதில்லை.


மாவட்ட நீதிமன்றங்கள், நீதிபதிகளின் அறைகள், வீடுகளில் ஏ.சி. வசதி செய்யப்பட வேண்டும் என்றார் எலிப் தர்மாராவ்.நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா, நீதிபதி டி.முருகேசன், குடும்ப நல முதன்மை நீதிபதி பி.ராமலிங்கம், லா அசோசியேஷன் தலைவர் டி.வி. கிருஷ்ணகுமார், பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் டி.பிரசன்னா, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி. பால்கனகராஜ் உள்ளிட்டோர் பேசினர்.

இதுபோல விவாகரத்து வழக்குகள் அதிகமானதற்குக் காரணம் கணவன் மனைவியிடையே ஏற்படும் சிறு பிரச்சனைகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்க ஆளில்லாமல்போனதுதான் காரணம் என்று நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் நாட்டில் என்ன நடக்கிறது. பெண்களுக்கு நல்வழி காட்வேண்டிய பெண்கள் வாரியம் சொல்லிக்கொடுப்பது என்ன என்று கீழுள்ள செய்தியில் பாருங்கள்:

நெல்லை: கணவன் அடித்தால திருப்பி அடியுங்கள், உடல் ரீதியான வன்முறைக்கு இடம் கொடுக்காதீர்கள் என்று குடும்பத் தலைவிகளுக்கு மாநில மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் கூறினார்.

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் நெல்லை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி இணைந்து குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் குறித்த கருத்தரங்கை நடத்தியது. கல்லூரி வாளகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரகாஷ் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், பொருளாதார வன்முறை, பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். கணவன் மனைவியை அடிப்பது இயல்பானது என்றும் அன்பின் வெளிப்பாடு என்றும் கூறப்படுகிறது.

அல்வாவும், பூவும் கொடுத்து பெண்களை சமாதானம் செய்து விடலாம் என்பது போன்ற காட்சிகள் திரைப்படங்களில் சித்தரிக்கப்படுகிறது.

குட்ட குட்ட குனிவதை தவிர்த்து எதிர்த்து நில்லுங்கள். கணவன் அடித்தால் திருப்பி அடியுங்கள். உடல் ரீதியான வன்முறைக்கு இடம் கொடுக்காதீர்கள். குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என்றார் அவர்.

உண்மையை சொல்லவேண்டுமென்றால் நாட்டில் என்ன நடக்கிறதென்றால் கணவன் மனைவிக்கிடையே சிறு பிரச்சனை ஏற்பட்ட உடனே பெண்களுக்கு வழங்கப்படும் அறிவுரை என்னவென்றால் பொய் வரதட்சணை வழக்குத் தொடரவேண்டும் என்பதுதான். இதுதான் பல சட்டமேதைகள் தங்களிடம் வரும் பெண்களுக்கு சொல்லித்தரும் அறிவுரை. பிரச்சனைக்குக் காரணம் என்ன என்றுகூட யாரும் கேட்கமாட்டார்கள். பிறகு இதற்கு “காசிற்காக” தூபம் போடுவதுபோல் மகளிர் காவல்நிலையத்தில் நடக்கும் கட்ட பஞ்சாயத்து, கணவனையும் அவனது குடும்பத்தையும் சிறையிலடைத்து அவமானப்படுத்தி மிரட்டும் கொடுஞ்செயல். இவையெல்லாம் கடைசியில் எல்லா குடும்பத்தையும் விவாகரத்தில்தான் கொண்டுபோய் சேர்க்கும்.

இந்த விஷயத்தை 2003ம் ஆண்டில் தில்லி உயர்நீதிமன்றம் சொல்லிவிட்டது:

IN THE HIGH COURT OF DELHI AT NEW DELHI,
DATE OF DECISION: May 19, 2003,

23.These provisions were though made with good intentions but the implementation has left a very bad taste and the move has been counter productive. There is a growing tendency amongst the women which is further perpetuated by their parents and relatives to rope in each and every relative- including minors and even school going kids nearer or distant relatives and in some cases against every person of the family of the husband whether living away or in other town or abroad and married, unmarried sisters, sister-in-laws, unmarried brothers, married uncles and in some cases grand-parents or as many as 10 to 15 or even more relatives of the husband. Once a complaint is lodged under Sections 498A/406 IPC whether there are vague, unspecific or exaggerated allegations or there is no evidence of any physical or mental harm or injury inflicted upon woman that is likely to cause grave injury or danger to life, limb or health, it comes as an easy tool in the hands of Police and agencies like Crime Against Women Cell to hound them with the threat of arrest making them run here and there and force them to hide at their friends or relatives houses till they get anticipatory bail as the offence has been made cognizable and non-bailable. Thousands of such complaints and cases are pending and are being lodged day in and day out.

24.These provisions have resulted into large number of divorce cases as when one member of the family is arrested and sent to jail without any immediate reprieve of bail, the chances of salvaging or surviving the marriage recede into background and marriage for all practical purposes becomes dead. Result is that major bulk of the marriages die in their infancy, several others in few years. The marriage ends as soon as a complaint is lodged and the cognizance is taken by the police.

அதனால் விவாகரத்து வழக்குகள் அதிகமாகிவிட்டன என்பதற்காக நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அதே நேரத்தில் ஏன் இப்படி அதிகமானது என்ற அடிப்படைக் காரணத்தை ஆராய்ந்து அதை சரி செய்தால்தான் சமுதாயத்தில் குடும்பக் கட்டமைப்பு சிதையாமல் இருக்கும். நீதிமன்றங்கள் அதிகரிப்பதால் பலருக்கு வருமானம் கிடைப்பதைத்தவிர அப்பாவிகளுக்கு எந்த நன்மையும் ஏற்படாது.


பொய் வரதட்சணை வழக்குகள் உருவாவதை தடுக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்படாதவரை இந்தியக்குடும்பங்கள் அழிவதை யாராலும் தடுக்க முடியாது. பணம் கிடைக்கிறது என்பதற்காக அடுத்தவன் குடிதானே கெடுகிறது நமக்கென்ன என்றிருப்பவர்களுக்கு தன்குடி கெடும்போதுதான் அந்த உண்மை புரியும். அதுவரை இந்த ராத்திரி நேரத்து நீதிமன்ற பூஜைகள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கும்.




No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.