இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, September 02, 2009

சும்மா தமாசு!



செப்டம்பர் 03,2009

ஆமதாபாத்:போலீஸ் அதிகாரிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுவது வழக்கம் தான். ஆனால், போலீஸ் அதிகாரியின் அச்சுறுத்தலில் இருந்து அவர் மனைவியைக் காக்க, போலீஸ் பாதுகாப்பு அளிக்கப் பட்டுள்ள சம்பவம், குஜராத்தில் நடந்துள்ளது.குஜராத் மாநில டி.ஐ.ஜி., கமல் குமார் ஓஜா; இவரது மனைவி அமிதா. "அடிக்கடி வரதட்சணை பணம் கேட்டு கணவர் என்னை அடித்து துன்புறுத்துகிறார்'என்று போலீஸ் நிலையத்தில் அமிதா புகார் அளித்தார்.

மேலும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், முதலில் வழக்கு பதிவு செய்ய மறுத்துள்ளனர். (ராமசாமி அல்லது குப்புசாமி மனைவி புகார் கொடுத்தால் கண்ணை மூடிக்கொண்டு பொய் 498A கேசு பதிவு செய்து கூண்டோடு கைது செய்துவிடுவார்கள்) பின்னர் இந்த விவகாரம், உயர் அதிகாரிகள் காதுக்கு போக, அமிதா புகாரை பரிசீலித்து, அவருக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டனர். இதனால், கடுப்பான கமல், வீட்டில் இருந்து வெளியேறி, போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். "என் மனைவி அடிக்கடி இரவு விருந்துக்கு செல்பவள்; "பார்ட்டி கல்ச்சர்க்கு' அடிமையாகிவிட்டதால் இப்படி என் மீது புகார் சொல்கிறாள் என்று குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், தனக்கு செலவுக்கு கூட கமல் பணம் தருவதில்லை என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் அமிதா. இதை தொடர்ந்து, மனைவிக்கு 10 ஆயிரமும், மகன் மற்றும் மகளுக்கு தலா ஐந்தாயிரமும் மாதம் தோறும் வழங்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.தீர்ப்பை எதிர்த்து குஜராத் கோர்ட்டை அணுகினார் கமல் குமார் ஓஜா. தன் மனைவி உயர் பதவியில் இருக்கிறார்; ஆண்டுக்கு இரண்டு லட்சத்து 70 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார்' என்று பதில் மனுவில் கூறியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி தேவானி, கீழ் நீதிமன்ற தீர்ப்பிற்கு தடை விதித்தார். மேலும், பதில் மனு தாக்கல் செய்யுமாறு அமிதாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.