இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, September 21, 2009

தனக்குத் தானே தண்டனை

டிவி நிகழ்ச்சியைப் பார்த்து இளம் பெண் தற்கொலை

ஆக்ரா, செப். 21: டிவி நிகழ்ச்சியைப் பார்த்து இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் "சச் கா சாம்னா' (உண்மையை எதிர்கொள்ளுதல்) என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

நாடு முழுவதும் புகழ்பெற்ற "மகாபாரதம்' தொடரில் திரெüபதியாக நடித்த ரூபா கங்குலி அந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சி சனிக்கிழமை ஒளிபரப்பப்பட்டது.

ரூபாவின் வாழ்க்கையும், தனது வாழ்க்கையைப் போலவே உள்ளதாக நினைத்து உள்ளம் உடைந்த ஆக்ராவைச் சேர்ந்த பல்லவி (32) என்பவர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

"உலகத்தில் என்னைத் தவிர எல்லோரும் நல்லவர்கள். நான் சிறந்த மகளாக, தாயாக, சகோதரியாக, மனைவியாக நடந்து கொள்ள முடியவில்லை. எனவே இந்த உலகை விட்டுச் செல்கிறேன்' என தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். (இது போல பொய் வரதட்சணை புகார்களை கொடுத்து பல அப்பாவி குடும்பங்களை சீரழிக்கும் பிசாசுகளும் தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொண்டால் தான் நாட்டில் நீதியும் தர்மமும் பிழைக்கும். நீதிமன்றங்கள் ஒரு போதும் இந்த உண்மையான குற்றவாளிகளை தண்டிப்பதில்லை)

தனது கணவரைப் பிரிந்த பல்லவிக்கு 12 வயதில் மகன் உள்ளார். இறப்பதற்கு முன் தர்மேந்திரா என்பவருடன் அவர் வாழ்ந்து வந்தார். தர்மேந்திராவும் முதல் மனைவியைப் பிரிந்தவர்.

"ரூபா கங்குலியின் நிகழ்ச்சியைப் பார்த்ததில் இருந்தே பல்லவி நிம்மதி இழந்து காணப்பட்டார். ரூபாவின் கடந்த கால வாழ்க்கை குறித்த சில கேள்விகள் பல்லவியை மிகவும் பாதித்தன' என தர்மேந்திரா கூறினார்.

"சச் கா சாம்னா' நிகழ்ச்சியில் பங்கேற்பவரிடம் உண்மையைக் கண்டறியும் கருவி முன் 50 கேள்விகள் கேட்கப்படும். அவர் கூறும் பதில் அவருக்கே தெரியாது. அதன் பின்னர் நிகழ்ச்சியின்போது முன்னர் கேட்ட கேள்விகளில் சில கேட்கப்படும். நிகழ்ச்சியில் அவர் கூறும் பதில் முன்னர் கூறியதற்கு முரண்பாடாக அமைந்தால் பங்கேற்றவர் தோற்றவராகக் கருதப்படுவார்.

பதில்கள் ஒரே மாதிரியாக இருந்தால் அடுத்தடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். ஒவ்வொரு சுற்றிலும் பரிசுத் தொகை வழங்கப்படும். 6-வது சுற்றில் ஒரே ஒரு கேள்வி கேட்கப்படும். அதில் வெல்பவருக்கு ரூ.1 கோடி பரிசு அளிக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவரின் அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி கேள்வி கேட்பதாக எதிர்ப்பு எழுந்தது.

இந்திய கலாசாரத்துக்கு எதிராக இருப்பதாகக் கூறி இந்த நிகழ்ச்சியைத் தடை செய்ய வேண்டும் என சமாஜவாதி எம்.பி. கமல் அக்தர் மாநிலங்களவையில் கோரிக்கை விடுத்தார்.

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.