இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, October 27, 2010

சூப்பர் ஓட்டம் - பெண்ணுக்கு காமம் தலைக்கேறினால்


நெல்லை: களக்காடு அருகே 2 குழந்தைகளை தவிக்கவிட்டு மருமகனுடன் அவருடைய அத்தை வீட்டை விட்டு ஓடினார்.

களக்காடு அருகே உள்ள மாவடிபுதூரைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி முருகேஸ்வரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். முருகேஸ்வரி கடந்த 22-ம் தேதி உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவமனை செல்வதற்காக கணவரிடம் ரூ.500 வாங்கிச் சென்றார்.

ஆனால் அவர் வீடு திரும்பவி்ல்லை. என்ன ஆனார் என்றும் தெரியாமல் இருந்தது. தாயைக் காணாமல் குழந்தைகள் தவித்தனர்.

இது குறித்து செல்வம் திருக்குறுக்குடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பு ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இதில் முருகேஸ்வரிக்கும், செல்வத்தின் அக்கா மகன் ரூபன் என்பவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்தது தெரிய வந்தது. இவர்கள் இருவருக்கும் அத்தை-மருமகன் உறவு ஆகும்.

ஆனால் காமம் கண்ணை மறைக்க இருவரும் ஊரை விட்டு ஓட்டம் பிடித்தனர். அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. 2 குழந்தைகளை தவிக்கவிட்டு மருமகனுடன் அத்தை ஓடிய சம்பவம் அப்பகுதியி்ல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
==============

பெண்கள் இப்படியெல்லாம் இருக்கிறார்கள். ஆனால் சட்டங்களை இயற்றுபவர்கள் மட்டும் இவர்களை மட்டும்தான் பாதுகாப்போம் என்று சட்டங்களை இயற்றுகிறார்கள்.

தாயுள்ளம் கொண்ட உண்மையான பெண்களை IPC498A, DP Act, DV Act போன்ற தவறான சட்டங்கள் மூலம் அரசாங்கம் அழித்துக்கொண்டிருக்கிறது. கடைசியில் நாட்டில் மிஞ்சியிருக்கப்போவது மேலுள்ள செய்தியில் இருப்பதுபோன்ற “சுய ஆட்சி (Empowered Woman)” பெற்ற இதுபோன்ற பெண்கள்தான். இவர்கள்தான் அரசாங்கத்தின் செல்லப் பெண்மணிகள்! நாட்டின் கண்கள்!!



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.