இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, July 19, 2012

பிடிக்காத ஆணை பழிவாங்க இனி தயங்காமல் பொய் கற்பழிப்பு வழக்குகளை போடலாம்! (New Trend!!!!)

பெண்கள் மீதான பாலியல் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்க வழி செய்யும் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்திருக்கிறது. அரசாங்கம் எத்தனை சட்டங்கள் எழுதினாலும் அவற்றை செயல்படுத்தும் காவல்துறையும், நீதித்துறையும் நேர்மையாக இல்லாதவரை சமுதாயத்திற்கு மிகுந்த ஆபத்துதான். அந்த வரிசையில் இன்றைய சட்டதிருத்தம் சமுதாயத்தையே அழித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நான் ஏன் இப்படி சொல்கிறேன் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து கடைசி வரை படியுங்கள். மிகவும் ஆச்சரியப்பட்டு போவீர்கள்!! யாராலும் கற்பனைகூட செய்யமுடியாத அளவிற்கு இந்தியாவில் இளம் பெண்கள் சட்டங்களை துஷ்பிரயோகம் செய்து பிடிக்காத ஆணை எப்படியெல்லாம் பழிவாங்குகிறார்கள் என்று அப்போதுதான் உங்களுக்குத் தெரியும்.


புதுடில்லி: பாலியல் குற்றத்திற்கு, ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மத்திய அமைச்சரவைக் கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், நேற்று, அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதில், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு, ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தை திருத்துவதற்கு ஒப்புதல் தரப்பட்டது. அத்துடன், ஆசிட் வீசும் நபர்களுக்கு, 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கவும், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு, மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கவும், இந்தச் சட்டத் திருத்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

=====
பெண்கள் மீதான பாலியல் குற்றத்தில் ஈடுபடும் ஆணுக்கு ஆயுள் தண்டனை என்றால் அப்படி ஒரு வழக்கை பொய்யாக ஜோடித்து பொய் கற்பழிப்பு வழக்கு போடும் பெண்ணுக்கு என்ன தண்டனை? இதுவரை எதுவும் இல்லை. அப்படியே இருந்தாலும் நீதிமன்றங்களில் இளம் பெண்ணின் கடைக்கண் பட்டுவிட்டால் பொய் வழக்குப் போடும் பெண்ணிற்கு எந்த தண்டனையையும் நீதிபதி வழங்கமாட்டார். அதுதான் இன்று இந்தியாவில் நடந்துகொண்டிருக்கிறது.

மேலே உள்ள செய்தியில் மந்திரிசபை சட்டம் எழுதுவதில் காட்டும் அக்கறையை அதில் உள்ள ஓட்டைகளை அடைக்க காட்டுவதில்லை. அல்லது அவர்களே ஓட்டையைப் போட்டுத் தருகிறார்களா என்றும் புரியவில்லை.

சமீபத்தில் டில்லி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த கற்பழிப்பு வழக்கில் மிகவும் கொடூரமான முறையில் 21 வயது இளம் பெண் பொய் வழக்குப் போட்டிருக்கிறார். தனது கள்ளக்காதலனின் மனைவி தனது கள்ளக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குத் தொடர்ந்ததால் அந்த கள்ளக் காதலனின் மனைவி, அந்த மனைவியின் அண்ணன், அண்ணனின் மனைவி ஆகியோர் மீது ஆட்கடத்தல், கூட்டு சதி, கற்பழிப்பு ஆகிய குற்றங்களை சுமத்தி மிகவும் அருமையாக ஒரு கொடூரமான கற்பழிப்பு வழக்கை ஜோடித்து அனைவர் மீதும் வழக்குத் தொடுத்துவிட்டார். அந்த புகாரை படித்தால் தலையே சுற்றும், அந்த அளவிற்கு ஒரு அருவருப்பான, கொடூரமான கற்பனை.

தன்னுடைய பொய் வழக்கு நம்பும்படியாக இருக்கவேண்டும் என்பதற்காக கற்பனையாக மேலும் இரு ஆண்களின் பெயர்களை சேர்த்து தனது கள்ளக்காதலனின் மனைவியின் அண்ணனோடு சேர்ந்து மூன்று ஆண்கள் ஆறு மாதம் அடைத்துவைத்து மாற்றி மாற்றி கற்பழித்ததாகவும், அதனால் தனக்கு கர்ப்பம் ஏற்பட்டு அதனை அவர்கள் கலைத்ததாகவும் பொய் வழக்கு தொடுத்திருக்கிறார். இந்தக் குற்றத்திற்கு தனது கள்ளக்காதலனின் மனைவியின் அண்ணி உதவி செய்ததாகவும் எழுதியிருக்கிறார்.

இதில் அருமையான விஷயம் என்னவென்றால் அந்தப் பெண் டில்லி மாவட்ட நீதிமன்றத்தில் பணிபுரிகிறார். சட்டங்களையும், நீதிமன்றங்களையும், நீதிபதிகளையும் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டு இந்த வழக்கை அற்புதமாக வடிவமைத்து இந்திய நீதித்துறையை முட்டாளாக்கியிருக்கிறார்.

ஆனால் கடைசியில் நடந்தது என்ன? இவையெல்லாவற்றையும் அந்தப் பெண்ணே நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட பிறகும், நீதிபதி அந்தப் பெண்ணுக்கு எந்த தண்டனையும் கொடுக்கவில்லை. அவள் ஒரு இளம் பெண் என்பதால் திருந்துவதற்கு வாய்ப்பு கொடுத்து தண்டனை கொடுக்கவில்லை என்று தீர்ப்பு எழுதியிருக்கிறார்.

இது போதாதா? இனி பிடிக்காத ஆண் மீதோ, கள்ளக்காதலுக்கு தடைபோடும் ஆண் மீதோ அற்புதமாக பொய்யான கற்பழிப்பு குற்றச் சாட்டை சுமத்தி இன்று மத்திய அரசு இயற்றியிருக்கும் புதிய சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை வாங்கிக்கொடுத்துவிடுவார்கள்!!!! அதற்கு நீதிமன்றங்கள் பெண்களுக்கு உதவுமா என்ற விஷயம் வழக்கை நடத்தும் நீதிபதிகளை பொறுத்தது.

நீதிமன்றத்தின் அந்த தீர்ப்பின் முக்கியமான பகுதி. படித்துவிட்டு இந்திய நீதிமன்றங்கள் செயல்படும் விதத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

ஒரு இளம் பெண் கொடுத்த இந்த பொய்யான கற்பழிப்பு வழக்கில் சிக்கி பாதிக்கப்பட்டிருப்பது இரண்டு பெண்கள், ஒரு ஆண், இரண்டு கற்பனையாக ஜோடிக்கப்பட்ட ஆண்கள்! இவர்களுக்கு நீதி வழங்கப்போவது யார்?


IN THE COURT OF SH. RAKESH TEWARI ASJVI
ROHINI COURTS, DELHI

SC NO.271/10
FIR NO. 895/05

U/S 365/366/342/376(2) IPC
PS Sultan Puri

State
Vs.
1. Ritu @ Gudia w/o Ram Niwas
2. Kishan Pal (discharged vide order dated 08.01.2007)
3. Ram Niwas (Proclaimed Offender)
4. Balvinder (Proclaimed Offender) - கற்பனையாக ஜோடிக்கப்பட்ட ஆண்
5. Munna (Proclaimed Offender) - கற்பனையாக ஜோடிக்கப்பட்ட ஆண்

Date when committed to the court of Sessions :28.09.2006


Judgment pronounced on :12.07.2012



JUDGMENT:

34. I am conscious of the doctrine of judicial restraint which commands me not to pass such comments which may not be part of the “lis” and at the same time, I am also conscious of the law that nobody has got a right to commit a rape upon a woman even of easy virtue but the theory of rape against the present prosecutrix has been already discarded by me, as discussed above, but despite all restraints at my command, my judicial conscience pricks me that I would be failing in my duty if I do not point out that present prosecutrix, admittedly working in District Courts has no fear or by virtue of her said job her fear has gone out of her mind towards the law and she can play with the law and legal procedures as a master juggler and she can go to any extent by levelling allegations against anyone as I have already held that she has no regard even for the human relations, as discussed above, and in this sense, such kind of alleged victims of rape are potentially dangerous to the society in the sense that from tomorrow onwards the general public as well as the courts will start disbelieving the version given by even the real victims of rape and in the second sense, as she has become fearless, she can level allegations against her colleagues with whom she is working or against any other person of the society with whom she will be having a clash of interest. I have no hesitation in drawing an inference that she is a cold blooded thinker whereby she can implicate any person, having inadvertence towards the consequences and at the same time, she has no repentance over her said false allegations. These comments have been passed with a hope that the said prosecutrix would reform herself in future and it is in this background that I am thinking it inexpedient in the circumstances not to lodge a report against her for the criminal offences she has committed before this court during her said deposition u/s 340 Cr.PC and not reporting the matter to her department for her departmental action because prevention is always better than cure and for further humanitarian reason that she got her job on compassionate ground after her father was murdered.

இந்த தீர்ப்பு தொடர்பாக செய்தித்தாளில் வந்துள்ள செய்தி....





புதுடில்லி:"தன்னை சிலர், பாலியல் பலாத்காரம் செய்ததாக பொய் புகார் கூறி, வழக்கு தொடரும் பெண்களால், சமுதாயத்துக்கு பெரிய அளவில் அபாயம் ஏற்படும். இதுபோன்ற பொய் புகாரால், உண்மையிலேயே, பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிய பெண்கள் மீது, கோர்ட்டுக்கும், பொதுமக்களுக்கும் இரக்கம் இல்லாமல் போய் விடும்' என, டில்லி கோர்ட் கூறியுள்ளது.டில்லியில் கோர்ட்டில் பணிபுரியும் பெண் ஒருவர், தன்னை, நான்கு ஆண்கள் ஒன்றாக சேர்த்து, கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும், இந்த குற்றத்துக்கு ஒரு பெண், உடந்தையாக இருந்ததாகவும் கூறி, டில்லி செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையில், பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண், பொய் வழக்கு தொடர்ந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த, நீதிபதி ஆர்.டி.திவாரி, குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை, விடுதலை செய்தார். இதன்பின், தீர்ப்பில் அவர் கூறியதாவது:"தன்னை சிலர், பாலியல் பலாத்காரம் செய்ததாக, பொய் புகார் கூறி, வழக்கு தொடரும் பெண்களால், சமுதாயத்துக்கு பெரிய அளவில் அபாயம் ஏற்படும். அவர்கள் சமூகத்திற்கு ஆபத்தானவர்கள். இதுபோன்ற பொய் புகார்களால், உண்மையிலேயே பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி, பாதிக்கப்படும் பெண்கள் மீது, கோர்ட்டுக்கும், பொதுமக்களுக்கும், இரக்கம் இல்லாமல் போய் விடும். இதுபோன்று கொடூரமாக சிந்திக்கும் பெண்கள், யார் மீது வேண்டுமானாலும் புகார் கொடுப்பார்கள். பொய் புகார் கூறுகிறோம் என்ற பயமே, இந்த பெண்களுக்கு இல்லை. ஒருவர் மீது, பொய் புகார் தெரிவிப்பதற்காக, எந்த நிலைக்கும் இவர்கள் செல்வார்கள். அதனால், ஏற்படும் பாதிப்பு குறித்து, கவலைப்பட மாட்டார்கள். அதேநேரத்தில், பொய் புகார் கூறுகிறோமே என, வருத்தப்படவும் மாட்டார்கள்.'இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறினார்.



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.