இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, November 06, 2011

கொடிகட்டி பறக்கும் இந்திய கள்ளக் காதல் கலாச்சாரம்!!

ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 6, 2011, OneIndia

நாகப்பட்டனம்: மருமகனுடன் வைத்திருந்த தகாத உறவைக் கண்டு கொதித்த கணவர், தனது மனைவியைக் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி, தனது மருமகனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாக கொன்ற செயல் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் தகாத உறவுகளின் அளவும், அட்டகாசமும் அதிகரித்து வருகிறது. பெரும் சமூக சீரழிவை நோக்கி மக்களில் சிலர் வேகமாகப் போய் வருவதை நிரூபிக்கும் விதமாக இத்தகையக அடாத உறவுகள் குறித்த செய்திகள் அதிக அளவில் வருகின்றன. இந்த வகையில், மருமகனுடன் கள்ளக் காதல் கொண்டிருந்த மாமியார், அதைக் கண்டித்த தனது கணவரை மருமகனுடன் சேர்ந்து கொலை செய்த கொடும் செயல் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நடந்துள்ளது.

அகரங்காடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (43). இவரது மனைவி ஜோதி. இவருக்கு 40 வயதாகிறது. இந்தத் தம்பதிகளுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

முதல் மகள் தேவிக்கும், வேதாராண்யத்தைச் சேர்ந்த நகைக் கடை உரிமையாளர் நாகராஜனுக்கும் காதல் கல்யாணம் செய்து வைத்தனர். தேவி தனது கணவருடன் தாய் வீட்டிலேயே வசித்து வருகிறார். இந்த நிலையில் தேவியின் கணவருக்கும், ஜோதிக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டு விட்டது.

பன்னீர்செல்வம் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். அவர் சமீபத்தி்ல ஊர் திரும்பியபோது ஜோதியின் அடாத செயல் தெரிய வந்து அதிர்ந்தார். இதையடுத்து தனது மனைவியை கடுமையாக கண்டித்தார். ஆனாலும் ஜோதி தனது போக்கை கைவிடுவதாக இல்லை. நாகராஜனுடன் தொடர்ந்து உறவைப் பராமரித்து வந்துள்ளார். ஆனால் கணவர் தொடர்ந்து எச்சரித்து வந்ததால் அவரைக் கொலை செய்து விட தீர்மானித்தார்.

இதையடுத்து தனது மருமகனுடன் சேர்ந்து நேற்று பன்னீர்செல்வத்தை தாக்கி தலையை சுவரில் மோத வைத்து கொடூரமாக கொலை செய்தார் ஜோதி. பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அக்கம் பக்கத்தில் கூறி கூச்சல் போட்டு நாடகமாடசினார்.

ஆனால் அக்கம் பக்கத்து மக்களுக்கு ஜோதி குறித்து ஏற்கனவே அரசல் புரசலாக தெரியும் என்பதால், போலீஸாருக்குத் தகவல் கொடுத்து விட்டனர். போலீஸார் விரைந்து வந்து ஜோதியைப் பிடித்து விசாரித்தபோது அவர் உண்மையை கக்கி விட்டார். இதையடுத்து ஜோதியையும், அவரது மருமகன் நாகராஜனையும் போலீஸார் கைது செய்தனர்.

கொலையும் செய்வாள் பத்தினி என்பது பழமொழி. ஜோதி போன்றவர்கள் அதை மாற்றிப் புதுமொழி படைப்பது கொடுமையிலும் பெரும் கொடுமையாகும்.

====

இந்திய கள்ளக்காதலில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்ணை சட்டத்தால் தண்டிக்க முடியாது. இந்திய சட்டப்படி கள்ளக்காதலில் ஈடுபடும் பெண் ஒரு அப்பாவி!!!

IPC497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man , such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
W.P.No.45974 of 2006
(O.A.No.8971 of 2000)
DATED: 28.02.2011

23. In this context, an analogy must be drawn to the offence of 'adultery' defined in Section 497 of IPC. The offence of adultery as defined in that section can only be committed by a man, not by a woman. Section itself provides that the wife shall not be punishable even as an abettor. The Indian penal Code itself contemplates that the wife, who is involved in an illicit relationship with another man, is a victim and not author of the crime. .... ... ...

இதுபோன்ற இந்திய காதல் கலாச்சாரத்திற்கு காரணம் என்னவென்று சமீபத்தில் “ராணி” இதழில் சிறப்புக் கட்டுரை வெளியிட்டிருக்கிறார்கள்....




No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.