இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, November 16, 2011

கணவனைக் கொல்லும் இந்தியக் கள்ளக்காதல் கலாச்சாரம்

திருநெல்வேலி : கணவனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து காரை ஏற்றி கொலை செய்த மனைவி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம், அகஸ்தியர்பட்டியைச் சேர்ந்த சுப்பையா மகன் விஸ்வநாதன், 41, திருமணமாகி மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். விஸ்வநாதன் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் எல்.ஐ.சி., அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றுகிறார். தினமும் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் நெல்லை வந்து, அங்கிருந்து பஸ்சில் மார்த்தாண்டம் சென்று வருவார்.

சில தினங்களுக்கு முன், காலையில் மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து நெல்லை செல்லும் வழியில், இவர் மீது கார் மோதியது. இதில் காயமுற்றவர், நெல்லையில் மூன்று நாட்கள் சிகிச்சையில் இருந்து, பின் இறந்தார். விசாரணையில், அவரது மனைவி ஆதிலட்சுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த குமார், 35, என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததும், அதை விஸ்வநாதன் கண்டித்ததும் தெரியவந்தது. எனவே, கணவன் வீட்டில் இருந்து கிளம்பியது குறித்து, ஆதிலட்சுமி தந்த தகவலின்படி, குமாரின் ஏற்பாட்டில் ஒரு காரை கொண்டு மோதி, விஸ்வநாதனை கொலை செய்தது தெரியவந்தது. ஆதிலட்சுமி, கள்ளக் காதலன் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்த மேலும் இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் கொலை நடந்த விதம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

====

இந்திய கள்ளக்காதல் சட்டப்படி (IPC497) கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவி ஒரு அப்பாவி. ஆண் மட்டுமே குற்றவாளி.

IPC497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man , such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.