இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, November 15, 2011

சுவாரஸ்யமான கதை சொல்லும் கள்ளக்காதல்

இந்திய கள்ளக்காதல் சட்டப்படி (IPC497) கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவி ஒரு அப்பாவி. ஆண் மட்டுமே குற்றவாளி.

IPC497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man , such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.

கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி:கள்ளக்காதலன் உள்ளிட்ட மூவர் கைது
நவம்பர் 16,2011 தினமலர்

மத்தூர்:மத்தூர் அருகே, கள்ளக்காதலனுடன் சேர்ந்து, கணவனைக் கொலை செய்த மனைவியையும், அவருக்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலன், அவனது நண்பனையும், போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே மத்தூர் அடுத்த அத்திகானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜவுளி வியாபாரி சஞ்சீவன்,38. இவரின் மனைவி அனிதாதேவி,27. இவர்களுக்கு, இரு மகன்கள் உள்ளனர். அனிதாதேவி மத்தூர் போலீசில், கடந்த 1ம் தேதி, "பெங்களூரு செல்வதாக வீட்டை விட்டுச் சென்ற கணவன் சஞ்சீவன் வீடு திரும்பவில்லை' என புகார் செய்தார்.

சில நாட்களுக்கு முன், ஊத்தங்கரை அடுத்த அருணம்பதி ஏரியில், சஞ்சீவன் கொலை செய்யப்பட்டு, மண்ணில் பாதி உடல் புதைக்கப்பட்ட நிலையில் கிடந்தார். தொழில் போட்டியில், சஞ்சீவன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவருக்கு வேறு எதிரிகள் யாராவது இருந்தார்களா? என்ற கோணத்தில், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவருக்கு யாரும் எதிரிகள் இல்லை எனத் தெரிந்தது.

சந்தேகம் அடைந்த போலீசார், அனிதாதேவியிடம் விசாரித்தனர். அவர், முன்னுக்குப் பின் முரணாகக் கூறினார். தொடர்ந்து நடந்த விசாரணையில், அனிதாதேவி அவரின் கள்ளக்காதலன் ஜெயப்பிரகாஷ், அவரின் நண்பர் சங்கர் ஆகியோர் கூட்டு சேர்ந்து, சஞ்சீவனை கொலை செய்து, ஏரியில் புதைத்தது தெரிந்தது. மூவரையும், போலீசார் கைது செய்தனர்.

அனிதாதேவி போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது:

என் சொந்த ஊர் அரூர். அங்கு, என் சகோதரர்கள் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகின்றனர். எனக்கும் சஞ்சீவனுக்கும் திருமணம் நடந்ததும், நாங்கள் அத்திகானூர் கிராமத்துக்குச் சென்று விட்டோம்.என் கணவர் ஜவுளி வியாபாரம் செய்து வந்ததால், குஜராத் மாநிலம் சூரத்துக்கு அடிக்கடி சென்று வருவார். அங்கு சம்பாதித்த பணத்தை என்னிடம் கொடுப்பார். பின், அந்தப் பணத்தைக் கேட்டு என்னைத் தாக்குவார். குடிபோதையில் அடிக்கடி என்னிடம் தகராறு செய்வார்.

நான் கோபித்துக் கொண்டு, அடிக்கடி அரூரில் உள்ள என் சகோதரர்கள் வீட்டுக்கு வருவேன். என்னை சமாதானம் செய்து, டிராவல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான காரில், அத்திகானூர் கிராமத்துக்கு, டிரைவர் ஜெயப்பிரகாஷுடன் அனுப்பி வைப்பர்.

ஜெயப்பிரகாஷ் என்னிடம் அன்பாகப் பழகுவார். அவருக்கு, திருமணமாகி மனைவி இறந்து விட்டார். என் கணவர் மீதுள்ள கோபம், ஜெயப்பிரகாஷ் மீது கள்ளக்காதலாக மாறியது. இதனால், நாங்கள் அடிக்கடி சந்தித்து ஜாலியாக இருந்தோம். என் கணவர் ஊரில் இல்லாத நேரத்தில், கணவன், மனைவி போல இருந்தோம்.

சம்பவம் நடந்த ஒரு வாரத்துக்கு முன், "என் கணவரின் தொல்லை தாங்க முடியவில்லை' என, ஜெயப்பிரகாஷிடம் கூறி அழுதேன். அவர் இருக்கும் வரை என்னால் நிம்மதியாக இருக்க முடியாது. எனவே, அவனை தீர்த்து கட்டி விடுவோம். பின், ஆறு மாதம் கழித்து, நாம் திருமணம் செய்து கொள்வோம்' என்றேன். இதற்கு உதவியாக, ஜெயப்பிரகாஷின் நண்பர் கரூரைச் சேர்ந்த சங்கரையும் அழைத்தோம். பின், நாங்கள் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டோம்.

முன்கூட்டியே கத்தி, நைலான் கயிறு உள்ளிட்டவை வாங்கி, வீட்டில் வைத்திருந்தேன். கடந்த 1ம் தேதி இரவு, பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது. அப்போது, ஜெயப்பிரகாஷும், சங்கரும், கொலை செய்த பின், சஞ்சீவனை புதைக்க, ஊத்தங்கரை அருகே உள்ள அருணம்பதி ஏரியில், இடம் தேர்வு செய்தனர்.மழை பெய்ததால், அவர்கள் சென்ற கார் சேற்றில் சிக்கிக் கொண்டது எனக் கூறி, பக்கத்தில் இருந்த வீட்டில், கடப்பாறை, மண்வெட்டி வாங்கிக் குழி தோண்டி தயார் நிலையில் வைத்து விட்டு, என் வீட்டுக்கு வந்தனர். அவர்களுக்காக, என் வீட்டின் பின்பக்கக் கதவைத் திறந்து வைத்திருந்தேன்.

ஜெயப்பிரகாஷும், சங்கரும், இரவு 11 மணிக்கு, பின்பக்க வாசல் வழியாக வீட்டுக்குள் வந்தனர். சஞ்சீவன் பெட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். ஜெயப்பிரகாஷ் என் கணவரின் கழுத்தில் கத்தியால் குத்தினார். அப்போது, நான் கையைப் பிடித்துக் கொண்டேன். சங்கர் காலை பிடித்துக் கொண்டார். ரத்தம் அதிகளவில் வந்ததால், பெட்ஷீட் கொண்டு முகத்தை மூடினோம். பின், நைலான் கயிறு மூலம் இறுக்கி, தலையணையால் அழுத்திக் கொலை செய்தோம்.

பிணத்தை காரில் கொண்டு சென்றோம். செல்லும் வழியில், ரத்தக்கறை படிந்த ஒரு பெட்ஷீட்டை, மத்தூர் கொடமாண்டப்பட்டி பாலத்திலும், மற்றொரு பெட்ஷீட்டை குன்னத்தூரிலும் வீசினோம். அருணம்பதி ஏரியில் தயாராகத் தோண்டி வைத்திருந்த குழியில், அவசர அவசரமாகப் புதைத்தோம்.நாங்கள் மூன்று பேரும், ஊத்தங்கரையில் உள்ள ஒரு லாட்ஜில் குளித்து விட்டு, நான் அத்திகானூருக்கு வந்தேன். ஜெயப்பிரகாஷ் திருப்பத்தூர் அருகே உள்ள ஆதியூருக்கும், சங்கர் கரூருக்கும் சென்றனர்.

ஆனாலும், எனக்கு பயம் வந்தது. போலீசார் எப்படியும் கண்டுபிடித்து விடுவார்கள் என்று பதட்டத்துடன் காணப்பட்டேன். போலீசார் என்னிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், உண்மையை ஒப்புக் கொண்டேன்.இவ்வாறு, அனிதாதேவி வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.