இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, September 02, 2010

இந்தியாவில் கடவுளுக்கு "ஓவர்டைம்" வேலை!

தெய்வம் அன்றே கொல்லும் என்று ஒரு செய்தியை செய்தித்தாள் வெளியிட்டிருக்கிறது. தினமும் வரும் கள்ளக்காதல் கொலை செய்திகளைப் பார்க்கும்போது இந்தியாவில் கடவுள் "ஓவர்டைம்" வேலை பார்க்கவேண்டியிருக்குமே!

இதுபோன்ற கள்ளக்காதல் கொலைகளை ஊக்குவிக்கும் விதமாக ஒருதலைபட்சமான பெண்கள் பாதுகாப்பு சட்டங்களை இயற்றி கடவுளுக்கே வேலைவாய்ப்புக் கொடுத்து சாதனை புரியும் ஒரே நாடு.

IPC 497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.


அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்'’

செப்டம்பர் 02,2010 தினமலர்

அவினாசி : "அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்' என்ற பழமொழி பழசாகி விட்டது; தெய்வமும் இன்றே கொல்லும் என்பதை போல, அவினாசி பெருமாநல்லூர் அருகே கள்ளக்காதல் கொலை சம்பவம் நடந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பொங்குபாளையம் - கணக்கம்பாளையம் ரோட்டில், பழனிசாமி தோட்டத்தின் வேலி ஓரம், கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி, 32 வயது மதிக்கத்தக்க பெண் உடல், கொலை செய்யப்பட்டு கிடந்தது. பெருமாநல்லூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி, விசாரித்தனர். திருப்பூர் சாமுண்டிபுரத்தைச் சேர்ந்த அன்பு தண்டபாணி மனைவி சீதாலட்சுமி (32) என்பது தெரிந்தது. இத்தம்பதியருக்கு ஏழு வயதில் மகன் உள்ளான்.

இந்நிலையில், தன் மனைவியை 5ம் தேதி முதல் காணவில்லை என கணவர் அன்பு தண்டபாணி, அனுப்பர்பாளையம் போலீசில் புகார் கொடுத்திருந்தார். இதனால், சீதாலட்சுமி, 5ம் தேதியே கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகித்து விசாரணையை துவக்கினர்.அவினாசி டி.எஸ்.பி., பழனிசாமி தலைமையில், இன்ஸ்பெக்டர் மணிமொழி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கொலையாளியை தேடினர். கொலையுண்ட சீதாலட்சுமியின் மொபைல் போனுக்கு வந்த அழைப்புகளை வைத்து விசாரணை துவங்கியது. ஆரம்பத்தில் குழம்பிய போலீசாருக்கு மொபைல் போன் மூலம் கிடைத்த விவரங்கள் விசாரணையை வேகப்படுத்தியது. சீதாலட்சுமி போனுக்கு, ஆக., 5ம் தேதி காலை முதல் மாலை 6.00 மணி வரை ஒரே எண்ணில் இருந்து தொடர்ச்சியாக அழைப்பு வந்துள்ளது; அந்த எண்ணுக்குரிய நபரின் முகவரி குறித்து விசாரித்தனர். அந்த எண், 15 வேலம்பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் ரமேஷ் என்பது தெரிந்தது. போலீசார், ரமேஷ் வீட்டுக்குச் சென்ற போது அதிர்ச்சி காத்திருந்தது. அதே, ஆகஸ்ட் 5ம் இரவு 10.00 மணிக்கு தன் நண்பர் மாதேஷ் உடன் பைக்கில் சென்ற ரமேஷ், அவினாசி அருகே ஆட்டையாம்பாளையத்தில் லாரி மோதி, சம்பவ இடத்திலேயே இறந்தது தெரிந்தது.

அவினாசி போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்திருந்தனர். விபத்தில் பலியான ரமேஷுக்கும், கொலையான சீதாலட்சுமிக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை துவங்கியது.விபத்தில் பலத்த காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாதேஷிடம், போலீசார் தீவிரமாக விசாரித்தனர். ஆனால், விசாரணையில் சரியாக ஒத்துழைப்பு கொடுக்க முடியாதவாறு மாதேஷ், கோமா நிலைக்கு சென்று விட்டார். இதனால் அதிர்ச்சியுற்ற போலீசார், சீதாலட்சுமி வேலை பார்த்த பனியன் நிறுவனத்தில் விசாரித்தனர். அதில், பல விஷயங்கள் வெட்ட வெளிச்சமாகின.

கள்ளத்தொடர்பு அம்பலம்:
கொலையான சீதாலட்சுமி வேலை பார்த்த பனியன் நிறுவனத்தில், லேபர் கான்ட்ராக்டராக ரமேஷ் பணியாற்றியுள்ளான். ஓராண்டாக காதலித்த இருவரும், ஊட்டி, கொடைக்கானல் என்று ஜாலியாக சுற்றியுள்ளனர். ரமேஷை தன் கணவனாகவே பாவித்த சீதாலட்சுமி, அவனின் தங்கை திருமணத்துக்கு பணமும், செலவுக்கு தன் நகைகளையும் கொடுத்துள்ளார். ரமேஷ் வீட்டில், அவனுக்கு பெண் பார்க்கத்துவங்கியதும் சீதாலட்சுமியை கழற்றி விட திட்டமிட்டான். பல நேரத்தில் இதுகுறித்து ரமேஷ் பேசியபோது, இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. சீதாலட்சுமியை கொலை செய்ய திட்டமிட்ட ரமேஷ், ஆகஸ்ட் 5ம் தேதி அவளை வெளியே அழைத்துச் செல்வதாகக் கூறி, பொங்குபாளையம் - கணக்கம்பாளையம் ரோட்டுக்கு அழைத்துச் சென்றான். பொங்குபாளையம் - கணக்கம்பாளையத்தில் உள்ள பழனிசாமி தோட்டம் பகுதிக்கு அழைத்து வந்தான். அங்கு ஏற்கனவே பதுக்கி வைத்திருந்த கத்தியால், அன்று இரவு 7.45 மணிக்கு அவளது வயிறு மற்றும் கழுத்தில் குத்தியுள்ளான். அவள் இறந்ததை உறுதிப்படுத்தி விட்டு, அங்கிருந்து வீட்டுக்குச் சென்றான். கொலை செய்தபோது அணிந்திருந்த சட்டையை கழற்றி, பைக்கில் வைத்து விட்டு, வேறு சட்டையை அணிந்து புறப்பட்டான். அவினாசி ரோட்டில் உள்ள குப்பை தொட்டியில் ரத்தக்கறை படிந்த சட்டையை போட்டான். பின், நண்பர்கள் ஜெயராஜ், செல்வமணி, மாதேஷ் ஆகியோருடன் மதுக்கடைக்குச் சென்று மது குடித்துள்ளான். அங்கிருந்து மாதேஷை மட்டும் ஏற்றிக் கொண்டு, தெக்கலூர் சென்றபோது, அவினாசி - ஆட்டையாம் பாளையம் அருகே லாரி மோதி இறந்தான்.

இவ்வழக்கு குறித்து அவினாசி டி.எஸ்.பி., பழனிசாமி கூறியதாவது
: ஒரே பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்த இருவரும் பழகி, பல ஊர்களுக்குச் சென்றுள்ளனர். அவ்வப்போது சீதாலட்சுமியிடம் பணத்தை பெற்ற ரமேஷ், நகைகளை வாங்கி அடமானம் வைத்து செலவு செய்துள்ளான். கொலை நடந்த அன்று காலை கூட, திருப்பூரில் உள்ள பிரபல வங்கிக்குச் சென்று பணம் எடுத்துள்ளான். இதை வங்கியில் உள்ள கேமரா மூலம் உறுதிப்படுத்தினோம். அவன் அணிந்திருந்த சட்டையை ரத்தக்கறையுடன் குப்பை தொட்டியில் இருந்து கைப்பற்றினோம். கொலை நடந்த ஆகஸ்ட் 5ம் தேதியும், அதற்கு முந்தைய ஒரு வாரத்திலும் சீதாலட்சுமி தன் மொபைல் போனில் இருந்து ரமேஷ் எண்ணை தவிர வேறு யாருக்கும் போன் செய்யவில்லை. ஆகஸ்ட் 5ம் தேதி காலையில் இருந்து மாலை வரை இருவரும் 900 வினாடி, 1,500 வினாடி, 700 வினாடி என்று இடைவிடாமல் பேசி உள்ளதும் தெரிந்தது. ரமேஷை கணவன் போல் எண்ணி வாழ்ந்த சீதாலட்சுமிக்கு, அவன் திருமணம் செய்து கொள்வது பிடிக்கவில்லை. கூடுமானவரைக்கும் சீதாலட்சுமியிடம் பணத்தை பெற்றுக் கொண்ட ரமேஷûக்கு, அவள் மீது வெறுப்பு ஏற்பட்டது. இந்த வெறுப்பு கடைசியில் கொலையில் முடிந்துள்ளது.கொலை நடந்த இரவு 7.02 மணி முதல் 8.00 மணி வரை ரமேஷûக்கு, அவனது நண்பர்கள் தொடர்ந்து போன் செய்துள்ளனர். ஆனால், அவன் போனை எடுக்கவில்லை. இரவு 8.15 மணிக்கு, "மிஸ்டு காலில்' இருந்த எண்களுக்கு தொடர்பு கொண்டு ரமேஷ் பேசியுள்ளான். அதன் பிறகே நண்பர்களுடன் குடித்து விட்டு, பைக்கில் சென்று லாரியில் மோதி இறந்தான். கள்ளக்காதலி சீதாலட்சுமியை கொலை செய்த ரமேஷ், அடுத்த இரண்டரை மணி நேரத்தில் விபத்தில் இறந்தது ஆச்சரியமாகவே உள்ளது. இவ்வாறு டி.எஸ்.பி., பழனிசாமி கூறினார்.

அன்றே கொன்ற தெய்வம்:
"அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்' என்பது பழமொழி. ஆனால், ரமேஷ் - சீதாலட்சுமி விஷயத்தில், இது மாறி விட்டது. கணவனுக்கு துரோகம் இழைத்த சீதாலட்சுமி கொலையான இரண்டரை மணி நேரத்தில் நடந்த விபத்தில் ரமேஷ் உடல் நசுங்கி இறந்துள்ளான். கள்ளக்காதலுக்கு உதவிய ரமேஷின் நண்பன் மாதேஷ், சிகிச்சை பலனின்றி கடந்த 24ம் தேதி இறந்து விட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.


கடவுளுக்கு வேலை கொடுக்க வரிசையில் காத்திருக்கும் மற்றொரு செய்தி...



கள்ளக்குறிச்சி: கச்சிராயபாளையம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வாலிபரை கொலை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் கச்சிராயபாளையம் அடுத்த அம்மாபாளையத்தைச் சேர்ந்த வேலாயுதம் மகன் வெங்கடேசன்(28). இவரது மனைவி சுந்தரி(25). இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.

வெளிநாட்டில் பணிபுரிந்த வெங்டேசன், கடந்த ஜனவரி மாதம் ஊருக்கு திரும்பினார். கடந்த மாதம் 6ம் தேதி காலை மாதவச்சேரி அருகே ஒரு வயலில் கழுத்தில் ரத்த தழும்புடன் வெங்கடேசன் இறந்து கிடந்தார். வெங்கடேசன் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி சுந்தரி கொடுத்த புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். நேற்று காலை வடக்கனந்தல் வி.ஏ.ஓ., தங்கவேல் முன்னிலையில் இவ்வழக்கு தொடர்பாக வெங்கட்டாம்பேட்டை செம்மலை(27) பெருமாள்(38) முத்து(55) ஏர்வாய்பட்டினம் சிவராம்(40) ஆகிய நான்கு பேரும் சரணடைந்தனர். பின், கச்சிராயபாளையம் போலீசில் இவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

போலீஸ் விசாரணையில், செம்மலைக்கும், வெங்கடேசன் மனைவி சுந்தரிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இதையறிந்த வெங்கடேசன், மனைவி சுந்தரியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால், கள்ளக்காதலை துண்டித்துக் கொள்ளுமாறு செம்மலையிடம் சுந்தரி கூறியுள்ளார். ஆத்திரமடைந்த செம்மலை கடந்த 5ம் தேதி இரவு தனது கூட்டாளிகள் பெருமாள், முத்து, சிவராம் ஆகியோருடன் சேர்ந்து வெங்கடேசனை மது அருந்த அழைத்துச் சென்றார். பின், அவரை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்து, வயல்வெளியில் வீசிவிட்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, கச்சிராயபாளையம் போலீசார், வழக்கில் தொடர்புடைய செம்மலை, பெருமாள், முத்து, சிவராம் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.




No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.