இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, September 27, 2010

கணவனைக் கொல்ல ஒரு லட்ச ரூபாய் போதும்!

கணவனை ஒழித்துக்கட்ட இரண்டு வழிகள்.

1. காவல்துறையைப் பயன்படுத்தி பொய் வரதட்சணை வழக்கு மூலம் கணவனின் வாழ்க்கையை சிதைப்பது. கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் சிறையில் தள்ளலாம். இந்த முறையில் அரசாங்கம், காவல்துறை, நீதித்துறை, மகளிர் சங்கங்களின் ஆதரவு கிடைக்கும்.

2. கூலிப்படை வைத்து குறைந்த செலவில் ஆளையே “காலி” செய்துவிடுவது. அதிக செலவு கிடையாது ஒரு லட்சம் கொடுத்தால் போதும்!

எந்தவழி பிடித்திருக்கிறதோஅந்த வழிகளில் போய்க் கொண்டிருக்கிறார்கள் புத்திசாலிப்பெண்கள்.

பின்வரும் இரண்டு செய்திகளையும் கவனித்தால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஒரு கணவன் வரதட்சணை வழக்கில் சிக்கவைக்கப்பட்டிருக்கிறார். மற்றொரு செய்தியில் காதல் மனைவி கூலிப்படை வைத்து ஆளையே கொன்றுவிட்டார். இரண்டு செய்திகளிலும் அடிப்படை விஷயம் கருத்து வேறுபாடு மட்டுமே. ஆனால் முதல் செய்தியில் வரதட்சணை என்ற சாயம் பூசி கூலிப்படைக்கு பதிலாக காவல்துறையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இரண்டாவது செய்தியில் காவல்துறைக்குப் பதிலாக கூலிப்படையை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

செய்தி 1

காவல்துறையைப் பயன்படுத்தி கணவனின் குடும்பத்தை சிறைக்கு அனுப்பிய மனைவி

தினமலர் செப்டம்பர் 27,2010

செஞ்சி : செஞ்சி அருகே மனைவியை மாட்டுக் கொட்டகையில் தங்க வைத்த கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மகளிர் போலீசார் வழக்கு பதிந்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா ஒதியத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாசாமி; இவரது மகள் சரண்யா(28). கொத்தமங்கலத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மகன் மெக்கானிக் வாசுதேவன்(30). மூன்றாண்டுகளுக்கு முன் சரண்யாவுக்கும், வாசுதேவனுக்கும் திருமணம் நடந்து, ஒரு பெண் குழந்தை உள்ளது.

கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்தாண்டு விழுப்புரம் மகளிர் போலீசில் கணவர் மீது சரண்யா புகார் கொடுத்தார். இதையடுத்து, இருவரும் சேர்ந்து வாழ கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது. இதற்கு வாசுதேவன் பதிலளிக்கவில்லை. கடந்த ஜூலை 1ம் தேதி விழுப்புரத்தில் மாவட்ட சட்டப் பணி குழு மூலம் நடந்த கவுன்சிலிங்கில் மீண்டும் ஆலோசனை வழங்கப்பட்டது. அதில், இருவரும் சேர்ந்து வாழ ஒப்புக் கொண்டனர்.

அன்று இரவு 10 மணிக்கு கொத்தமங்கலத்தில் உள்ள வீட்டிற்கு செல்லும் வழியில் சரண்யாவிடம், "என் மரணத்திற்கு யாரும் காரணமில்லை; நான் தற்கொலை செய்து கொண்டேன்' என எழுதி கையெழுத்து போட்டுத் தருமாறு கத்தியை காட்டி வாசுதேவன் மிரட்டியுள்ளார். உயிருக்கு பயந்த சரண்யா கையெழுத்து போட்டு கொடுத்தார்.

பின்னர் வீட்டிற்குள் செல்ல முயன்ற சரண்யாவை, அவரது கணவன் வாசுதேவன், மாமியார் அன்பழகி(45) மாமனார் கிருஷ்ணமூர்த்தி(50) வாசுதேவனின் சகோதரர் வரதன் (24) ஆகியோர், வீட்டிற்குள் வந்தால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியதுடன், அன்றிரவு மாட்டுக் கொட்டகையில் சரண்யாவை தங்க வைத்தனர்.

அக்கம்பக்கத்தினர் கேட்டபோது, "எனது குடும்ப விஷயத்தில் யாரும் தலையிட வேண்டாம்' என சரண்யா கூறியுள்ளார். இது குறித்து செஞ்சி மகளிர் போலீசில் கடந்த 25ம் தேதி சரண்யா அளித்த புகாரின் பேரில் வாசுதேவன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் நான்கு பேர் மீதும் வரதட்சணை கொடுமை, தரக்குறைவாக திட்டுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தி 2


கூலிப்படையை ஏவி கணவனை மனைவியே கொன்றது அம்பலம்

9/28/2010 தினகரன்

சென்னை : திருவான்மியூர் அடுத்த கொட்டிவாக்கம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் லட்சுமி (38). இவரது மகள் சவுமியா (20). இவரும், அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (25) என்பவரும் 2 வருடத்துக்கு முன் காதலித்து திருமணம் செய்தனர். பின்னர் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். தாய் லட்சுமியுடன் காஞ்சிபுரம் சி.வி.எம்.ஏ. நகரில் குடியேறினார் சவுமியா. இதற்கு சுமதி என்பவர் உதவி செய்தார்.

இதை அறிந்த ரமேஷ், 6 மாதத்துக்கு முன் சிவிஎம்ஏ நகருக்கு சென்று, குடும்பம் நடத்த வரும்படி சவுமியாவுக்கு தொந்தரவு கொடுததுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சவுமியா, கூலிப்படையை ஏவி ரமேசை கொல்ல திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி சுமதி துணையுடன் காஞ்சிபுரம் தாமல்வார் தெருவை சேர்ந்த அமல்ராஜ் என்பவரிடம் ரூ.1 லட்சம் பேரம் பேசியுள்ளார். சம்பவத்தன்று ரமேசை காஞ்சிபுரத்துக்கு வரவழைத்தார் சவுமியா. அங்கு வந்த அவரை அசோக்குமார் என்பவருக்கு சொந்தமான ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு லட்சுமி, சுமதி ஆகியோருடன் கீழம்பிக்கு சவுமியா சென்றார். அங்கு முருகன் என்பவரது காரில் தயாராக இருந்த அமல்ராஜிடம் ரமேசை ஒப்படைத்துவிட்டு, அதே ஆட்டோவில் சவுமியா உட்பட 3 பேரும் காஞ்சிபுரம் திரும்பினர். ரமேசை காரில் அழைத்துக்கொண்டு சின்னையன் சத்திரம் சென்றார் அமல்ராஜ்.

அங்கு ரமேசுக்கு அளவுக்கு அதிகமாக மது வாங்கி கொடுத்து, மளிகைசெட்டி சத்திரத்தை சேர்ந்த பிலால், மஸ்தான் ஆகியோருடன் சேர்ந்து கழுத்தை நெரித்து ரமேசை கொலை செய்துள்ளார் அமல்ராஜ். அவரது சடலத்தை ஒரு மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று தாமல்வார் காட்டுப்பகுதியில் வீசி விட்டு சென்றுள்ளனர்.

நேற்று முன்தினம் பணம் பங்கு பிரிப்பது தொடர்பாக ஆட்டோ டிரைவர் அசோக்குமாருக்கும், கார் டிரைவர் முருக னுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவவேலியப்பனிடம் ரமேஷ் கொலை செய்யப்பட்டதை அசோக்குமார் விளக்கினார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவல் படி அமல்ராஜ், பிலால், மஸ்தான், லட்சுமி, சவுமியா, சுமதி ஆகியோரை தேடி வருகின்றனர்.




2 comments:

ப.கந்தசாமி said...

இரண்டாவது வழியே சிறந்தது என நான் கருதுகிறேன். ஏனென்றால் கணவனுக்கு நிரந்தர விடுதலையும் மனைவிக்கு ஆயுள் தண்டனையும் கிடைக்கிறது.

பெண்கள் நாட்டின் கண்கள் said...

Dr. Kandaswamy அவர்களே,

தங்களின் வருகைக்கு நன்றி. நீங்கள் கூறியுள்ள இரண்டாவது வழியைவிட முதல் வழிதான் சிறந்தது.

முதல் வழியைப் பின்பற்றினால் பொய் வழக்கில் சிக்கி கணவனுக்கு ஆயுள் முழுக்க குடும்பத்தோடு நீதிமன்றத்திற்கு அலையும் தண்டனையும் பொய் வழக்குத் தொடுத்த மனைவிக்கு அரசாங்க அங்கீகாரத்துடன் இஷ்டம்போல் யாருடன் வேண்டுமானாலும் கூடி வாழும் சந்தோஷமும் கிடைக்கும்.

இதைப் பற்றித் தெரிந்துகொள்ள மருமகள் என்ற தளத்திற்குச் சென்று பாருங்கள்.

நன்றி.

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.