இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, September 06, 2010

ஆண்களைக் கொன்று குவிக்கும் (கள்ளக்)காதல் கொலைகள்

கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களை தண்டிக்க எந்த சட்டமும் இல்லாததால் கணவர்களும், கள்ளக் காதலர்களும் சண்டையிட்டு தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். கணவன் தன் மனைவியை நல்வழிப்படுத்தக்கூடாதா? கொலைதான் செய்யவேண்டுமா? என்று பலரும் யோசிக்கலாம்.

கணவன் தன் மனைவிக்கு அறிவுரை கூறி திருத்த நினைத்தால் மனைவி அந்தக் கணவனை பொய் வரதட்சணை வழக்கில் சிக்க வைத்துவிடுவார். அல்லது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்டிவிடுவார். இதுபோன்ற அப்பாவிக் கணவர்களை பாதுகாக்க எந்த சட்டங்களும் கிடையாது. ஆனால் கள்ளக்காதல் மனைவிகளை பாதுகாக்க பல சட்டங்கள் இருக்கின்றன. அதனால் தங்களின் உயிரை பாதுகாத்துக்கொள்ள கணவன் வேறுவழியில்லாமல் இதுபோன்ற வழிமுறையை தேர்ந்தெடுக்க இந்திய பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் தூண்டிவிடுகின்றன.

ஒரு பெண்ணின் கள்ளக் காதலால் ஒரு கணவர் கொலையாளியாக்கப்படுகிறார், மற்றொரு ஆண் கொலைசெய்யப்படுகிறார். அல்லது ஒரு அப்பாவிக் கணவர் மனைவியாலும் அவரது கள்ளக்காதலனாலும் கொல்லப்படுகிறார். பல குழந்தைகள் அனாதையாக்கப்படுகிறார்கள். இதற்கெல்லாம் காரணமாகும் மனைவி என்ற ஒரு பெண் “அப்பாவி” என சித்தரிக்கப்படுகிறார். இந்திய பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் இப்படித்தான் மனைவியரை அப்பாவி என சித்தரித்து பெண்ணுரிமை என்ற பெயரில் ஒருதலைபட்சமான சட்டங்களை மனைவியரின் கையில் ஆயுதமாகக் கொடுத்திருக்கிறது. இதுதான் சட்டங்கள் பெண்களுக்குக் கொடுக்கும் பாதுகாப்பு!

வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் சரக்கான “பெண்ணுரிமை” என்ற பெயரில் இப்படித்தான் மறைமுகமாக பல குடும்பங்கள் அதிகாரப்பூர்வமாக அரசாங்க ஆதரவுடன் இயற்றப்படும் கண்மூடித்தனமான சட்டங்கள் மூலம் வேறறுக்கப்படுகிறது.

IPC 497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.


கொடிகட்டிப் பறக்கும் கள்ளக்காதல் கொலைகள்
செப்டம்பர் 07,2010 தினமலர் செய்தி


திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே பஸ்சில் வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். போலீஸ் ஸ்டேஷன் முன் சம்பவம் நடந்ததால், கொலையாளிகள் உடனே கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் அருகேயுள்ள முத்தனம்பட்டியைச் சேர்ந்தவர் பெரியகருப்பன்(30). இவர் பழநி கோவிலில் செக்யூரிட்டியாக உள்ளார். இவரது மனைவி அமுதா(24). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அமுதாவிற்கும், இதே பகுதியில் குடியிருக்கும் தனியார் டூரிஸ்ட் பஸ் டிரைவர் மகேஷûக்கும் (25), கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. கணவர் பலமுறை கண்டித்துள்ளார். அமுதாவை, மகேஷ் கடந்த 20 நாட்களுக்கு முன் கடத்திச் சென்றதாக ரெட்டியார்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யப்பட்டது. பின், இருவரும் திரும்பி வந்தனர். நேற்று மதியம் 2.30 மணிக்கு மகேஷ் பழநியில் இருந்து தனியார் பஸ்சில் முத்தனம்பட்டி வந்தார். இதே பஸ்சில் பெரியகருப்பனும் வந்தார். ரெட்டியார்சத்திரம் ஸ்டாப்பில் பஸ் நின்ற போது, பெரியகருப்பன் தம்பி ராஜ்குமார் பஸ்சில் ஏறினார். இருவரும் சேர்ந்து மகேஷ் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தனர். ரெட்டியார்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன் முன் பஸ்சில் நடந்த இந்த சம்பவத்தைப் பார்த்த பயணிகள் அலறியடித்து பஸ்சை விட்டு இறங்கி ஓடினர். இதையறிந்த போலீசார் பஸ்சில் ஏறி, ஆயுதங்களுடன் இருந்த பெரியகருப்பன், ராஜ்குமாரை கைது செய்தனர். மகேஷ் உடலுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பஸ் கொண்டு வரப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், எஸ்.ஐ., பிச்சைமணி விசாரித்து வருகின்றனர்.


மனைவியுடன் தொடர்பு: ஆட்டோ டிரைவரை கொன்றவர் வாக்குமூலம்
செப்டம்பர் 07,2010 தினமலர்
விசாரணையில் : என் மனைவி லட்சுமியுடன் ரகுவுக்கு இருந்த தொடர்பை துண்டிக்கும்படி பலமுறை எச்சரித்தேன்.


கணவனை கொலை செய்த மனைவி : கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை
செப்டம்பர் 07,2010 தினமலர்

பெரியகுளம் : கணவனை கள்ளக்காதலன் உதவியுடன் கொலை செய்த மனைவி உட்பட ஐந்து பேருக்கு, பெரியகுளம் விரைவு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது.





No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.