இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, September 07, 2010

கணவனை முந்திச் செல்லும் மனைவியர்

எப்போதும் ஆண்தான் எல்லாக் குற்றங்களையும் செய்வான் என்று தவறாக எண்ணிக் கொண்டிருப்பவர்களை விழிப்படையச்செய்யும் வகையில் இப்போதுதான் செய்தித்தாள்கள் செய்திகளை வெளியிட ஆரம்பித்திருக்கிறது.

காலம் காலமாக நடந்துவரும் விஷயம் இப்போதுதான் வெளிச்சத்திற்கு வருகிறது. ஆனால் சட்டங்கள் மட்டும் சமமாக இல்லாமல் பெண்கள் தவறே செய்யாதவர்கள் என்று எண்ணிக்கொண்டு இன்னும் இருட்டறையிலேயே இருக்கிறது. இந்திய சட்டங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்போவது யாரோ?

கள்ளக்காதல் மனைவியிடம் சிக்கித்தவிக்கும் இந்தியக் கணவர்களுக்கு இரண்டே வழிகள்தான் இருக்கின்றன

1. மனைவியின் கள்ளக்காதலைத் தட்டிக்கேட்டால் மனைவி கொடுக்கும் பொய் வரதட்சணை வழக்கில் குடும்பத்தோடு சிறைக்குச் செல்லவேண்டும். பெரும்பாலும் படித்த நகரத்து மனைவியர் இந்த வழிமுறையை பின்பற்றுவார்கள்.

2. மனைவி கொஞ்சம் சுறுசுறுப்பான ஆளாக இருந்தால் கணவன் கள்ளக்காதல் விஷயத்தைத் தெரிந்துகொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டால் கணவனை முந்திக்கொண்டு அவனை உயிரோடு தீர்த்துக்கட்டிவிடுவார்கள்.

கள்ளக்காதல் புரிய மனைவிக்கு பாதுகாப்பாக வரதட்சணை மற்றும் மருமகள் பாதுகாப்புச் சட்டங்கள் இருப்பதுபோல இந்தியக் கணவர்களுக்கு ஒழுங்கற்ற மனைவியிடமிருந்து உயிருடன் தப்பிக்க ஏதாவது பாதுகாப்பு இருக்கிறதா? கண்டிப்பாக இந்திய சட்டங்களில் எந்த வழியும் இல்லை. அதனால் ஒன்று பொய் வரதட்சணை வழக்கில் சிக்கி சிறைக்குச் செல்லவேண்டும் அல்லது உயிரை விடவேண்டும்.


செப்டம்பர் 08,2010 தினமலர்

திருநெல்வேலி : திருநெல்வேலி, பாப்பாக்குடியை அடுத்த ஓடைக்கரை துலுக்கப் பட்டியை சேர்ந்தவர் புஷ்பராஜ்(41). கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி ஜெயசீலா (39), இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.

ஜெயசீலாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெயபாலன்(62) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த புஷ்பராஜ், குடும்பத்தை பாப்பாக்குடிக்கு மாற்றினார். அதன்பிறகும் ஜெயசீலா, ஜெயபாலன் தொடர்பு நீடித்தது. கடந்த ஜூன் 20 ல் ஜெயசீலாவின் வீட்டிற்கு ஜெயபாலன் வந்தார். அங்கு இருவரும் ஒன்றாக இருந்தனர். அப்போது வீட்டிற்கு வந்த புஷ்பராஜ் ஆத்திரமுற்று கண்டித்தார். இருவரும் புஷ்பராஜை தாக்கி, துணியால் முகத்தை மூடி, மூச்சு திணறச் செய்து கொலை செய்தனர். அண்ணன் அற்புதராஜூக்கு ஜெயசீலாபோன் செய்து, வரவழைத்தார். அவருடன் சேர்ந்து உடலை எடுத்துச்சென்று ஓடைக்கரை துலுக்கப்பட்டியில் அடக்கம் செய்தனர். இதுகுறித்து புஷ்பராஜின் தாயார் மரியா நேற்று பாப்பாக்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் மூவரையும் பிடித்து விசாரித்தனர். மூவரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். ஜெயசீலா, ஜெயபாலன், அற்புதராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.




No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.