இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, August 31, 2010

"அப்பாவிப் பெண்ணுக்கு" ஒரு அழகிய முகமூடி

ஆட்டுக்குத் தாடி இருப்பது போலத்தான் இந்தக் காலத்தில் மனைவிக்குக் கணவன். கள்ளக் காதலுக்குத் தடையாக இருந்தால் தாடியை மழிப்பதுபோல் கணவனின் உயிரை பறித்துவிடுகிறார்கள். இருந்தாலும் சட்டங்களும் சமுதாயமும் பெண் என்றால் “அப்பாவி” என்று வரையரை செய்து ஒரு படம் வரைந்து வைத்திருக்கிறார்கள்!

“அப்பாவி” என்ற இந்தப் படத்தைத்தான் முகமூடிபோல அணிந்துகொண்டு பல பெண்கள் நாட்டில் தங்களது இச்சைகளை பூர்த்தி செய்துகொள்கிறார்கள். பொய் வரதட்சணை வழக்கு முதல் கள்ளக்காதல் கொலை வரை எல்லாவற்றிற்கும் இந்த முகமூடிதான் மிகவும் வசதியாக இருக்கிறது. இந்த முகமூடி கொலைகாரர்களுக்கு அரசாங்கம் கொடுத்திருக்கும் ஆயுதங்கள்தான் IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act போன்ற ஒருதலைபட்சமான பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள்.

இதுபோன்ற முகமூடி அணிந்து நடைபெற்ற ஒரு செயல்தான் கீழுள்ள செய்தி.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கொலை: மனைவி கைது

ஆகஸ்ட் 30,2010 தினமலர்

ஆண்டிபட்டி : தேனி மாவட்டம் கொண்டமநாயக்கன்பட்டியில் கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலன் கோர்ட்டில் சரணடைந்துள்ளார்.

ஆண்டிபட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி தவசி(40). சில நாட்களுக்கு முன் வீட்டு திண்ணையில், கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். டி.எஸ்.பி., முகமதுஅன்வர்ஷா, இன்ஸ்பெக்டர்கள் இமானுவேல் ராஜசேகர், முத்துபிரேம்சந்த், எஸ்.ஐ.,ரவீந்திரன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் விசாரித்தனர். இதற்கிடையில், கொலையில் தொடர்புடையதாக கூறி மினிபஸ் உரிமையாளர் சங்கிலி, பெரியகுளம் ஜே.எம்.கோர்ட்டில் சரணடைந்தார். இந்த பின்னணியில் போலீஸ் விசாரித்தபோது, கொலை செய்யப்பட்ட தவசி மனைவி சகுந்தலாவுக்கும், சங்கிலிக்கும் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. தவசிக்கு இந்த விபரம் தெரிய வரவே, கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய சகுந்தலா திட்டம் வகுத்துள்ளார்.

சம்பவத்தன்று இரவில் வேலை முடித்து வீட்டுக்கு திரும்பிய தவசியை, சங்கிலி அவரது கூட்டாளிகள் முத்துப்பாண்டி, பிச்சைமணி ஆகியோர் "இது தொடர்பாக பேசிக்கொள்ளலாம்' என்று ஊருக்கு ஒதுக்கு புறமான பகுதிக்கு அழைத்து சென்றனர். அனைவரும் மது குடித்தனர். பின் வேட்டியால் தவசி கழுத்தை இறுக்கினர். தவசி இறந்ததை உறுதி செய்த பின், இரு சக்கர வாகனத்தில் அமர வைத்து பிடித்துக்கொண்டு தவசி வீட்டிற்கு வந்தனர். வராண்டாவில் அனைவரும் கைகால் கழுவிய பின், தவசி உடலையும் தண்ணீரால் துடைத்து திண்ணையில் கிடத்தி வைத்தனர். இதற்கு சகுந்தலா உடந்தையாக இருந்துள்ளார். மறுநாள் அதிகாலையில், எதுவும் தெரியாதது போல சகுந்தலாவும், கணவன் படுக்கையில் இறந்து கிடந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் போலீசார் விசாரணையில் தவசி கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். ஆனால் சகுந்தலா சமாளித்து வந்த நிலையில், தற்போது கொலையாளிகளுடன் சிக்கிக் கொண்டுள்ளார். சகுந்தலா, சங்கிலி கூட்டாளிகள் முத்துப்பாண்டி, பிச்சைமணி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
/br>

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.