இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, August 09, 2010

33% ஒதுக்கீடு இல்லாமலேயே சாதனை செய்யும் பெண் அலுவலர்கள்

33% இடஒதுக்கீடு கொடுத்தால்தான் பெண்களால் எத்துறையிலும் முன்னேற முடியும் என்று நினைப்பவர்களுக்கு இட ஒதுக்கீடு எதுவும் இல்லாமலேயே எத்துறையிலும் சாதனை செய்யலாம் என்று இந்த கிராமப்புற பெண் அதிகாரி நிரூபித்துக் காட்டியுள்ளார்.

உதவி தொகை வழங்க லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் கைது
ஆகஸ்ட் 10,2010 தினமலர்

காரைக்குடி: திருமண நிதி உதவி தொகை வழங்க, 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, சாக்கோட்டை ஒன்றிய ஊர்நல அலுவலர் லலிதா (54), கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணாநகரைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது உறவினர் அமிர்தத்திற்கு (22), வரும் 27ல் திருமணம் நடக்கவுள்ளது. அரசு வழங்கும் திருமண உதவி திட்டத்தில், 25 ஆயிரம் ரூபாய் பெற, சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
அவரது வீட்டுக்கு சென்று விசாரித்த ஊர் நல அலுவலர் லலிதா, மனுவை சமூகநலத்துறைக்கு பரிந்துரைக்க, 1,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசில், சுப்பையா புகார் செய்தார். நேற்று மாலை அலுவலகத்தில் லஞ்சம் பெற்ற லலிதாவை, டி.எஸ்.பி., அருளானந்தன், இன்ஸ்பெக்டர்கள் ராஜா, பாண்டியராஜன், ஏட்டு மைக்கேல், சிவக்குமார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

================

இப்படித்தான் பெண் மற்றொரு பெண்ணுக்கு உதவி செய்து ஆணாதிக்கத்திற்கு எதிராக சாதனை படைத்துக்கொண்டிருக்கிறார்கள்! இப்படி சுயநல நோக்கில் உருவானவைதான் பெண்களுக்கு பாதுகாப்பு தருகிறோம் என்ற பெயரில் பெண்கள் அமைப்புகளால் ஆதரிக்கப்படும் பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் எனப்படும் வரதட்சணை சட்டங்கள்.



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.