இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, August 12, 2010

கலியுக மருமகளால் வரப்போகும் ஆபத்து!

போலியான பெண்ணியவாதிகள் கூட்டம் எப்போது பார்த்தாலும் பெண்களுக்கு கொடுமை நடக்கிறது, பெண்கள் அடிமையாக இருக்கிறார்கள், பெண்களுக்கு அங்கே அது நடக்கிறது, இது நடக்கிறது என்று கூப்பாடு போட்டு மோடி வித்தைக்காரர்கள் போல கூட்டம் சேர்த்து காசு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அற்பத்தனமான சுயநலத்திற்காக உருவாக்கப்பட்டவைதான் பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் என்று சொல்லப்படும் (IPC498A, Domestic Violence Act) தவறான ஒருதலைபட்சமான சட்டங்கள். இந்த சட்டங்களால் பெண்களுக்கு நன்மை ஏற்பட்டதைவிட பல பெண்களின் வாழ்க்கை சீரழிந்து பல குடும்பங்கள் அழிந்ததுதான் மிச்சம். ஒரு கலியுக மருமகளின் பொய்யான வரதட்சணைப் புகாரால் ஒரு குடும்பத்திலுள்ள குறைந்தது 4 - 6 பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுகிறது.

இதுபோன்ற போலியான பெண்ணியவாதிகளின் முகத்திரையைக் கிழித்து ஒரு புதுமைப் பெண் கருத்தாழமிக்க ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அதன் ஒரு பகுதி கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. முழுக்கட்டுரையையும் பின்வரும் இணைப்பில் சென்று படியுங்கள்.

சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள்

இன்று பெண்கள் எந்தத் துறையில் இல்லை? ஆட்டோ ஓட்டுநராக, பேருந்து ஓட்டுநராக, மின்சார ரயில் ஓட்டுநராக, தபால் பட்டுவாடா செய்பவராக, பெட்ரோல் பங்குகளில், ரேஷன் கடைகளில் பொருள்களை அளந்துபோடுபவராக… இன்னும் உயர்ந்த நிலையில் சொல்லவேண்டுமானால் விமானம் ஓட்டுபவராக, விண்வெளிப் பயணியாக, விண்வெளி விஞ்ஞானியாக என்று பல துறைகளிலும் பரிமளிக்கிறார்கள் தானே? இதை விடவும் என்ன முன்னேற்றமும் உரிமையும் வேண்டும்? ஒரு சிலர் எல்லாப் பெண்களுக்கும் கிடைத்துவிட்டதா என்றும் கேட்கின்றனர். சரி, இல்லை என்றே வைத்துக்கொள்வோம். எல்லா ஆண்களுக்கும் இந்தச் சம உரிமை கிடைத்திருக்கிறதா? ஏன் எல்லா ஆண்களும் உயர்ந்த இடத்தில் இல்லை? ஏன் ஒரு சிலருக்கு மட்டும் நல்ல உயர்ந்த பதவிகளும், பட்டங்களும் கிடைக்கின்றன? இன்னும் சில ஆண்கள் மூட்டை தூக்கியும், வண்டி இழுத்தும், ரிக்ஷா ஓட்டியும் பிழைக்கின்றனர்? ஏன் இப்படி?? அவர்களுக்காகப் போராட யாருமே இல்லையா? ஆண்கள் முன்னேறவேண்டாமா? அவங்களுக்கும் இதில் எல்லாம் உரிமை இல்லையா?

பெண்களுக்கு இப்போது பணமும் ஆடம்பர வாழ்க்கையும் உல்லாசப் பொழுது போக்குகளும் மட்டுமே முக்கியமாய் இருக்கின்றன. எல்லாப் பெண்களையும் ஒட்டுமொத்தமாய்க் குற்றம் சாட்டவில்லை. நானும் ஒரு பெண்தான். குடும்பத் தலைவிதான்.


மேலுள்ள கட்டுரையைப் படித்தபிறகு கலியுகப் பெண்கள் ஏன் மோசமான போலியான பெண்ணியவாதிகளால் தவறான பாதையில் இப்படி தவறான சட்டங்கள் மூலமாக வழிநடத்திச் செல்லப்படுகிறார்கள் என்று யோசித்தால் அதற்கான பதிலை பல ஆண்டுகளுக்கு முன்பே நீதி வெண்பா என்ற பழந்தமிழ் நூலில் ஒரு அறிஞர் பாடிச் சென்றிருக்கிறார்.

நீதிவெண்பா

32. ஈயுகத்தில் இல்லந்தோறும் கூற்றுவன்

என்னே கிரேதத் திரேணுகையே கூற்றுவனாம்
தன்னேர் திரேருதத்திற் சானகியே - பின்யுகத்தில்
கூடும் திரௌபதியே கூற்றாம் கலியுகத்தில்
வீடுதொறும் கூற்றுவனா மே.

அந்தப் பாடலில் என்ன சொல்லியிருக்கிறதென்றால் கிரேதாயுகத்தில் ரேணுகை என்ற பெண்ணால் உலகம் அழிந்தது. திரேதாயுகத்தில் சானகி என்ற சீதையால் இராமாயணப்போர் ஏற்பட்டு உலகம் அழிந்தது. அதன்பிறகான காலத்தில் திரௌபதி என்ற பெண்ணால் பாரதப்போர் ஏற்பட்டு உலகம் அழிந்தது.

இந்தக் கலியுகத்தில் வீட்டிற்கு வீடு இருக்கும் ஒரு பெண்ணால் இந்த உலகம் அழியும் என்று அந்த அறிஞர் பாடிவிட்டுச் சென்றிருக்கிறார். அந்தப் பெண் யாருமல்ல பொய்யான பெண்ணுரிமை பேசும் கூட்டத்தால் தவறாக வழிநடத்தப்பட்டு தவறான சட்டங்கள் என்ற ஆயுதங்களை கையில் எடுத்து சிறு குழந்தை முதல் முதியோர் வரை வயது வித்தியாசம் பார்க்காமல் வீட்டிலிருக்கும் அனைவரையும் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கவைக்கும் மருமகள்தான் அந்தப் பெண். புராண காலத்து யுகங்களில் இருந்த பெண்களால் அநீதிக்கு எதிராக போர் ஏற்பட்டது. ஆனால் இந்தக் கலியுகத்தில் ஏற்பட்டிருக்கிற போரில் நீதியை அழிக்க அநீதிகளலெல்லாம் ஒன்று கூடி தவறான சட்டங்கள் என்ற உருவில் வந்திருக்கிறது. இதுதான் வித்தியாசம்.

அதனால் இந்தக் காலத்துப் பெண்களுக்கு நல்வழிகாட்டி அவர்களை பண்புடன் வளர்த்து நல்ல மகளாகவும், நல்ல மருமகளாகவும் மாற்றுவது பெற்றவர்களின் கடமை. இல்லையெனில் நீதிவெண்பாவில் சொன்னது உண்மையாகிவிடும். இப்போதே நாட்டின் நிலைமை அந்தப் பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது என்று அன்றாடம் செய்தித்தாள்களில் வரும் செய்தியிலேயே நீங்கள் உணரமுடியும். அதற்கான சிறு உதாரணம் கீழே தரப்பட்டுள்ளது.


சென்னை, ஜூலை 29:கள்ளக்காதல் காரணமாக மின்வாரிய ஊழியரை ஆட்களை வைத்து கொலை செய்ததாக பெண் போலீஸ் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

மனைவி, கள்ளக்காதலன் உட்பட மூவர் கைது
ஆகஸ்ட் 10,2010 தினமலர்

பூந்தமல்லி: கள்ளத்தொடர்பு விவகாரம் தெரிந்துவிடும் என்று கருதிய மனைவி, தனது கள்ளக்காதலன் மற்றும் அவரது சகோதரரை ஏவி, கணவனை கொலை செய்த சம்பவம் பூந்தமல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

உதவி தொகை வழங்க லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் கைது
ஆகஸ்ட் 10,2010 தினமலர்

கள்ளக்காதல் மோகம்: கணவனை உதறிய ராஜபாளையம் பெண்

தினமலர் ஆகஸ்ட் 08,2010

இரும்பு சுத்தியால் அடித்து கணவனை கொலை செய்த மனைவி
ஆகஸ்ட் 05,2010 தினமலர்

விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய பெண் சார்பதிவாளர்
04 Aug 2010 தினமணி

லைசென்ஸ் புதுப்பிக்க 1,000 ரூபாய் லஞ்சம்:கலெக்டரின் நேர்முக பெண் உதவியாளர் கைது

ஆகஸ்ட் 03,2010 தினமலர்


ஜூலை 29,2010 தினமலர்

குடும்பத் தகராறில் பெற்ற குழந்தைகளைக் கொன்ற பெண்
ஜூலை 24, 2010 தினமலர்

கர்ப்பவதி குற்றம் செய்யலாமா?
லஞ்சம் வாங்கி சிக்கிய பெண் போலீஸ் எஸ்.ஐ.

ஜூலை 19,2010 தினமலர்

சூட்கேசில் சிறுவன் பிணம் : கள்ளக்காதலியின் வெறிச்செயல் அம்பலம்

தினமலர் ஜூலை 20, 2010

கள்ளக்காதலுக்கு இடையூறு கணவனை கொன்ற மனைவி

தினமலர் 20 ஜூலை 2010
சட்டம் படித்த பெண் செய்த சுவாரஸ்யமான கொலை

கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்: கணவன் தற்கொலை
ஜூலை 16,2010 தினமலர்
Woman ASI caught taking Rs 500 bribe
தாயுடன் கணவனுக்கு கள்ளக்காதல்: நடவடிக்கை கோரி இளம் பெண் புகார்
தினமலர் மார்ச் 05, 2010
கள்ளக்காதலுடன் ஓடிய தாயை பார்த்ததும் அழுத குழந்தைகள்
அக்டோபர் 29,2009 தினமலர்
கலியுக கண்ணகி: (கள்ளக்)கணவனுக்காக தீக்குளிக்க முயற்சி!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி

தினமலர் ஜூன் 12,2010
மாமியாரை குடும்பத்தோடு தீர்த்துக் கட்டிய பலே மருமகள்
Net India123.com Warangal | Tuesday, Jun 8 2010
மாமியாருக்கு “குத்து”விளக்கு ஏற்றிய குல விலக்கு மருமகள்
தினமலர் 18 மே 2010
மாமியார் கொலை : மருமகளுக்கு ஆயுள்
தினமலர் 18 மே 2010
பணம், காதலுக்காக பாகிஸ்தானுக்கு 'போட்டுக் கொடுத்த' இந்திய பெண் அதிகாரி
தினமலர் மே 02,2010
கும்மிடிப்பூண்டி : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமனாரை கொலை செய்ய திட்டம் தீட்டிய மருமகள், கள்ளகாதலன் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
எத்துறையிலும் முன்னேறுவோம்! இடஒதுக்கீடே தேவையில்லை!!

அதனால் அவரவர் வீட்டுப் பெண்களை நல்வழிப்படுத்தி வீட்டையும், நாட்டையும் உலகையும் காப்பாற்றவேண்டியது பெற்றவர்களின் கடமை. பெற்றோர்களே, போலியான பெண்ணியவாதிகளின் தவறான வழிகாட்டுதலில் “பெண் விடுதலை” என்பதற்கு தவறான அர்த்தத்தை உங்களின் மகள்களுக்கு காட்டி அவர்களின் வாழ்வை சீரழித்துவிடாதீர்கள்.





1 comment:

Anonymous said...

http://timesofindia.indiatimes.com/city/bangalore/Priyanka-was-a-sitting-duck/articleshow/6321805.cms

(Please post the story in tamil)

This murder is rocking the IT capital newspapers. She threatened him of use of 498A after which this guy has planned this murder.

While Satish Gupta's act is condemnable - look at the pains he would have undergone before which he decided this.

Read comments section also

Deven (Chennai)
17/08/2010 at 01:03 pm
These are difficult social issues. Obviously some people do not understand what caring and sharing is in a family life. I could never have imagined how my wife coped and helped especially my father who was suffering from Alziemers. Its not easy cooking, bathing, clothing them in their old age. While I do condemn the nature in which Sathish committed the murder and it was absolutely wrong to do this, I also like the women to know that it isnt as simple that man and woman go and live separate. We must look after the sick and the old, in our society it is the wives mainly as the man is the main bread earner. If my wife can match my salary, I wouldn't mind sitting at home and taking care of them or else hire a caretaker. Marriage is a sacrifice for both, men and women. If the man had a sick sister and at least the woman should have showed some care or given some help. I am not defending the man at all here who committed this gruesome crime, but I hope to respond to some of the comments here.


http://timesofindia.indiatimes.com/city/bangalore/Family-planned-the-murder-says-Priyankas-mother/articleshow/6321812.cms

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.