இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, August 03, 2010

விவசாயிக்கு உதவிய பெண் சார்பதிவாளர்!

இந்திய விவசாயி நிலத்தை அடமானம் வைக்கக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் ஒரு பெண் அதிகாரி விவசாயியிடம் லஞ்சம் கேட்டிருக்கிறார் போலிருக்கிறது. இதுபோன்ற கண்மணிகள்தான் நாட்டிற்குத் தேவையோ?

பெண்கள் இன்னும் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள் என்று பலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நல்ல கல்வியும் பதவியும் கிடைத்தபிறகு என்ன செய்கிறார்கள்? சட்டங்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக இல்லாதவரை பெண்கள் தங்களுக்குக் கிடைக்கும் வசதிகளைத் தவறாகத்தான் பயன்படுத்த நினைப்பார்கள். ஏனென்றால் அதுதான் ஆணுக்குச் சமமாக உரிமை கிடைத்ததன் அடையாளம் என்று பெண்ணுரிமை பேசும் கூட்டம் பெண்களுக்குத் தவறான பாடத்தை சொல்லிக்கொண்டிருக்கிறது.

விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய பெண் சார்பதிவாளர்

04 Aug 2010 தினமணி

நில அடமானப் பத்திரத்தை பதிவு செய்ய ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக நீடாமங்கலம் சார்பதிவாளரையும், அவருக்கு உதவியவரையும் ஊழல் தடுப்புத் துறை போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், புள்ளவராயன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பூவண்ணன் (40), விவசாயி.தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்குவதற்காக தனது நிலத்தின் ஆவணங்களை நீடாமங்கலம் சார்பதிவாளர் தேவகியிடம் தாக்கல் செய்து, நில அடமானப்பத்திரம் பதிவு செய்துதர விண்ணப்பித்தார் பூவண்ணன். ஆனால், தேவகி பத்திரப்பதிவு செய்து தராமல் தாமதம் செய்து வந்தாராம்.இந்த நிலையில் பத்திரத்தை பதிவு செய்து தருமாறு தனது நண்பர் நீடாமங்கலம் சோணாப்பேட்டை ஜெயகாந்தனின் உதவியை பூவண்ணன் நாடினாராம். ஜெயகாந்தன் நீடாமங்கலம் சார்பதிவாளர் தேவகியிடம் பேசியதில், பத்திரத்தை பதிவு செய்து தர ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தரவேண்டுமென்று சார்பதிவாளர் தரப்பில் கேட்கப்பட்டதாம். இந்த நிலையில் பூவண்ணன் நாகப்பட்டினம் ஊழல் தடுப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் மாணிக்கவாசகத்திடம் புகார் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை ஜெயகாந்தன் லஞ்சப் பணத்தை சார்பதிவாளர் தேவகியிடம் கொடுத்தபோது மறைந்திருந்த ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் தேவகியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். உடந்தையாக இருந்த சோணாப்பேட்டை ஜெயகாந்தனும் கைது செய்யப்பட்டார்.





No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.