இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, February 03, 2011

குப்பையை கொட்டும் மருமகள்களை தடுப்பது யார்?

விதிமுறையை மீறினால் தப்பில்லை: திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு சென்டர் மீடியனில் விடப்பட்டுள்ள சிறிதளவு இடைவெளியில் டூவீலர்கள் செல்வதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. (படமும் கருத்தும் - தினமலர் படம் 3.2.11)

மேலுள்ள படத்தைப் பாருங்கள். சட்டத்தை மீறி பொதுமக்களும், காவல் அதிகாரியும் ஒன்றாக இணைந்து சாலையை கடப்பதுபோலத்தான் அப்பாவிகளுக்கெதிராக தொடரப்படும் பொய்வரதட்சணை வழக்குகளிலும் மருமகள்களும், காவல்துறையும் ஒன்றாக இணைந்து செயல்படுகிறார்கள்.

பொய் வரதட்சணை வழக்குகள் பதிவாகும்போது காவல்துறை முறையான புலன்விசாரணை செய்யாமல் இருப்பதால் காவல்துறையும் தங்களுக்கு சாதகமாக பொய் வழக்குப்போட உதவுகிறது என்ற தைரியத்துடன் பல மருமகள்களும் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி தங்களுக்கு தேவையானவற்றை அடைவதற்காகவும், பழிவாங்குவதற்காகவும் தினம் தினம் பல பொய் வரதட்சணை வழக்குகளை குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பல மருமகள்கள் காவல்துறையுடன் சேர்ந்துகொண்டு பொய் வரதட்சணை வழக்குகளை பதிவுசெய்து கணவனையும் அவனது குடும்பத்தையும் துன்புறுத்தி வருகிறார்கள். மருமகள்கள் பொய்யான புகார் அளித்தாலும் அதைக் காவல்துறை முறையாக விசாரணை செய்து அப்பாவிகள் பொய் வழக்குகளில் சிக்கவைக்கப்படாமல் பாதுகாக்கவேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதைவிட அப்பாவிகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதுதான் மிக மிக முக்கியம். ஆனால் நாட்டில் நடப்பதோ தலைகீழ். உண்மையாக புலன் விசாரணை செய்தால் பல பொய் வழக்குகள் நீதிமன்றத்திற்கு செல்லவேண்டிய அவசியமிருக்காது. பல அப்பாவிகளும் தேவையில்லாமல் தங்களது வாழ்வை இழக்க நேரிடாது.

நாட்டில் நடந்துகொண்டிருக்கும் தற்போதைய நடைமுறைப்படி விசாரணை என்பதே பல பொய் வரதட்சணை வழக்குகளில் செய்யப்படுவதில்லை. நடிகர் பிரசாந்த் அவர்களின் மீது சுமத்தப்பட்ட பொய் வரதட்சணை வழக்கை மட்டுமே காவல்துறை முறையாக விசாரணை செய்து அந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய் என்று உண்மையான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்தார்கள். அந்த விசாரணை அறிக்கையை இங்கே சென்று பாருங்கள் (நடிகர் பிரசாந்த் அவர்களின் 498A வழக்கின் போலிஸ் விசாரணை முழு அறிக்கை). இதுபோல எத்தனை வரதட்சணை வழக்குகளில் முறையான விசாரணை நடைபெற்றிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

பெரும்பாலான பொய் வரதட்சணை வழக்குகளில் எந்தவித விசாரணையும் செய்யாமல் பிச்சைக்காரன் வாந்தி எடுத்ததுபோல அப்படியே புகாரை “காப்பியடித்து” விசாரணை அறிக்கை என்ற பெயரில் அப்பாவிகளை குற்றவாளி பட்டியலில் சேர்த்து நீதிமன்றங்களில் பொய் வழக்குகளை குவித்துவிடுகிறார்கள். அதனால் இந்திய நீதிமன்றங்கள் பொய் வரதட்சணை வழக்குகள் என்னும் குப்பைகளால் நிரம்பி வழிந்து துர்நாற்றம் அடித்துக் கொண்டிருக்கிறது. இதன்விளைவாகப் பல அப்பாவிகள் நீதிமன்றங்களில் வருடக்கணக்கில் நீதிகிடைக்காமல் அலைந்துகொண்டிருக்கிறார்கள். இந்த அப்பாவிகளின் வயிற்றெரிச்சல் சும்மா விடுமா?



1 comment:

Anonymous said...

மிகவும் சரி

--S,A

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.