இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, February 11, 2011

சென்னையில் மகிழ்ச்சிக் களத்தில் இறங்கிய பெண்கள்

பில்லா சுரேசையும், விஜயனையும் ஈவு, இரக்கமின்றி கழுத்தை அறுத்து கொன்ற கொலையாளிகள், அவர்களது குடும்பத்தினர் யார் மீதும் தாக்குதல் நடத்தவில்லை. பில்லா கழ...

பெப்ரவரி 11, 2011 மாலை மலர் செய்தி


பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்

விஜயனை கொன்ற பிறகு 4-வது மாடியில் இருந்து இறங்கிய கொலையாளிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து கூச்சல் போட்டுள்ளனர். எதிரிகள் ஒழிந்து விட்டனர் என்று கூடியபடி ஏகாம்பரம் பிள்ளைத் தெரு முனையில் நின்று ஆடி, பாடி உள்ளனர். அது மட்டுமின்றி இரட்டை கொலையை கொண்டாடும் விதமாக பட்டாசும் வெடித்துள்ளனர். சுமார் 10 நிமிடம் அந்த பகுதியை அல்லோகலப்படுத்திய பிறகே கொலையாளிகள் ஆளுக்கு ஒரு பக்கமாக பிரிந்து சென்றுள்ளனர்.

கொலையாளிகளில் 4 பேர் பெண்கள்

சென்னையில் எத்தனையோ ரவுடிக்கும்பல்கள் உள்ளன. அந்த ரவுடிக் கும்பல்களில் பெண்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஆண் ரவுடிகளுக்கு உதவிகள் செய்வார்களேத் தவிர, கொலை செய்யும் இடங்களுக்கு செல்ல மாட்டார்கள். ஆனால் மயிலாப்பூரில் நடந்துள்ள இரட்டைக் கொலையில் பெண் ரவுடிகளும் களத்தில் இறங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

30 பேர் கொலை கும்பலில் 4 பேர் பெண்கள் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த 4 பேரில் சந்திரா, ரேணுகா என்ற இரண்டு பேர் மட்டும் பிடிபட்டுள்ளனர். இவர்களில் சந்திரா ஆயுதம் ஏந்தி வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் சந்திராவுக்கு உடம்பில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கைதானவர்களில் சந்திரா மட்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.